Wednesday 13 June 2018

நாம் தமிழர் கைது படலம்

நாம் தமிழர் கைது படலம்

காவிரி மேலாண்மை வாரியத்திற்காக....

* கடந்த 10-04-2018 அன்று ஐபில் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணாசாலையில் நடைபெற்ற போராட்டத்தில் சீமான் உட்பட 21 நாம் தமிழர் கட்சியினர் மீது கொலை முயற்சி (307) உள்ளிட்ட 8 பிரிவுகளில் 3 வழக்குகள்

* ஐபில் போட்டியினுள் காலணி வீசிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த
1. பிரபாகரன்,
2. ஐயனார்,
3. பொன்னுவேல்,
4. மகேந்திரன்,
5. ராஜ்குமார்,
6. பிரகாஷ்
7. வாகைவேந்தன்,
8. சுகுமார்,
9. ஆல்பர்ட்,
10. ஏகாம்பரம்,
11. மார்டின் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலைமுயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டன.

* 10-04-2018 அன்று மாலை 04 மணியளவில் போராட்டத்தில் பங்கெடுக்கச் சேப்பாக்கம் தொடர்வண்டி நிலையம் வந்திறங்கிய ஆவடி நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த
1. ராஜேஷ்,
2. ஜெரால்ட்,
3. தனசேகர்,
4. நந்தகுமார்,
5. கார்த்திக்,
6. சரத்குமார்,
7. மணிகண்டன்,
8. சிவா,
9. சரவணக்குமார்,
10.பிரதீப்
ஆகியோர் கைது செய்யப்பட்டு அடுத்த நாள் காலையில் போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி கொலைமுயற்சி உட்பட 10 பிரிவுகளின் கீழ் பொய்வழக்கு பதியப்பட்டது.
அனைவரும் 15 நாள் தடுப்புக்காவலில் சிறையிலடைக்கப்பட்டனர்.

* 10-04-2018 அன்று மாலை கடலூரில் காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி கர்நாடக பேருந்தை மறித்துப் போராடிய
1.கடல்தீபன்,
2.கு.சாமிரவி,
3.சுரைன்குமார்,
4.நாராயணசாமி,
5.நாராயணன்,
6.தனசேகரன் ஆகியோரை கைதுசெய்தனர்.
இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கடல்தீபன் மீது கடுஞ்சட்டமான குண்டர்சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

* ஐபில் போராட்டத்தில் பங்கேற்றதற்காக மைலாப்பூர் தொகுதி பொறுப்பாளர் ஸ்டாலின் அவர்களை 14-04-2018 அன்று நள்ளிரவில் காவல்துறை கைது செய்தது.
மேலும்  ரூபன்,வினோத்,  சாரதி, சுபாகரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு 10-04-2018யில் போடப்பட்ட கொலைமுயற்சி முதல் தகவல் அறிக்கையில் இணைத்து சிறையிலடைத்தனர்.

* 40 நாள் கழித்து 21-05-2018 அன்று சென்னை ஐபிஎல் வழக்கில் காவலரை தாக்கியதாக அம்பத்தூர் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த கதிர்வேலனை காவல்துறை கைதுசெய்தது.

* பிறகு 31-05-2018 அன்று ஐபில் போராட்டத்தில் வன்முறையில் இடுபட்டதாகத் தேடப்பட்டுவந்த மதன்குமார் சரணடைய வந்தபோது அவரை தாமே பிடித்ததாகக் கூறி அவர்மீது சங்கிலி பறித்ததாக வழக்குப் பதிவுசெய்து சிறைப்படுத்தி கையை உடைத்துள்ளனர்.
கழிவறையில் வழுக்கி விழுந்து கை உடைந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுளார்.

* ஐபில் போராட்டத்தில் பங்கேற்றதற்காக 9-06-2018 அன்று நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை பொறுப்பாளர் சிவராசன் கைது செய்யப்பட்டார்.
அவர்மீதும் 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
---------------------

மோடிக்கான எதிர்ப்பு...

* 12-04-2018 பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11-04-2018 அன்று நள்ளிரவில் நாம் தமிழர் கட்சியினர்
1. அன்புதென்னரசன்,
2. எஸ்.கே சிவக்குமார்,
3. விக்னேஷ்
4.ராஜாராமகிருஷ்ணன்,
5. கணேசன்,
6. ராம்ராஜ்,
7. சிவக்குமார்,
8. ஞானசேகரன்,
9. சத்தியமூர்த்தி,
10. கோகுலகிருஷ்ணன்,
11. ஜீவா,
12. சீமான் சுரேஷ்,
13. இராயப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டு இரவோடு இரவாக 15 நாள் தடுப்புக்காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அனைவரின் மீதும் பொய்வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

* பிரதமர் மோடியின் தமிழக வருகையையொட்டி 12-04-2018 அன்று, சென்னை விமான நிலையம் அருகே கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்ததற்காகக் கைது செய்யப்பட்ட சீமானை விடுவிக்க பல்லாவரம் ஸ்ரீ கிருஷ்ணா திருமண மண்டபத்தின் முன்பு கூடியோர் மீது தடியடி நடத்தி  நடிகர் மன்சூர் அலிகான் உட்பட கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தது போன்ற பொய் வழக்குகள் புனையப்பட்டன.
அன்று கைதானோர்
1. வீரபாண்டியன்,
2. சரவணன்,
3. ரூபன்,
4. ஆகாஷ்,
5. பாபுராசன்,
6. ரங்கசாமி,
7. சீனிவாசன்,
8. அருண்கண்ணன்,
9. முரளி,
10. பொன்குமார்
அனைவரையும் 15 நாள் தடுப்புக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.
-----------------

நெய்வேலி மின்சாரத்தை தடுக்க...

* 7-05-2018 அன்று பிணையில் விடுதலைப் பெற்றிருக்கவேண்டிய கடல்தீபன் மீது திட்டமிட்டு நெய்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் பேசியதற்காகத் தேச துரோக வழக்கு (124A) பதியப்பட்டு மீண்டும் சிறைப்படுத்தப்பட்டார்.
------------

இனப்படுகோலை நாளன்று...

* 18-05-2018 மே18 இனஎழுச்சி பொதுக்கூட்டம் சோழிங்கநல்லூரில் நடைப்பெற்றது.
அந்த நிகழ்வில் பேசிய நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை மாநிலச்செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் நள்ளிரவு 12.30 மணிக்கு காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார்.
எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காத அவர் மீது கைது செய்யும் பொழுது காவல் அதிகாரிகளைத் தாக்கியதாகப் பொய்வழக்குகளைப் புனைந்து குண்டர்சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தியுள்ளனர்.
----------

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து...

* 19-05-2018 அன்று புதுக்கோட்டை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஹைட்ரொகார்பன் திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தின் நூறாவது நாள் நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இறங்கும்போது முன்பாகவே அதே விமானத்தில் வந்திருந்த வைகோ அவர்களை வரவேற்க வந்திருந்த ம.தி.மு.க. தொண்டர்கள் காத்திருந்து நாம்தமிழர் கட்சியரைத் தாக்கினர்.
சீமான் தலைமையில் ம.தி.மு.க.வினர் தாக்கப்பட்டதாக
1.வினோத்(எ)அலக்சாண்டர்,
2.மதியழகன்,
3.நாகேந்திரன்,
4.சதிஷ்குமார்,
5.மணிகண்டன்,
6.சஜில்,
7.குணா
ஆகியோர் மீது பொய்வழக்குகளைப் பதிவுசெய்து காவல்துறை சிறைப்படுத்தியது.
மேலும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 8 பேர் மேல் காவல் அதிகாரி வண்டியை சேதப்படுத்தியதாகப் பொய் வழக்குப் புனையப்பட்டது.

* இதையும் மீறி கதிராமங்கலம் போராட்டத்தில் கலந்துகொண்ட சீமான் அண்ணன் உள்ளிட்ட 26 பேர் வழக்குப் பதியப்பட்டது.

* இரண்டு நாள் கழித்து 21-5-18 அன்று
1.ராசா ஆனந்து,
2.தினேஷ்குமார்,
3.பிரதிப் ஆகியோரை கைது செய்து இந்தப் பொய்வழக்கில் இணைத்து சிறைப்படுத்தப்பட்டனர்.
----------

காடழித்து வரும் பசுமைச்சாலைக்கு எதிராக...

* 27-05-2018 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் சேலம் பசுமைவழி சாலை அமைக்கக்கூடாது என்று மனு கொடுக்கச் சென்ற
1.கந்தன்,
2.மோகன்ராஜ்,
3.ராமன்,
4.பிரகாஷ்,
5.சிவமுத்து,
6.வெங்கடேசன்,
7.மோகன்,
8.சதிஸ்குமார்,
9.தேசிகன்,
10.கேசவன்,
11.ஜெயச்சந்திரன்,
12.வடிவேல்,
13.கெளதமன்,
14.குரு,சாய்குமார்,
15.பெருமாள்,
16.துரைமுருகன்,
17.ஐயப்பன்,
18.பிரபு,
19.குமார்,
20.பாலாஜி,
21.அமீன்முகமது,
22.விஜயகுமார்,
23.சார்லஸ்,
24.தனபால்,
25.மாணிக்கம்,
26.பிரகலதா ஆகியவர்களைக் காவல்துறை கைதுசெய்து அனுமதியின்றிப் பேரணி வந்ததாகப் பொய் வழக்கு போட்டு கைது செய்து 15 நாள் சிறையிலடைத்தனர்.
இதில் ஒரு பெண்ணும் அடக்கம்.

* 08-06-2018 அன்று சேலம் எட்டுவழிச் சாலைக்கு எதிராகக் கூட்டத்திற்கு அனுமதி கேட்ட கட்சி பொறுப்பாளர் மாரி அவர்கள் போராட்டத்தைத் துண்டுகிறார், பாலத்திற்கு வெடிகுண்டு வைக்கத் திட்டம் தீட்டினார், அரசுக்கு எதிராகச் சதித்திட்டத்தில் ஈடுபடுகிறார் என்று பொய்யான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டார்.
------------

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக...

* 22-05-2018 துப்பாக்கிசூடு நடத்தி 13 பேர் கொல்லப்பட்ட பொதுமக்களின் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட சில அமைப்புகள் தான் இப்போராட்டத்திற்கு மக்களைத் திரட்டியதாகப் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் திட்டமிட்டுச் சேர்க்கப்பட்டது.
30-05-2018 அன்று நாம் தமிழர்கட்சியின் மாநில ஒருங்கினைப்பளர்களில் ஒருவரான வியனரசு அவர்கள் கைதுசெய்யப்பட்டுப் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீதும் பத்திற்கும் மேற்ப்பட்ட பிரிவுகளின் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
போராட்டத்தில் பங்கேற்ற குற்றத்திற்கு அவர் தான் ஸ்டர்லைட் பணியாளர்கள் குடியிருப்பைக் கொளுத்தினார் என்று வழக்கு போடப்பட்டுள்ளது.

*  10-6-2018 அன்று தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றதற்காகத் தூத்துக்குடி நாம் தமிழர் பொறுப்பாளர் இசக்கித்துரை கலவரத்தில் ஈடுபட்டதாகப் பொய்வழக்குகள் பதிவுசெய்து அதிகாலையில் மூன்று மணிக்குக் கைதுசெய்யப்பட்டுப் பாளையங்கோட்டை சிறையில் சிறைப்படுத்தப்பட்டார்.
-------------

மேலும்....

வேலூர் தனியார் நிறுவனத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் தொடர்புள்ளதாகக் கூறி நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த
1.விஜி,
2.சிவா,
3.விக்னேஷ் ஆகியோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது தொடர்ச்சியாகப் பொய்வழக்குகள் போடப்பட்டுத் தொடர் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

வேறு எந்த கட்சி மீதும் இப்படியான அடக்குமுறை இருந்ததில்லை

No comments:

Post a Comment