Tuesday 19 June 2018

எதுக்கு தனித்தனியா போராடிக்கிட்டு...

எதுக்கு தனித்தனியா போராடிக்கிட்டு...

பேசாம தனிநாடு கேட்டு போராடிருவோம்கேன்!

நம்ம இனத்த அழிக்க 4,5 பெரிய திட்டம்...
அது போக மாவட்டத்துக்கு ஒரு பிரச்சனை...

ஒவ்வொன்னையும் வெளக்கி.. விவாதிச்சு... புத்தகம் போட்டு... மாநாடு நடத்தி... வழக்கு போட்டு 25 வருசம் இழுத்து... Facebook ல பரப்பி.. twitterல மீம்ஸ் போட்டு ட்ரெண்டாக்கி... youtubeல வீடியோ போட்டு... உண்ணாவிரதம் இருந்து... பேரணி நடத்தி... பொழப்ப விட்டு பல மாசம் போராடி... குண்டடி பட்டு செத்து... பொய் வழக்குல கைதாயி... தற்கொலை பண்ணி... வீரவணக்கம் வச்சி... நிவாரணத் தொகை வாங்கி... தற்காலிக தீர்வு கெடச்சு... அடுத்து பொழுதுவிடிஞ்சா இன்னொரு போராட்டம்.

ச்சை... சொல்லவே மூச்சுவாங்குதே!

எதுக்கு இப்பிடி செத்துசெத்து பொழக்கணும்னேன்?!

எதுக்கு ஆவியையும் சீவனையும் தொலைக்கணும்னு கேக்கேன்?!

நாம தனியா பிரிஞ்சுருவோம்.

தலைவர் வழியில் போய் தனிநாடா ஆயிருவோம்!

ஆமா... தனிநாடு ஆயிட்டா எல்லா பிரச்சனையும் தீந்திருமா?

இது என்ன கேணத்தனமான கேள்வி....?

த பாரு...
பிரச்சனைக்காக இல்லப்பேய்...
இயல்பாவே நாம தனிநாட்டு இனம்தான்.

தமிழனுக்கு தனிநாடு வாங்க தகுதி இல்லன்னா இந்த ஒலகத்துல எவனுக்குமே அந்த தகுதி இல்லப்பூ...

அப்படியே அண்ணந்தம்பியா இருந்தாலும் ஒத்துவரலனா பாகப்பிரிவினை பண்ணவேண்டியதானே?!

அதானப்பு நாயம்..?!

தனிநாடானா இப்ப இருக்குற பிரச்சனையெல்லாம் 99% தீந்துரும்.

இந்த பிரச்சனை போய் வேற பிரச்சனை வந்தா ...

அத வரும்போது பாப்போம்.

No comments:

Post a Comment