காந்தியின் அகிம்சை
***********************
கே: காந்தியை உருவாக்கியது தமிழர்கள் என்கிறீர்கள்!
ஆனால் அவரது வழி தவறு என்கிறீர்கள்!
இது முரணாக இருக்கிறதே?!
ப: காந்தியை ஒரு அகிம்சை போராளியாக உருவாக்கியது தென்னாப்பிரிக்கத் தமிழர்கள்தான்.
இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
அகிம்சை போராட்டம் ஆயுத போராட்டத்திற்கு சற்றும் சளைத்தது இல்லை.
ஆனால் தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் போராடியது சம உரிமைக்காக
அதனால் அகிம்சை வழி சரியாக இருந்தது.
ஆனால் விடுதலை எப்போதும் அகிம்சை மூலம் கிடைக்காது.
இதுதான் வரலாறு நமக்கு தரும் பாடம்.
சம உரிமை பெற காந்திக்கு தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் கற்றுக்கொடுத்த அகிம்சை வழியை
அவர் இங்கே வந்து ஆங்கிலேயரிடம் விடுதலை பெற பயன்படுத்தினார்.
இது ஆங்கிலேயருக்கு வசதியாகப் போய்விட்டது.
ஆங்கிலேயர் இந்த நாட்டை விட்டு போக முதல் காரணம் அவர்கள் உலககம் முழுவதும் சுரண்டி சேர்த்துவைத்த செல்வமெல்லாம் இரண்டு உலகப்போர்களில் காலியானதுதான்.
இதற்கு காரணம் ஜெர்மனி.
ஜெர்மனியை ஆங்கிலேயர் மீது ஏவியது ஒரு தமிழரான செண்பகராமன் பிள்ளை மற்றும் அவரது வழிநடந்த நேதாஜி (மற்றும் அவர் படையிலிருந்த தமிழர்கள்)
ஜெர்மனியை பிரிட்டிஷ் இரண்டு உலகப்போர்களிலும் தோற்கடித்தாலும் தனது செல்வம் அனைத்தையும் இழந்து அதன் பொருளாதாரம் வீழ்ந்தது.
உலக நாடுகளை அடக்கி சுரண்டும் வலு அதனிடம் இல்லை.
அதனால் இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் அவர்கள் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளில் இருந்து காலி செய்தனர்.
காந்தியால் சுதந்திரம் கிடைத்தது என்பது 1% கூட உண்மை இல்லை.
------------
மேலும் அறிய,
search காந்தியை உருவாக்கிய தென்னாப்பிரிக்க தமிழர் வேட்டொலி
search இலங்கைக்கு ஏன் ஆறுமாதம கழித்து சுதந்திரம்? வேட்டொலி
search எம்டன் செண்பகராமன் ஹிட்லரை அடக்கிய நேதாஜியின் குரு வேட்டொலி
search அறவழி விடுதலை அடைய உதவுமா வேட்டொலி
Showing posts with label அமைதி. Show all posts
Showing posts with label அமைதி. Show all posts
Monday, 2 October 2017
காந்தியின் அகிம்சை
Labels:
அமைதி,
அறவழி,
அஹிம்சை,
ஆங்கிலேயர்,
ஆதி பேரொளி,
ஆயுதவழி,
உலகப்போர்,
எம்டன்,
காந்தி,
காந்தீயம்,
சிந்தனை,
சுதந்திரம்,
செண்பக ராமன்,
தென்னாப்பிரிக்கத் தமிழர்,
தென்னாப்பிரிக்கா,
நேதாசி,
வேட்டொலி
Subscribe to:
Posts (Atom)