Showing posts with label மாநில உரிமை. Show all posts
Showing posts with label மாநில உரிமை. Show all posts

Friday, 12 June 2020

மின்வாரிய வேலைவாய்ப்பு 300 இல் 39 வேற்றினத்தார் கையில்


`300 பேரில் 39 பேர் வெளிமாநிலத்தவர்கள் நியமனம்!'- தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அதிர்ச்சி

- கு. ராமகிருஷ்ணன்


 ஏற்கனவே தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு, 90 முதல் 100 சதவிகிதம் வெளிமாநிலத்தவர்களுக்கே பணி நியமனம் வழங்கப்படுவதாக தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினர் குற்றம்சாட்டி வருகிறார்கள். 

 திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் அப்ரண்டிஸ் பணிகளுக்கு நியமிக்கப்பட்ட 300 பேரில் ஒருவர்கூட தமிழர் இல்லை.
 இதைக் கண்டித்து இவர்கள் நடத்திய போராட்டமும், தமிழக வேலை தமிழருக்கே என்ற ஹேஸ்டேக்கும் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது.

 இந்த நிலையில், மாநில அரசின்கீழ் வரும் தமிழ்நாடு மின் வாரியத்திலும் உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட வெளிமாநிலத்தவர்களுக்கு தற்பொழுது பணி நியமனம் வழங்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

 இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், 
 ``தமிழ்நாடு அரசே இந்திக்காரர்களையும், வெளி மாநிலத்தவர்களையும் அரசு வேலையில் அமர்த்தியிருக்கும் தமிழினத்துரோகம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 
 தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 300 உதவிப் பொறியாளர் பணிக்குத் தேர்வானவர்கள் பட்டியல் தற்பொழுது வெளியாகியுள்ளது. 
 இதில் 39 பேர் ஆந்திரா, கேரளா, உ.பி., பீகார், கர்நாடகம், ராஜஸ்தான், டெல்லி, சத்தீஸ்கர் ஆகிய வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
 பணியமர்த்தல் ஆணையில் அவர்களது முகவரியும் இருக்கிறது. 
 இதில் 25 பேர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 
 இவர்களை வடசென்னை, குந்தா (நீலகிரி), காடம்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணியில் அமர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

 இவர்களுக்கு மாத ஊதியம் 50,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வானோரின் பட்டியலை வெளியிட்டுள்ள மின்வாரியத் தலைமைப் பொறியாளர் அசோக் குமார், தேர்வானோரில் தமிழ் தெரியாதவர்கள் இருப்பின் அவர்கள் உடனடியாகத் தமிழ்த் தேர்வுக்குத் தயாராக வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளார்.
 தமிழ் தெரியாத வெளி மாநிலத்தவர்கள் எனத் தெரிந்தே இவர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது தமிழ்நாடு அரசு.

 கடந்த 2016-ம் ஆண்டு (1.9.2016), தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் முறைப்படுத்தல் சட்டத்தின்படி, வெளி மாநிலத்தவர் மட்டுமின்றி பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், மியான்மர், தான்சானியா, எத்தியோப்பியா உள்ளிட்ட 14 நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்தோரும் தமிழ்நாடு அரசுப் பணியில் சேரலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் பிற மாநிலங்களில் மண்ணின் மக்களுக்கே அரசு மற்றும் தனியார் வேலைகள் என சட்டங்கள் உள்ள நிலையில், தமிழ்நாட்டிலோ வெளிநாட்டவர் கூட அரசுப் பணியில் சேரலாம் என்ற சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது. 
இச்சட்டம் காரணமாகவே, தமிழ்நாடு அரசுப் பணியில் வெளி மாநிலத்தவர் மற்றும் வெளி நாட்டவர் சேர வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகம். 
 தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து பல்வேறு துறைகளின் அரசுப் பணிகளுக்காகக் காத்திருக்கும் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடி பேர். 

இங்கு அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர்களை நியமிப்பது தமிழ். மக்களுக்கு இழைக்கும் இனத்துரோகமாகும். 
 இந்திய அரசமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள மொழிவழி மாநிலமாகிய தமிழ்நாட்டில், தமிழர்களைப் புறக்கணித்து சகட்டுமேனிக்கு வெளி மாநிலத்தவர்களையும், வெளி நாட்டவர்களையும் வேலைக்குச் சேர்ப்பது சட்டவிரோதச் செயலாகும்.

 மற்ற மாநிலங்களில் மாநில அரசு மற்றும் தனியார் துறைகளில் 100-க்கு 100 மண்ணின் மக்களுக்கே வேலை எனச் சட்டங்கள் இயற்றிச் செயல்படுத்தி வருகிறார்கள். 
அதுபோன்ற சட்டம் தமிழ்நாட்டில் இயற்றப்பட வேண்டும்” என்றார்.

Published: 31 May 2019 
vikatan .com

படம்: மின்வாரியத்தில் பணி அமர்த்தப்பட்ட வெளிமாநிலத்தவர்கள் இரண்டு ஆண்டுகளில் கட்டாயம் தமிழ் கற்கவேண்டும் என அமைச்சர் தங்கமணி பேட்டி (12.06.2020)

 அவர்கள் பணியமர்ந்து ஓராண்டு ஆகியும் தமிழ் கற்கவில்லை என்பதே முக்கியமான குற்றச்சாட்டு.
கற்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறவில்லை 

Wednesday, 28 November 2018

விடைதெரியாத கேள்விகள்

விடைதெரியாத கேள்விகள்

தீர்ப்பு வரும் முன்பே அதாவது ஆலை மூடப்பட்ட அடுத்தநாளே "விரைவில் ஆலை திறக்கப்படும்" என்று அனில் அகர்வால் உறுதியாகக் கூறியது எப்படி?

ஸ்டெர்லைட் ஆய்வுக் குழுவில் ஒரு தமிழக உறுப்பினர் கூட இருக்கக்கூடாது என்று கேட்டு வாங்கிய அனில் அகர்வால் தரப்பு
சொந்த சாதிக்கார நீதிபதி தலைமையில் குழு அமைத்தது எப்படி?

"தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்" தடை விதித்தால் அதை நீக்க "தேசிய பசுமை தீர்ப்பாணையத்திற்கு" அதிகாரம் உள்ளது.
ஆனால் ஆலையை மூடியது தமிழக "அரசு".
இதை ஆய்வு செய்து "ஆலையை மூடியது தவறு" என்று கூட தே.ப.தீ. (NGT) க்கு என்ன அதிகாரம் உள்ளது?

துறை என்பதைத் தாண்டி அரசு என்கிற அதிகார மட்டத்திற்கு வந்துவிட்ட இந்த வழக்கை மத்திய மாநில அரசுகளைத் தாண்டிய அதிகாரமான உச்ச நீதிமன்றம்தான் தன்னிச்சையாக ஆய்வு செய்யவேண்டும்.
ஆனால் அப்படி நடக்கவில்லையே?!

என்றால் தமிழக "அரசு" என்பது மத்திய அரசின் ஒரு "துறை"யை விட கீழானதா?!

பல ஆதாரங்கள் இருந்தும் போராட்டத்தில் பலர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்துவரும் சிபிஐ  இதுவரை ஒருவரைக் கூட கைது செய்யவில்லையே ஏன்?!

சினிமாவில் வருவது போல போலீஸ், அரசியல்வாதிகள், நீதிபதிகள், சிபிஐ என அனைத்துமே பணக்கார முதலாளிகளின் சட்டைப்பையில் உள்ளது உண்மைதானோ என்று ஸ்டெர்லைட் விவகாரத்தைப் பார்க்கும்போது தோன்றுகிறதே?!

என்றால் முப்பது ஆண்டுகளாக ஜனநாயக வழியிலும் சட்டரீதியாகவும் தூத்துக்குடி மக்கள் நடத்தும் போராட்டம் அனைத்தும் வீண்தானா?!

இத்தனை உயிரிழப்புகள் வீண்தானா?!

இதற்கு பேசாமல் தூத்துக்குடி இளைஞர்கள் ஆலைக்கு பாம் வைத்து தகர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறதே?!

என்றால் இங்கே ஜனநாயகம் என்பது ஏட்டுச்சுரைக்காய் தானா?

Sunday, 8 July 2018

தமிழகத்தின் வளர்ச்சி யாரால்?

தமிழகத்தின் வளர்ச்சி யாரால்?

காலத்தை பின்னோக்கி நகர்த்துவோம்.
1952 இல் பொட்டி ஸ்ரீராமுலு 10% கூட தெலுங்கர் வாழாத சென்னையை ஆந்திராவுடன் சேர்க்கக் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறார்.

  ம.பொ.சி அவரிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அப்போது ராமுலு "உங்கள் மாவட்டத் தலைநகரங்கள் கூட மாநிலத் தலைநகருக்கு இணையாக வளர்ந்து நிற்கின்றன.
ஈரோடு போல ஒரு நகரத்தை ஆந்திரா முழுவதும் சுற்றினாலும் பார்க்கமுடியாது.
எனவே பின்தங்கியுள்ள எங்களுக்கு சென்னையை மட்டும் விட்டுத்தாருங்கள்.
உங்களுக்கு புண்ணியமாகப் போகும்" என்று கெஞ்சுகிறார்.

அதாவது தமிழகம் அப்போதே ஒரு முன்னேறிய மாநிலம் என்பதை இதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
 
(இதற்கு 1920ல் ஆட்சிக்கு வந்த முதல் திராவிடக் கட்சியான நீதிக்கட்சியின் 13 ஆண்டுகால ஆட்சிதான் சிலர் சப்பைக்கட்டு கட்டாலம்.
நீதிக்கட்சி சில சீர்திருத்தங்களைச் செய்ததே தவிர பொருளாதார திட்டம் எதையும் செயல்படுத்தவில்லை)

இன்று இந்தியாவிலேயே தமிழகமும் கேரளாவும் எந்தவொரு மாநிலத்தையும் விட முன்னேறிய மாநிலங்கள்.

அதிலும் தமிழகம் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சீரான வளர்ச்சி கொண்ட மாநிலம்.

இந்தியாவின் 6% மக்கட்தொகை மட்டுமே கொண்ட 11வது பெரிய மாநிலமான தமிழகம், இந்தியாவின் இரண்டாவது பணக்கார மாநிலம்.
இந்திய பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கை தமிழகம் தன்வசம் வைத்துள்ளது.

இதற்கு காரணம் திராவிடக் கட்சிகளா என்று கேட்டால் நிச்சயம் இல்லை.

திராவிடக் கட்சிகளும் இயக்கங்களும் முன்னேற்றத்திற்கு தடையாகவே என்றும் இருந்துள்ளன.

நமது உரிமைகள், பொருளாதாரம், வளங்கள் என அனைத்தையும் திராவிட ஆட்சியாளர்களான வந்தேறிகள் மத்திய அரசும் சுரண்டவிட்டு தானும் சுரண்டிக் கொளுத்தனரேயன்றி தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதையுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை.

அதாவது ஆட்சியாளர்கள் சாதிக்கவேண்டிய அத்தனை சந்தர்ப்பங்களிலும் கோட்டை விட்டனர்.

ஆனால், மக்கள் சாதிக்கவேண்டிய அத்தனை சந்தர்ப்பங்களிலும் சாதித்தே வந்துள்ளனர்.

எந்தவொரு உருப்படியான தலைவனும் இல்லாமல் பொதுமக்களின் இயல்பான தனிமனித ஒழுக்கமும் திறமையும் மட்டுமே நமது இந்த வளர்ச்சிக்குக் காரணம்.

இப்போதும் நாம் முன்னேறிய மாநிலம் போன்ற ஒரு போலியான தோற்றம்தான் இன்று உள்ளது.
அதற்குக் காரணம் பிற மாநிலங்கள் நம்மை விட பின்தங்கிய நிலையில் உள்ளன.
வடக்கே செல்லச் செல்ல மிகமோசமான நிலை உள்ளது.

அவர்களோடு நம்மை ஒப்பிட்டு முன்னேறிய மாநிலம் என்பது மடைமை.

நாம் ஒரு தனிநாட்டு இனம்.
இயல்பிலேயே வல்லரசு.
நம்மால் ஐரோப்பியருடன் போட்டிபோட முடியும்.

தமிழ்நாடு தனிநாடாக இருக்கும் பட்சத்தில் முன்னேறிய நாடுகளுடன் போட்டி போடும் வல்லமை கொண்டது என தனது 'An Uncertain Glory: India and its Contradictions' என்ற நூலில் பொருளாதார மேதை அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார் (இவர் 1998ல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவராவார்).

நம்முடைய வளர்ச்சியில் சோம்பேறி இனங்களுக்குப் பங்குகொடுத்தே நாம் நாசமாய்ப் போனோம்.

ஆண்டுக்கு சுமார் "ஒரு லட்சம் கோடி" மத்திய அரசுக்கு கப்பம் கட்டி எல்லா மாநிலத்தானும் அனுபவித்துபோக மீதி நிதியை நாம் பெறுகிறோம்.

ஒரு ரூபாய் வரி கட்டி 30 பைசா திரும்பப் பெறுகிறோம்.

பேரிடர் காலத்திலும் வெறும் 500 கோடி கூட நிவாரணம் கேட்டுக் கிடைக்காமல் அல்லாடுகிறோம்.

ஆங்கிலேயர் வரும்வரை நாம் தனியரசு.
1947 லேயே நாம் தனிநாடு ஆகியிருக்கவேண்டும்.

நமக்கான உரிமைகள் மறுக்கப்பட்டபோதே நாம் இந்திய ஒன்றியத்தில் இருந்து விலகியிருக்க வேண்டும்.

நம்முடைய அடிப்படைத் தேவைகளுக்குக் கூட போராடவேண்டிய நிலை வந்தபோதாவது வெளியேறியிருக்க வேண்டும்.

இன்று நம் இனத்தையும் மண்ணையும் அழிக்கும் நிலைப்பாட்டிற்கு ஹிந்தியமும் திராவிடமும் வந்தபின்னும் நாம் சும்மாயிருக்கிறோம்.

தேசபக்தியின் பெயரால் நம் மண்ணையும் உயிரையும் கேட்கிறது ஹிந்தியம்.

இனியும் பொறுக்கக்கூடாது!

நாம் தனிநாடாவோம்!

ஆகாவிட்டால் சாவோம் என்பது உறுதி.

ஆகிவிட்டால் வல்லரசாவோம் என்பதும் உறுதி.

படம்: வீரப்பனார் மற்றும் தனித்தமிழ்நாடு ஆயுதக் குழுக்கள் வெளியிட்ட "பெரிய தமிழ்நாடு" வரைபடம்

Saturday, 3 February 2018

ஆட்சிமொழி ஆகக்கூடிய தமிழ் வழக்காடு மொழியாகக்கூட இல்லையே?!

ஆட்சிமொழி ஆகக்கூடிய தமிழ் வழக்காடு மொழியாகக்கூட இல்லையே?!

ஜனநாயகப் படுகொலையாளர்கள் பாதுகாப்பாக ஒழிந்துகொள்ள ஒரு இடம் இருக்கிறது என்றால் அது அம்பேத்கர் எனும் மாய பிம்பம்.

"ஒவ்வொரு மாநிலமும் அந்தந்த மாநில மொழியைத்தான் உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்த முடிவெடுத்தால் அப்புறம் உச்சநீதிமன்றத்தை மூடிவிட்டு போகவேண்டியதுதான்"
என்று 1948ல் மொழிவாரி மாநில அமைப்பின் வாரியத்திடம் சமர்ப்பித்த அறிக்கையில் அம்பேத்கரே சொல்லிவிட்டாராம்.

அது என்ன "அம்பேத்கரே" ?!
அவரென்ன கடவுளா?

எல்லா ஹிந்தியனும் எப்படி சுற்றிவளைத்தாலும் இறுதியில் தமிழனுக்கு எதிராகவே வந்து நிற்கிறான்.

எங்கள் மாநிலத்தில் எங்கள் உயர்நீதிமன்றத்தில் எங்கள் மொழியில் வழக்காட உரிமை கொடுக்காத இந்த அராஜக நாடும் அதன் கையாலாகாத உச்ச நீதிமன்றமும் எங்களுக்குத் தேவையில்லை.

எங்கள் மாநிலத்தை  நாடாக்குவோம்!

எங்கள் மொழி ஆட்சிமொழி ஆகும்!

பிறகு எங்கள் உயர்நீதிமன்றமே உச்சநீதிமன்றம் ஆகும்.

அதற்குமேல் ஐ.நா சபை அல்லது போர் என்ற நிலையை உருவாகும்.

Saturday, 14 October 2017

தமிழ்நாடு தமிழருக்கே எனும் முழக்கம்

தமிழ்நாடு தமிழருக்கே எனும் முழக்கம்

1938ல் இந்தி கட்டாயப்பாடம் எனும் அரசாணை வந்தபிறகு
தமிழறிஞர்கள் ஒன்றுகூடி இந்தியெதிர்ப்பைத் தொடங்க திட்டம் வகுக்க திருச்சியில் ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்தனர்.

  28.05.1938 ல் நடந்த அந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியெதிர்ப்பு குழு அமைக்கப்பட்டு தலைவராக சோமசுந்தர பாரதியார்
மற்றும் செயலாளராக கி.ஆ.பெ.விசுவநாம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்தியை எதிர்க்க ஒரு முழக்கம் தேவைப்பட்டது.  அப்போது முதன்முதலாக "தமிழ்நாடு தமிழருக்கே" எனும் முழக்கம் முன்வைக்கப்பட்டது.

அந்த கூட்டத்தில் ஈ.வே.ரா ஒரு உறுப்பினர் மட்டுமே.
அவர் நடத்திவந்த பத்திரிக்கையில் அந்த முழக்கத்தை அவர் வெளியிட்டார் என்பதற்காக அது அவரது சிந்தனை என்றாகிவிடாது.

1) இந்தி எதிர்ப்பு
2) தமிழ்நாட்டு உரிமை
இந்த இரண்டுக்குமே ஈ.வே.ரா பிற்காலத்தில் துரோகமும் செய்தார்.

[மேலும் அறிய,

தேடுக: ஈ.வே.ரா தனித்தமிழ்நாடு கேட்டாரா? வேட்டொலி

தேடுக: இந்தியை எதிர்த்தாரா ஈ.வே.ரா? வேட்டொலி ]

தமிழர்கள் ஒரு சிந்தனையை உருவாக்கி போராட்டத்தை முன்னெடுப்பதும்
திராவிடம் துரும்பைக் கிள்ளிப் போட்டு அதில் புகுந்து குழப்பி தோல்வியடையச் செய்வதும்
பிற்காலத்தில் திராவிடக் குஞ்சுகள் அந்த துரும்பை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த சிந்தனையையும் போராட்டத்தையும் திராவிடத்தின் பெயரில் மொய்யெழுதி வைப்பதும் தொடர்ந்து நடந்துவருகிறது.

பிராமண எதிர்ப்பு, இடவொதுக்கீடு, சாதிய எதிர்ப்பு, வைக்கம் போராட்டம், ஆலயநுழைவு, பகுத்தறிவு, இந்தி எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, தனிநாடு கோரிக்கை, பெண்ணுரிமை, தமிழ்நாடு பெயர்மாற்றம், எழுத்து சீர்திருத்தம் என பலவும் தமிழரிடமிருந்து திராவிடம் தட்டிப்பறித்தவை ஆகும்.

Tuesday, 3 October 2017

தமிழகம் - பொருளாதாரமும் இடப்பெயர்வும்

தமிழகம் - பொருளாதாரமும் இடப்பெயர்வும்

[ ] இவ்வகை அடைப்புக் குறியில் இருப்பது எனது சொந்த கருத்து.

[இந்த பதிவில் தமிழகத்தில் பிறந்த குடிமக்களின் விபரங்கள் தரப்பட்டுள்ளன,
  அதாவது தமிழகத்தில் பிறந்தோர் எந்த இனமானாலும் தமிழகத்தார் என்று குறிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 85% வரை தமிழினத்தார் இருக்கலாம்.
இதில் பிற மாநிலங்களில் அல்லது பிற நாடுகளில் பிறந்த தமிழர்கள் கணக்கில் எடுக்கப்படவில்லை]

இப்பதிவில் தரப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் 2016 ஆம் ஆண்டு "Tamil nadu Migration Survey (TMS)" சார்பாக பேரா.எஸ்.இருதய ராஜன் தலைமையேற்ற குழுவினரால் வெளியிடப்பட்ட "Non-Resident Tamils and Remittances" எனும் ஆவணத்தின் அடிப்படையில் இருக்கும்.
மேலும் இதில் தரப்பட்டுள்ள விபரங்கள் மிகவும் துல்லியமானவை கிடையாது.
------------------------------------------
தமிழகம் (சுருக்கமாக) :--

இந்திய ஒன்றியத்தின் மாநிலங்களில் தமிழ்நாடு 1,30,058 ச.கி.மீ பரப்பளவு கொண்ட 11வது பெரிய மாநிலம் ஆகும்.

மக்கட்தொகையில் 6வது மாநிலம் ஆகும்.
(இந்திய மக்கட்தொகையில் 6%).

ஆனால்,

தமிழகம் தனது உள்ளக உற்பத்தி (domestic product) மூலம் இந்தியாவில் இரண்டாவது பணக்கார மாநிலம் என்ற இடத்தை பிடிக்கிறது.
(Economy= 4789 billion or 71 billion dollars)

அதாவது இந்தியாவின் பொருளாதாரத்தில் (152510 billion) 31% தமிழகத்திடம் உள்ளது.

பிற எந்த மாநிலத்தையும் விட அதிகமான வணிக நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன
(இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் 11%).

வேலைவாய்ப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது
(இந்திய வேலைவாய்ப்பில் 10%).

[இதுவே தமிழகத்தில் தொழில் தொடங்கவும் வேலைசெய்யவும் பிற மாநிலத்தார் பெருமளவில் குடியேறக் காரணம்]
----------------------------------------------
பிறமாநிலங்களில் தமிழகத்தார் (சுருக்கமாக) :-

இந்திய ஒன்றியத்திற்கு  உள்ளேயே பிற மாநிலங்களில் வாழும் தமிழகத்தார் ஏறத்தாழ 19 லட்சம்.

[இதிலே 85% மற்றும் பிற மாநிலங்களில் உள்ள தமிழர் பகுதிகளில் வாழும் தமிழினத்தாரை சேர்த்தால் பிற மாநிலத் தமிழினத்தார் எண்ணிக்கை 50 லட்சம் வரை வரும்]

இது வெளிநாடுவாழ் தமிழகத்தாரை விடவும் சற்று குறைவு ஆகும்.
தோராயமாக 10 ல் 1 வீட்டில் ஒருவர் வெளிமாநிலத்தில் உள்ளார்.

தமிழ்நாடு தவிர்த்த இந்தியாவிற்குள் வாழும் தமிழ்நாட்டினர் 100% என்றால்
அவர்கள் மாநிலங்கள் வாரியாக
கர்நாடகா 43.1%
கேரளா 18.5%
மகாராஷ்ட்ரா 12.8%
ஆந்திரா 8.1%
என்றவாறு இருக்கின்றனர்.

[வடயிந்தியாவில் மிகவும் குறைவு.
இதனால்தான் 'இந்தியாவில் வேலை கிடைக்க இந்தி படிக்கவேண்டும்' என்று கூறுவோருக்கு அதை விட அரபி படிப்பது மேல் என்று பதிலடியாகக் கூறுவர்.]

அதாவது தமிழ்நாட்டில் பிறந்து உள்நாட்டில் வேலைக்குச் செல்வோரில் மிக அதிகமானோர் கர்நாடகாவிற்கு சென்றுள்ளனர்.
(இதேபோல வெளிமாநிலம் போய் சம்பாதித்துவிட்டு வந்தோரில் 39% கர்நாடகா போய்விட்டு வந்தோர் ஆவர்)
இவர்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பட்டதாரிகள்.
கர்நாடகாவில் உள்ள வெளிமாநிலத்தாரில் பாதிக்கும் மேல் தமிழகத்தாரே உள்ளனர்.

[இதுவே கர்நாடக அரசியல் தமிழர் எதிர்ப்பையே மையமாகக் கொண்டுள்ளமைக்கு முக்கிய காரணம்.
கர்நாடகாவில் அதிலும் தென் கர்நாடக மாவட்டங்களில் மட்டும் 7 லட்சம் தமிழகத் தமிழ்-இனத்தார் உள்ளனர்.
தென் கர்நாடகமே தமிழர்களுக்குச் சொந்தமானதுதான்.
அதில் இருக்கும் பூர்வீகத் தமிழினத்தாரை இதில் சேர்க்கவில்லை.]
------------------------
வெளிநாடுவாழ் தமிழகத்தார் (சுருக்கமாக) :-

தமிழகத்தின் மக்கட்தொகை 2011 கணக்கெடுப்பின்படி கிட்டத்தட்ட ஏழரை கோடி.

இதில் தற்போது வெளிநாடுகளில் இருப்போர் (emigrants) தோராயமாக 35 லட்சம் பேர்.

புலம்பெயர் தமிழகத்தார் அதிகம் உள்ள நாடுகள்
சிங்கப்பூர் = 4 லட்சம் பேர்
ஐ.அ.எமிரேட்ஸ்(துபாய்) = 4 லட்சம்
சவுதி அரேபியா = 3.5 லட்சம்
அமெரிக்கா = 3 லட்சம்
மலேசியா = 1.9 லட்சம்
என்றவாறு உள்ளன.

(வளைகுடா நாடுகளான ஐ.அ.எ, சவுதி அரேபியா, கத்தார், பக்ரைன், ஓமன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் மட்டும் 11.5 லட்சம் தமிழகத்தார் உள்ளனர்)

வெளிநாட்டிற்கு சென்றுள்ளோரில் 73% பேர் வேலை நிமித்தமாக சென்றுள்ளனர்.

வெளிநாடுகளுக்கு செல்வோர் மிக அதிகமாக
சென்னை (3.2 லட்சம்)
கோயம்புத்தூர் (1.9 லட்சம்)
ராமநாதபுரம் (1.4 லட்சம்)
ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோர்.

தாலுகா படி பார்த்தால்
ராமநாதபுரம் தாலுகா (92,915 பேர்)
திருச்செந்தூர் (63,892 பேர்)
அகஸ்தீஸ்வரம் (63,100 பேர்)
ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்தோர் அதிகம் வெளிநாடு சென்றுள்ளனர்.

தேனி, தர்மபுரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிகக் குறைவானோரே வெளிநாடு செல்கின்றனர்.

தாலுகா படி உடுமலை, சங்கரி, கோபிச்செட்டி பாளையம், திருச்செங்கோடு தாலுகாக்களில் மிகவும் குறைவானோரே வெளிநாடு சென்றுள்ளனர்.
------------------------------------
தமிழகம் - குடியேற்றமும் வெளியேற்றமும் (விரிவாக) :-

கீழ்க்கண்டவை 2001 ல் இருந்த நிலை ஆகும்

  தமிழகத்தில் குடியேறியுள்ளோர் பற்றி பார்த்தால்
மார்வாடிகள் ராஜஸ்தானிலிருந்து குடியேறி பெரிய தொழிலதிபர்களாக உள்ளனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகவும் குறைவு என்பதால் பலரும் குடும்பத்துடன் குடிவருகிறார்கள்.

  இதற்கடுத்து தஞ்சாவூரில் குடியேறியுள்ள மராத்தியர்கள் குறிப்பிடத்தகுந்தோர்.

மேற்கண்டோர் இப்பதிவில்  கணக்கில் எடுக்கப்படவில்லை.

1991ல் தமிழகத்திற்கு பிறமாநிலத்தார் 9 லட்சம் பேர் குடிவந்துள்ளனர்.
இதனால் மக்கட்தொகையில் 1.6% அதிகரித்தது.
(அதேநேரத்தில் 2.7% தமிழகத்தார் பிற மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்)

2001 ல் தமிழகத்திற்கு பிறமாநிலத்தார் 8 லட்சம் பேர் குடிவந்துள்ளனர்.
இதனால் மக்கட்தொகையில் 1.3% அதிகரித்தது.
(அதேநேரத்தில் 2.8% தமிழகத்தார் பிற மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்)

2001 ல் வந்த 8 லட்சம் பிறமாநிலத்தாரில் 2 லட்சம் பேர் கிராமப்புறங்களுக்கும் 6 லட்சம் பேர் நகர்ப்புறங்களுக்கும் குடியேறியுள்ளனர்.

மிக அதிகமாக 2.4 லட்சம் பேர் சென்னைக்கு குடி வந்துள்ளனர்.
இதற்கடுத்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு 1.1லட்சம் பேர் குடி வந்துள்ளனர்.
இதற்கு கோயம்புத்தூர் (62,000 பேர்).

மாவட்ட மக்கட்தொகை சதவீதப்படி நீலகிரியில் மிக அதிகமாக பிறமாநிலத்தார் இருக்கின்றனர் (6.8%).
இதற்கடுத்தவை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் (5.5% பிறமாநிலத்தார்).
மிகக்குறைவு விருதுநகர் ஆகும் (0.2%).

குடியேறியுள்ள பிறமாநிலத்தாரில் மூன்றில் ஒரு பங்கினர் 20 ஆண்டுகளுக்கும் அதிகமாக தங்கி உள்ளனர்.
பிறமாநிலத்தார் சராசரியாக 17 ஆண்டுகள் இங்கே தங்கியிருக்கிறார்கள் என்று கூறலாம்.

மிக முக்கியமான விடயம் குடியேறியோரில் ஆண்களை விட பெண்கள் 2% அதிகம்.
பெண்கள் தங்கும் சராசரி காலமும் 2 ஆண்டுகள் அதிகம்.

தமிழகத்திற்கு 2001ல் குடிவந்தோர் 100% எனில்,
கேரளத்தார் 33%,
ஆந்திர பிரதேசத்தார் 21%
கர்நாடகா15% 
ராஜஸ்தானியர் 5%
மகாராஷ்டிரர் 5%
என்ற அளவிலும் பிறமாநிலத்தார் குடிவந்துள்ளனர்.

இதே காலகட்டத்தில் கர்நாடகா போன தமிழகத்தார், வந்த கர்நாடகத்தாரை விட இருமடங்கு ஆவர்.
மகாராஷ்ட்ராவும் அவ்வாறே.

ஆனால் ஆந்திரா, கேரளா மாநிலத்தார் அப்படியே தலைகீழ்,
குடிபோனவரை விட வந்தவரே அதிகம்.
  (தமிழகத்திற்கு 1991ல் குடிவந்தோரில் 40% கேரளத்தார் ஆவர்)

(1991, 2001 கணக்கெடுப்பு இரண்டையும் சேர்த்து)
இந்திய அளவில் மிக அதிகமாக குடிவந்தார் திரும்பச் சென்றது
கேரளா (91,500 பேர் வெளியேற்றம்)
ஆந்திரா (18,500 பேர் வெளியேற்றம்)
ஆகிய மாநிலங்களில் நடந்துள்ளது.

[இவ்விரு மாநிலத்தாரும் பிற மாநிலத்தவரை விரும்புவதில்லை.
விரட்டுவதிலேயே குறியாக இருப்பார்கள்]

1991 நிலவரப்படி
இந்திய அளவில் அதிக அளவில் பிறமாநிலத்தார் வாழ்வது
கேரளா (40%)
ஆந்திரா (21%)
கர்நாடகா (14%)
பாண்டிச்சேரி (9%)

அதிக அளவில் பிறமாநிலங்களுக்கு சென்றது
கர்நாடகா (31%)
கேரளா (17%)
ஆந்திரா (15%)
பாண்டிச்சேரி (11%)
ஆகிய மாநிலத்தார்
அதாவது தென்னிந்தியாவில்தான் அதிகம் குடிபோகலும் குடிவரலும் நடந்துள்ளது.

[இதற்கு காரணம் அண்டை மாநிலங்கள் தமிழர் எல்லை பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதே,
ஒரே மொழி பேசுவோருக்குள்ளேதான் அதிக போக்குவரத்து இருக்கும்.
அண்டை மாநிலத் தமிழினத்தார் இங்கு வருவதும் இங்கு உள்ள தமிழினத்தார் அந்த எல்லைப் பகுதிகளுக்கு போவதும் இவ்வாறு பதிவாகியுள்ளது.
இதை உறுதிப்படுத்தும் வகையில்
புதுச்சேரிக்கும் தமிழகத்திற்குமான குடியேறல் போக்குவரத்து உள்ளது.
புதுச்சேரியின் பிறமாநிலத்தார் பெரும்பாலும் தமிழகத்தார் ஆவர் ]

2001 நிலவரப்படி தமிழகத்தில் உள்ள பிறமாநிலத்தில் பிறந்து தமிழகத்தில் வாழ்வோர் மிக அதிகமாக
கேரளத்தார் 2,24,000 பேர்
ஆந்திரர் 1,22,119 பேர்
கர்நாடகா 74,000 பேர்
ராஜஸ்தானியர் 36,000 பேர்
மகாராஷ்டிரர் 32,000 பேர்
என்றவாறு உள்ளனர்.
(மொத்த பிறமாநிலத்தார் 6,00,000).
[ஏற்கனவே கூறியபடி இங்கேயே பிறந்த பிறமொழியினர் இந்த கணக்கில் இல்லை]

இதே போல வெளிமாநிலங்களில் தமிழகத்தார் மிக அதிகமாக
கர்நாடகாவில் 4,30,000 பேர்
மகாராஷ்ட்ராவில் 2,60,000 பேர்
ஆந்திராவில் 1,00,000 பேர்
வாழ்பவர்களாக இருந்துள்ளனர்.
(மொத்தம் 12,13,000 தமிழகத்தார்)

வெளிமாநிலம் செல்லும் தமிழகத்தாரில் 18% படிக்காதவர் ஆவர்.
---------------------------------------------
தமிழகம் (விரிவாக) :-

மக்கட்தொகை ஏற்ற-இறக்கம் :

1991 வரை பிறப்பு விகிதம் (மிகச் சரியான அளவில்) 2.1 என்றிருந்தது.
பிறகு படிப்படியாகக் குறைந்து மக்கட்தொகைக் குறைப்பில் கடந்த பத்தாண்டுகளில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
அதாவது இரண்டு தாய்-தந்தை இருந்தால் அவர்களுக்கு மூன்று குழந்தை (அதாவது 4 பேர் இருந்த இடத்தில் 3 பேர்) என்ற அளவில் பிறப்பு விகிதம் 1.5 என்று ஆகிவிட்டது.
(குழந்தைகள் இறப்பு விகிதம் மிகவும் குறைவு அதனால் இந்த 1.5 அளவாவது இருக்கிறது)
மாவட்ட அடிப்படையில் நீலகிரி மக்கட்தொகை மிக வேகமாகக் குறைந்து வருகிறது (fertility= -0.4)

[இது இந்திய அரசால் திட்டமிட்டு செய்யப்படுகிறது.
தமிழர்கள் எண்ணிக்கை குறையும் அதேநேரத்தில் இந்திக்காரர்கள் அதிக குழந்தைகள் பெற்று நாடு முழுவதையும் நிறைத்துவருகின்றனர்]

தமிழகம் ஒரு வயதான மாநிலமாக (ageing state) ஏற்கனவே உள்ளது.
அதாவது 60 வயதைத் தாண்டியோர் 7% க்கு மேல் இருந்தால் முதிய மாநிலம் ஆகும்.
இந்நிலையில் குழந்தை பிறப்பும் நான்கில் ஒரு பங்கு குறைந்துவிட்டதால் விரைவில் உழைக்கும் இளைய சமுதாயம் இன்றி தமிழகம் தடுமாறும்.
2031 க்கு பிறகு மக்கட்தொகை வேகமாக சரியத் தொடங்கும்.
இது வெளியாட்கள் குடியேற வசதியாக இருக்கும்.

[எனவே இனியேனும் தமிழர்கள் குறைந்தது 3 குழந்தைகள் பெற்றுக்கொள்வது மிக மிக அவசியம் ஆகும்]
- - - - - - - - - - - - - -
எழுத்தறிவு :-

எழுத்தறிவில் தமிழகம் முன்னேறிய மாநிலமாக உள்ளது (80%).

எழுத்தறிவில் கன்னியாகுமரி (94%), சென்னை(93%), நீலகிரி (92%), தூத்துக்குடி(91%) ஆகிய மாவட்டங்கள் முன்னணியில் உள்ளன.
தர்மபுரி(77%), கிருஷ்ணகிரி(79%), சேலம்(80%) ஆகியன கடைசியாக வருகின்றன.
(இந்தியா முழுக்க எழுத்தறிவு 74%).

பெண்கள் ஆண்களை விட எழுத்தறிவில் பின் தங்கியுள்ளனர் (75%).
(இந்த பின்தங்கல் 1981 க்கு பிறகு வேகமாகக் குறைந்து வருகிறது).

ஆண்கள் சராசரியாக பத்தாம் வகுப்பும் பெண்கள் சராசரியாக ஏழாம் வகுப்பும் படித்துள்ளனர்.
- - - - - - - - - -
வேலைவாய்ப்பு :-

15 வயதுக்கு மேற்பட்டோரில் 52% தமிழகத்தார் நல்ல வருமானம் தரும் வேலையில் உள்ளனர்.
15 லட்சம் பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர்.
இவர்களில் பாதியளவு உடலுழைப்பு தொழிலாளர்கள் அதிலும் பெண்களே அதிகம் வேலையின்றி இருக்கின்றனர்.

வேலைசெய்வோரில் அதிக சதவீதம் பெண்கள் உள்ள மாவட்டங்கள்
ராமநாதபுரம்(45%), திருநெல்வேலி(42%), ஈரோடு(39%), மதுரை(37%), பெரம்பலூர்(33%) என்றவாறு செல்கின்றன.
 
வேலைவாய்ப்பு பெற்றோரில்
32% விவாசாயத் துறையிலும்
8% உடலுழைப்பு தொழிலும்
7% சொந்த தொழிலிலும்
இருக்கிறார்கள்.

தமிழகம் வேலையில்லாத் திண்டாட்டத்தில் எட்டாவது மாநிலம் ஆகும்

வேலையில்லாத் திண்டாட்டம் மிக அதிகமாக வேலூர், கடலூர், நீலகிரி, பெரம்பலூர், தஞ்சாவூர், தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நிலவுகிறது.
- - - - - - - - - - -
வீட்டுவசதி :-

தமிழகத்தில் ஆடம்பர வீடுகள் சென்னை, கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ளன.
(பெரும்பாலும் வெளிநாட்டு பணம் வரும் மாவட்டங்கள் ஆகும்)

ஆடம்பர வீடுகளோடு வசதியான வீடுகளையும் சேர்த்து பார்த்தால்
சென்னை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, காஞ்சிபுரம்
என்றவாறு செல்கிறது.

சொந்தவீடு வைத்திருப்போரில்
7% பேர் கார் வைத்துள்ளனர்.
8% பேர் ஏ.சி வைத்துள்ளனர்.
14% பேர் கணினி வைத்துள்ளனர்.
41% குளிர்சாதனப்பெட்டி வைத்துள்ளனர்.
62% பேர் இருசக்கர வாகனம் வைத்துள்ளனர்.
--------------------------------------
வெளிநாடுவாழ் தமிழகத்தார் (விரிவாக) :-

புலம்பெயர் வரலாறு :

தமிழகத்திலிருந்து வெளிநாடு போவது 1830களில் அதிகம் நடந்தது.
அக்காலகட்டத்தில் 1லட்சம் பேர் பஞ்சம் காரணமாக மதராஸ் மாகாணத்தை விட்டு சென்றுள்ளனர்.
இதில் 46,500 இலங்கைத் தீவுக்கு சென்றுள்ளனர்.
தரங்கம்பாடியில் (Tranquebar) இருந்த டானிஷ்காரர்கள் அதவாது டென்மார்க் நாட்டினர் தமிழர்களை அடிமைகளாக வாங்கி விற்ற குறிப்புகள் உள்ளன.

1833 வாக்கில் பல ஆயிரம் பேர் மலாயா மற்றும் சிங்கப்பூருக்கு சென்றுள்ளனர்.

1843-1867 க்குள் 5,37,000 பேர் இலங்கை சென்றனர்.
அதில் ஒரு லட்சம் பேர் திரும்பிவரவில்லை.
அதன்பிறகு 1877-1878 ல் மேலும் 1,50,000 பேர் இலங்கை சென்றுள்ளனர்.

1876 வாக்கில் பர்மாவுக்கும் பல ஆயிரம் பேர் சென்றுள்ளனர்.

இதுபோக பிரெஞ்சு காலணியான பாண்டிச்சேரியில் இருந்து 5,33,600 பேர் பல்வேறு பிரெஞ்சு காலணிகளுக்கு சென்றுள்ளனர்.
அவர்களில் 1842 மற்றும் 1870 ஆகிய ஆண்டுகளில் 1,12,000 மட்டுமே திரும்பியுள்ளனர்.

1970களில் மீண்டும் வளைகுடா நாடுகளுக்கு செல்லத் தொடங்கினர்.

சமீபத்தில் 2006 வாக்கில் அதிகமாக இருந்தது.
2009 க்குப் பிறகு மிகவும் குறைந்துவிட்டது.
- - - - - - - - -
வெளிநாட்டு வருமானம் :

இந்திய மாநிலங்களிலேயே தமிழகம் மற்றும் கேரளா ஆகியன தமது உழைக்கும் இளைய சமுதாயத்தை இழந்து வருவதில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

வெளிநாட்டு தமிழகத்தாரால் 2015ல் மட்டும் ஏறத்தாழ 62000கோடி ரூபாய் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது (remittance).

கேரளாவுக்கு அடுத்தபடியாக வெளிநாட்டு பணம் வருவதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மூன்றாவது இடத்தில் ஆந்திராவும்
நான்காவது இடத்தில் உத்திர பிரதேசமும் உள்ளன.

வெளிநாட்டு பணம் அதிகம் வரும் மாவட்டங்கள்
சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, ராமநாதபுரம், கன்னியாகுமரி என்றவாறு செல்கிறது.

இந்த பணத்தை தமிழக மக்களுக்கு பங்கிட்டால் ஒவ்வொரு தமிழக குடிமகனுக்கும் மாதம் ரூ.708 கிடைக்கும்.
ஆண்டுக்கு ரூ.8500 கிடைக்கும்.
இதைச் சேர்த்து தமிழகத்தின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.75,000.

வெளிநாட்டு வருவாயைச் சேர்க்காத தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ 66,500 ஆகும்.
இதன்படி தமிழகம் எட்டாவது இடம்தான் என்றாலும்
இந்தியாவின் மொத்த தனிநபர் வருமானத்தைப் போல இது ஒன்றரை மடங்கு ஆகும்.

தமிழகத்தில் 10 ல் 1 வீட்டில் வெளிநாடு செல்பவர் உள்ளார்.

தமிழகத்தின் உள்ளக உற்பத்தியைப்போல வெளிநாட்டு வருமானம் 1/7 மடங்கு ஆகும்.
அதாவது வெளிநாடு மூலம் வரும் பணம் ஒரு ஆண்டு வருமானத்தை ஏழு ஆண்டுகளில் நிறைவு செய்யும்.

(ஒப்பீட்டுக்காக கேரளாவை நோக்கினால் வெளிநாட்டு கேரளத்தினர் தமிழர்களை விட சற்று அதிகம்,
2015ல் மட்டும் 68000கோடி அனுப்பியுள்ளனர்!)

வெளிநாடு போயிருப்போர் மற்றும் வெளிநாடு போகாதோரை ஒப்பிட்டால்
வெளிநாடு போயிருப்போர் சராசரியாக தலைக்கு
மாதத்திற்கு 17,500 ரூ சம்பாதிக்கிறார்.
வெளிநாடு போகாதோர் சராசரியாகத் தலைக்கு
மாதம் 12,000 ரூ சம்பாதிக்கிறார்.

அதாவது ஒரு வெளிநாடுபோனவர் மாத வருமானமானது, வெளிநாடு போகாத ஒருவரை விட சராசரியாக ரூ.5,500 அதிகம்.
- - - - - - - - -
வெளிநாடு பற்றிய கூடுதல் தகவல்கள் :-

வெளிநாடு போவோரில்
17% பொறியாளரும்
13% கணினி பொறியாளரும்
அடங்குவர்.

3ல் ஒரு பங்கினர் 20-34 வயதில் வெளிநாடு சென்றுள்ளனர்.

வெளிநாடு போக ஆகும் செலவு சராசரியாக தலைக்கு ரூ.1,08,000 ஆகிறது.

வெளிநாடு செல்வோரில் 5% ஆண்களும் 20% பெண்களும் படிப்பறிவில்லாதோர்.

வெளிநாடு போய் சம்பாதித்து திரும்பிவிட்டோர் அதிகமாக சவுதிக்கும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கும் (துபாய்) போய்வந்துள்ளனர்.
இதையடுத்து சிங்கப்பூர், மலேசியா நாடுகள் வருகின்றன.

முதல்முறையாக வெளிநாடு போகும்போது பாதிக்கும் அதிகமானோர் திருமணம் ஆகியவராக இருந்தனர்.

கணவர் வெளிநாட்டில் இருக்கும் மனைவியர் எண்ணிக்கை தோராயமாக 10 லட்சம்

தமிழக இசுலாமியர் தமது சதவீதத்திற்கு ஏற்ப இந்துக்களை விட இரண்டு மடங்கு அதிகமாக வெளிநாடு செல்கின்றனர்.

கீழே இருப்பது குறிப்பிட்டோரை தேர்ந்தெடுத்து வினா-விடை முறையில் எடுத்த கணக்கெடுப்பு ஆகும்

வெளிநாடு போய்வருவோரில்
63% சரியான சாப்பாடு கிடைக்காமலும்
50% வரை இருப்பிடம் கிடைக்காமலும்
90% வரை மருத்துவ வசதி வழங்கப்படாமலும் உள்ளனர்.

91% தமிழகத்தார் தமக்கு வெளிநாடுகளில் பிரச்சனை வந்தபோது இந்திய தூதரகத்திற்கு செல்லவில்லை
[காரணம் அவர்கள் தமிழர்களுக்கு உதவமாட்டார்கள்].

வெளிநாடு போவோரில் முக்கால்வாசிப்பேர் மறுமுறை போவதில்லை.

திரும்பி வந்தோரில்
37% பேர் ஒப்பந்தம் முடிந்ததாலும்
19% பேர் மோசமாக நடத்தப்பட்டதாலும்
9% உடல்நலம் பாதிக்கப்பட்டதாலும்
8% பேர் சம்பளம் போதாமையாலும்  திரும்பிவிட்டனர்.

வெளிநாட்டு பணம்
31% வீடு கட்டுவதிலும்
15% (வரதட்சணை உட்பட) திருமணத்திற்கும் செலவு செய்யப்படுகிறது.

புலம்பெயர் தமிழகத்தாரில் 15% பெண்கள் ஆவர்.
பெண்கள் அதிகம் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு சென்றுள்ளனர்.
தற்போது செல்வோர் அதிகம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளுக்கு செல்கின்றனர்.

பெண்களில் அதிகம் திருப்பூர், நாமக்கல், கோயம்புத்தூர், தேனி மாவட்டத்தினர் ஆவர்.

வெளிநாட்டில் துணையை பிரிந்து இருப்போரில்
30% பேர் உறவு நல்லநிலையில் இருப்பதாகவும்
63% பேர் சரியாக இருப்பதாகவும்
7% பேர் உறவு முறிந்துவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

திருமணமானோரில் 54% பேர் இரண்டாம் முறை வெளிநாடு செல்வதில்லை.

வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் தமது மகளுக்காக பெரும்பாலும் (80%) வெளிநாட்டு மாப்பிள்ளையை விரும்புவதில்லை.
---------------------------------------------------
தமிழகத்தின் உள்ளேயே இடப்பெயர்வு :-

தமிழகத்திற்கு உள்ளேயே (பெரும்பாலும் வேலைக்காக) இடம்பெயர்ந்தோர் 25% ஆவர்.
இதில் பாதியளவு பெண்கள் (திருமணம் காரணமான இடம்பெயர்வு).
இது இந்தியாவின் 'மாநிலத்திற்கு உள்ளேயான இடப்பெயர்வு சதவீதமான' 31% ஐ விட குறைவு.
கிராமப்புற மற்றும் நகரப்புற இடப்பெயர்வும் கூட 0.5% வேறுபாடே உள்ளது.

(ஆலைகளில் வேலைவாய்ப்பு பெற்றதால்) இடம்பெயர்ந்துள்ள பெண்கள் அதிகமுள்ள மாவட்டங்கள் திருப்பூர்(44%), நாமக்கல்(41%), கோவை(36%) ஆகியன.
அதாவது தமிழகத்தார் மாநிலம் முழுவதும் சீரான அளவில் உள்ளனர்.
கிராமங்கள் வளர்ச்சி இன்றி மக்கள் நகரங்களில் குவிவது மிகவும் குறைவாக உள்ளது.
--------------------------------------
தமிழகத்தில் வெளிநாட்டார் :-

2001 நிலவரப்படி தமிழகத்தில் குடியேறியுள்ள பிற நாட்டினர் மிக அதிகமாக
இலங்கை 80,000
[ஈழம் நமது தமிழர் நாட்டின் ஒரு பகுதி என்பதை மறக்கவேண்டாம்]
மியான்மர் 20,000
நேபாளம் 2600
மலேசியா 2400
------------------------------------
[முடிவாக,
பல இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகம் நல்லநிலையில் உள்ளது.
அதற்குக் காரணம் பிற மாநிலங்கள் மிக மோசமான நிலையில் இருப்பதுதான்.
தமிழக உரிமைகள் ஒன்றொன்றாகப் பறிக்கப்பட்டு நமது உடைமைகள் ஒவ்வொன்றாக இந்திய தேசியத்தின் பெயரால் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய மத்திய அரசு தனது முழு பலத்தையும் தமிழகத்தின் மீது பயன்படுத்துகிறது.
உழைப்பும் திறமையும் தமிழருடையது, ஆனால் பங்கு மட்டும் எல்லாருக்கும் கொடுக்கவேண்டும்.
விளங்கும்படி சொன்னால் நாம் ஒரு ரூபாய் வரி கட்டி 34பைசா திரும்பப்பெறுகிறோம்.
இந்தி மாநிலங்கள் ஒரு ரூபாய் கட்டி 3,4 ரூபாய் வரை பெறுகிறார்கள்.
இதுதான் அப்பட்டமான உண்மை.
இதற்குப் பெயர்தான் இங்கே ஒற்றுமை.

தனிநாடாகும் அத்தனை தகுதிகளும் தேவைகளும் நமக்கு உள்ளன.
நாம் ஓரளவு வலிமையாக இருக்கும்போதே விழித்துக்கொள்வது நல்லது.
நமக்கு தண்ணீரோ பாதுகாப்போ கூட கொடுக்கமுடியாத இந்த இந்திய ஒன்றியத்தில் உழைத்துக்கொட்டியபடி நாம் ஒரு மூலையில் கிடக்கவேண்டுமா?]

Wednesday, 27 September 2017

வங்கி வேலைக்கு தமிழ் கட்டாயமில்லை! இந்தி அரசின் அடுத்த ஆப்பு!

வங்கி வேலைக்கு தமிழ் கட்டாயமில்லை
இந்தி அரசின் அடுத்த ஆப்பு

தமிழ் கட்டாயமாக இருந்த தேர்வுகளிலேகூட தமிழே தெரியாத ஹிந்தி மாணவருக்கு தமிழில் நல்ல மதிப்பெண் வழங்கி வேலையில் அமர்த்திக்கொள்ளும் மத்திர அரசின் இந்தி இனவெறி அம்பலமானதால் தற்போது இந்த அதிரடி முடிவு!

பொதுத்துறை வங்கிகளில் உதவியாளர் பணியிடங்கள் 7883 இடங்கள் காலியாக உள்ளன.
தமிழகத்தில் மட்டும் 1277 காலியாக உள்ளன.
தமிழகத்தில் பத்து லட்சம் பேர் இதற்கான தயாரிப்பில் உள்ளனர்.
தற்போது தமிழக பொதுத்துறை தமிழ்மொழி கட்டாயம் என்ற விதியை தளர்த்தியுள்ளது.

News18 செய்தி
https://m.facebook.com/story.php?story_fbid=1046364758800510&id=100002809860739&refid=17&_ft_=top_level_post_id.1046364758800510%3Atl_objid.1046364758800510%3Athid.100002809860739%3A306061129499414%3A2%3A0%3A1506841199%3A-37368577874997661&__tn__=%2AW-R&_rdr

மேலும் அறிய,
search மத்திய அரசு வேலையில் 0 தமிழர்கள் வேட்டொலி

search தமிழே தெரியாமல் தமிழில் 24/25, அரசு வேலையைத் தட்டிப்பறித்த ஹிந்தியர் வேட்டொலி

Sunday, 2 July 2017

ஜி.எஸ்.டி மாநில உரிமைக்கு எதிரானது _ மோடி

2013 பிப்ரவரியில் ஜி.எஸ்.டி -ஆல் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்ய 9,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்

2013 அக்டோபரில் ஜி.எஸ்.டி மசோதா அமைப்பதை எதிர்த்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி GST வந்தால் 40,000 கோடி ரூபாய் குஜராத்துக்கு இழப்பு ஏற்படும் என்று கூறினார்.

Tuesday, 9 May 2017

நீட் ஏன்?

நீட் ஏன்?

இந்திய ஒன்றியத்தின்

டெல்லி - அரசியல் தலைநகர் 

மும்பை - பொருளாதாரத் தலைநகர்

சென்னை - மருத்துவத் தலைநகராக அறியப்படுகின்றன.

அதாவது இந்தியாவிலேயே சென்னையில்தான் நவீன மருத்துவமனையும்
திறமையான மருத்துவர்களும் இருக்கின்றனர்.

செலவும் குறைவு என்பதால் பல வெளிநாட்டினர் மருத்துவம் பார்க்க சென்னைக்கு வருகின்றனர்.
இந்தியாவிற்கு மருத்துவம் பார்க்கவருவோரில் முக்கால்வாசிப்பேர் சென்னைக்குத்தான் வருகிறார்கள்.

இங்கே வரும் வெளிநாட்டவர் சுற்றிப்பார்க்கவும் செய்வர்.
அவர்களுக்கு தமிழகத்தின் கோயில்கள் மிகவும் பிடித்து தமிழகத்தின் புகழ் உலகம் முழுவதும் பரவி சுற்றுலாப் பயணிகளும் அதிகம் வருகின்றனர்.
இந்தியாவில் தமிழகம் சுற்றுலாவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதையெல்லாம் பார்த்து வயிறெரிந்த ஹிந்தியர்கள் இதற்கு அடிப்படையான தமிழர்களின் மருத்துவ அறிவுக்கு வைத்த ஆப்புதான் நீட்.

மத்திய அரசின் பாடத்திட்டமான CBSC படித்தோர் தமிழகத்தில் 1.6% மட்டுமே.

இந்த பாடத்திட்டத்தில் இருந்துதான் கேள்வி கேட்போம் என்கிறது மத்திய அரசு.

இதற்கு உறுதுணையாக இணைந்து வழக்கை வாதாடி வென்றது தெலுங்கர் நடத்தும் சங்கல்ப் அமைப்பு.

தமிழகத்தின் 98.4% மாணவர்களின் மருத்துவக் கனவு கனவாகவே ஆகிவிட்டது.

இது மத்திய ஹிந்தி அரசின் மாநிலங்களின் உரிமை மீதான தாக்குதல்.
இது தமிழகத்தைக் குறிவைத்தே நடத்தப்படுகிறது.

ஆனால் திராவிடம் ஊட்டிய பார்ப்பனவெறுப்பு விசம் யாரையும் சரியான திசையில் சிந்திக்கவிடவில்லை.

1930ல் சமஸ்கிருதம் படித்தால்தான் டாக்டர் ஆகலாம்.
அதைத்தான் இப்படி மீண்டும் கொண்டுவந்துவிட்டான் பார்ப்பான்.
செயினை கழட்ட சொன்னீர்களே பூணூலை ஏன் கழட்ட சொல்லவில்லை?
என்றெல்லாம் முகநூல் பதிவர்கள் விளாசித் தள்ளுகிறார்கள்.

இது தமிழக அரசின் பாடத்திட்டத்தை ஒழித்து ஹிந்தி அரசின் பாடத்திட்டத்தைக் கொண்டுவர நடக்கும் நவீன மொழித்திணிப்பு.
தமிழகத்தின் மீதான பிற இனத்தாரின் எரிச்சல்.

இது தெரியாமல் கண்ணைமூடிக்கொண்டு பார்ப்பனரை எதிர்த்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பது முட்டாள்த்தனம் மட்டுமல்லாது திராவிடத்தின் வெற்றி எனவும் கூறலாம்.

உண்மையான எதிரியை மறைத்து இல்லாத ஒன்றை நோக்கி நம்மை திசைதிருப்ப உருவாக்கப்பட்டதே திராவிடம்.

சரி. பார்ப்பன வெறுப்பாளர்கள் எக்கேடும் கெட்டு ஒழியுங்கள்.

மாணவர்களே!
இந்த ஆண்டு நீட் நடந்து ஆடை களைந்து அவமதிப்பு வரை உங்களுக்கு நடந்தாயிற்று.

அடுத்த ஆண்டு இரண்டு மாதம் முன்பே திட்டமிட்டு பெரிய போராட்டம் நடத்துங்கள்.
இந்த முறை நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இதை திட்டமிடுங்கள்.
அடுத்த தலைமுறை மாணவர்களிடம் விளக்கிச் சொல்லுங்கள்.
பொதுத்தேர்வை மொத்தமாகப் புறக்கணிப்பது சரியான பதிலடியாக இருக்கும்.

இது மருத்துவர் ஆக நினைக்கும் 'நன்றாகப் படிக்கும் மாணவர்களின்' பிரச்சனை மட்டும் இல்லை.
இன்று அவர்களுக்கு நடந்தது நாளை ஒவ்வொரு மேற்படிப்பிற்கும் நடக்கும்.

ஏற்கனவே எல்லா அரசுவேலைகளிலும் வடயிந்தியனை நிரப்பிவருகிறார்கள்.
கல்வியையாவது தக்கவைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் பொதுமக்கள் போராட்டத்திற்காகக் களத்தில் இறங்கினீர்கள்.
உங்கள் போராட்டத்திற்கு பொதுமக்கள் கட்டாயம் வருவார்கள். 
அவர்களுக்கும் தரமான மருத்துவம் வேண்டும்தானே?!

ஆனால் போராட்டம் மட்டுமே இறுதித்தீர்வு கிடையாது.
ஹிந்தியாவோடு நாம் இணைந்திருக்கும் வரை தமிழன் ஒருவன் கூட நிம்மதியாக வாழமுடியாது என்பது உறுதி.
நீட் போனால் இன்னொன்று அது போனால் மற்றொன்று என கொண்டுவந்துகொண்டே இருப்பார்கள்.
நாம் போராடி போராடி சாகவேண்டியதுதான்.

தமிழர்நாடு விடுதலையே இறுதியான தீர்வு.

இளைய தலைமுறை மாணவர்களே!
இதை எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.