Showing posts with label முல்லைப்பெரியார். Show all posts
Showing posts with label முல்லைப்பெரியார். Show all posts

Wednesday, 24 October 2018

இரண்டு புதிய அணைகள் - முல்லைப்பெரியாறு அணை டம்மியாக்கப்பட்டு உடைக்கப்படும்

முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக மேலும் இரண்டு அணை
- அனுமதி வாங்கியது கேரளா

கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் நடந்த வரலாறு காணாத மழை ஏற்படுத்திய சுவடுகள் இன்னும் நினைவை விட்டு நீங்கவில்லை.
அதற்குக் காரணமாக மலையைக் குடைந்து கட்டடங்கள், சாலைகள் எனப் பலவற்றை அமைத்திருந்ததும், கிட்டத்தட்ட 43 அணைகள் கட்டியிருந்ததையும் சுற்றுச் சூழலியலாளர்கள் சுட்டிக் காட்டினர்.
இதனால் பெருமளவில் நிலச்சரிவு ஏற்பட்டதையும், வீடுகள் இடிந்ததையும் சுட்டிக் காட்டினர்.
ஆனால், கேரள அரசோ முல்லைப் பெரியாறு அணையின்மீது குற்றம் சாட்டியது.
இதற்குப் பல எதிர்ப்புகள் எழுந்தபோதும், தனது திசையைத் திருப்பாமல் முல்லைப் பெரியாறு அணையின் கீழே மேலும் ஒரு புதிய அணையைக் கட்ட முடிவெடுத்துள்ளது.

இந்தப் புதிய அணை கேரள மாநிலம், பீர்மேடு தாலுகா, மஞ்சுமலை கிராமத்தில் அமையவிருக்கிறது.
இந்த இடம் வண்டிப் பெரியாரிலிருந்து 8 கி.மீ தொலைவில் இருக்கிறது.

இதற்கான சுற்றுச்சூழல் அறிக்கை தயாரிக்க, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை நாடி அனுமதியும் வாங்கிவிட்டது கேரளா.

இதனை அவ்வளவு எளிதில் கடந்து போய்விட முடியாது.
2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை கொஞ்சம் திருப்பிப் பார்க்க வேண்டும்.
"அணை தொடர்பான சிக்கல்களுக்குத் தமிழகமும், கேரளாவும் ஒரு மனதுடன் முடிவெடுத்து நீதிமன்றத்தை அணுகலாம்.
கேரளா தனியாக அணையைக் கட்ட விரும்பினால், தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தைப் பெற்று, அதைச் சுற்றுச்சூழல் அனுமதி கடிதத்தோடு இணைக்க வேண்டும்" எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இதற்கு நேர்மாறாக கேரளா தனித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்து சுற்றுச்சூழல் தாக்கல் அறிக்கையைத் தயார் செய்ய அனுமதி வாங்கியிருக்கிறது கேரளா.

இதுபற்றிப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜனிடம் பேசினோம்.
"தமிழக அரசு உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை செய்ய கேரள ந அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியிருப்பது மிகப்பெரும் சூழலியல் பேரிடராகும்.

கேரளத்தில் அண்மையில் ஏற்பட்ட மழை பொழிவினால் மிகப்பெரும் சேதம் ஏற்பட்டு ஒட்டுமொத்த மாநிலமே நீரில் மிதந்ததற்கு மேற்குத் தொடர்ச்சி மலைகளை குடைந்து பல சுரங்கங்கள், சாலைகள், ரிசார்ட்டுகள் என அமைத்ததே முக்கியக் காரணமாகும்.

மேலும் தேவையே இல்லாத இடங்களில் மின்சார உற்பத்திக்காக அணைகள் கட்டியதும் இப்பேரழிவுக்கு முக்கியக் காரணமாகும்.
உலக நாடுகள் பலவும் இப்பிரச்னையை உணர்ந்து பல ஆண்டுகளுக்குமுன் கட்டிய அணைகளை இடித்து வருகின்றன.

இதுமட்டுமல்லாமல் அணைகள் கட்டுவதால் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது எனப் (reservoir induced seismicity ) பல ஆய்வுகளும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் முல்லைப் பெரியாறு போன்ற சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இன்னொரு அணையைக் கட்டுவது அறிவார்ந்த செயல் கிடையாது.

அதுமட்டுமன்றி முல்லைப் பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய 5 மாவட்டங்களின் 2 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களின் நீர்த்தேவையினையும், பல கோடி மக்களின் குடிநீர்த் தேவையினையும் பூர்த்தி செய்து வருகிறது.
இந்நிலையில் புதிய அணை கட்டினால் தமிழகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்காமல் போய்விடும்.

மேலும் 2014-ம் ஆண்டு, முல்லைப் பெரியாறு வழக்கில் ஆர்.எம்.லோதா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பில் 'இரண்டு மாநிலங்களும் ஒருமனதாக புதிய அணை கட்ட முடிவு எடுத்து நீதிமன்றத்தை அணுக வேண்டும் எனவும், கேரள அரசு அணை கட்ட விரும்பினால் தமிழக அரசின் ஒப்புதல் கடிதம் பெற்று அதைச் சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பத்தோடு இணைத்துத்தான் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
தற்போது மத்திய சுற்றுச்சூழல்துறை வழங்கியிருக்கும் இந்த முதற்கட்ட அனுமதி வெளிப்படையான நீதிமன்ற அவமதிப்பாகும்.
தமிழக மக்களின் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உடனடியாக மத்திய சுற்றுச்சூழல்துறையின் அனுமதியை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு தொடர வேண்டும் எனப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தற்போது இருக்கும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 1,200 அடி கீழ்த்திசையில் புதிய அணை அமைக்கப்படவுள்ளதால் நிச்சயமாக தமிழகத்துக்கு நீர் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை.

அணையின் உயரம் 174.6 அடி, நீளம் 1,214 அடி.
இதற்குத் துணை அணையாக 82 அடியில் இன்னொரு அணையும் கட்டப்படவுள்ளது.
திட்டத்தின் மொத்த மதிப்பீடு 663 கோடியாகும்.
இந்த அணை கட்டுவதால் 0.017 டி.எம்.சி நீரை மட்டுமே அதிகமாக தேக்கி வைக்க முடியும்.
0.502 சதுர கிலோமீட்டர் மட்டுமே நீர்ப்பிடிப்பு பகுதி அதிகரிக்கும்.

ஆனால் முல்லைப் பெரியாறு புலிகள் சரணாலயத்தின் 123 ஏக்கர் வனப்பகுதி நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.

இந்தச் சிறிய அளவு நன்மைக்காக மிகப்பெரும் சூழலியல் சீர்கேட்டை அனுமதிக்க முடியாது.
புதிய அணை கட்டி முடித்த பின்னர் பழைய அணையானது பகுதி பகுதியாகச் செயலிழக்கம் செய்யப்பட்டு உடைக்கப்படும் எனவும்,
அனைத்து அனுமதிகளும் பெறப்பட்ட 4 ஆண்டுகளில் புதிய அணை கட்டி முடிக்கத் திட்டமிட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழக அரசு உடனடியாக நீதிமன்றத்தை நாடி இத்திட்டத்தைத் தடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.

கேரளா, "முல்லைப் பெரியாறு அணையின் வாழ்நாள் முடிந்துவிட்டது,
அண்மைக் காலமாக கேரளாவில் அதிகமான நில அதிர்வுகள் ஏற்படுகின்றன,
அதனால் புதிய அணை தேவைப்படுகிறது,
புதிய அணை கட்டினால் மக்களைப் பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ள முடியும்" என்று தனது கோரிக்கையை முன் வைத்துள்ளது.

இதற்கு முன்னர் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த நிபுணர் குழு அணை முழுப் பலத்தோடு இருக்கிறது என்று அறிக்கை கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கேரளா, தமிழக அரசோடு ஆலோசிக்காமல் இரண்டு அணைகளைக் கட்ட சுற்றுச்சூழல் தாக்கீடு அறிக்கை தயாரிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி வாங்கிவிட்டது.

இதில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, முல்லைப் பெரியாறு அணையைக் காக்க வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

இனி முடிவு தமிழக அரசின் கைகளில்...!

நன்றி: Tamilri.com (TRI)

Thursday, 23 August 2018

142 இனி 139

142 இனி 139

மலையாள பாம்புக்கு ஓடி ஓடி பால்வார்த்த இளிச்சவாய் தமிழர்களே!

இதோ அது கடித்துவிட்டது!

இன்று முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் 139 அடியாகக் குறைக்கப்பட உள்ளது.

முன்பே சொன்னேன் இந்த இனவெறியர்களுக்கு உதவி செய்யாதீர்கள் என்று.

இடுக்கி மாவட்டம் 95% தமிழர் வாழும் பகுதி.

முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கி மாவட்டமே நமக்கு சொந்தமானதுதான்.

அதை மீட்க களம் இறங்குங்கள்!

ஒரு வாரம் கேரளாவுக்கு செல்லும் உணவை தடுத்து நிறுத்துங்கள் போதும்.

Saturday, 18 August 2018

வெள்ளத்திலும் கரையாத மலையாள இனவெறி

வெள்ளத்திலும் கரையாத மலையாள இனவெறி
-----------------------
முல்லைப் பெரியாறுக்கு குறுக்கே சட்டவிரோதமாக 3 அணைகள்!

வெள்ளத்திற்கு காரணம் முல்லைப் பெரியாறு என்ற பொய்ப்பிரச்சாரம் !

  அணை உடையுமென ஊடகங்கள் பயமுறுத்தல் !

தமிழக எல்லைக்குள் அணையை உடைத்து மின்சார ஆலைக்கு தண்ணீர் ஏற்பாடு!

முல்லைப் பெரியாறு தேக்க நீர்மட்டத்தைக் குறைக்க வழக்கு!

வெள்ளத்திலும் கரையாத மலையாள இனவெறி!
--------------
தலைப்பு: மலையாளத்துரோகம் ஓயாதா?!

பதிவர்கள்:
தேனியிலிருந்து ச.அன்வர் மற்றும் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி

பொறுமையாகத்தான் இருக்கிறோம்...

எதுவும் பேசிவிடக்கூடாது...

அப்பாவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்...

உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் அதிக அளவில் இருக்கிறது...

மழையும் நின்றபாடில்லை என்பதால் அளவுகடந்த பொறுமையோடு அமைதிகாக்கிறோம்...

ஆலுவாவையும் எர்ணாகுளத்தையும் தண்ணீர் சூழ முல்லைப்பெரியாறு அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீரே காரணம் என்று சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் மலையாள இனவெறிக் கும்பல்களை கிழித்து தொங்கவிட ரொம்ப நேரமாகாது....

ஆனாலும் நடப்பது என்ன....?

Malayala varthaikal என்கிற மலையாள செய்திச்சேனலில் தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணை உடையப்போகிறது என செய்தி போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

Shanis india என்கிற சேனலிலோ பிரபல முன்னறிவிப்பாளர் நாஸ்டர்டாமே 2020 ம் ஆண்டு ஜீலை 6,7,8 ஆகிய தேதிகளில் முல்லைப்பெரியாறு அணை உடையும் என்று சொல்லியிருக்கிறாராம்.

இன்னொரு பேப்பயலோ breaking mullaiperiyar in hd என்று அணை உடைந்து போகுமாறு கிராபிக்ஸ் செய்து காட்சிப்படுத்தியிருக்கிறான்.

பீர்மேடு சட்டமன்ற உறுப்பினர் பிஜீமோளும்
தேவிகுளத்து ராஜேந்திரனும்
உடும்பஞ்சோலை எம்.எம்.மணியும் எரிகிற தீயில் எண்ணெய் வார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதோ உடையப்போகிறது அணை...
அதோ உடையப்போகிறது என்று இந்த அரைவேக்காடுகள் ஊளையிட ஆரம்பித்து 38 ஆண்டுகள் முடியப்போகிறது.

ஆனால் ஒரு சிறு கீறல்கூட இன்றுவரை விழவில்லை.

இதற்கிடையில் நேற்று முன்தினம் இடுக்கியைச்சேர்ந்த ரசூல் என்கிற அறிவாளி நேராக உச்சநீதிமன்றம் சென்று அணையின் நீர்மட்டத்தை 142 லிருந்து 139 ஆக குறைக்கவேண்டும் என்று மனுப்போட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

இந்த மனுமீது தீர்ப்பளித்த நீதியரசர் தீபக் மிஸ்ரா மற்றும் இந்து மல்ஹோத்ரா அடங்கிய குழுவின் வழிகாட்டுதல்படி நீர்மட்டத்தை குறைப்பது குறித்து தமிழக-கேரள அரசின் தலைமைச்செயலாளர்களுடன் முல்லைப்பெரியாறின் பேரிடர் மேலாண்மைக்குழு உடனடியாக ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

கண்டிப்பாக தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாகவே வர வாய்ப்புள்ளது.

மலையாளிகளின் வஞ்சகத்திற்கு ஒரு எல்லையே கிடையாதா என மனம் கொதிக்கிறது.

முல்லைப் பெரியாறு அணைக்கு வரக்கூடிய தண்ணீரை மறித்து இடுக்கி அணைக்கு கொண்டு செல்வதற்காக இதே மலையாளிகள் 1971 லிருந்து 1984 வரை மூன்று அணைகளைக்கட்டியதை வசதியாக மறந்துவிட்டார்கள்.

கட்ச் அணை, சபரிகிரி அணை, ப்ளீச்சிங் அணை என்கிற மூன்று அணைகளும் முல்லைப்பெரியாறை மறித்து கட்டிய அணைகளாகும்.

மேற்கண்ட இந்த மூன்று அணைகளும் கடந்த ஜூலை இறுதியிலேயே நிரம்பிவிட்டது.

ஆனால் முல்லைப்பெரியாறு 142 அடியை எட்டியது ஆகஸ்ட் 15 ம் தேதிதான்.
ஜீலையிலேயே மேற்கண்ட மூன்று அணைகளிலிருந்தும் உபரி நீரை திறக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அதனால்தான் முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறக்காமலேயே இடுக்கி அணை தன் முழுக்கொள்ளளவை எட்டியது.

ஆகஸ்ட் 15 ல் தான் பெரியாறு அணை திறக்கப்பட்டது.
ஆனால் ஆலுவாவையும் எர்ணாகுளத்தையும் நெடும்பாசேரி விமான நிலையத்தையும் வெள்ளம் சூழ்ந்தது ஆகஸ்ட் 6.
மறக்க வேண்டாம்.

மேற்கண்ட மூன்று அணைகளில் திறக்கப்பட்ட உபரிநீர் வண்டிப்பெரியாறு இரும்புபாலத்தின் கீழே கரைபுரண்டு ஜூலை 20 முதல் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது பிஜீமோள் கண்களுக்கு தெரியவில்லையா.

இதற்கெல்லாம் மேலாக ஆனையிறங்கல் அணை நீர், குளமாவு அணை நீர், செருதோணி அணை நீர், கல்லாற்றில் பெருக்கெடுத்து ஓடும் நீர், பாம்பனாறு சுரங்கம் வழியாக செல்லும் நீர், மாட்டுப் பெட்டி மற்றும் குண்டல அணைகளிலிருந்து வெளியேறும் நீர் என கிட்டத்தட்ட எண்பதாயிரம் கனஅடி தண்ணீர் இடுக்கியை முற்றுகையிட்டதாலேயே இடுக்கி அணை நிரம்பியது.

மிகத்தந்திரமாக மலையாள அரசியல்வாதிகள் செய்த இந்த செயல்களே இன்றைக்கு அவர்களுக்கு எதிராக திரும்பியிருக்கிறது.

தமிழக எல்லைக்குள் வாசுதேவநல்லூர் அருகே இருந்த செண்பகவல்லி அம்மன் கோவில் அணைக்கட்டை உடைத்து அதையும் இடுக்கி அணைக்கு கொண்டுவந்து சேர்த்தவர்கள்தான்,
இன்றைக்கு யோக்கியர்கள் போல வேசமிட்டுக்கொண்டு நடிக்கிறார்கள்.

முதல்வர் பினராயி விஜயனின் தடிப்போ திலகனின் நடிப்பைத்தாண்டி உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

முல்லைப்பெரியாறு அணையில் திறக்கப்படும் நீரால் நாற்பது லட்சம் மக்கள் மாண்டுபோவார்கள் என பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு களரி ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

அட முட்டாள்களே...!

முல்லைப்பெரியாறு நீர் பள்ளத்தாக்கில் பாயும் ஒரு ஆறு என்பது ஏன் உங்கள் மண்டைகளுக்கு உறைப்பதில்லை.

பெரியாற்றில் திறந்துவிடப்படும் நீர் புல்மேடு, வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு, உப்புத்துறை, தேங்காய்க்கல், பசுமலை, நேரிகுளம் வழியாக இடுக்கி அணைக்கு செல்கிறது.

வழிநெடுகிலும் பெரியாற்று நீரால் எவருக்கும் துளி அளவு பாதிப்பில்லை என்று தெரிந்தும் மலையாள வெறியர்கள் முல்லைப்பெரியாறை குறிவைக்க காரணம் இடுக்கி அணையின் மூலம் வரும் 780 மெகாவாட் மின்சாரமே.

ஆகவே மலையாள வெறியர்களே முல்லைப்பெரியாறு அணையை உடைக்கும் முன்பு கேரள அரசு சட்டவிரோதமாக கட்டியிருக்கும் கட்ச் அணை சபரிகிரி அணை மற்றும் பிளீச்சிங் அணைகளை இடித்து தரைமட்டமாக்குங்கள்.

ஆலுவாவும் எர்ணாகுளமும் தண்ணீரில் மூழ்கக்காரணம் இந்த மூன்று அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர்தான்.

அதிலும் இந்த ஏசியாநெட் சேனல்கார பொறுக்கிகளின் அடாவடியும் மலையாள மனோரமா என்கிற மஞ்சள் பத்திரிக்கை நடத்துகின்ற மாமாக்கள் செய்கிற அட்டகாசமும் கொஞ்சநஞ்சமல்ல.

மழை வெள்ள சேதத்திற்கு நிவாரணம் தேடச்சொன்னால் மானங்கெட்டவனுக முல்லைப்பெரியாறை உடைக்கணும்கிறான்.

இனி பொறுப்பதற்கில்லை.
மலையாள துரோகங்களை இனி சகிக்கமுடியாது.
யூடியூபில் முல்லைப்பெரியாறு அணையைப்பற்றி தவறாக பிரச்சாரம் செய்தால் முதலில் செருப்பால் அடிப்போம்.
பின்னர் உச்சநீதிமன்றம் செல்வோம்.

பி. கு-
இதைப் படித்த பிறகும் "ஐயைய்யோ கேரளா முங்குதே" எவனாவது முனங்கினா
அவனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
-------------

படம்: தமிழகத்திலிருந்து கேரளா நோக்கி செல்லும் பேரியாறு நீரோட்டத்தைத் தடுத்து தமிழகத்திற்கே திருப்பும் முல்லைப்பெரியாறு அணையின் மாதிரி வடிவம்

சாகும்போதும் தமிழனைச் சீரழிப்பான் மலையாளி

சாகும்போதும் தமிழனைச் சீரழிப்பான் மலையாளி

முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது.
இது 100% உண்மை.

அது பலவீனமாக உள்ளது என்ற பொய்யை மலையாளிகள்,
பிரியங்கா பொண்ணு 'மன்னவன் பேரைச் சொல்லி' என்று பாடியதை விட அதிக தடவை கூறிவிட்டார்கள்.

முதலில் ஆய்வு நடந்து அணை பலமாக உள்ளது உறுதிசெய்யப்பட்டு
பிறகும் தமிழக அரசு பல கோடி செலவழித்து அணையை மேலும் பலப்படுத்தி
மீண்டும் ஆய்வுக்குழு பலத்தை உறுதி செய்து அறிக்கை தந்தும்
அணை நீர்மட்டத்தை 155 க்கு மேலே போக அனுமதி அளிக்கமாட்டோம் என்று ஒற்றைக்காலில் நிற்கிறான் மலையாளி.

40 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
மலையாளிகளில் மனிதநேயர் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு பேச்சுக்கு பூகம்பம் வந்து அணை உடைகிறது என்றே வைத்துக்கொள்வோம்,
சுற்றிலும் மலையாளிகளின் சொகுசு விடுதிகளைத் தவிர எந்த குடியிருப்புப் பகுதியும் கிடையாது.
எனவே எந்த உயிரிழப்பும் ஏற்படாது.

நீர் நேரடியாக இடுக்கி அணைக்கு வரும்.
இடுக்கி அணை மூன்று முல்லைப் பெரியாறு அணைகளுக்கு சமம்.
அவ்வளவு நீரை சேமிக்கலாம்.
அணை உடைந்து இடுக்கிக்கு நீர் வந்து சேருமுன் சரியாகத் திட்டமிட்டால் முல்லைப் பெரியாறு முழு கொள்ளளவையும் சமாளிக்கமுடியும்.

இப்போது மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் கேரளா முழுவதும் பாதிக்கப்பட்டு 200 பேர் வரை இறந்துள்ளனர்.
காசர்கோடு தவிர அத்தனை கேரள மாவட்டங்களிலும் வெள்ள அபாயம் என அறிவிப்பு நடைமுறையில் உள்ளது.

இந்த இக்கட்டான நிலையிலும்
முல்லைப்பெரியாறு அணையின் தேக்கும் மட்டத்தை 142 ஆக குறைக்க வழக்கு போட்டுள்ளான் ஒரு மலையாளி.

அதாவது தான் சாகும் நிலையிலும் தமிழனுக்குக் கேடு செய்வதை மலையாளி கைவிடவில்லை.

தெலுங்கனும் கன்னடனும் தண்ணீரை மறித்து அவனுடைய விவசாயத்திற்கு பயன்படுத்த நினைக்கிறான்.
தன் மக்கள் வயிறுமுட்ட 6 வேளை சாப்பிட தமிழனின் சோற்றைப் பிடுங்குகிறான்.

ஆனால் மலையாளி தண்ணீரை மறுப்பது முழுக்க முழுக்க தனது இனவெறியைத் தீர்த்துக்கொள்ள மட்டுமே!

அணைகள் இருப்பது அனைத்துமே தமிழர்களின் பகுதிகள்.
தமிழ்நாட்டுக்குச் சேரவேண்டிய பகுதிகள்.
அந்த எல்லைப் பகுதியை ஆக்கிரமித்து அங்கே உள்ள அணைகளை மூடி இனவெறி அரிப்பைத் தீர்த்துக் கொள்கிறான்.

முல்லைப்பெரியாறு அணை இல்லையென்றால் தண்ணீரை இடுக்கி அணைக்குக் கொண்டுவந்து அதைக் கடலில் விட்டு அதிலிருந்து கரண்ட் எடுக்கமுடியும்.
இதுதான் உண்மையான காரணம்.

தமிழ் மக்களின் வயிற்றில் அடித்து மின்சாரம் எடுப்பது எந்த வகையில் நியாயம் என்று "மலையாள சகோதரர்களுக்கு" உதவச் சொல்லும் "மனிதநேயப் போராளிகள்" சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மனிதநேயம் காட்ட மலையாளிகள் ஒன்றும் மனிதர்கள் இல்லை.

மலையாளிகள் இன்று தனி இனம்.
அவர்களிடம் உள்ள தமிழ் எச்சங்களை வைத்துக்கொண்டு அவர்களை பாதித் தமிழர்களாகப் பார்ப்பது முட்டாள்த்தனம்.

மலையாளிகள் மற்ற எவரையும் விட தமிழர்களுக்கு எதிரானவர்கள்.

கேரளாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதுடன்,
மலையாளிகளுக்கு உணவு ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதும் இதற்கான நிரந்தரத் தீர்வு ஆகும்.

Tuesday, 21 June 2016

முல்லை பெரியாறு - சுருக்கமான வரலாறு


முல்லை பெரியாறு - சுருக்கமானவரலாறு

தேனி நண்பர் செந்தில் ஒரு பத்திரிகையின்விமர்சனத்தில் எழுதியதை இங்கெ தருகிறேன்

கேரளா புதிய அணை கட்டி இதே அளவு தண்ணீர் தருவதாகச் சொல்வதில் இருக்கும் சதி பற்றி விவரமாக அகில இந்தியஅளவில் எடுத்துச் சொல்ல வேண்டும்.

முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்டது பிரிட்டிஷ் ஆண்டகாலத்தில் - 1895ல்.
அப்போது இந்த அணை கட்டும்இடம் திருவாங்கூர் சமஸ்தானத்தின்கட்டுப்பாட்டில் இருந்ததாககருதப்பட்டது
(உண்மை அது அல்ல.
தமிழ் நாட்டின்வரையரைக்குள் தான் இருந்தது.
இதனை கண்ணன் தேவன் காபி கம்பெனி போட்ட மற்றொரு ஒப்பந்தத்தை வைத்து நிறுவியுள்ளார் மார்சல் நேசமணி)

எனவே பிரிட்டிஷார்- திருவாங்கூர்மஹாராஜாவுடன் இந்த அணை கட்டப்படும், மற்றும்அதன் நீர்ப்பிடிப்பு பகுதியான சுமார் 8000ஏக்கர் நிலத்தை 999ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு ரூபாய்40,000/- குத்தகைப் பணம் )
இந்த அணையை 1887ல்கட்ட ஆரம்பித்து 1895ல் கட்டிமுடித்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இதில்அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது தமிழ்நாட்டில் தான்.
அணையும் தமிழ்நாட்டிற்கு சொந்தமானது.
அதை நிர்வகிப்பதும்தமிழ்நாடுதான்.
ஆனால் இடம் மட்டும்கேரளாவிற்கு சொந்தம்.
அதிகாரம்செலுத்துவதும் அவர்களே !

இந்த அணையின் உயரம்- கொள்ளளவு -152 அடி.
இதன் மூலம் பாசனம் பெறும்நிலம் – சுமார் 2,08,000 ஏக்கர்.
மதுரை, தேனி,சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4மாவட்டங்களைச்சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள் பாசனத்திற்கும்,
60 லட்சம் மக்கள் குடிநீருக்கும் இந்தஅணையை நம்பி இருக்கிறார்கள்.
இந்தஅணை பறிக்கப்பட்டால் இத்தனை இடங்களும்பாலைவனங்கள் ஆகும்.
இத்தனை ஜனங்களும்பிழைப்பு பறிபோய் பிச்சைக்காரர்கள் ஆவார்கள்.

பிரச்சினை ஆரம்பித்தது எப்படி ?

கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே,
இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர்மின்நிலையமும் கட்டியது.
பின்னர் தான்ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும்.

பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே 15.66 டிஎம்சி தான்.
அதிலும் சுமார் 10டிஎம்சியை தான் பயன்படுத்த முடியும்.
(104அடி வரை டெட் ஸ்டோரேஜ்) ஆனால் இடுக்கி இதைப்போல் 7 மடங்கு பெரியது.
கொள்ளளவு 70டிஎம்சி.

பெரிய அணையைக்கட்டிவிட்டார்களே தவிர அது நிரம்பும்வழியாகக் காணோம்.
3 வருடங்கள் பொறுத்துப்பார்த்தார்கள்.
பெரியாறு வருடாவருடம்நிரம்பிக் கொண்டு இருந்தது.
ஆனால்இடுக்கி நிரம்பவே இல்லை.

அப்போது போடப்பட்டசதித்திட்டம் தான் -பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற குரல் -கூக்குரல்.

சுண்ணாம்பு அணை உடைந்து விடும்.
அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம் மக்கள்செத்துப் போவார்கள்.
எனவே உடனடியாக புதியஅணை கட்டுவதே தீர்வு !
புதிய அணையினால்அவர்களுக்கு என்ன லாபம் ?
மேலே இருக்கும்பழைய அணையை இடிப்பதால்,நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும்நேராக இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும்.
அவர்கள் அதை வழியவிட்டு மின்சாரம் தயாரிக்கலாம்.

அதான்தமிழ்நாட்டுக்கு இதே அளவு தண்ணீர் தருகிறேன்என்று சொல்கிறார்களே என்று உடனே மக்கள்கேட்கிறார்க்ள்.
அங்கே தான் இருக்கிறது அவர்கள்சாமர்த்தியம்.
பெரியாறு அணை இருப்பது கடல்மட்டத்திலிருந்து 2709 முதல் 2861 அடி உயரம்வரை. இதிலிருந்து மலையைக்குடைந்து குகைப்பாதை வழியாக தண்ணீர் தமிழ்நாட்டை நோக்கி கொண்டுவரப்படுகிறது.
புதியஅணையை கட்டப்போவது 1853 அடி உயரத்தில்.
இந்தஅணை கட்டப்படும் உயரத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விடமுடியாது.

நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர்எடுத்து வரும் பாதை புதிய அணை அமையவுள்ள இடத்தை விட உயரத்தில்ஆரம்பித்து,
ஒரு கிலோ மீட்டர்பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ளமலையைக் குடைந்த குகை வழியாகதிசை மாறி வந்து பின்னர் கீழே வைகையில்கலக்கிறது.

அணையைக் கட்டிய பிறகு, இவர்கள்உண்மையாகவே விரும்பினாலும் நீரைத் திருப்பமுடியாது.
மேலும் புதியஅணையிலிருந்து ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம்உற்பத்தி செய்ய நீரை வெளியேற்றிக்கொண்டே இருக்கப்போகிறார்கள்.
எனவே அணை எப்போதுமே முழுவதுமாகநிரம்பி இருக்காது.
தமிழ் நாட்டிற்கு தண்ணீர்நிச்சயமாக கிடைக்காது.
புதிய அணையினால்தமிழ்நாட்டிற்கு பயன் இல்லை.
60 லட்சம் மக்களின் உணவும் தண்ணீரும் பிடுங்கப்பட்ட கேரளாவுக்கு மின்சாரமாக போகவுள்ளது.

ஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை -
எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும்.
35லட்சம் மக்கள் செத்துவிடுவார்கள்என்கிறார்களே - பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே ?
அயோக்கியத்தனம்.
வடிகட்டிய
அயோக்கியத்தனம்.

முதலாவதாக -பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் - மலைப்பள்ளத்தாக்குகள் வழியாகப்பாய்ந்து - நேராககீழே உள்ள (7மடங்கு பெரிய) இடுக்கி அணையைத் தான் வந்தடையும்.

பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும்(10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும்,நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு உடையஇடுக்கி அணையைத் தான் வந்தடையபோகிறது.

இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை.
35 லட்சம் மக்கள் சாவார்கள் என்பதும் பொய்.

வாதத்திற்காகஇடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி இருந்தாலும் வெளியேறும் நீர்பெரியாறு அணையிலிருந்து இடுக்கி வந்து சேர4 மணி நேரம் ஆகும். அதற்குள்ளாகஇடுக்கியிலிருந்து தேவையானநீரை வெளியேற்றி விட முடியும் !

எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிற பேச்சே அபத்தமானது.

இரண்டாவதாக 1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள்.
1979ல்பெரியாறு அணை உடையப்போகிறது என்று குரல்எழுப்பினார்கள்.
பயத்தைக் கிளப்பினார்கள்.
சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள்.
2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர்குழுவை அமைத்தது.
நிபுணர் குழுவின்ஆலோசனைப்படி அணை அனைத்து விதங்களிலும்பலப்படுத்தப்பட்டது.

கேரளா சொல்வது போல்இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல.
ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல் 40 டன்சிமெண்ட் கலவை சுவரில்துளையிட்டு உள்ளே செலுத்தப்பட்டது.
மீண்டும்1960ல் 500 டன் சிமெண்ட் உள் செலுத்தப்பட்டது.
2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு -நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி - லேடஸ்ட்தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, கேபிள்ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட்கலவை செலுத்தப்பட்டது.

வெளிப்புறமாக ஒரு கவசம் போல்,
கிட்டத்தட்ட புது அணையே போல், கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதியகான்க்ரீட் அணையே உருவாக்கப்பட்டு விட்டது.

கீழே உள்ள வரைபடத்தைப் பார்த்தால் நன்றாகப்புரியும்.
இதன் பிறகு தான், 27/02/2006 அன்று, சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்தஆபத்தும் இல்லை என்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு - 156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம்என்று அனுமதியே கொடுத்தது.

விட்டார்களா நமது மலையாளிகள்?
மீண்டும்சதி.
ஒரு மாதத்திற்குள்ளாக, கேரளசட்டமன்றத்தில் புதிய சட்டம் இயற்றி, சுப்ரீம்கோர்ட் உத்திரவையே செல்லாது என்று அறிவித்துவிட்டார்கள்.
வழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான்.
மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம்.

இப்போது,இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் பரிசீலனையில்இருக்கும்போதே தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாகஇருக்குமோ என்கிற தவிப்பில் மீண்டும் நாடகம்ஆடுகிறார்கள்.
அணைக்கு ஆபத்து புதியஅணை கட்ட வேண்டும் என்று.

பாராளுமன்றத்தில்குரல் கொடுக்கிறார்கள்.
பிரதமரை போய்ப்பார்க்கிறார்கள்.
உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
பந்த் நடத்துகிறார்கள்.
இப்போதைக்கு அவர்கள்குரல் தான் பலமாகக் கேட்கிறது.
வெளிமக்கள்அவர்கள் பக்கம் நியாயம்இருக்கிறது என்று நினைக்கத்தொடங்கி விட்டார்கள். தமிழ்நாடு ஏமாந்தது போதும்.
உடனடித் தேவை பலமானபதில் தாக்குதல்.
தமிழகம் முழுவதும்சேர்ந்து
பதிலடி கொடுக்க வேண்டும்.
(18 ஆகஸ்ட் 2012)