Showing posts with label பிரச்சாரம். Show all posts
Showing posts with label பிரச்சாரம். Show all posts

Saturday, 18 August 2018

வெள்ளத்திலும் கரையாத மலையாள இனவெறி

வெள்ளத்திலும் கரையாத மலையாள இனவெறி
-----------------------
முல்லைப் பெரியாறுக்கு குறுக்கே சட்டவிரோதமாக 3 அணைகள்!

வெள்ளத்திற்கு காரணம் முல்லைப் பெரியாறு என்ற பொய்ப்பிரச்சாரம் !

  அணை உடையுமென ஊடகங்கள் பயமுறுத்தல் !

தமிழக எல்லைக்குள் அணையை உடைத்து மின்சார ஆலைக்கு தண்ணீர் ஏற்பாடு!

முல்லைப் பெரியாறு தேக்க நீர்மட்டத்தைக் குறைக்க வழக்கு!

வெள்ளத்திலும் கரையாத மலையாள இனவெறி!
--------------
தலைப்பு: மலையாளத்துரோகம் ஓயாதா?!

பதிவர்கள்:
தேனியிலிருந்து ச.அன்வர் மற்றும் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி

பொறுமையாகத்தான் இருக்கிறோம்...

எதுவும் பேசிவிடக்கூடாது...

அப்பாவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்...

உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் அதிக அளவில் இருக்கிறது...

மழையும் நின்றபாடில்லை என்பதால் அளவுகடந்த பொறுமையோடு அமைதிகாக்கிறோம்...

ஆலுவாவையும் எர்ணாகுளத்தையும் தண்ணீர் சூழ முல்லைப்பெரியாறு அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீரே காரணம் என்று சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் மலையாள இனவெறிக் கும்பல்களை கிழித்து தொங்கவிட ரொம்ப நேரமாகாது....

ஆனாலும் நடப்பது என்ன....?

Malayala varthaikal என்கிற மலையாள செய்திச்சேனலில் தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணை உடையப்போகிறது என செய்தி போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

Shanis india என்கிற சேனலிலோ பிரபல முன்னறிவிப்பாளர் நாஸ்டர்டாமே 2020 ம் ஆண்டு ஜீலை 6,7,8 ஆகிய தேதிகளில் முல்லைப்பெரியாறு அணை உடையும் என்று சொல்லியிருக்கிறாராம்.

இன்னொரு பேப்பயலோ breaking mullaiperiyar in hd என்று அணை உடைந்து போகுமாறு கிராபிக்ஸ் செய்து காட்சிப்படுத்தியிருக்கிறான்.

பீர்மேடு சட்டமன்ற உறுப்பினர் பிஜீமோளும்
தேவிகுளத்து ராஜேந்திரனும்
உடும்பஞ்சோலை எம்.எம்.மணியும் எரிகிற தீயில் எண்ணெய் வார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதோ உடையப்போகிறது அணை...
அதோ உடையப்போகிறது என்று இந்த அரைவேக்காடுகள் ஊளையிட ஆரம்பித்து 38 ஆண்டுகள் முடியப்போகிறது.

ஆனால் ஒரு சிறு கீறல்கூட இன்றுவரை விழவில்லை.

இதற்கிடையில் நேற்று முன்தினம் இடுக்கியைச்சேர்ந்த ரசூல் என்கிற அறிவாளி நேராக உச்சநீதிமன்றம் சென்று அணையின் நீர்மட்டத்தை 142 லிருந்து 139 ஆக குறைக்கவேண்டும் என்று மனுப்போட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

இந்த மனுமீது தீர்ப்பளித்த நீதியரசர் தீபக் மிஸ்ரா மற்றும் இந்து மல்ஹோத்ரா அடங்கிய குழுவின் வழிகாட்டுதல்படி நீர்மட்டத்தை குறைப்பது குறித்து தமிழக-கேரள அரசின் தலைமைச்செயலாளர்களுடன் முல்லைப்பெரியாறின் பேரிடர் மேலாண்மைக்குழு உடனடியாக ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

கண்டிப்பாக தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாகவே வர வாய்ப்புள்ளது.

மலையாளிகளின் வஞ்சகத்திற்கு ஒரு எல்லையே கிடையாதா என மனம் கொதிக்கிறது.

முல்லைப் பெரியாறு அணைக்கு வரக்கூடிய தண்ணீரை மறித்து இடுக்கி அணைக்கு கொண்டு செல்வதற்காக இதே மலையாளிகள் 1971 லிருந்து 1984 வரை மூன்று அணைகளைக்கட்டியதை வசதியாக மறந்துவிட்டார்கள்.

கட்ச் அணை, சபரிகிரி அணை, ப்ளீச்சிங் அணை என்கிற மூன்று அணைகளும் முல்லைப்பெரியாறை மறித்து கட்டிய அணைகளாகும்.

மேற்கண்ட இந்த மூன்று அணைகளும் கடந்த ஜூலை இறுதியிலேயே நிரம்பிவிட்டது.

ஆனால் முல்லைப்பெரியாறு 142 அடியை எட்டியது ஆகஸ்ட் 15 ம் தேதிதான்.
ஜீலையிலேயே மேற்கண்ட மூன்று அணைகளிலிருந்தும் உபரி நீரை திறக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அதனால்தான் முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறக்காமலேயே இடுக்கி அணை தன் முழுக்கொள்ளளவை எட்டியது.

ஆகஸ்ட் 15 ல் தான் பெரியாறு அணை திறக்கப்பட்டது.
ஆனால் ஆலுவாவையும் எர்ணாகுளத்தையும் நெடும்பாசேரி விமான நிலையத்தையும் வெள்ளம் சூழ்ந்தது ஆகஸ்ட் 6.
மறக்க வேண்டாம்.

மேற்கண்ட மூன்று அணைகளில் திறக்கப்பட்ட உபரிநீர் வண்டிப்பெரியாறு இரும்புபாலத்தின் கீழே கரைபுரண்டு ஜூலை 20 முதல் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது பிஜீமோள் கண்களுக்கு தெரியவில்லையா.

இதற்கெல்லாம் மேலாக ஆனையிறங்கல் அணை நீர், குளமாவு அணை நீர், செருதோணி அணை நீர், கல்லாற்றில் பெருக்கெடுத்து ஓடும் நீர், பாம்பனாறு சுரங்கம் வழியாக செல்லும் நீர், மாட்டுப் பெட்டி மற்றும் குண்டல அணைகளிலிருந்து வெளியேறும் நீர் என கிட்டத்தட்ட எண்பதாயிரம் கனஅடி தண்ணீர் இடுக்கியை முற்றுகையிட்டதாலேயே இடுக்கி அணை நிரம்பியது.

மிகத்தந்திரமாக மலையாள அரசியல்வாதிகள் செய்த இந்த செயல்களே இன்றைக்கு அவர்களுக்கு எதிராக திரும்பியிருக்கிறது.

தமிழக எல்லைக்குள் வாசுதேவநல்லூர் அருகே இருந்த செண்பகவல்லி அம்மன் கோவில் அணைக்கட்டை உடைத்து அதையும் இடுக்கி அணைக்கு கொண்டுவந்து சேர்த்தவர்கள்தான்,
இன்றைக்கு யோக்கியர்கள் போல வேசமிட்டுக்கொண்டு நடிக்கிறார்கள்.

முதல்வர் பினராயி விஜயனின் தடிப்போ திலகனின் நடிப்பைத்தாண்டி உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

முல்லைப்பெரியாறு அணையில் திறக்கப்படும் நீரால் நாற்பது லட்சம் மக்கள் மாண்டுபோவார்கள் என பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு களரி ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

அட முட்டாள்களே...!

முல்லைப்பெரியாறு நீர் பள்ளத்தாக்கில் பாயும் ஒரு ஆறு என்பது ஏன் உங்கள் மண்டைகளுக்கு உறைப்பதில்லை.

பெரியாற்றில் திறந்துவிடப்படும் நீர் புல்மேடு, வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு, உப்புத்துறை, தேங்காய்க்கல், பசுமலை, நேரிகுளம் வழியாக இடுக்கி அணைக்கு செல்கிறது.

வழிநெடுகிலும் பெரியாற்று நீரால் எவருக்கும் துளி அளவு பாதிப்பில்லை என்று தெரிந்தும் மலையாள வெறியர்கள் முல்லைப்பெரியாறை குறிவைக்க காரணம் இடுக்கி அணையின் மூலம் வரும் 780 மெகாவாட் மின்சாரமே.

ஆகவே மலையாள வெறியர்களே முல்லைப்பெரியாறு அணையை உடைக்கும் முன்பு கேரள அரசு சட்டவிரோதமாக கட்டியிருக்கும் கட்ச் அணை சபரிகிரி அணை மற்றும் பிளீச்சிங் அணைகளை இடித்து தரைமட்டமாக்குங்கள்.

ஆலுவாவும் எர்ணாகுளமும் தண்ணீரில் மூழ்கக்காரணம் இந்த மூன்று அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர்தான்.

அதிலும் இந்த ஏசியாநெட் சேனல்கார பொறுக்கிகளின் அடாவடியும் மலையாள மனோரமா என்கிற மஞ்சள் பத்திரிக்கை நடத்துகின்ற மாமாக்கள் செய்கிற அட்டகாசமும் கொஞ்சநஞ்சமல்ல.

மழை வெள்ள சேதத்திற்கு நிவாரணம் தேடச்சொன்னால் மானங்கெட்டவனுக முல்லைப்பெரியாறை உடைக்கணும்கிறான்.

இனி பொறுப்பதற்கில்லை.
மலையாள துரோகங்களை இனி சகிக்கமுடியாது.
யூடியூபில் முல்லைப்பெரியாறு அணையைப்பற்றி தவறாக பிரச்சாரம் செய்தால் முதலில் செருப்பால் அடிப்போம்.
பின்னர் உச்சநீதிமன்றம் செல்வோம்.

பி. கு-
இதைப் படித்த பிறகும் "ஐயைய்யோ கேரளா முங்குதே" எவனாவது முனங்கினா
அவனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
-------------

படம்: தமிழகத்திலிருந்து கேரளா நோக்கி செல்லும் பேரியாறு நீரோட்டத்தைத் தடுத்து தமிழகத்திற்கே திருப்பும் முல்லைப்பெரியாறு அணையின் மாதிரி வடிவம்

Thursday, 9 August 2018

ஈழ ஆதரவினால் ஆட்சியை இழந்தவரா கருணாநிதி?!

ஈழ ஆதரவினால் ஆட்சியை இழந்தவரா கருணாநிதி?!

கருணாநிதி ஈழ ஆதரவினால் ஆட்சியை இழந்ததாகக் கூறுவது பொய்.

  1991 இல் லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் (திராவிடநாடு) பிரிவினை ஆகிய காரணங்களுக்காகவே அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.

இதோ சான்று படம்

[ மக்கள் குரல் (பத்திரிக்கை) தலையங்கம்

லஞ்சம் - அதிகார துஷ்பிரயோகம் - பிரிவினை
கருணாநிதி மந்திரிசபை டிஸ்மிஸ்
ஜனாதிபதி ஆட்சி அமுல் ]

(நன்றி: வடிவேலன் கலியபெருமாள் )

இதுபோக,
கருணாநிதியின் ஈழ வெறுப்பு மனநிலைக்கு ஏகப்பட்ட சான்றுகள் உண்டு.

1989 இல் திமுக வில் இருந்த வைகோ (இந்திய உளவுத்துறை உதவியுடன்) ஈழத்திற்கு பயணம் செய்கிறார்.

[ சான்று படம்:
இந்திய உளவாளி வைகோ
http://vaettoli.blogspot.com/2018/05/blog-post_1.html ]

வைகோவின் இந்த செயலைக் கடுமையாக விமர்சித்தார் கருணாநிதி.
வைகோ சென்றதுக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிவித்தார்.

இதற்குப் பிறகு விடுதலைப் புலிகள் வைகோ மூலம் தன்னைக் கொல்ல முயற்சிப்பதாக தொடர்ந்து குற்றம் சுமத்திவந்தார் கருணாநிதி.

வைகோ தனக்கு புலிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என்று பலமுறை விளக்கமளித்தார்.

[ சான்று படம்:
எனக்கு புலிகளுடன் தொடர்பு இல்லை - வைகோ
http://vaettoli.blogspot.com/2018/05/blog-post_77.html ]

ஆயினும் அவரைக் கட்சியை விட்டே நீக்கினார் கருணாநிதி.
இதனால் 1993 இல் வைகோ புதுக் கட்சி தொடங்கினார் வைகோ.

அப்போதும் அவர் புலிகளின் கையாள் என்று குற்றம் சுமத்தினார் கருணாநிதி.
புலிகளுடன் தொடர்புடையோர் ம.தி.மு.க வை விட்டு விலகுமாறு வைகோ அறிவித்தார்.

[ சான்று படம்:
புலிகளுடன் தொடர்புடையோருக்கு ம.தி.மு.க.வில் இடமில்லை - வைகோ
http://vaettoli.blogspot.com/2018/05/blog-post_10.html ]

1997 ல் இனத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் பழ.நெடுமாறன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் கருணாநிதி புலிகளின் 50 லட்ச ரூபாய் வரையான பணத்தையும் மருந்தையும் அதை வாங்க வந்த போராளிகளையும் பிடித்துவைத்துள்ளதாக எழுதியுள்ளார்.

[ சான்று:
பழ.நெடுமாறன் எழுதிய "பிரபாகரன் - தமிழர் எழுச்சி வடிவம்" என்ற நூல்
படம்:
http://vaettoli.blogspot.com/2018/07/blog-post_55.html ]

கருணாநிதி ஆட்சியைக் கலைக்க கூறப்பட்ட பல காரணங்களில் ஒன்று அவர் தமிழ்த் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் என்பதும் ஒன்று.

அதை வைத்துக்கொண்டு தி.மு.க வினர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அதை யாரும் நம்பவேண்டாம்.

Sunday, 8 July 2018

திருப்பதி தலைமை அர்ச்சகரின் அடுக்கடுக்கான புகார்கள்

உண்மையான காணொளி

திருப்பதி தலைமை அர்ச்சகர் வெறுப்பில் கூறியதை வெட்டி ஒட்டி டப்பிங் செய்து பரவ விட்டுள்ளனர்.

பார்ப்பனர் மீது பழி போட்டால் அது உண்மையா பொய்யா கொஞ்சமும் யோசிக்காமல் அப்படியே நம்பும் அளவு மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளோம்.

இதோ அவர் பேசிய முதல் பகுதி.
பணம் கொடுத்து சாமி கும்பிடும் விஐபிக்களுக்கு பெருமாள் அருள் கிடைக்காது என்கிறார்.
அதிகாரிகளும் ஊழியர்களும் அரச்சகர்களைக் கட்டாயப்படுத்தவதாக்க் கூறுகிறார்.
சரியான காணொளியைப் பார்த்துவிட்டு பிறகு பரப்பப்பட்ட காணொளியை மீண்டும் பாருங்கள்.
அவர் கூறும் வஞ்சப்புகழ்ச்சி தொனி புரியும்.

முழு காணொளி:
திருப்பதி கோயிலின் பிரசாத அடுப்புக்கு அடியில் புதையல் - sunnews (youtube)

(திருப்பதியில் அதிகாரிகள் என்னவெல்லாம் அட்டூழியம் செய்கிறார்கள் எப்படியெல்லாம் கொள்ளையடிக்கிறார்கள் என 44 ஆண்டுகளாக அர்ச்சகராக இருக்கும் ரமண தீட்சிதர் அடுக்கடுக்கான புகார்களைக் கூறும் முக்கியமான காணொளிக்கு இட்ட தலைப்பைப் பாருங்களேன்.
கட்டாயம் சன் குழுமம் தான் இதை வெட்டி ஒட்டி பரப்பியிருக்க வேண்டும்)

நன்றி: உமாமகேஷ்வரன் அதங்குடியான்

Thursday, 9 November 2017

இருளர் குலச் செங்கொடி

இருளர் குலச் செங்கொடி

ஆதித் தெலுங்கரான சக்கிலியர் (அருந்ததியர்) திடீரென்று ஐந்தாண்டுகளுக்கு முன் பறையர் குலத் தமிழச்சியும் உலகின் முதல் தற்கொலைப் போராளியுமான குயிலி தங்கள் சாதி என்றனர்.

பிறகு பறையர் குலத் தமிழரும் தமிழ்தேசியவாதியும் ஆன பெருஞ்சித்திரனார் ஒரு சக்கிலியர் என்று கதையளந்தனர்.

தற்போது தங்கை செங்கொடியை சொந்தம் கொண்டாடுகின்றனர்.

இது எல்லாமே 2009 க்குப் பிறகு திடீரென்று அவர்கள் கண்டுபிடித்தது ஆகும்.
சான்று கேட்டால் தருவதில்லை.

ஆனால் தங்கையின் வாழ்க்கையை 'இப்படிக்கு தோழர் செங்கொடி' என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்துத் தந்த இயக்குநர் வெற்றிவேல் சந்திரசேகர் செங்கொடி (தமிழினப் பழங்குடியினரான) இருளர் என்று கூறுகிறார்.

நன்றி: 22.08.2012 ஆனந்த விகடன் இதழ்