Showing posts with label செங்கொடி. Show all posts
Showing posts with label செங்கொடி. Show all posts

Friday, 11 November 2022

ஏழு பெற்றோரை ஈன்ற மகளே செங்கொடி

ஏழு பெற்றோரை ஈன்ற மகளே!

தாயே செங்கொடி....!
பெண்!
ஏழை!
சிவப்பு சிந்தனை!
இருளர் சமூகம்!  
கணவனால் கொல்லப்பட்ட தாய்!
சிறையில் குடிகாரத் தந்தை!
நம்பி நிற்கும் தம்பி தங்கை!
இனக் கடமையை மறுக்க 
இருந்தன உனக்கு பல காரணங்கள்!

ஆனாலும் நீ துணிந்தாயம்மா!
உயிரீந்து அறம் காத்தாயம்மா!

அன்று மதுரை எரிந்தது!
இன்று உன்னால் டெல்லி பிழைத்தது! 

இனம் காத்த உயிர்களை
இந்தியா எனும் எமனிடமிருந்து 
மீட்டுக் காட்டிய தமிழச்சியே!
கண்கண்ட அம்மன் தீப்பாச்சியே!

மனுநீதி வழித்தோன்றலே!
தனுவின் மீள்த்தோன்றலே!

ஏழு பெற்றோரை ஈன்ற மகளே! 
ஈழம் வரை போற்றும் தாயே!

என்றும் மறக்க மாட்டோம்!
வென்ற பிறகும் நினைப்போம்!

உனக்கு உள்ளம் நிறைந்த வாழ்த்து!
எமது கண்ணீர் நிறைந்த நன்றி! 

உலகத் தமிழரே!
உறுதிமொழி கூறுங்கள்!
இனி நம் வரலாற்றில் இல்லை
இன்னொரு செங்கொடி!




Thursday, 9 November 2017

இருளர் குலச் செங்கொடி

இருளர் குலச் செங்கொடி

ஆதித் தெலுங்கரான சக்கிலியர் (அருந்ததியர்) திடீரென்று ஐந்தாண்டுகளுக்கு முன் பறையர் குலத் தமிழச்சியும் உலகின் முதல் தற்கொலைப் போராளியுமான குயிலி தங்கள் சாதி என்றனர்.

பிறகு பறையர் குலத் தமிழரும் தமிழ்தேசியவாதியும் ஆன பெருஞ்சித்திரனார் ஒரு சக்கிலியர் என்று கதையளந்தனர்.

தற்போது தங்கை செங்கொடியை சொந்தம் கொண்டாடுகின்றனர்.

இது எல்லாமே 2009 க்குப் பிறகு திடீரென்று அவர்கள் கண்டுபிடித்தது ஆகும்.
சான்று கேட்டால் தருவதில்லை.

ஆனால் தங்கையின் வாழ்க்கையை 'இப்படிக்கு தோழர் செங்கொடி' என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்துத் தந்த இயக்குநர் வெற்றிவேல் சந்திரசேகர் செங்கொடி (தமிழினப் பழங்குடியினரான) இருளர் என்று கூறுகிறார்.

நன்றி: 22.08.2012 ஆனந்த விகடன் இதழ்