Showing posts with label பா.ரஞ்சித். Show all posts
Showing posts with label பா.ரஞ்சித். Show all posts

Saturday, 27 July 2019

இராசராசன் காலத்தில் சாதிய ஒடுக்குமுறை மற்றும் பிராமணீயம் இல்லை - வரலாற்று ஆய்வாளர் விளக்கம்

இராசராசன் காலத்தில் சாதிய ஒடுக்குமுறை மற்றும் பிராமணீயம் இல்லை
- வரலாற்று ஆய்வாளர் விளக்கம்

** ஒரே கல்வெட்டில் ஒரு ஊரில் தீண்டாச்சேரி என்றும் பறைச்சேரி எனவும் தனித்தனியாக குறிக்கப்படுள்ளது **

** விஜயநகர காலத்திற்கு பின்புதான் (நாயக்கர் ஆட்சியில்) பறையர்கள் தீண்டப்படாத நிலைக்கு தள்ளப்பட்டனர் **

**  சோழர் வழங்கிய நிலதானங்களில் 20% தான் பிராமணர்களுக்கும், கோயில்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது **

---------------

வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான மே.து.ராசுகுமார் அவர்கள்,
""பிறகாலச் சோழர் கால வாழ்வியல்",
"சோழர் கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல்",
"தமிழகத் தொல் சாதியக் குடிகளின் மேலேற்றமும் கீழிறக்கமும்"
உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதி உள்ளார்.

ராஜராஜன் சோழன் காலத்தில் தலித் என்று ஒரு பிரிவு இருந்தது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறார் மே.து.ராசுகுமார்.

சமீபத்தில் "சாதி ரீதியான ஒடுக்குமுறைகள், நிலப் பறிப்பு என ராஜராஜ சோழனின் காலம் இருண்டகாலமாக இருந்தது.
குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகம் நில உரிமையை இழந்தது ராஜராஜன் ஆட்சி காலத்தில்தான்"
என திரைப்பட இயக்குநர் ரஞ்சித் அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசி இருந்தார்.

இது தொடர்பாக வரலாற்றாசிரியர் மே.து.ராசுகுமார் அவர்களிடம் பேசினோம்.

"ஓர் அரசர் வாழ்ந்த காலத்தில் அந்த சமூகம் யாருடைய வர்க்க நலனை பாதுகாப்பதற்காக இருந்ததோ,
அந்த வர்க்க நலனை அரசர்கள் பாதுகாத்து கொண்டுதான் இருந்தார்கள்.
அதனை நாம் மறுத்துவிட முடியாது.
எந்த அரசரும் வர்க்க நலனுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை.

ஆனால், அதே நேரம் தாங்கள் இருக்கின்ற சமூகத்தில் அன்றைய சமூக பொருளியல் நிலையில் அந்த சமூகத்தை அடுத்தக்கட்ட நகர்வுக்கு அந்த மன்னர்கள் எப்படி அழைத்து சென்றார்கள் என பார்க்கவேண்டும்.
அப்படிப் பார்த்தால்தான் ராஜராஜ சோழனின் பங்களிப்பை நாம் புறந்தள்ள முடியாது.

வேளாண் வளர்ச்சியில், தொழில்நுட்ப வளர்ச்சியில், நிலசீர்த்திருத்தத்தில் ராஜராஜ சோழனின் பங்களிப்பு மிகப்பெரியது.
அவரின் காலத்தில் நிலங்கள் முறையாக அளவிடப்பட்டது.
இதன் மூலமாக உற்பத்தி பெருகியது.

உற்பத்தி பெருக்கம் என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்துமோ, அது அனைத்தும் ராஜராஜ சோழனின் காலத்திலும் ஏற்பட்டது.
உற்பத்தி பெருக்கம் பிற நாடுகளை பிடிக்க காரணமாக இருந்தது.

ஒரு அரசன் பிற நாடுகளை பிடித்ததை வைத்தே அவரை குற்றஞ்சாட்டுவோமாயின்,
இங்கு எந்த அரசரையும் புகழ முடியாது"
என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ராசுகுமார்.

பறையர் சமூகத்தை குறித்து விவரிக்கும் ராசுகுமார்,

"தீண்டப்படாதார் குறித்த குறிப்புகள் சில கல்வெட்டுகளில் உள்ளன. 
ஒரே கல்வெட்டில் ஒரு ஊரில் தீண்டாசேரி என்றும் பறைசேரி எனவும் தனித்தனியாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்படியானால் பறையர்கள் தீண்டப்படாதவர்களாக அந்த காலக்கட்டத்தில் இல்லை என்றுதானே பொருள்?
எனவே பறையர்கள் அந்த காலத்தில் தீண்டப்படாதவர்களாக இல்லை எனலாம்.

அப்போது உற்பத்தி முறைக்குள் வராதவர்கள் வேண்டுமானால் தீண்டப்படாதவர்களாக கருதப்பட்டிருக்கலாம்.
அதாவது, வேட்டை சமூகமாக இருந்தவர்கள் தீண்டப்படாதவர்களாக இருந்திருக்கலாம்.

விஜயநகர காலத்திற்கு பின்புதான் பறையர்கள் தீண்டப்படாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பது என் மதிப்பீடு" என்கிறார்.

மேலும்,
"இங்கு தவறான சில கற்பிதங்கள் நிலவுகின்றன.
பிராமணர்கள் கையில்தான் வளமான நிலங்கள் இருந்தன என்பது அதில் ஒன்று.
உண்மையில் அப்படியெல்லாம் இல்லை.

40 ஆண்டுகளுக்கு முன்பே அதனை பேராசிரியர் சுப்புராயலு உடைத்துவிட்டார்.
அவரது எம்.லிட் ஆய்வு சோழ நாட்டின் புவியியல் அரசியல் குறித்தது.

அதில்,
'சோழர் காலம் குறித்து கிடைத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில்
வெறும் இருபது விழுக்காடுதான் பிராமணர்களுக்கும், கோயில்களுக்கும் கொடுத்த ஊர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீதமுள்ளது எல்லாம் வேளாளர் சமூகத்தின் ஊர் பெயர்கள்'
என்று கூறியுள்ளார்.

பெரும் நிலப்பரப்பை பிடுங்கி பிராமணர்களுக்கு கொடுத்தார்கள் என்பதெல்லாம் வெறும் கற்பிதமன்றி வேறில்லை.
பிராமண ஆய்வாளர்கள் தங்களை மேன்மையாக காட்டிக் கொள்வதற்காக வளமான நிலங்கள் எல்லாம் தங்களிடம் இருந்தன என்று எழுதிவிட்டு சென்றுவிட்டார்கள் "
என்று கூறும் ராசுக்குமார் மேலும் விளக்குறார்....

"ராஜராஜ சோழன் காலத்தில் பிராமணர்களுக்கு நிலம் முழு உரிமையாகவெல்லாம் தரப்படவில்லை.
பங்குதான் தரப்பட்டது.
அதாவது விளைச்சலில் பங்குதான் கொடுக்கப்பட்டது.

இதுவும் எப்படி செயல்படுத்தப்பட்டது என்று பார்த்தால், நிலத்தை முழுவதுமாக வாங்கிக்கொண்டு அதில் உற்பத்தியில் ஈடுபட வேறொருவருக்கு கொடுத்து, அதிலிருந்து பங்குதான் பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்டது.

இது 'குடிநீக்கி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது ஏற்கெனவே இருந்த  குடிகளை நீக்கி உற்பத்தியில் ஈடுபடும் வேறொரு குடிகளை அமர்த்துதல்.

சரி.
இதில் 'குடி' என்பது யார் என்பதை பார்க்க வேண்டும்.
'குடி' என்பது ஏதோ குறிப்பிட்ட சாதி அல்ல.
வேட்டை சமூகத்திலிருந்து வேளாண் சமூகமாக மாறிய போது,
யார் நிலத்தை பண்படுத்தி அதை வேளாண்மை செய்வதற்கு ஏற்றவாரு மாற்றினார்களோ, அவர்களே 'குடி'.
அதாவது காடு கொன்று நாடாக்கியவர்கள்.
இந்த உழுகுடிகள் தான் குடிநீக்கம் செய்யப்பட்டார்கள்.

மற்றொருவகை 'குடிநீங்கா பிரமதேயம்'.
ஏற்கெனவே இருந்த குடிகளை நீக்காமல் அவர்களின் உற்பத்தியில் பிராமணர்களுக்கு பங்கை கொடுப்பது.

குடிளாக அனைத்து சமூக மக்களும் இருந்தார்கள்.
ஏதோ குறிப்பிட்ட சாதியின் நிலம் மட்டும் பறிக்கப்படவில்லை"
என்ற மே.து.ராசுக்குமார்,

ராஜராஜ சோழன் காலத்தில் நிலத்திற்கும் பிராமணர்களுக்கும் இருந்த தொடர்பை மேலும் விவரிக்கிறார்...

"சோழர் காலத்தில் பிராமணர்கள் உயர்நிலையில் இருந்ததுபோல ஒரு கருத்து நிலவுகிறது.
உண்மையில் அப்படியெல்லாம் இல்லை.
அனைத்து சமூகமும் அரசில் பங்கு வகித்ததுபோல, அவர்களும் பங்கு வகித்திருக்கிறார்கள்.
மற்றபடி இங்கு சிலர் நினைப்பது போல, சோழ ஆட்சியே பிராமணமயமாக இல்லை.

அப்போது நிலவிய நிலவுடமை அமைப்பில் நிலம் கையில் வைத்திருந்த வேளாளர்கள்தான் சமூகத்திலும், அரசிலும் ஆதிக்கம் செலுத்தினார்கள்."
என்கிறார் ராசுக்குமார்.

நன்றி:
ராஜராஜ சோழன் காலத்தில் தீண்டப்படாதவர்கள் யார்? - வரலாற்று ஆய்வாளர் பேட்டி
- மு. நியாஸ் அகமது
பிபிசி தமிழ்
11 ஜூன் 2019

Saturday, 29 September 2018

பரியேறும் பறையர்

பரியேறும் பறையர்

சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பறையர் திரைப்படத்தில் வேண்டுமானால் ஜெயிக்கலாம்.
ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை.

106 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை ஒத்துள்ளது "பரியேறும் பெருமாள்" திரைப்படம்.

1913 இல் இராகவன் என்ற பறையர், தெலுங்கு உயர் சாதியினரான ரெட்டிகளால் படுகொலை செய்யப்பட்டதே அது.

'பறையன்' பத்திரிக்கை மோதலின் ஆரம்பம் முதலே அந்த பறையருக்காகக் குரல்கொடுத்து நியாயம் வாங்கித் தரமுடியாமல் தோற்றுப்போன கதை அது.

ஒரேயொரு வித்தியாசம் படத்தில் வருவது போல பறையர் கூலியாள் கிடையாது.
அவரும் நிலம் வைத்திருந்தார்.
தமது வேலையாட்களுக்கு அவர் அதிக கூலி கொடுத்ததால் ரெட்டிகளுக்கு வேலையாட்கள் கிடைக்கவில்லை.

ரெட்டியார்கள் மிரட்ட ராகவன் துணிந்து எதிர்க்கிறார்.

1890 களில் திண்டிவனம் அருகே விட்லாபுரம் எனும் கிராமத்தில் இது நடக்கிறது.
அக்கிராமத்தின் ஜமீன்தார் குடும்பமான கோவிந்தராஜுலு குடும்பம் வேலையாட்களுக்கு ஒரணா கூலி கொடுத்து வேலை வாங்குகிறது.
ராகவன் தமது வேலையாட்களுக்கு இரண்டணா கொடுத்து வந்தார்.
இதனால் மோதல் தொடங்குகிறது.

1897 இல் ராகவனின் விளைந்து நின்ற வயலை ரெட்டிகள் தமது கால்நடைகளை விட்டு நாசம் செய்கின்றனர்.
ராகவன் வீட்டிற்கு நெருப்புக்கு வைக்கின்றனர்.

ராகவனைக் கொலைசெய்ய நாள் குறிக்கின்றனர்.
இதையறிந்த ராகவன் சென்னை தப்பிச் செல்கிறார்.

சென்னையில் இராயப்பேட்டையில் இருந்த தமது உறவினர் தங்கவேலுப்பிள்ளை என்பவர் மூலம் பறையன் இதழுக்கு இது பற்றி எழுதுகிறார்.
அது செய்தியாக வருகிறது.

(பிள்ளை பட்டத்தை பறையரும் பயன்படுத்துவது உண்டு.
அப்போது பறையன் ஏட்டின் பத்ராதிபதியான ரெட்டமலை சீனாவாசன் கூட பிள்ளை பட்டம் கொண்ட பறையர்தான்)

இந்நிலையில் இராகவன் தமது வீடுகளில் திருடிவிட்டு ஓடியதாக ரெட்டிகள் தமது சாதியினரிடம் கையெழுத்து வாங்கி வழக்கு போட்டனர்.
ஏற்கனவே பறையன் இதழில் வெளிவந்த செய்தியை ராகவன் ஆதாரமாகக் காட்ட  திண்டிவனம் மாஜிஸ்ட்ரேட் கிருஷ்ணசாமி ஐயர் வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
அதோடு ரெட்டிகளை கண்டித்து அனுப்பினார்.
இது நடந்தது 1903.

பிறகு ராகவனும் ஊர்திரும்பினார்.
பணவிரயமும் அவமானமும் அடைந்த ரெட்டிகள் 10 ஆண்டுகள் காத்திருந்து இராகவன் கதையை முடித்தனர்.

  திட்டமிட்டு தமது மாடுகளை ராகவன் நிலத்தில் மேயவிட்ட ரெட்டிகள் இராகவன் அந்த மாடுகளைப் பிடித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கச் சென்றபோது  இராகவனை வழியிலேயே மறித்து அடித்தே கொலை செய்தனர்.

இந்த கொலைவழக்கு நடந்தபோது தங்கவேலுப்பிள்ளை ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டார்.
கொலை நடந்த பிறகு ராகவனின் மகன் கணபதி என்பவர் எழுதிய விரிவான கடிதமும் 19.03.1913 தேதியிட்ட பறையன் இதழில் வெளியானது.

1914 க்குப் பிறகு பறையன்  இதழ் நலிவடைந்து விட்டதால் கொலைவழக்கின் தீர்ப்பு என்னவானது என்பது தெரியவில்லை.

நாம் கூறவிரும்புவது....

தமிழகத்தில் நிலவுடைமை பெரும்பாலும் வந்தேறிகள் கையில்.

தமிழகத்து ஜமீன்தார்கள் பெரும்பாலும் தெலுங்கர்.

விட்லாபுரம் போல கீழவெண்மணி, குறிஞ்சாக்குளம் என மேலும் எடுத்துக்காட்டுகள் உண்டு

படம்: ஆங்கிலேயர் கால நிலவுடைமைச் சாதிகள் (வரைபடம்)

பரியேறும் பறையர்

பரியேறும் பறையர்

சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பறையர் திரைப்படத்தில் வேண்டுமானால் ஜெயிக்கலாம்.
ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை.

106 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை ஒத்துள்ளது "பரியேறும் பெருமாள்" திரைப்படம்.

1913 இல் இராகவன் என்ற பறையர், தெலுங்கு உயர் சாதியினரான ரெட்டிகளால் படுகொலை செய்யப்பட்டதே அது.

'பறையன்' பத்திரிக்கை மோதலின் ஆரம்பம் முதலே அந்த பறையருக்காகக் குரல்கொடுத்து நியாயம் வாங்கித் தரமுடியாமல் தோற்றுப்போன கதை அது.

ஒரேயொரு வித்தியாசம் படத்தில் வருவது போல பறையர் கூலியாள் கிடையாது.
அவரும் நிலம் வைத்திருந்தார்.
தமது வேலையாட்களுக்கு அவர் அதிக கூலி கொடுத்ததால் ரெட்டிகளுக்கு வேலையாட்கள் கிடைக்கவில்லை.

ரெட்டியார்கள் மிரட்ட ராகவன் துணிந்து எதிர்க்கிறார்.

1890 களில் திண்டிவனம் அருகே விட்லாபுரம் எனும் கிராமத்தில் இது நடக்கிறது.
அக்கிராமத்தின் ஜமீன்தார் குடும்பமான கோவிந்தராஜுலு குடும்பம் வேலையாட்களுக்கு ஒரணா கூலி கொடுத்து வேலை வாங்குகிறது.
ராகவன் தமது வேலையாட்களுக்கு இரண்டணா கொடுத்து வந்தார்.
இதனால் மோதல் தொடங்குகிறது.

1897 இல் ராகவனின் விளைந்து நின்ற வயலை ரெட்டிகள் தமது கால்நடைகளை விட்டு நாசம் செய்கின்றனர்.
ராகவன் வீட்டிற்கு நெருப்புக்கு வைக்கின்றனர்.

ராகவனைக் கொலைசெய்ய நாள் குறிக்கின்றனர்.
இதையறிந்த ராகவன் சென்னை தப்பிச் செல்கிறார்.

சென்னையில் இராயப்பேட்டையில் இருந்த தமது உறவினர் தங்கவேலுப்பிள்ளை என்பவர் மூலம் பறையன் இதழுக்கு இது பற்றி எழுதுகிறார்.
அது செய்தியாக வருகிறது.

(பிள்ளை பட்டத்தை பறையரும் பயன்படுத்துவது உண்டு.
அப்போது பறையன் ஏட்டின் பத்ராதிபதியான ரெட்டமலை சீனாவாசன் கூட பிள்ளை பட்டம் கொண்ட பறையர்தான்)

இந்நிலையில் இராகவன் தமது வீடுகளில் திருடிவிட்டு ஓடியதாக ரெட்டிகள் தமது சாதியினரிடம் கையெழுத்து வாங்கி வழக்கு போட்டனர்.
ஏற்கனவே பறையன் இதழில் வெளிவந்த செய்தியை ராகவன் ஆதாரமாகக் காட்ட  திண்டிவனம் மாஜிஸ்ட்ரேட் கிருஷ்ணசாமி ஐயர் வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
அதோடு ரெட்டிகளை கண்டித்து அனுப்பினார்.
இது நடந்தது 1903.

பிறகு ராகவனும் ஊர்திரும்பினார்.
பணவிரயமும் அவமானமும் அடைந்த ரெட்டிகள் 10 ஆண்டுகள் காத்திருந்து இராகவன் கதையை முடித்தனர்.

  திட்டமிட்டு தமது மாடுகளை ராகவன் நிலத்தில் மேயவிட்ட ரெட்டிகள் இராகவன் அந்த மாடுகளைப் பிடித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கச் சென்றபோது  இராகவனை வழியிலேயே மறித்து அடித்தே கொலை செய்தனர்.

இந்த கொலைவழக்கு நடந்தபோது தங்கவேலுப்பிள்ளை ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டார்.
கொலை நடந்த பிறகு ராகவனின் மகன் கணபதி என்பவர் எழுதிய விரிவான கடிதமும் 19.03.1913 தேதியிட்ட பறையன் இதழில் வெளியானது.

1914 க்குப் பிறகு பறையன்  இதழ் நலிவடைந்து விட்டதால் கொலைவழக்கின் தீர்ப்பு என்னவானது என்பது தெரியவில்லை.

நாம் கூறவிரும்புவது....

தமிழகத்தில் நிலவுடைமை பெரும்பாலும் வந்தேறிகள் கையில்.

தமிழகத்து ஜமீன்தார்கள் பெரும்பாலும் தெலுங்கர்.

விட்லாபுரம் போல கீழவெண்மணி, குறிஞ்சாக்குளம் என மேலும் எடுத்துக்காட்டுகள் உண்டு

படம்: ஆங்கிலேயர் கால நிலவுடைமைச் சாதிகள் (வரைபடம்)

Friday, 8 September 2017

பா.ரஞ்சித் அவர்களே!

பா.ரஞ்சித் அவர்களே!

'கபாலி படத்தில் பெரியாரைக் காட்டவில்லை' என்று சண்டித்தனம் செய்த திராவிட ஆண்டைகளிடம்
'என் படம், நான் எதையும் காட்டுவேன்' என்று கூற தைரியமில்லாமல் மன்னிப்பு கோரிய அடிமையாகிய உங்களுக்கு ஒரு தமிழ்தேசியவாதியின் மடல்.

"தமிழ், தமிழன் என்று எத்தனை நாட்களுக்கு ஏமாற்றுவீர்கள்?"
என்று சம்பந்தமே இல்லாமல் அனிதா தங்கைக்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் கலகம் செய்துள்ளீர்கள்.

உங்களது நோக்கம் அனிதா மரணத்திற்கு காரணமான, மாநில உரிமைக்கு எதிரான நீட்டுக்கு எதிராக திரளும் தமிழர்களை பழிப்பதன் மூலம் பறையர்களுக்கு எதிராக திருப்புவது.

அதாவது
'நான் ஒரு பறையன் மட்டுமே'
'தமிழனாக என்னை உணரவில்லை' என்று உங்களை பதிவுசெய்யவே இப்படி செய்துள்ளீர்கள்.

1000 ஆண்டு முன்பு ராஜராஜன் காலத்தில்கூட பார்ப்பனர்களும் சேரியில் தான் இருந்துள்ளனர்.
அவரது அண்ணனைக் கொன்றவர்கள் பார்ப்பன சேரியைச் சேர்ந்தவர்கள் என்று ராசரானின் கல்வெட்டும் உள்ளது.

வெறும் 500 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலுக்கு நிலமும் தானமும் அளித்த பூவன் பறையன் எனும் பாண்டிய மன்னனின் மெய்க்காப்பாளனுடைய கல்வெட்டு உள்ள அம்பாசமுத்திரம் எனது ஊர்.
அப்படி இருக்க அவர்கள் வீழ்ந்தது எப்படி என்று கேட்கிறீர்களா?

நான் கூறுகிறேன்.
700 ஆண்டுகளாக இங்கே தமிழர்கள் ஆளவில்லை.
வேற்றின ஆட்சிதான் இங்கே நடக்கிறது.
அதுவே சாதிய ஏற்றத்தாழ்வுக்குக் காரணம் என்கிறேன்.

நீங்கள் தலித் என்று குறிப்பிடும் 'தமிழினத்து பட்டியல் சாதியாரை' பிற தமிழர்கள் தம் உடன்பிறப்புகளாக நினைக்க வைக்கும் தமிழ்தேசியம் இதற்கான தீர்வு என்கிறேன் நான்.

ஆனால் நீங்கள் முன்வைக்கும் தலித்தியம் என்பது தலித் மக்கள் மட்டும் ஒன்றுதிரண்டு அதிகாரத்தில் பங்கு கேட்பதன் மூலம் முன்னேற்றம் அடைந்து பிறருக்கு சமமாக வருவது.

எது சரியானது என்று மக்களே முடிவு செய்யட்டும்.

முதலில் பிரச்சனை என்ன என்பதை புரிந்துகொள்வோம்.

நீட் என்பது பொருளாதாரத்தில் பின் தங்கியோர் மற்றும் தாய்மொழியில் மாநில பாடத்திட்டத்தில் கல்வி கற்றோருக்கு எதிரானது.

அதாவது இது ஒரு பொருளாதார பிரச்சனை மற்றும் மொழி பிரச்சனை.

இதிலே எங்கிருந்து வந்தது சாதி?

இப்போது தலித் தலித் என்று ஒப்பாரி வைக்கும் ரஞ்சித் அவர்களே!

தங்கை அனிதா மரணமடையும் முன்பே நீட்டை எதிர்த்து வந்த தமிழ் இயக்கங்களை என்னால் காட்டமுடியும்.
உங்களால் அப்படியொரு தலித் இயக்கத்தைக் காட்டமுடியுமா?

அல்லது நீங்களாவது எங்கேயாவது நீட் பற்றி பேசியதுண்டா?

இந்தியா முழுக்க ஏன் தமிழகத்திலே கூட தலித்திய அரசியல் பேசும் எவரும் நீட் தேர்வுக்கு எதிரான எந்த முயற்சியும் இதுவரை செய்யவில்லையே?!

அதை விடுங்கள்.
தமிழகம் தாண்டி எந்த தலித் இயக்கமாவது தங்கைக்கு அஞ்சலியாவது செலுத்தியுள்ளனரா?

நீட்டை எதிர்ப்பது தமிழகம் மட்டுமே!

அனிதாவுக்காக போராடுவது தமிழகம் மட்டுமே!

அதற்காக கூடிய கூட்டம் தமிழ் தமிழன் என்று பேசாமல் அனிதா பற்றியோ நீட் பற்றியோ வாயே திறக்காத தலித்தியம் பற்றியா பேசும்?

ரஞ்சித் அவர்களே!
நீங்கள் சாதிய ஒடுக்குமுறையால் தனிப்பட்ட முறையில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டவராக இருக்கவேண்டும்.
அதற்காக மேடை மேடையாகப் போய் குரல் எழுப்புங்கள்.
திரைப்படமாக எடுத்துத் தள்ளுங்கள்.
இயக்கமோ கட்சியோ தொடங்கி தமிழ்ச் சமூகத்திடம் நியாயம் கேளுங்கள்.

ஆனால் அனிதா தங்கையின் பிணத்தின் மீது நின்றுகொண்டு அதற்கான நியாயம் கேட்பது உங்களுக்கே அசிங்கமாக இல்லையா?

உங்களுக்கு விளம்பரம் தேட வேறு இடமே கிடைக்கவில்லையா?

அனிதா இறந்தது சாதிய ஒடுக்குமுறையால் அல்ல.

ஹிந்தியாவின் தமிழகத்தின் மீதான ஒடுக்குமுறையால்!

தமிழ்வழியில் பாடம் படித்ததால்!

வறுமை கூட இரண்டாவது காரணம்தான்.

ஒரு தாய் இறந்து நடுவீட்டில் கிடக்கும்போது இழவுக்கு வந்தவர்களிடம் நகைப் பங்கீடு சரியில்லை என நியாயம் கேட்கும் சுயநலகம்பிடித்த மகளைப்போல நடந்துகொள்கிறீர்கள்.

ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

அனிதாவை தமிழர்கள் கைவிடமாட்டார்கள்!

பறையர்கள் உங்கள் பின்னால் வரமாட்டார்கள் !