Showing posts with label ரஞ்சித். Show all posts
Showing posts with label ரஞ்சித். Show all posts

Saturday, 29 September 2018

பரியேறும் பறையர்

பரியேறும் பறையர்

சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பறையர் திரைப்படத்தில் வேண்டுமானால் ஜெயிக்கலாம்.
ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை.

106 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை ஒத்துள்ளது "பரியேறும் பெருமாள்" திரைப்படம்.

1913 இல் இராகவன் என்ற பறையர், தெலுங்கு உயர் சாதியினரான ரெட்டிகளால் படுகொலை செய்யப்பட்டதே அது.

'பறையன்' பத்திரிக்கை மோதலின் ஆரம்பம் முதலே அந்த பறையருக்காகக் குரல்கொடுத்து நியாயம் வாங்கித் தரமுடியாமல் தோற்றுப்போன கதை அது.

ஒரேயொரு வித்தியாசம் படத்தில் வருவது போல பறையர் கூலியாள் கிடையாது.
அவரும் நிலம் வைத்திருந்தார்.
தமது வேலையாட்களுக்கு அவர் அதிக கூலி கொடுத்ததால் ரெட்டிகளுக்கு வேலையாட்கள் கிடைக்கவில்லை.

ரெட்டியார்கள் மிரட்ட ராகவன் துணிந்து எதிர்க்கிறார்.

1890 களில் திண்டிவனம் அருகே விட்லாபுரம் எனும் கிராமத்தில் இது நடக்கிறது.
அக்கிராமத்தின் ஜமீன்தார் குடும்பமான கோவிந்தராஜுலு குடும்பம் வேலையாட்களுக்கு ஒரணா கூலி கொடுத்து வேலை வாங்குகிறது.
ராகவன் தமது வேலையாட்களுக்கு இரண்டணா கொடுத்து வந்தார்.
இதனால் மோதல் தொடங்குகிறது.

1897 இல் ராகவனின் விளைந்து நின்ற வயலை ரெட்டிகள் தமது கால்நடைகளை விட்டு நாசம் செய்கின்றனர்.
ராகவன் வீட்டிற்கு நெருப்புக்கு வைக்கின்றனர்.

ராகவனைக் கொலைசெய்ய நாள் குறிக்கின்றனர்.
இதையறிந்த ராகவன் சென்னை தப்பிச் செல்கிறார்.

சென்னையில் இராயப்பேட்டையில் இருந்த தமது உறவினர் தங்கவேலுப்பிள்ளை என்பவர் மூலம் பறையன் இதழுக்கு இது பற்றி எழுதுகிறார்.
அது செய்தியாக வருகிறது.

(பிள்ளை பட்டத்தை பறையரும் பயன்படுத்துவது உண்டு.
அப்போது பறையன் ஏட்டின் பத்ராதிபதியான ரெட்டமலை சீனாவாசன் கூட பிள்ளை பட்டம் கொண்ட பறையர்தான்)

இந்நிலையில் இராகவன் தமது வீடுகளில் திருடிவிட்டு ஓடியதாக ரெட்டிகள் தமது சாதியினரிடம் கையெழுத்து வாங்கி வழக்கு போட்டனர்.
ஏற்கனவே பறையன் இதழில் வெளிவந்த செய்தியை ராகவன் ஆதாரமாகக் காட்ட  திண்டிவனம் மாஜிஸ்ட்ரேட் கிருஷ்ணசாமி ஐயர் வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
அதோடு ரெட்டிகளை கண்டித்து அனுப்பினார்.
இது நடந்தது 1903.

பிறகு ராகவனும் ஊர்திரும்பினார்.
பணவிரயமும் அவமானமும் அடைந்த ரெட்டிகள் 10 ஆண்டுகள் காத்திருந்து இராகவன் கதையை முடித்தனர்.

  திட்டமிட்டு தமது மாடுகளை ராகவன் நிலத்தில் மேயவிட்ட ரெட்டிகள் இராகவன் அந்த மாடுகளைப் பிடித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கச் சென்றபோது  இராகவனை வழியிலேயே மறித்து அடித்தே கொலை செய்தனர்.

இந்த கொலைவழக்கு நடந்தபோது தங்கவேலுப்பிள்ளை ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டார்.
கொலை நடந்த பிறகு ராகவனின் மகன் கணபதி என்பவர் எழுதிய விரிவான கடிதமும் 19.03.1913 தேதியிட்ட பறையன் இதழில் வெளியானது.

1914 க்குப் பிறகு பறையன்  இதழ் நலிவடைந்து விட்டதால் கொலைவழக்கின் தீர்ப்பு என்னவானது என்பது தெரியவில்லை.

நாம் கூறவிரும்புவது....

தமிழகத்தில் நிலவுடைமை பெரும்பாலும் வந்தேறிகள் கையில்.

தமிழகத்து ஜமீன்தார்கள் பெரும்பாலும் தெலுங்கர்.

விட்லாபுரம் போல கீழவெண்மணி, குறிஞ்சாக்குளம் என மேலும் எடுத்துக்காட்டுகள் உண்டு

படம்: ஆங்கிலேயர் கால நிலவுடைமைச் சாதிகள் (வரைபடம்)

பரியேறும் பறையர்

பரியேறும் பறையர்

சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பறையர் திரைப்படத்தில் வேண்டுமானால் ஜெயிக்கலாம்.
ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை.

106 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை ஒத்துள்ளது "பரியேறும் பெருமாள்" திரைப்படம்.

1913 இல் இராகவன் என்ற பறையர், தெலுங்கு உயர் சாதியினரான ரெட்டிகளால் படுகொலை செய்யப்பட்டதே அது.

'பறையன்' பத்திரிக்கை மோதலின் ஆரம்பம் முதலே அந்த பறையருக்காகக் குரல்கொடுத்து நியாயம் வாங்கித் தரமுடியாமல் தோற்றுப்போன கதை அது.

ஒரேயொரு வித்தியாசம் படத்தில் வருவது போல பறையர் கூலியாள் கிடையாது.
அவரும் நிலம் வைத்திருந்தார்.
தமது வேலையாட்களுக்கு அவர் அதிக கூலி கொடுத்ததால் ரெட்டிகளுக்கு வேலையாட்கள் கிடைக்கவில்லை.

ரெட்டியார்கள் மிரட்ட ராகவன் துணிந்து எதிர்க்கிறார்.

1890 களில் திண்டிவனம் அருகே விட்லாபுரம் எனும் கிராமத்தில் இது நடக்கிறது.
அக்கிராமத்தின் ஜமீன்தார் குடும்பமான கோவிந்தராஜுலு குடும்பம் வேலையாட்களுக்கு ஒரணா கூலி கொடுத்து வேலை வாங்குகிறது.
ராகவன் தமது வேலையாட்களுக்கு இரண்டணா கொடுத்து வந்தார்.
இதனால் மோதல் தொடங்குகிறது.

1897 இல் ராகவனின் விளைந்து நின்ற வயலை ரெட்டிகள் தமது கால்நடைகளை விட்டு நாசம் செய்கின்றனர்.
ராகவன் வீட்டிற்கு நெருப்புக்கு வைக்கின்றனர்.

ராகவனைக் கொலைசெய்ய நாள் குறிக்கின்றனர்.
இதையறிந்த ராகவன் சென்னை தப்பிச் செல்கிறார்.

சென்னையில் இராயப்பேட்டையில் இருந்த தமது உறவினர் தங்கவேலுப்பிள்ளை என்பவர் மூலம் பறையன் இதழுக்கு இது பற்றி எழுதுகிறார்.
அது செய்தியாக வருகிறது.

(பிள்ளை பட்டத்தை பறையரும் பயன்படுத்துவது உண்டு.
அப்போது பறையன் ஏட்டின் பத்ராதிபதியான ரெட்டமலை சீனாவாசன் கூட பிள்ளை பட்டம் கொண்ட பறையர்தான்)

இந்நிலையில் இராகவன் தமது வீடுகளில் திருடிவிட்டு ஓடியதாக ரெட்டிகள் தமது சாதியினரிடம் கையெழுத்து வாங்கி வழக்கு போட்டனர்.
ஏற்கனவே பறையன் இதழில் வெளிவந்த செய்தியை ராகவன் ஆதாரமாகக் காட்ட  திண்டிவனம் மாஜிஸ்ட்ரேட் கிருஷ்ணசாமி ஐயர் வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
அதோடு ரெட்டிகளை கண்டித்து அனுப்பினார்.
இது நடந்தது 1903.

பிறகு ராகவனும் ஊர்திரும்பினார்.
பணவிரயமும் அவமானமும் அடைந்த ரெட்டிகள் 10 ஆண்டுகள் காத்திருந்து இராகவன் கதையை முடித்தனர்.

  திட்டமிட்டு தமது மாடுகளை ராகவன் நிலத்தில் மேயவிட்ட ரெட்டிகள் இராகவன் அந்த மாடுகளைப் பிடித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கச் சென்றபோது  இராகவனை வழியிலேயே மறித்து அடித்தே கொலை செய்தனர்.

இந்த கொலைவழக்கு நடந்தபோது தங்கவேலுப்பிள்ளை ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டார்.
கொலை நடந்த பிறகு ராகவனின் மகன் கணபதி என்பவர் எழுதிய விரிவான கடிதமும் 19.03.1913 தேதியிட்ட பறையன் இதழில் வெளியானது.

1914 க்குப் பிறகு பறையன்  இதழ் நலிவடைந்து விட்டதால் கொலைவழக்கின் தீர்ப்பு என்னவானது என்பது தெரியவில்லை.

நாம் கூறவிரும்புவது....

தமிழகத்தில் நிலவுடைமை பெரும்பாலும் வந்தேறிகள் கையில்.

தமிழகத்து ஜமீன்தார்கள் பெரும்பாலும் தெலுங்கர்.

விட்லாபுரம் போல கீழவெண்மணி, குறிஞ்சாக்குளம் என மேலும் எடுத்துக்காட்டுகள் உண்டு

படம்: ஆங்கிலேயர் கால நிலவுடைமைச் சாதிகள் (வரைபடம்)

Friday, 8 September 2017

பா.ரஞ்சித் அவர்களே!

பா.ரஞ்சித் அவர்களே!

'கபாலி படத்தில் பெரியாரைக் காட்டவில்லை' என்று சண்டித்தனம் செய்த திராவிட ஆண்டைகளிடம்
'என் படம், நான் எதையும் காட்டுவேன்' என்று கூற தைரியமில்லாமல் மன்னிப்பு கோரிய அடிமையாகிய உங்களுக்கு ஒரு தமிழ்தேசியவாதியின் மடல்.

"தமிழ், தமிழன் என்று எத்தனை நாட்களுக்கு ஏமாற்றுவீர்கள்?"
என்று சம்பந்தமே இல்லாமல் அனிதா தங்கைக்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் கலகம் செய்துள்ளீர்கள்.

உங்களது நோக்கம் அனிதா மரணத்திற்கு காரணமான, மாநில உரிமைக்கு எதிரான நீட்டுக்கு எதிராக திரளும் தமிழர்களை பழிப்பதன் மூலம் பறையர்களுக்கு எதிராக திருப்புவது.

அதாவது
'நான் ஒரு பறையன் மட்டுமே'
'தமிழனாக என்னை உணரவில்லை' என்று உங்களை பதிவுசெய்யவே இப்படி செய்துள்ளீர்கள்.

1000 ஆண்டு முன்பு ராஜராஜன் காலத்தில்கூட பார்ப்பனர்களும் சேரியில் தான் இருந்துள்ளனர்.
அவரது அண்ணனைக் கொன்றவர்கள் பார்ப்பன சேரியைச் சேர்ந்தவர்கள் என்று ராசரானின் கல்வெட்டும் உள்ளது.

வெறும் 500 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலுக்கு நிலமும் தானமும் அளித்த பூவன் பறையன் எனும் பாண்டிய மன்னனின் மெய்க்காப்பாளனுடைய கல்வெட்டு உள்ள அம்பாசமுத்திரம் எனது ஊர்.
அப்படி இருக்க அவர்கள் வீழ்ந்தது எப்படி என்று கேட்கிறீர்களா?

நான் கூறுகிறேன்.
700 ஆண்டுகளாக இங்கே தமிழர்கள் ஆளவில்லை.
வேற்றின ஆட்சிதான் இங்கே நடக்கிறது.
அதுவே சாதிய ஏற்றத்தாழ்வுக்குக் காரணம் என்கிறேன்.

நீங்கள் தலித் என்று குறிப்பிடும் 'தமிழினத்து பட்டியல் சாதியாரை' பிற தமிழர்கள் தம் உடன்பிறப்புகளாக நினைக்க வைக்கும் தமிழ்தேசியம் இதற்கான தீர்வு என்கிறேன் நான்.

ஆனால் நீங்கள் முன்வைக்கும் தலித்தியம் என்பது தலித் மக்கள் மட்டும் ஒன்றுதிரண்டு அதிகாரத்தில் பங்கு கேட்பதன் மூலம் முன்னேற்றம் அடைந்து பிறருக்கு சமமாக வருவது.

எது சரியானது என்று மக்களே முடிவு செய்யட்டும்.

முதலில் பிரச்சனை என்ன என்பதை புரிந்துகொள்வோம்.

நீட் என்பது பொருளாதாரத்தில் பின் தங்கியோர் மற்றும் தாய்மொழியில் மாநில பாடத்திட்டத்தில் கல்வி கற்றோருக்கு எதிரானது.

அதாவது இது ஒரு பொருளாதார பிரச்சனை மற்றும் மொழி பிரச்சனை.

இதிலே எங்கிருந்து வந்தது சாதி?

இப்போது தலித் தலித் என்று ஒப்பாரி வைக்கும் ரஞ்சித் அவர்களே!

தங்கை அனிதா மரணமடையும் முன்பே நீட்டை எதிர்த்து வந்த தமிழ் இயக்கங்களை என்னால் காட்டமுடியும்.
உங்களால் அப்படியொரு தலித் இயக்கத்தைக் காட்டமுடியுமா?

அல்லது நீங்களாவது எங்கேயாவது நீட் பற்றி பேசியதுண்டா?

இந்தியா முழுக்க ஏன் தமிழகத்திலே கூட தலித்திய அரசியல் பேசும் எவரும் நீட் தேர்வுக்கு எதிரான எந்த முயற்சியும் இதுவரை செய்யவில்லையே?!

அதை விடுங்கள்.
தமிழகம் தாண்டி எந்த தலித் இயக்கமாவது தங்கைக்கு அஞ்சலியாவது செலுத்தியுள்ளனரா?

நீட்டை எதிர்ப்பது தமிழகம் மட்டுமே!

அனிதாவுக்காக போராடுவது தமிழகம் மட்டுமே!

அதற்காக கூடிய கூட்டம் தமிழ் தமிழன் என்று பேசாமல் அனிதா பற்றியோ நீட் பற்றியோ வாயே திறக்காத தலித்தியம் பற்றியா பேசும்?

ரஞ்சித் அவர்களே!
நீங்கள் சாதிய ஒடுக்குமுறையால் தனிப்பட்ட முறையில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டவராக இருக்கவேண்டும்.
அதற்காக மேடை மேடையாகப் போய் குரல் எழுப்புங்கள்.
திரைப்படமாக எடுத்துத் தள்ளுங்கள்.
இயக்கமோ கட்சியோ தொடங்கி தமிழ்ச் சமூகத்திடம் நியாயம் கேளுங்கள்.

ஆனால் அனிதா தங்கையின் பிணத்தின் மீது நின்றுகொண்டு அதற்கான நியாயம் கேட்பது உங்களுக்கே அசிங்கமாக இல்லையா?

உங்களுக்கு விளம்பரம் தேட வேறு இடமே கிடைக்கவில்லையா?

அனிதா இறந்தது சாதிய ஒடுக்குமுறையால் அல்ல.

ஹிந்தியாவின் தமிழகத்தின் மீதான ஒடுக்குமுறையால்!

தமிழ்வழியில் பாடம் படித்ததால்!

வறுமை கூட இரண்டாவது காரணம்தான்.

ஒரு தாய் இறந்து நடுவீட்டில் கிடக்கும்போது இழவுக்கு வந்தவர்களிடம் நகைப் பங்கீடு சரியில்லை என நியாயம் கேட்கும் சுயநலகம்பிடித்த மகளைப்போல நடந்துகொள்கிறீர்கள்.

ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

அனிதாவை தமிழர்கள் கைவிடமாட்டார்கள்!

பறையர்கள் உங்கள் பின்னால் வரமாட்டார்கள் !