Saturday 29 September 2018

பரியேறும் பறையர்

பரியேறும் பறையர்

சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பறையர் திரைப்படத்தில் வேண்டுமானால் ஜெயிக்கலாம்.
ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை.

106 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை ஒத்துள்ளது "பரியேறும் பெருமாள்" திரைப்படம்.

1913 இல் இராகவன் என்ற பறையர், தெலுங்கு உயர் சாதியினரான ரெட்டிகளால் படுகொலை செய்யப்பட்டதே அது.

'பறையன்' பத்திரிக்கை மோதலின் ஆரம்பம் முதலே அந்த பறையருக்காகக் குரல்கொடுத்து நியாயம் வாங்கித் தரமுடியாமல் தோற்றுப்போன கதை அது.

ஒரேயொரு வித்தியாசம் படத்தில் வருவது போல பறையர் கூலியாள் கிடையாது.
அவரும் நிலம் வைத்திருந்தார்.
தமது வேலையாட்களுக்கு அவர் அதிக கூலி கொடுத்ததால் ரெட்டிகளுக்கு வேலையாட்கள் கிடைக்கவில்லை.

ரெட்டியார்கள் மிரட்ட ராகவன் துணிந்து எதிர்க்கிறார்.

1890 களில் திண்டிவனம் அருகே விட்லாபுரம் எனும் கிராமத்தில் இது நடக்கிறது.
அக்கிராமத்தின் ஜமீன்தார் குடும்பமான கோவிந்தராஜுலு குடும்பம் வேலையாட்களுக்கு ஒரணா கூலி கொடுத்து வேலை வாங்குகிறது.
ராகவன் தமது வேலையாட்களுக்கு இரண்டணா கொடுத்து வந்தார்.
இதனால் மோதல் தொடங்குகிறது.

1897 இல் ராகவனின் விளைந்து நின்ற வயலை ரெட்டிகள் தமது கால்நடைகளை விட்டு நாசம் செய்கின்றனர்.
ராகவன் வீட்டிற்கு நெருப்புக்கு வைக்கின்றனர்.

ராகவனைக் கொலைசெய்ய நாள் குறிக்கின்றனர்.
இதையறிந்த ராகவன் சென்னை தப்பிச் செல்கிறார்.

சென்னையில் இராயப்பேட்டையில் இருந்த தமது உறவினர் தங்கவேலுப்பிள்ளை என்பவர் மூலம் பறையன் இதழுக்கு இது பற்றி எழுதுகிறார்.
அது செய்தியாக வருகிறது.

(பிள்ளை பட்டத்தை பறையரும் பயன்படுத்துவது உண்டு.
அப்போது பறையன் ஏட்டின் பத்ராதிபதியான ரெட்டமலை சீனாவாசன் கூட பிள்ளை பட்டம் கொண்ட பறையர்தான்)

இந்நிலையில் இராகவன் தமது வீடுகளில் திருடிவிட்டு ஓடியதாக ரெட்டிகள் தமது சாதியினரிடம் கையெழுத்து வாங்கி வழக்கு போட்டனர்.
ஏற்கனவே பறையன் இதழில் வெளிவந்த செய்தியை ராகவன் ஆதாரமாகக் காட்ட  திண்டிவனம் மாஜிஸ்ட்ரேட் கிருஷ்ணசாமி ஐயர் வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
அதோடு ரெட்டிகளை கண்டித்து அனுப்பினார்.
இது நடந்தது 1903.

பிறகு ராகவனும் ஊர்திரும்பினார்.
பணவிரயமும் அவமானமும் அடைந்த ரெட்டிகள் 10 ஆண்டுகள் காத்திருந்து இராகவன் கதையை முடித்தனர்.

  திட்டமிட்டு தமது மாடுகளை ராகவன் நிலத்தில் மேயவிட்ட ரெட்டிகள் இராகவன் அந்த மாடுகளைப் பிடித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கச் சென்றபோது  இராகவனை வழியிலேயே மறித்து அடித்தே கொலை செய்தனர்.

இந்த கொலைவழக்கு நடந்தபோது தங்கவேலுப்பிள்ளை ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டார்.
கொலை நடந்த பிறகு ராகவனின் மகன் கணபதி என்பவர் எழுதிய விரிவான கடிதமும் 19.03.1913 தேதியிட்ட பறையன் இதழில் வெளியானது.

1914 க்குப் பிறகு பறையன்  இதழ் நலிவடைந்து விட்டதால் கொலைவழக்கின் தீர்ப்பு என்னவானது என்பது தெரியவில்லை.

நாம் கூறவிரும்புவது....

தமிழகத்தில் நிலவுடைமை பெரும்பாலும் வந்தேறிகள் கையில்.

தமிழகத்து ஜமீன்தார்கள் பெரும்பாலும் தெலுங்கர்.

விட்லாபுரம் போல கீழவெண்மணி, குறிஞ்சாக்குளம் என மேலும் எடுத்துக்காட்டுகள் உண்டு

படம்: ஆங்கிலேயர் கால நிலவுடைமைச் சாதிகள் (வரைபடம்)

No comments:

Post a Comment