Monday 24 September 2018

சாய் பாபா ஒரு இசுலாமியர்

சாய் பாபா ஒரு இசுலாமியர்

1999 இல் மாயா என்றொரு படம் வந்தது.
சாய் பாபா பற்றிய படமான அதில் சாய் அவதாரமான சிறுவன் "அல்லா மாலிக்" "அல்லா மாலிக்" என்று கூறுவான்.

இதன் பொருள் இறைவனே(அல்லா) முதலாளி என்பது.

(இறைவன் ஒருவனே என்பது இசுலாமியக் கொள்கை)

சாய்பாபா புகைப்படங்கள் சில உண்டு.
காவி உடை, பட்டை, நாமம், குங்குமம், கழுத்தில் மாலை என எந்த இந்து அடையாளமும் அதில் இல்லை.

அவர் தங்கி இருந்தது பாழடைந்த பள்ளிவாசல்.

தலையை மூடியவாறு வெள்ளைத்துணியை அணிந்துள்ளார்.

அவர் இசுலாமிய சூபி ஞானி என்பதற்கு இத்தகைய சில சான்றுகள் உண்டு.

ஆனால் இந்து என்பதற்கு எந்த சிறு சான்றும் கிடையாது.

டிவி தொடர்களில் வரும் அத்தனையும் கட்டுக்கதைகள்.

அவர் அன்னதானம் நடத்தும்போது ஒரு பிடி அரிசியோ உள்ளங்கையளவு எண்ணெயோ ஒருவரும் வழங்கவில்லை.

அவர் மிக மிக ஏழ்மையில் கிடந்து இறந்துள்ளார்.

இப்போது சீரடியில் வைர மகுடம் என்ன?
தங்க சிம்மாசனமென்ன?  
பட்டு உடையென்ன?
நெய் பலகாரப் படையல்கள் என்ன?

இந்த நாட்டு மக்கள் எவ்வளவு கூமுட்டைகள் என்பதற்கு சாய்பாபா பக்தி ஒரு உதாரணம்.

தமிழ்நாடும் அத்தகைய கூமுட்டைநாடாக ஆகவேண்டாம்.

No comments:

Post a Comment