Showing posts with label நிலவுடைமை. Show all posts
Showing posts with label நிலவுடைமை. Show all posts

Saturday, 24 August 2024

மறவர் விளைநிலத்தில் பள்ளர் ஊரணி

 மறவர் விளைநிலத்தில் பள்ளர் ஊரணி

 புதுக்கோட்டை மாவட்டம்,
திருமயம்‌ வட்டம்‌,
 செவலூர்‌, 
பள்ளன்‌ ஊரணியின்‌ கிழக்குக்‌  கரையில்‌ நடப்பட்டுள்ள தூணின்‌ கல்வெட்டு. 

காலம்: சகாப்தம்‌ 1569, (கி.பி. 1647). 

 தற்போதைய புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் செவலூர் கிராமத்தில் பள்ளர் சமூகத்திற்கு குடிதண்ணீர் குளம் இல்லாமல் இருந்த காரணத்தால் உலகப்பன் செர்வைகாரர் அவர்களின் ஆணையின் பேரில் மேற்படியூர் நாயகத்தா தேவன், உத்திங்க தேவன், பசுப்பதேவன், சிலம்பத்தேவன் ஆகிய நான்கு மறவர்களது காணியாட்சியான அரங்கன் வயலில் நான்காள் நடவு நிலத்தை விட்டுக்கொடுத்து ஊரணி வெட்டிக்கொள்ள சொன்னது தொடர்பான கல்வெட்டு.

 சான்று:  "தமிழகத் தொல்லியல் கழகம்" வெளியிடும் ஆண்டு இதழான "ஆவணம்" இன் பதினேழாவது பதிப்பு "இதழ்  - 17" (2006 ஆண்டுக்கானது)

 அதாவது தேவேந்திரர் சமூகத்தின் குடிநீர் தேவைக்காக மறவர் சமூகத்தார் விளைநிலத்தை விட்டுக்கொடுத்த சான்று இது!

05.04.2020 அன்று இட்ட பதிவு
தலைப்பு: கிபி 1647 பள்ளருக்காக மறவர் அளித்த கொடை

 

Tuesday, 26 December 2023

பண்ணையார்களைக் காத்த தெலுங்கர்

பண்ணையார்களைக் காத்த தெலுங்கர்

 1950 இல் குமாரசாமி ராஜா (தெலுங்கு ராஜூ) ஆட்சியில் வாட்டக்குடி இரணியன் (அகமுடையார்), சாம்பவனோடை சிவராமன் (அகமுடையார்) போன்ற 5 முக்கியமான கம்யூனிஸ்ட் போராளிகளை போலீஸ் சுட்டுக் கொன்றது.
மஜூம்தார் காட்டிய வழியில் இவர்கள் நடத்திய "பண்ணையார் அழித்தொழிப்பு" நடவடிக்கை முடிவுக்குக் கொண்டுவரப் பட்டது .
 அவர்கள் இருந்திருந்தால் கீழவெண்மணி படுகொலை நடந்திருக்காது.
 அழித்தொழிப்பு கம்யூனிஸ்டுகள் மறைந்து வந்தேறி கால்நக்கி கம்யூனிஸ்டுகள் தோன்றியிருக்கவும் மாட்டார்கள்.

Saturday, 27 July 2019

இராசராசன் காலத்தில் சாதிய ஒடுக்குமுறை மற்றும் பிராமணீயம் இல்லை - வரலாற்று ஆய்வாளர் விளக்கம்

இராசராசன் காலத்தில் சாதிய ஒடுக்குமுறை மற்றும் பிராமணீயம் இல்லை
- வரலாற்று ஆய்வாளர் விளக்கம்

** ஒரே கல்வெட்டில் ஒரு ஊரில் தீண்டாச்சேரி என்றும் பறைச்சேரி எனவும் தனித்தனியாக குறிக்கப்படுள்ளது **

** விஜயநகர காலத்திற்கு பின்புதான் (நாயக்கர் ஆட்சியில்) பறையர்கள் தீண்டப்படாத நிலைக்கு தள்ளப்பட்டனர் **

**  சோழர் வழங்கிய நிலதானங்களில் 20% தான் பிராமணர்களுக்கும், கோயில்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது **

---------------

வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான மே.து.ராசுகுமார் அவர்கள்,
""பிறகாலச் சோழர் கால வாழ்வியல்",
"சோழர் கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல்",
"தமிழகத் தொல் சாதியக் குடிகளின் மேலேற்றமும் கீழிறக்கமும்"
உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதி உள்ளார்.

ராஜராஜன் சோழன் காலத்தில் தலித் என்று ஒரு பிரிவு இருந்தது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறார் மே.து.ராசுகுமார்.

சமீபத்தில் "சாதி ரீதியான ஒடுக்குமுறைகள், நிலப் பறிப்பு என ராஜராஜ சோழனின் காலம் இருண்டகாலமாக இருந்தது.
குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகம் நில உரிமையை இழந்தது ராஜராஜன் ஆட்சி காலத்தில்தான்"
என திரைப்பட இயக்குநர் ரஞ்சித் அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசி இருந்தார்.

இது தொடர்பாக வரலாற்றாசிரியர் மே.து.ராசுகுமார் அவர்களிடம் பேசினோம்.

"ஓர் அரசர் வாழ்ந்த காலத்தில் அந்த சமூகம் யாருடைய வர்க்க நலனை பாதுகாப்பதற்காக இருந்ததோ,
அந்த வர்க்க நலனை அரசர்கள் பாதுகாத்து கொண்டுதான் இருந்தார்கள்.
அதனை நாம் மறுத்துவிட முடியாது.
எந்த அரசரும் வர்க்க நலனுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை.

ஆனால், அதே நேரம் தாங்கள் இருக்கின்ற சமூகத்தில் அன்றைய சமூக பொருளியல் நிலையில் அந்த சமூகத்தை அடுத்தக்கட்ட நகர்வுக்கு அந்த மன்னர்கள் எப்படி அழைத்து சென்றார்கள் என பார்க்கவேண்டும்.
அப்படிப் பார்த்தால்தான் ராஜராஜ சோழனின் பங்களிப்பை நாம் புறந்தள்ள முடியாது.

வேளாண் வளர்ச்சியில், தொழில்நுட்ப வளர்ச்சியில், நிலசீர்த்திருத்தத்தில் ராஜராஜ சோழனின் பங்களிப்பு மிகப்பெரியது.
அவரின் காலத்தில் நிலங்கள் முறையாக அளவிடப்பட்டது.
இதன் மூலமாக உற்பத்தி பெருகியது.

உற்பத்தி பெருக்கம் என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்துமோ, அது அனைத்தும் ராஜராஜ சோழனின் காலத்திலும் ஏற்பட்டது.
உற்பத்தி பெருக்கம் பிற நாடுகளை பிடிக்க காரணமாக இருந்தது.

ஒரு அரசன் பிற நாடுகளை பிடித்ததை வைத்தே அவரை குற்றஞ்சாட்டுவோமாயின்,
இங்கு எந்த அரசரையும் புகழ முடியாது"
என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ராசுகுமார்.

பறையர் சமூகத்தை குறித்து விவரிக்கும் ராசுகுமார்,

"தீண்டப்படாதார் குறித்த குறிப்புகள் சில கல்வெட்டுகளில் உள்ளன. 
ஒரே கல்வெட்டில் ஒரு ஊரில் தீண்டாசேரி என்றும் பறைசேரி எனவும் தனித்தனியாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்படியானால் பறையர்கள் தீண்டப்படாதவர்களாக அந்த காலக்கட்டத்தில் இல்லை என்றுதானே பொருள்?
எனவே பறையர்கள் அந்த காலத்தில் தீண்டப்படாதவர்களாக இல்லை எனலாம்.

அப்போது உற்பத்தி முறைக்குள் வராதவர்கள் வேண்டுமானால் தீண்டப்படாதவர்களாக கருதப்பட்டிருக்கலாம்.
அதாவது, வேட்டை சமூகமாக இருந்தவர்கள் தீண்டப்படாதவர்களாக இருந்திருக்கலாம்.

விஜயநகர காலத்திற்கு பின்புதான் பறையர்கள் தீண்டப்படாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பது என் மதிப்பீடு" என்கிறார்.

மேலும்,
"இங்கு தவறான சில கற்பிதங்கள் நிலவுகின்றன.
பிராமணர்கள் கையில்தான் வளமான நிலங்கள் இருந்தன என்பது அதில் ஒன்று.
உண்மையில் அப்படியெல்லாம் இல்லை.

40 ஆண்டுகளுக்கு முன்பே அதனை பேராசிரியர் சுப்புராயலு உடைத்துவிட்டார்.
அவரது எம்.லிட் ஆய்வு சோழ நாட்டின் புவியியல் அரசியல் குறித்தது.

அதில்,
'சோழர் காலம் குறித்து கிடைத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில்
வெறும் இருபது விழுக்காடுதான் பிராமணர்களுக்கும், கோயில்களுக்கும் கொடுத்த ஊர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீதமுள்ளது எல்லாம் வேளாளர் சமூகத்தின் ஊர் பெயர்கள்'
என்று கூறியுள்ளார்.

பெரும் நிலப்பரப்பை பிடுங்கி பிராமணர்களுக்கு கொடுத்தார்கள் என்பதெல்லாம் வெறும் கற்பிதமன்றி வேறில்லை.
பிராமண ஆய்வாளர்கள் தங்களை மேன்மையாக காட்டிக் கொள்வதற்காக வளமான நிலங்கள் எல்லாம் தங்களிடம் இருந்தன என்று எழுதிவிட்டு சென்றுவிட்டார்கள் "
என்று கூறும் ராசுக்குமார் மேலும் விளக்குறார்....

"ராஜராஜ சோழன் காலத்தில் பிராமணர்களுக்கு நிலம் முழு உரிமையாகவெல்லாம் தரப்படவில்லை.
பங்குதான் தரப்பட்டது.
அதாவது விளைச்சலில் பங்குதான் கொடுக்கப்பட்டது.

இதுவும் எப்படி செயல்படுத்தப்பட்டது என்று பார்த்தால், நிலத்தை முழுவதுமாக வாங்கிக்கொண்டு அதில் உற்பத்தியில் ஈடுபட வேறொருவருக்கு கொடுத்து, அதிலிருந்து பங்குதான் பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்டது.

இது 'குடிநீக்கி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது ஏற்கெனவே இருந்த  குடிகளை நீக்கி உற்பத்தியில் ஈடுபடும் வேறொரு குடிகளை அமர்த்துதல்.

சரி.
இதில் 'குடி' என்பது யார் என்பதை பார்க்க வேண்டும்.
'குடி' என்பது ஏதோ குறிப்பிட்ட சாதி அல்ல.
வேட்டை சமூகத்திலிருந்து வேளாண் சமூகமாக மாறிய போது,
யார் நிலத்தை பண்படுத்தி அதை வேளாண்மை செய்வதற்கு ஏற்றவாரு மாற்றினார்களோ, அவர்களே 'குடி'.
அதாவது காடு கொன்று நாடாக்கியவர்கள்.
இந்த உழுகுடிகள் தான் குடிநீக்கம் செய்யப்பட்டார்கள்.

மற்றொருவகை 'குடிநீங்கா பிரமதேயம்'.
ஏற்கெனவே இருந்த குடிகளை நீக்காமல் அவர்களின் உற்பத்தியில் பிராமணர்களுக்கு பங்கை கொடுப்பது.

குடிளாக அனைத்து சமூக மக்களும் இருந்தார்கள்.
ஏதோ குறிப்பிட்ட சாதியின் நிலம் மட்டும் பறிக்கப்படவில்லை"
என்ற மே.து.ராசுக்குமார்,

ராஜராஜ சோழன் காலத்தில் நிலத்திற்கும் பிராமணர்களுக்கும் இருந்த தொடர்பை மேலும் விவரிக்கிறார்...

"சோழர் காலத்தில் பிராமணர்கள் உயர்நிலையில் இருந்ததுபோல ஒரு கருத்து நிலவுகிறது.
உண்மையில் அப்படியெல்லாம் இல்லை.
அனைத்து சமூகமும் அரசில் பங்கு வகித்ததுபோல, அவர்களும் பங்கு வகித்திருக்கிறார்கள்.
மற்றபடி இங்கு சிலர் நினைப்பது போல, சோழ ஆட்சியே பிராமணமயமாக இல்லை.

அப்போது நிலவிய நிலவுடமை அமைப்பில் நிலம் கையில் வைத்திருந்த வேளாளர்கள்தான் சமூகத்திலும், அரசிலும் ஆதிக்கம் செலுத்தினார்கள்."
என்கிறார் ராசுக்குமார்.

நன்றி:
ராஜராஜ சோழன் காலத்தில் தீண்டப்படாதவர்கள் யார்? - வரலாற்று ஆய்வாளர் பேட்டி
- மு. நியாஸ் அகமது
பிபிசி தமிழ்
11 ஜூன் 2019

Saturday, 29 September 2018

பரியேறும் பறையர்

பரியேறும் பறையர்

சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பறையர் திரைப்படத்தில் வேண்டுமானால் ஜெயிக்கலாம்.
ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை.

106 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை ஒத்துள்ளது "பரியேறும் பெருமாள்" திரைப்படம்.

1913 இல் இராகவன் என்ற பறையர், தெலுங்கு உயர் சாதியினரான ரெட்டிகளால் படுகொலை செய்யப்பட்டதே அது.

'பறையன்' பத்திரிக்கை மோதலின் ஆரம்பம் முதலே அந்த பறையருக்காகக் குரல்கொடுத்து நியாயம் வாங்கித் தரமுடியாமல் தோற்றுப்போன கதை அது.

ஒரேயொரு வித்தியாசம் படத்தில் வருவது போல பறையர் கூலியாள் கிடையாது.
அவரும் நிலம் வைத்திருந்தார்.
தமது வேலையாட்களுக்கு அவர் அதிக கூலி கொடுத்ததால் ரெட்டிகளுக்கு வேலையாட்கள் கிடைக்கவில்லை.

ரெட்டியார்கள் மிரட்ட ராகவன் துணிந்து எதிர்க்கிறார்.

1890 களில் திண்டிவனம் அருகே விட்லாபுரம் எனும் கிராமத்தில் இது நடக்கிறது.
அக்கிராமத்தின் ஜமீன்தார் குடும்பமான கோவிந்தராஜுலு குடும்பம் வேலையாட்களுக்கு ஒரணா கூலி கொடுத்து வேலை வாங்குகிறது.
ராகவன் தமது வேலையாட்களுக்கு இரண்டணா கொடுத்து வந்தார்.
இதனால் மோதல் தொடங்குகிறது.

1897 இல் ராகவனின் விளைந்து நின்ற வயலை ரெட்டிகள் தமது கால்நடைகளை விட்டு நாசம் செய்கின்றனர்.
ராகவன் வீட்டிற்கு நெருப்புக்கு வைக்கின்றனர்.

ராகவனைக் கொலைசெய்ய நாள் குறிக்கின்றனர்.
இதையறிந்த ராகவன் சென்னை தப்பிச் செல்கிறார்.

சென்னையில் இராயப்பேட்டையில் இருந்த தமது உறவினர் தங்கவேலுப்பிள்ளை என்பவர் மூலம் பறையன் இதழுக்கு இது பற்றி எழுதுகிறார்.
அது செய்தியாக வருகிறது.

(பிள்ளை பட்டத்தை பறையரும் பயன்படுத்துவது உண்டு.
அப்போது பறையன் ஏட்டின் பத்ராதிபதியான ரெட்டமலை சீனாவாசன் கூட பிள்ளை பட்டம் கொண்ட பறையர்தான்)

இந்நிலையில் இராகவன் தமது வீடுகளில் திருடிவிட்டு ஓடியதாக ரெட்டிகள் தமது சாதியினரிடம் கையெழுத்து வாங்கி வழக்கு போட்டனர்.
ஏற்கனவே பறையன் இதழில் வெளிவந்த செய்தியை ராகவன் ஆதாரமாகக் காட்ட  திண்டிவனம் மாஜிஸ்ட்ரேட் கிருஷ்ணசாமி ஐயர் வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
அதோடு ரெட்டிகளை கண்டித்து அனுப்பினார்.
இது நடந்தது 1903.

பிறகு ராகவனும் ஊர்திரும்பினார்.
பணவிரயமும் அவமானமும் அடைந்த ரெட்டிகள் 10 ஆண்டுகள் காத்திருந்து இராகவன் கதையை முடித்தனர்.

  திட்டமிட்டு தமது மாடுகளை ராகவன் நிலத்தில் மேயவிட்ட ரெட்டிகள் இராகவன் அந்த மாடுகளைப் பிடித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கச் சென்றபோது  இராகவனை வழியிலேயே மறித்து அடித்தே கொலை செய்தனர்.

இந்த கொலைவழக்கு நடந்தபோது தங்கவேலுப்பிள்ளை ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டார்.
கொலை நடந்த பிறகு ராகவனின் மகன் கணபதி என்பவர் எழுதிய விரிவான கடிதமும் 19.03.1913 தேதியிட்ட பறையன் இதழில் வெளியானது.

1914 க்குப் பிறகு பறையன்  இதழ் நலிவடைந்து விட்டதால் கொலைவழக்கின் தீர்ப்பு என்னவானது என்பது தெரியவில்லை.

நாம் கூறவிரும்புவது....

தமிழகத்தில் நிலவுடைமை பெரும்பாலும் வந்தேறிகள் கையில்.

தமிழகத்து ஜமீன்தார்கள் பெரும்பாலும் தெலுங்கர்.

விட்லாபுரம் போல கீழவெண்மணி, குறிஞ்சாக்குளம் என மேலும் எடுத்துக்காட்டுகள் உண்டு

படம்: ஆங்கிலேயர் கால நிலவுடைமைச் சாதிகள் (வரைபடம்)

பரியேறும் பறையர்

பரியேறும் பறையர்

சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பறையர் திரைப்படத்தில் வேண்டுமானால் ஜெயிக்கலாம்.
ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை.

106 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை ஒத்துள்ளது "பரியேறும் பெருமாள்" திரைப்படம்.

1913 இல் இராகவன் என்ற பறையர், தெலுங்கு உயர் சாதியினரான ரெட்டிகளால் படுகொலை செய்யப்பட்டதே அது.

'பறையன்' பத்திரிக்கை மோதலின் ஆரம்பம் முதலே அந்த பறையருக்காகக் குரல்கொடுத்து நியாயம் வாங்கித் தரமுடியாமல் தோற்றுப்போன கதை அது.

ஒரேயொரு வித்தியாசம் படத்தில் வருவது போல பறையர் கூலியாள் கிடையாது.
அவரும் நிலம் வைத்திருந்தார்.
தமது வேலையாட்களுக்கு அவர் அதிக கூலி கொடுத்ததால் ரெட்டிகளுக்கு வேலையாட்கள் கிடைக்கவில்லை.

ரெட்டியார்கள் மிரட்ட ராகவன் துணிந்து எதிர்க்கிறார்.

1890 களில் திண்டிவனம் அருகே விட்லாபுரம் எனும் கிராமத்தில் இது நடக்கிறது.
அக்கிராமத்தின் ஜமீன்தார் குடும்பமான கோவிந்தராஜுலு குடும்பம் வேலையாட்களுக்கு ஒரணா கூலி கொடுத்து வேலை வாங்குகிறது.
ராகவன் தமது வேலையாட்களுக்கு இரண்டணா கொடுத்து வந்தார்.
இதனால் மோதல் தொடங்குகிறது.

1897 இல் ராகவனின் விளைந்து நின்ற வயலை ரெட்டிகள் தமது கால்நடைகளை விட்டு நாசம் செய்கின்றனர்.
ராகவன் வீட்டிற்கு நெருப்புக்கு வைக்கின்றனர்.

ராகவனைக் கொலைசெய்ய நாள் குறிக்கின்றனர்.
இதையறிந்த ராகவன் சென்னை தப்பிச் செல்கிறார்.

சென்னையில் இராயப்பேட்டையில் இருந்த தமது உறவினர் தங்கவேலுப்பிள்ளை என்பவர் மூலம் பறையன் இதழுக்கு இது பற்றி எழுதுகிறார்.
அது செய்தியாக வருகிறது.

(பிள்ளை பட்டத்தை பறையரும் பயன்படுத்துவது உண்டு.
அப்போது பறையன் ஏட்டின் பத்ராதிபதியான ரெட்டமலை சீனாவாசன் கூட பிள்ளை பட்டம் கொண்ட பறையர்தான்)

இந்நிலையில் இராகவன் தமது வீடுகளில் திருடிவிட்டு ஓடியதாக ரெட்டிகள் தமது சாதியினரிடம் கையெழுத்து வாங்கி வழக்கு போட்டனர்.
ஏற்கனவே பறையன் இதழில் வெளிவந்த செய்தியை ராகவன் ஆதாரமாகக் காட்ட  திண்டிவனம் மாஜிஸ்ட்ரேட் கிருஷ்ணசாமி ஐயர் வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
அதோடு ரெட்டிகளை கண்டித்து அனுப்பினார்.
இது நடந்தது 1903.

பிறகு ராகவனும் ஊர்திரும்பினார்.
பணவிரயமும் அவமானமும் அடைந்த ரெட்டிகள் 10 ஆண்டுகள் காத்திருந்து இராகவன் கதையை முடித்தனர்.

  திட்டமிட்டு தமது மாடுகளை ராகவன் நிலத்தில் மேயவிட்ட ரெட்டிகள் இராகவன் அந்த மாடுகளைப் பிடித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கச் சென்றபோது  இராகவனை வழியிலேயே மறித்து அடித்தே கொலை செய்தனர்.

இந்த கொலைவழக்கு நடந்தபோது தங்கவேலுப்பிள்ளை ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டார்.
கொலை நடந்த பிறகு ராகவனின் மகன் கணபதி என்பவர் எழுதிய விரிவான கடிதமும் 19.03.1913 தேதியிட்ட பறையன் இதழில் வெளியானது.

1914 க்குப் பிறகு பறையன்  இதழ் நலிவடைந்து விட்டதால் கொலைவழக்கின் தீர்ப்பு என்னவானது என்பது தெரியவில்லை.

நாம் கூறவிரும்புவது....

தமிழகத்தில் நிலவுடைமை பெரும்பாலும் வந்தேறிகள் கையில்.

தமிழகத்து ஜமீன்தார்கள் பெரும்பாலும் தெலுங்கர்.

விட்லாபுரம் போல கீழவெண்மணி, குறிஞ்சாக்குளம் என மேலும் எடுத்துக்காட்டுகள் உண்டு

படம்: ஆங்கிலேயர் கால நிலவுடைமைச் சாதிகள் (வரைபடம்)

Friday, 21 September 2018

தெலுங்கர் மற்றும் தமிழர் பாளையங்கள் வரைபடம்

தெலுங்கர் மற்றும் தமிழர் பாளையங்கள் வரைபடம்

1790களில் தெலுங்கர் மற்றும் தமிழர் ஆட்சி செலுத்திய பாளையங்கள்.

தமிழர் (சிவப்பு) அனைவரும் மறவர் சாதியினர்.

தெலுங்கர் (மை வண்ணம்) பெரும்பாலும் கம்பளத்தார் சாதியினர்.

(பாளையத்தின் பெயரை வைத்து மட்டுமே குறித்துள்ளேன்.
பாளையங்களின் எல்லைகள் தெரியவில்லை)

தமிழர் பாளையங்கள் :-

அழகாபுரி
இராமநாதபுரம்
ஊற்றுமலை (எ) வீரகேரளம்புதூர்
ஊர்க்காடு
ஏழாயிரம்பண்ணை
கடம்பூர்
கொல்லங்கொண்டான்
சேத்தூர்
சிவகிரி
சிங்கம்பட்டி
சுரண்டை
சொக்கம்பட்டி (எ) வடகரை
புதுக்கோட்டை
தலைவன்கோட்டை
நெற்கட்டும் செவல்
மணியாச்சி
-----------
தெலுங்கர் பாளையங்கள் வருமாறு,

அம்மைநாயக்கனூர்
அம்பாத்துறை
அம்பலத்தாறு
ஆய்க்குடி
ஆற்றங்கரை
இரசக்க நாயக்கனூர்
இடையக்கோட்டை
இராமகரி
எட்டையபுரம்
எமகேலாபுரம்
எரியோடு
ஏழுமலை
ஒன்பதூர்
கன்னிவாடி
கண்டமனூர்
கவுண்டன்கோட்டை
காமநாயக்கனூர்
காடல்குடி
குளத்தூர்
கூழப்பநாயக்கனூர்
கடவூர் (எ) பிள்ளைவிழுங்கி
கோல்வார்பட்டி
கோம்பை
சிறுபாலை
சொக்கம்பட்டி
சத்திரப்பட்டி
செங்குறிச்சி
தவசிமேடு
தேவாரம்
தேவதானப்பட்டி
தோட்டியன் கோட்டை
தோகைமலை
தும்பிச்சிநாயக்கனூர்
மருங்காபுரி
மறவநாடு
மாத்தூர்
மாதவ நாயக்கனூர்
மாறனூற்று
மாம்பாறை
மேல்மாந்தை
பழனி
பள்ளியப்ப நாயக்கனூர்
பாவாலி
போடிநாயக்கனூர்
பாஞ்சாலங்குறிச்சி
விருப்பாட்சி
வெள்ளியங்குன்றம்
வீரமலை
நாகலாபுரம்
நிலக்கோட்டை

நன்றி: கட்டபொம்மன் கொள்ளைக்காரன் (நூல்)
---------
மை வண்ணமிடப்பட்ட பகுதிகளில் கணிசமான மக்கட்தொகையும் அப்பகுதி நிலவுடைமையையும் தெலுங்கர் கொண்டிருக்கலாம்.

Tuesday, 11 September 2018

கயவாளி கட்டபொம்மன் - 5

கயவாளி கட்டபொம்மன்
- நகைச்சுவை நடையில் கட்டபொம்மன் முன்னோரின் வரலாறு

பதிவர்: அன்பெழில் (anpezhil)

பகுதி - 5
இரண்டாம் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்
-----------
பொல்லாப் பாண்டிய கட்டபொம்மன் இறந்தபிறகு பட்டத்திற்கு வந்தான் அவன் மகன் (இரண்டாம்) ஜெகவீரபாண்டிய கட்டப்பொம்மன்.
அதாவது, நமது சிவாசிக்கனேசன் நடித்துக்காட்டிய வீரபாண்டியக் கட்டப்பொம்மனின் தகப்பன்!

இவனும் தன் தாத்தன், அப்பன் வழியைப் பின்பற்றி ‘பாண்டிய’ எனும் பின்னொட்டை தன் பெயரோடு இணைத்துக் கொண்டான்.
எந்தப் பாண்டிய மன்னன் இவர்களுக்கு அப்பனாக இருந்தான் என்பது அவர்களுக்கே வெளிச்சம்!

இடைப்பட்ட காலத்தில், கம்மந்தான் கான்சாகிப்பாக மதம் மாறியிருந்த மருதநாயகம் பிள்ளை வசம் மதுரை மற்றும் திருநெல்வேலிச் சீமைகளை ஆங்கிலேயர் குத்தகைக்கு விட்டிருந்தனர்.
மருதநாயகம் பிள்ளை வீழ்த்தப்பட்ட பிறகு திருநெல்வேலியானது தளவாய் அழகப்ப முதலியார் என்பவர் வசம் சிறிது காலம் குத்தகைக்கு விடப் பட்டிருந்தது.
பிறகு 1765ல் ராஜாஹகுமத்ராவ் என்பவன் வசம் குத்தகைக்கு விடப்பட்டது.

இந்தக்காலங்களில் தெற்கத்திச் சீமைகளில் பெரும் சச்சரவு எழுந்தது. பாளையங்களுக்கிடையே அடிக்கடி கொள்ளைகளும், போர்களும் நிகழ்ந்துவகொண்டிருந்ததால் குடிமக்கள் பயிர்த்தொழில் மறந்தனர்.
ஆங்கிலேயருக்கு வரிப்பணம் வசூலாகவில்லை.
பாளையக்காரர்களை வழிக்குக் கொண்டு வர முடிவெடுத்தனர்.

மேற்குப் பாளையங்களின் தலைவன் பூழித்தேவர், கிழக்குப் பாளையங்களின் தலைவன் ஜெகவீரபாண்டியன் இருவரையும் வீழ்த்தினால் மற்ற பாளையங்கள் தாமாக வழிக்கு வரும் என்ற பழைய திட்டத்தையே தேர்ந்தெடுத்தனர்.

மேஜர் பிளிண்ட் என்பவன் தலைமையில் ஒரு பெரும் படை பாஞ்சாலங்குறிச்சிக்குப் படையெடுத்தது.
ஜெகவீரபாண்டிய கட்டப்பொம்மனை பெரிய அடியக்காரனாக நினைத்து படைதிரட்டி வந்த பிளின்ட்க்கு செம பல்ப் கிடைத்தது.
சமாதனமாகப் போவதற்கு ஜெகவீர பாண்டியனிடமிருந்து தூது வந்தது.
அவனின் தில்லாலங்கடி வேலைகளை ஏற்கனவே நன்கு அறிந்திருந்த பிளின்ட் சமாதானம் செய்ய வந்த ஜெகவீர பாண்டியனின் கோரிக்கையை நிராகரித்து அவனைக் கைது செய்வதில் உறுதியாக இருந்தான்.
ஜெகவீரபாண்டியன் சரணடைய தயாராக இல்லை.
தாக்கிப்பிடிக்க உத்தரவிட்டான் பிளின்ட்.

ஜெகவீரபாண்டியன் இரவோடிரவாக கோட்டையைவிட்டு தப்பியோடி தூத்துக்குடியிலிருந்த டச்சுக்காரர்களிடம் அடைக்கலமானான்.
ஜெகவீரபாண்டியன் ஓடி ஒளிந்த பின் கிழக்குப் பாளையங்கள் தாமாக மண்டியிட்டன.
பிறகு ஆங்கிலேயரின் கவனம் மேற்குப் பாளையங்களின் தலைவன் பூழித்தேவர் பக்கம் திரும்பியது!

1767மே 13ல் கர்னல் டொனால்டு கேம்பல் என்பவன் தலைமையில் ஒரு பெரும் பீரங்கிப்படை பூலித்தேவரின் வாசுதேவநல்லூர்க் கோட்டையை தாக்கின.
பீரங்கிக் குண்டுகள் தாக்கி ஏற்பட்ட விரிசரல்களை பூழியின் வீரர்கள் பனைநாரும் பச்சை மண்ணும் கொண்டு அப்போதைக்கப்போது அடைத்தனர்.
பனைநாரும் பச்சை மண்ணும் தீர்ந்த பிறகு மறத்தமிழர்கள் தங்கள் உடல்களாலேயே மறைத்து நின்று வீர மரனம் அடைந்தனர்.
தமிழன்னை பெற்றெடுத்த ய இந்திய சுதந்திரப் போரின் முதல் மாவீரன் பூலித்தேவன் அந்த மண்ணிலே வீரகாவியமானான்.

தூத்துக்குடியில் டச்சுக்காரர்களிடம் அடைக்கலமாகி இருந்த ஜெகவீர பாண்டியனுக்கு இயற்கை வேறு விதத்தில் ஆப்பு வைத்தது.
டச்சுக்காரர்களும் ஆங்கிலேயரும் தங்கள் பகையை மறந்து தற்காலிகமாக ஒன்றுசேர முடிவெடுத்தனர்.
பீதியான ஜெகவீர பாண்டியன் தூத்துக்குடியை விட்டு ஓடி ராமநாதபுர சேதுபதியிடம் தஞ்சமடைந்தான்.

ஜெகவீர பாண்டியன் திருநெல்வேலிக்குள் நுழைந்தால் அவனைக் கைது செய்து ஆங்கிலேயரிடம் ஒப்படைக்க ஹகுமத்ராவ் உத்தரவிட்டிருந்தான்.
திருநெல்வேலி இருந்த பக்கம் தலைவைத்து உறங்குவதைக் கூட மறந்தான் ஜெகவீர பாண்டியன்.

இதையடுத்து திருநெல்வேலியை குத்தகைக்கு எடுத்திருந்த ராஜா ஹகுமத்ராவ் ஜெகவீர பாண்டியனின் உறவினன் ஒருவனைப் பிடித்து பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் தலைவனாக்கினான்.
சிறிது காலத்தில் ஆங்கிலேயர் ராஜா ஹகுமத்ராவை குத்தகையில் இருந்து நீக்கி விட்டு சையது முகமதுகான் என்பவனிடம் குத்தகையை ஒப்படைத்தது.
மேலும் இச்சமயத்தில் மைசூரிலும், வடநாட்டிலும் ஏற்பட்ட கலகங்களை சரிக்கட்ட ஆங்கில நிர்வாகம் விரும்பியது.
இன்னும் சிறிது காலத்திற்கு அவர்கள் திருநெல்வேலிப் பக்கம் திரும்பிப் பார்க்க மாட்டார்கள் என்பதை உணர்ந்த ஜெகவீரபாண்டியனுக்கு புதுத்தெம்பு பிறந்தது.

தன்னுடன் மிச்சமிருந்த தெலுங்குப் படைகளுடன் பாஞ்சாலங்குறிச்சி புறப்பட்டான்.
அங்கு பதவியிலிருந்த தன் உறவினனை போட்டுத்தள்ளி விட்டு அரியனை ஏறினான்.
அதே வேளை வேறொரு காரியமும் செய்தான்.
திருநெல்வேலியை குத்தகைக்கு எடுத்திருந்த சையது முகமதுகான் காலில் விழுந்தான்.
வேன்டிய வெகுமதிகளை அளித்து அவனைக் குளிர்வித்தான்.
தான் இனிமேல் என்றென்றும் ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருப்பதாக வாக்களித்தான்.

ஆனால் பரம்பரை குரங்குப்புத்தி போகவில்லை.
ஆங்கிலேயரை வீழ்த்த உதவுவதாக வாக்குக்கொடுத்து டச்சுக்காரர்களிடம் ரகசிய தொடர்பு கொண்டான்.
அவர்கள் கொடுத்த பணத்தைக் கொண்டு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை வலுமிக்கதாக கட்டிக் கொண்டான்.
படைபலத்தைப் பெருக்கினான்.
அந்த மமதையில் பக்கத்துப் பாளையங்களிடம் காவல் பணம் கேட்கத் துவங்கினான்.
மறுத்த பாளையங்களை துணிந்து கொள்ளையடித்தான்.

ஜெகவீர பாண்டியன் டச்சுக்காரர்களிடம் நெருக்கமான விடயம் ஆங்கிலேயர் காதுக்குப் போனது.
கடுப்பான அவர்கள் ஜெகவீர பாண்டியனை பிதுக்கி எடுக்க முடிவெடுத்தனர்.
கர்னல் புல்லாட்டான் என்பவன் தலைமையில் பாஞ்சாலங்குறிச்சியை தரை மட்டமாக்க ஒரு பெரும் ராணுவம் முற்றுகையிட்டது.

இதையறியாத ஜெகவீர பாண்டியன் அந்த நேரத்தில் சொக்கம்பட்டி எனும் ஒரு தமிழர் பாளையத்தைக் கொள்ளையடிக்கும் அரும்பெரும் பணிக்காக சென்றிருந்தான்.
தலைவன் இல்லாத பாஞ்சாலங்குறிச்சியின் வீரர்கள் கோட்டைக் கதவை இறுகச் சாத்திக் கொண்டனர்.
புல்லர்ட்டன் தாக்க உத்தரவிட்டான்.

தொடக்கத்தில் வடக்கு மூலையிலிருந்த கொத்தளத்தை பீரங்கியால் தாக்கினான்.
பிறகு பின்பக்கம் இருந்த சுரங்கத்தையும் தாக்கினான்.
பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைச் சுற்றி அகழி எதுவும் கிடையாது.
இலந்தை முள்ளைத்தான் வேலியாகப் பரப்பி வைத்திருந்தனர்.
இலந்தை முள்வேலி நெருப்புக்கு இரையானது.
ஆங்கிலேயர் கோட்டையை நெருங்கித் தாக்கினர்.

ஒருபக்கத்துச் சுவர் முதலில் விழுந்தது.
சிறிது நேரத்தில் மறுபுறமும் விழுந்தது.
ஆங்கிலேயர்கள் உள்ளே புகுந்தனர்.
கிலியடைந்த பாஞ்சாலங்குறிச்சி ‘வீரர்கள்’ கோட்டையின் கிழக்கு வாசல் வழியாக ஓடினர்.
திரும்பி வரும் வழியில் தகவலறிந்த ஜெகவீரபாண்டியன் வந்த வழியே ஓடினான். செவல.. தாவுடா.. தாவு!

கோட்டை சோதனையிடப் பட்டது.
கோட்டைக்குள்ளே டச்சுக்காரர்களிடம் இருந்து பெறப்பட்ட ஏராளமான ஆயுதங்களும், பீரங்கிகளும் கைப்பற்ற பட்டன.
கஜானாவிலிருந்து நாற்பதனாயிரம் டச்சு வராகன்கள் சிக்கின.
கோட்டைக்குள் அகப்பட்ட அத்தனை பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுள் ஜெகவீரபாண்டிய கட்டப்பொம்மனின் மகளும் ஒருத்தி!
அடேய் ஓடுகாலிப் பொம்மா..
பெத்த பிள்ளையையும் விட்டுவிட்டா ஓடினாய்? பிரமாதம்.

எல்லாவற்றிற்கும் மேலாக டச்சுக்காரர்களும் ஜெகவீரபாண்டிய கட்டப்பொம்மனும் செய்துகொண்ட உடன்படிக்கையின் மூலப்பத்திரம் சிக்கியது.
அதன் பிரதி எழும்பூர் ஆவணக்காப்பகத்தில் இன்றும் உள்ளது.

சொக்கம்பட்டி ‘வேட்டை’க்குப் போன நேரத்தில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்குள் ஓட்டையைப் போட்டு புல்லார்ட்டன் ஆட்டையைப் போட்டதை அடுத்து ஜெகவீர பாண்டிய கட்டப்பொம்மன் எடுத்த ஓட்டம் சிவகிரிப் பாளையத்தில்தான் வந்து நின்றது.

சிவகிரிப்பாளையத்திற்கு அதிகாரியாக ஆங்கிலேயர்களால் நியமிக்கப் பட்டிருந்த கேப்டன் கிரகாம்பெல் என்பவன் படுகொலை செய்யப்பட்டிருந்தான்.
எனவே சிவகிரிக்கும் ஆங்கிலேயருக்கும் ஆகாது.
‘எதிரியின் எதிரி நன்பன்’ எனும் சித்தாந்தத்திற்கு ஏற்ப டச்சுக்காரர்கள் சிவகிரிப் பாளையத்திற்கு நிறைய அளவில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் முதலிய உதவிகளை அளித்திருந்தனர்.
அந்தச் சிவகிரிப் பாளையத்தில்தான் ஜெகவீரபாண்டியன் அடைக்கலமாகி இருந்தான்.

ஜெகவீர பாண்டிய கட்டப்பொம்மன் மீது அப்படி என்ன பாசமோ புல்லார்டானுக்கு.
சிவகிரிப் பாளையத்தையும் முற்றுகை இட்டான்.
பூவோடு சேர்ந்த நாரும் நாறிய கதையாக ஜெகவீர பாண்டியனுடன் சேர்ந்து சிவகிரிப் பாளையக்காரர்களும் சிவகிரியை கைவிட்டு விட்டு ஓடி கோம்பை வந்தனர்.

கோம்பையில் ஒரு பெரிய காடு.
காட்டைச் சுற்றி முள்வேலி.
புல்லார்ட்டன் விடவில்லை. அங்கும் முற்றுகையிட்டான்.
பாளையக்காரர்கள் முதலில் சமாதானமாகப் போவதற்கு முயற்சி எடுத்தனர்.
சமாதானப் புறாக்களை நெய்போட்டு பொன்னிறமாக நன்கு வறுத்துச் சாப்பிட்டான் புல்லார்ட்டன். போர் வெடித்தது.

கடுமையான தாக்குதலுக்குப் பிறகு காட்டின் பெரும்பகுதி புல்லார்ட்டன் வசமானது.
அந்தச் சமயத்தில் சற்றும் எதிர்பாராமல் ஒரு தகவல் வந்தது.
திடீரென தின்டுக்கல் பகுதியில் நிகழ்ந்த மைசூர் மன்னனின் படையெடுப்பை சமாளிக்க வேண்டியிருப்பதால் உடனே திரும்பி வருமாறு ஆங்கிலேயர் உத்தரவு அனுப்பியிருந்தனர்.

கதைமுடிக்கும் நேரத்திலா இப்படி ஒரு உத்தரவு வரவேண்டும்?
கம்பெனியின் உத்தரவை மீற முடியாது.
வேறு வழியில்லை.
சிவகிரியானையும் ஜெகவீரபாண்டியனையும் நேரில் அழைத்தான். “நீங்கள் இருவரும் உடனே பணிந்து கப்பத்தொகை முழுவதையும் கட்ட வேண்டும்.
அப்படிக் கட்டாவிட்டால் நீங்கள் எங்கிருந்தாலும் தேடிப்பிடித்து அழிப்பேன் ” என்றான். இருவருக்கும் அந்த டீலிங் பிடித்திருந்தது.

ஒவ்வொருவரும் தத்தமது கப்பப் பாக்கியாக முப்பதாயிரம் சக்கரங்களை செலுத்தினர்.
பதினைந்தாயிரம் வராகன்களைக் கொடுத்து பழைய கோட்டைகளைத் திரும்பப் பெற்றனர்.
பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் கைது செய்து வைக்கப் பட்டிருந்த ஜெகவீர பாண்டியனின் மகளும் உறவினரும் விடுவிக்கப் பட்டனர்.

அன்றுமுதல் ஆங்கிலேயரின் பெட்டிப்பாம்பாக அடங்கிப் போனான் ஜெகவீர பாண்டிய கட்டப்பொம்மன்.
அவ்வப்போது அவர்கள் காலால் இட்ட வேலைகளை தன் தலையால் செய்து காட்டி விசுவாசத்தை மெருகேற்றிக் கொண்டான்.
டச்சுக்காரனை நம்பி யார் தெருத்தெருவாக ஓடி ஒளிவது?
போதுமடா சாமி!

அதாவது, அவனின் விசுவாசம் எத்தகையது தெரியுமா?
மீண்டும் ஒருமுறை சிவகிரிப் பாளையத்திற்கும் ஆங்கிலேயருக்கும் தகராறு ஏற்பட்டது.
ஆங்கிலேயர் சிவகிரி மீது படையெடுத்தனர்.
ஜெகவீர பாண்டியனும் சேர்ந்து கொண்டு சிவகிரி மீது படையெடுத்தான்.
சிவகிரி பாளையம் ஜெகவீர பாண்டியனுக்கு எத்தகைய உதவிகளை செய்து வந்தது என்பதை ஏற்கனவே அறிவோம்.
இத்தகைய செய் நன்றி மறவா பேராண்மை கொண்ட பேராளனை வரலாற்றில் எங்கும் காண இயலாது!

ஜெகவீர பாண்டிய கட்டப் பொம்மனின் அலும்பு நாளுக்கு நாள் கூடியது.
ஆங்கிலேயரை எதிர்க்கும் பாளையங்களை எல்லாம் தாமே முன்னின்று எதிர்ப்பதாகக் கூறி, மிதிவண்டி இடைவெளியில் பக்கத்துப் பாளையங்களைக் கொள்ளையடிக்கத் துவங்கினான்.

அவனின் இத்தகைய கொள்ளைச் சம்பவங்களில் குறிப்பிடத்தக்க சம்பவம் அருங்குளம், சுப்லாபுரக் கொலை, கொள்ளை!
இரண்டு கிராமங்களையும் சூரையாடி தன் வசப்படுத்திக் கொண்டான்.
இந்த இரண்டு கிராமங்களும் எட்டயபுரத்துக்குச் சொந்தமானது.

எட்டயபுரத்தான் ஆங்கிலேயரிடம் முறையிட்டுப் பார்த்தான்.
ஆங்கிலேயரின் அல்லக்கையாக மாறியிருந்த ஜெகவீர பாண்டியனை அவர்கள் கண்டிக்க முன்வரவில்லை.
கப்பத்தை ஒழுங்காகச் செலுத்திக் கொண்டிருக்கிறான்.
தவிர கப்பத்தொகை தராத பாளையங்களிடம் இருந்து அவனே வசூலித்துக் கொடுக்கிறான்.
வீணாக கண்டித்து ஏன் அவன் உற்சாகத்தைக் குறைக்க வேண்டும்?
தவிர, நாம் வந்தது வரிவசூலுக்காக.
நீதி நேர்மையை நெட்டி நிமிர்த்த அல்ல. நோக்கம்தான் பெரிது.

1790 பிப்ரவரி 2ல் ஜெகவீரபாண்டியன் காலமானான்.
அப்போது ஆங்கிலேய அரசு ஒரு அனுதாபச் செய்தி வெளியிட்டது.
அது என்ன தெரியுமா?

“ஆங்கில ஆட்சி ஒரு விசுவாசமுள்ள ஊழியரை இழந்து நிற்கிறது!”.
இதுதான் அந்தச் செய்தி!