Showing posts with label நாயக்கர். Show all posts
Showing posts with label நாயக்கர். Show all posts

Monday, 12 May 2025

கள்ளழகர் கதை ஒரு பொய்க்கதை

கள்ளழகர் கதை ஒரு பொய்க்கதை
26.04.2017

திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்,

மாசி மாதத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடக்கும்
இது மாசித் திருவிழா.
மீனாட்சியம்மனும் சுந்தரேஸ்வரரும் தம்பதிகளாக ஊர்வலம் வரும் தெருக்கள் இன்றும் மாசிவீதிகள் என்று அழைக்கப்படுகின்றன.

இரண்டு மாதம் கழித்து,
சித்திரை மாதத்தில் அழகர் ஆற்றில் இறங்குவார்.
அதுவும் மதுரையில் அல்ல தேனூர் அருகே.

என்றால் கள்ளழகர், மீனாட்சி கல்யாணத்தைப் பார்க்க வருகிறார் என்ற கதை பொய்தானே?!

திருமலை நாயக்கர் இந்த இரண்டு விழாவையும் ஒன்றாக்கி சித்திரையில் கொண்டாடுமாறு மாற்றியமைத்துள்ளார்.

மீனாட்சி அழகரின் தங்கை என்பதற்கு எனக்குத் தெரிந்தவரை எந்த சான்றும் கிடையாது.

இதேபோல இராசராசனின் சதய திருவிழாவும் மாதம் மாற்றப்பட்டுள்ளது.

கடவுள்கள் வரலாறை ஆள்பவன் நினைத்தால் மாற்றமுடிகிறதே?!

வந்தேறிகள் இப்படித்தான் ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழர்களின் ஒவ்வொரு விழாவையும் குழப்பி  வைத்துள்ளனர்.

Wednesday, 28 August 2024

தேவேந்திரர் தாழ்ந்தது எவ்வாறு

தேவேந்திரர் தாழ்ந்தது எவ்வாறு

  "தெலுங்கர் ஆட்சியில் தமிழர் நிலை" (தேதி:16.08.2016) பதிவின் ஒரு பகுதி

 //நாயக்க ஆட்சிமுறை பாளையக்காரர்கள் மூலம் மிக மோசமான சுரண்டலை குடிமக்களிடம் நடத்தியது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டோர் வேளாண்குடிகளான பள்ளர்களே. பள்ளு இலக்கியங்கள் அன்றைய பள்ளர்களின் வாழ்க்கையை பதிவு செய்துள்ளன.

பள்ளர் குலப் பெண்களும் ஆண்களும் 'கொத்தடிமைகளாக'க் கூட குறிக்கப்பட்டுள்ளனர்.
(திருமலை முருகன் பள்ளு 13:1-6).

விதைப்பு முதல் அறுவடை வரை செய்த பள்ளர்களுக்கு கூலியாக எதுவுமே தரப்படவில்லை. இவர்களுக்கு கிடைத்த பங்கு குடிசுதந்திரம், பிள்ளையாரடி, அரிநெல் என்றழைக்கப்பட்டது.

ஆனால் இவை பள்ளர்களின் தேவைக்குப் போதவில்லை என்றும் இவையும் சரியாகக் கொடுக்கப்படவில்லை என்றும் தெரியவருகிறது.

இதனால் பள்ளர்கள் மிக வறுமையில் வாடினர்.
(வையாபுரிப்பள்ளு 203-204; 
திருமலை முருகன் பள்ளு 158; 
மாந்தைப்பள் 89)

தன் கூலிக்கென ஒதுக்கிய நிலம் நாள் முழுவதும் ஒரு பன்றி மூக்கினால் கிளறும் அளவினது என்றும் அதில் தினமும் முழு கதிர் விளைந்தாலும் தனக்குப் பத்தாது என்றும் முக்கூடற் பள்ளுவில் (67) ஒரு பள்ளர் கூறுமாறு வருகிறது.

பட்பிரந்தத்தில் (82) நீண்ட கால்களையுடைய மாடன் என்பவன் ஒரே அடியால் அளந்துவிடும் அளவில் தனக்கான நிலம் இருந்ததாகவும் ஆனால் அதை உழவும் கலப்பை, மாடுகள், விதை போன்றவை தன்னிடம் இல்லை என்றும் ஒரு பள்ளர் கூறுவதாக வருகிறது.

செட்டியார்களிடம் வாங்கிய கடனுக்காக தனக்கான நெல்லிலிருந்து பள்ளர்கள் அளந்து கொடுத்ததை பட்பிரபந்தம் (139) கூறுகிறது.
மாடுகளை கொடுத்ததை வையாபுரிப் பள்ளு(115:1-3) கூறுகிறது.

பாளையக்காரர்களுக்கு கீழ் இருந்தோர் பண்ணை விசாரிப்பான்கள், இவர்கள்தான் பண்ணை என்ற பெயரில் நிலத்தைக் கையில் வைத்துக்கொண்டு மக்களை வேலைவாங்கினர் (இவர்கள் கணக்கர், மணியம், முறையம்பிள்ளை எனவும் அழைக்கப்பட்டுள்ளனர்).
இவர்களை திருடன், கைக்கூலி, வம்புக்காரன் என்றெல்லாம் திருமலை முருகன்பள்ளு(112) வெறுப்புடன் கூறுகிறது.

நாயக்க அரசின் வருமானம் நான்கில் ஒரு பங்கு நில விளைச்சல் மூலமே கிடைத்துள்ளது (டி.வி.மகாலிங்கம், Administration and Social life under Vijayanagar, பக்.48-50).

இது நிலவுடைமைக்காரர்கள் மூலம் பள்ளர்களிடமிருந்து சுரண்டி எடுக்கப்பட்டுள்ளது. நிலவுடைமை அதிகாரிகளான கர்ணம், மணியக்காரர், தலையாரி ஆகியோர் பெரும்பாலும் தெலுங்கு பேசும் பிராமணராகவோ, ரெட்டிகளாகவோ, நாயுடுகளாகவோ இருந்தனர்.
சிலர் தமிழ்பேசும் மறவர், கள்ளர் வகுப்பினராக இருந்தனர் (Burton Stein, Peasent state an society in medieval south india, p.417).

கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது (கண்.683-699) ஏராளமான செல்வந்தர்களைக் குறிப்பிடுகிறது அவர்கள் பெரும்பாலும் தெலுங்கு நாயக்கர்கள்.//

 //பள்ளு இலக்கியங்கள் மழையை எதிர்பார்த்து பள்ளர்கள் தவிப்புடன் இருந்ததை பதிவு செய்துள்ளன. 
அரசின் பாராமுகத்தால் நலிந்த வேளாண்மை மக்களைப் பஞ்சத்தில் தள்ளியது.
1622 முதல் 1770 வரை பதினான்கு முறை பஞ்சம் ஏற்பட்டு பலர் இறந்தனர்!! பலர் இடம்பெயர்ந்தனர்!
அரசு இவர்களுக்காக எந்த நிவாரண நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை
(தமிழக வரலாறு 1565 - 1967, கு.ராஜய்யன்).//

//அதுவரை இல்லாத வழக்கமாக மனுதர்மத்தை சட்டமாக்கி பின்பற்றவேண்டிய கட்டாயத்தை நாயக்கர்கால இலக்கியங்கள் கூறுகின்றன (திருவிளையாடற் புராணம் மதுரை.561,521; 
சேதுபதி விறலிவிடுதூது கண்.291,292;
கூடற்புராணம் 2; 
கமலாலய சிறப்பு 854-856,889; 
திருவருணைக் கலம்பகம், கண்.65:3; 
குமரேச சதகம் 12:5-6; 
திரு.முரு.பள்.,103).

நாயக்க மன்னர்கள் தங்கள் பெயருக்கு முன் 'வருணாசிரம தர்மங்கனுபாலித்த' என்ற பட்டத்தைப் போட்டுக்கொண்டனர் (ந.க.மங்களமுருகேசன், இந்திய சமுதாய வரலாறு, ப.311).

பள்ளர், பறையர், புலையர் கீழ்சாதி என்றும் (திரு.முரு.பள்.103),
தீண்டாத சாதியினர் என்றும் (ஐவர் ராசாக்கள் கதை, வரி 888-889; கந்.காத.,கண் 93-96)
கொத்தடிமைகள் என்றும் (பட்.பிர.93; மு.பள்.13:13-16),
இழிகுலத்தினர் என்றும் (கம.சிற.1-2) குறிப்பிடப்படுகின்றனர்.
பள்ளர்கள் அடிமைகளாக விற்கப்பட்டும் உள்ளனர் (கூள.விற.க.364).//

 //பண்ணைவிசாரிப்பான்கள் வேளாண்மை பெண்களை திட்டுவதும், அடிப்பதும், காமப்பசிக்கு இரையாக்குவதும் நடந்துள்ளது (மா.பள்.51; பட.பிர.105,106; திரு.முரு.பள். 152).//

மிக விரிவாக அறிய தேடுக:- தெலுங்கர் ஆட்சியில் தமிழர் நிலை வேட்டொலி

தெலுங்கர் ஆட்சியில் தமிழர் நிலை

தெலுங்கர் ஆட்சியில் தமிழர் நிலை

16.08.2016 அன்றைய பதிவு

சோழர் வீழ்ந்து பாண்டியராட்சி மீண்டும் மலர்ந்தது,  அதன் பிறகு வாரிசுரிமைப் போர்களால் பாண்டியர் வலுகுன்றிய வேளையில் துருக்கியர்களான டெல்லி சுல்தான்கள் தமிழகத்தின் மீது மூன்று முறை படையெடுத்தனர் இதனால் பாண்டிய அரசு மேலும் வலுகுன்றியது.
டெல்லி சுல்தான் ஆட்சி மதுரை வரை பரவியது.
பாண்டியர்கள் தென்தமிழ்நாட்டில் சுருங்கிக் கொண்டனர்.
இந்நிலையில் டெல்லிக்கு கட்டுப்படாமல் மதுரையை கிபி 1335 இல் தனிநாடாக அறிவித்தார் ஜலாலுதின் அஹ்ஸான்கான்.
வடக்கே சித்தூர் முதல் திருச்சிவரை சம்புவரையர்களும் நடுவில் திருச்சி முதல் ராமேஸ்வரம் வரை மதுரை சுல்தான்களும் 
ராமேஸ்வரம் முதல் குமரிமுனை வரை தென்காசிப் பாண்டியர்களும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். குழப்பமான இந்த காலத்தில் தெலுங்கர் கன்னடரையும் சேர்த்துக்கொண்டு தமிழகத்தின்மீது படையெடுத்தனர்.

 இந்த விஜயநகர படையெடுப்பு  மதுரையில் (40 ஆண்டுகளாக) சுல்தான்கள் (இசுலாமியர்) நடத்திய கொடுமைகளை அறிந்து இந்து மதத்தைக் காக்க நடந்ததாக கூறப்படுகிறது.
தெலுங்கு விஜயநகர பேரரசு குமாரகம்பணன் தலைமையில் முதலில் வடக்கே சம்புவரையர்களை கிபி 1362 ம் ஆண்டு வாக்கில் வென்றது.
பிறகு கிபி 1371 ல் மதுரை சுல்தான்களை வென்றது.
பிறகு 1535 வாக்கில் பாண்டியர்களையும் வென்று உச்சநிலையை எய்தியது.
குமாரகம்பனனின் மனைவி எழுதிய 'மதுராவிஜயம்' துருக்கர் ஆட்சி செய்த கொடுமைகளாக கூறுவன,
*கோயில் வழிபாடு நிறுத்தப்பட்டு, நகரத்தில் மிருதங்க ஒலிகள் நின்று நரிகள் ஊளையிட்டவனாம். 
*யாகங்களுக்கும் மந்திரங்களுக்கும் பதிலாக மாமிசம் சுடுவதும் துருக்க குரலொலிகளும் கேட்டனவாம்.
*மதுரைப் புறநகர தென்னந்தோப்புகள் வெட்டப்பட்டு கழுமரங்கள் நடப்பட்டு அதில் மனித மண்டையோடுகள் தோரணமாகக் கட்டப்படடனவாம். *துலுக்கர் வெட்டிக் குவித்த பசுக்களின் குருதியால் தாமிரபரணி சிவந்து ஓடியதாம்.
*வேதமும் நீதியும் மறைந்து தர்மமும் கருணையும் சிறிதுமின்றி போனதாம்.
*அபாக்கியர்களான திராவிடர்களின் நெற்றியில் ஏக்கமே எழுதப்பட்டுள்ளதாம்.
இதையே நாயக்க வம்சாவளி இலக்கியங்களும் கூறுகின்றன.
ஆனால் கங்காதேவியின் இந்த வர்ணனை முழுக்க உண்மையில்லை என்கிறார் ஏ.கிருஷ்ணசாமி (The Tamil country under vijayanagar, p.99) இந்த அளவு கொடுமைகள் அன்று நடந்ததாக வேறு எந்த சான்றும் இல்லை. ஆனாலும் மதசடங்குகளுக்கு இன்னல்கள் இருந்துள்ளன.
மதுரையில் 1335-1378 காலகட்டத்தில் நடந்த வேற்றின இசுலாமியர் ஆட்சி தமிழக மக்களுக்கு பிடித்ததாக இல்லை. 
இது நாயக்கராட்சி தமிழகத்தில் நுழைய வசதியாக அமைந்தது.
நாயக்கராட்சி முழுக்க இசுலாமியர்களுக்கு எதிரானதாக இல்லை.
நாயக்கராட்சியில் இசுலாமியர்களும் பங்குபெற்றிருந்தனர் (ராமைய்யன் அம்மானை பக் 20, 22).
நாயக்கராட்சி தமிழகத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியது என்று அக்கால இலக்கியங்களின் மூலம் அறிய இப்பதிவு முயலும்.
நாயக்கர் கால தமிழ் இலக்கியங்கள் எதுவுமே நாயக்க மன்னர்களைப் பாராட்டவில்லை, 
சுற்றிவளைத்து, பாராட்டுவது போல அறிவுரைதான் கூறியுள்ளன.
அதாவது மன்னருக்குண்டான தகுதிகளைக் கூறி அவ்வாறு இருப்பவன் சிறந்த மன்னன் என்றுதான் கூறியுள்ளன.
நாயக்க மன்னர்கள் சுகபோகமாக வாழ்ந்தார்களே ஒழிய மக்களுக்கும் அவர்களுக்கும் நேரடித் தொடர்பு இருந்திருக்கவில்லை.
மன்னருக்கும் அவரது தளபதியான தளவாய்க்கும் கட்டுப்பட்ட பாளையக்காரர்களே அனைத்தும் செய்தனர்.
இராமைய்யன் அம்மானை பக்கம் 23-26 ல்  திருமலை நாயக்கரின் கீழ்
 36 தெலுங்கு பாளையக்காரர்களும், 
12 இசுலாமியர்களும், 
24 தமிழ் பாளையக்காரர்கள்
 செயல்பட்டதாகவும் கூறுகிறது.
(இந்த 24 தமிழரில் 8 தமிழர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வ பாளையக்காரர்கள் மற்றவர்கள் பாளையக்காரர்களாகவோ அல்லது பாளையக்காரர் போல செயல்பட்டவராகவோ இருந்தனர். இசுலாமியரின் பெயர்களை வைத்துப் பார்க்கும்போது 12ல் இருவர் தமிழராகத் தெரிகின்றனர்).

தெலுங்கர்களுக்கு அடுத்து பாளையக்காரர்களாக இருந்த தமிழர்களில் தென் தமிழகத்தில் மறவர்களும், கொங்குபகுதியில் கவுண்டர்களும், திருச்சியில் மழவராயர்களும், ராமநாதபுரத்தில் அம்பலக்காரர்களும் இருந்துள்ளனர்.

நாயக்க ஆட்சிமுறை பாளையக்காரர்கள் மூலம் மிக மோசமான சுரண்டலை குடிமக்களிடம் நடத்தியது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டோர் வேளாண்குடிகளான பள்ளர்களே. பள்ளு இலக்கியங்கள் அன்றைய பள்ளர்களின் வாழ்க்கையை பதிவு செய்துள்ளன.

பள்ளர் குலப் பெண்களும் ஆண்களும் 'கொத்தடிமைகளாக'க் கூட குறிக்கப்பட்டுள்ளனர்.
(திருமலை முருகன் பள்ளு 13:1-6).

விதைப்பு முதல் அறுவடை வரை செய்த பள்ளர்களுக்கு கூலியாக எதுவுமே தரப்படவில்லை. இவர்களுக்கு கிடைத்த பங்கு குடிசுதந்திரம், பிள்ளையாரடி, அரிநெல் என்றழைக்கப்பட்டது.

ஆனால் இவை பள்ளர்களின் தேவைக்குப் போதவில்லை என்றும் இவையும் சரியாகக் கொடுக்கப்படவில்லை என்றும் தெரியவருகிறது.

இதனால் பள்ளர்கள் மிக வறுமையில் வாடினர்.
(வையாபுரிப்பள்ளு 203-204; 
திருமலை முருகன் பள்ளு 158; 
மாந்தைப்பள் 89)

தன் கூலிக்கென ஒதுக்கிய நிலம் நாள் முழுவதும் ஒரு பன்றி மூக்கினால் கிளறும் அளவினது என்றும் அதில் தினமும் முழு கதிர் விளைந்தாலும் தனக்குப் பத்தாது என்றும் முக்கூடற் பள்ளுவில் (67) ஒரு பள்ளர் கூறுமாறு வருகிறது.

பட்பிரந்தத்தில் (82) நீண்ட கால்களையுடைய மாடன் என்பவன் ஒரே அடியால் அளந்துவிடும் அளவில் தனக்கான நிலம் இருந்ததாகவும் ஆனால் அதை உழவும் கலப்பை, மாடுகள், விதை போன்றவை தன்னிடம் இல்லை என்றும் ஒரு பள்ளர் கூறுவதாக வருகிறது.

செட்டியார்களிடம் வாங்கிய கடனுக்காக தனக்கான நெல்லிலிருந்து பள்ளர்கள் அளந்து கொடுத்ததை பட்பிரபந்தம் (139) கூறுகிறது.
மாடுகளை கொடுத்ததை வையாபுரிப் பள்ளு(115:1-3) கூறுகிறது.

பாளையக்காரர்களுக்கு கீழ் இருந்தோர் பண்ணை விசாரிப்பான்கள், இவர்கள்தான் பண்ணை என்ற பெயரில் நிலத்தைக் கையில் வைத்துக்கொண்டு மக்களை வேலைவாங்கினர் (இவர்கள் கணக்கர், மணியம், முறையம்பிள்ளை எனவும் அழைக்கப்பட்டுள்ளனர்).
இவர்களை திருடன், கைக்கூலி, வம்புக்காரன் என்றெல்லாம் திருமலை முருகன்பள்ளு(112) வெறுப்புடன் கூறுகிறது.

நாயக்க அரசின் வருமானம் நான்கில் ஒரு பங்கு நில விளைச்சல் மூலமே கிடைத்துள்ளது (டி.வி.மகாலிங்கம், Administration and Social life under Vijayanagar, பக்.48-50).

இது நிலவுடைமைக்காரர்கள் மூலம் பள்ளர்களிடமிருந்து சுரண்டி எடுக்கப்பட்டுள்ளது. நிலவுடைமை அதிகாரிகளான கர்ணம், மணியக்காரர், தலையாரி ஆகியோர் பெரும்பாலும் தெலுங்கு பேசும் பிராமணராகவோ, ரெட்டிகளாகவோ, நாயுடுகளாகவோ இருந்தனர்.
சிலர் தமிழ்பேசும் மறவர், கள்ளர் வகுப்பினராக இருந்தனர் (Burton Stein, Peasent state an society in medieval south india, p.417).

கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது (கண்.683-699) ஏராளமான செல்வந்தர்களைக் குறிப்பிடுகிறது அவர்கள் பெரும்பாலும் தெலுங்கு நாயக்கர்கள்.

சதகநூல்கள் அந்தணர்களையும் வெள்ளாளர்களையும் புகழும் அதேவேளையில் வணிகர்களை வெறுப்புடன் பார்க்கின்றன.
ஏனென்றால் நாயக்கராட்சி வணிகத்தின் மூலம் பொருளீட்டுவதில் மட்டுமே குறியாக இருந்துள்ளது. சங்ககால தமிழ் இலக்கியங்கள் வீரத்தையும் காதலையும் பேசுவது போல நாயக்கர்கால சதகநூல்கள் செல்வம் சேர்ப்பதைப் பற்றியே முக்கியமாகப் பேசுகின்றன (அறப்பளீசுர சதகம்,37; கயிலாசநாத சதகம்,10, தண்டையலார் சதகம்,97,28).

ஆங்கிலேய ஆட்சிதான் நிலவுடைமைச் சமூகத்தை உருவாக்கி அதுவரை இருந்த கிராம கூட்டு உற்பத்தியை சிதைத்து அடிமட்டம் வரை சுரண்டியெடுத்ததாக பலரும் கூறுவர்.
ஆனால் தமிழகத்தில் நாயக்கராட்சி ஆயங்கார முறை மூலம் அதை முன்பே செய்துள்ளது.
அதாவது மக்களை ஆள்வது நோக்கமில்லை மக்களை முடிந்த அளவு சுரண்டுவதுதான் நோக்கம்.

சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது போல நாயக்கர் காலத்தில் அணைகள் எதுவும் கட்டப்படவில்லை. குளங்கள்தான் பல வெட்டப்பட்டுள்ளன.
அதுவும் பண்ணை விசாரிப்பான்களாலும் பாளையக்காரர்களாலுமே பொறுப்பெடுத்து கட்டப்பட்டுள்ளன.

மன்னர்கள் வரி வாங்குவதைத் தவிர எதுவுமே செய்யவில்லை.
மக்களுக்காக எந்த பெரிய திட்டமும் மேல்மட்ட அரசினால் செயல்படுத்தப் படவேயில்லை.

பாளையக்காரர்களே சிறிய அளவிலான பொதுத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்
(சங்கரலிங்க உலா கண்.289-301; 
மான்விடுதூது கன்.153-163; 
கமலாயச் சிறப்பு 51,101; 
குற்றாலக் குறவஞ்சி 93,131; 
புலவராற்றுப்படை கண்.315-321; 
அரிச்சந்திர புராணம் -நகர்சிறப்பு-2; 
கூடற்புராணம் 86).

பொதுத்திட்டங்களுக்கும் மக்களிடமே விளைச்சலில் இருந்து தனியாக வசூலித்துள்ளனர் (முக்கூடற்பள்ளு 139; 
மாந்தைப்பள் 88; 
வையாபுரிப் பள்ளு 91,199; 
பட்பிரபந்தம் 25,139; 
சமுத்திரவிலாசம் 2; 
கூளப்ப நாயக்கன் விறலிவிடுதூது க.957).

இதனால் பள்ளு இலக்கியங்கள் மழையை எதிர்பார்த்து பள்ளர்கள் தவிப்புடன் இருந்ததை பதிவு செய்துள்ளன. 
அரசின் பாராமுகத்தால் நலிந்த வேளாண்மை மக்களைப் பஞ்சத்தில் தள்ளியது.

1622 முதல் 1770 வரை பதினான்கு முறை பஞ்சம் ஏற்பட்டு பலர் இறந்தனர்!! பலர் இடம்பெயர்ந்தனர்!
அரசு இவர்களுக்காக எந்த நிவாரண நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை
(தமிழக வரலாறு 1565 - 1967, கு.ராஜய்யன்).

அதாவது நாயக்கர் ஆட்சி தொடங்கிய சில ஆண்டுகளிலேயே பற்றாக்குறை ஏற்படத் தொடங்கிவிட்டது.
இதை சமாளிக்க நாயக்க மன்னர்கள் எதுவும் செய்யவில்லை.
சத்திரங்கள் பாளையக்காரர்களால் தொடங்கப்பட்டன.
(சங்கரலிங்க உலா -பின்னிணைப்பு)
உழைத்த மக்கள் உணவுக்கு கையேந்தி சத்திரத்தில் நின்றனர்.
அந்த சத்திரங்களிலும் மோசமான உணவே கிடைத்தது.

15ம் நூற்றாண்டில் வாழ்ந்த காளமேகப் புலவரும் இதனைப் பதிவுசெய்துள்ளார்.
'கல்லும் நெல்லும் கலந்த சோறு, வாடிப்போன கத்திரிக்காய், அதில் உப்பில்லை, ஈக்கள் விழுந்து கிடந்தன' என்று அவர் குறிப்பிடுகிறார்.
இன்னொரு சத்திரத்தில் மிகவும் கால தாமதமாக உணவு தயாரிக்கப் பட்டதையும் அவர் பதிவு செய்துள்ளார் (தனிப்பாடல் திரட்டு, ப.34, 67).

பள்ளர்கள் மட்டுமன்றி அனைத்து பிரிவினரும் பாதிக்கப்பட்டனர். புலவர், சோதிடர், கொல்லர், ஓவியக்கலைஞர், ஆசிரியர், குயவர், பஞ்சாங்க புரோகிதர் முதலியவர்கள் வறுமைக்குரியவர்கள் என்று தனிப்பாடல் ஒன்று கூறுகிறது (த.தி.க., பக் 244).

வாத்தியார், குரு, கவிவாணர், மறையோர், பண்டிதர், தச்சாண்டி, தட்டான், சவரகன் (அம்பட்டையன்) போன்றவர்களை கடன் கொடுக்கக்கூடாதவர்கள் என்று கயிலாசநாதர் சதகம் (31) கூறுகிறது.

வரி தராதவர்களுக்கு போரில் தோற்றவர்களுக்கான தண்டனைகள் கொடுக்கப்பட்டன. சிறைதண்டனையும், உறுப்புகளைச் சிதைப்பதும் நடந்துள்ளன. திருமலை நாயக்கருக்குப் பணியாதவர்களின் முதுகுத் தோலை உரித்ததாகவும், முட்டி எலும்பைத் தட்டி எடுத்ததாகவும் ராமைய்யன் அம்மானை (பக் 53, 5-11) தெரிவிக்கிறது.

கண்களைத் தோண்டியெடுப்பது, காதுகளை அறுப்பது, கொதிக்கும் நெய்யில் கைவிடச்செய்வது, எண்ணெயில் நனைத்த துணியை கையில் சுற்றி தீவைப்பது, தூக்கிலிடுவது, தலையை வெட்டுவது போன்ற நாயக்கர் கால கொடூர தண்டனைகள் அக்காலத்தில் கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப வந்த பாதிரியார்கள் எழுதிய கடிதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன (R.Sathyanatha Aiyar, Tamilaham in the 17th century).

அதுவரை இல்லாத வழக்கமாக மனுதர்மத்தை சட்டமாக்கி பின்பற்றவேண்டிய கட்டாயத்தை நாயக்கர்கால இலக்கியங்கள் கூறுகின்றன (திருவிளையாடற் புராணம் மதுரை.561,521; 
சேதுபதி விறலிவிடுதூது கண்.291,292;
கூடற்புராணம் 2; 
கமலாலய சிறப்பு 854-856,889; 
திருவருணைக் கலம்பகம், கண்.65:3; 
குமரேச சதகம் 12:5-6; 
திரு.முரு.பள்.,103).

நாயக்க மன்னர்கள் தங்கள் பெயருக்கு முன் 'வருணாசிரம தர்மங்கனுபாலித்த' என்ற பட்டத்தைப் போட்டுக்கொண்டனர் (ந.க.மங்களமுருகேசன், இந்திய சமுதாய வரலாறு, ப.311).

பள்ளர், பறையர், புலையர் கீழ்சாதி என்றும் (திரு.முரு.பள்.103),
தீண்டாத சாதியினர் என்றும் (ஐவர் ராசாக்கள் கதை, வரி 888-889; கந்.காத.,கண் 93-96)
கொத்தடிமைகள் என்றும் (பட்.பிர.93; மு.பள்.13:13-16),
இழிகுலத்தினர் என்றும் (கம.சிற.1-2) குறிப்பிடப்படுகின்றனர்.
பள்ளர்கள் அடிமைகளாக விற்கப்பட்டும் உள்ளனர் (கூள.விற.க.364).

1623ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு கம்மாளரிடையேயான 5பிரிவுகள் கலக்கக்கூடாது என உத்தரவிட்டதைக் கூறுகிறது.

1705ல் மங்கம்மாள் காலத்தில் சாதி அடையாளங்களைப் பேண மானியங்கள் தரப்பட்டதை ஒரு கல்வெட்டு கூறுகிறது.
இதனை ஐரோப்பிய பாதிரிகளும் குறிப்புகளும் சான்றாக உள்ளன (R.Sathiyanatha Aiyar, 1980, p.193).

அக்காலத்தில் தமிழில் அறிமுகமான சதக நூல்களும் சாதிய முறையை ஊக்குவிப்பதாகவும் (கயிலாச சதகம் 28) சாதிப் படியே தண்டனைகள் வழங்கவேண்டியது அரசின் கடமை என்றும் (அறப்பளீகர சதகம் 11) மனுஸ்மிருதி சிந்தனையைப் பிரதிபலிக்கின்றன.

அதுவரை தோன்றாத சாதிய நூல்கள் தோன்றின. சாதிய ஏற்றத்தாழ்வுகள் காரணமாக கடைநிலையில் இருந்த பரதவர், பள்ளர், பறையர், சாணார் போன்ற சாதியினரை கிறிஸ்தவ பாதிரியார்கள் ஆதரவு காட்டி மதம் மாற்றினர்.

பெர்ணான்டஸ் என்ற பாதிரியாரால் 1592ம் ஆண்டு இயேசு சபை (Jesuits) என்ற முதல் கிறித்து மிஷனரி வீரப்ப நாயக்கன் என்ற மதுரை மன்னனின் அனுமதியுடன் தொடங்கப்பட்டது!
சேதுபதி மன்னனான சடைக்கத்தேவனை வெல்வதற்கு உதவியதற்காக ராமேசுவரம் தீவு  பறங்கியருக்கு அளிக்கப்பட்டது (ராமைய்யன் அம்மானை 8:22-23).

பிராமணர்களை வானளவு புகழ்ந்து எழுதுகின்றன நாயக்கர்கால சதக நூல்கள் (அறப்பளீசுர சதகம், 55; குமரேச சதகம்,2; கயி.சத.3).

1604ல் தமிழகம் வந்த பாதிரியார் ராபர்ட்-டி-நொபிலி வருணமுறை அரசு ஆதரவும் செல்வாக்கும் பெற்றிருந்ததாகக் பதிவுசெய்துள்ளார்.
அவர் மதுரையில் பத்தாயிரம் பிராமண மாணவர்கள் கல்வி பயின்றதாகவும், பிராமணர் தவிர யாருக்கும் உயர்கல்வி பெற உரிமை இல்லை என்றும் கூறுகிறார் (History of nayakas of madura, p.194, ஆர்.சத்தியநாதய்யர்).

ஆனால் பிராமணரல்லாதாருக்கு வெள்ளாளர் ஆதரவில் நடந்த சைவமடங்கள் கல்வி புகட்டின (Social history of tamils under vijayanagar, M.Sivanantham, p.63-64).ஆனாலும் அடித்தட்டு மக்கள் பரவலாகக் கல்வி பெற முடியாமல் இருந்தது.

கல்வியில் வடமொழி புகுந்தது (மாந்.பள்.21) சமஸ்கிருதமும் தெலுங்கும் தமது பொற்காலத்தை நாயக்கர் காலத்தில் அடைந்தன. இவ்விரு மொழிகளிலும் கலை மற்றும் இலக்கியம் வளர நாயக்கர்கள் பாடுபட்டனர் ( இதனை கு.ராஜய்யன் விரிவாக எழுதியுள்ளார்).

வடமொழிக்கும் தமிழுக்கும் சங்கங்கள் இருந்ததாக கூடற்புராணமும்(154), திருக்குற்றால மகவந்தாதியும்(10) கூறுகின்றன.

ஆரியம், கன்னடம், வடுகு (தெலுங்கு), தமிழு என நான்கு சங்கங்கள் இருந்ததாக கூளப்பநாயக்கன் விறலிவிடுதூது (கண்.188-189) கூறுகிறது.

அக்காலப் புலவர் தமிழும் தெலுங்கும் அறிந்துவைத்திருந்ததாக சேதுபதி பணவிடுதூது (க.135) கூறுகிறது.

தமிழ் மொழி வறுமைக்காலத்தில் இருந்தது. 
நாயக்க மன்னர்கள் தமிழை வெறுத்தனர் (மான்விடுதூது இணைப்பு; சுப்பிரதீபக் கவிராயர்,த.தி.,பக்.197)
நாயக்கர்காலத்தில் எங்கும் தெலுங்கே கொடிகட்டிப் பறந்தது (படிக்காசு புலவர், த.தி., பக்.12).

சிற்றிலக்கியங்கள் மட்டுமே தமிழைக் காப்பாற்றி வந்தன.
திருக்காளத்தி நாதருலா, திருக்கழுக்குன்ற உலா, திருமலையாண்டவர் குறவஞ்சி, கமலாலய அம்மன் பள்ளு ஆகிய நாயக்கர் கால சிற்றிலக்கியங்கள் நாயக்கரைப் புகழாது சோழரையும் பாண்டியரையும் புகழ்கின்றன.
நாயக்கர்களின் வைணவ மதத்திற்கு எதிராக சைவத்தைப் போற்றுகின்றன.

சதக நூல்கள் மனுதர்மத்தை அடியொற்றி பெண்களை இழிவாக சித்தரிக்கின்றன (அற.சத.35; தண்டலையார் சதகம், 85,86; குமரேச சதகம், 51).
வறுமை காரணமாக மனைவியை விற்று வாழ்க்கை நடத்திய சிலரை கயிலாசநாதர் சதகமும் (13), குமரேச சதகமும்(32) கூறுகின்றன.

நாயக்க அரசர்கள் அழகான பெண்கள் கண்ணில்பட்டால் அவளை தன் அரண்மனைக்கு கூட்டிச்செல்வதும் நடைமுறையாக இருந்துள்ளது (T.V.Mahalingam, South Indian Polity, p.63).

நாயக்கர் காலத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கம் அதிகம் இருந்தது. சேதுபதி மன்னன் சடைக்கதேவனுடன் அவனது மனைவி உடன்கட்டை ஏறினாள்.
ராமநாதபுர சேதுபதியோடு 47 பெண்கள் உடன்கட்டை ஏறினர்.
திருமலை நாயக்கனோடு 200 பெண்கள் உடன்கட்டை ஏறினர்.

பண்ணைவிசாரிப்பான்கள் வேளாண்மை பெண்களை திட்டுவதும், அடிப்பதும், காமப்பசிக்கு இரையாக்குவதும் நடந்துள்ளது (மா.பள்.51; பட.பிர.105,106; திரு.முரு.பள். 152).

பரத்தைத் தொழில் பெருகியது. பரம்பரையாக தனது மகளை வைத்து தொழில் செய்யும் தாசி குலம் தோன்றியது. தாசியின் தாய் சாராயம், மருந்து வாங்கவும் தூது செல்லவும் சில பெண்களை வைத்துக்கொண்டு (மூவரையன் விறலிவிடுதூது க.271; கூள.விற.,கண்.230-240), தன் மகளை வைத்து தொழில் செய்ததை (கும.சத.75; கூள.காத.கண்.318-319) அறியமுடிகிறது.

விறலிவிடுதூதுக்கள் பரத்தைமையால் சீரழிந்தவர்களின் நிலையைப் பதிவுசெய்யவே எழுந்தன.

மக்கள் அனைவரும் குடிக்கு அடிமையாகவும் ஒழுக்கம் தவறியும் காணப்பட்டனர்.

மக்களிடையே மூடநம்பிக்கைகள் அதிகம் நிலவின. சகுனம், செய்வினை, வசியம் பற்றி பல குறிப்புகள் இலக்கியங்களில் காணப்படுகின்றன.

சிற்றூர்களில் உள்ள தெய்வங்களின் தலபுராணம் வடமொழித் தொடர்பு டையவையாக மாற்றியமைக்கப் பட்டன.
இதை ஆராய்ந்த எஸ்.அனவரத விநாயகம்பிள்ளை தமிழ்த் தலபுராணங்கள் வடமொழியை மூலமாகக்கொண்டன அல்லவென்று மறுக்கிறார் (மச்சபுராணம் முன்னுரை பக்:8.9)

தகவல்களுக்கு நன்றி: 
அ.ராமசாமி எழுதிய 'நாயக்கர்காலம் இலக்கியமும் வரலாறும்'

சுருங்கக்கூறின்,
தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த தெலுங்கர்கள் மக்களை சுரண்டுவதிலேயே குறியாக இருந்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை இல்லாததாலும் பொதுத்துத் திட்டங்கள் செயல்படுத்தாமல் இருந்ததாலும் மக்களை பஞ்சத்தில் தள்ளியுள்ளனர்.

மனுதர்மத்தின்படி வர்ணாசிரமத்தை நடைமுறைப்படுத்தி சாதியைச் சட்டமாக்கியுள்ளனர்.
குறிப்பிட்ட பிரிவினர் கொழுக்கவும் குறிப்பிட்ட பிரிவினர் நலிவடைவதற்கும் காரணமாக இருந்துள்ளனர்.

சமுதாயத்தில் பெண்கள் நிலை தாழ்ந்துபோகவும் ஒழுக்கம் குலைந்துபோகவும் காரணமாக இருந்துள்ளனர்.

Wednesday, 13 December 2023

நாயக்கர்களை சேதுபதிகள் துவைத்து காயப்போட்ட வரலாறு

 நாயக்கர்களை சேதுபதிகள் துவைத்து காயப்போட்ட வரலாறு 

 ஒரு மனநலம் பாதித்த மறவர் (?) ஒரு பேட்டியில் 'நாயக்கர்கள் மறவர்களுக்கு பிச்சை போட்ட அரசுரிமையே சேது சீமை' என்றும் 'சேதுபதிகள் மதுரை நாயக்க மன்னர்களை கடவுளாக நினைத்தனர்' என்றும் உளறியுள்ளார்.

 ஆனால் உண்மை வரலாறு வேறாக இருக்கிறது!

 அதாவது ராஜராஜ சோழனின் பேரன் காலத்தில் சோழர்கள் கன்னட சாளுக்கியருடன் கலந்து மக்கள் ஆதரவு இழந்து பலவீனமான பிறகு அவர்களை வீழ்த்தி பாண்டியர் (இன்றைய கேரளா, பாதி கர்நாடகா, பாதி ஆந்திரா,  பாதி இலங்கை வரை கைப்பற்றி) பேரரசாக எழுந்தனர்.

 பிறகு இரண்டு பாண்டிய வாரிசுகளுக்கு இடையே மோதல் வெடித்து உள்நாட்டு போர் நடக்கிறது. இப்படி உள்நாட்டு போர் மற்றும் குழப்பத்தால் சிதைந்து கிடந்த பாண்டிய பேரரசின் மீது டெல்லி சுல்தானிய பேரரசு (துருக்கியர்) படையெடுத்து மதுரை வரை கைப்பற்றுகிறது.
 (இந்த படையெடுப்பில் பாதிக்கப்பட்ட தெலுங்கர்கள் கொங்குநாட்டில் தஞ்சமடைந்து வாழ்கின்றனர்)
  இப்போது டெல்லி அரசின் சார்பாக மதுரையைப் பிடித்த தளபதி (அரேபியர்) டெல்லி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு மதுரையை தனி சுல்தானியமாக (தனிநாடாக) அறிவிக்கிறார். 43 ஆண்டுகள் மதுரை சுல்தான்கள் என்கிற பெயரில் இவர்கள் பாதி தமிழகத்தை ஆள்கின்றனர். 

 தென்தமிழகம் அப்போதும் பாண்டியரின் கீழ் இருக்கிறது. சுல்தான்களும் பாண்டியரும் மோதிக் கொண்டு இருந்த சமயம் கர்நாடக ஆந்திர எல்லையில் (டெல்லி சுல்தானிய முன்னாள் தளபதிகளான) ஹரிஹரன் மற்றும் புக்கர் (கன்னடர்) விஜயநகர பேரரசை நிறுவி மதுரை மீது படையெடுத்து  சுல்தான்களை ஒழித்து மதுரையைப் பிடிக்கின்றனர்.

 இப்போது மதுரையை மீட்க வந்த பாண்டியர்களை அரியநாத முதலியார் எனும் தமிழர் தலைமையில் படைகளை அனுப்பி முறியடிக்கின்றனர்.
 கன்னடர்கள் தமிழகத்தில் தமது நிர்வாகிகளாக (நாயக்கர்களாக) தெலுங்கரை நியமிக்கின்றனர்.
 பிறகு டெல்லி சுல்தானியத்தில் இருந்து பிரிந்த தென்னக சுல்தானிய அரசுகள் கூட்டு சேர்ந்து விஜயநகர பேரரசை வீழ்த்துகின்றன. 

 இதனால் விஜயநகரத்துக்கு அடங்கியிருந்த தமிழக நாயக்கர்கள் (தெலுங்கர்) தனிநாடாக ஆனார்கள்.
 இந்த நேரத்தில் பெரிய அளவில் தெலுங்கர்கள் தமிழகத்தில் குடியேறுகின்றனர். 

 மதுரையை மீட்க முடியவில்லை என்றாலும் தெற்கே பாண்டியர் ஆட்சி தொடர்கிறது.
 ஏற்கனவே தொடர்ச்சியான போர்களால் பலவீனமாக இருந்த பாண்டியர் காலப் போக்கில் வலுகுன்றி நாயக்கர்கள் கை ஓங்குகிறது. சிறிது சிறிதாக பாண்டிய நாடும் நாயக்கர் ஆட்சியின் கீழ் வருகிறது.
 நாயக்க மன்னர் பாண்டிய நாட்டை 72 சிறுசிறு துண்டுகளாக (பாளையங்களாக) பிரித்து அதில் முக்கால்வாசி பாளையங்களில் தெலுங்கரையும்  கால்வாசிப் பாளையங்களில் மறவர்களை நிர்வாகிகளாக நியமிக்கின்றனர். 
 இதுவே பாளையக்கார முறை.
 ஆனால் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் மட்டும் மிக குறுகிய காலத்தில் தனியரசு ஆயினர்.
 அதாவது தமிழகத்தில் நாயக்கர் காலம் விஸ்வநாத நாயக்கர் காலத்தில் கி.பி.1529 இல் தொடங்குகிறது.
 அவரது மகன் காலத்திலேயே சேதுபதிகள் தனியரசு ஆகிவிட்டனர். 
 இந்த சேதுநாட்டிற்கும் மதுரை நாயக்க அரசிற்கும் (ஆங்கிலேயர் ஆட்சியைப் பிடிக்கும் வரை) தொடர்ந்து மோதல் நடந்துகொண்டே இருந்தது.
அதில் 5 பெரிய போர்கள் அடங்கும்.
1) கி.பி 1635
திருமலை நாயக்கர் - இரண்டாம் சடையக்க தேவர்
2) கி.பி 1667
சொக்கநாத நாயக்கர் - ரகுநாத தேவர் (திருமலை ரகுநாத சேதுபதி)
3) கி.பி 1682
சொக்கநாத நயக்கர் - கிழவன் சேதுபதி
4) கி.பி 1686
மூன்றாம் முத்துவீரப்ப நாயக்கர் - கிழவன் சேதுபதி
5) கி.பி 1702
ராணி மங்கம்மாள் ( தளவாய் நரசப்பையா) - கிழவன் சேதுபதி.
இந்த ஐந்து போர்களில் கி.பி 1635 ஆம் ஆண்டு நடந்த முதல் போரில் மட்டும் திருமலை நாயக்கர் தளபதி ராமப்பய்யன் வெற்றி பெறுகிறார். அதுவும் பெருத்த சேதம் அடைந்து கடைசியில் போர்த்துகீசியர் காலில் விழுந்து உடன்படிக்கை செய்து கொண்டு பல நவீன ஆயுதம் கொண்டு கடல் வழி நிலம் வழி என இரண்டு விதமான தாக்குதல் நடத்தி வெற்றி பெறுகிறார்.
 ஆனால் அடுத்து நடந்த நான்கு போர்களிலும் சேதுபதி மன்னர்களே வெற்றி வாகை சூடினர்.
 இது போக முகலாயர், மராத்தியர், மைசூர், ஆற்காடு நவாப், ஆங்கிலேயர் என தொடர்ச்சியான பல போர்களால் நாயக்கர் அரசுகள் வலுகுன்றி கி.பி. 1700 களில் பல சிறிய பாளையங்களாக சிதறியது. அப்போது தென் மாவட்ட மறவர்களும் தனது பாளையங்களை தனியரசாக ஆக்கிக் கொண்டனர். 
 இந்த சிதறிய தமிழ்நாட்டில் தெலுங்கு பாளையங்கள் மொத்தமாக ஆங்கிலேயருக்கு அடிபணிய சேதுபதிகளும் மறவர் பாளையங்களும் எதிர்த்து நின்று போராடி இறுதியில் தோற்றன.
( ஆங்கிலேயர் பாளையக்கார முறையை ஒழித்து இவர்களை ஜமீன்களாக்கி நிலத்தை சொந்தமாக எழுதிக்கொடுத்து ஜமீன்தாரி முறையைக் கொண்டுவருகின்றனர். இப்படித்தான் தமிழக நிலவுடைமை தெலுங்கர் கைக்கு போனது. இந்த தெலுங்கு ஜமீன் வகையறா போட்ட குட்டிதான் திராவிடமும் நீதிக் கட்சியும்)

 நாயக்கர் மறவர் தொடர்ச்சியாக மோதிக்கொண்டு மட்டும் இருக்கவில்லை. மைசூர் படையெடுப்பு மற்றும் ஆங்கிலேயர் படையெடுப்பு போன்ற சில சோதனையான காலகட்டங்களில் நாயக்கர் மறவர் இணைந்து செயல்பட்டுள்ளனர்.
 மற்றபடி ஆண்ட பரம்பரையான நாயக்கர் களுக்கு மறவர்கள்தான் அடியாட்கள் என்பது வந்தேறிகள் தம் சுய இன்பத்திற்காக உருட்டிய திரிப்பு! 
 
 

Tuesday, 6 June 2023

இரண்டு அருந்ததியர் வன்கொலை

இரண்டு அருந்ததியர் வன்கொலை

 எனக்குத் தெரிந்து திருநெல்வேலி மாவட்டத்தில் பதவிக்காக நடந்த சாதிய கொலை என்றால் ஜக்கன் மற்றும் சேர்வரான் ஆகிய இருவர் கொலைதான்!

 அதாவது காதல், குடும்பம், பணம் என தனிப்பட்ட விடயம் அல்லாமல் பதவிக்கான போட்டியில் ஆதிக்க வெறிகொண்டு செய்யப்பட்ட கொலைகள்!

 2006, 2007 காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் இவை!

 இதில் கொல்லப்பட்ட இருவருமே சக்கிலியர் (அருந்ததியர்) ஆவர்!

இதற்குக் காரணம் இவர்கள் (இடவொதுக்கீடு படி) பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு வந்தது மட்டுமே! 

 இந்த இரண்டு கொலைகளையும் செய்தது இவர்களுக்கு கீழ் பணியாற்றிய ( பஞ்சாயத்து துணைத் தலைவர்) நாயக்கர்கள்! 

 இந்த இரண்டு கொலைகள் பற்றி அருந்ததிய அமைப்புகள் வாய் திறப்பதே இல்லையே ஏன்?!

பதவிக்கான கொலை என்றால் நினைவுக்கு வருவது 1996இல் நடந்த மேலவளவு முருகேசன் கொலை.
 சொல்லப்போனால் மேற்கண்ட இரண்டையும் விட பயங்கரமான சம்பவம் மேலவளவு முருகேசன் கொலை. அது பதவிக்காக செய்யப்பட்டது அல்ல. கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுப்பதில் எழுந்த போட்டி சமூக மோதலாக உருவெடுத்தது. பட்ட பகலில் ஓடும் பேருந்தை 20 பேர் (கள்ளர்) பறித்து 6 பேரை (பறையர்) வெட்டிக் கொன்றனர். இதில் கைதானவர்கள் வன்கொடுமை சட்டத்தில் கைதாகவும் இல்லை. பிறகுதான் வழக்கு பதவிக்காக தலித் படுகொலை என மாறியது. 

 அப்போதும் அருந்ததியர் அமைப்புகள் அல்லது தலித் அமைப்புகள் போராட்டம் எதுவும் செய்யவில்லை. புரட்சி பாரதம் பூவை மூர்த்தியார் மட்டுமே போராடினார். குற்றவாளிகள் தண்டனை பெற்று விடுதலையும் ஆகிவிட்டனர். பாதிக்கப்பட்டோர் அரசு வேலை, இழப்பீடு என வழங்கப் பெற்றனர். 

 ஆனால் சக்கிலியர் கொல்லப்பட்ட வழக்குகளில் இதுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வில்லை.

Thursday, 10 October 2019

சாதி பரவல் மாவட்டவாரியாக 1921 அட்டவணை

1985 இல் தமிழர்கள் கொஞ்சம் கூட சமூக நீதி இல்லாமல்
மாநில மக்கட்தொகையில்
4.40% உள்ள நாயுடு(நாயக்கர்)
1.43% உள்ள ரெட்டியார்
ஆகியோரை விட்டுவிட்டு
0.12% மட்டுமே இருந்த
 அதாவது மொத்தமே 58,327 பேர் கொண்ட மேளக்கார சாதியிடம் (இசை வெள்ளாளரிடம்) போய் ஆட்சியைக் கொடுத்துள்ளனர்.

 இது நம்மை நம்பி வந்த தெலுங்கு வந்தேறிகளுக்கு நாம் செய்த அநீதி இல்லையா?!

சாதிகள் பரவல் மாவட்ட வாரியாக






Tuesday, 26 March 2019

தெலுங்கர்களைப் புறக்கணிக்கும் தினகரன்

தெலுங்கர்களைப் புறக்கணிக்கும் தினகரன்

  22.03.2019 தேதியிட்ட நெற்றிக்கண் பத்திரிக்கை
"அ.ம.மு.க -வில் எங்களைப் புறக்கணிக்கின்றனர்
- புலம்பும் நாயக்கர் சமூகத்தினர்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கட்டுரையில் கீழ்க்கண்டவாறு உள்ளது,

// குறிப்பாகத் தென்மாவட்டங்களில் உள சட்டமன்றத் தொகுதிகளில் கணிசமாக உள்ள நாயக்கர் (தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்) சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனக் குமுறல்கள் கேட்கின்றன.//

//தென்மாவட்டங்களைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் நாயக்கர் சமூகத்தினர் ஓட்டுகள் பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை உள்ளது.//

//ஆனால் நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு தகுதிக்கு ஏற்ற பொறுப்புகளோ பதவிகளோ கொடுக்கப்படவில்லை.
மற்ற கட்சிகளில் இருந்தபோது மாவட்ட அளவிலான பதவிகள் வகித்தவர்களுக்கு கூட ஒன்றிய அளவிலான பதவிகள் கூட வழங்கப்படவில்லை//

இந்த கட்டுரையானது தினகரன் தலைமையில் முக்குலத்தோருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும்
நாயக்கர்கள் ஓட்டு வங்கி இருந்தும் புறக்கணிக்கப் படுவதாகவும்
தினகரனைச் சாதி ரீதியில் குற்றம்சாட்டும் வகையில் உள்ளது.

மேலும் தகுதியைப் பொறுத்து வாய்ப்பு தராதவர் என்றும்
ஒரு குறிப்பிட்ட சமூக வாக்குவங்கியை  தவறவிடுவதாகவும் குறைசொல்லும் வகையில் உள்ளதே தவிர ஆதரித்து இல்லை.

ஆனால் தினகரன் நிறுத்தியுள்ள வேட்பாளர்களைப் பார்த்தால் அதில் பல்வேறு சாதிகளுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளது தெரிகிறது.

வட மாவட்டங்களை விட தென்மாவட்டங்களில் வந்தேறிகள் அதிகம்தான் என்றாலும் அவர்களது எண்ணிக்கை பதவி பகிர்ந்தளிக்கும் அளவுக்கெல்லாம் இல்லை.

மேற்கண்ட கட்டுரையாளர் (ராஜன்) வந்தேறியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

தினகரனை ஏன் நாம்தமிழர் கட்சிக்கு அடுத்த இடத்தில் வலியுறுத்துகிறோம் என்று இப்போது புரிந்துகொள்ளலாம்.

போகிற போக்கைப் பார்த்தால் சீமான் போட்ட அடித்தளத்தில் அவருக்கு முன் தினகரன் கோட்டை கட்டி அமர்ந்துவிடுவார் என்றே தோன்றுகிறது.

படம் உதவி: மேகநாதன் முனுசாமி

Friday, 21 September 2018

தெலுங்கர் மற்றும் தமிழர் பாளையங்கள் வரைபடம்

தெலுங்கர் மற்றும் தமிழர் பாளையங்கள் வரைபடம்

1790களில் தெலுங்கர் மற்றும் தமிழர் ஆட்சி செலுத்திய பாளையங்கள்.

தமிழர் (சிவப்பு) அனைவரும் மறவர் சாதியினர்.

தெலுங்கர் (மை வண்ணம்) பெரும்பாலும் கம்பளத்தார் சாதியினர்.

(பாளையத்தின் பெயரை வைத்து மட்டுமே குறித்துள்ளேன்.
பாளையங்களின் எல்லைகள் தெரியவில்லை)

தமிழர் பாளையங்கள் :-

அழகாபுரி
இராமநாதபுரம்
ஊற்றுமலை (எ) வீரகேரளம்புதூர்
ஊர்க்காடு
ஏழாயிரம்பண்ணை
கடம்பூர்
கொல்லங்கொண்டான்
சேத்தூர்
சிவகிரி
சிங்கம்பட்டி
சுரண்டை
சொக்கம்பட்டி (எ) வடகரை
புதுக்கோட்டை
தலைவன்கோட்டை
நெற்கட்டும் செவல்
மணியாச்சி
-----------
தெலுங்கர் பாளையங்கள் வருமாறு,

அம்மைநாயக்கனூர்
அம்பாத்துறை
அம்பலத்தாறு
ஆய்க்குடி
ஆற்றங்கரை
இரசக்க நாயக்கனூர்
இடையக்கோட்டை
இராமகரி
எட்டையபுரம்
எமகேலாபுரம்
எரியோடு
ஏழுமலை
ஒன்பதூர்
கன்னிவாடி
கண்டமனூர்
கவுண்டன்கோட்டை
காமநாயக்கனூர்
காடல்குடி
குளத்தூர்
கூழப்பநாயக்கனூர்
கடவூர் (எ) பிள்ளைவிழுங்கி
கோல்வார்பட்டி
கோம்பை
சிறுபாலை
சொக்கம்பட்டி
சத்திரப்பட்டி
செங்குறிச்சி
தவசிமேடு
தேவாரம்
தேவதானப்பட்டி
தோட்டியன் கோட்டை
தோகைமலை
தும்பிச்சிநாயக்கனூர்
மருங்காபுரி
மறவநாடு
மாத்தூர்
மாதவ நாயக்கனூர்
மாறனூற்று
மாம்பாறை
மேல்மாந்தை
பழனி
பள்ளியப்ப நாயக்கனூர்
பாவாலி
போடிநாயக்கனூர்
பாஞ்சாலங்குறிச்சி
விருப்பாட்சி
வெள்ளியங்குன்றம்
வீரமலை
நாகலாபுரம்
நிலக்கோட்டை

நன்றி: கட்டபொம்மன் கொள்ளைக்காரன் (நூல்)
---------
மை வண்ணமிடப்பட்ட பகுதிகளில் கணிசமான மக்கட்தொகையும் அப்பகுதி நிலவுடைமையையும் தெலுங்கர் கொண்டிருக்கலாம்.

Tuesday, 11 September 2018

கயவாளி கட்டபொம்மன் - 3

கயவாளி கட்டபொம்மன்
- நகைச்சுவை நடையில் கட்டபொம்மன் முன்னோரின் வரலாறு

பதிவர்: அன்பெழில் (anpezhil)

பகுதி-3
கட்டபிரமையா என்கிற ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்
---------------------
காட்ர கட்டப் பிரமையாவின் மகன் (வெறும்) கட்டப் பிரமையா.
இவனே முதலில் கட்டபொம்மன் பட்டத்தை தன் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொண்டவன்.

தந்தையை விட சூழ்ச்சிக்காரன். நேரடியாகப் போரிடாமல் மறைந்திருந்து தாக்குவதில் பெத்த கெட்டிக்காரன்.
(வழிப்பறி  கொள்ளையடிக்கிறப்போ நேரடியா மோதினா மொகரைய பேத்துருவாய்ங்கெல்ல..)

இந்த கெட்டிக்காரன் என்பதைத்தான் அவன்சார்ந்த கம்பளத்தார் தெலுங்கு வழக்கில் கெட்டிப்பொம்மு என அழைத்தனர்.
அது மருவி கட்டப்பொம்மன் ஆனது.
இவன் படத்தில் நாம் பார்த்த கட்டப் பொம்மனின் கொள்ளுப்பாட்டன்.

கட்டப்பொம்மன் சரி. அதென்ன வீரபாண்டிய கட்டப்பொம்மன்?

இளம் பஞ்சபாண்டியர்கள் தந்தை காலத்திலிருந்து பகைவர்களாக இல்லாவிடினும் அவர்கள் தமிழினம் என்பது ஒருபக்கம் உறுத்திக் கொண்டிருந்தது.
இன்றைக்கில்லை என்றாலும் என்றாவது ‘எம்மண்ணில் உனக்கென்ன வேலை? போடா கொல்டி’ என உதைத்து விரட்டினால் என்ன செய்வது?

தயங்கவே இல்லை. நாயக்கப் பேரரசிடம் போட்டுக் கொடுத்தான்.
வஞ்சனையால் காட்டிக்கொடுக்கப்பட்டு அம்மாவீரர்கள் அம்மண்ணில் வீழ்த்தப்பட்டார்கள்.
வீழ்த்தப்பட்ட இடம் கட்டப்பொம்மனுக்கே கிடைத்தது.
அந்த இடத்தைச் சுற்றிலும் தன் கம்பளத்து இனத்தவரை குடியேற்றினான்.
பாளையம் உருவாயிற்று.
தன் முன்னோரில் ஒருவனான பாஞ்சாலன் என்பவனின் நினைவாக அந்தப் பாளையத்திற்கு பாஞ்சாலங்குறிச்சி எனப் பெயரிட்டான்.

பாளையத்திற்கு தலைநகர் ஒன்று வேண்டுமல்லவா?
இளம்பஞ்ச பாண்டியர்கள் வீழ்த்தப்பட்ட அந்த இடம் ஜெகவீரபாண்டியபுரம் என அழைக்கப்பட்டது.
அதையே தன் தலைநகராக்கினான்.
தன் பெயரையும் ஜெகவீரபாண்டிய கட்டப் பொம்மன் என வைத்துக் கொண்டான் கட்டபிரமையா.

அக்காலத்தில் போரில் வெற்றி கொண்ட வீரனொருவன் வெல்லப்பட்ட வீரனின் பெயரை சூட்டிக் கொள்வது மரபு.
இங்கே காட்டிக்கொடுத்த முதலாம் கட்டப்பொம்மனுக்கு தமிழின வரலாற்றின் மேன்மை மிகுந்த பாண்டியர்களின் பட்டம் போய்ச்சேர்ந்தது.
இது தமிழின வரலாற்றின் மிகப்பெரும் சாபக்கேடு!

ஜெகவீர பாண்டிய கட்டபொம்மன் என பெயரை மாற்றி வைத்துக்கொண்ட கட்ட பிரமையா 1709முதல் 1736வரை பாஞ்சாலங்குறிச்சிக்கு பாளையக்காரனாக இருந்தான்.
(அதாவது படத்தில் நாம் பார்த்த கட்டபொம்மனின் கொள்ளுப் பாட்டன்!)

இவன்காலத்தில் நாயக்கப் பேரரசு வலுவிழக்கத் துவங்கியது.
தட்டிக்கேட்க யாருமில்லா தைரியத்தில் தன் கம்பளத்தார்களைக் கொண்டு பெரும்படை நிறுவிக் கொண்டான்.
பெரும்படையுடன் பக்கத்துப் பாளையங்களில் புகுந்து கொள்ளையடிக்கத் துவங்கினான்.
மற்ற பாளையங்கள் திருப்பித் தாக்குவதில் இருந்து தப்பிக்க ஆங்காங்கே கோட்டை கொத்தளங்களை நிறுவிக் கொண்டான்.

அந்த நாளில் தென்பாண்டி நாட்டில் இருந்த தெலுங்குப் பாளையங்களுக்கு எல்லாம் எட்டையபுர பாளையமே தலைமை தாங்கி நின்றது.
பரம்பரை எதிரியான கட்டப் பொம்மனுக்கு அது பெருத்த அவமானமாகவே இருந்து வந்தது.
அதற்கும் ஒரு வேலை செய்தான்.

அனைத்து தெலுங்குப் பாளையத்தில் இருக்கும் கம்பளத்தாரின் குலதெய்வம் ஜக்கம்மா.
ஜக்கம்மாவுக்கு பாஞ்சாலங்குறிச்சியில் ஒரு மிகப் பெரிய கோவில் எடுத்தான்.
அந்தக் கோவிலுக்கு தலைமைப் பூசாரியாகவும் தானே ஆகினான்.
ஜக்கம்மாவை வணங்க வருபவர்கள் பூசாரியின் காலிலும் விழுந்து வணங்கலாகினர்.
தெலுங்குப் பாளையங்களின் தலைமையும் தானாக கட்டப்பொம்மனுக்கு வந்து சேர்ந்தது.

அடித்த கொள்ளை, செய்த ஃப்ராடுத்தனம் அத்தனையையும் அந்த ஜக்கம்மா கோவிலால் மறைந்து நின்றது.

திருமலை நாயக்கன் பரம்பரை நாங்கள்..
வீரபாண்டிய கட்டபொம்மன் பரம்பரை நாங்கள்..
தெலுங்கு வெண்ணைவெட்டிகள் பக்கங்களில் பார்த்தீர்களானால் இதே ரீதியில்தான் ஆண்ட பரம்பரை பேன்ட பரம்பரை வசனங்களால் நிரப்பப் பட்டிருக்கும்.
சரி. அப்பேர்ப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் பரம்பரை பெருமை எத்தகையது?

நாயக்க மன்னர்கள் வலுவற்று இருந்ததை அறிந்த பல பாளையங்கள் வரி செலுத்தாமல் தவணை சொல்லி தட்டிக்கழித்து வந்தன.
தென்பாண்டி நாட்டு மறவர் பாளையங்கள் ஒரு படி மேலே  போய் "போடா வெண்ணை" என நாயக்க மேலாண்மையை உதறித் தள்ளிவிட்டு சுதந்திரமாக ஆட்சி நடத்தினர்.

இந்த நிலையில் ஆற்காடு நவாபின் ஆதிக்கம் துவங்கியது. ஆற்காடு நவாபின் பிரதிநிதியாக வரி வசூலிக்க வந்த சாதிக் கானுக்கு கப்பம் தர தென்பகுதி பாளையக்காரர்கள் மறுத்து விட்டனர்.

இந்நிலையில் ஆற்காடு நவாபின் பிரதிநிதி சாதிக்கானுக்கு அபயகரம் நீட்டிய ‘தன்மானச்சிங்கம்’ யார் தெரியுமா?
பேண்ட பரம்பரையின் முன்னோடி ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்தான்!

பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனான முதலாம் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் தன் படைகளைக் கொண்டே மற்ற பாளையக்காரர்களிடம் வரி வசூலித்து சாதிக்கானுக்கு அளித்தான்.

இந்த மாமா வேலைக்கு பரிசாக கட்டபொம்மனுக்கு சாதிக்கான் அளித்த வெகுமதி என்ன தெரியுமா?

“இனிமேல் வசூலாகும் கப்பத்தொகையில் ஆறில் ஒரு பங்கை நீயே வைத்துக்கொண்டு மீதி ஐந்து பங்கை இரண்டு தவணைகளில் அனுப்பி வா!”
என்று கூறி ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் கழுத்தில் சாதிக் கான் ஒரு விலை உயர்ந்த மணிமாலையை அணிவித்தானாம்.
அத்துடன் அவனுக்கு 'தென்னாட்டின் சின்ன நவாபு' என்ற பட்டத்தையும் அளித்தானாம்!

இவைகள் எல்லாம் தெலுங்கர்களின் எதிர்ப்பாளர்கள் எழுதிய கட்டுக்கதைகள் அல்ல.
கட்டபொம்மனைப் புகழ்ந்து காவியமாக படைக்கப்பட்ட ‘வீரபாண்டியம்‘ எனும் நூலில் உள்ளவை!
---------------
அடுத்த பகுதி
'பொல்லாப் பாண்டிய கட்டபொம்மன்'

கயவாளி கட்டபொம்மன் - 2

கயவாளி கட்டபொம்மன்
- நகைச்சுவை நடையில் கட்டபொம்மன் முன்னோரின் வரலாறு
பதிவர்: அன்பெழில் (anpezhil)
பகுதி-2
காட்ர கட்டபிரமையா
----------------
கட்டபொம்மன் பரம்பரைத் தொடக்கத்தில் ஒரு மாமன்னனைத் தேடிப்பார்த்தால் எட்டயபுர பாளையக்காரனுக்கு வெற்றிலை பாக்கு மடித்துக் கொடுத்து எச்சில் துப்ப சொம்பு தூக்கித் திரிந்த ‘காட்ர கட்டபிரமையா’ எனும் மாமா மன்னன்தான் அகப்படுகிறான்!
இவன்தான் கட்டப்பொம்மன் பரம்பரையின் முதல் கட்டப்பொம்மன்.

சொம்பு தூக்கி எப்படி மன்னனான்?

கட்டப்பொம்மன் பரம்பரையிலேயே வரலாற்றின் கண்ணுக்குப் புலப்படுகிறவன் காட்ர கட்டப் பிரமையாதான்.
இவன் 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் எட்டயபுர பாளையக்காரன் எட்டப்ப நாயக்கனுக்கு அடப்பக்காரனாக இருந்தவன்.

அடப்பக்காரர்களின் தலையாய பணி எதுவெனில் பாளையக்காரருக்கு வெற்றிலை மடித்துக் கொடுப்பது, மென்ற வெற்றிலைச் சாற்றினை ‘புளிச்’ எனத் துப்பும் போது சிந்தாமல் ஒரு சொம்பில் பிடித்துக்கொள்வது,
மன்னவருக்கு அலுப்பாக இருக்கும் வேளைகளில் கைகால் அமுக்கி விடுவது போன்ற ராஜபணிகள்!

கட்டப்பொம்மனின் பரம்பரையினர் கம்பளத்தார் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
கம்பளத்தாரில் கொல்லவார், சில்லவார், தோகலவார் என ஒன்பது பிரிவு.
தோகலவார் என்றால் பசுமாடுகளை ஊர்ஊராக ஓட்டிச் சென்று மேய்க்கும் நாடோடிகள் எனப் பொருள்.
கெட்டிப்பொம்முவின் ஆண்ட(!) பரம்பரை மூதாதையர்கள் இந்த தோகலவார் வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான்.
சில்லவார் பிரிவு கம்பளத்தாரான எட்டப்ப நாயக்கருக்கு அடப்பக்காரனாக அரும்பணியாற்றும் பேறுபெற்றவுடன் காட்ரகட்டபிரமையா ஆடுமாடு மேய்க்கும் குலத்தொழிலை புறந்தள்ளி எட்டயபுரத்தில் விளக்கி வைத்த சொம்புகளுடன் ஐக்கியமானான்.

காட்ர கட்டப் பிரமையாவால் தோற்றுவிக்கப்பட்ட கட்டப்பொம்மன் பரம்பரை ஐந்தே தலைமுறையோடு கயத்தாறின் புளியமரத்தில் முடிவுக்கு வருகிறது.

1) காட்ர கட்டபிரமையா

2) கட்டப்பிரமையா என்கிற முதலாம் ஜெகவீர பாண்டியன் (1709-1736).

3) பொல்லாப்பாண்டிய கட்டப்பொம்மன் (1736-1706).

4) இரண்டாம் ஜெகவீர பாண்டிய கட்டப் பொம்மன் (1760-1790).

5) வீரபாண்டியக் கட்டப்பொம்மன் (1790-1799).

இதில் ஐந்தாவதாக வருபவன்தான் பி.ஆர். பந்துலு நாயக்கன் தயாரிப்பில் நாம் பார்த்த ‘வானம் பொழிகிறது பூமி விழைகிறது’ சிவாசிக்கணேச கட்டப்பொம்மன்!

அது சரி, எட்டப்ப நாயக்கனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்து சொம்பு தூக்கித் திரிந்த காட்ர கட்டப் பிரமையா எப்படி அரியணை ஏறினான்?!

பாஞ்சாலங்குறிச்சி பாளையம் அமைந்ததற்கு வழக்கமா ஒரு முயல் நாயை விரட்டின கதையைச் சொல்லி நமது காதில் பூந்தோட்டத்தைச் சுத்துவாங்கெ.
ஆனால், பாஞ்சாலங்குறிச்சி பாளையம் தோன்றிய கதையைத் தோண்டிப்பார்த்தால் வடுகர்களின் பிறவி இரட்டைவேடக் குணம்தான் தன் அவுசப் பல்லை காட்டி இளிக்கிறது.

எட்டையபுரம் பாளையத்தை அடுத்து செக்காரப்பட்டி எனும் ஊர் இருந்தது.
அந்த ஊரில் வசித்த தமிழ் வேளாளர்கள் அந்தப் பூமியை தங்கள் உழைப்பால் வளம் மிகுந்ததாக மாற்றியிருந்தனர்.
எட்டப்பனுக்கு செக்காரப்பட்டி மீது ஒரு இது..!

எப்படியாவது அதை அபகரித்து தன் பாளையத்தோடு இணைத்து விட மையல் கொண்டிருந்தான்.
எட்டப்பனின் இந்த ஆசையை மடித்துக் கொடுத்த வெற்றிலையோடு ஆதியும் அந்தமுமாக தூபம் போட்டு வளர்த்தெடுத்தவன் அடப்பக்கார காட்ர கட்டபிரமையா!

திட்டம் உருவானது.
அதன்படி, செக்காரப்பட்டியை உளவு பார்க்கவும், தாக்க தக்க தருனம் பார்த்து தகவல் அனுப்பவும் காட்ர கட்டப் பிரமையா செக்காரப்பட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
வஞ்சகமறியா செக்காரப்பட்டி வேளாளர்களும் வேலை கேட்டு வந்த காட்ர கட்டப்பிரமையாவை காலியாக இருந்த ஊர்க்காவலாளி வேலையில் அமர்த்தினர்.

காட்ர கட்டப்பிரமையாவோ மிதிவண்டி இடைவெளியில் வடுகரயிலை விட ஆரம்பித்தான்.
ஆங்காங்கே சிதறிக் கிடந்த தன் கம்பளத்து உறவினர்களை செக்காரப்பட்டியில் சிறுகச் சிறுக குடியேற்றினான்.
வந்தாரை வாழவைத்தே பழக்கப்பட்ட தமிழினத்தில் பிறந்த அவ்வூர் வேளாளர்களும் வஞ்சகமறியாமல் அதை அனுமதித்தனர்.

எட்டப்பனோ செக்காரப்பட்டிக்கு படையனுப்ப காட்ர கட்டப்பிரமையாவின் செய்திக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தான்.
ஆனால், அடப்பக்காரனோ எட்டப்பனுக்கும் சேர்த்து ஆப்பு ஒன்று சீவிக்கொண்டிருந்தான்.

உண்மையில் காட்ர கட்டப்பிரமையாவுக்கு செக்காரபட்டியை எட்டையபுரத்தானுக்கு பிடித்துக் கொடுக்கும் எண்ணமெல்லாம் சிறிதும் இல்லை.
தானே கைப்பற்றுவதுதான் திட்டம்.
அதற்காகவே தன் கம்பளத்து உறவுகளை அங்கே குடியமர்த்தினான்.
ஆனாலும், எட்டப்பனின் படைவலிமைக்கு முன்னால் இவர்கள் வெறும் தூசி.
பிறகு என்னதான் செய்வது?!

நாயக்கர்களின் வருகைக்குப் பின்பு வீழ்ச்சி அடைந்த பாண்டியர்களின் வம்சாவளியில் கடைசியாக எதிர்த்து நின்ற பஞ்சபாண்டியர்களின் வழிவந்த இளம்பஞ்ச பாண்டியர்கள் பொதிகை மலையில் வசித்து வந்தனர்.
அவ்வப்போது புரட்சிப் படைகளோடு ஆங்காங்கே நாயக்க பாளையங்களைத் தாக்கியும் வந்தனர்.
அவர்களைத்தான் தேடிப்போய்ச் சந்தித்தான் காட்ர கட்டப்பிரமையா.

எட்டப்பன் செக்காரப்பட்டியின் மீது திடீரென படையெடுக்கத் திட்டமிட்டிருக்கிறான்.
நான் அவன் சாதிக்காரனாக இருந்தாலும் இதற்கு என் மனம் ஒப்பவில்லை.
நீங்கள்தான் அவர்களை விரட்டியடிக்க வேண்டும் என காலில் விழுந்தான்.
இளம்பஞ்ச பாண்டியர்களும் உடனே தன் படையைத் திரட்டிக்கொண்டு செக்காரபட்டி வந்து சேர்ந்தனர்.

எட்டப்பன் வெற்றி பெற்றால் அவனோடு சேர்ந்து எட்டயபுர பாளையத்தில் மேலும் உயர்ந்து விடலாம்.
பாண்டியர்கள் வெற்றி பெற்றால் அவர்களோடு இணைந்து இங்கேயே இருந்து விடலாம்.
காட்ர கட்டப்பிரமையாவுக்கு இரு கல்லிலும் ஒரே மாங்காய்.

'உடனே படையை அனுப்பவும்' என எட்டப்பனுக்குச் செய்தியனுப்பினான் காட்ர கட்டப் பிரமையா.
வெற்றி நிச்சயம் என்ற மிதப்பில் இரவோடு இரவாக எட்டையபுர படைகள் செக்கார பட்டிக்குள் புகுந்தன.
அளவில் பெரியதாய் இருந்தாலும் முன் தயாரிப்புடன் காத்திருந்து தாக்கிய இளம்பஞ்ச பாண்டியர்களின் படைக்கு முன் எட்டையபுர படைகள் மண்ணைக் கவ்வியது.

காத்திருந்த காட்ர கட்டப் பிரமையா பஞ்ச பாண்டியர்களின் சார்பில் வெற்றிவிழா கொண்டாடினான்.
அவனது வஞ்சகத்தை அறியாத இளம் பஞ்ச பாண்டியர்களும் அவனை தன் படையில் ஒரு தளபதியாக நியமித்தனர்.

அப்போதுதான் எட்டப்பனுக்கு காட்ரகட்ட பிரமையா வைத்த ஆப்பு பற்றி விளங்கியது.
கொதித்தான். குமுறினான். எப்படியாவது அவனைப் பழிவாங்கியே தீருவது என முடிவெடுத்தான்.
ஆனாலும் அது அவன் காலத்தில் முடியவில்லை.

அந்த வஞ்சினமே பரம்பரை பரம்பரையாக இருபக்கமும் வளர்ந்து எட்டப்பனின் வழித்தோன்றலாக வந்த வேறொரு எட்டப்பனால் காட்ர கட்டப்பிரமையாவின் பரம்பரையில் வந்த கட்டப்பொம்மனை காட்டிக் கொடுத்து கயத்தாறு புளிய மரத்தில் கணக்குத் தீர்த்தது!

சரி! தெலுங்கின கம்பளத்து காட்ர கட்ட பிரமையாவின் வம்சம் வீரபாண்டியனானது எப்படி?!
-------------
அடுத்த பகுதி
கட்டபிரமையா என்கிற ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்