Showing posts with label பள்ளர். Show all posts
Showing posts with label பள்ளர். Show all posts

Sunday, 15 February 2026

பிறர்க்குடையார் குடும்பரும் பூலித்தேவரும்

பிறர்க்குடையார் குடும்பரும் பூலித்தேவரும் 

  நெற்கட்டுஞ் செவ்வல் அருகே உள்ள குளம்  ராமகோவிந்தப்பேரி.
சிதிலமடைந்த இதை மீண்டும் கட்டிப் பாசனம் செய்து பயிரிட புலித்தேவன் கேட்டுக் கொண்டதனால், நெற்கட்டுஞ் செவ்வலைச் சேர்ந்த பிறக்குடையாக் குடும்பன் என்பவர், தன் செலவில் ராமகோவிந்தப்பேரிக் குளத்தைப் புதுக்குளமாக அமைத்தார்.

இதனால் புலித்தேவன், பிறக்குடையாக் குடும்பனுக்கு நன்செய் நிலம் வழங்கியதோடு அவர் நிலங்களுக்குச் சில ஆண்டுகள் வரிச் சலுகையும் அளித்துள்ளார்.
இதற்கு 2008 ஜூலை இல் கிடைத்த கி.பி.1748 ஆம் ஆண்டைச் சேர்ந்த (திருச்செங்கோடு) செப்புப் பட்டயம் சான்று.

இதே குளத்தில் உள்ள மதகில் ஒரு கல்வெட்டும் (எண் 79/2005, கி.பி.1802) உள்ளது. இதில் பூலிராணி கோமதி முத்து தலைவச்சி என்பவர் (இவர் பூலித் தேவர் மகளாக இருக்கலாம்) தெற்கு மடைக்கு தோரணக்கல் செய்து தந்த செய்தி வெட்டபட்டுள்ளது. இதிலும் பிறர்க் குடையார் மகன் சிவணு குடும்பன் என்பவருக்கு இந்த குளம் சொந்தம் என்று குறிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோவில் நிலத்தை கி.பி.1738 இல் கைலாச குடும்பர் உள்ளிட்ட 12 தேவேந்திரருக்கு விலைக்கு விற்ற செப்புப் பட்டயம் கண்டறியப்பட்டுள்ளது.
இதில் நிலம் வாங்கிய 12 குடும்பர்கள் பெயருடன் கிரயம் செய்து கொடுத்த கோவில் நிர்வாகிகள் 11 பேர் மற்றும் சாட்சிகள் 3 பேர் என பல்வேறு சாதிகளை சேர்ந்தவர்களின் பெயர்கள் உள்ளன.

அதாவது பள்ளு இலக்கியங்கள் நாயக்கர் ஆட்சி பகுதியில் தேவேந்திரர்கள் (அப்போது பள்ளர்) மிகக் கொடுமையான சுரண்டலுக்கு ஆளானதைப் பதிவு செய்துள்ளன.
அதே காலத்தில் நாயக்கர் ஆட்சி வேரூன்ற முடியாத மறவர் பாளையங்களில் தேவேந்திரர் நிலவுடைமை சமூகமாக செல்வாக்குடன் இருந்துள்ளனர் என்பதை இந்த ஆவணங்கள் மூலம் அறியலாம்.

  

Tuesday, 14 October 2025

உதயநிதி செய்யும் கருணாநிதித்தனம்

உதயநிதி செய்யும் கருணாநிதித்தனம்

 உதயநிதியின் நெருக்கம் கிடைத்த பிறகு வாழை படம் வெளியாகிறது! 
 மறுநாளே தேவேந்திரர் அதிகம் வாழும் பகுதிகளில் மாரி செல்வராஜ் படம் போட்டு அவரது ரசிகர் மன்றம் என்கிற பெயரில் ப்ளக்ஸ் வைக்கப்பட்டது! 
 அந்த பதாகையில் அப்பகுதியின் பெயர் இல்லை! அந்த ஊரைச் சேர்ந்த யாருடைய புகைப்படமும் இல்லை !
 அதாவது தமிழகம் முழுக்க பொத்தாம்பொதுவாக ஒரு பதாகை அடித்து வைக்கப்பட்டது!
 இதை வைத்தவர்கள் திமுக தொண்டர்கள் என்பதைச் சொல்லவேண்டியது இல்லை!
 அதாவது "இவர்தான் உங்கள் அடையாளம்! பிதுக்கப்பட்ட இவரை எப்படி தூக்கிவிட்டோம் பார்" என்று சொல்லாமல் சொல்கிறார்களாம்!
 ஆனால் வாழை படத்தில் சோ.தர்மன் படைப்பை ஆட்டையைப் போட்டு வழக்கம்போல தாழ்வு மனப்பான்மையை புகுத்தி கதறியிருந்தார் மா.செ!
 படமும் வெற்றியடைய வில்லை! 
 நொடிக்கு ரூ.9000 வருமானம் வரும் உதயநிதிக்கு  இது ஒரு பொருட்டா?!
 இப்போது தேவேந்திர குலத்தைச் சேர்ந்த கதாநாயகனை வைத்து அடுத்த படம் வருகிறது! 
 ஒருபக்கம் திராவிடத்தை தாங்கி நிற்கும் திமுக அதாவது கருணாநிதி குடும்பம்! 
 மறுபக்கம் அதை எதிர்த்து நிற்கும் தமிழ்தேசியத்தை தாங்கி நிற்கும் தேவேந்திர சமூகம்! 
 ரஞ்சித்தை வைத்து ஏவிய தலித்திய பாச்சா இவர்களிடம் பலிக்கவில்லை! 
 தற்போது நெல்லை கவின் ஆணவக் கொலை நடந்த போது அதை சாதி மோதலாக மாற்ற ஏவப்பட்ட கிருஷ்ணசாமி ரெட்டியார் மகனையும் இச்சமூகம் இனம் கண்டுகொண்டனர்!
 அத்தனை சமூகங்களையும் ஏதோ ஒரு வகையில் விலைக்கு வாங்கிவிட்ட திமுக தேவேந்திரரை பணிய வைக்க முடியாமல் திணறுகிறது!
 திமுக நடத்திய தாமிரபரணி படுகொலையில் பாதிக்கப்பட்ட பின்னணி கொண்ட மாரி செல்வராஜை விலைக்கு வாங்கியது! 
 திருநெல்வேலி வெள்ளம் வந்தபோது உதயநிதி சூட்டிங்குக்கு உதவியாக இருந்த மாரி செல்வராஜ் டீம் போனது!
 மாரி என்னவோ தேவேந்திரர் களுக்கெல்லாம் பிரதிநிதி போலவும் அவர் வந்து வெள்ளத்தையே வற்றவைத்து விட்டது போலவும் ஊடகங்கள் ஊதின! 
  இதில் எதுவுமே தேவேந்திர சமூகத்திடம் எடுபடவில்லை!  
 இம்முறை மீண்டும் மா.செ தேவேந்திரர் நாடார் மோதலை மையமாக வைத்து படம் எடுப்பதாக சொல்கிறார்கள்.
 ஒரு தேவேந்திர குடும்பத்துக்கும் ஒரு நாடார் குடும்பத்துக்கும் வயல்வெளியில் வந்த வரப்பு தகராறு இரு சமூக மோதலாக மாறி பல்வேறு பரிணாமங்களை அடைந்து பல உயிர்கள் பலியாயின.
 இதில் முதல் கொலையும் இரண்டாவது கொலையும் தேவேந்திர சமூகம் தான் செய்தது! 
 இதைச் செய்த பசுபதி பாண்டியன் கொல்லப்பட்ட பிறகு இது முடிவுக்கு வந்தது!
 இறுதி கொலை பசுபதி பாண்டியன் வீட்டில் ஸ்லீப்பர் செல்லாக இருந்த ஒரு தேவேந்திர பெண் பசுபதி விசுவாசிகளால் கொல்லப்பட்டது! 
 ஸ்டெர்லைட் பிரச்சனையை மடைமாற்ற உருவாக்கப்பட்ட மோதல்தான் இது என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
 கிட்டத்தட்ட நடந்து முடிந்துவிட்ட ஒரு பிரச்சனையை மறுபடி கிளறவுள்ளனர்.
 தேவேந்திரருக்கு ஒரு தலைமை உருவாகாமல் தடுத்துவிட்ட திராவிடம் தன் முயற்சியில் சற்றும் சளைக்காமல் வடக்கு போல தெற்கையும் இரண்டாக பிளந்து நடுவில் அமர முயன்றுகொண்டே இருக்கிறது!
 தேவேந்திர மக்கள் தெளிவாக இருக்கின்றனர்.
 மற்ற அனைத்து சமூகங்களும் கவனமாக இருக்க வேண்டும்! 
 
 

Monday, 10 February 2025

பறையர் இனி எவ்வழி

பறையர் இனி எவ்வழி?

 சாதி என்கிற அளவுகோலின் படி மட்டுமே பார்த்தால் 
பள்ளர் பறையர் இருவருமே தொடங்கிய இடம் ஏறத்தாழ ஒன்றுதான்!

 பள்ளர் எவரையும் நம்பாமல் தம்மை மட்டுமே நம்பி தமது குடி அடையாளத்துடன் தமக்கான மள்ளரியம் என்ற கருத்தியலை உருவாக்கி தாம் தாழ்ந்தவர் என்ற மனப்பான்மையை விட்டொழித்து தமிழ்தேசியத்தையும் அரவணைத்தபடி தம் கையூன்றி மேலெழுந்து தேவேந்திரர் என்று பெயர்பெற்று பட்டியல் சலுகையைத் தூக்கியெறியும் தன்னம்பிக்கையுடன் களத்திலும் பிற சாதிகளுக்கு வெட்டுக்கு வெட்டு கொடுக்கும் துணிச்சலுடன் நிற்கின்றனர்.
 அவர்கள் கடந்த வந்த பாதையில் பிழைகளும் சமரசங்களும் இருக்கலாம்!
 ஆனால் இன்று தேவேந்திர தலைவர்களும் மக்களும் பிறர் மதிக்கும் நிலைக்கு வந்துவிட்டனர்.
  
 அதேநேரத்தில் பறையர் தலித்தியத்தின் பின்னால் போனார்கள்!
தம்மைத் தாமே தாழ்த்திக்கொண்டு தலித்திய இயக்கத்தை வளர்த்த மலைச்சாமி தேவேந்திரரை வீழ்த்தி அந்த இயக்கத்தை அபகரித்து கட்சியாக்கி திராவிடத்தை துணைகொண்டு பிற சாதிப் பெண்களைத் துரத்தி பல்வேறு சாதிக் கொடுமைகளுக்கும் அவப்பெயருக்கும் ஆளாகி சிறிது தமிழ்தேசியத்தின் மீதும் சவாரி செய்து வளர்ந்து கடைசியில் திராவிடத்திடம் விலைபோய் மண்டியிட்டு கடைசியில் தன் குடிநீரில் தானே மலம் கழித்துவிட்டு நிற்கின்றனர்! 

 பறைத் தமிழர்கள் இனியும் பிதுக்கப்பட்ட புராணத்தை பாடிக்கொண்டு திராவிடத்தின் செருப்பின் கீழ் தலித்திய அசிங்கத்தில் ஒட்டிக் கிடக்கப் போகிறார்களா?! 
 அல்லது தேவேந்திரத் தமிழர்களைப் போல தேசியத்தை அரவணைக்கும் குடிவழி அரசியலைப் பிடிக்கொண்டு மேலெழும்பி வரப் போகிறார்களா?!
 

Wednesday, 28 August 2024

தேவேந்திரர் தாழ்ந்தது எவ்வாறு

தேவேந்திரர் தாழ்ந்தது எவ்வாறு

  "தெலுங்கர் ஆட்சியில் தமிழர் நிலை" (தேதி:16.08.2016) பதிவின் ஒரு பகுதி

 //நாயக்க ஆட்சிமுறை பாளையக்காரர்கள் மூலம் மிக மோசமான சுரண்டலை குடிமக்களிடம் நடத்தியது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டோர் வேளாண்குடிகளான பள்ளர்களே. பள்ளு இலக்கியங்கள் அன்றைய பள்ளர்களின் வாழ்க்கையை பதிவு செய்துள்ளன.

பள்ளர் குலப் பெண்களும் ஆண்களும் 'கொத்தடிமைகளாக'க் கூட குறிக்கப்பட்டுள்ளனர்.
(திருமலை முருகன் பள்ளு 13:1-6).

விதைப்பு முதல் அறுவடை வரை செய்த பள்ளர்களுக்கு கூலியாக எதுவுமே தரப்படவில்லை. இவர்களுக்கு கிடைத்த பங்கு குடிசுதந்திரம், பிள்ளையாரடி, அரிநெல் என்றழைக்கப்பட்டது.

ஆனால் இவை பள்ளர்களின் தேவைக்குப் போதவில்லை என்றும் இவையும் சரியாகக் கொடுக்கப்படவில்லை என்றும் தெரியவருகிறது.

இதனால் பள்ளர்கள் மிக வறுமையில் வாடினர்.
(வையாபுரிப்பள்ளு 203-204; 
திருமலை முருகன் பள்ளு 158; 
மாந்தைப்பள் 89)

தன் கூலிக்கென ஒதுக்கிய நிலம் நாள் முழுவதும் ஒரு பன்றி மூக்கினால் கிளறும் அளவினது என்றும் அதில் தினமும் முழு கதிர் விளைந்தாலும் தனக்குப் பத்தாது என்றும் முக்கூடற் பள்ளுவில் (67) ஒரு பள்ளர் கூறுமாறு வருகிறது.

பட்பிரந்தத்தில் (82) நீண்ட கால்களையுடைய மாடன் என்பவன் ஒரே அடியால் அளந்துவிடும் அளவில் தனக்கான நிலம் இருந்ததாகவும் ஆனால் அதை உழவும் கலப்பை, மாடுகள், விதை போன்றவை தன்னிடம் இல்லை என்றும் ஒரு பள்ளர் கூறுவதாக வருகிறது.

செட்டியார்களிடம் வாங்கிய கடனுக்காக தனக்கான நெல்லிலிருந்து பள்ளர்கள் அளந்து கொடுத்ததை பட்பிரபந்தம் (139) கூறுகிறது.
மாடுகளை கொடுத்ததை வையாபுரிப் பள்ளு(115:1-3) கூறுகிறது.

பாளையக்காரர்களுக்கு கீழ் இருந்தோர் பண்ணை விசாரிப்பான்கள், இவர்கள்தான் பண்ணை என்ற பெயரில் நிலத்தைக் கையில் வைத்துக்கொண்டு மக்களை வேலைவாங்கினர் (இவர்கள் கணக்கர், மணியம், முறையம்பிள்ளை எனவும் அழைக்கப்பட்டுள்ளனர்).
இவர்களை திருடன், கைக்கூலி, வம்புக்காரன் என்றெல்லாம் திருமலை முருகன்பள்ளு(112) வெறுப்புடன் கூறுகிறது.

நாயக்க அரசின் வருமானம் நான்கில் ஒரு பங்கு நில விளைச்சல் மூலமே கிடைத்துள்ளது (டி.வி.மகாலிங்கம், Administration and Social life under Vijayanagar, பக்.48-50).

இது நிலவுடைமைக்காரர்கள் மூலம் பள்ளர்களிடமிருந்து சுரண்டி எடுக்கப்பட்டுள்ளது. நிலவுடைமை அதிகாரிகளான கர்ணம், மணியக்காரர், தலையாரி ஆகியோர் பெரும்பாலும் தெலுங்கு பேசும் பிராமணராகவோ, ரெட்டிகளாகவோ, நாயுடுகளாகவோ இருந்தனர்.
சிலர் தமிழ்பேசும் மறவர், கள்ளர் வகுப்பினராக இருந்தனர் (Burton Stein, Peasent state an society in medieval south india, p.417).

கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது (கண்.683-699) ஏராளமான செல்வந்தர்களைக் குறிப்பிடுகிறது அவர்கள் பெரும்பாலும் தெலுங்கு நாயக்கர்கள்.//

 //பள்ளு இலக்கியங்கள் மழையை எதிர்பார்த்து பள்ளர்கள் தவிப்புடன் இருந்ததை பதிவு செய்துள்ளன. 
அரசின் பாராமுகத்தால் நலிந்த வேளாண்மை மக்களைப் பஞ்சத்தில் தள்ளியது.
1622 முதல் 1770 வரை பதினான்கு முறை பஞ்சம் ஏற்பட்டு பலர் இறந்தனர்!! பலர் இடம்பெயர்ந்தனர்!
அரசு இவர்களுக்காக எந்த நிவாரண நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை
(தமிழக வரலாறு 1565 - 1967, கு.ராஜய்யன்).//

//அதுவரை இல்லாத வழக்கமாக மனுதர்மத்தை சட்டமாக்கி பின்பற்றவேண்டிய கட்டாயத்தை நாயக்கர்கால இலக்கியங்கள் கூறுகின்றன (திருவிளையாடற் புராணம் மதுரை.561,521; 
சேதுபதி விறலிவிடுதூது கண்.291,292;
கூடற்புராணம் 2; 
கமலாலய சிறப்பு 854-856,889; 
திருவருணைக் கலம்பகம், கண்.65:3; 
குமரேச சதகம் 12:5-6; 
திரு.முரு.பள்.,103).

நாயக்க மன்னர்கள் தங்கள் பெயருக்கு முன் 'வருணாசிரம தர்மங்கனுபாலித்த' என்ற பட்டத்தைப் போட்டுக்கொண்டனர் (ந.க.மங்களமுருகேசன், இந்திய சமுதாய வரலாறு, ப.311).

பள்ளர், பறையர், புலையர் கீழ்சாதி என்றும் (திரு.முரு.பள்.103),
தீண்டாத சாதியினர் என்றும் (ஐவர் ராசாக்கள் கதை, வரி 888-889; கந்.காத.,கண் 93-96)
கொத்தடிமைகள் என்றும் (பட்.பிர.93; மு.பள்.13:13-16),
இழிகுலத்தினர் என்றும் (கம.சிற.1-2) குறிப்பிடப்படுகின்றனர்.
பள்ளர்கள் அடிமைகளாக விற்கப்பட்டும் உள்ளனர் (கூள.விற.க.364).//

 //பண்ணைவிசாரிப்பான்கள் வேளாண்மை பெண்களை திட்டுவதும், அடிப்பதும், காமப்பசிக்கு இரையாக்குவதும் நடந்துள்ளது (மா.பள்.51; பட.பிர.105,106; திரு.முரு.பள். 152).//

மிக விரிவாக அறிய தேடுக:- தெலுங்கர் ஆட்சியில் தமிழர் நிலை வேட்டொலி

தெலுங்கர் ஆட்சியில் தமிழர் நிலை

தெலுங்கர் ஆட்சியில் தமிழர் நிலை

16.08.2016 அன்றைய பதிவு

சோழர் வீழ்ந்து பாண்டியராட்சி மீண்டும் மலர்ந்தது,  அதன் பிறகு வாரிசுரிமைப் போர்களால் பாண்டியர் வலுகுன்றிய வேளையில் துருக்கியர்களான டெல்லி சுல்தான்கள் தமிழகத்தின் மீது மூன்று முறை படையெடுத்தனர் இதனால் பாண்டிய அரசு மேலும் வலுகுன்றியது.
டெல்லி சுல்தான் ஆட்சி மதுரை வரை பரவியது.
பாண்டியர்கள் தென்தமிழ்நாட்டில் சுருங்கிக் கொண்டனர்.
இந்நிலையில் டெல்லிக்கு கட்டுப்படாமல் மதுரையை கிபி 1335 இல் தனிநாடாக அறிவித்தார் ஜலாலுதின் அஹ்ஸான்கான்.
வடக்கே சித்தூர் முதல் திருச்சிவரை சம்புவரையர்களும் நடுவில் திருச்சி முதல் ராமேஸ்வரம் வரை மதுரை சுல்தான்களும் 
ராமேஸ்வரம் முதல் குமரிமுனை வரை தென்காசிப் பாண்டியர்களும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். குழப்பமான இந்த காலத்தில் தெலுங்கர் கன்னடரையும் சேர்த்துக்கொண்டு தமிழகத்தின்மீது படையெடுத்தனர்.

 இந்த விஜயநகர படையெடுப்பு  மதுரையில் (40 ஆண்டுகளாக) சுல்தான்கள் (இசுலாமியர்) நடத்திய கொடுமைகளை அறிந்து இந்து மதத்தைக் காக்க நடந்ததாக கூறப்படுகிறது.
தெலுங்கு விஜயநகர பேரரசு குமாரகம்பணன் தலைமையில் முதலில் வடக்கே சம்புவரையர்களை கிபி 1362 ம் ஆண்டு வாக்கில் வென்றது.
பிறகு கிபி 1371 ல் மதுரை சுல்தான்களை வென்றது.
பிறகு 1535 வாக்கில் பாண்டியர்களையும் வென்று உச்சநிலையை எய்தியது.
குமாரகம்பனனின் மனைவி எழுதிய 'மதுராவிஜயம்' துருக்கர் ஆட்சி செய்த கொடுமைகளாக கூறுவன,
*கோயில் வழிபாடு நிறுத்தப்பட்டு, நகரத்தில் மிருதங்க ஒலிகள் நின்று நரிகள் ஊளையிட்டவனாம். 
*யாகங்களுக்கும் மந்திரங்களுக்கும் பதிலாக மாமிசம் சுடுவதும் துருக்க குரலொலிகளும் கேட்டனவாம்.
*மதுரைப் புறநகர தென்னந்தோப்புகள் வெட்டப்பட்டு கழுமரங்கள் நடப்பட்டு அதில் மனித மண்டையோடுகள் தோரணமாகக் கட்டப்படடனவாம். *துலுக்கர் வெட்டிக் குவித்த பசுக்களின் குருதியால் தாமிரபரணி சிவந்து ஓடியதாம்.
*வேதமும் நீதியும் மறைந்து தர்மமும் கருணையும் சிறிதுமின்றி போனதாம்.
*அபாக்கியர்களான திராவிடர்களின் நெற்றியில் ஏக்கமே எழுதப்பட்டுள்ளதாம்.
இதையே நாயக்க வம்சாவளி இலக்கியங்களும் கூறுகின்றன.
ஆனால் கங்காதேவியின் இந்த வர்ணனை முழுக்க உண்மையில்லை என்கிறார் ஏ.கிருஷ்ணசாமி (The Tamil country under vijayanagar, p.99) இந்த அளவு கொடுமைகள் அன்று நடந்ததாக வேறு எந்த சான்றும் இல்லை. ஆனாலும் மதசடங்குகளுக்கு இன்னல்கள் இருந்துள்ளன.
மதுரையில் 1335-1378 காலகட்டத்தில் நடந்த வேற்றின இசுலாமியர் ஆட்சி தமிழக மக்களுக்கு பிடித்ததாக இல்லை. 
இது நாயக்கராட்சி தமிழகத்தில் நுழைய வசதியாக அமைந்தது.
நாயக்கராட்சி முழுக்க இசுலாமியர்களுக்கு எதிரானதாக இல்லை.
நாயக்கராட்சியில் இசுலாமியர்களும் பங்குபெற்றிருந்தனர் (ராமைய்யன் அம்மானை பக் 20, 22).
நாயக்கராட்சி தமிழகத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியது என்று அக்கால இலக்கியங்களின் மூலம் அறிய இப்பதிவு முயலும்.
நாயக்கர் கால தமிழ் இலக்கியங்கள் எதுவுமே நாயக்க மன்னர்களைப் பாராட்டவில்லை, 
சுற்றிவளைத்து, பாராட்டுவது போல அறிவுரைதான் கூறியுள்ளன.
அதாவது மன்னருக்குண்டான தகுதிகளைக் கூறி அவ்வாறு இருப்பவன் சிறந்த மன்னன் என்றுதான் கூறியுள்ளன.
நாயக்க மன்னர்கள் சுகபோகமாக வாழ்ந்தார்களே ஒழிய மக்களுக்கும் அவர்களுக்கும் நேரடித் தொடர்பு இருந்திருக்கவில்லை.
மன்னருக்கும் அவரது தளபதியான தளவாய்க்கும் கட்டுப்பட்ட பாளையக்காரர்களே அனைத்தும் செய்தனர்.
இராமைய்யன் அம்மானை பக்கம் 23-26 ல்  திருமலை நாயக்கரின் கீழ்
 36 தெலுங்கு பாளையக்காரர்களும், 
12 இசுலாமியர்களும், 
24 தமிழ் பாளையக்காரர்கள்
 செயல்பட்டதாகவும் கூறுகிறது.
(இந்த 24 தமிழரில் 8 தமிழர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வ பாளையக்காரர்கள் மற்றவர்கள் பாளையக்காரர்களாகவோ அல்லது பாளையக்காரர் போல செயல்பட்டவராகவோ இருந்தனர். இசுலாமியரின் பெயர்களை வைத்துப் பார்க்கும்போது 12ல் இருவர் தமிழராகத் தெரிகின்றனர்).

தெலுங்கர்களுக்கு அடுத்து பாளையக்காரர்களாக இருந்த தமிழர்களில் தென் தமிழகத்தில் மறவர்களும், கொங்குபகுதியில் கவுண்டர்களும், திருச்சியில் மழவராயர்களும், ராமநாதபுரத்தில் அம்பலக்காரர்களும் இருந்துள்ளனர்.

நாயக்க ஆட்சிமுறை பாளையக்காரர்கள் மூலம் மிக மோசமான சுரண்டலை குடிமக்களிடம் நடத்தியது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டோர் வேளாண்குடிகளான பள்ளர்களே. பள்ளு இலக்கியங்கள் அன்றைய பள்ளர்களின் வாழ்க்கையை பதிவு செய்துள்ளன.

பள்ளர் குலப் பெண்களும் ஆண்களும் 'கொத்தடிமைகளாக'க் கூட குறிக்கப்பட்டுள்ளனர்.
(திருமலை முருகன் பள்ளு 13:1-6).

விதைப்பு முதல் அறுவடை வரை செய்த பள்ளர்களுக்கு கூலியாக எதுவுமே தரப்படவில்லை. இவர்களுக்கு கிடைத்த பங்கு குடிசுதந்திரம், பிள்ளையாரடி, அரிநெல் என்றழைக்கப்பட்டது.

ஆனால் இவை பள்ளர்களின் தேவைக்குப் போதவில்லை என்றும் இவையும் சரியாகக் கொடுக்கப்படவில்லை என்றும் தெரியவருகிறது.

இதனால் பள்ளர்கள் மிக வறுமையில் வாடினர்.
(வையாபுரிப்பள்ளு 203-204; 
திருமலை முருகன் பள்ளு 158; 
மாந்தைப்பள் 89)

தன் கூலிக்கென ஒதுக்கிய நிலம் நாள் முழுவதும் ஒரு பன்றி மூக்கினால் கிளறும் அளவினது என்றும் அதில் தினமும் முழு கதிர் விளைந்தாலும் தனக்குப் பத்தாது என்றும் முக்கூடற் பள்ளுவில் (67) ஒரு பள்ளர் கூறுமாறு வருகிறது.

பட்பிரந்தத்தில் (82) நீண்ட கால்களையுடைய மாடன் என்பவன் ஒரே அடியால் அளந்துவிடும் அளவில் தனக்கான நிலம் இருந்ததாகவும் ஆனால் அதை உழவும் கலப்பை, மாடுகள், விதை போன்றவை தன்னிடம் இல்லை என்றும் ஒரு பள்ளர் கூறுவதாக வருகிறது.

செட்டியார்களிடம் வாங்கிய கடனுக்காக தனக்கான நெல்லிலிருந்து பள்ளர்கள் அளந்து கொடுத்ததை பட்பிரபந்தம் (139) கூறுகிறது.
மாடுகளை கொடுத்ததை வையாபுரிப் பள்ளு(115:1-3) கூறுகிறது.

பாளையக்காரர்களுக்கு கீழ் இருந்தோர் பண்ணை விசாரிப்பான்கள், இவர்கள்தான் பண்ணை என்ற பெயரில் நிலத்தைக் கையில் வைத்துக்கொண்டு மக்களை வேலைவாங்கினர் (இவர்கள் கணக்கர், மணியம், முறையம்பிள்ளை எனவும் அழைக்கப்பட்டுள்ளனர்).
இவர்களை திருடன், கைக்கூலி, வம்புக்காரன் என்றெல்லாம் திருமலை முருகன்பள்ளு(112) வெறுப்புடன் கூறுகிறது.

நாயக்க அரசின் வருமானம் நான்கில் ஒரு பங்கு நில விளைச்சல் மூலமே கிடைத்துள்ளது (டி.வி.மகாலிங்கம், Administration and Social life under Vijayanagar, பக்.48-50).

இது நிலவுடைமைக்காரர்கள் மூலம் பள்ளர்களிடமிருந்து சுரண்டி எடுக்கப்பட்டுள்ளது. நிலவுடைமை அதிகாரிகளான கர்ணம், மணியக்காரர், தலையாரி ஆகியோர் பெரும்பாலும் தெலுங்கு பேசும் பிராமணராகவோ, ரெட்டிகளாகவோ, நாயுடுகளாகவோ இருந்தனர்.
சிலர் தமிழ்பேசும் மறவர், கள்ளர் வகுப்பினராக இருந்தனர் (Burton Stein, Peasent state an society in medieval south india, p.417).

கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது (கண்.683-699) ஏராளமான செல்வந்தர்களைக் குறிப்பிடுகிறது அவர்கள் பெரும்பாலும் தெலுங்கு நாயக்கர்கள்.

சதகநூல்கள் அந்தணர்களையும் வெள்ளாளர்களையும் புகழும் அதேவேளையில் வணிகர்களை வெறுப்புடன் பார்க்கின்றன.
ஏனென்றால் நாயக்கராட்சி வணிகத்தின் மூலம் பொருளீட்டுவதில் மட்டுமே குறியாக இருந்துள்ளது. சங்ககால தமிழ் இலக்கியங்கள் வீரத்தையும் காதலையும் பேசுவது போல நாயக்கர்கால சதகநூல்கள் செல்வம் சேர்ப்பதைப் பற்றியே முக்கியமாகப் பேசுகின்றன (அறப்பளீசுர சதகம்,37; கயிலாசநாத சதகம்,10, தண்டையலார் சதகம்,97,28).

ஆங்கிலேய ஆட்சிதான் நிலவுடைமைச் சமூகத்தை உருவாக்கி அதுவரை இருந்த கிராம கூட்டு உற்பத்தியை சிதைத்து அடிமட்டம் வரை சுரண்டியெடுத்ததாக பலரும் கூறுவர்.
ஆனால் தமிழகத்தில் நாயக்கராட்சி ஆயங்கார முறை மூலம் அதை முன்பே செய்துள்ளது.
அதாவது மக்களை ஆள்வது நோக்கமில்லை மக்களை முடிந்த அளவு சுரண்டுவதுதான் நோக்கம்.

சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது போல நாயக்கர் காலத்தில் அணைகள் எதுவும் கட்டப்படவில்லை. குளங்கள்தான் பல வெட்டப்பட்டுள்ளன.
அதுவும் பண்ணை விசாரிப்பான்களாலும் பாளையக்காரர்களாலுமே பொறுப்பெடுத்து கட்டப்பட்டுள்ளன.

மன்னர்கள் வரி வாங்குவதைத் தவிர எதுவுமே செய்யவில்லை.
மக்களுக்காக எந்த பெரிய திட்டமும் மேல்மட்ட அரசினால் செயல்படுத்தப் படவேயில்லை.

பாளையக்காரர்களே சிறிய அளவிலான பொதுத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்
(சங்கரலிங்க உலா கண்.289-301; 
மான்விடுதூது கன்.153-163; 
கமலாயச் சிறப்பு 51,101; 
குற்றாலக் குறவஞ்சி 93,131; 
புலவராற்றுப்படை கண்.315-321; 
அரிச்சந்திர புராணம் -நகர்சிறப்பு-2; 
கூடற்புராணம் 86).

பொதுத்திட்டங்களுக்கும் மக்களிடமே விளைச்சலில் இருந்து தனியாக வசூலித்துள்ளனர் (முக்கூடற்பள்ளு 139; 
மாந்தைப்பள் 88; 
வையாபுரிப் பள்ளு 91,199; 
பட்பிரபந்தம் 25,139; 
சமுத்திரவிலாசம் 2; 
கூளப்ப நாயக்கன் விறலிவிடுதூது க.957).

இதனால் பள்ளு இலக்கியங்கள் மழையை எதிர்பார்த்து பள்ளர்கள் தவிப்புடன் இருந்ததை பதிவு செய்துள்ளன. 
அரசின் பாராமுகத்தால் நலிந்த வேளாண்மை மக்களைப் பஞ்சத்தில் தள்ளியது.

1622 முதல் 1770 வரை பதினான்கு முறை பஞ்சம் ஏற்பட்டு பலர் இறந்தனர்!! பலர் இடம்பெயர்ந்தனர்!
அரசு இவர்களுக்காக எந்த நிவாரண நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை
(தமிழக வரலாறு 1565 - 1967, கு.ராஜய்யன்).

அதாவது நாயக்கர் ஆட்சி தொடங்கிய சில ஆண்டுகளிலேயே பற்றாக்குறை ஏற்படத் தொடங்கிவிட்டது.
இதை சமாளிக்க நாயக்க மன்னர்கள் எதுவும் செய்யவில்லை.
சத்திரங்கள் பாளையக்காரர்களால் தொடங்கப்பட்டன.
(சங்கரலிங்க உலா -பின்னிணைப்பு)
உழைத்த மக்கள் உணவுக்கு கையேந்தி சத்திரத்தில் நின்றனர்.
அந்த சத்திரங்களிலும் மோசமான உணவே கிடைத்தது.

15ம் நூற்றாண்டில் வாழ்ந்த காளமேகப் புலவரும் இதனைப் பதிவுசெய்துள்ளார்.
'கல்லும் நெல்லும் கலந்த சோறு, வாடிப்போன கத்திரிக்காய், அதில் உப்பில்லை, ஈக்கள் விழுந்து கிடந்தன' என்று அவர் குறிப்பிடுகிறார்.
இன்னொரு சத்திரத்தில் மிகவும் கால தாமதமாக உணவு தயாரிக்கப் பட்டதையும் அவர் பதிவு செய்துள்ளார் (தனிப்பாடல் திரட்டு, ப.34, 67).

பள்ளர்கள் மட்டுமன்றி அனைத்து பிரிவினரும் பாதிக்கப்பட்டனர். புலவர், சோதிடர், கொல்லர், ஓவியக்கலைஞர், ஆசிரியர், குயவர், பஞ்சாங்க புரோகிதர் முதலியவர்கள் வறுமைக்குரியவர்கள் என்று தனிப்பாடல் ஒன்று கூறுகிறது (த.தி.க., பக் 244).

வாத்தியார், குரு, கவிவாணர், மறையோர், பண்டிதர், தச்சாண்டி, தட்டான், சவரகன் (அம்பட்டையன்) போன்றவர்களை கடன் கொடுக்கக்கூடாதவர்கள் என்று கயிலாசநாதர் சதகம் (31) கூறுகிறது.

வரி தராதவர்களுக்கு போரில் தோற்றவர்களுக்கான தண்டனைகள் கொடுக்கப்பட்டன. சிறைதண்டனையும், உறுப்புகளைச் சிதைப்பதும் நடந்துள்ளன. திருமலை நாயக்கருக்குப் பணியாதவர்களின் முதுகுத் தோலை உரித்ததாகவும், முட்டி எலும்பைத் தட்டி எடுத்ததாகவும் ராமைய்யன் அம்மானை (பக் 53, 5-11) தெரிவிக்கிறது.

கண்களைத் தோண்டியெடுப்பது, காதுகளை அறுப்பது, கொதிக்கும் நெய்யில் கைவிடச்செய்வது, எண்ணெயில் நனைத்த துணியை கையில் சுற்றி தீவைப்பது, தூக்கிலிடுவது, தலையை வெட்டுவது போன்ற நாயக்கர் கால கொடூர தண்டனைகள் அக்காலத்தில் கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப வந்த பாதிரியார்கள் எழுதிய கடிதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன (R.Sathyanatha Aiyar, Tamilaham in the 17th century).

அதுவரை இல்லாத வழக்கமாக மனுதர்மத்தை சட்டமாக்கி பின்பற்றவேண்டிய கட்டாயத்தை நாயக்கர்கால இலக்கியங்கள் கூறுகின்றன (திருவிளையாடற் புராணம் மதுரை.561,521; 
சேதுபதி விறலிவிடுதூது கண்.291,292;
கூடற்புராணம் 2; 
கமலாலய சிறப்பு 854-856,889; 
திருவருணைக் கலம்பகம், கண்.65:3; 
குமரேச சதகம் 12:5-6; 
திரு.முரு.பள்.,103).

நாயக்க மன்னர்கள் தங்கள் பெயருக்கு முன் 'வருணாசிரம தர்மங்கனுபாலித்த' என்ற பட்டத்தைப் போட்டுக்கொண்டனர் (ந.க.மங்களமுருகேசன், இந்திய சமுதாய வரலாறு, ப.311).

பள்ளர், பறையர், புலையர் கீழ்சாதி என்றும் (திரு.முரு.பள்.103),
தீண்டாத சாதியினர் என்றும் (ஐவர் ராசாக்கள் கதை, வரி 888-889; கந்.காத.,கண் 93-96)
கொத்தடிமைகள் என்றும் (பட்.பிர.93; மு.பள்.13:13-16),
இழிகுலத்தினர் என்றும் (கம.சிற.1-2) குறிப்பிடப்படுகின்றனர்.
பள்ளர்கள் அடிமைகளாக விற்கப்பட்டும் உள்ளனர் (கூள.விற.க.364).

1623ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு கம்மாளரிடையேயான 5பிரிவுகள் கலக்கக்கூடாது என உத்தரவிட்டதைக் கூறுகிறது.

1705ல் மங்கம்மாள் காலத்தில் சாதி அடையாளங்களைப் பேண மானியங்கள் தரப்பட்டதை ஒரு கல்வெட்டு கூறுகிறது.
இதனை ஐரோப்பிய பாதிரிகளும் குறிப்புகளும் சான்றாக உள்ளன (R.Sathiyanatha Aiyar, 1980, p.193).

அக்காலத்தில் தமிழில் அறிமுகமான சதக நூல்களும் சாதிய முறையை ஊக்குவிப்பதாகவும் (கயிலாச சதகம் 28) சாதிப் படியே தண்டனைகள் வழங்கவேண்டியது அரசின் கடமை என்றும் (அறப்பளீகர சதகம் 11) மனுஸ்மிருதி சிந்தனையைப் பிரதிபலிக்கின்றன.

அதுவரை தோன்றாத சாதிய நூல்கள் தோன்றின. சாதிய ஏற்றத்தாழ்வுகள் காரணமாக கடைநிலையில் இருந்த பரதவர், பள்ளர், பறையர், சாணார் போன்ற சாதியினரை கிறிஸ்தவ பாதிரியார்கள் ஆதரவு காட்டி மதம் மாற்றினர்.

பெர்ணான்டஸ் என்ற பாதிரியாரால் 1592ம் ஆண்டு இயேசு சபை (Jesuits) என்ற முதல் கிறித்து மிஷனரி வீரப்ப நாயக்கன் என்ற மதுரை மன்னனின் அனுமதியுடன் தொடங்கப்பட்டது!
சேதுபதி மன்னனான சடைக்கத்தேவனை வெல்வதற்கு உதவியதற்காக ராமேசுவரம் தீவு  பறங்கியருக்கு அளிக்கப்பட்டது (ராமைய்யன் அம்மானை 8:22-23).

பிராமணர்களை வானளவு புகழ்ந்து எழுதுகின்றன நாயக்கர்கால சதக நூல்கள் (அறப்பளீசுர சதகம், 55; குமரேச சதகம்,2; கயி.சத.3).

1604ல் தமிழகம் வந்த பாதிரியார் ராபர்ட்-டி-நொபிலி வருணமுறை அரசு ஆதரவும் செல்வாக்கும் பெற்றிருந்ததாகக் பதிவுசெய்துள்ளார்.
அவர் மதுரையில் பத்தாயிரம் பிராமண மாணவர்கள் கல்வி பயின்றதாகவும், பிராமணர் தவிர யாருக்கும் உயர்கல்வி பெற உரிமை இல்லை என்றும் கூறுகிறார் (History of nayakas of madura, p.194, ஆர்.சத்தியநாதய்யர்).

ஆனால் பிராமணரல்லாதாருக்கு வெள்ளாளர் ஆதரவில் நடந்த சைவமடங்கள் கல்வி புகட்டின (Social history of tamils under vijayanagar, M.Sivanantham, p.63-64).ஆனாலும் அடித்தட்டு மக்கள் பரவலாகக் கல்வி பெற முடியாமல் இருந்தது.

கல்வியில் வடமொழி புகுந்தது (மாந்.பள்.21) சமஸ்கிருதமும் தெலுங்கும் தமது பொற்காலத்தை நாயக்கர் காலத்தில் அடைந்தன. இவ்விரு மொழிகளிலும் கலை மற்றும் இலக்கியம் வளர நாயக்கர்கள் பாடுபட்டனர் ( இதனை கு.ராஜய்யன் விரிவாக எழுதியுள்ளார்).

வடமொழிக்கும் தமிழுக்கும் சங்கங்கள் இருந்ததாக கூடற்புராணமும்(154), திருக்குற்றால மகவந்தாதியும்(10) கூறுகின்றன.

ஆரியம், கன்னடம், வடுகு (தெலுங்கு), தமிழு என நான்கு சங்கங்கள் இருந்ததாக கூளப்பநாயக்கன் விறலிவிடுதூது (கண்.188-189) கூறுகிறது.

அக்காலப் புலவர் தமிழும் தெலுங்கும் அறிந்துவைத்திருந்ததாக சேதுபதி பணவிடுதூது (க.135) கூறுகிறது.

தமிழ் மொழி வறுமைக்காலத்தில் இருந்தது. 
நாயக்க மன்னர்கள் தமிழை வெறுத்தனர் (மான்விடுதூது இணைப்பு; சுப்பிரதீபக் கவிராயர்,த.தி.,பக்.197)
நாயக்கர்காலத்தில் எங்கும் தெலுங்கே கொடிகட்டிப் பறந்தது (படிக்காசு புலவர், த.தி., பக்.12).

சிற்றிலக்கியங்கள் மட்டுமே தமிழைக் காப்பாற்றி வந்தன.
திருக்காளத்தி நாதருலா, திருக்கழுக்குன்ற உலா, திருமலையாண்டவர் குறவஞ்சி, கமலாலய அம்மன் பள்ளு ஆகிய நாயக்கர் கால சிற்றிலக்கியங்கள் நாயக்கரைப் புகழாது சோழரையும் பாண்டியரையும் புகழ்கின்றன.
நாயக்கர்களின் வைணவ மதத்திற்கு எதிராக சைவத்தைப் போற்றுகின்றன.

சதக நூல்கள் மனுதர்மத்தை அடியொற்றி பெண்களை இழிவாக சித்தரிக்கின்றன (அற.சத.35; தண்டலையார் சதகம், 85,86; குமரேச சதகம், 51).
வறுமை காரணமாக மனைவியை விற்று வாழ்க்கை நடத்திய சிலரை கயிலாசநாதர் சதகமும் (13), குமரேச சதகமும்(32) கூறுகின்றன.

நாயக்க அரசர்கள் அழகான பெண்கள் கண்ணில்பட்டால் அவளை தன் அரண்மனைக்கு கூட்டிச்செல்வதும் நடைமுறையாக இருந்துள்ளது (T.V.Mahalingam, South Indian Polity, p.63).

நாயக்கர் காலத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கம் அதிகம் இருந்தது. சேதுபதி மன்னன் சடைக்கதேவனுடன் அவனது மனைவி உடன்கட்டை ஏறினாள்.
ராமநாதபுர சேதுபதியோடு 47 பெண்கள் உடன்கட்டை ஏறினர்.
திருமலை நாயக்கனோடு 200 பெண்கள் உடன்கட்டை ஏறினர்.

பண்ணைவிசாரிப்பான்கள் வேளாண்மை பெண்களை திட்டுவதும், அடிப்பதும், காமப்பசிக்கு இரையாக்குவதும் நடந்துள்ளது (மா.பள்.51; பட.பிர.105,106; திரு.முரு.பள். 152).

பரத்தைத் தொழில் பெருகியது. பரம்பரையாக தனது மகளை வைத்து தொழில் செய்யும் தாசி குலம் தோன்றியது. தாசியின் தாய் சாராயம், மருந்து வாங்கவும் தூது செல்லவும் சில பெண்களை வைத்துக்கொண்டு (மூவரையன் விறலிவிடுதூது க.271; கூள.விற.,கண்.230-240), தன் மகளை வைத்து தொழில் செய்ததை (கும.சத.75; கூள.காத.கண்.318-319) அறியமுடிகிறது.

விறலிவிடுதூதுக்கள் பரத்தைமையால் சீரழிந்தவர்களின் நிலையைப் பதிவுசெய்யவே எழுந்தன.

மக்கள் அனைவரும் குடிக்கு அடிமையாகவும் ஒழுக்கம் தவறியும் காணப்பட்டனர்.

மக்களிடையே மூடநம்பிக்கைகள் அதிகம் நிலவின. சகுனம், செய்வினை, வசியம் பற்றி பல குறிப்புகள் இலக்கியங்களில் காணப்படுகின்றன.

சிற்றூர்களில் உள்ள தெய்வங்களின் தலபுராணம் வடமொழித் தொடர்பு டையவையாக மாற்றியமைக்கப் பட்டன.
இதை ஆராய்ந்த எஸ்.அனவரத விநாயகம்பிள்ளை தமிழ்த் தலபுராணங்கள் வடமொழியை மூலமாகக்கொண்டன அல்லவென்று மறுக்கிறார் (மச்சபுராணம் முன்னுரை பக்:8.9)

தகவல்களுக்கு நன்றி: 
அ.ராமசாமி எழுதிய 'நாயக்கர்காலம் இலக்கியமும் வரலாறும்'

சுருங்கக்கூறின்,
தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த தெலுங்கர்கள் மக்களை சுரண்டுவதிலேயே குறியாக இருந்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை இல்லாததாலும் பொதுத்துத் திட்டங்கள் செயல்படுத்தாமல் இருந்ததாலும் மக்களை பஞ்சத்தில் தள்ளியுள்ளனர்.

மனுதர்மத்தின்படி வர்ணாசிரமத்தை நடைமுறைப்படுத்தி சாதியைச் சட்டமாக்கியுள்ளனர்.
குறிப்பிட்ட பிரிவினர் கொழுக்கவும் குறிப்பிட்ட பிரிவினர் நலிவடைவதற்கும் காரணமாக இருந்துள்ளனர்.

சமுதாயத்தில் பெண்கள் நிலை தாழ்ந்துபோகவும் ஒழுக்கம் குலைந்துபோகவும் காரணமாக இருந்துள்ளனர்.

Saturday, 24 August 2024

மறவர் விளைநிலத்தில் பள்ளர் ஊரணி

 மறவர் விளைநிலத்தில் பள்ளர் ஊரணி

 புதுக்கோட்டை மாவட்டம்,
திருமயம்‌ வட்டம்‌,
 செவலூர்‌, 
பள்ளன்‌ ஊரணியின்‌ கிழக்குக்‌  கரையில்‌ நடப்பட்டுள்ள தூணின்‌ கல்வெட்டு. 

காலம்: சகாப்தம்‌ 1569, (கி.பி. 1647). 

 தற்போதைய புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் செவலூர் கிராமத்தில் பள்ளர் சமூகத்திற்கு குடிதண்ணீர் குளம் இல்லாமல் இருந்த காரணத்தால் உலகப்பன் செர்வைகாரர் அவர்களின் ஆணையின் பேரில் மேற்படியூர் நாயகத்தா தேவன், உத்திங்க தேவன், பசுப்பதேவன், சிலம்பத்தேவன் ஆகிய நான்கு மறவர்களது காணியாட்சியான அரங்கன் வயலில் நான்காள் நடவு நிலத்தை விட்டுக்கொடுத்து ஊரணி வெட்டிக்கொள்ள சொன்னது தொடர்பான கல்வெட்டு.

 சான்று:  "தமிழகத் தொல்லியல் கழகம்" வெளியிடும் ஆண்டு இதழான "ஆவணம்" இன் பதினேழாவது பதிப்பு "இதழ்  - 17" (2006 ஆண்டுக்கானது)

 அதாவது தேவேந்திரர் சமூகத்தின் குடிநீர் தேவைக்காக மறவர் சமூகத்தார் விளைநிலத்தை விட்டுக்கொடுத்த சான்று இது!

05.04.2020 அன்று இட்ட பதிவு
தலைப்பு: கிபி 1647 பள்ளருக்காக மறவர் அளித்த கொடை

 

Monday, 11 September 2023

சிதம்பரம் பிள்ளையும் பள்ளரும்

சிதம்பரம் பிள்ளையும் பள்ளரும்

கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார் அவர்கள் தமது சுயசரிதையில் இரண்டு பள்ளர்களைக் குறிப்பிட்டுள்ளார்.

 வ.உ.சி அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்த வேதநாயகம் என்கிற பள்ளரை ஆங்கிலேயர் வழக்கு போட்டு அலைக்கழித்தபோது அவருக்காக வாதாடி வழக்குகள் அனைத்தில் இருந்தும் விடுவித்தார்.
 
[முடிமனில் என்னுடை முன்னோர் நாள் முதல்
அடிமை புரியும் அறிவினைக் கொண்ட
வேத நாயகம் எனும் மேம்படு பள்ளனை
ஏத மில்லாமலே எண்ணிலா வழக்கில்
அமிழ்த்தினர் போலிஸார்;
அனைத்தினும் திருப்பினேன்]

(இதில் 'அடிமையாக இருக்கும் அறிவினைக் கொண்டவர்' என்று பொருள் கொண்டால் அடுத்த வரியில் 'மேம்படு பள்ளர்' என்பதுடன் பொருந்தாது.
'அடிமை வேலை செய்தாலும் அறிவார்ந்தவர்' என்று பொருள் கொள்க)

 அதேபோல வ.உ.சி அவர்கள் சிவ பக்தியில் சிறந்த 'தேசிகன்' என்ற பள்ளர் குடிச் சிறுவனை தனது வீட்டில் வளர்த்து வந்தார். 
 பார்வையற்ற அச்சிறுவனுக்கு வ.உ.சி ஐயாவின் மனைவி கைகளால் உணவூட்டி பராமரித்துள்ளார்.
 ஆனால் அவரது சுற்றத்தார் அச்சிறுவனை சாதிய ரீதியில் தாழ்த்திப் பேசியுள்ளனர். இதனால் அச்சிறுவன் தன்னை கைவிடுமாறு வேண்டியுள்ளார்.
பிள்ளை அவர்கள் தம் மனைவியிடம் இது பற்றி ஆலோசித்துள்ளார்.

[சிவப் பொருள் உணர்ந்த தேசிகன் ஒருவனென்
தவப் பயனால் இலம் தங்கப் பெற்றேன்.
ஊனக் கண்ணினை ஒழித்தவன் நின்றதால்
தானக் குறையினை தவிர்த்திட ஊட்டினள்
குலத்தில் அன்னோன் குறைந்தவன் என்றென்
தலத்தினில் உள்ளோர் சாற்றினர் குற்றம்
கேட்டதும் அவ்வுரை கிழவோன் தன்னை
ஓட்டிடக் கருதி யான் உரமில்லாமையால்
அவளிடத் துரைத்திட அடுக்களை சென்றேன்]

(இதில் அச்சிறுவனைக் 'கிழவோன்' என்று உயர்வாகக் குறிப்பிட்டுள்ளார்)

 அவர் மனைவியோ சாதி ஏற்றத்தாழ்வு கற்பனை தானே அன்றி உண்மை அல்ல என்றும் அதிலும் துறவி போன்ற இச்சிறுவன் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்றும் சுற்றத்தார் பற்றி கவலைப்படாமல் அவனுக்கு தொடர்ந்து பணிவிடை செய்வோம் என்றும் கூறியுள்ளார். 

[எல்லாம் உணர்ந்த என்னுயிர் நாத!
எல்லாம் கடவுளா யிருக்க வேண்டும்
உருவம் முதலிய ஒன்றினும் பேதம்
மருவுதலிலாமை மலை போல் கண்டும்,
கற்பனை யாகக் காணும் குலத்தின்
சொற்பிழை கொளலெனச் சொல்லிய தூய!
துறந்தவர் தமையும் தொடருமோ குலம் இவண்
இறந்த அம் மொழியினை ஏற்றிடா தொழிப்போம்
ஒன்றிடா தமர்த்தி ஊழியம் புரிந்திடின்
பிழையெனார் உலக பேதமை உணர்ந்தோர்]

 'கப்பலோட்டிய தமிழன்' திரைப்படத்திலும் இக்காட்சிகள் வரும்.

 ஐயா அவர்களை முழுமையாக அறிந்துகொள்வது நம் கடமை!

Friday, 14 July 2023

கிருஷ்ணசாமி பற்றி சுருக்கமாக

கிருஷ்ணசாமி பற்றி சுருக்கமாக

 1997 இல் பசுபதி பாண்டியன் ஒடுக்கப்பட்டு அவருக்கு பதிலாக கருணாநிதியால் அடையாளம் காட்டப்பட்டார்..

 1995 தூத்துக்குடி சாதிக் கலவரத்தில் முன்னின்று போராடினார்.
 அது ஜெயலலிதா அரசால் கொடியன்குளம் சம்பவத்தில் முடிந்தது.
1996 தேர்தலில் நின்று வென்றார் 

 1999 மாஞ்சோலை தேயிலைப் போராட்டத்தை முன்னின்று நடத்தினார். 
அது  கருணாநிதி அரசால் தாமிரபரணி படுகொலையில் முடிந்தது.

  2001 தேர்தலில் திமுக வுடன் கூட்டணி வைத்தார்.

 2011 தேர்தலில் அதிமுக வுடன் கூட்டணி வைத்தார்.

2014 இல் மீண்டும் திமுக வுடன் கூட்டணி வைத்தார்

2019 இல் பாஜக வின் கூட்டணியில் இணைந்தார்.

 

Saturday, 4 April 2020

கிபி 1647 இல் பள்ளருக்காக மறவர் அளித்த கொடை

கிபி 1647 இல் பள்ளர் சமூகத்திற்காக மறவர்கள் அளித்த கொடை
கிபி1647ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செவலூர் பள்ளர் சமூக மக்களுக்கு குடிதண்ணீர் குளம் இல்லாமல் இருந்த போது,
உலகப்பன் சேர்வைக்காரர் ஆணையின் பேரில் செவலூரில் உள்ள
நாயகத்தா தேவன்
உத்திங்க தேவன்
பசுப்ப தேவன்
சிலம்பத் தேவன்
ஆகியோரின் நடவு நிலத்தில் செவலூர் பள்ளர் சமூகத்தவர்கள் ஈரானி வெட்டிக் கொள்ள கொடையளிக்கிறார்கள்.
பள்ளர் சமூகத்தின் குடிதண்ணீர் தேவைக்காக தங்களது நடவு நிலத்தையே விட்டுக் கொடுத்த மறவர் பெருங்குடிகளை, பள்ளர் சமூகம் மறந்தாலும்...! வரலாறு மறக்காது, மறைக்கவும் செய்யாது...!
வரலாறு இப்படி இருக்க....
இன்று இருவரையும், இரு துருவங்களாக ஆக்கியது யார்...?
சிந்தியுங்கள், செயல்படுங்கள்...!
(நன்றி: தமிழக தொல்லியல் துறை)
பதிவர்: சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

Thursday, 16 May 2019

கிருஷ்ணசாமி போட்ட வேடம் கலைந்தது

கிருஷ்ணசாமி போட்ட வேடம் கலைந்தது

பதிவு: Kasi Krishna Raja

நரியின் வேடம் கலைந்தது....

கிருஷ்ணசாமி யின் தந்தை ஒரு தெலுகு அருந்ததியர் (சக்கிலியர்).
வளர்த்தவர் தான் குடும்பன் என்று கோர்ட்டுக்கு தாக்கல் செய்த பிராமண பத்திரம் ஒன்றின் copy...

பழந்தமிழ் குலங்களை உள்ளிருந்து கைப்பற்றி ஆளும் வடுக வித்து...
----------
ஏற்கனவே நான் வெளியிட்ட சான்றுகளைக் காண,
தேடுக : கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர் வேட்டொலி

படம்:
Dr.Krishnasamy cannot claim karjppakudumban as his father. Actually one Mr.Rangarajan who belonged to Madari cummunity is the  biological father of .Krishnasamy....

... father Rangarajan and mother Thamarai both are belong to Madari cummunity (Arunthayhiyar)

கையொப்பம்
நகர நிலவரித் திட்டம்
கோயம்புத்தூர் (தெற்கு)

கையொப்பம்
வட்டாட்சியர்
கோவை (தெற்கு)

Tuesday, 29 May 2018

கச்சநத்தம் பள்ளர் பெருமக்களே!

கச்சநத்தம் பள்ளர் பெருமக்களே!

உங்களை வெட்டியவன் தனிப்பட்ட காரணமல்லாமல் சாதிவெறியினாலே வெட்டினான் என்றால்,

வெட்டியவனை நீங்கள் விடாதீர்கள்!
திருப்பி வெட்டுங்கள்!

அவன் அகமுடையானா? தமிழனா? ஒரே ஊர்க்காரனா? என்றெல்லாம் பார்க்காதீர்கள்.

வெட்டுக்கு பதில்வெட்டு கொடுங்கள்!

பள்ளர்கள் ஒருங்கிணைந்து வெட்டிய குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்கள் உங்களை எப்படி வெட்டினார்களோ அதேபோல வெட்டுங்கள்!

அதற்காக குற்றவாளிகளின் ஒட்டுமொத்த சாதிக்கு எதிராகத் திரும்பாதீர்கள்!

பிற சாதியினரையோ அல்லது கூலிக்கு மாரடிக்கும் கட்சிகளையோ இயக்கங்களையோ நடுவில் வரவிடாதீர்கள்!

நீங்கள் அவ்வாறு செய்யவும் மாட்டீர்கள்.

தமிழ்தேசிய சிந்தனையை பள்ளர்களுக்கு விளக்கவேண்டிய அவசியம் இல்லை.

இருந்தாலும் பதிவிடுகிறேன்.

Tuesday, 12 December 2017

உடுமலை சங்கரின் கிராமத்தில் சாதிமறுப்பு திருமணங்கள்

உடுமலை சங்கர்

படுகொலை செய்யப்பட்ட சங்கரின் கிராமம் உடுமலை அருகே கொமரலிங்கம்.

மொத்தம் 1600 குடும்பங்கள் வரையுள்ள அந்த கிராமத்திலேயே 30 குடும்பங்கள் வரை சாதி தாண்டி திருமணம் செய்தவர்கள் என்று
தலித்திய வெறி ஊடகமான வினவே பதிவு செய்துள்ளது.
(தலைப்பு: சங்கரின் கொமரலிங்கம் : தமிழகத்தின் பெருமை – நேரடி ரிப்போர்ட்)

வினவு செய்த ஒரு திரிபு வேலை அவரை பள்ளர் என்று பதிவு செய்தது.
(கொமரலிங்கம் 1500 குடும்பங்கள் வரை பள்ளர் வாழும் கிராமம்)

உண்மையில் சங்கர் ஒரு (தெலுங்கர்) சக்கிலியர் ஆவார்.

Wednesday, 1 November 2017

நான் நாடானே கெடயாதுடா!

நிறுத்துங்கடா அப்ரசன்டிகளா >.<


நான் நாடானே கெடயாதுடா!


 அந்த நாடார் இந்த நாடாச்சினு அவுரு இவுரு ஒரே நட்பு கோரிக்கையா கொடுத்தே கொல்றானுக :/


 நானே 'ஆர்வக்கோளாறு வன்னியனுகள' அடக்கி பா.ம.க வைக் காப்பாத்த படாதபாடு பட்டுட்டு இருக்கேன் :(


 இராமதாசு ஐயா மொழிவாரி தமிழ்நாடு வேணும்னும்

 தமிழ்நாட்ட தமிழன் ஆளணும்னும் ட்வீட் போட்டுட்டு இருக்காரு.


 அன்புமணி பச்சையா முழு தமிழ்நாடு வரைபடத்த போட்டுகிட்டு மாற்றம் முன்னேற்றம்னும்

 காஷ்மீர் மாதிரி வெளியாள் நிலம் வாங்கமுடியாத 371 சிறப்பு சட்டம் தமிழ்நாட்டுக்கு வேணும்னும் பேசிகிட்டு இருக்குறாரு.


 பா.ம.க-வச் சோலி முடிக்கணும்னே அது எப்பவோ கைவிட்டுட்ட வடதமிழ்நாடு கோரிக்கைய இப்ப சம்பந்தமே இல்லாம சொல்லிகிட்டு சாதிப்பேரோட மத்த தெற்கத்தி சாதிகளை வம்புக்கிழுத்து  சில மூதேவிகள் முகநூல்ல கம்புசுத்திகிட்டு இருக்குதுக.

 அப்பிரசண்டி வன்னியனுக சிலபேரு 'மகன் செத்தாலும் மருமவா தாலியறுத்தா போதும்'னு நெனைக்கிற மாமியார் மாதிரி அவனுகளுக்கு முட்டுகுடுக்கறானுக.

 இதுல பள்ளர் சாதி வெறியனுக வேற தென்தமிழ்நாடுனு அவனுக பக்கம் நிக்கிறானுக.

 அடேய்! நீதானே வடக்க இருந்து குர்மி சாதிக்காரன கூட்டிவந்து அகில இந்திய குடும்பர் மாநாடு போட்டவன்? 

 

 கேட்டா அம்பேத்கர் சொல்லிட்டாராம்.

 இந்திய இறையாண்மைக்கு எதிரானது இல்லையாம்.


 டேய் இந்தியாவும் அம்பேத்கரும் தேசிய இனங்களுக்கு எதிரானவனுகதானே?!


ஆ..ஊ..ன்னா அம்பேத்கர் பின்னாடி ஒண்டுறீங்கனுதானே தனி பதிவு போட்டு அந்த ஆள தோலுரிச்சேன்?!


 ஒரு மாநிலத்துக்கு ரெண்டு மாநிலம் இருந்தா பலம் அதிகமாம்.

 ஒரு ரூபாய கொடுத்துட்டு ரெண்டு  50பைசா வாங்கினா மதிப்பு கூடிருமா?!


 இதெல்லாம் புரியாம 'நாடாருக்கு சப்போர்ட் பண்றான் இவன் நம்ம சாதிதான்'னு சொந்த சாதியையும் இனத்தையும் காவுகொடுத்தே பெரிய ஆளா ஆன காமராசர் படத்த வச்சிகிட்டு பிரண்டு ரிக்வெஸ்ட்டா கொடுத்து உயிர வாங்குறானுக நாடார் சாதிவெறியனுக


ச்சை 


சில சமயம் இவனுகளுக்கா பாடா படுறோம்னு தோணும்


ஆனா நம்ம அப்பனும் தாத்தணும் பாடுபடாம ஹாயா இருந்ததாலதான் இப்டி ஆயிட்டானுகனு நெனைக்கும்போது மனசு மறுபடி திடமாயிடும்.


 எங்கடா போயிருவீங்க!?


அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில எல்லா சாதிக்காரனும் தமிழனா தமிழ்தேசியம் பக்கம் வந்துதான் ஆகணும்.


Monday, 30 October 2017

முதுகுளத்தூர் கலவரம் - மறைக்கப்பட்ட உண்மைகள்

முதுகுளத்தூர் கலவரம்
- மறைக்கப்பட்ட உண்மைகள்

இமானுவேல் சேகரனார்
படுகொலை செய்யப்படும்வரை 90% பள்ளர்களுக்கு அவர் யார் என்றே தெரியாது.

இமானுவேல் சேகரனார் பற்றி வந்த ஆகச்சிறந்த புத்தகத்தில் அவர் வரலாறு வெறும் பத்து பக்கத்தைத் தாண்டவில்லை.
அவர் எப்படி பள்ளர்களின் தலைவர் ஆவார்?

1957ல் முதுகுளத்தூர் கலவரத்திற்கு முன்பே இரண்டு பள்ளர்களை தேர்தலில் நிற்கவைத்தவர் தேவர்.
(ஒருவர் வென்றார், ஒருவர் தோற்றார்)

சமாதான கூட்டத்தில் தேவர் இமானுவேலார் சாதியைக் காரணம் காட்டி கையெழுத்திட மறுத்ததாகக் கூறுவதில் துளியளவும் உண்மை கிடையாது.
அந்த தொகுதி எம்.எல்.ஏ தான் கையெழுத்திடவேண்டும்  என்று கூறினார்.
காரணம் பள்ளர்களுக்கு யாரென்றே தெரியாத ஒரு இளைஞரை விட ஒரு பள்ளரான அப்பகுதி எம்.எல்.ஏ கையெழுத்திட்டால் சரியாக இருக்கும் என்பது அவர் வாதம்.

தேவர் கையெழுத்து போடாததால் சமாதானம் முயற்சி தோல்வியடைந்தது என்பது முழுப்பொய்.
தேவர் முதலில் மறுத்தாலும் பிறகு இமானுவேலாரை பிரதிநிதியாக ஏற்று கையெழுத்தும் போட்டுவிட்டார்.
( முத்துராமலிங்கத்தேவர் என்பதுதான் அவர் பெயர்.
கையெழுத்தும் அவ்வாறே போடுவார் ).

அந்த சமாதான அறிக்கை மறுநாள் வெளிவர இருந்தது.
அது வெளிவரக்கூடாது என்பதற்காக நேருவின் உளவுத்துறை அன்றே இரவில் மின்சாரத்தை துண்டித்து  இமானுவேலாரைக் கொலை செய்து பழியை தேவர் மீது போட்டது.
தேவரை சிறைக்குள் அடைத்து ஸ்லோ பாய்சன் கொடுத்து வெளியேவிட்டது.
(ஜெயலலிதாவை இவ்வாறுதான் மத்திய அரசு கொன்றது).
இதனால் ஆரோக்கியமாக கம்பீரமாக இருந்த தேவரையா விரைவாக உடல்நலம் குன்றி இளம் வயதிலேயே மரணமடைந்தார்.

நேருவை இயக்குவது இஸ்ரேல் என்று உண்மையை போட்டுடைத்த,
நேதாஜி உயிரோடு இருக்கிறார் என்று கூறிவந்த,
காந்தியை கொன்ற சவார்க்கருக்கு பாராட்டும் ரூ.5000 பொன்முடிப்பும் வழங்கிய,
காங்கிரசுக்கு எதிரான அத்தனை சக்திகளையும் ஒன்றுதிரட்டிய
மிகப்பெரிய ஆளுமையான தேவர் ஒழிந்ததால் நேரு நிம்மதி அடைந்தார்.
இதற்காக அவர் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.

சமாதான கூட்டத்தில் 'ஒரு பள்ளப்பய எனக்கு சமமா! அவன் நாளைக்கு இருக்கக்கூடாது' என்று தேவர் கூறியதாக பள்ளர் மத்தியில் உளவுத்துறையால் வதந்தி பரப்பப்பட்டது.
(இத்தனைக்கும் தேவரோடு வந்த 2பேரில் ஒருவர் பள்ளரான வேலு குடும்பன் ஆவார்).

தேவர் நுழைந்தபோது இமானுவேலார் கால்மேல்கால் போட்டபடி மரியாதை இல்லாமல் சிகரெட் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தே இருந்ததாகவும்,
பேச்சுவார்த்தை முடிந்ததும் தேவரிடம் ஒரு தாம்பலத்தில் வெற்றிலை பாக்கு வைத்து நீட்டி மறவர் பெண்ணை தனக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து தருமாறு கேட்டதாகவும் மறவர் மத்தியில் வதந்தி பரப்பட்டது.
(இமானுவேலார் அப்படியெல்லாம் செய்யவில்லை.
எம்.எல்.ஏ வரமுடியாத சூழல் என்று மரியாதையுடன் எடுத்துக்கூறினார்.
தொலைபேசியில் பேசவைத்ததாகவும் கூறுகின்றனர்)

நேருவின் உத்தரவின்பேரில் மறவர் கிராமமான கீழத்தூவலில் ரே எனும் வடயிந்தியர் தலைமையிலான போலீஸ்படை நுழைந்து ஐந்து இளைஞர்களை அழைத்துப்போய் கண்மாய் கரையில் வைத்து கண், கை, கால்களை கட்டி சுட்டுக்கொன்றது.
இது சுதந்திர இந்தியாவில் தமிழகத்தில் நடந்த முதல் படுகொலை ஆகும்.
இது காமராசர் போலீசை அனுப்பி மறவர்களைக் கொன்றதாகக் காட்டி மறவருக்கு எதிராக நாடார்களையும் கலவரத்தில் இறக்க எடுத்த முயற்சி ஆகும்.

இந்த யோசனைகளை நேருவுக்கு வழங்கியது அண்ணாதுரை.
உளவுத்துறைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியது தி.மு.க வந்தேறிகள்.
காரணம் தெலுங்கு சின்னமேளம் எனும் தேவதாசி சாதியைச் சேர்ந்த அண்ணாதுரை தனது குலத்தொழிலான விபச்சாரத் தொழிலை செய்துவந்ததை தேவர் மதுரையில் ஒரு பொது இடத்தில் அவரை வைத்துக்கொண்டே அம்பலப்படுத்தினார்.

தேவருடன் இணைந்து காங்கிரசை எதிர்த்த ஈ.வே.ராமசாமியும் ராஜாஜி பதவி விலகி காமராசர் வென்றதும் அவருடன் போய் சேர்ந்துகொண்டு தேவருக்கு எதிராக காமராசரை தூண்டியபடி இருந்தார்.

(ராஜாஜி தேவருடன் போய் இணைந்தார்.
ஆதித்தனாரும் தேவருடன் இணைந்தார்)

எவ்வளவோ முயற்சிகளுக்குப் பிறகும் இரண்டு ஆண்டுகள் கழித்து இமானுவேலார் கொலையில் தேவருக்கு பங்கில்லை என்று அவர் 1959ல் விடுதலை செய்யப்பட்டார்.

கலவரமும் கொலையும் நடந்தபிறகும் கூட, தேவரையா ஐந்து ஆண்டுகள் கழித்து 1962 தேர்தலில் ஒரு பள்ளரை நிறுத்தி வெல்லவைத்தார்.
தொகுதிக்கே போகாமல் தானும் வெற்றிபெற்றார்.

சாகும்போது தனது சொத்துகளை மக்களுக்கு எழுதிவைத்தார்.
அதில் 1/3 பங்கு பள்ளர்களுக்கு கிடைத்தது.

இறுதிவரை தேர்தலில் தோல்வியே காணாத தேவர் பள்ளர்கள் கணிசமாக வாழ்ந்த தொகுதியில்தான் மாபெரும் வெற்றிகளை பெற்றார்.

ஒருவேளை பள்ளர் வாக்குகளைக் கவர பிற்காலத்தில் இப்படி மாறியிருக்கலாம் என்கிறார்கள் சிலர்.
ஆனால் இருபது ஆண்டுக்கு முன்பே 1939லேயே மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வைத்தியநாத ஐயர் மற்றும் (பறையரான) கக்கனுடன் இணைந்து பல பட்டியல் சாதிகளைச் சேர்ந்த மக்களைத் திரட்டி ஆலயநுழைவு நடத்தியவர் தேவர்.

3 அல்லது 4 இடங்களில் மட்டுமே போட்டிபோடும் தேவர் கட்சி அதில் பல சாதியினரையும் நிற்கவைத்தது வரலாறு.

இத்தகைய வரலாறு கொண்ட தேவர் எப்படி சாதிவெறியர் ஆவார்?

தேவரை நாடார்களுக்கு எதிரானவராக சிலர் திரிக்கிறார்கள்.
காமராசரை முதலமைச்சர் ஆவதற்கு தேவர் உடன்படாத காரணம் அவர் படிக்காதவர், இனப்பற்று இல்லாதவர், நேரு குடும்பத்திற்கு விசுவாசமானவர் என்பதால்தான்.
மற்றபடி காமராசர் வளர்ச்சியில் தேவருக்கு குறிப்பிட்ட பங்குண்டு.

காமராசரை முக்குலத்தின் எதிரியாக சிலர் திரிக்கின்றனர்.
தேவர் காலத்தில் காமராசருடன் காங்கிரசில் அவருக்கு பக்கபலமாக பல முக்குலத்தோர் இருந்தனர்.
வணங்காமுடி வைரவத்தேவர், கோபால்சாமி தென்கொண்டார், புதுக்கோட்டை தொண்டைமான், வேதாரண்யம் வேதாசலத்தேவர், திருச்சி அருணாசலத்தேவர், ஆர்.வி.சாமிநாதன், உடையப்பா சிவசுப்பிரமணியத்தேவர், மதுரை சின்னக்கருப்பத்தேவர், என்.எஸ்.வீரபத்திர தேவர், இராமநாதபுரம் சண்முகராஜேசுவர சேதுபதி,  அருப்புக்கோட்டை துரைசிங்கத்தேவர், முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன், சங்குமுத்து தேவர், டி.என்.அனந்தநாயகி, சாண்டோ சின்னப்பத்தேவர், நடிகர் சிவாஜிகணேசன் போன்றவர்கள் காமராஜருக்கு ஆதரவான முக்குலத்தோர் ஆவர்.

ஆக அன்று நடந்தது இரண்டு கட்சிகளுக்கு இடையேயான மோதல்தான்.
சாதி மோதல் கிடையாது.

அன்று தேவர் சரி.
ஆனால் இன்று மறவர்கள் சரி இல்லை.

தேவர் படத்தை வைத்துக்கொண்டு பள்ளர்களுக்கு எதிராக வெறிபிடித்து அலைவோர் தேவருக்கே களங்கம் கற்பிக்கும் துரோகிகள்.

திராவிடத்தின் சாதிய அரசியலுக்கு பலியாகி இன்று மறவர்களே தேவருடைய கொள்கைகளுக்கு மற்ற எவரையும் விட எதிராக செயல்படுகின்றனர்.

தேவர் தனக்கு குருபூசை கேட்டதும் இல்லை.
தேவர் எளிமையானவர். புகழ்ச்சியை விரும்பாதவர்.
அவரை கடவுள் போல பெரிதாக விழா எடுத்து கொண்டாடவேண்டிய அவசியமும் இல்லை.

தேவர் இறந்து பல ஆண்டு கழித்து தேவருக்கு சிலை நிறுவியதும் குருபூஜை நடத்தவைத்ததும் திராவிட வந்தேறிகள் தமிழர்களை மோதவிட்டு சாதிய அரசியல் செய்யத்தான்.

தேவர் ஒரு மனிதர்.
மாமனிதர். கடவுள் இல்லை.

ஒரு தலைவருக்கு என்ன மரியாதை உண்டோ அதைச் செய்வதில் தவறில்லை.

தேவர் குருபூசை அதற்கு போட்டியாக இமானுவேல் சேகரன் குருபூசை என்று குருபூசைகளின் பெயர்களில் இன்று நடக்கும் கூத்தும் அட்டூழியமும் அலப்பறையும் சாதிவெறியின் வெளிப்பாடு என்பது கண்கூடு.

இன்று குருபூசையில் தேவர் படத்தை சட்டையில் போட்டுக்கொண்டு மூக்குமுட்ட குடித்துவிட்டு நடுரோட்டில் போக்குவரத்தை மறித்து அரிவாள்களுடன் கூட்டமாக கும்மாளம் போடும் இளைஞர்களுக்கு தேவருடைய வாழ்க்கை வரலாறு பற்றி கடுகளவாவது தெரியுமா?

தேவரின் முகம் ஒன்றும் சாதிவெறியின் சின்னம் இல்லை.
ஆனால் இன்று நடைமுறை என்ன?

பள்ளர்கள் பெரிய தகுதி இல்லாத இமானுவேல் சேகரனாரை தூக்கிப்பிடிப்பதையும் அவருக்கு குருபூஜை நடத்துவதையும் கைவிடவேண்டும்.
தேவரையே தலைவராக ஏற்கவும் வேண்டும்.
இதைச் செய்யாத பள்ளர்கள் நன்றிகெட்டவர்கள்.

முக்குலத்தோர் தேவருக்கு குருபூஜை நடத்துவதைக் கைவிடவேண்டும்.
அமைதியான முறையில் அவரவர் ஊர்களில் பலசாதி மக்களுக்கும் தேவர் பற்றி எடுத்துக்கூறி பொதுவான விழாவாக சிறிய அளவில் கொண்டாடவேண்டும்.

தேவர்தான் மேற்கண்ட இரு சமூகத்துக்கும் தலைவர்.
ஏன் தமிழர் அனைவருக்கும் தலைவர்.
ஏன் இந்தியா முழுவதுக்குமான தலைவர்.

இந்தியன் மறந்துவிட்டான்.
தமிழர்கள் மறக்கவில்லை.
மறக்கும்படி செய்யாதீர்கள்.

குருபூசை எனும் பெயரில் நடிகர்களையும் கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளையும் திராவிட கட்சிகளின் அல்லக்கைகளையும் கூட்டி பெரிய அலப்பறை கொடுத்து பிற தமிழர்கள் தேவரை வெறுக்கும்படி செய்யாதீர்கள்.

தமிழர்களே! தமிழகம் முழுவதும் கிராமம் தோறும் சாதி வேறுபாடு இன்றி தேவர் புகைப்படத்தை வைத்து அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவோம்.

தேவர் நடத்திய பத்திரிக்கைக்கு கண்ணகி என்றுதான் பெயர்வைத்தார்.
சிந்துசமவெளி நாகரிகம் தமிழருடையது என்றும் தமிழின் சிறப்புகள் பற்றியும் எழுதியுள்ளார்.
தன் வாழ்நாளில் வள்ளலார் வழியை கடைபிடித்துவந்தார்.
உடல்நிலை முடியாத நிலையிலும் ம.பொ.சி நடத்திய எல்லை போராட்டத்தில் கலந்துகொண்டு பேசியும் உள்ளார்.
பர்மா போய் தமிழர்களைச் சந்திக்கும்போது அந்நாட்டு அதிபருக்கு திருக்குறள் நூலை பரிசாக அளித்தார்.
மலையகத் தமிழரை சந்தித்துவிட்டு தமிழகம் வந்தபோது இலங்கை தமிழர்கள் விரைவில் சுதந்திரத்திற்காகப் போராடுவார்கள் என்று அன்றே கூறியுள்ளார்.

ஆக தேவர் ஒரு இனப்பற்றுள்ள தமிழர். அதனால் பெருந்தமிழர் என்ற பட்டத்திற்கு தகுதியானவர்.

வைக்கம் ஆலயநுழைவு போராட்டத்தில் கட்சி பணத்தில் பத்தோடு பதினொன்றாக போய்விட்டு வந்து வைக்கம் வீரர் பட்டம் போட்டுக்கொண்ட,
கீழ்வெண்மணி படுகொலை கூலி உயர்வு கேட்டதால்தான் நடந்தது என்று அறிக்கைவிட்ட,
பறையரை கேவலமாக தொடர்ந்து பேசிவந்த,
ஆங்கிலேயருக்கு கடைசிவரை விசுவாசமாக இருந்த
கன்னட வந்தேறி ஈ.வே.ரா நமக்கு தலைவராம்.

ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தொழிலாளருக்கும் முழு இந்திய மக்களுக்கும் இறுதிமூச்சுவரை நன்மை செய்துவந்த நாட்டுப்பற்றாளர், இனப்பற்றாளர், கொடைவள்ளல், தியாகி முத்துராமலிங்கனார் சாதிவெறியராம்.

ஆக ஈ.வே.ராமசாமியை தூக்கி எரிந்துவிட்டு அந்த இடத்தில் முத்துராமலிங்கத் தேவனாரை வைத்துக் கொண்டாடுவது தமிழர் நம் அனைவரின் கடமை ஆகும்.