Showing posts with label தேவேந்திரர். Show all posts
Showing posts with label தேவேந்திரர். Show all posts

Sunday, 15 February 2026

பிறர்க்குடையார் குடும்பரும் பூலித்தேவரும்

பிறர்க்குடையார் குடும்பரும் பூலித்தேவரும் 

  நெற்கட்டுஞ் செவ்வல் அருகே உள்ள குளம்  ராமகோவிந்தப்பேரி.
சிதிலமடைந்த இதை மீண்டும் கட்டிப் பாசனம் செய்து பயிரிட புலித்தேவன் கேட்டுக் கொண்டதனால், நெற்கட்டுஞ் செவ்வலைச் சேர்ந்த பிறக்குடையாக் குடும்பன் என்பவர், தன் செலவில் ராமகோவிந்தப்பேரிக் குளத்தைப் புதுக்குளமாக அமைத்தார்.

இதனால் புலித்தேவன், பிறக்குடையாக் குடும்பனுக்கு நன்செய் நிலம் வழங்கியதோடு அவர் நிலங்களுக்குச் சில ஆண்டுகள் வரிச் சலுகையும் அளித்துள்ளார்.
இதற்கு 2008 ஜூலை இல் கிடைத்த கி.பி.1748 ஆம் ஆண்டைச் சேர்ந்த (திருச்செங்கோடு) செப்புப் பட்டயம் சான்று.

இதே குளத்தில் உள்ள மதகில் ஒரு கல்வெட்டும் (எண் 79/2005, கி.பி.1802) உள்ளது. இதில் பூலிராணி கோமதி முத்து தலைவச்சி என்பவர் (இவர் பூலித் தேவர் மகளாக இருக்கலாம்) தெற்கு மடைக்கு தோரணக்கல் செய்து தந்த செய்தி வெட்டபட்டுள்ளது. இதிலும் பிறர்க் குடையார் மகன் சிவணு குடும்பன் என்பவருக்கு இந்த குளம் சொந்தம் என்று குறிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோவில் நிலத்தை கி.பி.1738 இல் கைலாச குடும்பர் உள்ளிட்ட 12 தேவேந்திரருக்கு விலைக்கு விற்ற செப்புப் பட்டயம் கண்டறியப்பட்டுள்ளது.
இதில் நிலம் வாங்கிய 12 குடும்பர்கள் பெயருடன் கிரயம் செய்து கொடுத்த கோவில் நிர்வாகிகள் 11 பேர் மற்றும் சாட்சிகள் 3 பேர் என பல்வேறு சாதிகளை சேர்ந்தவர்களின் பெயர்கள் உள்ளன.

அதாவது பள்ளு இலக்கியங்கள் நாயக்கர் ஆட்சி பகுதியில் தேவேந்திரர்கள் (அப்போது பள்ளர்) மிகக் கொடுமையான சுரண்டலுக்கு ஆளானதைப் பதிவு செய்துள்ளன.
அதே காலத்தில் நாயக்கர் ஆட்சி வேரூன்ற முடியாத மறவர் பாளையங்களில் தேவேந்திரர் நிலவுடைமை சமூகமாக செல்வாக்குடன் இருந்துள்ளனர் என்பதை இந்த ஆவணங்கள் மூலம் அறியலாம்.

  

Tuesday, 14 October 2025

உதயநிதி செய்யும் கருணாநிதித்தனம்

உதயநிதி செய்யும் கருணாநிதித்தனம்

 உதயநிதியின் நெருக்கம் கிடைத்த பிறகு வாழை படம் வெளியாகிறது! 
 மறுநாளே தேவேந்திரர் அதிகம் வாழும் பகுதிகளில் மாரி செல்வராஜ் படம் போட்டு அவரது ரசிகர் மன்றம் என்கிற பெயரில் ப்ளக்ஸ் வைக்கப்பட்டது! 
 அந்த பதாகையில் அப்பகுதியின் பெயர் இல்லை! அந்த ஊரைச் சேர்ந்த யாருடைய புகைப்படமும் இல்லை !
 அதாவது தமிழகம் முழுக்க பொத்தாம்பொதுவாக ஒரு பதாகை அடித்து வைக்கப்பட்டது!
 இதை வைத்தவர்கள் திமுக தொண்டர்கள் என்பதைச் சொல்லவேண்டியது இல்லை!
 அதாவது "இவர்தான் உங்கள் அடையாளம்! பிதுக்கப்பட்ட இவரை எப்படி தூக்கிவிட்டோம் பார்" என்று சொல்லாமல் சொல்கிறார்களாம்!
 ஆனால் வாழை படத்தில் சோ.தர்மன் படைப்பை ஆட்டையைப் போட்டு வழக்கம்போல தாழ்வு மனப்பான்மையை புகுத்தி கதறியிருந்தார் மா.செ!
 படமும் வெற்றியடைய வில்லை! 
 நொடிக்கு ரூ.9000 வருமானம் வரும் உதயநிதிக்கு  இது ஒரு பொருட்டா?!
 இப்போது தேவேந்திர குலத்தைச் சேர்ந்த கதாநாயகனை வைத்து அடுத்த படம் வருகிறது! 
 ஒருபக்கம் திராவிடத்தை தாங்கி நிற்கும் திமுக அதாவது கருணாநிதி குடும்பம்! 
 மறுபக்கம் அதை எதிர்த்து நிற்கும் தமிழ்தேசியத்தை தாங்கி நிற்கும் தேவேந்திர சமூகம்! 
 ரஞ்சித்தை வைத்து ஏவிய தலித்திய பாச்சா இவர்களிடம் பலிக்கவில்லை! 
 தற்போது நெல்லை கவின் ஆணவக் கொலை நடந்த போது அதை சாதி மோதலாக மாற்ற ஏவப்பட்ட கிருஷ்ணசாமி ரெட்டியார் மகனையும் இச்சமூகம் இனம் கண்டுகொண்டனர்!
 அத்தனை சமூகங்களையும் ஏதோ ஒரு வகையில் விலைக்கு வாங்கிவிட்ட திமுக தேவேந்திரரை பணிய வைக்க முடியாமல் திணறுகிறது!
 திமுக நடத்திய தாமிரபரணி படுகொலையில் பாதிக்கப்பட்ட பின்னணி கொண்ட மாரி செல்வராஜை விலைக்கு வாங்கியது! 
 திருநெல்வேலி வெள்ளம் வந்தபோது உதயநிதி சூட்டிங்குக்கு உதவியாக இருந்த மாரி செல்வராஜ் டீம் போனது!
 மாரி என்னவோ தேவேந்திரர் களுக்கெல்லாம் பிரதிநிதி போலவும் அவர் வந்து வெள்ளத்தையே வற்றவைத்து விட்டது போலவும் ஊடகங்கள் ஊதின! 
  இதில் எதுவுமே தேவேந்திர சமூகத்திடம் எடுபடவில்லை!  
 இம்முறை மீண்டும் மா.செ தேவேந்திரர் நாடார் மோதலை மையமாக வைத்து படம் எடுப்பதாக சொல்கிறார்கள்.
 ஒரு தேவேந்திர குடும்பத்துக்கும் ஒரு நாடார் குடும்பத்துக்கும் வயல்வெளியில் வந்த வரப்பு தகராறு இரு சமூக மோதலாக மாறி பல்வேறு பரிணாமங்களை அடைந்து பல உயிர்கள் பலியாயின.
 இதில் முதல் கொலையும் இரண்டாவது கொலையும் தேவேந்திர சமூகம் தான் செய்தது! 
 இதைச் செய்த பசுபதி பாண்டியன் கொல்லப்பட்ட பிறகு இது முடிவுக்கு வந்தது!
 இறுதி கொலை பசுபதி பாண்டியன் வீட்டில் ஸ்லீப்பர் செல்லாக இருந்த ஒரு தேவேந்திர பெண் பசுபதி விசுவாசிகளால் கொல்லப்பட்டது! 
 ஸ்டெர்லைட் பிரச்சனையை மடைமாற்ற உருவாக்கப்பட்ட மோதல்தான் இது என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
 கிட்டத்தட்ட நடந்து முடிந்துவிட்ட ஒரு பிரச்சனையை மறுபடி கிளறவுள்ளனர்.
 தேவேந்திரருக்கு ஒரு தலைமை உருவாகாமல் தடுத்துவிட்ட திராவிடம் தன் முயற்சியில் சற்றும் சளைக்காமல் வடக்கு போல தெற்கையும் இரண்டாக பிளந்து நடுவில் அமர முயன்றுகொண்டே இருக்கிறது!
 தேவேந்திர மக்கள் தெளிவாக இருக்கின்றனர்.
 மற்ற அனைத்து சமூகங்களும் கவனமாக இருக்க வேண்டும்! 
 
 

Monday, 10 February 2025

பறையர் இனி எவ்வழி

பறையர் இனி எவ்வழி?

 சாதி என்கிற அளவுகோலின் படி மட்டுமே பார்த்தால் 
பள்ளர் பறையர் இருவருமே தொடங்கிய இடம் ஏறத்தாழ ஒன்றுதான்!

 பள்ளர் எவரையும் நம்பாமல் தம்மை மட்டுமே நம்பி தமது குடி அடையாளத்துடன் தமக்கான மள்ளரியம் என்ற கருத்தியலை உருவாக்கி தாம் தாழ்ந்தவர் என்ற மனப்பான்மையை விட்டொழித்து தமிழ்தேசியத்தையும் அரவணைத்தபடி தம் கையூன்றி மேலெழுந்து தேவேந்திரர் என்று பெயர்பெற்று பட்டியல் சலுகையைத் தூக்கியெறியும் தன்னம்பிக்கையுடன் களத்திலும் பிற சாதிகளுக்கு வெட்டுக்கு வெட்டு கொடுக்கும் துணிச்சலுடன் நிற்கின்றனர்.
 அவர்கள் கடந்த வந்த பாதையில் பிழைகளும் சமரசங்களும் இருக்கலாம்!
 ஆனால் இன்று தேவேந்திர தலைவர்களும் மக்களும் பிறர் மதிக்கும் நிலைக்கு வந்துவிட்டனர்.
  
 அதேநேரத்தில் பறையர் தலித்தியத்தின் பின்னால் போனார்கள்!
தம்மைத் தாமே தாழ்த்திக்கொண்டு தலித்திய இயக்கத்தை வளர்த்த மலைச்சாமி தேவேந்திரரை வீழ்த்தி அந்த இயக்கத்தை அபகரித்து கட்சியாக்கி திராவிடத்தை துணைகொண்டு பிற சாதிப் பெண்களைத் துரத்தி பல்வேறு சாதிக் கொடுமைகளுக்கும் அவப்பெயருக்கும் ஆளாகி சிறிது தமிழ்தேசியத்தின் மீதும் சவாரி செய்து வளர்ந்து கடைசியில் திராவிடத்திடம் விலைபோய் மண்டியிட்டு கடைசியில் தன் குடிநீரில் தானே மலம் கழித்துவிட்டு நிற்கின்றனர்! 

 பறைத் தமிழர்கள் இனியும் பிதுக்கப்பட்ட புராணத்தை பாடிக்கொண்டு திராவிடத்தின் செருப்பின் கீழ் தலித்திய அசிங்கத்தில் ஒட்டிக் கிடக்கப் போகிறார்களா?! 
 அல்லது தேவேந்திரத் தமிழர்களைப் போல தேசியத்தை அரவணைக்கும் குடிவழி அரசியலைப் பிடிக்கொண்டு மேலெழும்பி வரப் போகிறார்களா?!
 

Tuesday, 29 May 2018

கச்சநத்தம் பள்ளர் பெருமக்களே!

கச்சநத்தம் பள்ளர் பெருமக்களே!

உங்களை வெட்டியவன் தனிப்பட்ட காரணமல்லாமல் சாதிவெறியினாலே வெட்டினான் என்றால்,

வெட்டியவனை நீங்கள் விடாதீர்கள்!
திருப்பி வெட்டுங்கள்!

அவன் அகமுடையானா? தமிழனா? ஒரே ஊர்க்காரனா? என்றெல்லாம் பார்க்காதீர்கள்.

வெட்டுக்கு பதில்வெட்டு கொடுங்கள்!

பள்ளர்கள் ஒருங்கிணைந்து வெட்டிய குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்கள் உங்களை எப்படி வெட்டினார்களோ அதேபோல வெட்டுங்கள்!

அதற்காக குற்றவாளிகளின் ஒட்டுமொத்த சாதிக்கு எதிராகத் திரும்பாதீர்கள்!

பிற சாதியினரையோ அல்லது கூலிக்கு மாரடிக்கும் கட்சிகளையோ இயக்கங்களையோ நடுவில் வரவிடாதீர்கள்!

நீங்கள் அவ்வாறு செய்யவும் மாட்டீர்கள்.

தமிழ்தேசிய சிந்தனையை பள்ளர்களுக்கு விளக்கவேண்டிய அவசியம் இல்லை.

இருந்தாலும் பதிவிடுகிறேன்.

Wednesday, 6 September 2017

கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர் (சான்றுகளுடன்)

கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர்
(சான்றுகளுடன்)

கிருஷ்ணசாமி ஒரு தெலுங்கர் என்பதற்கான சான்றுகள் வருமாறு...
-----------------
முதல் படம்,

14 மார்ச் 2014 தினமணி
டாக்டர் கிருஷ்ணசாமி சாதிச் சான்று விவகாரம்:
உயர்நீதிமன்றத் தீர்ப்பு நிறுத்திவைப்பு
by Venkatesan

புதியதமிழகம் கட்சி நிறுவனரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டாக்டர் கிருஷ்ணசாமியின் சாதிச் சான்று தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டபோது டாக்டர் கிருஷ்ணசாமி சமர்ப்பித்த சாதிச் சான்று போலியானது என நெல்லை மாவட்டம் கொடியங்குளத்தைச் சேர்ந்த குமார் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஜி எம் அக்பர் அலி அண்மையில் விசாரித்தார்.
கிருஷ்ணசாமியின் தந்தை கொண்டா ரெட்டி சமூகத்தையும் தாய் அருந்ததியர் சமூகத்தையும் சேர்ந்தவர்கள்.
ஆனால் வேட்பு மனுவில் தேவேந்திர குலத்தைச் சேர்ந்தவர் என கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ளார்.
-------------
அடுத்த படம்,

Mallar Advocates Association (MAA)
No.138, Thambu Chetty street,
Chennai 600001.

நாள்: 06.09.2017

அனுப்புநர்,
பெ.இராமராஜ் வழக்குரைஞர்
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை 104
தொ.எண். 9176067906

பத்திரிக்கையாளர் சந்திப்பு

உயர்திரு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். எமது வழக்குரைஞர் சங்கம் சார்பில் வருகின்ற வியாழன் (07.09.2017) அன்று காலை 11 மணியளவில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கவுள்ளோம்.

சந்திப்பின் நோக்கங்கள்:
1.ஆளும் பா.ஜ.க அரசின் மக்கள்விரோதத் திட்டங்களுக்கு ஆதரவளித்து தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்து வரும் டாக்டர் கிருஷ்ணசாமியைக் கண்டிப்பது.
2. தேவேந்திர குல வேளாளர் சாதியில் பிறக்காமல் பொய்யான சாதிச்சான்றிதழ் பெற்று அப்பாவி மக்களை ஏமாற்றும் டாக்டர் கிருஷ்ணசாமியின் போக்கை அம்பலப்படுத்துவது.
3. நீட் தேர்வுமுறையில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனிதாவின் மரணத்தைக் கொச்சைப்படுத்திப் பேசுவதோடு தொடர்ந்து மக்கள் நலன்களுக்கு எதிராகச் செயல்படும் டாக்டர் கிருஷ்ண சாமியிடமிருந்து தேவேந்திர குல வேளாளர் சமுதாயக் கொடியாகிய சிவப்பு பச்சைக் கொடியை மக்களை அணிதிரட்டுவதற்கான அறைகூவல் விடுப்பது.

இதர முக்கிய பிரச்சனைகள் தொடர்பாகவும் சந்திப்பு நடைபெற உள்ளதால் தங்களது பிரதிநிதிகளை அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தங்கள் அன்புள்ள,
பெ.இராமராஜ்
---------------
மேற்கண்ட இரண்டு போக கிருஷ்ணசாமி குடும்பம் பற்றி விரிவாக கூறுகிறது தற்போதைய செய்தி ஒன்று:-

டாக்டர் திரு. கிருஷ்ணசாமியின் “தேவேந்திரகுலத்தான்” என்ற சாதிச் சான்றிதழை ரத்து செய்ய கோவை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மனு

(ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம்)

பொருள்:
டாக்டர்.கே.கிருஷ்ணசாமி மோசடி செய்து “தேவேந்திரகுலத்தான்” என்று பெற்ற சாதிச் சான்றிதழை ரத்து செய்ய விண்ணப்பம்.

பார்வை:
கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் 09-1-1998 அன்று டாக்டர்.கே.கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்ட நிரந்தர சாதிச் சான்றிதழ் எண் 1063899,
SL.NO. .10 / 98

ஐயா,
டாக்டர்.கே.கிருஷ்ணசாமிக்கு தேவேந்திரகுலத்தான் என்ற சாதிச் சான்றிதழை கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் வழங்கப்பட்ட்டுள்ளது.

இது தவறானது, இது ஏமாற்றிப் பெற்ற சதான்றிதழாகும் அவர் தனது செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்தி “தேவேந்திரகுலத்தான்” என்ற போலியான சாதிச்சான்றிதழை ஏமாற்றிப் பெற்றுள்ளார்.

எனவே மோசடிமூலம் பெறப்பட்ட அவரது சாதிச் சான்றிதழை G.O.Ms(2D) 108,dated 12th September 2007இன்படி ரத்து செய்ய வேண்டும்.

டாக்டர்.கே.கிருஷ்ணசாமி திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை தாலுகாவின் கீழ் வரும் அவரது சொந்த கிராமத்தில் இருந்து தனது சாதிச் சான்றிதழைப் பெறுவதற்குப் பதிலாக அவர் கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் தேவேந்திரகுலத்தான் என்ற போலியான சாதிச் சான்றிதழை நிலையான சான்றிதழாகப் பெற்றுள்ளார்.

டாக்டர்.கே.கிருஷ்ணசாமி பிறந்த சொந்த கிராம நிர்வாக அலுவலரால் முறையாக விசாரிக்கப்பட்டு நிலையான சாதிச்சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இது வருவாய்த் துறையின் ஆணை எண். Go.Ms.No.781 dtd 2nd May 1988 –என்பதற்கு எதிரானதாகும்.

திரு.கிருஷ்ணசாமிக்கு 09-01-1998 அன்று நிரந்தர சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அச்சான்றிதழில் அவரது முகவரி "கே கிருஷ்ணசாமி த/பெ கருப்பசாமி,
சங்கீதா மருத்துவமனை,
பாலக்காடு மெயின்ரோடு,
குனியமுத்தூர்"
என உள்ளது.
இச்சான்றிதழ் குனியமுத்தூர் கிராமநிர்வாக அலுவலரால் அவர்பிறந்த ஊர் உள்ள ,உடுமலைப்பேட்டைத் தாலுகாவில் நேரடியாக விசாரிக்கப்படாமல் கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் விசாரிக்கப்படாமல் வழங்கப்பட்ட்டுள்ளது.
இது மேற்படி வருவாய்த்துறையின் ஆணைக்கு எதிரானதாகும் திரு.கிருஷ்ணசாமி தேவேந்திரகுலத்தான் என்ற தனது போலியான சாதிச்சான்றிதழை வைத்துக்கொண்டு இரண்டு முறை ஓட்ப்பிடாரம் SC தொகுதியில் MLA ஆகி உள்ளார் இதன் மூலம் உண்மையான தேவேந்திரகுலமக்கள் இத்தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தோம்.

இவர் தனது மகன் திரு.சியாம், மகள் திருமதி. சங்கீதா, இவர்களுக்கு தேவேந்திரகுலத்தான் என்று போலிச் சான்றிதழ் பெறுவதன் மூலமாக ஒட்டப்பிடாரம் MLA தொகுதி மற்றும் தென்காசி MP தொகுதிகளில் தேர்தலில் போட்டியிட வைக்க விரும்புகிறார்.
இச்செயல் உண்மையான தேவேந்திரகுல மக்கள் அங்கே போட்டியிடும் வாய்ப்பை இழக்கச் செய்வதாகும்.
ஏனெனில் திரு.கிருஷ்ணசாமி அருந்ததியர்(மாதாரி,சக்கிலியர்) சாதி இவரது மனைவி கேரளா OBC சாதி.
இவ்விருவரும் தேவேந்திரகுலமல்ல.
எனவே அவரது மகனும் மகளும் தேவேந்திர குலமல்ல..

மேலும் திரு. கிருஷ்ணசாமி தேவேந்திரகுல சாதி அல்ல.  ஏனெனில் அவரது தாயார் திருமதி தாமரை தாழ்த்தப்பட்ட அருந்ததியர் (சக்கிலியன்-12,மாதாரி சாதி)
மற்றும் கிருஷ்ணசாமியைப் பெற்ற தந்தை கருப்பக்குடும்பன் அல்ல,
கருப்பக்குடும்பன் அவரது காப்பாளர் மட்டுமே.

திரு.கருப்பக்குடும்பன் அவரது தாயார் தாமரைக்கு இரண்டாவது கணவர் ஆவார்.
திரு. கிருஷ்ணசாமி 8 வயது மற்றும் அவரது சகோதரி பாக்கியம் 6 வயது இருக்கும்போது தமது தாயார் தாமரையுடன் மசக்கவுண்டன் புதூரிலுள்ள திரு.கருப்பக்குடும்பன் வீட்டிற்கு வந்து அவருடன் சேர்ந்துள்ளார்.
அதற்குப் பின்னர் கருப்பக் குடும்பனுக்கும் தாமரைக்கும் தங்கம் என்ற ஒரு பெண் பிறந்துள்ளது.

இவ்வாறு இருக்கும்போது எப்படி கிருஷ்ணசாமி தன்னை கருப்பக்குடும்பனின் மகன் என்று கூறமுடியும்?

அரசின் விஜிலென்ஸ் குழுதான் அவரைப் பெற்ற தந்தை எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும்.
திரு. கிருஷ்ணசாமி தேவேந்திரகுலத்தான் அல்லது குடும்பன் சாதியைச் சார்ந்தவர் அல்ல.

எனவே, தாசில்தார் கோயம்புத்தூர் தெற்கு அவர்கள் டாக்டர் திரு.கிருஷ்ணசாமிக்கு தேவேந்திரகுலத்தான் என்று வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்.

அத்தோடு டாகடர் கிருஷ்ணசாமியின் மகள். திருமதி.கே.சங்கீதா மற்றும் அவரது மகன் திரு. சியாம் இவர்களுக்கும் தேவேந்திரகுலத்தான் என்று போலியாகச் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பின் அவைகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.

ஆதி திராவிடர் மற்றும் Tribal நலத்துறை GO.MS.No.106 நாள் 15-10-12 ஆணைப்படி,
கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தமது விஜிலன்ஸ் குழுமூலம் இவ்வாறு போலியாகச் சான்றிதழ் பெற்ற டாகடர் கிருஷ்ணசாமியின் மீது நடவடிக்கை எடுத்து எமது சாதியை காப்பாற்றுவது கடமை.

திருநெல்வேலி,15-8-2017.

அனுப்பப்படும் நகல்கள்:
(1). Principal Secretary to Govt State of Tamil Nad ,
Revenue Department, Secretariat, Fort St George.
Chennai -600009,
(2). Principal Secretary to Govt State

தேதி: 15-8 -2017
அனுப்புநர்,
S. சிவ ஜெயப்பிரகாஷ், A.D.S.P. (ப.நி),
செல் எண்: 9442219159
செயலாளர்: மள்ளர் பாரதம் சங்கம் (பதிவு எண் .85 / 2013)
செயலாளர்: அகிய இந்திய குடும்பர் சத்திரிய மகாசபாவின் தமிழ்நாட்டுக் கிளை,
தலைமை அலுவலகம்: வாரணாசி,
உத்தரப்பிரதேசம்.
Regd. எண் .1894 (882/1910),
ஆசிரியர்: மள்ளர் பாரதம்.

முகவரி:
எண்:C-32/86H,
ஆசாத்தெரு,
மனகாவலம் பிள்ளை நகர்,
பாளையங்கோட்டை & அஞ்சல்,
திருநெல்வேலி மாவட்டம்,
தமிழ்நாடு - 627 002.

பெறுநர்,
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்,
கோயம்புத்தூர் மாவட்டம்,
ஸ்டேட் பாங்க் சாலை,
கோபாலபுரம்,
கோயம்புத்தூர் -641018
-----------
மேற்கண்ட மூன்றும் பள்ளர் பெருமக்களே கொடுத்த புகார் ஆகும்.
சில பள்ளர் உடன்பிறப்புகள் அவரது வளர்ப்புத் தந்தையை உண்மையான தந்தை என்று நம்பி அவருக்கு ஆதவாக செயல்படுகின்றனர்.
இவர் பூர்வீகம் கோவை காமராசர் வீதி (கோவை புரூக்பீட்ஸ் அருகே இருக்கும் அருந்ததியர் வசிக்கும் பகுதி).
இவர் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர் என்பது அங்கே போய் விசாரித்தால் தெரியும்.
--------
இவரது அரசியல் நுழைவே மக்களைக் காவுகொடுத்த தாமிரபரணிப் படுகொலை மூலம் நடந்தது.
1999ல் மாஞ்சோலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பணியாற்றிய கிருஷ்ணசாமி,
அவர்கள் பிரச்சனை முடிந்து வேலைக்குத் திரும்பிய பிறகு நான்கைந்து நாட்கள் கழித்து எங்களை மிரட்டி கையெழுத்து வாங்கிவிட்டனர் என்று பொய்யாக பேட்டி கொடுக்க,
ஏற்கனவே அதிருப்தியில் இருந்த நிர்வாகம் உடன்படுக்கையை ரத்து செய்து வேலையை நிறுத்தியது.
அடுத்த நடந்த திருநெல்வேலி பேரணியின்போது தி.மு.க முன்பே திட்டமிட்டு தாமிரபரணி ஆற்று நீரை அதிகமாகத் திறந்து வைத்து போராடிய மக்கள் மீது காவல்துறையை ஏவி தடியடி நடத்தி  ஆற்றில் தள்ளியதால் விக்னேஷ் எனும் ஒரு வயது குழந்தை உட்பட 17 பேர் (பெரும்பாலும் பள்ளர்) இறந்தனர். 500 பேர் வரை காயமடைந்தனர்.

அந்த சூடு ஆறுவதற்குள்ளே 2001 ல் திமுகவுடன் கூட்டணி வைத்து பத்து எம்.எல்.ஏ. சீட்
வாங்கியவர்தான் இந்த கிருஷ்ணசாமி.

இவருக்காக உயிரைவிட்ட எவரையும் இவர் நினைவுகூர்ந்ததோ மரியாதை செலுத்தியதோ ஒருபோதும் கிடையாது
-------------
இது போக இவர் ஹிந்துத்வா கையாள் என்பதற்கும் இரண்டு சான்றுகள் உண்டு.

குமுதம் 16.1.1998
'என் குரு சங்கராச்சாரியார்தான்' என்று கிருஷ்ணசாமி அளித்த பேட்டிக்கான அட்டைப்பட விளம்பரம்.

இது இவரது ஆரம்பகால இந்துத்துவ சார்புக்கு சான்று ஆகும்.
மேலும், நேற்று அனிதா தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும்
அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாகவும்
அதை விசாரிக்க முதல்வரையும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்திக்கவுள்ளதாகவும் பேட்டி கொடுத்தார்.
நேற்று மாலை 7மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக சென்று இரவு டெல்லியில் (மிக உயர்தர ஆடம்பரமான) ஹோட்டல் ஷெரட்டனில் தங்கிவிட்டு
இன்று (06.09.2017) காலை 11மணிக்கு எந்த (அப்பாயின்ட்மென்ட்) முன் அனுமதியும் இல்லாமல் நேரடியாக பிரதமருக்கு அடுத்தநிலையில் உள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து அனிதா மரணம் பற்றி சி.பி.ஐ விசாரிக்க மனு கொடுத்தார் டாக்டர் கிருஷ்ணசாமி.

எந்த பதவியிலும் இல்லாத ஒருவரால் நினைத்த மாத்திரத்தில் உயர்மட்ட பா.ஜ.க அமைச்சரை சந்திக்க முடிகிறதென்றால் அவர் அந்த கட்சிக்கு எவ்வளவு நெருக்கமானவராக இருக்கவேண்டும் என்று யூகிக்கமுடிகிறது.

மேலும் நீட் தேர்வினை ஆதரிக்கும் இவர் எண்ணூற்றி சொச்சம் மதிப்பெண் மட்டுமே எடுத்த தனது மகளுக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் கெஞ்சி சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான இட
ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வியில் இடமும் வாங்கிக்கொடுத்தவர் ஆவார்.
இதனை பாலா பாரதி (கன்னடர்) அம்பலப்படுத்தியுள்ளார்.

இவர் தற்போது மத்திய அரசிடம் எதிர்பார்ப்பது தனது மகளுக்காக திருவனந்தபுரத்தில் கட்டிவரும் மிகப் பிரம்மாண்டமான மருத்துவமனைக்கு எந்த தடங்கலும் வரக்கூடாது என்பதுதான்.

எங்கெங்கு நோக்கினும் உருமறைப்பு வந்தேறிகள் !

Wednesday, 4 January 2017

சாமியாடி குடும்பர் - மாடுபிடி வீரர்

"தாய்க்கு பின் தாரம்"னு ஒரு படம்,

1956-ல எம்.ஜி.ஆர் நடிச்சது,

சாண்டோ
சின்னப்பா தேவர் தயாரித்தது,

படத்தோட இறுதியில ஒரு சல்லிக்கட்டு காட்சி
வரும்,

அந்த சல்லிக்கட்டு காட்சியில் எம்.ஜி.ஆர்-க்கு டூப் போட்டவர் பெயர் சாமியாடி குடும்பர்,
அந்த காலத்துல பிரபலமான மாடுபிடி வீரர்.

தகவலுக்கு நன்றி: Anbe Selva

தலித்தியவாதிகள் கூறுவது போல ஆதிக்கசாதி விளையாட்டு என்றால்  ஒரு பள்ளர் எப்படி பிரபலமான மாடுபிடி வீரராக இருந்திருக்க முடியும்?

மறவர் பள்ளர் சமூகங்களும் கூட ஒற்றுமையாகவே இருந்துள்ளனரே?

தலித்தியத்தின் பொய்ப் பிரச்சாரத்தை இனியும் நம்பலாமா?!

Thursday, 29 December 2016

பரந்த மனம் வேண்டும் பள்ளர்களே!

பரந்த மனம் வேண்டும் பள்ளர்களே!

பன்னீர்செல்வம் ஒரு மறவர் என்பதற்காக மட்டுமே எதிர்க்கும் சில பள்ளர்களுக்கு..

முதலில் மள்ளர்-மறவர் மோதல் எப்போது தொடங்கியது என்று அறிக.

தேவரையா தேர்தலில் நிறுத்திய பள்ளர்கள் இருவர்.

1957தேர்தலில் ஃபார்வர்டு பிளாக் சார்பாக ஏ.வேலு தேவேந்திரர் என்பவரையும்
ஏ.பெருமாள் தேவேந்திரர் என்பவரையும்
நிறுத்தினார்.

இதில் ஒருவர் வெற்றியடைந்தார்.
இதன் பிறகே இமானுவேல் சேகரனார் படுகொலை நடந்தது.

இது ஏன் நடந்தது என்றால் சமாதான பேச்சுவார்த்தையின் போது இமானுவேலாரை பிரதிநிதியாக ஏற்கமுடியாது என்றும் அன்று காங்கிரஸ் சார்பாக நின்று வென்றவர்தான் (அவரும் ஒரு பள்ளர்.
தேவரையா நிறுத்திய பள்ளரை காங்கிரஸ் ஆதரவுடன் தோற்கடித்தவர்) பிரதிநிதியாக ஏற்கமுடியும் என்றும் கூறினார் தேவர்.
(சாதியை காரணமாக அவர் கூறவில்லை)

ஆனால் பிறகு மனம் மாறி விட்டுக்கொடுத்தார்.
இமானுவேல் சேகரனாரை பள்ளர் பிரதிநிதியாக ஏற்று மக்களை அமைதியாக இரும்படி அறிவிக்கப்பட இருந்த அறிக்கையில் கையெழுத்து போட்டார்.

இதை மறைத்து அந்த அறிக்கையை வெளிவராமல் தடுக்கவே இமானுவேலாரைக் கொலை செய்து பழியை தேவர் மீது போட்டனர்.
(தேவரை சிறையிலடைத்து மெல்லக் கொல்லும் நஞ்சு கொடுத்தனர்.
அதுவரை ஆரோக்கியமாக கம்பீரமாக வலம் வந்த தேவனார்.
சிறையிலிருந்து வெளிவந்த பிறகு நோயாளி ஆகி விரைவிலேயே மரணமும் அடைந்தார்)

1962 ல் மீண்டும் ஏ.வேலு தேவேந்திரரை ஃபார்வர்டு ப்ளாக் சார்பாக நிறுத்தி வெற்றி பெறச்செய்தார்
முத்துராமலிங்க தேவனார்.

அதுமட்டுமன்றி தேவர் வெற்றி பெற்ற தொகுதிகளில் பள்ளர்கள் கணிசமாக இருந்தனர்.

தேவரையா பள்ளர்களுக்கோ
பள்ளர்கள் தேவனாருக்கோ எதிராக இருந்ததே இல்லை.

அவர் இறக்கும் தருவாயில் தமது சொத்துக்களை பகிர்ந்தளித்த போது 30% பள்ளர்களுக்கு கிடைத்தது.

ஆக தேவர்-தேவேந்திரர் மோதல் அரசியல் லாபத்திற்காக போலியாக உருவாக்கப்பட்டது.

இதனை இரு தரப்பினரும் புரிந்துகொள்ளவேண்டும்.
பன்னீர்செல்லத்தையும் சசிகலாவையும் நாம் தூக்கியெறிந்தால் அந்த இடத்தில் வேற்றினத்தான் வந்து அமர வழி ஏற்படும்.

உங்கள் மனதைக் கேட்டுப்பாருங்கள்.

தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும் என்ற இயற்கைக்கு ஏற்பவே உங்கள் ஆழ்மனம் பதில் சொல்லும்.

பன்னீர்செல்வம் ஒன்றும் நிரத்தரமானவர் கிடையாது.

நாம் பிறகு இவரை அகற்றிவிட்டு மானமுள்ள வேறொரு தமிழரை அரியணை ஏற்றலாம்.

பரந்த மனம் வேண்டும் பள்ளர்களே!

Saturday, 19 July 2014

மரியாதைக்குரிய பள்ளர்

மரியாதைக்குரிய பள்ளர்
சன்னதியில் பரிவட்டம்
யானை மீது ஊர்வலம்
வெண்கொற்றக்குடை நிழல்
மள்ளர் குலப்பெருமை மணிமுடியாய்த் தரித்த
தமிழினம்
தமிழ்நாட்டின் பழம்பெரும் கோவில்களான
மதுரை மீனாட்சியம்மன்,திருபரங்குன்றம் ,
பழனி ,திருத்தணி ,திருச்செந்தூர் முருகன்
கோவில்கள் , கோவை பேரூர் பட்டிஸ்வரர் ,
நெல்லையப்பர் , சங்கரன் கோவில் மற்றும்
கழுகுமலை உள்ளிட்ட பல கோவில்களில்
பள்ளர்களுக்கு பழங்காலந் தொட்டு இன்று வரையி
லும் முதல் மரியாதையும் , பள்ளர்கள் சார்ந்த பல
விழாக்களும் நடைபெறுகின்றன ,
திருப்பரங்குன்றம் கோவிலில்
http://mallarchives.blogspot.in/2012/
11/3874.html?m=1
பழனி
http://devendrarkural.blogspot.in/2014/01/blog-
post_8121.html?m=1
மதுரை மீனாட்சி கோவில்
http://mallarchives.blogspot.in/2012/11/blog-
post_9550.html?m=1
திருநெல்வேலி நெல்லையப்பர் சிவன்கோவில்
http://mallarchives.blogspot.in/2012/11/blog-
post_4.html?m=1
பேரூர் (கோவை மாவட்டம்)
http://mallarchives.blogspot.in/2012/11/blog-
post_6.html?m=1
https://m.facebook.com/photo.php?fbid=422122847891374&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739