Showing posts with label மாடு. Show all posts
Showing posts with label மாடு. Show all posts

Thursday, 26 June 2025

மாடு என்பது சொத்து

மாடு என்பது சொத்து 

 மாடு எனும் சொல் செல்வம் அல்லது சொத்து எனும் பொருள் தரும்.
 இந்த சொத்து பொன்னாக இருக்கலாம் அல்லது அசையாத சொத்தான இடம், நிலம், வீடு ஆகியனவாகவும் இருக்கலாம்.

 உதாரணமாக "மாடை" என்பது தங்கத்தை குறிப்பாக தங்க நாணயத்தைக் குறிக்கும் சொல்.
 "மாடு" எனும் சொல்லுக்கு சூடாமணி நிகண்டு பொன் என்று பொருள் தருகிறது.
 
 மாடி, மாடம், மாடவீதி போன்றவை இன்றும் கட்டிடம் சார்ந்த சொற்கள்.
 
 பிற்பாடு கம்பராமாயணம் தான் மாடு என்பதை எருது என்ற பொருளில் தருகிறது.

 அகராதி நிகண்டும் சீதனம் எனும் பொருள் தருகிறது.

 கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை 
 எனும் குறளில் உண்மையான செல்வம் கல்வியே மற்றவை (நிலையான) சொத்துகள் இல்லை என்றே கூறப்பட்டுள்ளது.

 குறளில் வரும் மாடு எனும் சொல் கால்நடையை நேரடியாக் குறிக்காது ஆனால் அது ஆகு பெயராகி பிற்பாடு கால்நடைகளைக் குறித்தது.

 இந்த குறளைப் பயன்படுத்தி கால்நடைகளின் முக்கியத்துவத்தைப் புரியவைக்க முயற்சிப்பவரை இது கால்நடையைக் குறிக்காது என்று இழிவு செய்வது மூடத்தனம்! 

  கால்நடை என்பதும் ஒரு மாடு (சொத்து) தான்! 

 ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்.’ (குறள் எண் 560) 
 ஒரு நாட்டில் காவல் (பாதுகாப்புத்துறை) சரியாக செயல்படாவிட்டால் முதலில் பாதிக்கப்படுவது கால்நடைகள் மூலம் வரும் வருமானம் என்று கால்நடைகளின் முக்கியத்துவம் குறித்தும் வள்ளுவர் கூறுகிறார்.
இதிலும் கல்வியையும் கால்நடைகளையும் ஒப்பிடுகிறார்!

 ஆடு மாடுகள் காப்போம்! 

Monday, 19 February 2018

அலகுமலையா? அலங்காநல்லூரா?

அலகுமலையா? அலங்காநல்லூரா?

580 காளைகள்
505 மாடுபிடிவீரர்கள்
லட்சக்கணக்கான பார்வையாளர்கள்
என திருப்பூர் அலகுமலையில் நேற்று (18.02.2018) பிரம்மாண்டமான சல்லிக்கட்டு திருவிழா நடத்திக்காட்டினர் கொங்கு மண்டலத் தமிழர்கள்.

(மிகவும் பிரபலமான அலங்காநல்லூரில் இந்த ஆண்டு 520 காளைகளும் 700 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத் தக்கது)

அலகுமலை ஏறுதழுவுதல் முதல் பரிசு விக்னேஷ் என்பவர் தட்டிச்சென்றார்.
மொத்தம் 10 காளைகளைப் பிடித்த இவர், 7 காளைகளை பிடித்தநிலையில் காயம்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டும் வந்து 3 காளைகளைப் பிடித்தது இங்கே குறிப்பிட்டத் தகுந்தது.
இவர் ஒரு எம்.எஸ்.சி பட்டதாரி.
நாட்டு மாடு வகைகள் அழியாமல் இருக்க ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடத்தப்படவேண்டும் என்று இவர் பரிசு வாங்கும்போது பேசினார்.

அலகுமலை - இனி இன்னொரு அலங்காநல்லூர் !

Wednesday, 4 January 2017

சாமியாடி குடும்பர் - மாடுபிடி வீரர்

"தாய்க்கு பின் தாரம்"னு ஒரு படம்,

1956-ல எம்.ஜி.ஆர் நடிச்சது,

சாண்டோ
சின்னப்பா தேவர் தயாரித்தது,

படத்தோட இறுதியில ஒரு சல்லிக்கட்டு காட்சி
வரும்,

அந்த சல்லிக்கட்டு காட்சியில் எம்.ஜி.ஆர்-க்கு டூப் போட்டவர் பெயர் சாமியாடி குடும்பர்,
அந்த காலத்துல பிரபலமான மாடுபிடி வீரர்.

தகவலுக்கு நன்றி: Anbe Selva

தலித்தியவாதிகள் கூறுவது போல ஆதிக்கசாதி விளையாட்டு என்றால்  ஒரு பள்ளர் எப்படி பிரபலமான மாடுபிடி வீரராக இருந்திருக்க முடியும்?

மறவர் பள்ளர் சமூகங்களும் கூட ஒற்றுமையாகவே இருந்துள்ளனரே?

தலித்தியத்தின் பொய்ப் பிரச்சாரத்தை இனியும் நம்பலாமா?!

Thursday, 29 December 2016

சல்லிக்கட்டு எதிர்ப்பு பார்ப்பன சதியா?

சல்லிக்கட்டு எதிர்ப்பு பிராமண சதியா?

ஒரு பார்ப்பனர் சல்லிக்கட்டை எதிர்த்துவிட்டாராம் உடனே 'ஆரிய சதி' 'பிராமண வெறி' என்று திசைமாறி போய்விட்டது முகநூல் தமிழ்ச் சமூகம்.

ஐ யம் தமிழ், ஐ யம் அகென்ஸ்ட் ஜல்லிக்கட்டு என படம் போட்டோரில் எல்லா சாதியினரும் இருந்தனர்.

அதில் ஒரு பார்ப்பனரை பிடித்து என்னமோ அவர்தான் இதற்கு மூல காரணம் என்பது போல போடுகிறார்கள்.

1998 லேயே "ஜல்லிக்கட்டு ஒழிப்பு குழு" அமைத்து விலங்கு நல வாரியத்துடன் இணைந்து 'ஜல்லிக்கட்டை தடை செய்' என்று முதலில் நம் பாரம்பரிய விளையாட்டை எதிர்த்தோர் தலித் அமைப்பினர்.

திருமாவளவனே 'ஜல்லிக்கட்டு தலித்துகளுக்கு எதிரானது, சாதியத் தன்மை கொண்டது' என்று 2002ல் தலையங்கம் எழுதியுள்ளார்.

2004 வாக்கில் அமராவதி மற்றும் புதூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் வகையில் தலித் அமைப்பினர் பிரச்சனை செய்தனர்.

ஜல்லிக்கட்டு என்றில்லை.
கபடி, மாட்டுவண்டி பந்தயம், சேவல் சண்டை, கிடாய் மோதல், பாரி வேட்டை என எல்லாவற்றையும் தடை செய்ய கோரினர்.
கிரிக்கெட் கூட நடக்கக்கூடாது என்று பிரச்சனை செய்த இடங்கள் உண்டு.

உண்மை என்னவென்றால் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு விளையாட்டு பிரபலம்.
அதில் நடக்கும் குழுமோதல் சில சமயம் வன்முறையில் போய் முடியும்.
பாதிக்கப்பட்டவன் தலித் என்றால் உடனே அது சாதி பிரச்சனை ஆக்கப்பட்டு சாதிய-தலித்திய-திராவிட அரசியலுக்கு அங்கே விதை தூவப்படும்.

(முதல் விதை1983 பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் இரு தரப்பினர் மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டபோது விதைக்கப்பட்டது.
பாரதிய தலித் பேந்தர் அமைப்பு, அம்பேத்கர் மக்கள் இயக்கம் போன்றவை எதிர்ப்பு பேரணி நடத்தின)

சல்லிக்கட்டு எந்த ஒரு தனி சாதிக்கும்  மதத்திற்கும் மட்டுமே உரியது கிடையாது.
அனைத்து சாதியினரும் மதத்தினரும் விளையாடலாம்.

மாட்டை பறையடித்து வாடிவாசலுக்கு அழைத்துவரும் பறையருக்கு பரிவட்டம் கட்டி முதல்மரியாதை செய்து தட்சணை கொடுக்கும் வழக்கம் உள்ள தமிழகத்தில் தலித்திய அரசியல்வாதிகளின் பொய்ப்பிரச்சாரம் எடுபடவேயில்லை.

இப்போது தமிழரின் வீரத்தைப் பார்த்து வயிறெரியும் வேற்றினத்தாரும்
பாரம்பரிய வாழ்க்கை முறையை ஒழிக்கவே முழுநேரமும் இயங்கும் பீட்டா போன்ற பன்னாட்டு அமைப்புகளும் நமக்கு எதிராக களமிறங்கி உள்ளனர்.

குறிப்பாக இந்தியா முழுவதும் ஒழிந்துவிட்ட
தமிழகத்தில் மட்டுமே எஞ்சியுள்ள  நாட்டுமாடுகளை ஒழிப்பதில் இவை கைகோர்த்துள்ளன.

காட்டுவிலங்கை வைத்து விழா நடத்தி பலமுறை அது வெறி பாகனைத் துவைக்கும் நிகழ்வு அடிக்கடி நடக்கும் கேரளா பக்கம் எவனும் போகமாட்டான்.

ஆனால் வீட்டு விலங்கான மாட்டுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத ஏறுதழுவுதல் இவர்கள் கண்களை உறுத்துகிறது.

வெளிநாட்டு மாட்டினை விற்று அதன்மூலம் சர்க்கரை நோய் வரவைக்கும் இன்சுலின் மருந்து நிறுவனங்கள்,
பசுவின் சாணத்தை ஒழித்து வேதியியல் உரங்களை கொண்டுவர நினைக்கு அமெரிக்க நிறுவனங்கள்,
பசுவை ஊசிமூலம் சினையாக்கும் மருந்தை உற்பத்தி செய்கிற நெதர்லாந்து நிறுவனங்கள்
என பெரிய பெரிய முதலாளித்துவ எதிரிகள் இருக்கிறார்கள்.

நீங்கள் என்னவென்றால் எல்லா பிரச்சனைகளுக்கும் இங்கே இருக்கும் பார்ப்பனரைப் பிடித்து பிராண்டிக்கொண்டு இருக்கிறீர்கள்.