அலகுமலையா? அலங்காநல்லூரா?
580 காளைகள்
505 மாடுபிடிவீரர்கள்
லட்சக்கணக்கான பார்வையாளர்கள்
என திருப்பூர் அலகுமலையில் நேற்று (18.02.2018) பிரம்மாண்டமான சல்லிக்கட்டு திருவிழா நடத்திக்காட்டினர் கொங்கு மண்டலத் தமிழர்கள்.
(மிகவும் பிரபலமான அலங்காநல்லூரில் இந்த ஆண்டு 520 காளைகளும் 700 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத் தக்கது)
அலகுமலை ஏறுதழுவுதல் முதல் பரிசு விக்னேஷ் என்பவர் தட்டிச்சென்றார்.
மொத்தம் 10 காளைகளைப் பிடித்த இவர், 7 காளைகளை பிடித்தநிலையில் காயம்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டும் வந்து 3 காளைகளைப் பிடித்தது இங்கே குறிப்பிட்டத் தகுந்தது.
இவர் ஒரு எம்.எஸ்.சி பட்டதாரி.
நாட்டு மாடு வகைகள் அழியாமல் இருக்க ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடத்தப்படவேண்டும் என்று இவர் பரிசு வாங்கும்போது பேசினார்.
அலகுமலை - இனி இன்னொரு அலங்காநல்லூர் !
Showing posts with label அலகுமலை. Show all posts
Showing posts with label அலகுமலை. Show all posts
Monday, 19 February 2018
அலகுமலையா? அலங்காநல்லூரா?
Labels:
அலகுமலை,
அழகுமலை,
ஆதி பேரொளி,
ஏறுதழுவுதல்,
கொங்கு,
சல்லிக்கட்டு,
திருப்பூர்,
பண்பாடு,
மாடு,
விழா,
வேட்டொலி,
ஜல்லிக்கட்டு
Subscribe to:
Posts (Atom)