மாடு என்பது சொத்து
மாடு எனும் சொல் செல்வம் அல்லது சொத்து எனும் பொருள் தரும்.
இந்த சொத்து பொன்னாக இருக்கலாம் அல்லது அசையாத சொத்தான இடம், நிலம், வீடு ஆகியனவாகவும் இருக்கலாம்.
உதாரணமாக "மாடை" என்பது தங்கத்தை குறிப்பாக தங்க நாணயத்தைக் குறிக்கும் சொல்.
"மாடு" எனும் சொல்லுக்கு சூடாமணி நிகண்டு பொன் என்று பொருள் தருகிறது.
மாடி, மாடம், மாடவீதி போன்றவை இன்றும் கட்டிடம் சார்ந்த சொற்கள்.
பிற்பாடு கம்பராமாயணம் தான் மாடு என்பதை எருது என்ற பொருளில் தருகிறது.
அகராதி நிகண்டும் சீதனம் எனும் பொருள் தருகிறது.
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை
எனும் குறளில் உண்மையான செல்வம் கல்வியே மற்றவை (நிலையான) சொத்துகள் இல்லை என்றே கூறப்பட்டுள்ளது.
குறளில் வரும் மாடு எனும் சொல் கால்நடையை நேரடியாக் குறிக்காது ஆனால் அது ஆகு பெயராகி பிற்பாடு கால்நடைகளைக் குறித்தது.
இந்த குறளைப் பயன்படுத்தி கால்நடைகளின் முக்கியத்துவத்தைப் புரியவைக்க முயற்சிப்பவரை இது கால்நடையைக் குறிக்காது என்று இழிவு செய்வது மூடத்தனம்!
கால்நடை என்பதும் ஒரு மாடு (சொத்து) தான்!
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்.’ (குறள் எண் 560)
ஒரு நாட்டில் காவல் (பாதுகாப்புத்துறை) சரியாக செயல்படாவிட்டால் முதலில் பாதிக்கப்படுவது கால்நடைகள் மூலம் வரும் வருமானம் என்று கால்நடைகளின் முக்கியத்துவம் குறித்தும் வள்ளுவர் கூறுகிறார்.
இதிலும் கல்வியையும் கால்நடைகளையும் ஒப்பிடுகிறார்!
ஆடு மாடுகள் காப்போம்!
No comments:
Post a Comment