Thursday 29 December 2016

சல்லிக்கட்டு எதிர்ப்பு பார்ப்பன சதியா?

சல்லிக்கட்டு எதிர்ப்பு பிராமண சதியா?

ஒரு பார்ப்பனர் சல்லிக்கட்டை எதிர்த்துவிட்டாராம் உடனே 'ஆரிய சதி' 'பிராமண வெறி' என்று திசைமாறி போய்விட்டது முகநூல் தமிழ்ச் சமூகம்.

ஐ யம் தமிழ், ஐ யம் அகென்ஸ்ட் ஜல்லிக்கட்டு என படம் போட்டோரில் எல்லா சாதியினரும் இருந்தனர்.

அதில் ஒரு பார்ப்பனரை பிடித்து என்னமோ அவர்தான் இதற்கு மூல காரணம் என்பது போல போடுகிறார்கள்.

1998 லேயே "ஜல்லிக்கட்டு ஒழிப்பு குழு" அமைத்து விலங்கு நல வாரியத்துடன் இணைந்து 'ஜல்லிக்கட்டை தடை செய்' என்று முதலில் நம் பாரம்பரிய விளையாட்டை எதிர்த்தோர் தலித் அமைப்பினர்.

திருமாவளவனே 'ஜல்லிக்கட்டு தலித்துகளுக்கு எதிரானது, சாதியத் தன்மை கொண்டது' என்று 2002ல் தலையங்கம் எழுதியுள்ளார்.

2004 வாக்கில் அமராவதி மற்றும் புதூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் வகையில் தலித் அமைப்பினர் பிரச்சனை செய்தனர்.

ஜல்லிக்கட்டு என்றில்லை.
கபடி, மாட்டுவண்டி பந்தயம், சேவல் சண்டை, கிடாய் மோதல், பாரி வேட்டை என எல்லாவற்றையும் தடை செய்ய கோரினர்.
கிரிக்கெட் கூட நடக்கக்கூடாது என்று பிரச்சனை செய்த இடங்கள் உண்டு.

உண்மை என்னவென்றால் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு விளையாட்டு பிரபலம்.
அதில் நடக்கும் குழுமோதல் சில சமயம் வன்முறையில் போய் முடியும்.
பாதிக்கப்பட்டவன் தலித் என்றால் உடனே அது சாதி பிரச்சனை ஆக்கப்பட்டு சாதிய-தலித்திய-திராவிட அரசியலுக்கு அங்கே விதை தூவப்படும்.

(முதல் விதை1983 பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் இரு தரப்பினர் மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டபோது விதைக்கப்பட்டது.
பாரதிய தலித் பேந்தர் அமைப்பு, அம்பேத்கர் மக்கள் இயக்கம் போன்றவை எதிர்ப்பு பேரணி நடத்தின)

சல்லிக்கட்டு எந்த ஒரு தனி சாதிக்கும்  மதத்திற்கும் மட்டுமே உரியது கிடையாது.
அனைத்து சாதியினரும் மதத்தினரும் விளையாடலாம்.

மாட்டை பறையடித்து வாடிவாசலுக்கு அழைத்துவரும் பறையருக்கு பரிவட்டம் கட்டி முதல்மரியாதை செய்து தட்சணை கொடுக்கும் வழக்கம் உள்ள தமிழகத்தில் தலித்திய அரசியல்வாதிகளின் பொய்ப்பிரச்சாரம் எடுபடவேயில்லை.

இப்போது தமிழரின் வீரத்தைப் பார்த்து வயிறெரியும் வேற்றினத்தாரும்
பாரம்பரிய வாழ்க்கை முறையை ஒழிக்கவே முழுநேரமும் இயங்கும் பீட்டா போன்ற பன்னாட்டு அமைப்புகளும் நமக்கு எதிராக களமிறங்கி உள்ளனர்.

குறிப்பாக இந்தியா முழுவதும் ஒழிந்துவிட்ட
தமிழகத்தில் மட்டுமே எஞ்சியுள்ள  நாட்டுமாடுகளை ஒழிப்பதில் இவை கைகோர்த்துள்ளன.

காட்டுவிலங்கை வைத்து விழா நடத்தி பலமுறை அது வெறி பாகனைத் துவைக்கும் நிகழ்வு அடிக்கடி நடக்கும் கேரளா பக்கம் எவனும் போகமாட்டான்.

ஆனால் வீட்டு விலங்கான மாட்டுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத ஏறுதழுவுதல் இவர்கள் கண்களை உறுத்துகிறது.

வெளிநாட்டு மாட்டினை விற்று அதன்மூலம் சர்க்கரை நோய் வரவைக்கும் இன்சுலின் மருந்து நிறுவனங்கள்,
பசுவின் சாணத்தை ஒழித்து வேதியியல் உரங்களை கொண்டுவர நினைக்கு அமெரிக்க நிறுவனங்கள்,
பசுவை ஊசிமூலம் சினையாக்கும் மருந்தை உற்பத்தி செய்கிற நெதர்லாந்து நிறுவனங்கள்
என பெரிய பெரிய முதலாளித்துவ எதிரிகள் இருக்கிறார்கள்.

நீங்கள் என்னவென்றால் எல்லா பிரச்சனைகளுக்கும் இங்கே இருக்கும் பார்ப்பனரைப் பிடித்து பிராண்டிக்கொண்டு இருக்கிறீர்கள்.

No comments:

Post a Comment