Showing posts with label கள்ளர். Show all posts
Showing posts with label கள்ளர். Show all posts

Friday, 21 September 2018

உனக்கேன் கொடுப்பது கிஸ்தி என கேட்டது கள்ளர் கூட்டமைப்பு

உனக்கேன் கொடுப்பது கிஸ்தி என கேட்டது கள்ளர் கூட்டமைப்பு

"வானம் பொழிகிறது! பூமி விளைகிறது! உனக்கேன் கொடுப்பது கிஸ்தி"
இந்த வசனத்தை உண்மையில் பேசியது மதுரை கள்ளர்கள்.
இது ஆங்கிலேயர் ஆவணத்தில் பதிவாகி உள்ளது.

இந்த வசனத்தை காப்பி அடித்து சம்மந்தம் இல்லாமல் கட்டபொம்மு பேசியதாக கதை அமைத்து அதையும் ஒரு கள்ளர் (சிவாஜி கணேசன்) வாயாலேயே பேச வைத்துவிட்டார் இயக்குனர் தெலுங்கு பந்துலு.

Source :The Madura Country: A Manual.

நன்றி: Karthik Thevar

------------------------

 1750களில் பிரிட்டிஸார் மதுரை மண்டலத்தில் வரி வசூல் செய்யும்உ ரிமையை பெற்று தன்னரசு கள்ளர்நா ட்டிற்கு வந்த பொழுது பிரிட்டீஸார்க ள்ளர் நாட்டாரிடம் வரி கேட்ட போது அவர்கள் அளித்த பதில் என்னவென்று பிரிட்டிஸாரே புத்தகம் எழுதியுள்ளனர்.

 ராபர்ட் ஓர்ம், s.c ஹீல், எட்கர் தர்ட்சன்எ ழுதிய நூல்களில் பிரிட்டீஸ் அரசு தன்னரசு கள்ளர்களிடம் வரியை கேட்டது அதற்கு அவர்கள் அவமானம்  அளிக்கும் வார்த்தைகளால் பதிலை அளித்தார்கள் என்று கூறுகிறார்கள்.

கள்ளர்களின் பதில்:

“வானம் பூமிக்கு மழையைத் தருகிறது,

எங்கள் வயலை நாங்கள் உழுது பயிரிட்டு உழைக்கிறோம். 

அதனால் கிடைக்கும் பிரதிபலனை எங்கள் மக்கள் அனுபவிக்கிறார்கள். 

இதில் என்ன காரணம் உள்ளது நாங்கள் உங்களுக்கு கீழ்பணிந்து வரி செலுத்துவதற்கு?”

மேலும் அந்த புத்தகத்தில் அவர்கள் அந்த பதிலுக்கு ஏற்றார்போல் எங்களிடம் சண்டையிட்டார்கள் என்றும் கூறுகின்றனர்.

சான்றுகள்:-

The rebel commandant by S.C Hill

East india magazine by R.Alexander

Castes and Tribes of south India by Edger thurston

நன்றி:-

சோழ பாண்டியன்

ஏழுகோட்டை நாடு




Thursday, 29 December 2016

பரந்த மனம் வேண்டும் பள்ளர்களே!

பரந்த மனம் வேண்டும் பள்ளர்களே!

பன்னீர்செல்வம் ஒரு மறவர் என்பதற்காக மட்டுமே எதிர்க்கும் சில பள்ளர்களுக்கு..

முதலில் மள்ளர்-மறவர் மோதல் எப்போது தொடங்கியது என்று அறிக.

தேவரையா தேர்தலில் நிறுத்திய பள்ளர்கள் இருவர்.

1957தேர்தலில் ஃபார்வர்டு பிளாக் சார்பாக ஏ.வேலு தேவேந்திரர் என்பவரையும்
ஏ.பெருமாள் தேவேந்திரர் என்பவரையும்
நிறுத்தினார்.

இதில் ஒருவர் வெற்றியடைந்தார்.
இதன் பிறகே இமானுவேல் சேகரனார் படுகொலை நடந்தது.

இது ஏன் நடந்தது என்றால் சமாதான பேச்சுவார்த்தையின் போது இமானுவேலாரை பிரதிநிதியாக ஏற்கமுடியாது என்றும் அன்று காங்கிரஸ் சார்பாக நின்று வென்றவர்தான் (அவரும் ஒரு பள்ளர்.
தேவரையா நிறுத்திய பள்ளரை காங்கிரஸ் ஆதரவுடன் தோற்கடித்தவர்) பிரதிநிதியாக ஏற்கமுடியும் என்றும் கூறினார் தேவர்.
(சாதியை காரணமாக அவர் கூறவில்லை)

ஆனால் பிறகு மனம் மாறி விட்டுக்கொடுத்தார்.
இமானுவேல் சேகரனாரை பள்ளர் பிரதிநிதியாக ஏற்று மக்களை அமைதியாக இரும்படி அறிவிக்கப்பட இருந்த அறிக்கையில் கையெழுத்து போட்டார்.

இதை மறைத்து அந்த அறிக்கையை வெளிவராமல் தடுக்கவே இமானுவேலாரைக் கொலை செய்து பழியை தேவர் மீது போட்டனர்.
(தேவரை சிறையிலடைத்து மெல்லக் கொல்லும் நஞ்சு கொடுத்தனர்.
அதுவரை ஆரோக்கியமாக கம்பீரமாக வலம் வந்த தேவனார்.
சிறையிலிருந்து வெளிவந்த பிறகு நோயாளி ஆகி விரைவிலேயே மரணமும் அடைந்தார்)

1962 ல் மீண்டும் ஏ.வேலு தேவேந்திரரை ஃபார்வர்டு ப்ளாக் சார்பாக நிறுத்தி வெற்றி பெறச்செய்தார்
முத்துராமலிங்க தேவனார்.

அதுமட்டுமன்றி தேவர் வெற்றி பெற்ற தொகுதிகளில் பள்ளர்கள் கணிசமாக இருந்தனர்.

தேவரையா பள்ளர்களுக்கோ
பள்ளர்கள் தேவனாருக்கோ எதிராக இருந்ததே இல்லை.

அவர் இறக்கும் தருவாயில் தமது சொத்துக்களை பகிர்ந்தளித்த போது 30% பள்ளர்களுக்கு கிடைத்தது.

ஆக தேவர்-தேவேந்திரர் மோதல் அரசியல் லாபத்திற்காக போலியாக உருவாக்கப்பட்டது.

இதனை இரு தரப்பினரும் புரிந்துகொள்ளவேண்டும்.
பன்னீர்செல்லத்தையும் சசிகலாவையும் நாம் தூக்கியெறிந்தால் அந்த இடத்தில் வேற்றினத்தான் வந்து அமர வழி ஏற்படும்.

உங்கள் மனதைக் கேட்டுப்பாருங்கள்.

தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும் என்ற இயற்கைக்கு ஏற்பவே உங்கள் ஆழ்மனம் பதில் சொல்லும்.

பன்னீர்செல்வம் ஒன்றும் நிரத்தரமானவர் கிடையாது.

நாம் பிறகு இவரை அகற்றிவிட்டு மானமுள்ள வேறொரு தமிழரை அரியணை ஏற்றலாம்.

பரந்த மனம் வேண்டும் பள்ளர்களே!

சசிகலா பொதுச்செயலாளராக...

சே குவேரா கூறியதுதான் நினைவு வருகிறது.

"மோசமான தலைவர்களை மாற்றுவது என்பது
புதிய தலைவர்கள் வந்து மோசமாக மாறுவதற்குத்தான்"

ஜெயாவின் இடத்தை சசியைக் கொண்டு மாற்றியமைப்பது இதையே குறிக்கிறது.

ஆயிரம்தான் இருந்தாலும் சசி ஒரு தமிழர்.
(இருவேறு சாதிகள் கலந்து பிறந்தவர்).

அதனால் மகிழ்ச்சி.