Saturday 26 August 2017

தமிழின பார்ப்பனரும் இசுலாமியரும் ஒதுக்கப்படலாமா?

தமிழின பார்ப்பனரும் இசுலாமியரும் ஒதுக்கப்படலாமா?

* பார்ப்பனர் ஏன் தமிழில் தொழுவதில்லை?
அவர்களது புனிதநூல் ஏன் தமிழில் இல்லை?

* பார்ப்பனர் திருமண முறை ஏன் வேறுபட்டதாக உள்ளது?

* பார்ப்பனர் முடிவெட்டிக்கொள்ளும் முறை  ஏன் விசித்திரமாக உள்ளது?

* பார்ப்பனர் உடையணிவது ஏன் வேறுமாதிரி உள்ளது?

* பார்ப்பனர் வணக்கம், வாழ்த்து சொல்வது ஏன் தமிழல் இல்லை?

* பார்ப்பனர் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சொற்கள், உறவுமுறை கூறி அழைப்பது போன்றவை வேறு மொழியில் ஏன் உள்ளன?

* பார்ப்பனர் ஏன் குலதெய்வ வழிபாடு செய்வதில்லை?

* பார்ப்பனர் வெளியிலிருந்து வந்த இனம் என்று சில கட்சிகள் பிரச்சாரம் செய்கிறார்களே?

* பார்ப்பனரின் மூதாதையர்கள் ஆட்சி செய்தபோது மக்களை கொடுமைப்படுத்தியதாக கூறுகிறார்களே?

* பார்ப்பனர் வீட்டிற்குள் வேறுமொழி பேசுவதாக கூறுகிறார்களே?

* பார்ப்பனர் ஏன் தமிழில் பெயர்வைப்பதில்லை?

* பார்ப்பனர் என்றால் நிறமாகத்தான் இருப்பார்கள்.

* பார்ப்பனர்கள் அனைவருமே மதவெறி பிடித்தவர்கள் என்று கூறப்படுகிறதே?

* பார்ப்பனர்கள் இன உணர்வு இல்லாதவராக உள்ளனரே?

* பார்ப்பனர்கள் வேறு ஒரு மொழியை படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி, பயிற்சி மையங்கள் நடத்துகின்றனரே?

* பார்ப்பனர் தமது புனித தலங்களாக தமிழகத்திலிருந்து வெகுதூரத்தில் உள்ள இடங்களைச் சொல்கிறார்களே?

மேற்கண்ட அனைத்திலும் பார்ப்பனர் என்று வரும் இடத்தில் இசுலாமியர் என்று போட்டு ஒரு முறை படிக்கவும்.

விளையாட்டில்லை ஒருமுறை படியுங்கள்.

தமிழினத்து இசுலாமியர் எப்படி தமிழரோ அப்படியே பார்ப்பனரும் தமிழரே!

பிற இனத்து பிராமணரை தமிழினத்து பார்ப்பனருடன் குழப்புவதென்பது
உருது முஸ்லீம்களை தமிழினத்து இசுலாமியருடன் குழப்புவது போன்றது.

பார்ப்பனரை ஆரியருடன் தொடர்பு படுத்துவதென்பது
இசுலாமியரை அராபியருடனும்
கிறித்தவரை ஐரோப்பியருடனும் தொடர்புபடுத்துவது போன்றது.

மேலும் அறிய,

தேடுக: பார்ப்பனீயம் பிராமணீயம் வேறுபாடு வேட்டொலி

தேடுக: பார்ப்பனர் பிராமணர் வேறுபாடு வேட்டொலி

No comments:

Post a Comment