Showing posts with label திருச்செந்தூர். Show all posts
Showing posts with label திருச்செந்தூர். Show all posts

Sunday, 22 June 2025

அரசியலில் முருகன் சீமான் முதல் பாஜக வரை

அரசியலில் முருகன்
 சீமான் முதல் பாஜக வரை

 2015 இல் சீமான் வீரத் தமிழர் முன்னணி எனும் பாசறையைத் தோற்றுவித்து முப்பாட்டன் முருகன் என்று முருக வழிபாட்டை தமிழ்தேசிய விழாவாக ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கிறார்.

 திருமுருகப் பெருவிழா எனும் பெயரிட்டு நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த விழாக்கள்

2016 திருப்பரங்குன்றம்
2017 திருத்தணி
2018 திருச்செந்தூர்
2019 கோவை 
2020 சுவாமி மலை 
2021 திருப்போரூர்
(இவற்றில் தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கப்பட்டு 2021 தைப் பூசம் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது)

2022 லிருந்து தொகுதி வாரியாக விழா நடக்கிறது.

2025 இல் திருச்செந்தூர் குடமுழுக்கு தமிழில் நடக்க மாபெரும் பொதுக்கூட்டம்!
 அதன் விளைவாக குடமுழுக்கு தமிழிலும் நடக்கும் என்று அறிவிப்பு! 

 இதெல்லாம் முடிந்த பிறகு இன்று பாஜக நடத்தும் "முருகன் மாநாடு" நடக்கிறது.

Wednesday, 2 May 2018

திருச்செந்தூர் முருகன் தெலுங்கர் பிடியில்...

என்னது திருச்செந்தூர் கோவில் தர்மகர்த்தா ஒரு தெலுங்கரா?!

அதுவும் கொள்ளைக்காரன் கெட்டிபொம்மு வாரிசா?!

இந்த மண் தெலுங்கர்களுக்கு சொந்தமா?!

(நன்றி: அருள் ராஜா பிள்ளை)

Sunday, 8 October 2017

எம்.ஜி.ஆர் திருடிய திருச்செந்தூர் முருகனின் வைரவேல்!

சின்னப்ப தேவர் தன் குலதெய்வமான மருதமலை முருகன் கோவில் படிக்கட்டுகளின் இருபுறமும் மின் விளக்குகள் அமைத்தார்.
அதைத் திறந்துவைக்க எம்.ஜி.ஆரை அழைக்க அவர் தி.மு.க வில் இருந்துகொண்டு ஆன்மீக நிகழ்ச்சிக்கு வர இயலாது என்று கூறிவிடுகிறார்.
உடனே தேவரின் தாய் எம்.ஜி.ஆரிடம் வேண்டுகோள் விடுக்க அவர் ஒத்துக்கொண்டு விழாவிற்கு வந்தார்.
இதை பலரும் பெருமையாகக் கூறுவார்கள்.

ஆனால் இதே 1980 வாக்கில் எம்.ஜி.ஆர் திருச்செந்தூர் முருகனுடைய வைரவேலைத் திருடி பலகோடிக்கு விற்றார் அப்போதிருந்த அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் இதற்கு உடந்தை.
தி.மு.க வினர் இதை பெரிய பிரச்சனையாக்க சி.ஜே.ஆர்.பால் என்பவர் தலைமையில் விசாரணை கமிசன் கூட அமைக்கப்பட்டது.
ஆனால் வேல் கடைசிவரை கிடைக்கவில்லை.
கோயில் பொறுப்பாளர் சுப்பிரமணியபிள்ளை மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்துகிடந்தார்.
(இதைக் கண்டித்து கருணாநிதி நீதிகேட்டு நெடும்பயணம் என்று மதுரை முதல் திருச்செந்தூர் வரை நடைபயணம் கூட போனார் 1981ல்).
அதன்பிறகு இதே எம்.ஜி.ஆர் பல கோடி மதிப்புள்ள ராமேஸ்வரம் லட்சுமணர் சிலையை திருடினார்.
அது தொடர்பான வழக்கு இப்போது சூடுபிடித்துள்ளது.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதி வைரவேலை கண்டுபிடிக்க முயன்றிருப்பார் என்று நினைத்தால் நீங்களும் அன்றைய தமிழர்கள் போல அப்பாவியே!
அன்று கருணாநிதி குற்றம்சாட்டிய ஆர்.எம்.வீரப்பனும் சண்முகநாதனும் இன்று அவரது உயிர்நண்பர்கள்.

தமிழக கோவில்களில் சிலைகள் திருட்டு போவது மிகவும் சகஜமாகி
அதன்பிறகு அதற்கென்று தனி தடுப்புத்துறை உருவாக்கப்பட்டு
அதன்பிறகும் சிலை திருட்டு திராவிட மாபியாக்களால் நடந்துகொண்டேதான் இருக்கிறது.

Monday, 29 August 2016

முப்பாட்டனின் படைமுகாமில்

முப்பாட்டனின் படைமுகாமில்

நம் முப்பாட்டன் முருகன் படையோடு சென்று முகாமிட்டு கடல்வழி வந்த படையெடுப்பை முறியடித்த இடமே செந்தூர் ஆகும்.

யார் இந்த முருகன்?

முருகன் என்பவரின் இயற்பெயர் குமரவேல் பாண்டியன்.
இவர் தமிழ் அரசன்.
அழகாக இருந்ததால் முருகன் என்ற பெயர் பெற்றார்.

இவர் திருப்பதி முதல் கதிர்காமம் வரை படை முகாம் அமைத்து தமிழகத்தை பல்வேறு படையெடுப்புகளில் இருந்து காப்பாற்றினார்.
அந்த முகாம் இடங்கள்தான் இன்று படைவீடுகள் என்று அழைக்கப்படுகின்றன.
உயரமான இடத்திலிருந்து போரிடுவதுதான் எளிது.
சன் சூ எழுதிய போர்க்கலை உயரமான இடத்தை முதலில் கைப்பற்று என்கிறது.
ஆகவே தமிழ் பேசும் மண் முழுவதுமே குன்றுகளில் முருகனின் படைமுகாம்கள் இருந்தன.
அவை கோவில்களாக மாறி இன்று குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கிறார்.
இவர் இன்றும் போர்க்கடவுளாக வணங்கப்படுகிறார்.

இவர் அறிமுகப்படுத்திய வேல் என்ற ஆயுதம் புதுமையாகவும் எளிதாகவும் இருந்தது.
பல வெற்றிகளை ஈட்டித்தந்தது.
அதன்பிறகு வெற்றிவேல் வீரவேல் என்ற முழக்கம் போர்முழக்கம் ஆனது.

அலகு குத்துதல், காவடி தூக்குதல், மலையேறுதல், தேரிழுத்தல், உண்ணாமல் நோன்பிருத்தல் போன்றவை போர்பயிற்சி வடிவங்கள் (தீ மிதித்தலும் கூட).

குற்றால மலை குறவர்களிடம் பெண் எடுத்து திருமணம் செய்தவர்.
மயில் என்றால் மிகவும் பிடிக்கும்.
அதனால் எப்போதும் மயிலொன்றைகூடவே வைத்திருப்பார்.

இவருக்கும் ஹிந்து மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

5000 ஆண்டுகள் முன்பு இவர் உயிருடன் வாழ்ந்த மனிதர்.
சிவனும் இவரைப்போல உயிருடன் வாழ்ந்த மனிதர்தான்.
அவரது இயற்பெயர் ஆதிநாதன்.
சிவன் புலித்தோல் கட்டியவர்.
அதனால் அவர் நாகரீகம் தோன்றிய ஆரம்ப காலத்தைச் சேர்ந்தவர்.
முருகன் கோவணம் கட்டுபவர்.
அதனால் நூல் மூலம் ஆடை செய்ய ஆரம்பித்த நாகரீக காலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிகிறது.

இறந்தபிறகு தமிழ் மக்கள் வணங்கத் தொடங்கிவிட்டார்கள்.
பக்தி என்ற உணர்ச்சி பின்னர் இதில் கலந்துவிட்டது.

தகவல்கள்: Tamil chinthanaiyalar peravai (யூட்யூப்)

முருகன் தமிழ்க் கடவுள்
பொங்கல் தமிழர் பண்டிகை அதை அனைத்து தமிழரும் கொண்டாடுவது போல முருகனையும் அனைத்து தமிழரும் தமது மூதாதையராக ஏற்றுக்கொள்ளவேண்டும்.