Sunday, 1 September 2024
பெருந்தமிழர் தமிழரசன்
Friday, 31 March 2023
தமிழரசன் ஏன் தோற்றார்?
Friday, 1 September 2017
சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தமிழரசன்
சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தமிழரசன்
ஆயதக் கொள்ளையர்களை பொதுமக்கள் வெறுங்கையாலேயே அடித்துக்கொன்ற சம்பவம் உலகில் எங்கேயாவது நடந்ததுண்டா?
ஆனால் வங்கியில் நுழைந்து தம் கண்முண்ணே ஒருவரை சுட்டுக் கொன்றுவிட்டு வரும் ஆயுதம் தாங்கிய 5 கொள்ளையர்களை வெறுங்கையால் சாதாரண மக்கள் தாக்கிக் கொன்றனர்!
தமிழகத்தில் அந்த அதிசயம் நடந்தது (???!!!!)
ஆம். தமிழ்நாடு ஹிந்திய அரசிடம் இருந்து விடுதலை அடைய 'தமிழ்நாடு விடுதலைப் படை' என்ற இயக்கம் நிறுவி ஆயுதம் தாங்கி போராடிய தமிழரசன்,
கர்நாடகா விதிமுறையை மீறி கட்டிய ஹேமாவதி அணையைத் தகர்க்க திட்டமிட்டார்.
அதற்கு தேவைப்பட்ட நிதியை திரட்ட அரசு வங்கியைக் கொள்ளையடித்தார்.
ஆனால் இந்த தகவல் முன்பே உளவுத்துறைக்கு தெரிந்திருந்தது.
தமிழரசனை தடுத்து நிறுத்த ஒரே வழி அவரைக் கொல்வதுதான் என்று முடிவு கட்டிய ஆளும் வர்க்கம்,
நேரடியாக மோத பயந்துகொண்டு அவரது பலவீனம் எது என ஆராய்ந்தார்கள்.
அவர் ஒரு மனிதநேயம் கொண்ட போராளி.
எனவே வெறுங்கையாலேயே குறிப்பிட்ட இடங்களில் அடித்து நொடியில் கொலைசெய்யும் பயிற்சியளிக்கப்பட்ட உளவுத்துறை ஆட்கள் பொதுமக்கள் போல வேடமிட்டு வங்கியில் காத்திருந்தனர்.
தமிழரசன் வந்தார், கொள்ளையடித்துவிட்டு வாசலை நெருங்கும்போது அந்த உளவுத்துறையினர் திடீரென பாய்ந்தனர்.
மக்கள்தான் தாக்குகிறார்கள் என்று தமிழரசனும் அவரது கூட்டாளிகளும் ஆயுதத்தை பயன்படுத்த தயங்கியதால் சில நொடிகளிலேயே தமிழரசன் உயிரைவிட்டார்.
குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்த அவரது தோழர்களும் இவ்வாறே அடுத்தடுத்து சில நொடிகளில் கொல்லப்பட்டனர்.
உடனடியாக புகைப்படம் எடுத்து ஏதோ மக்களே இதைச் செய்தது போல ஊடகங்களில் பரப்பப்பட்டது.
இதையெல்லாம் திட்டமிட்டு வெற்றிகரமாகச் செய்தது அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் அவரது ஏவல்துறை.
ஆம். முல்லைப்பெரியாறு அணை உரிமையைத் திட்டமிட்டு தன் இனத்திற்கு தாரைவார்த்த அதே மலையாளி ராமச்சந்திரன்தான்
காவிரி நீரைத் தடுத்து தமிழர்களின் கழுத்தை நெறித்துக்கொண்டு இருக்கும் ஹேமாவதி அணையையும் உடையாமல் பார்த்துக்கொண்டவர்.
அது மட்டுமல்லாது நக்சலைட் வேட்டை என்று கூறிக்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டுப் பற்றுகொண்ட இளைஞர்களைக் கொன்று தமிழ்நாட்டின் ஆயுத எழுச்சியை அடக்கியது எம்.ஜி.ஆர் ஆட்சி.
தமிழர்களில் விடுதலை எழுச்சி தமிழரசன் மரணத்தால் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
ஆனாலும் தமிழரசன் வழியில் தொடர்ந்து இயங்கிய தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA) வீரப்பனாருடன் கைகோர்த்து,
கன்னட உச்ச நடிகர் ராஜ்குமார் கடத்தல் மூலம் மீண்டும் தமிழர் உரிமைக் குரலை ஹிந்தியம் அதிர எழுப்பியது.
பிறகு வீரப்பனாரும் வயது முதிர்ந்து தளர்ந்த நிலையில் கன்னடர் ஜெயலலிதாவால் கொலைசெய்யப்பட்டார்.
மேலும் அறிய,
காண்க காணொளி :-
தமிழரசன் வங்கி கொள்ளை பற்றி பழனிபாபா (vaettoli.wordpress)
search இனம்னா என்ன? வேட்டொலி
search வீரப்பனார் பிடித்த கன்னடக்குடுமி வேட்டொலி
Wednesday, 27 July 2016
ஈழ அரசியல் தலைவர்களைத் தோலுரிக்கிறார் தமிழரசன்
ஈழ அரசியல் தலைவர்களைத் தோலுரிக்கிறார்
தனித்தமிழ்நாடு ஆயுதப் போராளி
தோழர்.தமிழரசன்.
1984ல் தமிழரசனார் நடத்திய தமிழகத்தின் முதல் ஈழ ஆதரவு மாநாடான
பெண்ணாடம் மாநாட்டு அறிக்கையிலிருந்து.
நன்றி: முகிலன் தமிழ்மணி
Sunday, 4 October 2015
தமிழரசன் சாகவில்லை??!
தமிழரசன் சாகவில்லை??!
•••••••••••••••••••••••••••••••
! தென்
ஆற்காடு மாவட்டத்தில் இருக்கும் மதகளிமாணிக்கம்
கிராமத்தில் வசிக்கும் தமிழரசனின் தாயார்
புதூசம்மாளிடம் பேசினோம்: ''அன்னிக்கு ஜெயங்கொண்டம்
ஆஸ்பத்திரிக்குப் பதறி ஓடினேன். கூறு போட்ட
உடம்பு ஒண்ணைக் காட்டினாங்க. உருவமே தெரியலை. கை, கால்
சூம்பிப் போயிருந்துச்சு. என்
பையனுக்கு அப்படி இருக்காது. அதுவும், சின்னப் புள்ளைல
மஞ்சக் காமாலை வந்தப்போ, கை புஜத்தில்
அறுத்து மருந்து போட்ட வடு இருக்கும்... முகத்துலயும்
இன்னொரு வடு இருக்குமேனு தேடினேன். ஒண்ணுமே இல்லை.
'இது என் பிள்ளை இல்லையே!’னு சொன்னேன். போலீஸ்காரங்க
என்னைத் தனியா அழைச்சுட்டுப் போய், 'இதான் என்
பையன்’னு சொல்லச் சொன்னாங்க. என்னோட உறவுக்காரங்களும்
'கிழவி, உனக்கு வயசாச்சு, வாயை மூடு, இதான் நம்ம
தமிழரசன்!’னாங்க. அந்தச் சூழ்நிலையில் என்னால
ஒண்ணுமே சொல்ல முடியலை. ஆனா, இப்போதைக்கு என் பையன்
உயிரோட இருக்கிறதா, எல்லாரும் பேசிக்கிறாங்க.
எப்படி இருந்தாலும், என் பையன் திரும்பி வருவான்!''
என்றார்.
http://stufftoreadtamil.blogspot.com/2011/07/blog-post_2093.html?m=0
Thursday, 10 July 2014
திடீர் சாதி எழுச்சி

இனம் மற்றும் சாதி
-------------
இனம் என்பது என்ன? 1)பொதுவான மொழி மற்றும் தகவல்தொடர்புமுறைகள்
2)பொதுவான தோற்றம் மற்றும் மரபணு
3)பொதுவான உணர்வு மற்றும் பழக்கவழக்கங்கள்
4)இயற்கை எல்லைகளால் வரையறுக்கப்பட்ட பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்துவரும் தாய்நிலம்.
ஆகிய நான்கு பண்புகளைக் கொண்டவர்கள் ஒரு இனம் என்றாகின்றனர்;
பலதலைமுறைகளுக்குப் பிறகு நிலஅமைப்பைப் பொறுத்து இனம் இரண்டாகவோ, அல்லது ஒரு இனத்திலிருந்து இன்னொரு கிளை இனமோ பிரிந்துவிடுகிறது.
ஜாதி என்பது என்ன?
தமிழில் 'ஜா'என்கிற எழுத்தும் கிடையாது, 'ஜாதி'என்கிற சொல்லும் கிடையாது.
அதற்கு இணையான தமிழ்ச்சொல் 'குலம்' எனலாம்.
குலம் என்பது ஒருஇனத்தில் குறிப்பிட்ட தொழில் செய்துவந்த மக்கள் தமக்குள்ளேயே திருமணம் செய்துவந்தமையால் ஏற்பட்ட உட்பிரிவு, காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் மேலும் பிரிவடைந்து பிரிவுகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டேபோகிறது.
குலம் என்பதை வரையறுக்க
1)மொழி என்று தனியாக எதுவும் இல்லை
2)ஒரு இனத்திற்குள் மற்றவர்களை விட நெருக்கமான தோற்றம் மற்றும் மரபணு
3)ஒரு இனத்திற்குள் மற்றவர்களை விட நெருக்கமான உணர்வு மற்றும் பழக்கவழக்கங்கள்
4) வரையறுக்கப்பட்ட நிலம் என்று தனியாக இல்லை.
ஆக, இனத்தின் இரண்டு பண்புகள் மேலும் இறுக்கமடைவதன் மூலம் சாதி என்பது இனம் என்பதைவிட நன்கு வேரூன்றிவிடுகிறது.
மதம் என்பது "ஏதோ ஒரு இனத்தின் எழுச்சிக்கு எப்போதோ பயன்பட்ட கொள்கை".
அக்கொள்கை அம்மக்களை முழுதும் அடக்கியாண்டபின் அதிகாரவலிமையைக் கைப்பற்றுகிறது; அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு வேகமாக பரவத் தொடங்குகிறது; அதாவது மற்ற இனத்தவர் மீதும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது அல்லது சமூக பிரச்சனைகளைக்கு மாற்றாக அமைவது போல் ஊடுருவுகிறது; ஊடுருவும்போது ஒரு குறிப்பிட்ட இனத்தின் 'மொழியையும், பழக்கவழக்கங்களையும், தலைவர்களின் பிம்பத்தையும்' சேர்த்தே எடுக்கொண்டு பரவுகிறது.
மதத்தை உருவாக்கிய(எழுச்சிபெற்ற) இனத்தின் 'மக்கள்தொகை மற்றும் இயற்கை வளங்களைப்' பொறுத்து அது கைப்பற்றிய 'அரசின் படைவலிமை' அமைகிறது;
இந்த 'அரச வலிமை'யே அதுகொண்ட மதம் உலகில் எவ்வளவு தொலைவு பரவுகிறது என்பது நிர்ணயிக்கிறது;
பெரும் உயிர்ச்சேதம் மற்றும் பொருள்நாசம் ஏற்படுகிறது.
குறிப்பிட்ட காலம் வரை அது உலகம் முழுவதும் பரவி ஒவ்வொரு இனத்திலும் ஒரு குறிப்பிட்டளவு மக்களின் 'அடையாளத்தை, மொழியை, தோற்றத்தை, பழக்கவழக்கத்தை' மாற்றியமைத்து அவர்களை அவரவர் இனத்திலிருந்து பிரிக்கமுயல்கிறது;
எப்போது தாங்கிப்பிடிக்க வலிமையான அரசு இல்லாமல் போகிறதோ, அல்லது 'தாங்கிபிடிக்கும் அரசின் வலிமையை' விட அதிக 'வலிமை கொண்ட வேறொரு மதத்தின் அதிகாரம்' கைஓங்குகிறதோ அப்போது மதம் தோல்வியுற்று மறைந்துவிடுகிறது; அதன் அடையாளங்கள் மட்டும் எஞ்சுகின்றன; மதத்தால் ஏற்பட்ட குழப்பங்கள் சிலகாலம் தொடர்கிறது; ஒரு இனத்திற்குள்ளேயே வேறுமதத்தை தழுவியவர்கள் பெரும்பாலானோர் தனிபிரிவாக ஆகின்றனர்; சிலர் ஒரு குறிப்பிட்ட சாதிகளுடன் மீண்டும் இணைந்துவிடுகின்றனர்; ஆனால் இனம் என்ற அடையாளம் அவர்களை விட்டு நீங்குவதில்லை.
ஒரு குறிப்பிட்ட இனமக்களுக்கு மத்தியில் மதத்தால் சிறுபான்மையாக இருக்கும் மக்கள் மதத்தீவிரத்துடனும் நெருக்கமான தகவல்தொடர்புடனும் இருப்பார்கள்; இது பாதுகாப்புணர்வால் ஆகும்; வேற்றின மக்களில் தமது மதத்தாரையும் தம்முடன் இணைக்க முயற்சிப்பார்கள் ஆனால் அது பெரும்பாலும் நடக்காது; காரணம் இனம் என்பது மதத்தை விடவும் ஆழமான வேர்களைக் கொண்டது.
மேற்சொன்னவை எனது சொந்த கருத்துகள்தான்; இந்த வரையறைகள் 95% மக்களுக்கு பொருந்தும் என்று நம்புகிறேன்; 5%மக்கள் இவ்வரையறைகளில் இருந்து விலகியிருக்கலாம் அவர்களை மற்ற 95% மக்களுடன் குழப்பவேண்டாம்.
தற்கால சாதி எழுச்சிக்கு வருவோம்.
நாங்கள்தான் மூவேந்தர் குலம்; சாதிவழி அடையாளம்தான் தமிழ் நாட்டாண்மையின்(தேசியத்தின்
சாதிப் பெயர்களை பின்னால் சேர்த்துக்கொண்டு இவ்வாறு தமிழ்நாட்டாண்மை பேசுபவர்கள் இன்று பெருகிவிட்டனர்; முக்கியமாக தேவர் குலத்து தமிழரும், மள்ளர் குலத்து தமிழரும் தீவிரமாக செய்துவருகின்றனர்; முன்பு தமிழ்நாட்டாண்மையை தூக்கிப் பிடித்த வன்னிய குலத்தமிழர்கள் இப்போது அதில் தீவிரம் குறைந்து சாதியத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்; பறையர் குலத்தமிழர்கள் தலித்தியத்தை நோக்கி நகருகின்றனர்; மற்ற பெரும்பான்மை எண்ணிக்கை இல்லாத தமிழரோ இனவுணர்வை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்; இந்த குழப்பநிலையை 1920களில் ஆங்கில ஆட்சியுடன் நான் ஒப்பிடுகிறேன்;
பொதுவான எதிரி இருக்கும்வரைதான் வேற்றுமைகள் தலைதூக்காது; அந்த சூழ்நிலைதான் இப்போது.
ஆங்கிலேயர் கால்பதித்த நாடுகளில் எல்லாம் அம்மக்களை நன்கு ஆராய்ந்து எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் பிரித்தாண்டனர்; அப்படி வடயிந்தியா முகலாயர்களால் பட்டக் கொடுமைகளை அறிந்துகொண்டு அங்கே இசுலாமியர்-இசுலாமியரல்லாதா
இந்த நிலையில் தமிழர் மத்தியில் பல ஆண்டுகாலம் வாழ்ந்துவரும் வேற்றினத்தவர் (குறிப்பாக சென்னையின் சுற்றுப்பகுதியில் இருக்கும் தெலுங்கர்கள்) தமக்குள் எழுச்சிகொண்டு ஆட்சியைப் பிடிக்கின்றனர்; மொழிப்பற்று கண்களை மறைத்ததால் 'வீட்டிற்கு வெளியே தமிழ்பேசும் அனைவரும் தமிழரே' என்று வெகுளியாக நம்பிய தமிழர், இனப்பற்றுடன் நாற்புறமும் எழுச்சிகொண்டுள்ள வேற்றினத்தாரிடம் இன்று அனைத்தையும் இழந்துநிற்கின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சியை விட்டுச் செல்லும்போது எண்ணிக்கையிலும், கல்வியிலும், உலகப் பரவலிலும் மற்றவர்களை விட சிறந்த அறிவார்ந்த இனங்களை இரண்டாக உடைத்துச் சென்றுள்ளதை கவனியுங்கள்; பஞ்சாபிய இனம் பாதி பாக்கித்தானிலும் பாதி இந்தியஒன்றியத்திலும் இருதுண்டாக மதரீதியாக உடைக்கப்பட்டதால் ஒரு பிரிவினர்(சீக்கியர்) எழுச்சிகொண்டும் பலனில்லை; வங்காளியரும் மதவழி இரண்டாக உடைக்கப்பட்டு ஒரு பகுதியினர் (வங்கதேச இசுலாமியர்) எழுச்சி கொண்டும் பெரிதாகப் பலனில்லை; தமிழர்களை மதவழி உடைக்கமுடியாததால் கடலால் இருதுண்டாக தாய்நிலம் பிரிந்திருப்பதைவைத்து இருதுண்டாக ஆங்கிலேயர் உடைத்துச் சென்றுள்ளனர்; இங்கேயும் ஒரு பிரிவினர்(ஈழத்தமிழர்) எழுச்சிகொண்டும் பலனில்லை;
1920களில் இருந்தது போன்று இன்று 'திராவிடம்' என்ற பொதுஎதிரி ஒழியும்காலம் வந்துவிட்டதை அறிந்த தமிழர்கள் தற்போது சாதிவழி கிளரத் தொடங்கியுள்ளனர்; ஆங்கிலஅரசு வீழ உலகப்போர் காரணமாக இருந்ததுபோல் திராவிடம் வீழ ஈழப்போர் காரணமாக அமைந்தது; ஊடகங்களைக் கையில்வைத்திருக்கும் திராவிடர்கள் எவ்வளவோ மறைக்க முயன்றும் 2009ல் நடந்தது 2011வாக்கில் தமிழகத்தமிழருக்கு தெரிந்தேவிட்டது; அதற்கு நாம் சிங்களவருக்குதான் நன்றி சொல்லவேண்டும்; அறிவார்ந்த மக்கள் அதிகம் இல்லாத முரட்டுத்தனமான கொள்கைகள் அதிகம் கொண்ட சிங்களவர், மற்ற இனத்தவரைப்போல கொஞ்சம்கொஞ்சமாக தமிழரை அழிக்கத் தெரியாமல் ஒரேடியாக அழிக்க முற்பட்டு நமது மயக்கநிலையைக் கன்னத்தில் அறைந்து தெளியவைத்துவிட்டனர்;
தற்போதைய சாதிஎழுச்சி இன்னும் ஐந்து வருடங்களில் சாதிக்கலவரங்களைத் தோற்றுவிக்கும்; ஆனாலும், திராவிடம் அளவு கேடாக அமையாது; காரணம் தமிழருக்கு சாதிவெறி குறைவு என்பதோடு, சாதிவழி ஆதிக்கம் தலைதூக்காமல் ஈழமக்களும் ஈழ ஆதரவாளர்களும் வழிநடத்துவார்கள்; தவிர இங்கே குறிப்பிட்ட சாதியார் தனிப்பெரும்பான்மை கிடையாது; எனவே தமிழர்களை அரசியல்வழியில் ஆள தமிழ் நாட்டாண்மை பற்றி பேசிக்கொண்டே சாதியை தூக்கிப்பிடிப்பார்கள்; எங்கேயெல்லாம் 'ஒரு இனமக்கள் தம் இனத்தவராலேயே ஆளப்படுகின்றனரோ' அங்கேயெல்லாம் 'அவ்வினத்தின் பெரும்பான்மைச் சாதியாரே' ஆட்சியில் இருப்பார்கள்; கட்சிகள் பெரும்பான்மை ஆதிக்க சாதிகளாலேயே நடத்தப்படும்; அக்கட்சிகள் ஒரு 'சிறுபான்மை சமூகத்தவரை' அரியணை ஏற்றினாலும் பின்னாலிருந்து ஆள்வது பெரும்பான்மை சாதியினர்தான்; தமிழகத்திலும் அதுநடக்க வாய்ப்புள்ளது.
இன்று நாம் கடந்து வந்துள்ள பாதையிலிருந்து இரண்டு பாதைகள் பிரிகின்றன.
ஒன்று அரசியல்வழி, மற்றது ஆயுதவழி; எழுச்சி ஏற்படும் முன் குழப்பங்கள் உச்சநிலையை அடைவது வழக்கம்; தமிழர்களின் எழுச்சி ஒரு நல்ல அரசியல் தலைவர் கிடைத்துவிட்டால் ஓட்டுகளாக மாறி அவரை முதலமைச்சராக அமர்த்தும்; சாதிவாரியாக தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்; இனவுணர்வும் இருக்குமென்பதால் தமிழக பிரச்சனைகளுக்கும் ஈழத்திற்காகவும் அவர்கள் வலுவாகக் குரல்கொடுப்பார்கள்; ஆனால் சாதிரீதியான பிரச்சனைகள் தொடரும்; ஈழம் 'தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரியாமல்' உருவாகாது என்பது உறுதி; அப்படி உருவானாலும் நாம் கோரும் ஈழநிலத்தில் பாதிதான் (வடக்குப்பகுதி)கிடைக்கும்;
உலகநாடுகளின் திட்டம் 'தமிழ்நிலத்தை இரண்டாக உடைத்து அதிலும் பாதி பாதியை குறைத்து, மக்கள்தொகையையும் பாதிக்குமேல் குறைத்து இரண்டு குட்டிநாடுகளாக்கி சுற்றி பெரியநாடுகளுடன் போட்டிபோட முடியாதவறியநாடுகளாக்கி தமக்குள் அடித்துக்கொண்டு அழியச்செய்வது; அரசியல்வழி இத்திட்டம் நிறைவேற வாய்ப்பளிக்கும்; இரண்டாவது ஆயுதப்போராட்டம்; அதாவது எழுச்சிக்கு முன்னரான குழப்பநிலையில் ஒரு நல்ல அரசியல்தலைவர் கிடைக்கும் முன் ஆயுதவழியை தேர்ந்தெடுப்பது; (நல்ல அரசியல்வாதி கிடைத்துவிட்டால் மக்கள் ஆயுதவழிக்கு உதவமாட்டார்கள்) இது ஈழமக்கள் மனதுவைத்தால் தமிழகத்தில் நடக்கும்; ஆனால் அவர்களோ வடிகட்டிய முட்டாள்களைப் போல போரில் நடந்த குற்றங்களை ஆவணமாக்கி அக்குற்றங்களை நடத்திய உலகநாடுகளிடமே காட்டி ஈழப்பிச்சை கேட்கின்றனர்; ஏதோ அவர்கள் ஈழத்தை கைக்கெட்டும் தொலைவு நெருங்கிவிட்டதைப் போலவும் தமிழகம் விடுதலை கோரினால் அதில் பங்குகேட்பது போலவும் எண்ணுகின்றனர்; ஈழத்தில் நடந்த கொடுமைகள் (நிலப்பறிப்பு, மொழித்தடை, பிரிவினை தூண்டுதல், அந்நியர் ஆதிக்கம், வளச்சுரண்டல், இனவொதுக்கல் )அனைத்தும் தமிழகத்திலும் நடந்துவருகிறது; இனக்கொலை மட்டும் நடக்கவில்லை; அதுவும் விரைவில் நடக்கப்போகிறது(2055 வாக்கில் நடக்கலாம்); ஈழமக்கள் தமிழகத்துடன் கைகோர்த்து ஒட்டுமொத்த இனவிடுதலைக்காக போராடியிருந்தால் இன்னேரம் தமிழ்க்குடியரசு அமைந்திருக்கும்;
*ஈழத்தான் தமிழகம் வந்துவிட்டு 'இந்தியாவுக்கு வந்துவிட்டேன் என்கிறான்'
தமிழகத்தான் அவனைப் பார்த்து 'இலங்கை அகதி வந்துவிட்டான்' என்கிறான்*
இருவரும் திருந்தவேண்டும்; தமிழக மக்கள் தற்போது திருந்திவிட்டார்கள் ; ஈழத்து மக்கள்தான் 'பரிதாபத்தை சம்பாதிப்பதால் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை' என்று தலைவர் சொன்னதை மறந்து திருவோடு ஏந்தித் திரிகிறார்கள்; தமிழகம் விடுதலைப் போரை தொடங்க அவர்கள் உதவுவார்களேயானால் ஈழம்போன்ற பதினோரு மடங்கு பெரிய தமிழ்க்குடியரசை சற்று காலம்தாழ்ந்தாலும் அடைந்துவிடலாம்; ஈழவர் மனதுவைத்தால் உலகிலுள்ள எட்டரைக்கோடித் தமிழர் ஒரே நாட்டின் குடிமகனாகப் போராடுவார்கள், அப்படி இல்லையென்றாலும் தமிழகம் தலைவர்வழியில் போராடவேண்டும்; ஈழமக்கள் இழப்பைச் சந்தித்தவர்கள் கொஞ்சம் மெதுவாகத்தான் நிமிர்வார்கள்;
தமிழ் இளைஞர்களே!
தலைவர் வருகைக்காகக் காத்திருப்பதாக சப்பைக்கட்டு கட்டாதீர்கள்; ஒட்டுமொத்த தமிழினத்துக்குமான தலைவர் இன்னும் பிறக்கவில்லை என்றுதான் கூறுவேன்;
வீரப்பனாரின் திறமைகளுடனும்,
தமிழரசனாரின் கொள்கைகளுடனும்,
பிரபாகரனாரின் வீரத்துடனும்
ஒட்டுமொத்த தமிழினத்தின் தலைவராக ஒரு 'வீரத்தமிழகரன்' உங்களுக்குள் இருக்கிறான்;
இனமும், மொழியும், நாடும் ஒரே அடையாளமாக இருந்தால்தான் அந்த இனம் வல்லரசாகும்; சுருங்கிவரும் நம் தாய்நிலத்துக்கு நம் வீரவலிமையால் காவல்போடவேண்டும்;
எந்த வழியில் போராடினாலும் போராடாவிட்டாலும் மூன்றில் ஒரு தமிழன் இறப்பது உறுதி.
மூன்றில் மீதி இரு தமிழன் தலைவிதியை அந்த இறப்பின் விதமே தீர்மானிக்கும்.
"மண்டியிட்டு வாழ்வதைவிட நின்றுகொண்டு சாவது மேல்"
--சே
"அடிமையாக இறப்பதைவிட எதிரியாக இறப்பது எவ்வளவோ மேல்"
-- தலைவர்
இந்தியா+ஈழம்-தமிழகம்= முள்ளிவாய்க்கால்

.
.
இந்தியாவுக்காக தமிழகத்தை கைவிட்டீர்கள்
.
இப்போது விடை தெரிந்துவிட்டதா ஈழமக்களே?!
1983 க்கு முன்னர் பெரும்பாலும் அனைத்து இயக்கங்களும் இந்திய புரட்சிகர சக்திகளுடன் தொடர்புகள் கொண்டிருந்தனர்.
பின்னர் இந்திய அரசுக்கு அஞ்சி தொடர்புகளை துண்டித்துவிட்டனர்
அல்லது வெளிப்படையாக
தொடர்பு கொள்வதை தவிர்த்தனர்.
தமிழ்நாடு விடுதலைப்படைத் தளபதி தோழர் தமிழரசனனின் தலைவர் என கருதப்பட்ட புலவர் கலியப்பெருமாள் தனது இறுதிக்காலங்களில்
எழுதிய “மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்”
என்னும் புத்தகத்தில் 113ம் பக்கத்தில் சிறைக்குள் பிரபாகரனுடன் சந்திப்பு என்னும் தலைப்பில்
எழுதிய வரிகள் வருமாறு,
சென்னை பாண்டி பஜாரில் பிரபாகரன் அணிக்கும்
முகுந்தன் அணிக்கும் மோதல் எற்பட்டு பிரபாகரனையும் ராகவனையும் காவல்
தறையினர் கைது செய்து சென்னை மத்திய சிறையில்
அடைத்தார்கள். பிரபாகரனை எங்கள் அறைக்கு அருகிலேயே அடைத்தார்கள்.இராகவன்
என்னிடம் பேசும்போது எங்கள் விடுதலைப்
போராட்டத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா எனக் கேட்டார்.
ஆம் உங்கள் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கிறேன்
என்று கூறினேன்.
அடுத்து உங்கள்
கட்சி ஆதரிக்கின்றதா என்று இராகவன் கேட்டார்.
எங்கள் கட்சி ஆதரிக்கவில்லை என்று சொன்னேன்.
வங்கதேச விடுதலையை ஆதரித்த சீனா எங்கள்
விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்குமா?
என்று கேள்வி எழுப்பினார். அதைப்பற்றியெல்லாம்
நீங்கள் யோசிக்காதீர்கள். சீனாவுக்கும் இலங்கைக்கும்
நல்ல உறவு இருக்கிறது. மாவோ எழுதிய
ராணுவப்படைப்பு என்ற நூலில் இருந்து படிப்பினைகளைப் பெற்று உங்கள் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து செல்லுங்கள் என்று வழிகாட்டினேன்.
நானும் பிரபாகரனும் ஒரே சிறையில் இருந்தோம்.
அவர் தன் பகுதியிலிருந்து பெரும்பாலும் என்னுடன் பேசுவார். அதன் பின்
விடுதலையாகி சிறையில்
இருந்து சென்றுவிட்டார்கள்.
என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது
பிரபாகரன் என்னை இரண்டு முறை வெளியில்
சந்தித்து நலம் விசாரித்தார்.
இது பற்றி பழ.நெடுமாறன் அவர்கள் குறிப்பிடும்போது
“சென்னை சிறையில் புலவர் இருந்தபோது தமிழீழ
தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களும் சில மாதங்கள்
அந்த சிறையில் இருந்தார். சிறையில் இருவரும்
மிக நெருக்கமாக பழகி நட்பு கொண்டனர்.
பிற்காலத்தில் பிரபாகரன் அவர்கள் என்னிடம்
பேசும்போது நான் பார்த்த
தமிழ்நாட்டு தலைவர்களில் உறுதியும் எது நேர்ந்தாலும் கலங்காத உள்ளமும் நிறைந்தவர் புலவர் கலியபெருமாள் ஆவார். உண்மையான மக்கள்
தொண்டர் அவர் என வாயாரப்
புகழ்ந்துரைத்தது இன்னமும் எனது செவிகளில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறது”
என்று குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் தோழர் தமிழரசன் புலிகள் தலைவர்
பிரபாகரன் உட்பட அனைத்து இயக்க தலைவர்களையும்
சந்தித்து உதவி பெற முயன்றார். ஆனால் எந்த இயக்க தலைவர்களும் உதவி செய்ய மட்டுமல்ல
அவரை சந்திப்பதற்கே மறுத்துவிட்டார்கள். புலிகள் இயக்கம் இறுதிக் காலங்களில் 303 ரைபிள்,
ரிப்பிட்டர் போன்ற அந்த கால
ஆயுதங்களை பாவிக்காமல் புதைத்ததாக அறிகிறோம்.
ஆகக்குறைந்தது அந்த மண்ணில் புதைத்த
ஆயுதங்களையாவது தோழர் தமிழரசனிடம்
கொடுத்திருக்கலாம். அவர்கள் தாங்களும்
கொடுக்கவில்லை. எங்களையும் கொடுக்கவிவில்லை.
ஒரு வேளை தமிழரசன் விரும்பிவாறு ஆயுதங்கள்
கொடுத்து உதவி செய்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலத்தை தவிர்த்திருக்கலாமோ என நினைக்க தோன்றுகிறது!
-தோழர் பாலன்
(தனி ஈழம் என்ற கருத்தை ஆதரிக்காத இலங்கைக்கு உள்ளேயே தமிழர் உரிமையை வலியுறுத்தும் 'பேரவை' அமைப்பினர்)
http://
http://
சாதி பற்றி தமிழரசனார்

நமது உண்மையான எதிரிகளை அடையாளம் காண்போம்.
12-ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் சாதிகளை ஒழிக்க கிளம்பிய 'பசவர்' இயக்கத்தில் சேர்ந்தவர்கள்
இன்று “லிங்கயாத்துகள்” என்னும் புது சாதியானார்களே தவிர சாதி ஒழியவில்லை.
15-ஆம் நூற்றாண்டின் கடைசியில் சாதிகளை ஒழிக்கக் கிளம்பிய 'கபீர்தாசு' இயக்கத்தில் சேர்ந்த இந்து, முஸ்லிம் நெசவாளிகள் இன்று “கபீர்பாந்தி”கள்
என்னும் புது சாதியானார்களே தவிர சாதி ஒழியவில்லை.
17-ஆம் நூற்றாண்டின்
முடிவில் 'சத்தியமே கடவுள்' என்று சாதிகளை ஒழிக்கக் கிளம்பிய 'ஜகஜீவன்தாசு' எனும் 'ராஜபுத்திரரின்' இயக்கத்தில் சேர்ந்தவர்கள் இன்று “சத்நமி” என்னும் புது சாதியானார்களே தவிர சாதி ஒழியவில்லை.
19-ஆம் நூற்றாண்டின் முடிவில் சாதிகளை ஒழிக்கக் கிளம்பிய 'ரயிதாஸ்' இயக்கத்தில் சேர்ந்த 'சமார்கள்' இன்று புதிய சாதியானார்களே தவிர சாதி ஒழியவில்லை.
சாதிகளை எதிர்ப்பதாகக்
கூறி சாதிகளே இல்லாத முஸ்லீம், கிறித்துவ
மதங்கள் இந்தியாவிற்குள் நுழைந்தன.
ஆனால், அவைதாம் சாதிகள் உள்ளவையாக மாறினவே தவிர சாதிகள் ஒழியவில்லை.
தாழ்த்தப்பட்டவரிலிருந்து முஸ்லீமானவர் ''மூசல்லி" சாதியாகவும், பஞ்சாபில் துப்புரவு சாதியிலிருந்து முஸ்லீமானவர் ''சூஹ்ரா'' சாதியாகவும், பஞ்சாபில்
'கத்தி' சாதியிலிருந்தும், சிந்துவில் 'லோகனா' சாதியிலிருந்தும் முஸ்லீமானவர்கள் ''கோஜா" சாதியாகவும், 'ராசபுத்திர' சாதியிலிருந்து முஸ்லீமானவர் ''லால்கனி" சாதியாகவும், பஞ்சாபில் முஸ்லீமாயுள்ள "அவான், கோஷி, கட்டீ, மிராதி" சாதிகளாகவும், மேல் இந்தியாவில் "லால்பெகி, மிவாதி ஜொலாகா" சாதிகளாகவும்,
சிந்து பகுதியில் "மீமான், துருக்கிய பஞ்சாரா சமார், கௌர் சாதிகளாகவும்",,
பார்ப்பனரிலிருந்து முஸ்லீமானவர் "தாக்கர் சாதியாகவும், டவாய்ப் சாதியாகவும்" ...சாதியற்ற முஸ்லீம் மதத்தில் எண்ணற்ற சாதிகள் தோன்றிவிட்டன.
அதேபோன்றே சாதியற்ற கிறித்துவ மதத்தில் சேர்ந்த நாடார், கிறித்துவநாடாராயும், தேவர், கிறித்துவத்தேவராயும், பள்ளர், கிறித்துவப்பள்ளராயும், கவுண்டர், கிறித்துவக்கவுண்டராயும்...
ஆரியமதம், வைதீகமதம்,சனாதன மதமென அழைக்கப்படும் இந்து மதத்தின் அடித்த்தளமான சாதியமைப்பை, அம்மதத்திற்குள்ளிருந்து எதிர்ப்பவர்களையும் சரி., முறியடித்து அவர்களையே சாதியமைப்பைப் பின்பற்றும்படி செய்யும் வல்லாண்மையுடையதாய் சாதியமைப்பு இருந்து கொண்டிருக்கிறது.
இப்படி சர்வவல்லமையுடன்
நிலைத்து நீடித்து நிற்கும் சாதியமைப்பை அடியோடு அழிக்கவேண்டுமெனில் அதைப் பற்றிய மார்க்சிய அறிவியல் ரீதியான, வரலாற்று ரீதியான பார்வையும், அணுகுமுறையும் தேவை.
தோற்றம், வளர்ச்சி, அழிவு, நிலைமைகள் பற்றிய தெளிவும் தேவை.
- தோழர் தமிழரசன் (1945 --1987)
தலைவர், தமிழ்நாடு விடுதலைப்
படை (TNLA)
நன்றி: முகநூல் நண்பர். தமிழரசன் கலை.