Sunday 4 October 2015

தமிழரசன் சாகவில்லை??!

தமிழரசன் சாகவில்லை??!
•••••••••••••••••••••••••••••••

! தென்
ஆற்காடு மாவட்டத்தில் இருக்கும் மதகளிமாணிக்கம்
கிராமத்தில் வசிக்கும் தமிழரசனின் தாயார்
புதூசம்மாளிடம் பேசினோம்: ''அன்னிக்கு ஜெயங்கொண்டம்
ஆஸ்பத்திரிக்குப் பதறி ஓடினேன். கூறு போட்ட
உடம்பு ஒண்ணைக் காட்டினாங்க. உருவமே தெரியலை. கை, கால்
சூம்பிப் போயிருந்துச்சு. என்
பையனுக்கு அப்படி இருக்காது. அதுவும், சின்னப் புள்ளைல
மஞ்சக் காமாலை வந்தப்போ, கை புஜத்தில்
அறுத்து மருந்து போட்ட வடு இருக்கும்... முகத்துலயும்
இன்னொரு வடு இருக்குமேனு தேடினேன். ஒண்ணுமே இல்லை.
'இது என் பிள்ளை இல்லையே!’னு சொன்னேன். போலீஸ்காரங்க
என்னைத் தனியா அழைச்சுட்டுப் போய், 'இதான் என்
பையன்’னு சொல்லச் சொன்னாங்க. என்னோட உறவுக்காரங்களும்
'கிழவி, உனக்கு வயசாச்சு, வாயை மூடு, இதான் நம்ம
தமிழரசன்!’னாங்க. அந்தச் சூழ்நிலையில் என்னால
ஒண்ணுமே சொல்ல முடியலை. ஆனா, இப்போதைக்கு என் பையன்
உயிரோட இருக்கிறதா, எல்லாரும் பேசிக்கிறாங்க.
எப்படி இருந்தாலும், என் பையன் திரும்பி வருவான்!''
என்றார்.
http://stufftoreadtamil.blogspot.com/2011/07/blog-post_2093.html?m=0

No comments:

Post a Comment