Saturday 24 October 2015

1980ல் தமிழகத்தின் ஈழ ஆதரவு

1980ல் தமிழகத்தின் ஈழ ஆதரவு

"தமிழ்மன்னர்களாம் எல்லாளன் முதல் சங்கிலியன் வரை செங்கோலோச்சிய தமிழ்ஈழம் என்னும் திருநாடு கொடுங்கோலர்களாம் அன்னியர்களால் அடிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையினைத் தகர்த்தெறிந்து மீண்டும் தமிழராட்சி நிறுவிட இலண்டன் தமிழர் ஒருங்கிணைப்பு க் குழுவினர் 31-08-80 அன்று இலண்டன் மாநகரில் கூடி 1982ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பெருநாளன்று தமிழ்ஈழ அரசு நிறுவுவதென்றும் விடுதலைப் பிரகடனம் செய்வதென்றும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த இலண்டன் தீர்மானத்தை நாங்கள் ஒருமனதாக ஆதரிக்கிறோம் என்று இம்மக்கள் மாமன்றம் முடிவெடுக்கிறது.

1982ல் அமையவிருக்கும் தமிழ் ஈழ அரசிற்கு இந்திய பேரரசு முதல் முதலில் அங்கீகாரம் வழங்கிட வேண்டுமென்றும் இந்தியப் பேரரசை இம்மாமன்றம் வேண்டிக்கொள்கிறது."

உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம்
இந்தியக் கிளை
12-10-80
இடம்:மதுரை.

No comments:

Post a Comment