Sunday 25 October 2015

வெறிபிடித்த நாயன்மார்கள்

வெறிபிடித்த நாயன்மார்கள்

எல்லா சாதிகளிலிருந்தும் நாயன்மார்கள் தோன்றியுள்ளனர்.

இதை பெருமையாகக் கூறுவோரும்
சில நாயன்மார்கள் நடத்திக்காட்டிய அற்புதங்களையும்
அவர்கள் இயற்றிய தமிழ்ப் பாடல்களையும் போற்றுவோரும்
நாயன்மார்களின் தீச்செயல்களையும் கூறவதே இல்லையே ஏன்?
மக்களுக்கு ஒரு நல்லதும் செய்யாத
ஒரு நல்ல அறிவுரையும் கூறாத நாயன்கள் மதிப்பிற்குரியோர் ஆனது எப்படி நடந்தது?

சிவன் மீது பற்று முற்றிப்போய் பைத்தியக்காரத்தனமாக நயன்மார் செய்த கொடுஞ்செயல்கள்

*இயற்பகையார்- சிவனடியார் வந்து கேட்க தன் மனைவியை அவனோடு அனுப்பிவைத்தார்.

*சண்டேஸ்வர நாயனார்- சிவனுக்கு முழுக்கு நடத்த வைத்திருந்த பாலைத் தட்டிவிட்டதால் தந்தையின் காலை வெட்டினார்.

*செருத்துணை நாயனார்- சிவனுக்கு வைத்திருந்த பூவை முகர்ந்து பார்த்ததால் அரசியின் மூக்கை அறுத்தார்

*கழற்சிங்க நாயனார்- பூவை முகர்ந்த அவ்வரசியின் கணவர், கைதானே அப்பூவை முதலில் தீண்டியது என்று மூக்கறுபட்ட அவ்வரசியின் கையை வெட்டினார்

*கலிய நாயனார்- சிவனுக்கு விளக்கு வைக்க பணமில்லாததால் நடுத்தெருவில் மனைவியை நிறுத்தி விற்க முயன்றார்

*அமர்நீதி நாயனார்- சிவனடியாரின் கோவணத்துக்கு ஈடுதர தராசில் தன் சொத்துகளோடு மனைவி மக்களையும் வைத்து தானும் அமர்ந்தார்

*சிறுதொண்ட நாயனார் -அடியார் கறி கேட்க பெற்ற மகனை வெட்டி கறி செய்து பிள்ளைக்கறி விருந்துவைத்தார்

*சத்தி நாயனார் -சிவனடியாரை யாராவது இகழ்ந்து பேசினால் நாக்கை அறுப்பார்

*எறிபத்த நாயனார்- சிவனுக்கான மலர்கூடையை பிடுங்கி எறிந்த யானையையும் அதன் பாகர்கள் ஐந்துபேரையும் வெட்டிக் கொன்றார்

*கலிக்கம்ப நாயனார்- சிவனடியார் பாதம் கழுவ தயங்கிய மனைவியின் கையை வெட்டினார்

*கோட்புலி நாயனார்
சிவனுக்காக வைத்திருந்த நெல்லை பஞ்சத்தின் காரணமாக எடுத்து உண்ட மக்களை (தாய், தந்தை, உடன்பிறந்தோர் உட்பட) பரிசு தருவதாக அழைத்து கண்டந்துண்டமாக வெட்டினான்

***செய்த ஈகங்கள்(தியாகம்) பட்டியல்:-

*அப்பூதியடிகள்- திருநாவுக்கரசர் வீட்டுக்கு வந்திருந்தபோது மகன் பாம்பு தீண்டி இறக்க அவனை அப்படியே போட்டுவிட்டு விருந்துவைக்க முயன்றார்

* அரிவாட்டாய நாயனார்- சிவனுக்கு எடுத்துச் சென்ற உணவு தரையில் சிந்தியதால் கழுத்தை அறுதாதுக்கொள்ளப் பார்த்தார்

*இடங்கழி நாயனார்- சோழ அரசரான இவர் சிவனுக்கு அமுது படைக்க நெல்லைத் திருடியதாக திருடன் கூற தன் அரசின் மொத்த நெல்லையும் நிதியையும் சிவனடியார்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்தார்

*கண்ணப்ப நாயனார்- சிவலிங்கத்தின் கண்ணில் குருதி வழிந்ததால் தன் கண்ணை நோண்டி ஒட்டவைத்தார்

*ஏனாதி நாத நாயனார்- எதிரி வாள்சண்டையின் போது திருநீறு அணிந்திருந்ததால் வேண்டுமென்றே உயிரைவிட்டார்

*கணம்புல்ல நாயனார் - சிவனுக்கு விளக்கேற்ற தலைமுடியில் தீவைத்துக்கொண்டார்

*குங்கிலிக்கலய நாயனார்- வறுமையால் பசிபொறுக்காத தம் குடும்பத்திற்காக அரிசி வாங்க மனைவியின் தாலியைக் கொண்டு சென்றபோது சிவனுக்கு விருப்பமான குங்கிலியம் கண்ணில் பட அதை வாங்கி கோயிலில் சேமித்தார்

*திருக்குறிப்புத் தொண்ட நாயனார்- சிவனடியார் ஒருவரின் உடையைத் துவைக்கும்போது மழை விடாது பெய்யவே துவைக்கும் பாறையிலேயே தலையை மோதிக்கொண்டார்

*புகழ்ச்சோழ நாயனார் -எறிபத்த நாயனார் தன் யானையையும் பாகரையும் வெட்டியபோது அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டு தன்னையும் கொல்லும்படி வேண்டினார்.
போரில் வெட்டுண்ட ஆயிரக்கணக்கான தலைகளில் ஒரு சிவனடியார் தலை இருந்ததைக் கண்டு தன் மகனுக்கு பட்டம் கட்டிவிட்டு நெருப்பில் குதித்தார்

*மூர்க்கநாயனார்- சூதாடி சம்பாதித்து பூசை செய்தார். சூதில் ஏமாற்றினால் சூரியால் குத்துவார்.

*மெய்ப்பொருள் நாயனார் - சிவனடியார் வேடமிட்டு வந்து தன்னை வாளால் வெட்டிய பகைவனை உயிர்போகும் நிலையிலும் உயிரோடு பாதுகாப்பாக விட்டுவிடச் சொன்னான்

நாயன்மார் கதைகள் கூறுவது சிவபக்திக்காகவும் சிவனடியார்களுக்காகவும் தற்கொலை செய்யவும் எவரையும் கொல்லவும் தயங்கக்கூடாது என்பது மட்டும்தான்.

ஆக சைவம் என்பது தமிழருக்கான நெறிவழி ஆகுதல் கூடாது என்பது என் கருத்து.

1 comment:

  1. அருமையான தொகுப்பு!நல்லமுயற்சி

    ReplyDelete