Saturday 31 October 2015

இமானுவேல் சேகரனாருடன் முத்துராமலிங்கனார் பேச மறுத்தது ஏன்?

இமானுவேல் சேகரனாருடன்  பேச மறுத்தது ஏன்?

"சமாதான மாநாட்டில் அரிஜனங்களின் பிரதிநிதியாக பேசவந்திருப்பவர் திரு.இமானுவேல்,

ஆனால் முதுகுளத்தூர் தொகுதிக்குச் சட்டப்பூர்வமாக மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ வேறொருவர் இருக்கிறார்.

அதனால் இத்தொகுதியின் அரிஜனங்களுக்காக பிரதிநிதித்துவம் வகித்துப் பேசுவதற்கு இத்தொகுதி எம்.எல்.ஏ தான் அதிகாரப்பூர்வமானவர் என்று நான் சொன்னேன்.

இதைத்தவிர ஒரு அரிஜன் எனக்கு முன் சரிசமமாகப் பேசுவதால் என் கௌரவம் குறைந்துவிட்டதென்று நான் கூறவேயில்லை.

எனது தொகுதியில் திரு.பெருமாள் என்ற அரிஜன் ஒருவரை என்னோடு சமமாக ரிசர்வ் ஸ்தானத்திற்கு நிறுத்தி ஜெயிக்கவைத்த நான்,
சமாதான மாநாட்டில் ஒரு அரிஜன் எனக்குமுன் பேசியதைக் கருதி, என்னவோ சொன்னேன் என்று குறிப்பிடுவது குழந்தைத்தனமும் மதியீனமும் ஆகும்".

( சென்னை சர்க்கார் நியமித்த அட்வைசரி போர்டு முன்பு
கொலைக் குற்றச்சாட்டை மறுத்து திரு.முத்துராமலிங்கனார் அளித்த விரிவான சாட்சியத்தில் இருந்து )

நன்றி: pasumponayya.blogspot.com.es/2011/07/blog-post.html?m=1

No comments:

Post a Comment