பூண்+நூல் என்பதே பூணூல்
அதாவது வில்லின் இருமுனைகளிலும் பொருத்தப்படும் உலோகம் (கவசம்) பூண் எனப்படும்.
(துவக்கின் கைப்பிடியையும் கூட பூண் என்பர்)
அக்கால வில்வீரர்கள் சற்று வளைந்த ஒரு தடியை கையில் வைத்திருப்பர்.
பூணூல் மார்பில் தரித்திருப்பர்.
தாக்குதல் நடத்த வேண்டிவந்தால் தடியில் இருபக்கமும் பூணூலை மாட்டி வில்லாக்கிவிடுவர்.
விற்கள் அனைத்தும் ஒரே அளவில் இருந்திருக்கவேண்டும்.
ஆக இந்த நூலின் நீளம் குறிப்பிட்ட அளவாக இருந்திருக்கவேண்டும்.
எனவே இந்நூல் அளவைக்காகவும் பயன்பட்டது.
(மங்கோலியர் வண்டிச் சக்கரங்களை குறித்த அளவினதாக்கி அதை பயன்படுத்தியது போல).
இலக்கியங்களில் பார்ப்போம்.
பசும்பூண்:-
இது மார்பில் அணியும் பச்சைநிறப் பூண். 
இந்தக் கவசப் பூண் போரின்போது இவன் அரசன் என்பதைக் காட்டுவதாய் அமைந்தது. 
இதனை இங்கு வரும் சொல்லாட்சிகளால் உணரலாம். 
*பசும்பூண் வேந்தர் 
[ நற்றிணை 349 ]
*பசும்பூண் சோழர் 
[ நற்றிணை 227 ]
*பசும்பூண் கிள்ளிவளவன் 
[ புறம் 69 ] 
*பசும்பூண் ஆதன்ஓரி 
[ புறம் 153 ] 
*பசும்பூண் செழியன் 
[ புறம் 76 ] 
*பசும்பூண் பாண்டியன்
[குறுந்தொகை 393 ] 
*பசும்பூண் பொறையன் 
[ அகம் 303 ]
பொலம்பூண் 
இது பொன்னால் செய்யப்பட்ட பூண் கவச அணி, 
இந்த அணிகலனை அணிந்திருந்தவர் என்று சங்கநூல்களில் குறிப்பிடப்படுவோர் பின்வருமாறு.
*பொலம்பூண் வேந்தர் 
[ பதிற்றுப்பத்து 64-2] 
*பொலம்பூண் ஐவரும் மற்றும் பல குறுநில மன்னர்களும் கூடியிருந்து தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுச்செழியனை வாழ்த்தினர். 
[ பரிபாடல் 13-10 ]
*பொலம்பூண் எவ்வி - 
நீழல் என்னும் ஊரில் இருந்துகொண்டு ஆண்ட கொடையாளி அரசன் 
[ மதுரைக்காஞ்சி 775 ] 
*பொலம்பூண் எழினி 
-ஆலங்கானப் போரில் நெடுஞ்செழியனைத் தாக்கிய எழுவர் கூட்டணியில் ஒருவன் 
[ அகநானூறு 366-12 ] 
*பொலம்பூண் கிள்ளி 
- காவிரிப்பூம்பட்டினத்து அரசன் கோசர் படையைத் துகளாக்கியவன். 
[ அகநானூறு 36-16 ] 
*பொலம்பூண் திரையன்.
- பவத்திரி என்னும் ஊரில் இருந்துகொண்டு ஆண்ட அரசன் 
[ அகநானூறு 205-10 ] 
*பொலம்பூண் நன்னன்
-புன்னாட்டைக் கவர்ந்துகொண்டதால் அதனை ஆண்ட அரசன் ஆண்ட அரசன் ஆஅய்-எயினன் நன்னின் படைத்தலைவனான மிஞிலியொடு பொருது மாண்டான் 
[ அகநானூறு 340-6 ] 
*பொலம்பூண் நன்னன்
-களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலொடு பொருது தன் நாட்டை இழந்தான் 
[ அகநானூறு 396-2 ] 
*பொலம்பூண் வளவன் 
- சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 
[ அகநானூறு 199-20 ]  
*வாய்வாள் வலம்படு தீவின் பொலம்பூண் வளவன் 
[புறம் 397-22 ]
No comments:
Post a Comment