Showing posts with label கமிஷன். Show all posts
Showing posts with label கமிஷன். Show all posts

Thursday, 30 January 2020

இங்கு திராவிடம் விற்கப்படும்

இங்கு திராவிடம் விற்கப்படும்

தமிழகத்தின் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தி.மு.க விடம் பணம் பெற்ற தகவல்கள் வெளியானது நினைவிருக்கலாம்.
இதற்கு முன்னோடியும் ஈ.வே.ரா தான்.

  திராவிட கட்சி இரண்டாகி அதன் ஒரு பிரிவை ஜெயலலிதா கைப்பற்றி 1991 இல் ஆட்சியமைக்கிறார்.

தி.மு.க வை சமாளிக்க திராவிட கூடாரத்தில் இருந்து யாரையாவது தன் பக்கம் இழுக்க முடியுமா என்று பார்க்கிறார்.

பணம் தருவதற்கும் தயாராக இருந்தார்.

அதெப்படி நடக்கும்?
கேவலம் பணத்துக்காக இத்தனைக் காலம் யாரை எதிர்த்தார்களோ அவர்களுடனே வந்து ஒட்டிக் கொள்வார்கள்?
அந்த அளவுக்கு மானம் கெட்ட யாரும் உண்டா?
என்று அனைவரும் நினைத்தபோது வீரமணி போய் ஜெயலலிதாவுடன் சேர்ந்துகொண்டார். வெளிப்படையாக 5 லட்சம் ரூபாய் பணமும் வாங்கிக் கொண்டார்.

இது பற்றி கேள்வி எழுந்தபோது விடுதலை (03.10.1991) இதழில்
அது எனக்காக வாங்கவில்லை,
"சுயமரியாதை இயக்க பிரச்சார நிறுவனத்தின்" வளர்ச்சிக்காக வாங்கிய நிதி என்று விளக்கமளித்தார்.
(நிறுவனத்தின் பெயரைக் கவனத்தீர்களா ராமகிருஷ்ண சந்திரபோஸ் மாதிரி)

அதோடு நில்லாமல் பெரியாரும் பார்ப்பன முதலாளிகளிடம் பணம் பெற்றுள்ளார் என்பதையும் அதனால் கொள்கை தவறிவிட்டதாக அர்த்தமில்லை என்றும் தெளிவாக விளக்கமளித்துள்ளார்.

(அன்று தமிழ்தேசியத்தின் குரலாக ஒலித்த அறிஞர் குணா அவர்களை கருத்தியல் ரீதியில் எதிர்கொள்ள இயலாமல் ஜெயலலிதாவிடம் சொல்லி தடா வில் உள்ளே தள்ளியதும் வீரமணிதான்)



Tuesday, 30 January 2018

சட்டநாதன் அறிக்கை பற்றிய தவறான தகவலை பரப்ப வேண்டாம்

சட்டநாதன் கமிஷன் பற்றி தவறான செய்திகள் வளையவருகின்றன.
தமிழரல்லாத சாதிகள் இடவொதுக்கீடு பெறுவதை தடுக்க தமிழ்ச்சாதி பட்டியல் தயாரிக்க இது அமைக்கப்பட்டதாக பலரும் கூறுகின்றனர்.
உண்மையில் சட்டநாதன் கமிசன் என்பது பிற்படுத்தப்பட்ட சாதிகளின் முன்னேற்றத்தை ஆராயவே அமைக்கப்பட்டது.
 அறிக்கையின் இரண்டு பக்கங்களில் திராவிட இயக்கங்களுக்கு பாராட்டு வேறு உள்ளது.
(சட்டநாதன் அறிக்கை IMAGE FORMAT.
0,4,5,10 ஆகிய பக்கங்கள் கடைசியில்)