Tuesday 8 October 2024

மக்களை வெயிலுக்கு இரையாக்கிய ஜெயலலிதா

மக்களை வெயிலுக்கு இரையாக்கிய ஜெயலலிதா

 2016 ஏப்ரலில் ஹெலிகாப்டர் மூலம் சுற்றுப்பயணம் செய்து பிரச்சார கூட்டங்களில் பேசினார் ஜெ. அப்போது சேலத்தில் 3 பேரும் விருத்தாசலத்தில் 2 பேரும் என 5 பேர் வெயிலில் தாக்கத்தால் இறந்தனர்!
 அப்போதும் வெயில் உச்சத்தில் இருந்த நேரம்!
 ஹெலிகாப்டர் தரையிறங்க பிரத்யேகமாக தளம் அமைக்கப்பட்டு அதில் ஜெ இறங்கி மேடையில் பத்து கூலர்கள் மத்தியில் அமர்வார் ஆனால் மக்கள் காலையிருந்து வெயிலில் காத்திருப்பர்!
 உயிரிழப்பு 5 பேர் மயங்கி விழுந்தவர்களோ 30  பேருக்கும் மேல்!
 இதையடுத்து கண்டனங்கள் குவிந்தன!
 பாமக ஜெ மீது கொலை வழக்கு பதிய மனித உரிமைகள் ஆணையத்திடம் கோரியது!
அதன்பிறகு தான் மாலை நேரங்களில் மட்டும் கூட்டம் நடத்தினார்!

 இன்று மெரினாவில் அலட்சியத்தால் திமுக கொன்றது 5 உயிர்கள் என்றால் அன்று அதிமுக கொன்றதும் 5 உயிர்கள்தான்!
 இரண்டும் வேறு வேறு இல்லை!

 1992 இல் கும்பகோணம் மகாமகம் சென்று நெரிசல் உண்டாக்கி 60பேர் உயிரைக் குடித்தவர் ஜெயலலிதா என்பதையும் இங்கே நினைவு கூற வேண்டும்.
 
 

No comments:

Post a Comment