Showing posts with label கடல். Show all posts
Showing posts with label கடல். Show all posts

Friday, 5 October 2018

நமது கடல் இனி வேதாந்தாவின் சொத்து

நமது கடல் இனி வேதாந்தாவின் சொத்து

ஆம். தமிழகக் கடல் வளங்களை விழுங்க வருகிறது வேதாந்தா!

ஒரு சதுர அடிக்கு 80 பைசா கொடுத்து வாங்கிய கூத்து!

தமிழகத்தில் மூன்று இடங்களில் மீத்தேன் எடுக்க அனுமதி என்று உண்மையைச் சுருக்கி பொய்யான செய்தியைப் பரப்புகின்றன திருட்டு ஊடகங்கள்.

இது மூன்று இடம் அல்ல மூன்று மண்டலம்.
மொத்தம் 5099 சதுர கிலோ மீட்டர் (ஏறத்தாழ சேலம் மாவட்டம் அளவு).

இம்மண்டலங்களில் முதற்கட்டமான 24 ஹைட்ரோகார்பன் (மீத்தேன்) கிணறுகள் அமைக்கப்படவுள்ளன.
(இதுதான் மூன்று இடமாம்)

இதில் இரண்டு அதாவது 1794 + 2574= 4368 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் (புதுக்கோட்டை மாவட்டம் அளவு பெரியது) கடலில் வேதாந்தா கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ஹைட்ரோகார்பன் எடுக்க தாரைவார்க்கப் பட்டுள்ளது.

மீதி 731 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நிலத்தில் ஓ.என்.ஜி.சிக்கு ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி.

ஒரு சதுர கிலோமீட்டர் என்பது ஒரு கிலோமீட்டர் நீளமும், ஒரு கிலோமீட்டர் அகலமும் கொண்ட சதுரம் ஒன்றின் பரப்பளவுக்குச் சமமானது.
ஒப்பந்தத்தின் படி வேதாந்தா ஒரு ச.கீ.மி நிலத்திற்கு 90 லட்சம் விலை தரவேண்டும் (இதையும் முதலிலேயே தரவேண்டாம் சாவகாசமாகத் தரலாம்).

அதாவது வேதாந்தா சதுர அடிக்கு 83 பைசா கொடுக்கிறது.
ONGC எனும் அரச கார்ப்பரேட் நிறுவனமோ அதையும் தராது.
ஓசியிலேயே நம்மை ஒழித்துகட்ட வருகிறது.

OLAP எனும் இந்த புதுவிதமான தாராளமான ஒப்பந்தப்படி காலவரையறை இல்லாமல் குத்தகைக்கு எடுத்த நிலத்தில் வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி ஆகியன என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.
அரசாங்கம் கேள்வி கேட்க முடியாது.
வேண்டுமானால் பாதுகாப்பு  கொடுக்கலாம்.

(மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பினால்) நெடுவாசலில் இருந்து அகற்றப்பட்ட இந்த திட்டம் இப்போது வேறு மூன்று மண்டலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தின் முழு கடற்கரையும் அதை ஒட்டிய கடல் பகுதியும் வருகிறது.

சுருக்கமாகக் கூறினால்,
நமது வளமான பூமியை,
பொன்முட்டை இடும் வாத்தை, எங்கிருந்தோ ஒருவன் வந்து அறுக்கப் போகிறான்.

நன்றி: Tamil research institution (TRI)

Monday, 20 August 2018

ஈழப் படுகொலையில் மலையாளிகளின் பங்கு

ஈழப் படுகொலையில்  மலையாளிகளின் பங்கு

2009 போரில் புலிகள் அழிக்கப்படவும் ஈழப் படுகொலையில் 1,75,000 தமிழர்கள் கொல்லப்படவும் மிக முக்கிய காரணம் இலங்கைக்கு இந்தியா செய்த உதவி.

அந்த உதவிகளுக்கு முக்கிய காரணம்  மலையாளிகள்.

அப்போது இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஒரு மலையாளி.

பாதுகாப்பு செயலர் எம்.கே.நாராயணன் ஒரு மலையாளி.

வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் ஒரு மலையாளி.

குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலுக்கு செயலாளராக இருந்தவர் கிறிஷ்டி பெர்னாண்டஸ் ஒரு மலையாளி.

பிரதமர் அலுவலகத்தில் முதன்மைச்செயலாளராக இருந்தவர் டி.கே. நாயர் ஒரு மலையாளி.

பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியான அதிகாரி கோபாலகிருஷ்ணன் ஒரு மலையாளி.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் செயலாளர் வின்சென்ட் ஜார்ஜ் ஒரு மலையாளி.

மத்திய அமைச்சரவை செயலாளர்  கே.எம். சந்திரசேகர் ஒரு மலையாளி.

உள்துறை செயலாளராக இருந்த சி.கே. பிள்ளை ஒரு மலையாளி.

வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா மேனன் ராவ் ஒரு மலையாளி.

தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலாளர் பி.கே.தாமஸ் ஒரு மலையாளி.

விவசாயம் மற்றும் கூட்டுறவுத்துறை செயலாளர் நந்தகுமார் ஒரு மலையாளி.

சிவில் விமானப்போக்குவரத்து துறை செயலாளர் மாதவன் நம்பியார் ஒரு மலையாளி.

செய்தி ஒலிபரப்பு துறை செயலாளர் ரகுமேனன் ஒரு மலையாளி.

  நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் ராமச்சந்திரன் ஒரு மலையாளி.

ஜவுளி துறை செயலாளர் ரீட்டாமேனன் ஒரு மலையாளி.

கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் கங்காதரன் ஒரு மலையாளி.

குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சாந்தா ஷீலா நாயர் ஒரு மலையாளி

சட்டத்துறை செயலாளர் விசுவநாதன் ஒரு மலையாளி.

மத்திய அரசுத்துறை செயலாளர்கள் 53 பேரில் 19 பேர் மலையாளிகள்.

அதாவது நாட்டு மக்கட்தொகையில் 3% கூட தேறாத மலையாளிகள் மத்திய இரண்டாம் நிலை அதிகாரத்தில் 33% இருந்தனர்!

(இதில் இருவர் தமிழகத்தின் தரப்பிலிருந்து சென்றவர்கள்)

இது போக  ஐ.நா. பொதுச்செயலரின் சிறப்புத் தூதுவர் விஜய் நம்பியார் ஒரு மலையாளி.

இவரது சகோதரர் சதீஷ் நம்பியார் இந்திய ராணுவத்தில் உயர் அதிகாரி.

2007 இல் இலங்கையில் போரை நடத்த திட்டமிட்ட இந்தியா அதற்கு அமைத்த ரகசிய குழுவில் 3ல் இருவர் மலையாளிகள்.

சிவசங்கர் மேனன், எம்.கே.நாராயணன் மற்றும் இவர்களுடன் பாதுகாப்புத்துறை செயலர் விஜய் சிங் என்பவரும் சேர்ந்து அந்த ரகசிய குழு அமைக்கப்பட்டது.

இக்குழு இதேபோல இலங்கையிலும் ராஜபக்ச அமைத்த (பசில், கோத்தபயா, லலித் வீரதுங்கா) மூவர் குழுவுடன் கூட்டாக இணைந்து
இலங்கையில் தமிழருக்கு எதிரான போரை வழி நடத்தியது.

அதாவது சிங்களவர் மூலம் தமிழர் மீது போரை நடத்தியதே இந்தியாவின் இந்த ரகசிய குழுதான்.
அப்போது இந்தியாவை கட்டுப்படுத்தியதே மலையாளிகள்தான்.

2007-2009 இல் இவ்விரு குழுக்களும் 8 நேரடிச் சந்திப்புகளையும் நடத்தியுள்ளன.

போர் சமயத்தில் ராஜபக்சவின் மூவர் குழு 5 முறை இந்தியா வந்துள்ளது.

இந்திய மூவர் குழு 3 முறை இலங்கை சென்றுள்ளது.

அதாவது தொலைதொடர்புகள் இருந்தாலும் நேரடி சந்திப்புகளும் நடந்தன.
இவை அனைத்தும் ரகசியமாக நடந்தன.

இக்குழு எவ்வாறு திட்டமிட்டு ஈழப் போராட்டத்தை ரத்த சகதியில் மூழ்கடித்தனர் என்று பார்ப்போம்.

இலங்கையில் ஓரளவு சுமூகமான சூழல் நிலவுவதாக உலகிற்குக் காட்ட 2008 சார்க் (SAARC) மாநாடு ஆசிய வல்லரசுகளால் இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இம்மாநாடு நடக்கும்வரை ஓரளவு முறையான மிதமான போரை நடத்தி அதன்பிறகு 2009 லோக்சபா தேர்தலுக்குள் இனப்படுகொலையுடன் முடியும் கொடூரமான போரை நடத்தி புலிகளை அழித்தொழிப்பதாகத் திட்டம் தீட்டினர்.

(அதாவது சார்க் மாநாடு முடிந்தபிறகு தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி சர்வதேச விதிகளை மீறி போர் நடந்தது)

  2004 இல் பா.ஜ.க அரசு போட்ட இந்தியா- இலங்கை free trade ஒப்பந்தப்படி எல்லா ராணுவ உதவிகளையும் செய்வோம் என வாக்குகொடுத்துவிட்டு வந்தது அக்குழு.

2007 இல் முதற்கட்டமாக இலங்கைக்கு ஐந்து எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர்களை ரகசியமாக வழங்கிய இந்திய வான்படை அதில் இலங்கை சின்னத்தை பொறித்து பயன்படுத்தச் சொன்னது.

ஆனால் அடுத்து களமிறக்கப்பட்டது இந்திய கடற்படைதான்.
அது இந்தோனேசியா வையும் தாண்டி ஆஸ்திரேலியா வரை கண்கானித்து புலிகளுக்கு கடல் வழிகள் மூலம் வரும் ஆயுதங்களைத் துப்பறிந்து இலங்கைக்கு தகவல் கொடுத்தது.

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி மையத்தை தலைமையாகக் கொண்டு   புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை ஒட்டிய கடலும் அவர்களது நடமாட்டமும் சக்தி வாய்ந்த ராடார்கள் மூலமும் ரோந்து கப்பல்கள் மூலமும் கண்கானிக்கப்பட்டு இலங்கைக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தப் பட்டது.

அடுத்தடுத்து புலிகளுக்கு வந்த சிறிதும் பெரிதுமான பத்து கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன.

2006 இலேயே புலிகளின் மிகப் பெரிய போர்க்கப்பல் மூழ்கடிப்பட்டபோதே புலிகள் இதில் இந்தியாவின் பங்கு இருக்கும் என்பதை யூகித்திருந்தனர்.

2007 தொடக்கத்தில் புலிகளின் மூன்று கப்பல்கள் துல்லியமாகக் கண்டறியப்பட்டு மூழ்கடிக்கப்பட்ட போது புலிகளுக்கு புரிந்துவிட்டது.

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்த இலங்கை கடற்படை முகாமைத் தாக்கிய புலிகள்,
இந்தியா வழங்கிய சக்தி வாய்ந்த ராடார் கோபுரம் மற்றும் தகவல் பரிமாற்ற அலுவலகம் ஆகியவற்றை தாக்கி அழித்தனர்.
7 வீரர்களைக் கொன்ற கடற்புலிகள், 2 விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், 2 மெஷின் கன், ஒரு ஆர்பிஜி லாஞ்சர், எட்டு ரைபிள்களை கைப்பற்றிக் கொண்டு தப்பினர்.

இதன்பிறகு இந்திய கடற்படை முழுமூச்சாக களத்தில் இறங்கியது.

இப்போது புலிகள் தமிழகத்தின் உதவியை நாடினர்.
கனிமொழியைத் தொடர்புகொண்டு மத்திய அரசின் கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருமாறு கோரினர்.

ஆனால் வந்தேறித் தெலுங்கரான கருணாநிதி அப்படி எதையும் செய்யவில்லை.

தமிழகத்தில் ஈழ ஆதரவுப் போராட்டங்களையும் தமிழக மக்கள் அனுப்பும் உதவியையும் காவல்துறையைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தினார் அவர்.

அப்போது தமிழக நிலை பற்றி அறிய முதலமைச்சரைச் சந்தித்த சிவசங்கர் மேனனிடம் புலிகளை எப்படியாவது ஒழித்துவிடுமாறு கருணாநிதி கெஞ்சியுள்ளார்.
[சான்று நூல்:
Choices: Inside the Making of India's Foreign Policy - Shivshankar menon]

இந்தியா உதவினாலும் பாகிஸ்தான் மற்றும் சீனாவிடமும் ராஜபக்ச சில உதவிகளை வாங்க சிவசங்கர் மேனன் கோபித்துக்கொண்ட நிகழ்வும் நடந்தது.

ராஜபக்ச ஆரம்பத்தில் கேட்ட வான் பாதுகாப்பு சாதனங்கள், ஆர்ட்டில்லரி துப்பாக்கிகள், ஆளில்லாத உளவு விமானங்கள் (நிஷாந்த்), லேசர் சாதனங்கள் ஆகியன அனுப்பிவைக்கப் பட்டன.

2008 இல் இந்திய கடற்படையின் பேராதரவுடனும் கூட்டு ரோந்துப் பணிகளின் மூலமாகவும் ஒரே ஆண்டில் புலிகளுக்குச் சொந்தமான 10,000 டன் ராணுவ தளவாடங்களை மூழ்கடித்துள்ளதாகவும்
புலிகளிடம் தற்போது கப்பல்களோ படகுகளோ இல்லை என்றும்
அதனால் புலிகளின் கடற்படை பலம் தற்போது இல்லை என்றும் இலங்கை கடற்படை தளபதி கரன்னகோடா அறிவித்தார்.

இங்கே கவனிக்க வேண்டியது அப்போது இலங்கைக்கு சொந்தமான ஒரு போர்க்கப்பல் கூட இல்லை என்பது.

இலங்கை கடற்படையை விட வலிமையான புலிகளின் கடற்படையை
கூட்டுரோந்து என்ற பெயரில் இந்தியா அனுப்பிவைத்த மூன்று அதிவிரைவு படகுகள் மற்றும் ஒரு ஏவுகணை பொருத்தப்பட்ட கப்பல் மூலமே அழித்தது இலங்கை.
இதுபோக வாஜ்பாய் காலத்தில் தரப்பட்ட அதிநவீன கடல்ரோந்து படகான சுகன்யாவும் பயன்படுத்தப்பட்டது.

சார்க் மாநாடு 2008 ஆகஸ்ட் இல் பலத்த பாதுகாப்புடன் கொழும்பு மாநகரில் நடந்து முடிந்தது.
இந்த பாதுகாப்பு இந்திய ராணுவம் இலங்கை சென்று கொடுத்ததாகும்.

மாநாட்டுக்கு சென்ற இந்தியக் குழு அங்கேயே தங்கி பொன்சேகா இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா, கடற்படைத் தளபதி கரன்னகோடா ஆகியோரைச் சந்தித்து ராணுவ திட்டங்களை குறித்து விவாதித்தது.

2 லட்சம் உயிர்கள் போகும் என கணிக்கப்பட்டு கடைசிக் கட்ட தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்துவிட்டு வந்தது.

பிறகு நடந்த கொடூரமான தாக்குதலில் கொத்துகொத்தாக மக்கள் மடிந்தனர்.

அப்போது  பிரிட்டனின் இலங்கைக்கான தூதுவர் இந்தியாவின் நிலைப்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தியபோது
சிவசங்கர் மேனன்,
புலிகளை அழிப்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும்
போர்நிறுத்தத்தை  இந்தியா விரும்பவில்லை என்றும் 
இந்திய அரசின் சார்பில் தெரிவித்ததை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

கடைசி நேரத்தில் வாக்குறுதி கொடுத்து புலித் தளபதிகளை சரணடைய சம்மதிக்கவைத்து
நடேசன், புலித்தேவன், ரமேஷ் உள்ளிட்​டோர் வெள்ளைக்கொடியுடன் வந்தபோது அவர்களைக் கொன்றுவிட்டு பூசி மெழுகியது ஐ.நா சிறப்புத் தூதுவர் விஜய் நம்பியார் ஆவார்.

போர் முடிந்த பிறகு பொன்சேகாவை உலகிலேயே சிறந்த தளபதி என்று சிவ்சங்கர் மேனன் புகழ்ந்தார்.

இலங்கைக்கு இந்தியா 100 கோடி சன்மானம் கொடுத்தது.

2009 இல் சர்வதேச சக்திகள் நடத்திய ஈழ இனப்படுகொலை பாவத்தில் நேரடி மற்றும் பெரும்பான்மையான பங்கு மலையாளிகளுடையது.

Saturday, 28 July 2018

எது வீண்?

எது வீண்?

ஆறு கடலில் கலக்காமல் அணை கட்டித் தடுத்து பயன்படுத்த வேண்டும் என்று கூறும் தமிழர்,
கன்னடர் போல முட்டாள் ஆவார்.

நதிகளை இணைக்கவேண்டும் என்பார் ஹிந்தியர் போல அடிமுட்டாள் ஆவார்.

கடலில் ஆறு கலக்காவிட்டால் நமக்கு மூச்சு கிடைக்காது.

ஆம். விளையாட்டில்லை.
இதுதான் உண்மை.

காற்றில் ஆக்சிஜனை நிரப்புவது மரங்கள் மட்டுமல்ல.
நதி கடலில் கலக்கும் இடத்தில் வாழும் நுண்ணுயிரிகளும் அதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

நாம் விடும் மூச்சில் மூன்றில் ஒன்று அந்த நுண்ணுயிரிகள் போட்ட உயிர்வளி பிச்சை.

அதோடு கடலில் நன்னீர் கலக்காவிட்டால் கடலின் உப்புத்தன்மை அதிகமாகும்.
அது ஆவியாவது குறைந்து மழைப்பொழிவு குறையும்.

கடலுக்கு தண்ணீர் வரவில்லை என்றால் அந்த வெற்றிடத்தை நிரப்ப கடல் நீர் நிலத்தினுள் புகும்.

இப்படி புகுந்து நமது நெற்களஞ்சியம் பாலைவனமாக ஆக வேண்டும் என்பதற்காகவே அணை கட்டுதல், நதிநீர் இணைப்பு போன்ற பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன.

கரிகாலன் அசை கட்டினான் என்றால் அது கரையை பலப்படுத்தி வெள்ளத்தை கட்டுக்குள் வைக்கவே!

கடலின் தாகத்தைத் தணிக்காவிட்டால் கடல் நம்மைக் கொன்றுவிடும்.

இயற்கைப் பொறுத்து நாம் வாழவேண்டும்.

நமக்காக இயற்கையை மாற்றக்கூடாது.

கன்னடனின் கொட்டத்தை அடக்கி மழை நீரைச் சேமிப்பதே தீர்வு.

Friday, 15 June 2018

புலிகளிடம் சிக்கிய ஜோர்டான் கப்பல்

புலிகளிடம் சிக்கிய ஜோர்டான் கப்பல்

14.12.2006 இல் அந்த கப்பல் இலங்கை கடல்வழியாக செல்லும் போது 6 fiberglass மற்றும் Stealth boatகள் வழிமறித்து அழைத்துச் செல்லப்பட்டு முல்லைத்தீவில் நங்கூரம் பாய்ச்சப்பட்டு நிறுத்தப்படுகிறது.

கப்பலில் 25 பேர் இருந்தனர்.

கப்பலில் இருந்த 14000 metric ton அரிசியும் கொள்ளை அடிக்கப்பட்டு, அதில் இருந்த 25 மாலுமிகளை red crossடம் ஓப்படைத்துவிட்டு அந்த கப்பலை strip செய்து அந்த தங்கள் பயிற்சி கூடமாக மாற்றினர் அந்த கப்பலை கைப்பற்றியவர்கள்.

கைப்பற்றியவர்கள்: விடுதலைப்புலிகள்

கப்பலின் பெயர்: MV Farah III

கப்பல் register செய்யப்பட்ட நாடு : Jordan (இது மட்டும் தான் சீமான் தவறாக சொன்னது)

(தகவலுக்கு நன்றி: Vijay Kumar Thangappan)

மேற்கண்ட தகவல் அக்கப்பலின் கேப்டன் அப்துல்லா பின்னாட்களில் கூறியது ஆகும்.

ஆனால் புலிகள் தரப்போ பழுதாகி கரை ஒதுங்கிய கப்பலை காப்பாற்றி ஆட்களை செஞ்சிலுவை சங்கம் (Red cross) வசம் ஒப்படைத்துவிட்டு ஓடமுடியாத அளவு சேதமான கப்பலின் கூடை தாம் பயிற்சிக் கூடமாக வைத்துக்கொண்டதாகவும் கூறியுள்ளனர்.

புலிகள் ஆண்ட கடல் வழியே எத்தனையோ கப்பல்கள் போயுள்ளன.
எதையும் அவர்கள் கொள்ளையடித்ததில்லை.

அப்படியே கப்பலை நல்லநிலையில் புலிகள் கைப்பற்றி இருந்தாலும் அதை தமது கடற்படையுடன் சேர்த்து கப்பலாகவே புலிகள் பயன்படுத்தியிருக்கலாம்.
அதை உரித்து கூடாக ஆக்கவேண்டிய அவசியமில்லை.

புலிகள் உண்மையான கொள்ளையர்களாக இருந்திருந்தால் மாலுமிகளை உயிருடன் விட்டுருக்கவேண்டிய அவசியம்?!

Thursday, 7 December 2017

குமரி மீனவரும் ராமேஸ்வரம் மீனவரும்

குமரி மீனவரும் ராமேஸ்வரம் மீனவரும்

அதுல பாருங்க...
வேதாரண்ய மீனவன சிங்களவன் சுட்டா
மத்த மீனவன் வேடிக்கை பாப்பான்.

ராமேஸ்வரம் மீனவன சிங்களவன் பிடிச்சிட்டு போகும்போதும்
அவன் சொத்தையா ஒருநாள்  வேலைநிறுத்தம் நடத்தும்போதும்
மத்த மீனவன் வேடிக்க பாப்பான்.

இவ்வளவுநாள் மத்த மீனவன் போராட்டத்த ஒருவரிச் செய்தியா படிச்சிட்டு கொட்டாவி மட்டுமே விட்ட குமரி மீனவன் இப்போ புயலால் பாதிக்கப்பட்டு போராடவேண்டிய நிலமை.

ஆனா மத்த மீனவனுகள விட குமரி மீனவன் சூடு சொரணை உள்ளவன்.
இப்போ 5000 பேர் சேந்து குழித்துறையை ஸ்தம்பிக்க வச்சிட்டான்.

சென்னைல வெள்ளம் வந்தப்ப அரசாங்கத்த காறிதுப்பிட்டு மக்களே அனுப்பிவச்ச நிவாரண பொருட்களகூட மறிச்சு ரெட்டல சின்னத்த ஒட்டுன அடிமை நாய்க ஆளுற சூழ்நிலைல
அவன விட மோசமானவன்னு தமிழ்நாடே ஒதுக்கின பாஜகவுக்கு ஓட்டையெல்லாம் போட்டுட்டு கேரளாவோட சேத்துருங்கனு பேசுறான்.
கொழுப்ப பாத்தீங்களா?!

ஆனா பாருங்க
கோவத்துல பேசுறான்னு தமிழகமே கவலைப்படுது.

ஆனா மத்த மீனவனுக மட்டும்  பெரிய மனசோட குழித்துறைல சேர்ந்து போராட  வரமாட்டானுக.

இதுல கடற்கரையெல்லாம் சேர்த்து ஒரே மாவட்டம், அதில் தொகுதி, கட்சி வேணும்னு வாய்கிழிய கேப்பானுக!

ஒலகத்துலயே சொரணையே இல்லாத,
மீசைவச்சு வேட்டி கட்ட தகுதியில்லாத பொட்டையான ஒரு சமூகம் உண்டுனா அது ராமேசுவரம் மீனவ சமூகம்தான்.

அவன நடுக்கடல்ல சிங்களவனும் ஹிந்தியனும் அடிச்சு, தொவச்சு, அம்மணமாக்கி, திருக்கமீன போடவிட்டு, அப்பனுக்கும் மகனுக்கும் முதலிரவு நடத்தி, குனியவச்சு பின்னால் ஏறி, கைகால வெட்டி கடல்ல தள்ளி, பொருளலாம் கொள்ளையடிச்சு, இலங்கைக்கு கொண்டுபோய் அடைச்சு இஸ்டத்துக்கு சித்ரவதை பண்ணி,
ஒலகத்துல இல்லாத கொடுமையெல்லாம் பண்ணிட்டு இருக்கான்.

ஆனா கரைக்குவந்து ஒப்பாரி வைப்பானுகளே ஒழிய ஒரு சிங்களவன செவுள்ல அறைய துப்பு இருந்தது கிடையாது.

இப்பல்லாம் சிங்கள கடற்பட கூட வரவேண்டாம் சிங்கள மீனவனே வெறுங்கையால அடிச்சு தொவச்சு அம்மணமாக்கி விரட்டிடறான்.

இவனுக சேலய கட்டிகிட்டு கடலுக்கு குடும்ப பொம்பளைங்கள அனுப்பலாம்.
அவளுக சிங்களவன அடக்கக்கூட வாய்ப்பு இருக்கு.

நா கேக்குறேன்
மீனவ சமூகம் மனசுவச்சா எவ்வளவு பெரிய போர்க்கப்பலா இருந்தாலும் அவங்கள மீறி அந்த கடல கடந்து போகமுடியுமா?

எந்த எந்த பொருள் எப்படி எப்படி கடத்தணும் எந்த எந்த வழியா கொண்டுவரணும்னு அவனுக்கு தெரியாததா?

ஒரு சின்ன படகுல வெடிகுண்டோட ஒரு கரும்புலி மட்டும் கடல்ல எறங்கி நின்னா பெரிய பெரிய சிங்கள போர்க்கப்பல்லாம் அந்த திசை பக்கமே வராது.

புலிகள பக்கத்துல இருந்து பாத்தும் பாடம் படிக்காத ராமேஸ்வரம் மீனவனுக்கு
குமரி மீனவன பாத்தா சொரண வரப்போகுது?!

Wednesday, 4 October 2017

குமரிக்கண்டக் கருத்தியல்

குமரிக்கண்டக் கருத்தியல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குமரி என்பது மலையா? கடலா? கண்டமா? தென்முனையா?

"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறும் நல்லுலகம்"
என்ற வரிகளுக்கு விளக்கம் தரும்  உரையாசிரியர்கள் குமரியை ஆறு என்றவாறே உரையெழுதியுள்ளனர்.

ஆனால் குமரி ஒரு ஆறு என்று எங்கும் வரவில்லை.

"வடவேங்கடம் தென்குமரி"
(தொல்காப்பியம் பாயிரம்)

"தென்குமரி வட பெருங்கடல்
குண குட கடலா எல்லை"
(புறநானூறு: 67)
போன்ற இடங்களில் குமரி என்று மட்டுமே வந்துள்ளது.

ஆனால்,
சிலப்பதிகாரத்தில் குமரியை கடல் என்றவாறு
"நெடியோன் குன்றமும்
தொடியோன் பௌவமும்"
குறித்திருப்பதைக் காணமுடிகிறது.

ஆனால் அதே சிலப்பதிகாரத்தில் மற்றொரு இடத்தில் குமரி எனும் மலையை கடல் கொண்ட செய்தி வருகிறது.

"பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள"
என்று பஃறுளி ஆற்றோடு குமரி மலை கடலில் மூழ்கிய செய்தி வருகிறது.

இளங்கோவடிகள் கடலில் மூழ்கிய மலையை குமரி என்று கூறுவது அவரது வரலாற்று அறிவினால் ஆகும்.
அவரது காலத்தில் குமரி கடலில் மூழ்கி கடலுக்கு பெயராக இருந்திருக்கவேண்டும்.

பஃறுளியாற்றுடன் குமரி மலையும் கடல்கொண்டபிறகு
அந்த இழப்பினை ஈடுசெய்வதற்காக பாண்டிய மன்னன் ஒருவன் வடக்கே படையெடுத்துச் சென்று கங்கையையும், இமயத்தையும் தன் உடைமையாக்கிக் கொண்டவரலாற்றையே இளங்கோவடிகள்
"பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன்"
என்று கூறுகின்றார்.

பஃறுளியாறு நெடியோன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பகுதி என
"முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர் பஃறுளி மணலினும் பலவே"
என்ற புறநானூறு மூலம் அறியலாம்.

[இதற்கு அடுத்தும் ஒரு கடற்கோள் ஏற்பட்டு தமிழ்ச் சங்கம் (இடை) இருந்த கபாடபுரம் வரை கடலில் மூழ்கியுள்ளது.
இது இளங்கோவடிகள் காலத்திற்கு முன்பே நடந்திருந்தாலும் அவர் அதை ஏனோ வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.

ஆனால் "மலி திரையூர்ந்து தன் மண் கடல் வௌவலின்" என்று ஒரு கடற்கோளையும் (அந்த நில இழப்பை ஈடுகட்ட) பாண்டியன் சேர சோழரை வென்று தனதாக்கியதை "புலியோடு வில் நீங்கி" என்றும் முல்லைக் கலியில் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்]

  இந்திய துணைக்கண்டம் பெரிய தீவாக கடலில் தனித்து இருந்தது.
பிறகு அத்தீவு ஆசியாவுடன் மோதி இணைந்தது.
அந்த மோதலால் உருவானதே இமயமலை.
அப்படி இணையும் முன்பு (அதோடு குமரிக்கண்டமும் சேர்ந்திருந்தது) நாம் அதில் வாழ்ந்திருந்தோம்.
அதற்கு நாவலன் தீவு என்று பெயரிட்டு அழைத்துவந்தோம்.
(மருதுபாண்டியரின் சுதந்திர பிரகடனத்தில் இந்தியாவை ஜம்புத்தீவு என்று குறிப்பிட்டுள்ளனர்)
அப்படிப் பார்த்தால் மூழ்கியுள்ள கண்டம் நாவலந்தீவு என்றுதான் அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.
நாவலந்தீவின் தென்பாதியில் பெரும்பகுதியை குமரி மலை கொண்டிருக்கவேண்டும்.
மூழ்கிய பிறகும் பல காலம் அந்த மாமலையின் உச்சி வெளியே தெரிந்தபடி இருந்திருக்கவேண்டும்.
அதனால் நிலப்பரப்பின் பெயரை விட மலையின் பெயரே அக்கடல் பகுதிக்கு அமைந்திருக்கவேண்டும்.

மூழ்கிய அந்நிலத்தைப் பற்றி மேலைநாட்டார் விலங்கின ஆராய்ச்சியின் போது கண்டறிந்தனர்.
லெமுர் எனும் உயிரினம் இந்தியா, மடகாஸ்கர், ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நிலப்பரப்பிலும் கடலை ஒட்டிய நிலப்பகுதியில் வாழ்வதை வைத்து முன்பு இம்மூன்றையும் தொட்டவாறு பெரிய கண்டம் இருந்திருக்கவேண்டும் என்று கணித்து அதற்கு லெமூரியா என்று பெயரிட்டனர்.

இதை அறிந்த தமிழறிஞர்கள் மேற்கொண்டு இலக்கியங்களை ஆராய்ந்து லெமுரியா என்பது 49 நாடுகள் இருந்த தமிழர் நிலமே என்று அறிவித்தனர்.

  இது பற்றி 20ம் நூற்றாண்டில் முதன்முதலாக ( அதாவது பல நூற்றாண்டுகளுக்கு பிறகு) 1903ல் எழுதியவர் பரிதிமாற் கலைஞர் (பார்ப்பனத் தமிழர்).
தமது 'தமிழ்மொழியின் வரலாறு ' எனும் நூலில் குமரிநாடு என்றே குறிப்பிட்டுள்ளார்.
அதன்பிறகு அது 1930களில் குமரிக் கண்டம் என்று பெயர்பெற்றது.
(இப்பெயர் 15ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட கந்த புராணத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறுவர்)

இதை பரப்புரை செய்து தமிழர் அனைவருக்கும் கொண்டுசென்று குமரிக்கண்டம் தமிழர் பிறப்பிடம் என்றும் இந்தியாவில் மூத்தகுடி தமிழரே என்றும் 'குமரிக்கண்ட கருத்தியலை' உருவாக்கியவர் ஈழத்தமிழரான கனகசபை ஆவார்.

அதன்பிறகு பாவாணர் மேலும் ஆராய்ந்து குமரிக்கண்ட மாந்தன் இந்தியா மட்டுமல்லாது உலகிலேயே தோன்றிய முதல் மாந்தன் என்று அக்கருத்தியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார்.

அதற்காக 20 நூற்றாண்டுவரை தமிழர்கள் மூழ்கிய குமரியை மறந்துவிட்டதாகக் கூறமுடியாது.
ஈழத்தின் தென் பகுதி தமிழர் வசம் இல்லை.
ஆனால் அந்த கடல் பார்த்த தென்முனை தமிழகத்திடம் உள்ளது.
அந்த பகுதிக்கு தமிழ்மக்கள் குமரி என்றே பெயரிட்டு அழைத்தனர்.
ஆங்கிலேயர் அம்முனையை cape komarin என்றே குறித்துள்ளனர்.
மூழ்கிய குமரிநிலத்தின் நினைவாக குமரி அம்மன் கோவிலும் கட்டி வழிபட்டு வந்தனர்.
(மூழ்கிய முன்னோர் வழிபாடு தென்புலத்தார் வழிபாடு என்று பல காலம் பின்பற்றப்பட்டு தமிழர்களால் வந்தது)

1956ல் தமிழ் மாநிலம் அமைந்தபோது மலையாளிகள் கையில் இருந்த தென்முனையை பெரும்போராட்டம் நடத்தி  தமிழகத்துடன் சேர்த்த நேசமணி (கிறித்துவ நாடார்) அவர்கள்,
கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை (வெள்ளாளர்) அவர்களின் கடைசி ஆசைப்படி அம்மாவட்டத்திற்கே 'கன்னியாகுமரி' என்று பெயர் வைத்தார்.

ஆக, குமரி என்ற பெயர்
முதலில் மலைக்கும்
பிறகு கடலுக்கும்
பிறகு மூழ்கிய கண்டத்திற்கும்
பிறகு தென்முனைக்கும்
பயன்படுத்தப்பட்டுள்ளது.

இமயமலை முதல் குமரிமலை வரை பரந்திருந்த ஒரு கண்டம் முழுவதும் வாழ்ந்த தமிழர் இன்று ஏதோவொரு மூலையில் யாரோ ஒருவரைப்போல வாழ்கிறோம்.

'இந்தியா முழுவதும் நமதே' என்பதற்கான சான்றுகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் பிறரறியா வண்ணம் ஆக்கப்பட்டுவிட்டன.

ஆனால்,
மூழ்கிய குமரிக்கண்டம் நமது பழமையான நாகரீக சான்றுகளுடன் பாதுகாப்பாக கடலுக்குள் இருக்கிறது.

நம் வரவை, தனது மக்களின் வரவை எதிர்பார்த்து அது கடலுக்குள் காத்திருக்கிறது.

எனவே இந்தியாவில் உள்ள மூடர்களிடம் எஞ்சியுள்ள சான்றுகளை காட்டி
'தமிழ் மொழியை வெறும் 5000 ஆண்டுகள் பழமையானது என்றாவது ஏற்றுக்கொள்ளைங்கள்" என்று பேரம் பேசுவதில் குறியாக இருக்கும் நாம்,
இனியும் அந்த 'பாறையில் உழும்' முட்டாள்த்தனத்தைச் செய்யாமல்
கையில் இருக்கும் நிலத்தையாவது அரணமைத்து தனிநாடாக்கி
இனத்தை அழிவிலிருந்து காத்து
பொருளாதாரத்தைப் பெருக்கவேண்டும்.

அதன்பிறகு கடலில் இறங்கி (இன்று பாகிஸ்தானில் உள்ளதும் இந்திய கண்டத்திலேயே பழமையான நாகரீகமும் ஆன ) சிந்துசமவெளி நாகரீகத்தை விட பழமையான நமது குமரிக்கண்ட நாகரீகத்தை ஆராய்ந்து நமது பழமையை நாட்டுவதில் சிந்தையைச் செலுத்துவோம்.

தனிநாடு அமைத்து அதன்மூலம் அமையும் நமது பொருளாதாரம் மூலம்தான் கடலில் இறங்கி நமது பழமையை வெளிக்கொணரும் ஆற்றல் நமக்கு வரும்.
உலகத்தில் வாழும் எந்த இனத்தானும் நமக்காக இதைச் செய்யப்போவதில்லை.
நாம் தான் செய்யவேண்டும்.
அதன்பிறகுதான் தமிழரே மூத்தகுடி என்று உலகம் வேறு வழியின்றி ஒத்துக்கொள்ளும்.

நாம் அதைச் செய்யாததால் பாருங்கள் முழுக்க முழுக்க தமிழருக்கு மட்டுமே உரிமையான அந்த கடலை அதனடியில் இருக்கும் நிலத்தை எவனெவனெல்லாமோ சொந்தம் கொண்டாடுகிறான்.

(நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த இந்தியாவின் பெயரில்) குமரிக்கடல் இன்று 'இந்தியப் பெருங்கடல்' என்று அழைக்கப்படுகிறது.

நேற்று பிறந்த இந்துத்துவவாதிகள் அதை 'இந்து மகா சமுத்திரம்' என்கின்றனர்.

நாம் தனிநாடு அமைத்ததும் அக்கடலுக்கு குமரிக்கடல் என்றே பெயரிட வேண்டும்.
பிறரை முந்திக்கொண்டு நாம் முதலில் கடலில் இறங்கி விரிவான ஆராய்ச்சி நடத்தவேண்டும்.

குமரிக்கண்டத்தை ஆராய்ந்தால் நாமே பூர்வகுடி எனும் சான்று கட்டாயம் கிடைக்கும்.
அதன் பழமையை நிறுவிவிட்டால் இந்தியாவையே நாம் கைப்பற்றி ஆண்டாலும் யாரும் கேள்விகேட்க முடியாது.

  பாவாணர் கூறிய படி
'குமரிக்கண்டமே மாந்தன் தோன்றிய இடம்'
'தமிழரே மூத்தகுடி'
'தமிழே மூத்தமொழி'
என்ற உண்மையை உலகம் அறியும்படி சான்றுகளுடன் அறிவிக்கவேண்டும்.

இதுதான் குமரிக்கண்டக் கருத்தியல்.

இதற்கு ஒரே வழி தமிழ்தேசியம்.