Monday 23 January 2023

திருப்பதியில் தமிழைக் கண்டேன்

திருப்பதியில் தமிழைக் கண்டேன்

 திருப்பதி கருவறை சுற்றுச் சுவர்களில் முழுக்க தமிழ் வட்டெழுத்து மட்டுமே நிறைந்துள்ளது.
 அழிக்க முடியாத அளவுக்கு அழுத்தமாக பாமரனுக்கும் அது தமிழ் என்று புரியும் வகையில் வெட்டப்பட்டுள்ளது. 
 கல் சுமந்து மலையேறி கோவில் கட்டியது தமிழர்கள்!
 தமிழின ஆழ்வார்கள் உயிரைக் கொடுத்து வைணவம் வளர்த்தனர்!
 எல்லாம் எதற்கு தெலுங்கர் வளம்பெறவா?!
 வாசலில் பெரிதாக கிருஷ்ணதேவராயன் சிலையும் வைத்துள்ளனர். அடுத்தவன் பெற்ற பிள்ளைக்கு தன் பெயரை வைத்துக்கொள்ள கூச்சமே இல்லை! 
 
 எங்கும் ஒரே தெலுங்கு மயம்!

 மிகச் சமீபத்தில் தென்கலை நாமத்தை ஸ்டைலக வடகலை நாமமாக மாற்றியுள்ளனர்!
 
 உலகப் புகழ் பெற்ற திருப்பதி கோவிலை தமிழகத்திடம் ஒப்படைக்க வழக்கு தொடர்ந்தால் ஆந்திரா ஒப்படைத்துதான் ஆக வேண்டும்.

 ஆனால் அதற்கு நம்மிடம் வலுவான மாநில அரசும் நியாயமான நீதிமன்றங்களும் வேண்டுமே?! 

 அவையும் திராவிடத்திடமும் இந்தியத்திடமும் உள்ளனவே!

No comments:

Post a Comment