Sunday 1 January 2023

காவிரிக்காக புதுச்சேரி தமிழகத்துடன் இணைதல்

காவிரிக்காக புதுச்சேரி தமிழகத்துடன் இணைதல் 

 புதுச்சேரிக்கு மாநில அதிகாரம் கோருவது ஏற்புடையது இல்லை!
 புதுச்சேரி தனது சிறப்பு அந்தஸ்தை கைவிட்டு தமிழகத்துடன் இணைதல் வேண்டும்!
 அதுவும் துண்டு துண்டான அதன் பகுதிகள் அந்த அந்த மாவட்டத்திற்குள் இணைக்கப்பட வேண்டும்.
 புதுச்சேரிக்குச் சொந்தமான மாஹே கேரளாவிலும் ஏனாம் ஆந்திராவிலும் உள்ளது. அவற்றை அந்த அந்த மாநிலங்களுக்கே வழங்கவும் வேண்டும். இதை காரணமில்லாமல் செய்யக்கூடாது. 

 காவிரி உற்பத்தியாகும் குடகு பகுதி மக்கள் புதுச்சேரி போன்ற சிறப்பு சி- அந்தஸ்து கோரி வருகின்றனர். தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கன்னடர் அட்டூழியத்தை எடுத்துக்கூறி தமக்கு அதிகாரம் கிடைத்தால் தமிழகத்திற்கு தண்ணீர் தருவதாக வாக்களித்துள்ளனர்.

 கன்னடர் காவிரியை மறித்து செய்யும் மனிதத்தன்மை இல்லாத அரசியலுக்கு தகுந்த பதிலடியாக நமது புதுச்சேரி அந்தஸ்தை குடகுக்கு விட்டுக்கொடுக்க தமிழகம் மற்றும் புதுச்சேரி முதல்வர்கள் முன்வர வேண்டும்.
 புதுச்சேரி மக்கள் குடகு நோக்கியும் குடகு மக்கள் புதுச்சேரி நோக்கியும் ஒரே நேரத்தில் பேரணி சென்று வீரமிகு போராட்டங்கள் நடத்த வேண்டும்.

 கன்னடர் ஏற்கனவே மராத்தியர்களுடன் எல்லைச் சிக்கலில் மோதல் வெடிக்கும் நிலையில் உள்ளனர்.
 இந்த நேரத்தில் இந்த நகர்வு இந்திய அரசியலையே புரட்டிப்போடும்.

 நமது இந்த நகர்வுக்கு மாஹே, ஏனாம் பகுதிகளை விட்டுக் கொடுப்பதாக பேரம் பேசி கேரளா மற்றும் ஆந்திரா மக்களை இப்போராட்டத்திற்கு ஆதரவு தரக் கோரவேண்டும். மராத்தியர் ஆதரவும் கிடைக்கும்.
 கர்நாடகா நான்கு புறமும் எழும் எதிர்ப்பினாலும் எல்லைதாண்டும் புதுச்சேரி பேரணியாலும் குடகு எழுச்சியாலும் நிலைகுலைந்து போகும்.
 
 புதுச்சேரி மக்களே! 
 உங்கள் பகுதி புதுக்கோட்டை சமஸ்தானம் போல சொந்தமாக நீங்கள் உருவாக்கியது இல்லை! எவனோ ஒரு வெள்ளைக்காரன் விட்டுச் சென்ற பகுதி மீது அமர்ந்து கொண்டு நீங்கள் அதிகாரம் செலுத்துவது அதிலும் பிற மாநில பகுதிகளை ஆக்கிரமித்து அதிகாரம் செலுத்துவது நியாயம் இல்லை. நீங்கள் நினைத்தால் தமிழகத்திற்கு காவிரியைக் கொண்டுவர முடியும். தமிழகத்துக்கு சாராயம் ஊற்றிக்கொடுக்கும் மக்களாகவே இருக்கப் போகிறீர்களா? அல்லது குடிநீர் கொணர்ந்த மக்களாக இருக்கப் போகிறீர்களா? கஷ்டமோ நஷ்டமோ சக தமிழர்களுடன் இணைந்து ஒற்றை ஆட்சியில் வாழ்வதே முறை! 

 இந்த துணிச்சலான அரசியலை புதுச்சேரி முதல்வர் முதலில் முன்னெடுக்க வேண்டும்.
 ஏனெனில் தமிழக முதலமைச்சர் தமிழரல்லர்! கேரள அரசு தமிழக எல்லைப் பகுதிகளை தமது எல்லைக்குள் கணக்கெடுத்து பதிவு செய்துவருவதைக் கூட கண்டுகொள்ளாத கையாலாகாத இன வன்மம் கொண்ட முதல்வர்தான் ஆட்சியில் இருக்கிறார். 
 
 புதுச்சேரி முதல்வர் இந்த போராட்டத்தை அறிவித்தால் தமிழக மக்களையும் தன்னெழுச்சியாக  இதில் கலந்துகொள்வர். தமிழக முதல்வர் வேறு வழியின்றி இணைவார்! இந்த போராட்டத்தை நடத்திவிட்டால் அடுத்த தமிழக முதல்வராக்கூட ஆகலாம்!

 இதற்கு முதலில் புதுச்சேரி மக்கள் போராட்டங்கள் செய்ய வேண்டும்! தமது முதல்வருக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்!

 இந்த போராட்டம் வெற்றி பெற்று குடகு அதிகாரம் பெற்றதும் காவிரிக்கான ஒப்பந்தம் போட்டுக்கொள்ளவும் வேண்டும்.

 கன்னடர் கொட்டம் அடக்க காலம் கனிந்துள்ளது!
இதைச் செய்ய தமிழர்கள் முன்வந்தால் தலைமுறைகள் தாண்டியும் நன்மை அடையலாம்!
 

No comments:

Post a Comment