கருணாநிதி பூர்வீகம் ஆந்திராவில் ஓங்கோல்
பட்டதிலுள்ள தெலுங்கு பத்திரிக்கை செய்தியின் சுருக்கம் கீழே,
கருணாநிதி முன்னோர்கள் ஓங்கோலைச் சேர்ந்தோர் !
கலைஞர் கருணாநிதியின் மூதாதையர்களின் சொந்த ஊர், ஆந்திராவில் , ஒங்கோலுக்கு அருகே உள்ள செருக்கொம்முபாளையம் என்ற ஊர்.
கருணாநிதியின் மூதாதையர்கள், ஒங்கோலுக்கு அருகே உள்ள பெள்ளூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான பாடகர்கள் ஆக இருந்தார்களாம்.
இதை கருணாநிதியே 1960 ல் ஒங்கோல் சென்றிருந்த போது கூறியுள்ளார்.
கருணாநிதி 1960ல் எலூர் நகரத்தில் நடந்த நாவல் வெளியீடு விழாவில் பங்கேற்று அங்கு வந்த ஓங்கோல் நகரை சேர்ந்த கொம்பள்ளி பாலகிருஷ்ணாவை சந்தித்துள்ளார்.
அவரிடம் கருணாநிதி தன் பூர்விகம் பற்றி கூறியுள்ளார்.
இதை பாலகிருஷ்ணா தாம் பணிபுரிந்த கல்லூரி விழாவில் கூறியுள்ளார்.
தற்போது அவரும் மறைந்துவிட்டார்.
ஆனால் அன்று தெரிவித்தவற்றை அவர் மாணவர்கள் வெளியிட்டு உள்ளார்கள்.
சமஸ்தான பணி சரியாக இல்லை என்பதால் அவர் முன்னோர்கள் மதராஸ் வந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார் கருணாநிதி.
---------------
இதிலிருந்து இவர்கள் விஜயநகர ஆட்சி காலத்தில் வந்தவர்கள் அல்லர் என்பதும் கிபி 1800 க்கு பின்பு வந்தவர்கள் என்பது தெளிவாகிறது.
கருணாநிதிக்கு இரு தலைமுறை முன்பு அவர் முன்னோர்கள் ஓங்கோல் பகுதியில் வசித்து வந்தனர்...
புகைப்படத்திற்கு நன்றி : Jose Kissinger
மொழிபெயர்ப்புக்கு நன்றி : Karthikeyan Rathinavelu
Friday, 10 August 2018
கருணாநிதி பூர்வீகம் ஆந்திராவில் ஓங்கோல்
Monday, 16 April 2018
கிருஷ்ணதேவ ராயரின் மொழிப்பற்று
கிருஷ்ணதேவ ராயரின் மொழிப்பற்று
தெலுங்கு மொழியானது சாளுவ நரசிம்மர் காலத்தில் மறுமலர்ச்சி அடையத் தொடங்கி கிருஷ்ணதேவராயர் காலத்தில் வளர்ச்சியின் உச்சத்தைத் தொட்டது.
ராயரின் காலமே தெலுங்கின் பொற்காலம்.
அதனால் கிருஷ்ண தேவராயர் 'ஆந்திரபோஜர்' என்றும் அழைக்கப்பெற்றார்.
அவரது ஆட்சிமொழியாகத் தெலுங்கே இருந்தது.
அவரது அரசவையில் 'அஷ்ட திக் கஜங்கள்' எனப்பட்ட எட்டு தெலுங்கு மொழிக் கவிஞர்கள் இருந்தனர். அவர்கள்,
அல்லசானி பெத்தண்ணா,
நந்தி திம்மண்ணா,
தூர்ஜதி,
மாதயகாரி மல்லண்ணா,
அய்யராஜு ராம்பத்ரா,
ராமராஜ பூஷணா,
பிங்கலி சூரண்ணா
மற்றும் தெனாலி ராமன் (ராமகிருஷ்ணா)
ஆகியோர் ஆவர்.
இவர்களில் அல்லசானி பெத்தண்ணா என்பவர் தலைமைப்புலவர்.
இவர் தெலுங்கு மொழிக்கு செய்த தொண்டினால் 'ஆந்திரகவிதா பிதாமஹா' என்று புகழப்பட்டவர்.
இவர் மநு சரித்திரம் (மனு தர்மத்தை எழுதிய மநு இல்லை.
அவருக்கு அடுத்து வந்த இரண்டாம் மநு வரலாறு) என்ற நூலை எழுதியதற்காக பட்டத்து யானை மீது அமர்த்தி ஊர்வலம் எடுத்தார் ராயர்.
சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளில் புலமை பெற்றவர் ராயர்.
ஆனால் தாய்மொழியான தெலுங்கின் மீது தனி பற்று வைத்திருந்தார்.
இவர் எழுதிய 'ஆமுக்த மால்யதா' என்ற தெலுங்கு காவியம் தெலுங்கு இலக்கியத்தில் தலைசிறந்த 5 படைப்புகளில் ஒன்றாகும்.
அந்நூலின் முன்னுரையில் தாம் கலிங்க நாட்டின் மீது படையெடுத்த காலகட்டத்தில் விசயவாடியில் (விஜயவாடா) இருந்து ஸ்ரீகாகுளம் சென்று 'ஆந்திர மதுசூதனா' என்ற பெயருடைய இறைவனை வழிபட்ட அன்று இரவில் மகாவிஷ்ணு தன் கனவில் வந்து ஆண்டாள் பற்றி ஒரு காவியம் எழுதுமாறு கட்டளை இட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தான் சமஸ்கிருதததில் எழுதிய மாதலாச சரிதம், சகல கலா சார சங்கிரகம், ரசமஞ்சரி ஆகிய நூல்களை மகாவிஷ்ணு பாராட்டியதாகவும்
ஆனால் ஆண்டாள் வரலாற்றை தெலுங்கிலேயே எழுதுமாறு கூறியதாகவும் குறித்துள்ளார்.
ஏனென்றால் எல்லா மொழிகளையும் விட தெலுங்கு தலைசிறந்த மொழி என்றும்
இந்த உண்மையை அரசவைப் புலவர்கள் அனைவரும் விரைவில் புரிந்துகொள்வர் என்றும் கனவில் விஷ்ணு கூறியதாக எழுதியுள்ளார்.
(நூல்: கிருஷ்ணதேவராயர்
ஆசிரியர்: ஆர்.சி.சம்பத்)
Saturday, 9 December 2017
நாம்தமிழர் தெலுங்கு பிரச்சாரம்
நாம்தமிழர் தெலுங்கு பிரச்சாரம்
ஆர்.கே.நகரில் நாம்தமிழர் மேடையில் தெலுங்கில் பேசி வாக்குசேகரித்த காணொளி பரவலாகி வருகிறது.
ஒரு தெலுங்கரை தெலுங்கு அடையாளத்தோடு கட்சியில் சேர்த்து
அவரைவிட்டு தெலுங்கில் பேசவைத்து தெலுங்கரிடம் ஓட்டுக் கேட்பது தவறில்லைதான்.
ஆனால் 'நாம் தமிழர்' என்று பெயரை வைத்துக் கொண்டு இவ்வாறு செய்வதற்கான அவசியம் என்ன என்றுதான் புரியவில்லை.
முதலில் தெலுங்கரைத் தவிர்த்துவிட்டு இங்கே அரசியல் செய்யமுடியாது என்ற நிலை இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழர் பாதிக்கு பாதி வாழ்ந்த எல்லைப் பகுதிகளை அண்டைமாநிலங்கள் பறித்துக்கொண்டுவிட்டன.
இதனாலேயே பிற மாநிலங்களை விட அதிக 'மண்ணின் மைந்தர் பெரும்பான்மை' தமிழகத்திடம் உள்ளது.
(இதையும் விடாது வந்தேறிகள் குடியேற்றம் தொடர்ந்து நடத்தப்பட்டு தமிழகத்தில் தமிழர் செறிவு நீர்த்துப்போக அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்படுகின்றன.
தற்போது 4 தொகுதிகளில்
நா.த.க முதலில் தமிழரை (மட்டும்) முழுமையாக ஓரணியில் திரட்டும் முயற்சியைச் செய்யுங்கள்.
வந்தேறிகள் கடைசியில் தானாக வந்து ஒட்டிக் கொள்வார்கள்.
பிறமொழியாளருக்கு இப்போதே (234 இல்) 15 இடங்களில் நிற்க வாய்ப்பு கொடுத்துள்ளோம் என்று உங்கள் வியனரசு வெளிப்படையாக கூறியுள்ளார்.
அவர்களெல்லாம் நீங்கள் அவரவர் மொழியில் பேசியதால்தான் உங்கள் கட்சி சார்பில் நிற்க முன்வந்தார்களா?
ஒருபேச்சுக்கு தெலுங்கர் 15% க்கு மேல் என்று வைத்துக்கொண்டாலும் அவர்கள் தமிழ் தெரிந்தவர்கள்தானே?!
தமிழிலேயே வாக்கு கேட்கவேண்டியதுதானே?!
தெலுங்கருக்கு உங்கள் கட்சி என்ன செய்யும்? அவர்களிடம் என்ன நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று தமிழிலேயே விளக்குங்கள்.
இலங்கை உட்பட முழு தென்னிந்திய துணைக்கண்டமும் தமிழ் புரியும்.
எல்லாவனும் வெட்டி பந்தாவுக்கு தமிழ் புரியாதமாதிரி நடிக்கத்தான் செய்கிறான்.
நீங்கள் பிற மொழியில் பேசி வாக்கு கேட்பதை தமிழக எல்லைக்கு வெளியே வாழும் தமிழர்களிடம் வேண்டுமானால் செய்யுங்கள்.
ஆனால் தமிழகத்திற்கு உள்ளே தெலுங்கு பேசி உங்கள் கட்சியை வளர்க்கவேண்டிய அவசியம் இல்லை.
"இல்லைங்க!
எங்களுக்கு மொழிவெறி இல்லைனு வெளிய காட்டிக்கணும்!
தமிழர்கள் எங்க மேல வைச்சிருக்க நம்பிக்கை குறைஞ்சாலும் பரவாயில்ல!
தெலுங்கர் மனசுலயும் துண்டுபோட்டு வெப்போம்!" என்றால், நீங்கள் மாநில ஆட்சியைப் பிடிப்பது அதிசயமாக நடந்தாலும் நடக்கும்,
தமிழர் மனதில் இடம்பிடிப்பது நடக்காது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
Saturday, 5 August 2017
ஈ.வே.ரா வின் தாய்மொழி தெலுங்கா? கன்னடமா?
ஈ.வே.ரா வின் தாய்மொழி தெலுங்கா? கன்னடமா?
ஒருமுறை ஈ.வே.ரா பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு இறங்கும்போது ஈ.வே.ராவின் பக்தர் ஒருவர் பணம் கொடுத்து
(அதாவது ஈவேரா பெயர் வைக்க, சொற்பொழிவு ஆற்ற, புகைப்படம் எடுத்துக்கொள்ள என அனைத்திற்கும் தனக்கு இவ்வளவு என்று கட்டணம் அறிவித்திருந்தார்)
தனது குழந்தைக்கு பெயர்வைக்குமாறு கேட்டுள்ளார்.
பெயர் வைக்கும் முன் இது எத்தனையாவது குழந்தை என்று ஈவேரா கேட்டுள்ளார்.
அந்த நபர் ஏழாவது குழந்தை என்று கூறியுள்ளார்.
உடனே குழந்தைக்கு சாலம்மா (போதுமம்மா) என்று தன் தாய்மொழியான தெலுங்கில் பெயர் வைத்தார்.
சாலு(தெலுங்கு) = போதும்(தமிழ்).
Sunday, 11 June 2017
மொழிகளின் முதல் நூல்
மொழிகளின் முதல் நூல்
சிங்களத்தில் எழுதப்பட்ட முதல் நூல் 'சியபஸ்லகர' 1,000 ஆண்டுகள் பழமையானது.
தெலுங்கில் எழுதப்பட்ட முதல் நூல் 'மாபாரதம்' 1,000 ஆண்டுகள் பழமையானது.
கன்னடத்தில் எழுதப்பட்ட முதல் நூல் 'கவிராசமார்க்கம்' 1,170 ஆண்டுகள் பழமையானது.
தமிழில் எழுதப்பட்ட முதல் நூல் 'தொல்காப்பியம்' 4,100 ஆண்டுகள் பழமையானது.