Showing posts with label தாய்மொழி. Show all posts
Showing posts with label தாய்மொழி. Show all posts

Saturday, 5 August 2017

ஈ.வே.ரா வின் தாய்மொழி தெலுங்கா? கன்னடமா?

ஈ.வே.ரா வின் தாய்மொழி தெலுங்கா? கன்னடமா?

ஒருமுறை ஈ.வே.ரா பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு இறங்கும்போது ஈ.வே.ராவின் பக்தர் ஒருவர் பணம் கொடுத்து

(அதாவது ஈவேரா பெயர் வைக்க, சொற்பொழிவு ஆற்ற, புகைப்படம் எடுத்துக்கொள்ள என அனைத்திற்கும் தனக்கு இவ்வளவு என்று கட்டணம் அறிவித்திருந்தார்)

தனது குழந்தைக்கு பெயர்வைக்குமாறு கேட்டுள்ளார்.

பெயர் வைக்கும் முன் இது எத்தனையாவது குழந்தை என்று ஈவேரா கேட்டுள்ளார்.

அந்த நபர் ஏழாவது குழந்தை என்று கூறியுள்ளார்.

உடனே குழந்தைக்கு சாலம்மா (போதுமம்மா) என்று தன் தாய்மொழியான தெலுங்கில் பெயர் வைத்தார்.

சாலு(தெலுங்கு) = போதும்(தமிழ்).

Saturday, 5 March 2016

நம் மொழிப்பற்றுக்கு என்ன குறைச்சல்?

நம் மொழிப்பற்றுக்கு என்ன குறைச்சல்?

தமிழருக்கு மொழிப்பற்று இல்லை என்போருக்கு இந்த பதிவு.

1455ல் முதல் புத்தகம் அச்சிடப்பட்டது.
1554ல் போர்ச்சுகல் நாட்டில் இலத்தீன் எழுத்துகளில் தமிழ் வார்த்தைகள் அச்சிடப்பட்ட புத்தகம் வெளிவந்தது.
1578ல் முதல் தமிழ் புத்தகம் அச்சிடப்பட்டது (தம்பிரான் வணக்கம்).

1860களில் ஆங்கில தட்டச்சு வந்தது.
1930களில் தமிழின் 247 எழுத்துகளை பல்வேறு ஆய்வுகள் செய்து சுருக்கி 72 விசைகளில் கொண்டுவந்தார் ஈழத்தமிழரான ஆர்.முத்தையா.
ஜெர்மானிய நிறுவனத்தின் மூலம் தட்டச்சு இயந்திரத்தை தயாரித்து விற்பனையும் செய்தார்.

1970களில் கணினியின் காலம் தொடங்கிய போது
கனடாவில் 1984ல் முதல் தமிழ் மென்பொருளை உருவாக்கினார் முனைவர் ஸ்ரீநிவாசன்.
1985லேயே பெரும்பாடு பட்டு தமிழ் எழுதும் மென்பொருளை (முரசு அஞ்சல்) உருவாக்கினார் மலேசியத் தமிழர் முத்து நெடுமாறன்.

1990களில் மின்னஞ்சல் காலம் தொடங்கியது
1995ல் ஆஸ்திரேலியாவில் பாலா பிள்ளை என்பவர் முதல் தமிழ் இணையதள (மின்மடல்)குழுவை உருவாக்கினார்.

இன்று இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் முதல் ஐந்து மொழிகளில் தமிழும் ஒன்று.

இது சில தனிப்பட்ட தமிழரின் முயற்சி.
இனி ஒட்டுமொத்த தமிழ் மக்களின் செயல்பாட்டைப் பார்ப்போம்.

2000களில் கைபேசிகளின் காலம் தொடங்குகிறது.
கைபேசிகளில் தமிழ் எழுத்துரு காட்டும் தொழில்நுட்பம் வரவில்லை.

இந்த நிலையில் தமிழ்மக்களின் செயல்பாட்டை, முதன்முதலில் கைபேசிகளில் தமிழைக் கொண்டுவந்த ஓபரா நிறுவனத் தலைவர் அளித்த பேட்டியில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

"இணைய வசதி கொண்ட ‘ஓபரா மினி’யை அறிமுகப்படுத்தியபோது
தமிழர்கள் பல முனைகளில் இருந்தும் எங்களை தொடர்பு கொண்டார்கள்.
இந்தியா, இலங்கை மட்டுமல்ல, உலகின் பல மூலைகளில் இருந்தும் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினார்கள்.
தமிழ் மொழியை தங்கள் அலைபேசிகளில் சரியாக பார்க்கமுடியவில்லை, ஏதாவது செய்ய முடியுமா என்பதுதான் அவர்களின் ஒரே கோரிக்கை//

//OBML என்ற வசதியை கொடுத்தோம்.
நன்றி சொல்லி வந்த ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களுக்கு பதில் கடிதம் அனுப்ப ஒருவரை தனியாக நியமித்தோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்//

//மற்ற எல்லா மொழிகளை விட யுனிகோடு வசதியை முதன் முதலில் பெற்றது தமிழ் மொழிதான். 
தமிழர்கள் தங்களுடைய மொழி மீதும்,
அந்த மொழியை நவீன ஊடகங்களுக்கு கொண்டு செல்லவேண்டும் என்று மெனக்கெடுவதையும் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது//

//தமிழக அரசு தரப்பில் இருந்து எங்களை இன்னும் தொடர்பு கொள்ளவில்லை.
அழைத்தால் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்"

அதாவது தமிழ்மொழி வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.
தமிழனம் தான் வாழ வழியில்லாமல் போய்விட்டது

மொழியை வாழவைக்க இனம் வலிமையாக இருக்கவேண்டும்.
இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் கூறுகிறேன்.

1991ல் பிப்ரவரி 21ம் நாளை உலகத் தாய்மொழி நாள் என்று ஐ.நா அறிவித்தது.

இது எதனால் என்றால் 1952ல் வங்கமொழி பேசும் கிழக்குப் பாகிஸ்தான் (தற்போதைய பங்களாதேஷ்) உருது மொழித் திணிப்பை எதிர்த்து நடத்திய பெரிய போராட்டத்தில் பிப்ரவரி 21 அன்று 11 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.

ஆனால் தமிழினம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் 1939லேயே இரு மரணங்களையும்
1965ல் கிட்டத்தட்ட 300 மரணங்களையும் சந்தித்துள்ளது.
1982ல் கூட கர்நாடக மாநிலம் ஆக்கிரமிதாதுள்ள தமிழர் பகுதிகளில் தமிழ் கல்விக்காகப் போராடிய 19 தமிழர்கள் கர்நாடகா அரசால்  கொல்லப்பட்டனர்.

உலகிலேயே மொழிக்காக போராட்டம் நடத்திய முதல் இனம் தாய்மொழிக்காக இத்தனை உயிர் இழப்புகளை சந்தித்த முதல் இனம் நாம்தான்.

அதற்கான அங்கீகாரம் ஏன் நமக்கு கிடைக்கவில்லை என்றால் வங்காளியிடம் ஒரு நாடு இருந்தது.
அதனால் ஐ.நா வரை குரல் எழுப்பமுடிகிறது.

ஹிந்தியாவில் ஒட்டுக்குடித்தனம் போடும் நம்மால் என்ன செய்யமுடியும்?

Sunday, 7 December 2014

தமிழகம் இழந்த பகுதிகள் -3

விவகாரங்களிலாவத
ு அரசியல் கட்சிகள் சில
போராட்டங்களை நடத்தின.
அறிக்கைகள் விட்டன. ஆனால், கர்நாடகாவிடம்
நாம்
இழந்தது என்பது தூக்கத்தில் திருட்டுக்
கொடுத்ததற்கு சமம்.
காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்றால்,
குடகு மலை என்று எல்லோருக்கும் தெரியும்.
பழந்தமிழில் குடக்கு என்றால்,
மேற்கு என்று பொருள்.
அங்கு வாழும் மக்கள் பேசும் மொழி கூர்க்
மொழி.
சுமார்முக்கால்
நூற்றாண்டுக்கு முன்புவரை கன்னடர்களும்
கூர்க்
மக்களும் அரசியல் ரீதியாக விரோதம் பாராட்டிக்
கொண்டிருந்தார்கள். அதனால்,
மொழிவாரி மாநிலப்
பிரிவினையின்போது இந்த கூர்க் மக்கள்,
‘நாங்கள்
எங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தின்
அடிப்படையாக
இருக்கும்
தமிழ்நாட்டோடு இணைந்து விடுகிறோம்’
என்று சொன்னார்கள். அதற்காக அந்த மக்கள்,
கன்னடர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி சிறிய
அளவில்
போராடியதுகூட உண்டு. நாம் சற்றே கண்
காட்டி இருந்தால்கூட அவர்கள்
ஓடி வந்து ஒட்டிக்
கொண்டிருப்பார்கள்.
அப்படி தமிழகத்தோடு இணைந்து இருந்தால்,
காவிரித்தாய் ‘தமிழகத்திலேயே’ உற்பத்தியாகி,
தமிழகத்திலேயே கடலில் கலந்திருப்பாள்.
நமக்கு காவிரிப் பிரச்சினையே வந்திருக்காது.
தமிழகத்தின் நெற்களஞ்சியம் பதராகி இருக்காது.
கன்னடர்கள் திட்டமிட்டுப் போராடியதால்
முறைப்படி தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய
பெங்களூரு,
மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி, கோலார்
தங்கவயல்
பகுதிகள் கர்நாடகாவுக்குப் போயின.
பெங்களூரைத் தங்கள் வசமாக்கிக்கொள்ள
கர்நாடகத்தினர்
காய் நகர்த்திய விதம், அவர்கள்
எவ்வளவு புத்திசாலிகள் என்பதைக்
காட்டுகிறது.
ஒரு மாநிலத்துடன் ஒரு பகுதி இணைக்கப்பட
வேண்டும்
என்றால் முதலில் நிலத் தொடர்பு,
அடுத்து மொழித்
தொடர்பு இருக்க வேண்டும் என்பது விதி.
ஓசூரில்
அப்போது தெலுங்கு பேசுவோர் 39
சதவிகிதமும்
அடுத்து, கன்னடம் பேசுவோர் 35 சதவிகிதமும்
இருந்தனர். தெலுங்கு பேசும் மக்களே அதிகம்
இருந்தாலும்
ஆந்திராவோடு நிலத்தொடர்பு இல்லை என்ற
காரணத்தால், அதை ஆந்திரா கைவிட்டது.
அன்று அது வறண்ட
பூமி என்பது வெளியே சொல்லப்படாத
காரணம். ஆந்திராவோடு அது இணைக்கப்படாத
பட்சத்தில்
கன்னடம் பேசுவோர் அதிகம் இருந்ததால்,
அதை கர்நாடகாவோடுதான் இணைத்திருக்க
வேண்டும்.
ஆனால்-
பெங்களூரு விவகாரம் வந்தபோது, கன்னட
மக்கள் அதிகம்
இருந்தாலும் நாங்கள் ஓசூரை தமிழகத்துக்குக்
தந்துவிட்டோம். அதற்குப் பதிலாக கன்னடம்
பேசும்
மக்களை விட தமிழ் பேசும் மக்கள் அதிகம்
இருந்தாலும்
நாங்கள் பெங்களூரை எடுத்துக்கொள்கிறோம்
என்று கோரிக்கை வைத்தது கர்நாடகா.
தமிழகம் அதற்கு உரிமையான
நிலப்பகுதிகளை இழந்ததற்கு, தமிழகத்தில்
அன்று நிலவிய மண் சார்ந்த உணர்வு இல்லாத-
வாய்ச்சவடால் அரசியல்தான் காரணம்.
இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609
சதுர
கிலோமீட்டர்கள் தமிழகம்
அண்டை மாநிலங்களிடம் இழந்த
நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர
கிலோமீட்டர்கள். இவையும்
நம்மோடு இருந்திருந்தால்
தமிழகம், கர்நாடகாவைவிட இன்னும் பெரிய
மாநிலமாக
இருந்திருக்கும். அப்போதும் ஆந்திராவைவிட
சற்று சிறிய மாநிலமாக இருந்திருக்கும்
என்றாலும்கூட, தமிழகமே மற்ற தென்னிந்திய
மாநிலங்களைவிட வளமான மாநிலமாக
இருந்திருக்கும்
நன்றி: அசுஆ சுந்தர் (Asa sundar)

Thursday, 10 July 2014

பிறமொழியும் வளர்த்த "தமிழர்".

பிறமொழியும் வளர்த்த "தமிழர்". மலையாள மகாகவி 'உள்ளூர் பரமேசுவர ஐயர்'. கன்னட மொழியறிஞர்கள் 'கைலாசம்' மற்றும் 'மாஸ்தி வெங்கடேச ஐயங்கார்'. நன்றி: இளைஞர்மலர் 5-7-14 https://m.facebook.com/photo.php?fbid=464087290361596&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739