Showing posts with label இந்தி எதிர்ப்பு. Show all posts
Showing posts with label இந்தி எதிர்ப்பு. Show all posts

Friday, 17 June 2016

இந்தியை எதிர்த்தாரா ஈ.வே.ரா?

இந்தியை எதிர்த்தாரா ஈ.வே.ரா?

1965-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மாணவர்களின்ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பெரியார்ஈ.வெ.ரா. அவர்கள்
3.3.1965-ல் "விடுதலை" இதழின்தலையங்கத்தில்
"இந்தி விஷயத்தில்நீதானே எதிர்ப்பு உண்டாக்கினாய்.
இப்போது இந்திக்கு அடிமையாகி விட்டாயே
என்று பலவாறாகஎனக்கு வசவு கடிதம் (மிரட்டல் கடிதம்)எழுதி வருகிறார்கள்,
நேரிலும் கேட்டார்கள்.

எனது நண்பர்கள் பலரும் இதே கருத்துக்"கொண்டிருக்கிறார்கள்"
என்றும்,

"தமிழ்கெட்டு விடுமே என்கின்ற எண்ணத்தில் நான்இந்தியை எதிர்க்கவில்லை.
தமிழ்கெடுவதற்கு தமிழில் எதுவும் மீதி இல்லை.
புலவர்களே தமிழைக் கெடுத்துவிட்டார்கள்"
என்றும்,

"காமராஜர் ஆட்சி அவசியமா?
இந்தி ஒழியவேண்டியது அவசியமா?என்று என்னை யாராவது கேட்டால் காமராஜர்ஆட்சிதான் அவசியம் என்று பலமாகச் சொல்வேன்"
என்றும்,

8.3.1965-ல் "விடுதலை" இதழின்தலையங்கத்தில்
"தமிழ் நூல்களே அதிக கேடுபயப்பவை.
தமிழில் படிக்கும் கம்பராமாயணத்தால் ஏற்பட்ட,ஏற்படும் முட்டாள்தனமும், கேடும்
இந்தி படிக்கும்துளசிதாஸ் ராமாயணத்தாலோ, வங்காள ராமாயணத்தாலோ,வால்மீகி ராமாயணத்தாலோ ஏற்படாது என்பது உறுதி"
என்றும்

அவரது கையொப்பமிட்டு வெளியிட்டிருக்கிறார்.

சரி 1965ல் இப்படி என்றால் அதற்கு முன்பு ஈ.வே.ரா இந்தியைக் கடுமையாக எதிர்த்தாரா?

இல்லவே இல்லை.

"ஹிந்தி இருக்கட்டும்,
இந்தி வேண்டவே வேண்டாம் என்பதல்ல எங்கள் கொள்கை.
அதைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்று நாங்கள் சொல்லுகிறோம்.
சில காரியத்திற்காக இந்தியைக் கட்டாயமாக்க வேண்டுமானாலும் கட்டாயமாக்குங்கள்.
ஆனால் குழந்தைகளுக்கு வேண்டாம்.

பெரியவர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு வேண்டுமானால் இருக்கட்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்"
'விடுதலை'(07.10.1948).

சங்கம் வைத்து இந்தி வளர்த்த ஈ.வே.ரா

சங்கம் வைத்து இந்தி *(!)*
!!!!!!!!!!!!!!!??????????!!!!!!!!!!!!!!

ஈ.வெ.ராமசாமி நாயக்கர்தான்
தென்னாட்டில் முதன்முதலில்
ஹிந்திக்கு வித்திட்டவர்.

இவர் 1922-ல்
ஈரோட்டில் ஹிந்திப்பள்ளி ஒன்றை ஆரம்பிக்க
இலவசமாக இடம்
கொடுத்தார்.

"திரு.வி.க.வின் வாழ்க்கைக்
குறிப்புகள்" என்ற நூலில் பக்கம் 436ல்

"இராமசாமி நாயக்கர் காங்கிரசில்
தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால்
ஈரோட்டில்
ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது.
திறப்பு விழாவுக்கு யானுஞ்
சென்றிருந்தேன்.
தென்னாட்டில்
ஹிந்திக்கு விதை இட்டவர் நாயக்கரே"
என்று திரு.வி.க. அவர்கள்
எழுதியுள்ளார்.

1917-ஆம் ஆண்டிலிருந்து 1925-ஆம்
ஆண்டுவரை பிராமணர்களின் தாசனாக விளங்கி வந்தார் (ஏமாற்றுவதில்)பெரியார்.

( 2013 ஜூலை )

Sunday, 1 May 2016

இந்தியை வென்ற ஈழத்தமிழர்

இந்தியை வென்ற ஈழத்தமிழர்

%€%€%€%€%€%€%€%€%€%€%€

நூலின் பெயர்:
"இந்தி எதிர்ப்பு: அன்றும் -இன்றும்".

ஆசிரியர்:
"ஈழத்தடிகள்".

1938ஆம் ஆண்டு இராசாசி அரசின் பள்ளிகளில் கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து காவியுடை தரித்த சிவானந்த அடிகள், அருணகிரி அடிகள், சண்முகானந்த அடிகள் எனும் மூன்று சாமியார்கள் போர்க்கோலம் பூண்டனர்.

கையிலே கமண்டலம், உடையிலே காவி நிறம், கழுத்திலே உத்திராட்சம் எனும் தோற்றத்தோடு தமிழ் மொழி காக்கும் போரில் ஈடுபட்ட மும்மூர்த்திகளில் ஒருவர் தான் சிவானந்த அடிகள்.

இவர் ஈழத்திலிருந்து வந்தவர் என்பதால் ஈழத்தடிகள் எனும் பெயருமுண்டு.
கரூரில் அறிவுதயக் கழகம் நிறுவி தமிழ்த்தொண்டு புரிந்து வந்தார்.

இராசாசி பதவிக்கு வருமுன்னே இந்தி கொண்டுவரப்படும் என்று அறிவித்த போது அதனைக் கண்டித்து 12.2.1937இல் இராசாசிக்கு எதிராக அறிக்கை விடுத்த முதல் ஆள் ஈழத்தடிகள்.

இராசாசி முதல்வரான பிறகு அவருக்கு முதல் தந்தி அடித்து இந்தி எதிர்ப்புப் போரை தொடங்கி வைத்தவரும் அவர் தான்.

இந்தி எதிர்ப்புப் போரில் முதல் சர்வாதிகாரியாக சிறைக்களம் சென்றவராகிய ஈழத்தடிகள் தான்
மேற்படி நூலில் ஈ.வே.ரா மீதும், அண்ணா மீதும் கடும் குற்றச்சாட்டுகள் கூறியுள்ளார்.

இந்தி எதிர்ப்பு மாநாடுகள், கூட்டங்கள் நடத்தியும் இராசாசி அரசு பணிய மறுத்த காரணத்தால்
அடுத்த கட்டமாக 1.6.1938 அன்று சட்டமன்றம், இராசாசி இல்லம் முற்றுகை போன்ற போராட்டங்களை நடத்துவதற்கு ஈழத்தடிகள் முடிவு செய்தார்.
அதற்கான அறிக்கையொன்றை தயார் செய்து ஈ.வே.ரா விடம் கொண்டு சென்றுள்ளார்.

இது குறித்து அந்நூலில் பின் வருமாறு கூறுகிறார்:
" அங்கே பெரியார் இராமசாமி அவர்களிடம் இந்த அறிக்கையைக் காட்டி இதனை விடுதலை, குடியரசு ஆகிய இதழ்களில் வெளியிட்டு உதவுமாறு கேட்டுக் கொண்டேன்.
இந்த அறிக்கையை பார்த்து விட்டு,
'இது காங்கிரசார் கையாளும் சண்டித்தனம்.
சத்தியாக்கிரகம் மறியல் என்பதெல்லாம் வெறுங் கேலிக்கூத்து'
என்று கூறி அந்த அறிக்கையை வெளியிட மறுத்து விட்டார்."

அதன் பிறகு ஈழத்தடிகள் தனது ஈரோடு நண்பர் சண்முக வேலாயுதம் என்பவரின் உதவி மூலம் அறிக்கையை அச்சிட்டு,
தமிழ்நாடெங்கும் தமிழ்அன்பர்களுக்கு அனுப்பி வைத்தார்.
ஈழத்தடிகள் வேண்டுகோளுக்கிணங்க,
சென்னையில் உள்ள முதலமைச்சர் இல்லம் முன்பு மறியல் செய்வதற்காக அதன் அருகிலேயே சி.டி.நாயகம் என்பவர் தனது சொந்த இடத்தில் மறியல் வீரர்களுக்கான பந்தல் அமைத்து கொடுத்தார்.

மறியல் நாள் நெருங்கிடவே விருதுநகர், அருப்புக்கோட்டை பகுதிகளிலிருந்து 120க்கும் மேற்பட்டோர் வந்து குவிந்தனர்.
அப்போது மறியல் நடந்து கொண்டிருந்த நாளில் மறியல் பந்தலுக்கு ஈ.வே.ரா வந்து பேசியது என்ன என்று நூலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது
"மறியல் தொடங்கிய மூன்றாம் நாள் 60 பேர் வரை மறியலில் ஈடுபட்டுச் சிறை சென்ற பின்,
பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்கள் தாமாகவே இந்தி எதிர்ப்பு நிலையத்துக்கு வந்து,
மறியல் செய்வதற்காக வந்திருந்த தொண்டர்களை நோக்கி,
'இப்படி மறியல் செய்வது காங்கிரசார் மேற்கொள்ளும் பயன் தராத முறையாகும்- சண்டித்தனமாகும்.
இதில் நீங்கள் ஈடுபட வேண்டியதில்லை'
என்ற பழைய பல்லவியை மீண்டும் கூறியதோடு,
வந்தவர்கள் தங்கள் தங்கள் ஊருக்குப் போவதற்கு வழிச் செலவும் தருவதாகக் கூறினார்.

அந்தச் சமயத்தில், நானும் மற்றவர்களும் அவரை அனுகி,
'ஐயா, இதில் நீங்கள் தலையிடாமல் இருப்பது, தமிழ் மொழியைக் காப்பாற்றச் செய்யும் ஒரு பேருதவியாகும்' என்று கூறவே,
அவரும் மறுமொழி ஒன்றும் கூறாமல், திரு.சி.டி. நாயகம் அவர்கள் இல்லத்திற்குச் சென்று விட்டார்."

அங்கு ஈ.வே.ராவிடம் உண்மை நிலையை சி.டி.நாயகம் விளக்கிக் கூறிய பிறகே இந்தி எதிர்ப்பு பணியில் ஈ.வே.ரா ஈடுபடத் தொடங்கியதாக ஈழத்தடிகள் குறிப்பிட்டு விட்டு,

மேலும் கூறுகிறார்:
"இந்த நிலையில் இந்தி எதிர்ப்பைத் தோற்றுவித்த நானும் மற்ற இரு துறவிகளான அருணகிரி அடிகளும், சண்முகானந்த அடிகளும் சிறை சென்று விடவே, படிப்படியாக இந்தி எதிர்ப்பு அறப்போரைப் பெரியார் இராமசாமி அவர்களே ஏற்று நடத்தும் நிலை உருவாகியது,
எல்லாம் அவருடைய விருப்பப்படி நடைபெற்று வந்தது.
இதன் விளைவு,
பிறகு, இந்தி எதிர்ப்புக்குப் பெரியார் இராமசாமி அவர்கள் தான் முதல்வர் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
இது ஒரு பித்தலாட்டமும் கொடுமையுமாகும்.
வரலாற்றுண்மை வாய்ந்ததும், தந்நலமற்றதுமான இந்தி எதிர்ப்பு நிகழ்ச்சி,
பெரியார் இராமசாமி அவர்களின் தலையீட்டால்-
கறையான் புற்றெடுக்கப் பாம்புகுடி கொண்ட கதையாகி விட்டது.
செயலுக்கு ஒருவனும், அந்தச் செயலால் புகழ் பெற இன்னொருவனும் என்ற நிலை ஏற்படுவதென்றால்,
அது தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் உண்டாக்கப்படும் ஒரு மறைக்க முடியாத களங்கமாகும்"
என்று வேதனையோடு குறிப்பிடுகிறார்.

இராசாசி ஹிந்தி திணிப்பை கைவிடாத நிலையில் பதவி விலகிய போது,
ஈ.வே.ராவும் இந்தி எதிர்ப்பை தற்காலிகமாக நிறுத்தி விடுகிறார்.

அது குறித்து பெரியார் தந்த பதிலை நூலாசிரியர் குறிப்பிடுகிறார்:

"நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி, காங்கிரசு மந்திரிகளுக்குத் தொல்லை கொடுக்க வேண்டுமென்பதற்காக நான் அது போல் பயன் படுத்திக் கொண்டேனே யொழிய,
உண்மையிலேயே எனக்கு இந்தி கட்டாயமாக்கப் படுவதைப் பற்றியோ, அதனால் தமிழ் அழிந்து விடும் என்பது பற்றியோ கவலையில்லை என்று கூறினார்."

பெரியாருக்கு இந்தி எதிர்ப்பு கிளர்ச்சியை நிறுத்த உரிமையில்லை என்றும்,
ஆளுநர் மாளிகை முற்றுகைப் போர் தொடங்கப்படும் என்று ஈழத்தடிகள் 4.11.39ல் அறிக்கை விடுத்த பிறகே கட்டாய இந்தி ஆணை நீக்கப்பட்டது.
இதுவே உண்மை வரலாறாகும்.

சிலர் இந்தி எதிர்ப்பில்  முதன்முதலாக சிறைசென்றவர் சி.டி.நாயகம் என்று கூறுகின்றனர்.
அதை மறுக்க மேலும் சான்றுகள் தரமுடியும்.

அண்ணா பரிமளம் தொகுத்த 'அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு' பகுதி 16இல் "சாமியார் ஆசாமியானார்" தலைப்பில் பின்வருமாறு:

1938இல் இந்தியை கட்டாயப் பாடமாக்குவேன் என்று அறிக்கைவிட்டபோது அதனை எதிர்த்து ஆச்சாரியாருக்கு முதல் தந்தி அடித்தவர் ஈழத்து சிவானந்த அடிகளேயாவார்கள்.
இந்தி எதிர்ப்பு இயக்கத்தை அவர் தான் துவக்கினார்.
பிறகு தான் நாவலர் பாரதியார், பெரியார் இராமசாமி, அறிஞர் அண்ணா போன்றவர்கள் கலந்து கொண்டார்கள்.
ஈழத்து சிவானந்த அடிகள் இந்தி எதிர்ப்பின் முதல் சர்வாதிகாரியாக சிறை புகுந்தார். (மன்றம் 1.5.1955).

சி.டி.நாயகம் முதல் சர்வாதிகாரியாக 20.11.38 வரை இல்லை என்பதை பெரியாரின் குடியரசு தெரிவிக்கிறது.
தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு 13.11.38 அன்று ஒற்றை வாடை கொட்டகையில் நீலாம்பிகை அம்மையார் தலைமையில் நடைபெற்றது.
அந்த மாநாட்டில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதில் 10வது தீர்மானம்:
இந்தியை எதிர்த்து சிறை சென்ற ஈழத்து சிவானந்த அடிகள், அருணகிரி சுவாமிகள், சி.அண்ணாதுரை எம்.ஏ. உள்ளிட்ட பெரியார்களையும் தொண்டர்களையும் பாராட்டுகிறது.

12வது தீர்மானம்: தோழர்கள் சண்முகானந்த அடிகளும், சி.டி.நாயகமும் சிறை செல்வதை இம்மாநாடு பாராட்டுகிறது.
(குடியரசு 20.11.1938)

மேற்கண்ட தீர்மானங்களின் படி ஈழத்தடிகள் சிறையில் இருப்பதையும்,
சி.டி.நாயகம் சிறைக்கு செல்லவிருப்பதையும் உறுதிப்படுத்துகிறது.
இதன்படி பார்த்தால் முதல் சிறைசென்ற சர்வாதிகாரி ஈழத்தடிகளே ஆவார்கள்.

நன்றி: கதிர்நிலவன்

Saturday, 5 March 2016

நம் மொழிப்பற்றுக்கு என்ன குறைச்சல்?

நம் மொழிப்பற்றுக்கு என்ன குறைச்சல்?

தமிழருக்கு மொழிப்பற்று இல்லை என்போருக்கு இந்த பதிவு.

1455ல் முதல் புத்தகம் அச்சிடப்பட்டது.
1554ல் போர்ச்சுகல் நாட்டில் இலத்தீன் எழுத்துகளில் தமிழ் வார்த்தைகள் அச்சிடப்பட்ட புத்தகம் வெளிவந்தது.
1578ல் முதல் தமிழ் புத்தகம் அச்சிடப்பட்டது (தம்பிரான் வணக்கம்).

1860களில் ஆங்கில தட்டச்சு வந்தது.
1930களில் தமிழின் 247 எழுத்துகளை பல்வேறு ஆய்வுகள் செய்து சுருக்கி 72 விசைகளில் கொண்டுவந்தார் ஈழத்தமிழரான ஆர்.முத்தையா.
ஜெர்மானிய நிறுவனத்தின் மூலம் தட்டச்சு இயந்திரத்தை தயாரித்து விற்பனையும் செய்தார்.

1970களில் கணினியின் காலம் தொடங்கிய போது
கனடாவில் 1984ல் முதல் தமிழ் மென்பொருளை உருவாக்கினார் முனைவர் ஸ்ரீநிவாசன்.
1985லேயே பெரும்பாடு பட்டு தமிழ் எழுதும் மென்பொருளை (முரசு அஞ்சல்) உருவாக்கினார் மலேசியத் தமிழர் முத்து நெடுமாறன்.

1990களில் மின்னஞ்சல் காலம் தொடங்கியது
1995ல் ஆஸ்திரேலியாவில் பாலா பிள்ளை என்பவர் முதல் தமிழ் இணையதள (மின்மடல்)குழுவை உருவாக்கினார்.

இன்று இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் முதல் ஐந்து மொழிகளில் தமிழும் ஒன்று.

இது சில தனிப்பட்ட தமிழரின் முயற்சி.
இனி ஒட்டுமொத்த தமிழ் மக்களின் செயல்பாட்டைப் பார்ப்போம்.

2000களில் கைபேசிகளின் காலம் தொடங்குகிறது.
கைபேசிகளில் தமிழ் எழுத்துரு காட்டும் தொழில்நுட்பம் வரவில்லை.

இந்த நிலையில் தமிழ்மக்களின் செயல்பாட்டை, முதன்முதலில் கைபேசிகளில் தமிழைக் கொண்டுவந்த ஓபரா நிறுவனத் தலைவர் அளித்த பேட்டியில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

"இணைய வசதி கொண்ட ‘ஓபரா மினி’யை அறிமுகப்படுத்தியபோது
தமிழர்கள் பல முனைகளில் இருந்தும் எங்களை தொடர்பு கொண்டார்கள்.
இந்தியா, இலங்கை மட்டுமல்ல, உலகின் பல மூலைகளில் இருந்தும் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினார்கள்.
தமிழ் மொழியை தங்கள் அலைபேசிகளில் சரியாக பார்க்கமுடியவில்லை, ஏதாவது செய்ய முடியுமா என்பதுதான் அவர்களின் ஒரே கோரிக்கை//

//OBML என்ற வசதியை கொடுத்தோம்.
நன்றி சொல்லி வந்த ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களுக்கு பதில் கடிதம் அனுப்ப ஒருவரை தனியாக நியமித்தோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்//

//மற்ற எல்லா மொழிகளை விட யுனிகோடு வசதியை முதன் முதலில் பெற்றது தமிழ் மொழிதான். 
தமிழர்கள் தங்களுடைய மொழி மீதும்,
அந்த மொழியை நவீன ஊடகங்களுக்கு கொண்டு செல்லவேண்டும் என்று மெனக்கெடுவதையும் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது//

//தமிழக அரசு தரப்பில் இருந்து எங்களை இன்னும் தொடர்பு கொள்ளவில்லை.
அழைத்தால் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்"

அதாவது தமிழ்மொழி வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.
தமிழனம் தான் வாழ வழியில்லாமல் போய்விட்டது

மொழியை வாழவைக்க இனம் வலிமையாக இருக்கவேண்டும்.
இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் கூறுகிறேன்.

1991ல் பிப்ரவரி 21ம் நாளை உலகத் தாய்மொழி நாள் என்று ஐ.நா அறிவித்தது.

இது எதனால் என்றால் 1952ல் வங்கமொழி பேசும் கிழக்குப் பாகிஸ்தான் (தற்போதைய பங்களாதேஷ்) உருது மொழித் திணிப்பை எதிர்த்து நடத்திய பெரிய போராட்டத்தில் பிப்ரவரி 21 அன்று 11 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.

ஆனால் தமிழினம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் 1939லேயே இரு மரணங்களையும்
1965ல் கிட்டத்தட்ட 300 மரணங்களையும் சந்தித்துள்ளது.
1982ல் கூட கர்நாடக மாநிலம் ஆக்கிரமிதாதுள்ள தமிழர் பகுதிகளில் தமிழ் கல்விக்காகப் போராடிய 19 தமிழர்கள் கர்நாடகா அரசால்  கொல்லப்பட்டனர்.

உலகிலேயே மொழிக்காக போராட்டம் நடத்திய முதல் இனம் தாய்மொழிக்காக இத்தனை உயிர் இழப்புகளை சந்தித்த முதல் இனம் நாம்தான்.

அதற்கான அங்கீகாரம் ஏன் நமக்கு கிடைக்கவில்லை என்றால் வங்காளியிடம் ஒரு நாடு இருந்தது.
அதனால் ஐ.நா வரை குரல் எழுப்பமுடிகிறது.

ஹிந்தியாவில் ஒட்டுக்குடித்தனம் போடும் நம்மால் என்ன செய்யமுடியும்?

Thursday, 14 January 2016

ஈவேரா ஒரு ஆண்-வேசி

ஈவேரா ஒரு ஆண்-வேசி
__________________________________
நிருபர்: தமிழ் தாலுகாக்கள் (1).தேவிகுளம்,
(2).பீர்மேடு, (3).நெய்யாத்தங்கரை, (4). கொச்சின்
சித்தூர் ஆகிய தாலுக்காக்கள் மலையா ளத்துடன்
சேர்ந்து விட்டதே! இது பற்றி உங்கள் கருத் தென்ன?
ஈ.வெ.ரா: இது பற்றி எனக்குக் கவலை இல்லை.
மலையாளத் துடன் அவைகளைச் சேர்க்க வேண்டியது தான்.
நிருபர்: கவலையில்லை என்கிறீர் கள். அவைகள் தமிழ்
தாலுகாக்கள் தானே!
ஈ.வெ.ரா: ஆமாம். சமீபத்தில் சென்னைக்கு சர்தார்
பணிக்கர் (மொழி வாரி மாகாணக் கமிட்டி மெம்பர்)
வந்திருந்தார். அவரை நான் சந்தித்துப் பேசினேன்.
‘தொழிலுக்காக தமிழர்கள் அங்கு வந்தார்களே தவிர
நிலம் மலையாளத்தைத்தான் சேர்ந்தது’ என்று பணிக்கர்
சொன்னார். நானும் ’சரி’ என்று சொல்லிவிட்டேன்.
இவ்வாறு ஈ.வெ.ரா. கூறி முடித்தார்.
திருச்சியிலுள்ள பெரியார் மாளிகையில் இந்தப்
பேட்டி நடந்தது. (தினத்தந்தி 11.10.1955)

நேர்காணலை நடத்தியோர் சாவி மற்றும், மணியன்.
அது வருமாறு:
சாவி: அந்தக் காலத்துலே இந்தியை எதிர்த்துப்
போராட்ட மெல்லாம் நடத்தினீர்களே, இப்ப ஏன்
சும்மா இருக்கீங்க?
பெரியார்: அப்படியா? மன்னிக் கணும்; இப்ப
இந்தி எங்கே இருக்குது? தெரியாமத்தான்
கேக்குறேன். சொல்லுங்கோ?
சாவி: இந்தி தான் ஆட்சி மொழியா வந்துட்டுதே..
பெரியார்: எங்கே வந்துட்டுது? உனக்குத்தான்
இங்கிலிஷ் இருக்குதே.
இந்தியா ஒண்ணா இருக்கணும்னா பொதுவா ஒரு ஆட்சிமொழி வேணும்தானே?
இந்திக்காரன் உங்க
மாதிரி இங்கிலீஷை நினைக்கல்லையே. இங்கிலீஷ்
அவமானம்னு நினைக்கிறானே. தமிழ்நாட்டுக் காரன்
சொல்றபடி இந்தியா நடக்குமா?
அது ஜனநாயகமா?
- ஆனந்தவிகடன் 11.4.1965

Wednesday, 15 July 2015

காயிலே மில்லத் மட்டுமா? கிருஷ்ணமாச்சாரியும்தான்

காயிலே மில்லத் மட்டுமா?
கிருஷ்ணமாச்சாரியும்தான்

We disliked the English language in the past.
I disliked it
because I was forced to learn
Shakespeare and Milton,
for which I had no taste at all.

If we are going to be compelled to learn Hindi,
I would perhaps not be able to learn it because of my age,
and perhaps I would not be willing to do it because of the amount of constraint you put on me.

This kind of intolerance makes us fear that the strong Centre which we need, a strong Centre which is necessary
will also mean the enslavement of people who do not speak the language at the centre.

I would, Sir, convey a warning on behalf of people of the South for the reason that there are already elements in South India who want separation...,

and my honourable friends in U.P do not help us in any way by flogging their idea of "Hindi Imperialism" to the maximum extent possible.

So, it is up to my friends in Uttar Pradesh to have a whole India;
it is up to them to have a Hindi-India.
The choice is theirs.

Sunday, 7 December 2014

ஹிந்தியும் ஆங்கிலமும்

இந்தி படிக்க
பொன்.ராதாக்ருஷ்ணன் வலியுறுத்தல்.

நேரே யூட்யூப் செல்லுங்கள்.
தற்போதைய ஹிந்திபடம் முன்னணி நட்சத்திரங்கள் நடித்ததாக ஒன்றை தரவிறக்கிப் பாருங்கள்.

உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமென்றால் படம் அப்படியே புரியும்.

நமக்கு ஆங்கிலமொழி முதலாளி என்றால்
ஹிந்தி பேசுபவனுக்கு அம்மொழி கடவுள்.
ஆங்கிலம் பேசினால் காலிலேயே விழுந்துவிடுவான்.

ஹிந்தியாவிலேயே ஹிந்தி கற்பிக்காத ஒரே மாநிலம் தமிழகம்.

முன்பு ஹிந்திபடிக்காவிட்டால் ஹிந்தியாவில் மாநிலம்தாண்டி வேலைகிடைக்காது என்றார்கள்.
இன்று ஹிந்தியன் தமிழகத்துக்கு பிழைக்கவரும் நிலை.
இப்போது ஹிந்தி படிக்காவிட்டால் அவனை வைத்து வேலைவாங்கமுடியாது என்று கூறுகிறார்கள்.

இன்று ஹிந்தியா மார்தட்டிவரும் சந்திராயனை ஏவிய குழுவில் 8ல் மூவர் தமிழர்.
தமிழன் அறிவுவேண்டும் ஆனால் அது இந்தியில் இருக்கவேண்டுமா?

தன்மொழி மீது பற்றில்லாமல் இந்திவழிக் கல்வியில் படிக்கும் ஹிந்தியன்,
வரலாறு தெரியாமல் செத்தமொழியான சமஸ்க்ருத மொழியை இன்னமும் பள்ளிகளில் சொல்லிக்கொடுக்கும் ஹிந்தியன்,
மெத்தப் படித்தவன்தான் ஆங்கிலம் பேசமுடியும் என்ற அளவுக்கு ஹிந்தியை பரவவிட்ட ஹிந்தியன்,
தன்மொழி கலை இலக்கியங்களை குழிதோண்டி மூடிவிட்டு ஹிந்திப் படங்களையே கலையாக பார்க்கும் ஹிந்தியன்,
சே குவேரா என்றால் யார் என்று கேட்கும் அறிவாளி ஹிந்தியன்,
மகாபாரத ராமாயணக்கதைகளை வரலாறு என்று நம்பிவரும் ஹிந்தியன்

ஆங்கிலத்தை அண்ணாந்து பார்க்காமல் இருந்தால்தான் வியப்பு.

பிறப்பால் ஆங்கிலேயர்கள் அதாவது ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக்கொண்ட பூர்வீக இங்கிலாந்து மக்கள் தமிழர்களை விடவும் குறைவு.
அவர்கள் மொழி உலகம் முழுவதும் பரவி இன்று ஆட்டிப்படைக்கிறது என்றால் அதற்கு அவர்கள் தன்தாய்மொழி மீது வைத்திருந்த பற்றே காரணம்.

நீ கடல்கடந்து போய் அவன் நாட்டில் அவன் மொழியைப் பேசினால் அவன் உன்னை மதிப்பானா?
அல்லது தன்னைப் பெருமையாக நினைப்பானா?

ஜெர்மனிக்கோ இத்தாலிக்கோ பிரான்சுக்கோ போய் ஆங்கிலத்தில் பேசுங்கள்.
அவன் ஆங்கிலம் தெரியாது என்று கூறுவான்.
கூறுவான் என்பது முக்கியமல்ல.
பெருமையாகக் கூறுவான்.
ஒன்று தெரியாது என்பதை வெட்கப்பட்டுத்தான் கூறவேண்டும்.
ஆனால் வேற்றொரு மொழியைத் தெரியாது என்பதைப் பெருமையுடன் கூறுவேண்டும்.
ஆங்கிலம் தெரியாது என்று கூறும் ஜப்பானியனும் சீனனும் இரஷ்யனும் சாதிக்காததையா ஆங்கிலம் திணிக்கப்பட்ட நம்மைப்போன்றவர்கள் சாதித்துவிட்டார்கள்?

ஹிந்தியாவுக்குள் இருக்கும்வரை ஹிந்தி தமிழை கற்பழித்துக்கொண்டுதான் இருக்கும்.

விளக்குப் பிடிப்பதை விட்டுவிட்டு விடுதலையைப் பற்றி சிந்திப்பீர் தமிழரே.