Showing posts with label தொகுதி. Show all posts
Showing posts with label தொகுதி. Show all posts

Monday, 7 October 2024

அண்ணாதுரை பேசியது தமிழ்தேசியம்

அண்ணாதுரை பேசியது தமிழ்தேசியம் 

 தி.மு.க தமிழ்தேசியம் பேசித்தான் ஆட்சிக்கு வந்தது!
 அண்ணாதுரை தனிக் கட்சி தொடங்கியதும் தமிழ்தேசிய கூறுகளை மட்டும் வைத்துக் கொண்டு திராவிட கூறுகளை கை கழுவி விட்டார்.
 திராவிடம் என்ற பெயரில் தமிழ்த் தேசியம் தான் பேசினார்!

  1949 இல் தி.க  விலிருந்து பிரிந்து தனிக் கட்சி ஆரம்பித்தபோது அன்று ஈவேரா கூறிவந்த மக்களுக்கு ஒவ்வாமல் இருந்த வரட்டு நாத்திகம், கண்மூடித்தனமான பார்ப்பன வெறுப்பு ஆகியவற்றைக் கைவிட்டார்!
 தனித்தமிழ்நாடு, இந்தி எதிர்ப்பு, தமிழ்ப் பற்று, மதுவிலக்கு ஆகியவற்றை  முதன்மைக் கொள்கைகளாகக் கைக்கொண்டார்!

 1957 இல் முதல் தேர்தலிலேயே காமராசர், இராஜாஜி, ஈவேரா என்ற மூன்று பெரும் ஆளுமைகளைத் தாண்டி 14% வாக்கு பெற்றார்.

  அவர் பேசிய தமிழ்தேசியமும் அவர் முன்வைத்த தனித்தமிழ்நாடு கொள்கையும் தான் அவரை 1962 இல் 27% வாக்குபெற்று எதிர்க்கட்சியாக உயர்த்தியது (அப்போது அண்ணாதுரை நின்ற சொந்த தொகுதியான காஞ்சிபுரம் தொகுதியில் தோற்றுவிட்டார். இதிலிருந்தே அவர் தனிப்பட்ட செல்வாக்கு இல்லாதவர் என்பதை அறியலாம்).

 1967 இல் 77% வாகுகள் பெற்றபோது அவரது முதன்மை வாக்குறுதிகளில் 'தமிழ்நாடு' பெயர்மாற்றம் ஒன்றாகும்!
 தான் தெலுங்கர் என்றாலும் தனக்குப் பிறகு அரசியல் வாரிசாக நெடுஞ்செழியன் என்ற தமிழரைத் தான் முன்னிறுத்தினார். 

 அண்ணாதுரை வென்றதற்கு காரணம் தமிழர்களிடம் எப்போதுமே இருக்கும் 'இந்திய எதிர்ப்பு' மனநிலை மற்றும் 'தனிநாடு' அடையும் வேட்கை!

 வெற்றிக்காக மேலும் சில சமசரங்கள் செய்தார் என்பதும் வென்றபிறகு கொள்கைகளை எல்லாம் கைவிட்டார் என்பதும் உண்மை! 

 அண்ணாவின் மறைவிற்குப் பிறகு தி.மு.க நெடுஞ்செழியன் கைக்கு வந்தது!
 ஆனால் அவரை சதி செய்து வீழ்த்தி தமிழரல்லாதவர் கட்சியை ஆக்கிரமித்துக் கொண்டனர்.

 பிறகு எம்.ஜி.ஆர் தனிக் கட்சி தொடங்கிய போது பெயருக்கு மட்டுமே அதில் திராவிடம் இருந்தது! 
 மற்றபடி அது முழு தமிழர் கட்சியாக இருந்தது!
 புலிகளை வளர்த்துவிட்டது! 
 எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு அதுவும் நெடுஞ்செழியன்  கைக்கு வந்தது.
 இப்போதும் தமிழரல்லாதார் அதை அபகரித்துக் கொண்டனர்.

 தமிழர்கள் எப்போதுமே தமிழ்தேசியத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
  நீதிக் கட்சி 'சொத்துள்ளவர்கள் மட்டும் வாக்களிக்கும் முறை' இருந்தபோது வென்றது ஏனென்றால் தமிழகத்தில் நிலவுடைமையும் செல்வமும் வந்தேறிகள் கையில் பெரும்பாலும் உள்ளது!
 ஈவேரா ஆதரித்த கட்சியோ நபரோ ஒருமுறை கூட தேர்தலில் வென்றதே இல்லை! 
 எவர் வென்றாலும் அவர்தான் தாவி ஒட்டிக்கொள்வார்!
 தோல்வியே காணாதவர் என்று கூறப்படும் கருணாநிதி இருந்தவரை திமுக ஒரே ஒருமுறை தவிர்த்து பெரும்பாலும் தோல்வி அல்லது மைனாரிட்டி ஆட்சி என்றுதான் இருந்தது!
 
 வாக்குப்பதிவு இயந்திரம் வந்தபிறகு தேர்தல் முடிவுகள் மீது நம்பிக்கை வராதபடி எப்போதும் நடக்கிறது!

 இப்போதும் குளறுபடிகள் இல்லாத தேர்தல் நடந்தால் தமிழ்தேசியம் பேசும் கட்சிதான் வெல்லும்! 
 

Monday, 13 February 2023

ஈரோடு கிழக்கு சாதிகள்

ஈரோடு கிழக்கு சாதிகள்
மொத்தம் 228 k

தமிழ்ச் சாதிகள் :-

வெள்ளாளர் 67k
செங்குந்தர் 45k
இசுலாமியர் 35k
நாடார் 8k
செட்டியார் 5k

தமிழரல்லாதார்
:-

சக்கிலியர் 31k
வடுகர் 20k
மார்வாடி 3k

 அதாவது அத்தொகுதியில் 25% வாக்காளர் தமிழரல்லர்!

Thursday, 10 October 2019

திராவிடக் கட்சிகளில் சாதியம் -2



திராவிடக் கட்சிகளில் சாதியம் -2

 சென்னை பல தரப்பட்ட மக்கள் வாழும் பகுதி ஆகும்.

 இதில் தி.மு.க சார்பில் நிறுத்தப்பட வேட்பாளர்கள் அவர்கள் சாதி அடிப்படையில் ஒப்பிடப் பட்டுள்ளனர்.

 இதில் பல்வேறு தமிழ்ச்சாதி வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ள தி.மு.க
 ஒரு நாயுடு, இரண்டு இசை வேளாளர் இருக்குமாறே வாய்ப்பளித்துள்ளனர்.

 இதில் கருணாநிதி குடும்பம் அதிக பயன் அடைந்து வந்துள்ளது.
 இவர்களுக்கு அடுத்து நாயுடு (நாயக்கர்) பயனடைந்துள்ளனர்.

 தமிழரில் முதலியார்களுக்கு அடுத்தபடியாக
 நாடார், வன்னியர்கள் பயனடைந்துள்ளனர்.

திராவிடக் கட்சிகளில் சாதியம் -1



திராவிடக் கட்சிகளில் சாதியம் -1

 2011 இல் தி.மு.க போட்டியிட்ட இடங்களில் நிறுத்திய வேட்பாளர்களின் சாதி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைபடம்

 இதில் பட்டியல் சாதியாருக்கான 46 தனித் தொகுதிகள் போக இடம்பெற்றுள்ளோர்

படுகர் 1
செட்டியார் 3
இசை வேளாளர் 3
கொங்கு வெள்ளாளர் 11
குறும்ப கவுண்டர் 1
மீனவர் 1
முதலியார் 3
முக்குலம் 20
முஸ்லீம் 7
முத்தரையர் 4
நாடார் 7
நாயுடு 8
பார்கவ குலம் 4
பிள்ளைமார் 4
ரெட்டி 3
வன்னியர் 12
யாதவர் 2

 இதில் படுகர், இசை வேளாளர் (சின்ன மேளம்), நாயுடு, ரெட்டி ஆகியோர் தமிழரல்லாதார் என்பதை உறுதியாகக் கூறலாம்.

 சதவீத அடிப்படையில் பார்க்கும் போது

மக்கட்தொகையில் 0.12% உள்ள இசை வேளாளர்,
3.2% அளவு இடம்பிடித்துள்ளனர்.
இது ஏறத்தாழ 30 மடங்கு ஆகும்.

மக்கட் தொகையில் 4.4% உள்ள நாயுடு (நாயக்கர்),
 8.5% என்ற அளவு இடம்பிடித்துள்ளனர்.
இது இரண்டு மடங்கு ஆகும்.

மக்கட்தொகையில் 1.43% உள்ள ரெட்டியார்,
 3.2% அளவு இடம்பிடித்துள்ளனர்.
 இது இரண்டரை மடங்கு ஆகும்.

மக்கட்தொகையில் 12% இருக்கும் வன்னியர் சரியாக 12% பெற்றுள்ளனர்.

மக்கட்தொகையில் 6.8% இருக்கும் கொங்கு வெள்ளாளர் 11% பெற்றுள்ளனர்.

மக்கட்தொகையில் 6.6% இருக்கும் நாடார் 7.4% பெற்றுள்ளனர்.

மக்கட்தொகையில் 8.8% இருக்கும் முக்குலத்தோர் 21.25% பெற்றுள்ளனர்.
இது இரண்டேகால் மடங்கு ஆகும்.

ஆனால் 5.7% சதவீதம் உள்ள பிள்ளைமார் வெறும் 4.25% தான் பெற்றுள்ளனர்.

 தி.மு.க ஆட்சியில் அதிகாரப் பகிர்வு என்பது வந்தேறி சாதிகளுக்கு நல்ல லாபமாகவும்
 பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பெரும்பான்மை சாதிகளுக்கு ஓரளவு லாபமாகவும்
 முன்னேறிய சாதியார் மற்றும் பிற்படுத்தப்பட்டோரில் சிறுபான்மையினர் ஆகியோர்க்கு நஷ்டமாகவும் உள்ளது.

 இது வேட்பாளர் தேர்வு அடிப்படையில் மட்டுமே!

தொடரும்....

[CASTE IN POLITICAL RECRUITMENT: THE STUDY OF TWO
MAJOR DRAVIDIAN PARTIES IN TAMIL NADU]

Saturday, 9 December 2017

நாம்தமிழர் தெலுங்கு பிரச்சாரம்

நாம்தமிழர் தெலுங்கு பிரச்சாரம்

ஆர்.கே.நகரில் நாம்தமிழர் மேடையில் தெலுங்கில் பேசி வாக்குசேகரித்த காணொளி பரவலாகி வருகிறது.

ஒரு தெலுங்கரை தெலுங்கு அடையாளத்தோடு கட்சியில் சேர்த்து
அவரைவிட்டு தெலுங்கில் பேசவைத்து தெலுங்கரிடம் ஓட்டுக் கேட்பது தவறில்லைதான்.

ஆனால் 'நாம் தமிழர்' என்று பெயரை வைத்துக் கொண்டு இவ்வாறு செய்வதற்கான அவசியம் என்ன என்றுதான் புரியவில்லை.

  முதலில் தெலுங்கரைத் தவிர்த்துவிட்டு இங்கே அரசியல் செய்யமுடியாது என்ற நிலை இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

தமிழர் பாதிக்கு பாதி வாழ்ந்த எல்லைப் பகுதிகளை அண்டைமாநிலங்கள் பறித்துக்கொண்டுவிட்டன.
இதனாலேயே பிற மாநிலங்களை விட அதிக 'மண்ணின் மைந்தர் பெரும்பான்மை' தமிழகத்திடம் உள்ளது.

(இதையும் விடாது வந்தேறிகள் குடியேற்றம் தொடர்ந்து நடத்தப்பட்டு தமிழகத்தில் தமிழர் செறிவு நீர்த்துப்போக அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்படுகின்றன.
தற்போது 4 தொகுதிகளில்

நா.த.க முதலில் தமிழரை (மட்டும்) முழுமையாக ஓரணியில் திரட்டும் முயற்சியைச் செய்யுங்கள்.
வந்தேறிகள் கடைசியில் தானாக வந்து ஒட்டிக் கொள்வார்கள்.

பிறமொழியாளருக்கு இப்போதே (234 இல்) 15 இடங்களில் நிற்க வாய்ப்பு கொடுத்துள்ளோம் என்று உங்கள் வியனரசு வெளிப்படையாக கூறியுள்ளார்.
அவர்களெல்லாம் நீங்கள் அவரவர் மொழியில் பேசியதால்தான் உங்கள் கட்சி சார்பில் நிற்க முன்வந்தார்களா?

ஒருபேச்சுக்கு தெலுங்கர் 15% க்கு மேல் என்று வைத்துக்கொண்டாலும் அவர்கள் தமிழ் தெரிந்தவர்கள்தானே?!
தமிழிலேயே வாக்கு கேட்கவேண்டியதுதானே?!

தெலுங்கருக்கு உங்கள் கட்சி என்ன செய்யும்? அவர்களிடம் என்ன நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று தமிழிலேயே விளக்குங்கள்.

இலங்கை உட்பட முழு தென்னிந்திய துணைக்கண்டமும் தமிழ் புரியும்.
எல்லாவனும் வெட்டி பந்தாவுக்கு தமிழ் புரியாதமாதிரி நடிக்கத்தான் செய்கிறான்.

நீங்கள் பிற மொழியில் பேசி வாக்கு கேட்பதை தமிழக எல்லைக்கு வெளியே வாழும் தமிழர்களிடம் வேண்டுமானால் செய்யுங்கள்.
ஆனால் தமிழகத்திற்கு உள்ளே தெலுங்கு பேசி உங்கள் கட்சியை வளர்க்கவேண்டிய அவசியம் இல்லை.

"இல்லைங்க!
எங்களுக்கு மொழிவெறி இல்லைனு வெளிய காட்டிக்கணும்!
தமிழர்கள் எங்க மேல வைச்சிருக்க நம்பிக்கை குறைஞ்சாலும் பரவாயில்ல!
தெலுங்கர் மனசுலயும் துண்டுபோட்டு வெப்போம்!" என்றால், நீங்கள் மாநில ஆட்சியைப் பிடிப்பது அதிசயமாக நடந்தாலும் நடக்கும்,
தமிழர் மனதில் இடம்பிடிப்பது நடக்காது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.