Showing posts with label வாக்காளர். Show all posts
Showing posts with label வாக்காளர். Show all posts

Tuesday, 21 August 2018

2021 இல் தமிழகத்தில் ஒன்றரை கோடி வந்தேறிகள்

2021 இல் தமிழகத்தில் ஒன்றரை கோடி வந்தேறிகள்

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் மக்கட்தொகைக் கணக்கீட்டின் படி தமிழகத்தின் மக்கட்தொகையானது தமிழகப் பிறப்பு விகிதத்தின்படி 51 லட்சம் தான் அதிகரித்திருக்க வேண்டும்.
ஆனால் தமிழக மக்கட்தொகை பத்தாண்டுகளில் 97 லட்சம் அதிகரித்துள்ளது.

அதாவது கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 50 லட்சம் பேர் தமிழகத்தில் குடிபுகுந்து ரேசன் கார்டு வாங்கியுள்ளனர்.

அதனாலேயே தமிழக குடிமக்களின் எண்ணிக்கை அரைக் கோடி கூடுதலாக அதிகரித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலோர் வடயிந்தியர் ஆவர்.

சென்னையையும் கோவையையும் குடியேறி நிறைத்த பிறகு தற்போது மதுரையை குறிவைத்துள்ளனர்.

மதுரையைச் சுற்றியுள்ள மாசி வீதிகளிலும் சித்திரை வீதிகளிலும் உள்ள அனைத்து கடைகள், கட்டிடங்கள், நிறுவனங்கள் அனைத்தையும் மார்வாடிகள் விலைக்கு வாங்கிவிட்டனர்.

இதற்கு காரணம் குஜராத்திய மக்களான சௌராஷ்டிர மக்கள் மதுரை முதல் திருமங்கலம் வரை தொடர்ச்சியாக பெரும்பான்மையுடன் குட்டி தாய்நிலம் அமைத்து வாழ்வதுதான்.

இங்கே தற்போது பெருகியுள்ள பாஜக ஆதரவும் மதுரை மார்வாடிகளின் பணமும் சேர்ந்து திட்டமிட்டு மதுரையில் ஹிந்தியரைக் குடியேற்றி மதுரையைத் தமக்குச் சொந்தமாக்கப் பார்க்கின்றனர்.
 
மதுரையில் குறிப்பிட்ட வார்டுகளில் வடயிந்தியரைக் குடியேற்றி வருகின்றனர்.
அங்கே மார்வாடிகளை நிறுத்தி வெற்றிபெற வைக்கவுள்ளனர்.

மதுரை 79 வது வார்டில் 600 பேராக இருந்த வடயிந்திய வாக்காளர்கள் தற்போது 4000 பேராகியுள்ளனர்.

இதேபோல 58 வது வார்டில் 7000 பேர் இருக்கிறார்கள்.

மதுரை மத்திய தொகுதியில் 20,000 வடயிந்திய வாக்காளர்கள் உள்ளனர்.

(இதிலே 18 வயதுக்கு குறைந்தோர் மற்றும் குடியுரிமை பெறாதோரைச் சேர்க்கவில்லை)

அதாவது ரேசன்கார்டு வாங்குவதற்கு நிரந்தர முகவரி தேவை அதனால் இப்போதெல்லாம் வடயிந்தியர்கள் முதலில் வாக்காளர் அடையாள அட்டை வாங்கிவிடுகின்றனர்.

2016 செப்டம்பர் 1 அன்று மத்திய பா.ஜ.க அரசு தமிழக அரசின் மீது அழுத்தம் கொடுத்து ஓ.பன்னீர்செல்வம் மூலம் தமிழ் தெரியாதோரும் வெளிமாநிலத்தவரும் வெளிநாட்டவரும் கூட தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் சலுகையை அறிவித்தது.
(இதை தமிழ்தேசிய பேரியக்கம் தலைவர் பெ.மணியரசன் கடுமையாக எதிர்த்தது நினைவிருக்கலாம்)

கடந்த ஆண்டில் அரைகோடி பேர் குடிவந்தனர் என்றால் இந்த சலுகை இன்னும் பத்தாண்டுகளில் ஒரு கோடிபேர் குடிபுக வழிசெய்யும்.

மெல்ல மெல்ல தமிழர்கள் இங்கே சிறுபான்மை ஆக்கப்படுவர்.

தாய்நிலத்திற்கு ராணுவ வேலி போடாத இனத்திற்கு அதுதான் நடக்கும்

சில தகவல்களுக்கு நன்றி: நக்கீரன்

Saturday, 9 December 2017

நாம்தமிழர் தெலுங்கு பிரச்சாரம்

நாம்தமிழர் தெலுங்கு பிரச்சாரம்

ஆர்.கே.நகரில் நாம்தமிழர் மேடையில் தெலுங்கில் பேசி வாக்குசேகரித்த காணொளி பரவலாகி வருகிறது.

ஒரு தெலுங்கரை தெலுங்கு அடையாளத்தோடு கட்சியில் சேர்த்து
அவரைவிட்டு தெலுங்கில் பேசவைத்து தெலுங்கரிடம் ஓட்டுக் கேட்பது தவறில்லைதான்.

ஆனால் 'நாம் தமிழர்' என்று பெயரை வைத்துக் கொண்டு இவ்வாறு செய்வதற்கான அவசியம் என்ன என்றுதான் புரியவில்லை.

  முதலில் தெலுங்கரைத் தவிர்த்துவிட்டு இங்கே அரசியல் செய்யமுடியாது என்ற நிலை இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

தமிழர் பாதிக்கு பாதி வாழ்ந்த எல்லைப் பகுதிகளை அண்டைமாநிலங்கள் பறித்துக்கொண்டுவிட்டன.
இதனாலேயே பிற மாநிலங்களை விட அதிக 'மண்ணின் மைந்தர் பெரும்பான்மை' தமிழகத்திடம் உள்ளது.

(இதையும் விடாது வந்தேறிகள் குடியேற்றம் தொடர்ந்து நடத்தப்பட்டு தமிழகத்தில் தமிழர் செறிவு நீர்த்துப்போக அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்படுகின்றன.
தற்போது 4 தொகுதிகளில்

நா.த.க முதலில் தமிழரை (மட்டும்) முழுமையாக ஓரணியில் திரட்டும் முயற்சியைச் செய்யுங்கள்.
வந்தேறிகள் கடைசியில் தானாக வந்து ஒட்டிக் கொள்வார்கள்.

பிறமொழியாளருக்கு இப்போதே (234 இல்) 15 இடங்களில் நிற்க வாய்ப்பு கொடுத்துள்ளோம் என்று உங்கள் வியனரசு வெளிப்படையாக கூறியுள்ளார்.
அவர்களெல்லாம் நீங்கள் அவரவர் மொழியில் பேசியதால்தான் உங்கள் கட்சி சார்பில் நிற்க முன்வந்தார்களா?

ஒருபேச்சுக்கு தெலுங்கர் 15% க்கு மேல் என்று வைத்துக்கொண்டாலும் அவர்கள் தமிழ் தெரிந்தவர்கள்தானே?!
தமிழிலேயே வாக்கு கேட்கவேண்டியதுதானே?!

தெலுங்கருக்கு உங்கள் கட்சி என்ன செய்யும்? அவர்களிடம் என்ன நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று தமிழிலேயே விளக்குங்கள்.

இலங்கை உட்பட முழு தென்னிந்திய துணைக்கண்டமும் தமிழ் புரியும்.
எல்லாவனும் வெட்டி பந்தாவுக்கு தமிழ் புரியாதமாதிரி நடிக்கத்தான் செய்கிறான்.

நீங்கள் பிற மொழியில் பேசி வாக்கு கேட்பதை தமிழக எல்லைக்கு வெளியே வாழும் தமிழர்களிடம் வேண்டுமானால் செய்யுங்கள்.
ஆனால் தமிழகத்திற்கு உள்ளே தெலுங்கு பேசி உங்கள் கட்சியை வளர்க்கவேண்டிய அவசியம் இல்லை.

"இல்லைங்க!
எங்களுக்கு மொழிவெறி இல்லைனு வெளிய காட்டிக்கணும்!
தமிழர்கள் எங்க மேல வைச்சிருக்க நம்பிக்கை குறைஞ்சாலும் பரவாயில்ல!
தெலுங்கர் மனசுலயும் துண்டுபோட்டு வெப்போம்!" என்றால், நீங்கள் மாநில ஆட்சியைப் பிடிப்பது அதிசயமாக நடந்தாலும் நடக்கும்,
தமிழர் மனதில் இடம்பிடிப்பது நடக்காது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.