Showing posts with label பொழுதுபோக்கு. Show all posts
Showing posts with label பொழுதுபோக்கு. Show all posts

Wednesday, 1 August 2018

குறுக்கெண் புதிர் (சுடோகு) தமிழர் விளையாட்டு

குறுக்கெண் புதிர் (சுடோகு) தமிழர் விளையாட்டு

முந்நூறு ஆண்டுகள் முன்பே Sudoku விளையாடிய தமிழர்கள்.

ஆம். உண்மை.

பழனி மலையடிவார மண்டபம் ஒன்றில் 3×3 சுடோகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது 350 ஆண்டுகள் பழமையானது ஆகும்.

இது பற்றி புதியதலைமுறை மற்றும் The news minute இதழும் ஏற்கனவே காட்டியுள்ளன.

தற்போதைய 9×9 குறுக்கெண் புதிர் 1984 ல் ஜப்பான் கம்பெனியால் அறிமுகப்படுத்தப்பட்டு 2004 ல் தான் செய்தித்தாள்களில் வெளியானதாம்.

ஆனால் தமிழர்கள் இதன் எளிய வடிவத்தை ஏற்கனவே பொழுதுபோக்கு விளையாட்டாக  பயன்படுத்தி வந்துள்ளது வியப்பின் உச்சம்.

(30.07.2018 அன்று மதியம் 3:11 க்கு முகநூல் பதிவாக இட்டது)

Sunday, 18 June 2017

உருதிஸ்தான்

உருதிஸ்தான்

உற்றுப்பார்த்தால் பாகிஸ்தான் இன்னொரு ஹிந்தியா
அதாவது உருதிஸ்தான்.

ஒலிம்பிக்கில் உலகநாடுகள் நூற்றுக்கணக்கான பதக்கங்களை அள்ளியபோது ஒன்றிரண்டு பதக்கங்களை தடவிக்கொண்டு இருந்தது அவமானமில்லையாம்.

இப்போதுதான் அவமானமாம்.

அதாவது ஊரெல்லாம் சவால்விட்டு தோத்துப்போன தோத்தாக்கொள்ளி
பக்கத்துவீட்டு நோஞ்சான்களுடன் போட்டியிட்டு அதிலும் தோற்ற அவமானம்.

வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள இருநாடுகள் நான்தான் பெரியவன் என்று அடித்துக்கொள்ள கிரிக்கெட் ஒரு களமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயன் சூரியக்குளியல் எடுக்கும்போது பொழுதுபோக்காக விளையாடிய ஒரு சப்பையான ஆட்டத்தை
அவன் ஆண்ட அடிமை நாடுகள் அப்படியே ராஜவிசுவாசத்துடன் கடைபிடிக்கின்றன.

பிற வளர்ந்த நாடுகள் கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி என ஆரோக்கியமான விளையாட்டில் இரண்டு மணிநேரத்தில் எனர்ஜியை கரைத்துவிட்டு வேலையைப் பார்க்க போய்விடுவான்.

அவன் விளையாடுவது விளையாட்டு (sports).
கிரிக்கெட் ஒரு பொழுதுபோக்கு ஆட்டம் (game).
அது விளையாட்டு கிடையாது.
அதனால் உடலுக்கு பெரிய ஆரோக்கியமும் கிடையாது.

பிசிசிஐ ஓன்ற தனியார் நிறுவனம் ஆயிரக்கணக்கான விளம்பர நிறுவனங்களுடன் சேர்ந்து நடத்தும் இந்த கார்ப்பரேட் கேளிக்கூத்தில்,
தன் மகாபெரிய தோல்விகளை அதனால் அடைந்த அவமானத்தை சிறுவெற்றி பெற்று துடைத்துக்கொள்ள வழிதேடும் மூடர் கூட்டம்.

எதையும் சாதிக்க இயலாக்கூட்டம்.

ஆண்டான் பழக்கத்தை அப்படியே கடைபிடிக்கும் அடிமை ரத்தம்.

இந்த அடிமைக்கு அடிமையாக தேசிய இனங்கள் இருக்கவேண்டுமா?

அதிலும் குறிப்பாக தமிழினம்?!