Sunday 12 June 2016

குமரிக்கண்டமும் நேசமணியும்

குமரிக்கண்டமும் நேசமணியும்

மூழ்கிப்போன கண்டமொன்று இருந்தாக மேலைநாட்டு அறிஞர்கள் கூறியபோது,
தமிழ் இலக்கியங்களுடன் அதைப் பொருத்திப்பார்த்து
குமரிக்கண்டத்தை மீண்டும் மக்கள் அறியச் செய்தவர்,
ஈழத்தமிழரும்,
தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவருமான கனகசபை ஆவார்.

ஆனால் குமரிமுனை மலையாளிகளிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது.

அதை மீட்டு அங்கிருந்த மக்கள் வணங்கிவந்த (கன்னி) குமரியம்மன் பெயராலும்,
மூழ்கிய குமரிக்கண்டத்தின் நினைவாகவும்,
"கன்னியாகுமரி" என்று பெயர் வைத்தவர் (கிறித்தவரான) நேசமணி ஆவார்.

இதற்கு பின்னணிக் காரணம் 'குமரிக் கண்டத்து வழக்கறிஞர்' என்றழைக்கப்படும் கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை ஆவார்.

தந்தை செல்வாவுக்கு இருபது ஆண்டுகள் முன்பே அதிரடி அரசியல் செய்து,
காமராசரின் ஆதரவு இல்லாமல் போனாலும்,
ஈ.வே.ரா ஆதரவு தர மறுத்து திருப்பி அனுப்பினாலும்,
திராவிடக் கட்சிகள் கண்டுகொள்ளாது போனாலும்,

தன் அறுபத்தைந்து வயதிலும் தளராது போராடி,
பாதியளவு மண்ணையாவது தமிழகத்துக்கு மீட்டுத்தந்த தமிழர் தந்தைதான் நேசமணி அவர்கள்.

சாதியாகவும் மதமாகவும் ஏன் மொழியாலும் பிரிந்து கிடந்த தமிழினத்தினை ஒன்றுதிரட்டி மண்மீட்பில் வெற்றிபெற்ற முதல் தமிழ்தேசியவாதியும் அன்னாரே ஆவார்.

தமிழியத் தலைவர் மார்சல்.நேசமணியை தமிழினம் வரமாய் பெற்ற நாள் இன்று (12-06-1895).

No comments:

Post a Comment