குருதியில் நனைந்த குமரி -16
------------------
நாள்: 26.08.1954
நேரம்: அதிகாலை 5 மணி
இடம்: நாகர்கோவில்
கதவு தட்டப்படும் ஓசை கேட்டு நேசமணியாரின் மனைவி கரோலின் அம்மையார் கதவைத் திறந்தார்.
வெளியே தமிழக காங்கிரஸ் தலைவர் எஸ்.எஸ்.கரையாளர் மற்றும் சில காங்கிரஸ் தலைவர்கள் நின்றுகொண்டிருந்தனர்.
"வணக்கம் அம்மா!
நாங்கள் காங்கிரஸ் குழு மதராசிலிருந்து வருகிறோம்.
நேசமணி இருக்கிறாரா?"
"வாருங்கள்! உங்கள் வரவைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்"
உள்ளே நுழைந்தனர்.
நேசமணி சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி கண்ணயர்ந்து இருந்தார்.
சத்தம் கேட்டு கண்விழித்தார்.
கைகூப்பியபடி எழுந்தார்
"வணக்கம்! வாருங்கள்! வாருங்கள்!
உங்களுக்கு தந்து உபசரிக்க பாலோ மோரோ இல்லை!
கொஞ்சநேரம் பொறுங்கள்!
புட்டு தயாராகிவிடும்.
நீத்தண்ணீர் அருந்துகிறீர்களா?"
"பரவாயில்லை ஐயா!
இங்கே உள்ள இறுக்கமான சூழலை அறிவோம்.
உங்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏதும் இல்லையே?!"
" இல்லை.
தமிழ்மண்ணில் தஞ்சாவூருக்கு அடுத்து பெரிய நெற்களஞ்சியம் இந்த நாஞ்சில் நாடு.
80 ஆண்டுகள் முன்பு பஞ்சம் வந்தபோது கூட இங்கே உணவுக்கு தட்டுப்பாடு வரவில்லை.
என்ன! எல்லா விளைச்சலையும் குறைந்த விலை கொடுத்து திருவிதாங்கூர் அரசாங்கம் அள்ளிக்கொண்டு போய்விடும்"
"இப்போதுமா அது நடக்கிறது?"
"ஆமாம். வெளியே 40 ரூபாய் கிடைக்கும்.
ஆனால் வீட்டுக்குத் தேவையான நெல்லை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு 9 ரூபாய்க்கு கொடுக்கவேண்டும்.
அள்ளவரும் நம்பூதிரிகளைக் கேட்டால் பத்மநாபசாமி கோவிலுக்கு என்பார்கள்"
"பத்மநாபசாமி கோவிலுக்கு நான் போயிருக்கிறேன்.
திருவனந்தபுரம் பத்மநாதசாமி கோவில்தானே?"
"ஆம். ஆனால் பத்மநாபபுரம் இங்கேதான் இருக்கிறது.
அதுதான் திருவிதாங்கூர் தலைநகராக இருந்தது.
அரண்மனை கூட உண்டு.
பிறகுதான் தமிழர் மத்தியில் தலைநகர் வேண்டாமென திருவனந்தபுரத்தை தலைநகராக ஆக்கினர்.
திருவனந்தபுரத்திற்கு அந்தப்பக்கம் வரை மலையாளிகள் தாய்நிலம்.
அந்த பத்மநாபசாமி கோயிலை போய்ப்பாருங்கள் அப்படியே ஸ்ரீரங்கம் கோவிலைப் போல இருக்கும்.
நம்பூதிரிகள் சதிசெய்து கொன்ற கடைசி தமிழ்மன்னன் இருநூறு ஆண்டுகளுக்கு முன் பெரும் செல்வத்தை அக்கோயிலின் நிலவறைகளில் மறைத்துவைத்துள்ளான்.
கோயிலைச் சுற்றித் தமிழர்கள் இருக்கிறார்கள்.
கோயில் பக்தர்களும் தமிழர்களே!
என்று அந்த அறைகளைத் திறக்கிறார்களோ அப்போது பிரச்சனை வெடிக்கும்.
அந்த கோவில் உட்பட திருவிதாங்கூர் முழுவதுமே தமிழர் சொத்துதான்.
இன்றைக்கு தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியையாவது மீட்கவேண்டும். குமரி முனையில் இருந்து மேற்கே திருவனந்தபுரம் வரையும்
அப்படியே வடக்கே தமிழ்நாட்டை ஒட்டியவாறு வால்பாறை வரையும் பரந்திருக்கும் நமது தமிழர் மண்ணை மீட்கவேண்டும்"
"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் திருநெல்வேலி மாவட்டம் அளவு வரும் போலிருக்கிறதே?!"
"இல்லை அதில் முக்கால்வாசி வரும்.
ஆனாலும் இதை சாதிப்பது அத்தனை எளிய காரியமில்லை.
இந்த நாஞ்சில் பகுதி மலையாளிகளின் கையைவிட்டு போய்விட்டால் அவர்களுக்கு சோற்றுக்கே வழி கிடையாது.
தேவிகுளமும் பீருமேடும் தமிழ் மாநிலத்துடன் இணைந்து ஏலக்காய், தேயிலை, ரப்பர் மூலம் வரும் வருமானம் தமிழர் கைக்குப் போய்விட்டால் மலையாளிகள் பாதி ஏழைகள் ஆகிவிடுவார்கள்.
நமது மண்ணின் வளத்தை நம்மை உழைக்கவைத்து கொழுத்துக் கிடக்கின்றனர் நம்பூதிரிகள்.
வருமானம் தரும் பகுதிகள் போனாலும் சரி நம்மை அடக்கியாள நினைக்கும் இவர்கள் நோகாமல் உண்ண சோறு கிடைக்க ஒரு போதும் விடமாட்டேன்.
இந்த நாஞ்சில் நாட்டை தமிழ்மாநிலத்துடன் இணைத்துக்கொள்ளுங்கள்.
இந்த மண்ணை சரியாக பயன்படுத்தினால் பாதி தமிழினத்திற்கு சோறிடமுடியும்"
"கவலை வேண்டாம்.
எங்களுக்கு இங்கே தற்போது நடக்கும் அடக்குமுறை பற்றி சொல்லுங்கள்.
நாங்கள் நேரில் சென்று பார்வையிடவும் செய்வோம்"
"1948லேயே தமிழகத்துடன் இணைய போராடினோம்.
இரண்டு தமிழர்களை இதே பட்டம் தாணுப்பிள்ளை சுட்டுக் கொன்றான்.
பிறகு இவனை அகற்றிவிட்டு வேறு ஒரு மலையாளி முதலமைச்சரானான்.
அவனும் சளைத்தவனில்லை.
ஆனால் ஒரு மலையாள இனவெறியன்தான் தமிழர்களைச் சமாளிக்கமுடியும் என்று மறுபடி பட்டத்தையே கொண்டுவந்தனர்.
'தமிழன்மார அடிச்சமர்த்தனம்' என்று கொக்கரித்தபடி ஆட்சிக்கு வந்தான் பட்டம்"
"பிள்ளை என்றால் தமிழரா?"
"இல்லை எட்டுவீட்டுப் பிள்ளைமார் எனப்படும் நாயர்.
இவன் மலையாள கைதிகளை விடுதலை செய்து பீருமேட்டில் வீடும் பணமும் கொடுத்து குடியேற்றினான்.
பிறகு அங்கே அவர்கள் ஒரு தொழிற்சங்கம் தொடங்கி தமிழர்களுக்கான அமைப்பாக இருந்த தொழிற்சங்கத்துடன் பிரச்சனை செய்தனர்.
பட்டம் அரசும் ஒருதலைபட்சமாக நடந்தது.
பிறகு தமிழர்கள் மீது வழக்கு, கைது, சோதனையிடல், தடியடி என்று காவல்துறை அடக்குமுறைகள்.
குமரித் தமிழர்கள் நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மாவா இருப்போம்.
200 கி.மீ அந்தப்பக்கம் இருந்தாலும் நாங்கள் போய் தடை உத்தரவை போராடினோம்.
400 பேர் கைதானோம்.
நான் விடுதலை ஆனதும் ஒரு பேரணி நடத்த திட்டம் இட்டவேளையில் நேரு அமைதியாக இருக்கும்படி கடிதம் எழுதினார்.
ஆனாலும் மாநில எல்லை வரைவுக் குழு வரவுள்ள இந்த நேரத்தில் நாங்கள் போராடவேண்டிய கட்டாயம்.
எனவே பெரியதொரு போராட்டத்தை முன்னெடுத்தோம்.
எங்களுக்கு இப்படி நடக்கும் என்று தெரியும்.
தெரிந்தேதான் போராடினோம்"
"என்னவொரு துணிச்சல் ஐயா உங்களுக்கு!
மற்ற அடக்குமுறைகளை நேரில் சென்று பார்வையிடுகிறோம்.
உள்ளது உள்ளபடி அப்படியே அறிக்கையாக அளிக்கிறோம்.
எங்களால் முடிந்ததை நிச்சயம் செய்கிறோம்.
நீங்கள் தமிழகத்துடன் இணைவது உறுதி"
"நம் மக்கள் இங்கே துப்பாக்கிச்சூடு, ஊரடங்கு உத்தரவு, சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்த படுவது, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு என பல பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
நீங்கள் வருவதாக அறிவித்த பிறகு தற்போது நிலை ஓரளவு பரவாயில்லை.
உங்களுக்கு நன்றி"
"நன்றி எல்லாம் எதற்கு?
இது எங்கள் கடமை.
நாங்கள் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்போம்.
ஆறுதல் கூறுவோம்.
தேவையானவர்களுக்கு திருவிதாங்கூர் அரசிடமிருந்து இழப்பீடும் பெற்றுத்தருவோம்"
"இழப்பீடெல்லாம் வேண்டாம் ஐயா!
ஆறுதலும் ஆதரவுமே தற்போது தேவை.
எப்படியேனும் தமிழகத்துடன் இணைந்தால் போதும்"
"நன்றி! நாங்கள் கிளம்புகிறோம்"
"உணவு தயாராவிட்டது.
உணவருந்தியபின் செல்லலாம்"
---------------------
நாள்: 26.08.1954
இடம்: நேரு அலுவலகம்
மாலை: 4 மணி
மேசைத் தொலைபேசி அழைத்தது.
நேரு எடுத்தார்.
"வணக்கம் ஜவஹர் அவர்களே!"
" வணக்கம் கரையாளரே! உங்கள் அழைப்பைத்தான் எதிர்பார்த்திருந்தேன்.
அப்துல் ரசாக் முன்பே வந்துவிட்டார்.
வெளியே காத்திருக்கிறார்.
அங்கே என்ன நிலவரம்?"
"இங்கே நிலை சற்று கவலைக்கிடம்தான்.
தமிழ்மாநில எல்லையிலிருந்து நுழையும் முன்னே பார்த்தேன்.
நிறைய அகதிகள் திருநெல்வேலி எல்லையில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
500 குடும்பங்களாவது இருக்கும்.
இங்கே அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆங்காங்கே சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
பள்ளி, மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் எதுவுமே இயங்கவில்லை.
மக்கள் வெளியே வரவே பயப்படுகின்றனர்.
இவர்களது தலைவர் நேசமணியையும் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.
எங்கே பார்த்தாலும் காவல்துறையினர்.
தமிழ் எம்.பிக்கள் பலரைக் காணவில்லை.
சிறையில் ரகசியமாக அடைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சிலர் தலைமறைவாகிவிட்டனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த பகுதியைப் பார்த்தேன்.
தடயங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.
ஆனால் நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளன.
கொல்லப்பட்டோரின் குடும்பங்களை சந்தித்தேன்.
இப்பகுதியை ஐக்கிய கேரளாவிலிருந்தே பிரிப்பதே முறை.
இவர்களுக்கும் மலையாளத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை"
"ஒரு சந்தேகம். அதென்ன அவரது கட்சியின் பெயரில் 'தமிழ்நாடு' என்று உள்ளது.
தனிநாடு கேட்கும் பிரிவினைவாதி என்கின்றனர் கேரளத்தவர்"
"ஆம். தமிழர்கள் அவர்களது தாய்நிலத்தை தமிழ்நாடு என்றுதான் சொல்வார்கள்.
நான் சந்தித்தவரை அவர் பிரிவினை பற்றி பேசவில்லை.
ஒருவேளை அவர்களது உரிமைகள் கிடைக்காது போனால் பிரிவினையை கையில் எடுக்கலாம்.
ஏனென்றால் தமிழர்கள் மற்ற எந்த இந்தியர்களிடமிருந்தும் முற்றிலும் வேறுபட்டவர்கள்.
நேசமணி கட்சியில் சாதி கடந்து மதம் கடந்து தமிழர்கள் ஓரணியில் நிற்கின்றனர்.
இவர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டியதை கொடுத்துவிடுவதே நல்லது"
"ஒரே நாளில் இந்த முடிவுக்கு எப்படி வந்தீர்கள்?
நான் காமராசரிடம் கேட்டபோதெல்லாம் சென்ற தேர்தலில் நேசமணியை எதிர்த்து பிரச்சாரம் செய்தபோது நேரில் கண்டதாகவும், அப்பகுதி மலையாள கலப்புள்ள பகுதி என்றுமல்லவா கூறினார்?!"
"காமராசரே பிரச்சாரம் செய்தும் அவர் நிறுத்திய 'திருவிதாங்கூர்-கொச்சி காங்கிரஸ்' வேட்பாளர்கள் 14 பேரும் இப்பகுதியில் டெபாசிட் இழந்தததை மறந்துவிட முடியுமா?
நேசமணி நிறுத்திய 'திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்' ஆமோக வெற்றி பெற்றதைத்தான் மறுக்க முடியுமா?
நான் தமிழன் என்ற முறையில் இதைச் சொல்லவில்லை.
நடுநிலையாக ஆராய்ந்தே சொல்கிறேன்.
இன்று யார்வந்தாலும் ஒருநாளிலேயே தெளிவாக புரிந்துகொள்ளும்படியான நிலை இங்கு உள்ளது.
முழுமையாக ஆராய்ந்து நான்கு நாட்களில் எழுத்தில் தருகிறேன்"
"சரி ஐயா! நல்லது"
அப்துல் ரசாக் வரவேற்பறையில் ஒரு மணிநேரமாக காத்திருந்தார்.
சுற்றிலும் ஒரே மலையாளிகள்.
நேருவின் உதவியாளர்(மலையாளி) வந்து அழைத்து உள்ளே போகும்படி கூறினார்.
(தொடரும்)
---------------------------
படம்: இணைக்கக் கோரிய பகுதி மற்றும் மக்கட்தொகை
( Liberation of the Oppressed a Continuous Struggle
எனும் கன்னியாகுமரி வரலாற்று நூலிலிருந்து எடுக்கப்பட்டன)
Wednesday, 5 April 2017
குருதியில் நனைந்த குமரி -16
Friday, 17 June 2016
மீட்கப்பட்டத் தமிழ்மண்
மீட்கப்பட்டத் தமிழ்மண்
***********
1956க்குப் பிறகு தமிழரின் எழுச்சியால் குருதி சிந்தி, உயிர் ஈந்து மீட்கப்பட்ட பகுதிகள் மேலே காட்டப்பட்டுள்ளன.
பகுதிகளில் வடக்கிலுள்ள பகுதி தமிழினத் தலைவரான சிலம்புச்செல்வர்.ம.பொ.சிவஞானம் அவர்களால் மீட்கப்பட்டது.
திருப்பதிவரை மீட்கப் பெரும்பாடு பட்ட மபொசி, தமிழகத்தின் திராவிட செல்வாக்கையும் எதிர்த்து திருத்தணியை மட்டுமே மீட்க முடிந்தது.
ஆந்திரர்களின் பெரும் முயற்சிகளை எதிர்த்து மதராசப் பட்டிணத்தை (சென்னப்ப நாய்க்கர் என்ற தெலுங்கர் நினைவாக திராவிட வந்தேறிகள் 'சென்னை ' என்று மாற்றிவிட்டனர்) பறிபோகாமல் காத்தவர்.
கீழே தெற்கில் கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை பகுதிகளை மீட்டவர் தமிழினத் தலைவரான மார்சல்.நேசமணி ஆவார்.
தேவிகுளம்,பீர்மேடு என இடுக்கி மாவட்டத்தையே (முல்லைப் பெரியாறு அமைந்த பகுதி) மீட்க மலையாளிகளை எதிர்த்து கடும் போராட்டங்களை நடத்தியவர்.
வந்தேறி திராவிடர்கள் காலை வாரியதால் கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டையை வட்டத்தையும் மட்டுமே மீட்க முடிந்தது.
இவர்களின் பெயர்கள் கூட நமக்குத் தெரியாவண்ணம் நாம் இந்த வந்தேறிகளால் காயடிக்கப்பட்டுள்ளோம்.
ஈழத்து மண்ணை மீட்ட தேசியத்தலைவர் திரு.பிரபாகரனைக் கூட கூடிய சீக்கிரம் மறந்துவிடுவோம்.
முக்குக்கு முக்கு கண்ட கண்ட வந்தேறிகளுக்கெல்லாம் சிலை வைத்திருக்கும் நாம், இவ்விரு தலைவர்களுக்கு ஒன்றிரண்டு இடங்களில்தான் சிலை வைத்துள்ளோம்.
(22 ஜூலை 2013)
Sunday, 12 June 2016
குமரிக்கண்டமும் நேசமணியும்
குமரிக்கண்டமும் நேசமணியும்
மூழ்கிப்போன கண்டமொன்று இருந்தாக மேலைநாட்டு அறிஞர்கள் கூறியபோது,
தமிழ் இலக்கியங்களுடன் அதைப் பொருத்திப்பார்த்து
குமரிக்கண்டத்தை மீண்டும் மக்கள் அறியச் செய்தவர்,
ஈழத்தமிழரும்,
தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவருமான கனகசபை ஆவார்.
ஆனால் குமரிமுனை மலையாளிகளிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது.
அதை மீட்டு அங்கிருந்த மக்கள் வணங்கிவந்த (கன்னி) குமரியம்மன் பெயராலும்,
மூழ்கிய குமரிக்கண்டத்தின் நினைவாகவும்,
"கன்னியாகுமரி" என்று பெயர் வைத்தவர் (கிறித்தவரான) நேசமணி ஆவார்.
இதற்கு பின்னணிக் காரணம் 'குமரிக் கண்டத்து வழக்கறிஞர்' என்றழைக்கப்படும் கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை ஆவார்.
தந்தை செல்வாவுக்கு இருபது ஆண்டுகள் முன்பே அதிரடி அரசியல் செய்து,
காமராசரின் ஆதரவு இல்லாமல் போனாலும்,
ஈ.வே.ரா ஆதரவு தர மறுத்து திருப்பி அனுப்பினாலும்,
திராவிடக் கட்சிகள் கண்டுகொள்ளாது போனாலும்,
தன் அறுபத்தைந்து வயதிலும் தளராது போராடி,
பாதியளவு மண்ணையாவது தமிழகத்துக்கு மீட்டுத்தந்த தமிழர் தந்தைதான் நேசமணி அவர்கள்.
சாதியாகவும் மதமாகவும் ஏன் மொழியாலும் பிரிந்து கிடந்த தமிழினத்தினை ஒன்றுதிரட்டி மண்மீட்பில் வெற்றிபெற்ற முதல் தமிழ்தேசியவாதியும் அன்னாரே ஆவார்.
தமிழியத் தலைவர் மார்சல்.நேசமணியை தமிழினம் வரமாய் பெற்ற நாள் இன்று (12-06-1895).
Sunday, 31 January 2016
குருதியில் நனைந்த குமரி -13
குருதியில் நனைந்த குமரி -13
16 நவம்பர் 1954
இராஜாஜியின் நண்பர் மேகநாதன் நாகர்கோவிலுக்கு வந்து வீட்டுக்காவலில் இருந்த நேசமணியைச் சந்திக்கவந்தார்.
நேசமணி வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார்.
ஆங்காங்கே இருந்து வந்த மக்கள் நேசமணியிடம் தமக்கு நடக்கும் கொடுமைகள் அனைத்தையும் கூறிக்கொண்டிருந்தனர்.
"ஐயா வணக்கம், நான் மேகநாதன்"
"வணக்கம் வணக்கம், வாருங்கள்.
துப்பாக்கி சத்தம் கேட்டபிறகும் தமிழகத்திலிருந்து யாரும் வரவில்லையே என்று கவலையில் இருந்தேன்.
நீங்களாவது வந்தீர்களே?!"
"தமிழகத்தின் சார்பாக நான் மன்னிப்பு கோருகிறேன்.
தமிழக மக்களுக்கு செய்திகள் முழுமையாகத் தெரியவில்லை"
"ஆமாம். எங்களுக்கேகூட இழப்பு இவ்வளவு என்று துல்லியமாகத் தெரியாது"
"ராஜாஜிதான் என்னை இங்கே அனுப்பினார்.
விபரங்களை அறிந்துவரச் சொன்னார்"
"ரசாக் அதற்குள் ராஜாஜியை சந்தித்துவிட்டாரா?"
"இல்லையே, ரசாக் தமிழகத்திலா இருக்கிறார்?!"
"என்றால் நீங்கள் இங்கே வந்தது ரசாக் தூண்டுதலினால் இல்லையா?"
"இல்லை, அவர் வந்து கூறித்தான் எங்களுக்கு நிலைமை தெரியவேண்டுமா?
எங்களுக்கு உங்கள்மேல் அக்கறை கிடையாதா?
நாங்கள் உங்கள் போராட்டங்களை ஆரம்பம் முதலே கூர்ந்து கவனித்து வருகிறோம்:
"மிக்க மகிழ்ச்சி, இராஜாஜி எங்கள் மேல் அக்கறையுடன் இருப்பது வியப்பளிக்கிறது"
"அவர் தமிழ்ப் பார்ப்பனர், நம்பூதிரிகள் போன்று அவரைப் பார்க்கவேண்டாம்.
பிராமணர் அனைவரையும் ஒரே பார்வையில் பார்ப்பது எவ்வளவு அறிவீனம்"
"உண்மைதான், மபொசி கூட அடிக்கடி இதைக் கூறுவார்"
"தங்கள் பிரச்சனைகள் அனைத்தும் ராஜாஜிக்குத் தெரியும்.
தற்போதைய நிலையை மட்டும் விளக்கிக்கூறினால் போதும்"
நேசமணி சுருக்கமாகத் தமிழர்கள் மீது நடக்கும் அடக்குமுறையைக் கூறினார்.
மூணாறு தொழிலாளர் பிரச்சனை,
அதற்கு குமரித் தமிழர்கள் குரல்கொடுத்தது,
அதற்காக கைதானது,
அந்த விடுதலையைக் கொண்டாட முடிவு செய்தது,
அதில் 30 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது,
ஊரடங்கு உத்தரவு,
ராணுவ மயமாக்கல்,
3000 மக்கள் அகதிகளாக தமிழகத்தில் நுழைந்தமை,
தமிழ் தலைவர்கள் கைது செய்யப்பட்டு கொடுமைப் படுத்தப்படுவது என அனைத்தையும் கூறினார்.
"கேட்கவே பொறுக்கவில்லை ஐயா,
நான் உடனடியாக ராஜாவைப் பார்த்து எல்லாவற்றையும் கூறுகிறேன்"
"நன்றி, அவரிடம் கூறுங்கள். 25 லட்சம் தமிழர்களின் எதிர்காலம் இதில் அடங்கியிருக்கிறது"
________________________________
அதே 16ஆம் தேதி
காமராசரைச் சந்தித்தார் ரசாக்.
"ஐயா வணக்கம்"
"வணக்கம், ஆமாம் தற்போது அங்கே என்ன நிலவரம்?"
"திருநெல்வேலி காங்கிரஸ் குழு அங்கே போகவிருப்பதால் அடக்குமுறை குறைந்துள்ளது"
"நான் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?"
"நேசமணி ஐயா கடிதம் ஒன்று கொடுக்கச் சொன்னார்.
இதோ இதில் எங்கள் எதிர்பார்ப்புகள் அடங்கியுள்ளன"
வாங்கி படித்தார்.
"இதில் கேரளாவில் இருக்கும் பகுதிகளில் தமிழர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்ற புள்ளிவிபரத்தை நானே வெளியிடவேண்டும் என்று எழுதியிருக்கிறது.
அகதியாக வந்தோருக்கு உதவி செய்யவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வளவுதானா?"
"ஆமாம். இதை நீங்கள் செய்தால் போதும்"
"சரி செய்கிறேன். நீங்கள் மேற்கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்?"
"நேருவைச் சந்திக்கச் செல்கிறேன்"
"ஓகோ, என்றால் நீங்களே இந்த பிரச்சனையைக் கையாளப்போகிறீர்கள்.
நான் தேவையில்லை அப்படித்தானே?"
மார்சல் நேசமணி நேரில் வந்து ஆதரவு கேட்டபோது காமராசர் மறுத்த காட்சி ரசாக் மனதில் வந்துபோனது.
"ஐயா, நான் நேரில் சென்றால் பிரச்சனையின் தீவிரத்தை சரியாக விளக்கமுடியும்"
"நான் ஒரு கடிதம் தருகிறேன்.
என் பிரதிநிதியாக நீங்கள் நேருவைச் சந்தியுங்கள்"
"இல்லை. நான் நேசமணி ஐயாவின் பிரதிநிதியாகவே சந்தித்துக்கொள்கிறேன்"
காமராஜருக்கு ரசாக்கின் கோபம் புரிந்தது.
அவர் சிறிதுநேரம் யோசித்தார்.
சரி, என்னோடு வாருங்கள்.
எச்.டி.ராஜா (எம்.பி) என்பவரையும் அழைத்துக்கொண்டு மூவரும் காரில் கிளம்பினர்.
கார் சென்று நின்ற இடம் இராஜாஜியின் வீடு
______________________________
எல்லைப் போராட்டத்தில் ஆதரவாக நிற்பவர் இராஜாஜி.
அவருடன் இந்த பிரச்சனையைப் பற்றி பேச தன் தனிப்பட்ட வெறுப்பையும் மீறி முதலமைச்சரான காமராசர் நேரில் சென்றார்.
வாசலில் இராஜாஜியின் மகன் அமர்ந்திருந்தார்.
"வாருங்கள் வாருங்கள், அப்பா உங்கள் வரவைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்"
வந்திருந்தவர்கள் திடுக்கிட்டனர்.
நாம் வரப்போவது இராஜாஜிக்கு எப்படித் தெரியும் என்று.
அனைவரும் அமர்ந்தனர்.
ரசாக் "ஐயா, எங்கள் நிலை பற்றி..."
ராஜாஜி "எனக்கு தெரியும்"
காமராசர் "நாம் என்னசெய்ய வேண்டும்?
தமிழகத்தில் போராட்டம் நடத்துவது இதற்கு தீர்வு தருமா?"
இராஜாஜி "இல்லை, அதை முதலிலேயே செய்திருக்கவேண்டும்.
இப்போது சட்டபடி செய்யவேண்டும்"
இரசாக் "நீதிமன்றங்கள் மலையாள வெறியுடன் நடந்துகொள்கின்றன.
மேல்முறையீடு செய்வது அங்கே பலன் தராது"
இராஜாஜி "நீங்கள் திருவாங்கூர் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யுங்கள்.
அவை தள்ளுபடியாகும்.
அதன்பிறகு என்ன செய்யவேண்டும் என்று கூறுகிறேன்.
என் நண்பர் புகழ்பெற்ற வழக்கறிஞர் பாஷ்யமையங்கார் இருக்கிறார்.
அவரை அனுப்புகிறேன்"
காமராசர் "இவர் நேருவைச் சந்திக்கப்போவதாகக் கூறுகிறார்.
தமிழகத்தில் பெருகிவரும் திராவிட ஆதரவு நேருவின் கோபத்திற்கு நம்மை ஆளாக்கியுள்ளது"
இராஜாஜி "ஆமாம், திராவிட நாட்டை தனியாக பிரிக்க ராமசாமி நாயக்கர் ஜின்னாவை சந்தித்தில் இருந்தே அவருக்கு இந்த வெறுப்பு ஏற்பட்டுவிட்டது.
இருந்தாலும் அவரைச் சந்தித்துவிடுதல் நலம்.
நேசமணி திராவிட ஆதரவாளர் கிடையாது என்பதை நேரு புரிந்துகொண்டால் அவர் மனம் மாறலாம்"
ரசாக் "நாங்கள் நேருவின் உத்தரவை மீறிதான் போராட்டம் நடத்தினோம்.
அதனாலும் அவருக்கு எங்கள்மேல் கோபம்"
இராஜாஜி "ம். குமரி தமிழகத்துடன் இணைவது கடினம்தான்.
இந்தி எதிர்ப்பினாலும் அவர் தமிழ்நாட்டை வெறுக்கிறார்.
சரி, நான் என்னால் முடிந்ததைச் செய்கிறேன்"
ராஜா "மாநில புனரமைப்புக் குழுவில் கே.எம்.பணிக்கர் என்றொரு மலையாளி இருக்கிறார்.
அவர் மலையாள இனவெறியராம்.
இது தமிழர்களுக்கு நடக்கும் அநியாயம்"
ரசாக் "அவர் மூணாறு பகுதியை கேரளாவுடன் சேர்ப்பதற்காக வெறிபிடித்து அலைகிறார்.
மூணாறை ஆண்ட பூஞ்சார் ராஜாவையே மலையாளி என்று ஆக்கப்பார்த்தார்.
நேசமணி ஐயாதான் கண்ணன்தேவன் தேயிலைக் கம்பெனி பூஞ்சார் அரசுடன் போட்ட ஒப்பந்தத்தை காட்டி முல்லைப் பெரியாறு ஓடும் பகுதி முழுக்க தமிழருடையது என்பதையும் அந்த அணைக்காகப் போடப்பட்டுள்ள 999 ஆண்டு ஒப்பந்தம் தவறுதலாக அப்பகுதிக்கு உரிமையே இல்லாத திருவாங்கூர் அரசுடன் போடப்பட்டதையும் நிறுவினார்.
பூஞ்சார் அரசர்கள் ஆவணங்கள் தமிழிலும் மீனாட்சியம்மன் துணை என்றே ஆரம்பிப்பதையும் வைத்து அவர்கள் பாண்டிய வம்சாவழி என்பதையும் நிறுவினார்.
இதனால் மூக்கறுபட்ட பணிக்கர் எப்பாடு பட்டேனும் முல்லைப்பெரியாறை கேரளத்துக்கு பெற்றுத்தர சூளுரைத்துள்ளாராம்"
காமராசர் "இந்த குழு முன்வைக்கும் எல்லை வரையறை சரியில்லை என்றால் நாம் அதை நிராகரிக்க முடியும்.
இன்னொரு குழுவை அமைக்கக் கோரமுடியும்"
இராஜாஜி "போன உயிர்களை மீட்க முடியுமா?"
காமராசர் வாயடைத்துப்போனார்.
காமராசர் "என்ன இருந்தாலும் தமிழர்களைக் கொல்லும் அளவுக்கு சென்றிருக்கூடாது.
இதற்கு அவர் பதில் சொல்லிதான் ஆகவேண்டும்"
ராஜாஜி "பட்டம் தாணுப்பிள்ளையின் கட்சியான பி.எஸ்.பி யின் தரப்பிலிருந்து ஒரு குரல் வரவுள்ளது.
பொறுத்திருந்து பாருங்கள்"
இராஜாஜி கூறியது அப்போது யாருக்கும் புரியவில்லை.
ஆனால் அவர் பெரிதாக எதோ செய்யவுள்ளார் என்பது மட்டும் புரிந்தது.
-------------------------------------
அதன் பிறகு அப்துல் ரசாக் எஸ்.எஸ்.கரையாளர், திரு.சிதம்பரநாதன், நூர்முகமது ஆகியோரை அதே நாளில் சந்தித்தார்.
மறுநாள் 17ம் தேதி இந்நால்வரும் காமராசரைப் போய் மீண்டும் பார்த்தார்கள்.
தமிழக அரசின் சார்பில் இவர்கள் நல்லெண்ணக்குழு என்ற பெயரில் நேரில் செல்வதாக முடிவானது.
25.08.1954 இந்த நல்லெண்ண குழு செல்வதாக அறிவிக்கப்பட்டது.
இதற்குள் இதே 17ம் தேதி திருநெல்வேலி காங்கிரஸ் குழு பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்றுவிட்டிருந்தது.
பி.டி.தாணுப்பிள்ளை, கே.டி.கோசல்ராம், சங்கர் ரெட்டியார் ஆகியோர் நிலைமையை நேரில் விசாரித்து நேருவுக்கு ஒரு அறிக்கையை அனுப்பினார்கள்.
எம்.பி நரசிம்மன் என்பவர் ஆலோசனைப்படி ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த காந்தியின் மகன் தேவதாஸ் காந்தியை சந்தித்து ஆதரவு கேட்டார்.
ரசாக் தங்களது பிரச்சனையை பற்றிய ஒரு கையெழுத்து ஆவணத்தைக் கொடுத்தார்.
இதை 22.08.1954 இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் தேவதாஸ் காந்தி வெளியிடச் செய்தார்.
டெல்லியில் மலையாளிகளுக்கு நெருக்கடி முற்றியது.
இந்த நேரத்தில் நடந்தது ஒரு பெரிய திருப்புமுனை.
அதன்பிறகு பட்டம் அரசு ஆட்டங்கண்டது.
(தொடரும்)
_______________________
குருதியில் நனைந்த குமரி -12
https://m.facebook.com/photo.php?fbid=649731501797173&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56