Wednesday, 26 April 2023
திசைதிருப்பும் யாத்திசை
Tuesday, 11 September 2018
கயவாளி கட்டபொம்மன் - 1
கயவாளி கட்டபொம்மன்
- நகைச்சுவை நடையில் கட்டபொம்மன் பரம்பரையின் வரலாறு
பகுதி -1
தெலுங்கர் நுழைவு
------------
கட்டபொம்மன் கொள்ளைக்காரன் என்ற தலைப்பில் தமிழ்வாணன் அவர்கள் எழுதிய நூல் ஆளும் தெலுங்கு வந்தேறிகளால் மறுபதிப்பு வராமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது.
அந்நூல் காட்டிய ஆங்கிலேயர் காலச் சான்றுகள் வைக்கப்பட்டிருந்த எழும்பூர் ஆவணக் காப்பகம் கருணாநிதி அரசால் கொளுத்தப்பட்டு சாம்பலாக்கப்பட்டுவிட்டது.
தற்போது கம்பளத்தார் சமூகத்தால் தமிழ்வாணனின் மகனுடன் சமரசம் பேசப்பட்டு அந்நூல் நிறுத்தப்பட்டுவிட்டதாக அறிவிப்பு வந்துள்ளது.
கட்டபொம்மன் என்கிற கெட்டிபொம்மு பற்றிய உண்மைகளை மீள ஆவணப்படுத்துவது அவசியமாகும்.
------------------
பதிவர்: அன்பெழில் (anpezhil)
தமிழர் வரலாற்றில் தெலுங்கர்கள் செய்த தகிடுதத்தங்கள் சொல்லி மாளாது.
வரலாற்றை மாற்றி, தங்கள் சுய அடையாளம் மறைத்து தமிழராக உருமாறி அவர்கள் காட்டிய, காட்டும் குரளிவித்தைகளை சமீபகாலம் வரை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
அவர்களில் முக்கியமானவன் நமக்கெல்லாம் வீரபாண்டியக் கட்டப்பொம்மனாக பி.ஆர்.பந்துலு நாயக்கனால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட கெட்டிப்பொம்மு நாயக்கன்.
பால்வாடி பொடிசுகளின் மேடைநாடகங்களிலும், பல்லுப்போன பெரிசுகள் டீக்கடைகளில் சிலாகித்து ஆத்தும் சிறப்புறைகளிலும் “வானம் பொழிகிறது, பூமி விளைகிறது” புகழ் வீரபாண்டியக் கட்டப் பொம்மனாக சித்தரிக்கப்பட்ட கட்டப்பொம்முவின் கதை உண்மையென்றே நம்பியவர்களுள் அடியேனும் ஒருவன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு முறை திராவிட ஆதிக்கம் தொடர்பான கட்டுரைகளை இணையத்தில் தேடித் தேடி வாசித்துக் கொண்டிருந்தேன்.
தேடலின் முடிவில் அது தெலுங்கர்களின் வரலாற்றில் போய் நின்றது.
தெலுங்கர்களின் வரலாற்றை அவர்களின் பக்கங்களில் தேடியபோது கட்டப்பொம்மனைப் பற்றிய அவர்களின் பெருமை பீத்தக்கலய உரைகளை வாசிக்க நேரிட்டே விட்டது.
அன்று துவங்கிய பொம்முநாயக்கன் பற்றிய தேடல் இன்றும் முடிவுறவில்லை.
ஒன்று மட்டும் உறுதி.
அவன் பாண்டிய மன்னன் இல்லை.
பாண்டிய மன்னன் எவனும் அவனுக்கு அப்பனாக இருந்ததும் இல்லை.
எனினும் அவன் ஒரு சுத்தத் தெலுங்கன் என்பதையும், வெள்ளையருக்கு அஞ்சி பணிந்தவன் என்பதையும், ஊர்புகுந்து திருடிய கொள்ளைக்காரன் என்பதை நிரூபிக்கும் சான்றுகள் வரையுமாவது கிடைத்து விட்டது.
அனைத்தையும் புத்தகமாக்கும் முன்பு அவற்றை சுருக்கி மக்கள் மன்றத்தில் வைக்கின்றேன்.
தெலுங்கு நாயக்கர்கள் புளகாங்கிதப்பட்டு போற்றிப் புகழும் கட்டப்பொம்மன் ஒரு சுதந்திரப் போராட்ட வீரனா அல்லது டவுசரை ஈரமாக்கிக் கொள்ளும் தொடைநடுங்கி ஓடுகாலியா என்பதை வரும் அத்தியாயங்களைப் படித்தபின்பு முடிவெடுங்கள்.
தமிழகத்திற்கு வந்து சேர்ந்த தெலுங்கர்களை குறைந்தது மூன்று வகைப்படுத்தலாம்.
முகமதியர்களின் காட்டுத்தனமான ஆக்கிரமிப்பிற்கு அஞ்சி பெண்டு பிள்ளைகளோடு கூட்டம் கூட்டமாய் வந்தேறியவர்கள்.
வேட்டையாடும் சாக்கில் காட்டுநாய்களோடு மருதநிலத்தை ஆக்கிரமித்து வந்தேறியவர்கள்.
விஜயநகர பேரரசின் பெயரால் வெளிப்படையான ஆக்கிரமிப்பில் வந்தேறியவர்கள்.
பாண்டிய அரசில் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி வந்தேறிய தெலுங்கு நாயக்கர்களின் முதல் பிதாமகன் விசுவநாத நாயக்கன்.
பாண்டியநாட்டை முதலில் ராமநாதபுரம் துவங்கி மணியாச்சி வரை பதினாறு பாளையங்களாகப் பிரித்தான்.
இந்தப் பாளையங்கள் பெரும்பாலும் மறவர் பாளையங்களாக இருந்தது அவனுக்குப் பெரும் தலைவலியாக இருந்தது.
பிறகு அதற்கும் வடுகர்கள் பாணியில் ஒரு திட்டம் தீட்டினான்.
படைவீரர்களாகவும், அரசப் பிரதிநிதிகளாகவும், வேட்டையாடவும், ஆடுமாடு மேய்க்கவும், பஞ்சத்தாலும், குறிசொல்லி பிழைக்கவும், முகமதியர்களின் அச்சுருத்தலுக்குப் பயந்தும் லக்கண்ணா, மாடண்ணா காலந்தொட்டே ஏராளமான தெலுங்கர்கள் தமிழகத்தில் குடியேறி இருந்தனர்.
அவர்களைத் தேடியெடுத்து நிலபுலன்களை வழங்கி மறவர் பாளையங்களைச் சுற்றி குடியேற்றினான்.
பின்பு பதினாறு பாளையங்களை பிரித்து 72 பாளையங்களாக்கினான்.
ஒவ்வொரு மறவர் பாளையங்களைச் சுற்றியும் குடியேறிய தெலுங்கர்களுக்கு பாளையங்கள் பிரித்து அமைக்கப்பட்டது.
இந்த தெலுங்கு பாளையங்கள் கம்பளத்தார் பாளையம் எனப்பட்டது.
இந்த 72பாளையங்களில் தேடிப்பார்த்தாலும் ‘பாஞ்சாலங்குறிச்சி’ எனும் பெயர் லேது!
பாண்டிய மன்னர்களின் காலத்தில் பாண்டியநாடு ஐம்பத்தியிரண்டு கூற்றங்களாகப் பிரித்து நிர்வகிக்கப்பட்டது.
இந்த ஐம்பத்தியிரண்டு கூற்றங்களிலும் லென்ஸ் வைத்துத் தேடிப் பார்த்தாலும் பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயரையே கானவில்லை!
அப்போ, வீரபாண்டிய கட்டப்பொம்மனின் 47வது பரம்பரை, 600ஆண்டுகால ஆட்சி என பொம்முநாயக்கனின் ரசிக குஞ்சுகள் பீலா விடுவது?!
முதலில் இந்த பாளையப்பட்டு முறை என்றால் என்ன?
கிட்டத்தட்ட குறுநில மன்னர்கள். வரி வசூல், நீதி வழங்குதல், படை வைத்துக் கொள்வது, பாதுகாவல் புரிவது இவையெல்லாம் பாளையக்காரர் பொறுப்பு.
வரும் வருவாயில் ஒரு பங்கு பாளையத்தின் நிர்வாகத்திற்கு.
மற்றொரு பங்கு நாயக்கப் பேரரசுக்கு.
இன்னொரு பங்கு பாளையக்காரருக்கு.
பாளையத்து மக்களின் உழைப்பை வரியாக வசூலித்து மூன்றில் ஒருபங்கை நெய்போட்டுச் சாப்பிட்டுத்தான் சைடுக்கொண்டை வந்தேறிகளுக்கு வயிறு ஜோதிகா போல் ஆனது போலும்!
ஆந்திரர்கள் தமிழ் மண்ணில் உல்லாசமாக வாழ்வதற்காக ஏற்படுத்தப்பட்ட பாளையப்பட்டு முறை சீரும் சிறப்புமாக செயல்பட்டு, மேலும் பல புதிய கம்பளத்துப் பாளையங்கள் தோன்றி தமிழகம் மொட்டையடிக்கப்பட்டது.
அவை பற்றிய விபரங்கள் இணையத்திலேயே ஏராளமாக கிடைக்கிறது.
கட்டப்பொம்மன் பரம்பரையினர் 12ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலேயே பாஞ்சாலங்குறிச்சிக்கு அதிபதிகளாய் இருந்தனர் என கட்டப்பொம்மனின் தொண்டரடிப் பொடியாழ்வார்கள் எழுதிய நூல்களில் பெருமை பீற்றியிருக்கின்றனர்.
எனினும் வரலாற்றில் தேடிப்பார்த்தால் 18ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயரே கிடையாது.
கட்டப்பொம்மன் வம்சம் எனும் பேச்சே கிடையாது.
அப்படியானால் தெலுங்கர்களால் போற்றிப் புகழப்படும் மாமன்னன் கட்டப்பொம்மனின் வீரம் மிகுந்த வம்சம் வரலாற்றில் எங்கு ஒளிந்திருந்தது?
- தொடரும்
--------------
அடுத்த பகுதி
'காட்ர கட்டபிரமையா'
Sunday, 26 August 2018
தமிழ்தேசியக் கருத்தியல் ஒப்பீடு
தமிழ்தேசியக் கருத்தியல் ஒப்பீடு
கேள்வி: உலகம் அழிய ஒரு மணிநேரம் உள்ளது.
அதை யாராலும் தடுக்கமுடியாது.
நீங்களும் ஒரு அழகான இளம்பெண்ணும் ஒரு தனி அறையில் இருக்கிறீர்கள்.
என்ன செய்வீர்கள்?
சாமானியன்:
அந்த பெண்ணை உடலுறவுக்கு அழைப்பேன்.
மறுத்தால் கட்டாயப் படுத்துவேன்.
காந்தியவாதி:
வலிக்காமல் எப்படி தற்கொலை செய்துகொள்வது என்று சொல்லிகொடுப்பேன்.
நானும் அவளுக்கு இடைஞ்சல் இல்லாமல் சாவேன்.
பெண்ணாதிக்கவாதி:
நான் அந்த பெண்ணாக இருந்தால் உடைகளை விலக்கி உடலுறுப்புகளைத் திறந்துகாட்டி அந்த ஆண் நெருங்கி வரும்போது அவன் பார்வையில் தவறு உள்ளதாக குற்றம்சாட்டுவேன்.
இளைத்தவன் என்றால் அவனை அடித்து உதைப்பேன்.
கிறித்துவவாதி:-
பைபிளில் கூறியபடி உலகம் அழிகிறது எனவே அவளிடம் கிறித்தவத்திற்கு மாறினால் நரகத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறி மதம் மாறச்செய்வேன்.
இருவரும் பாவ மன்னிப்பு கேட்போம்.
இந்துத்துவவாதி:-
கலியுகம் முடியப் போகிறது.
மனிதர்களின் பாவம் எல்லை கடந்துவிட்டதால் கடவுள் உலகத்தை அழிக்கிறார்.
எனவே அவளுக்கு ஸ்லோகம் சொல்லிக்கொடுத்து பிரார்த்தனையில் ஈடுபடச்சொல்வேன்.
இசுலாமியவாதி:
அவளை மதம் மாறச்சொல்வேன்.
அவளை பர்தாவால் மூடி ஓரமாக அமரவைத்து விட்டு நான் தொழுகையில் ஈடுபடுவேன்.
பௌத்தவாதி:
அவள் உடலுறவுக்கு அழைத்தால் அந்த ஆசையை விடச் சொல்வேன்.
இருவரும் உண்ர்ச்சியின்றி அமர்ந்திருப்போம்.
சமணவாதி:
உடைகளைக் களைந்துவிட்டு அமர்வோம்.
என்னை நானே துன்புறுத்திக் கொள்வேன்.
ஆன்மீகவாதி:-
இருக்கும் நேரத்தை எப்படி சந்தோசமாக கழிப்பது என்று பார்ப்பேன்.
தியானம், யோகா செய்வேன்.
கவலைகளை மறந்து மகிழ்ச்சியான தருணங்கள் பற்றி கலந்துரையாடுவோம்.
நடுநிலைவாதி:
உலகம் அழிந்ததில் எங்கள் இருவர் மீதும் சமமான தவறிருக்கிறது என்று அவளுக்கு புரியவைப்பேன்.
அவள் மறுத்தால் வாக்குவாதத்தில் ஈடுபடுவேன்.
மனிதநேயவாதி:
அவளுக்கு உடலுறவு தேவைப்படுகிறதா என்று கேட்பேன்.
அவளுடைய ஆசை எதையாவது கூறினால் அதை என்னால் நிறைவேற்றமுடியுமா என்று பார்ப்பேன்.
திராவிடவாதி:
உலக அழிவு பார்ப்பனரால் வந்தது என்றும் பெரியார் இருந்திருந்தால் இதை எப்படியெல்லாம் தடுத்திருப்பார் என்றும் பத்து புத்தகம் எழுதுவேன்.
பொதுவுடைமைவாதி:
உலக அழிவு பெருமுதலாளிகளால் வந்தது என்பதையும்
இயற்கையை அழித்து அவர்கள் அடைந்த லாபத்தில் தொழிலாளர்களுக்கு பங்கும் கொடுக்கவில்லை என்பதையும் அவளுக்கு கடினமான வார்த்தைகளால் புரியவைக்க முயற்சிப்பேன்.
தலித்தியவாதி:
உயர்சாதியினர் அழிந்தனர் என்று சந்தோசப்படுவேன்.
அந்த பெண் உயர்சாதி என்றால் காலில் விழுந்து என்னை எதுவும் செய்துவிடவேண்டாம் என்று கேட்டுக் கொள்வேன்.
அவள் உடலுறவுக்கு அழைத்தால் கத்தி கூப்பாடு போடுவேன்.
சோசலிசவாதி:
அவளுடன் நட்பாக பேசி தொட்டு உணர்ச்சிகளைத் தூண்டி உடலுறவுக்கு சம்மதிக்க வைப்பேன்.
மறுத்தால் கோபம் கொள்ளாமல் நட்புடன் பேசுவதைத் தொடர்வேன்.
பழமைவாதி:
அவளை உடலுறுவுக்கு அழைப்பேன்.
வராவிட்டால் அடிப்பேன்.
நவீனத்துவவாதி:
என் கைபேசியிலிருந்து ஆபாச படத்தை அவளுக்கு காட்டி அதுபோலச் செய்யலாம் என்பேன்.
கற்பு, ஒழுக்கம் எல்லாம் மூடநம்பிக்கை என்று கூறுவேன்.
சுற்றுச்சூழல் போராளி:
இயற்கையை நமது பேராசையால் அழித்துவருவதைப் பற்றி நான் எழுதிய புத்தகங்கள், போராட்டங்கள், கோரிக்கைகள் ஆகியன பற்றி கூறுவேன்.
யாருமே கேட்கவில்லையே என்று வருத்தப்படுவேன்.
தமிழ்தேசியவாதி:
குமரிக்கண்டம் மூழ்கிய போது மீன்களைப் பின்தொடர்ந்து பாண்டியர் தப்பித்த வரலாறையும்
கடல் நீரோட்டத்தில் செல்லும் ஆமைகளைப் பின்பற்றி சோழர்கள் உலகமெல்லாம் குடியேறிய வரலாறையும் அந்த பெண்ணிடம் எடுத்துக்கூறுவேன்.
இருவரும் அறையை விட்டு வெளியே வருவோம்.
பிற உயிரினங்கள் என்ன செய்கின்றன என்று கவனித்து பின்பற்றி தப்பிக்க இறுதிவரை முயல்வோம்.
Thursday, 15 March 2018
அந்நியர் ஆட்சிக்கு முந்தைய தமிழகம்
அந்நியர் ஆட்சிக்கு முந்தைய தமிழகம்
**********************************
சோழர் வீழ்ந்து பாண்டியர் எழுச்சிபெற்றிருந்த காலம் அது.
கி.பி. 1251ல் ஆட்சிக்கு முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் 12 ஆண்டுகள் தொடர்ந்து போர் புரிந்து தமிழகத்தை ஒற்றையாட்சியில் கொண்டுவருகிறான்.
அவனது மகன் முதலாம் குலசேகர பாண்டியன் ஆண்ட காலத்தில் பாண்டிய நாடு அமைதியாகவும் வலிமையாகவும் விளங்கியது.
உண்மையில் இவனே கடைசி தமிழ் அரசன் ஆவான்.
இவனது காலத்தில்தான் கி.பி. 1293 இல் மார்க்கோ போலோ எனும் இத்தாலி நாட்டு பயணி தமிழகம் வருகிறார்.
இவரது குறிப்புகள் அந்நியர் ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் முன் தமிழகத்தின் நிலையை அறிய பெரிதும் உதவுகின்றன.
மார்க்கோபோலோ காலத்திற்கு பிறகு பாண்டிய வாரிசுகளிடையே உள்நாட்டுப் போர்,
அதன் விளைவாக 1311ல் டெல்லி சுல்தானிய படையெடுப்பு,
அதன் விளைவாக 1362 இல் நாயக்கர் படையெடுப்பு என தமிழகத்தின் வீழ்ச்சிக்காலம் தொடங்கியது.
தமிழகம் வலிமையாக இருந்தபோது வருகை தந்த மார்க்கோபோலோவின் குறிப்புகள் அவரது நண்பரால் "இல் மிலியோன் - மார்க்கோபோலோவின் பயணங்கள" (il milion - the travels of marcopolo) என்ற புத்தகமாக வெளியிடப்பட்டது.
1293 இல் தஞ்சைக்கு அருகே உள்ள காவிரி பூம்பட்டிணம் வந்திறங்கிய மார்க்கோபோலோ ஓராண்டு தமிழகத்தில் சுற்றித் திரிந்துள்ளார்.
கடைசியாக மயிலாப்பூருக்கும், புனித தோமையார் ஆலயத்திற்கும் சென்றார்.
அவரது குறிப்புகள் இன்று நூறுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புகளுடன் வெவ்வேறு திரிபுகளுடன் கிடைக்கிறது.
மார்க்கோபோலோவின் குறிப்புகளே ஐரோப்பியருக்கு தமிழகத்தின் மீது வணிக ஆர்வத்தைத் தூண்டியதாகவும்
அதன் விளைவாக தமிழகத்தின் குழப்ப நிலையை பயன்படுத்தி ஆங்கிலேயர் ஆட்சியைப் பிடிக்க முடிந்ததாகவும் கூறுவர்.
தமிழகத்தை பற்றி மார்க்கோபோலோ குறித்தவற்றில் முக்கியமானவை கீழே,
* தமிழக அரசர்களும் பிரபுக்களும் தரையிலேயே எப்போதும் அமர்கின்றனர்.
கேட்டால் "மண்ணில் அமர்வதே பெருமை! மண்ணிலிருந்து தோன்றினோம்! இறந்த பிறகு மண்ணுக்குள்ளேதான் போகப்போகிறோம்" என்று பதிலளித்தனர்.
* தமிழகம் வெப்பமான பிரதேசம்.
மெல்லிய ஆடைகளே அனைவரும் உடுத்துகின்றனர்.
அரசனும் அவ்வாறே. ஆனால் அவனது ஆடையில் நவரத்தினம் பதிக்கப்பட்டு இருந்தது.
* வர்த்தகம் சிறந்து விளங்கியது.
இரவிலும் பயணிகள் நெடுஞ்சாலைகளில் விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு பயமில்லாமல் பயணம் செய்கின்றனர்.
* நான் பயணம் செய்த இடங்களிலேயே தமிழகம்தான் செல்வச் செழிப்பான இடம்.
(தமிழகம் வரும் முன்பே ஐரோப்பா முதல் சீனா வரை பயணம் செய்தவர்)
* உலகிலேயே பெரும்பான்மை முத்துக்களும் ரத்தினங்களும் தமிழகம் மற்றும் இலங்கையில்தான் கிடைக்கின்றன.
* பொதுவான தமிழர்கள் மது அருந்துவதில்லை
* அரிசி மட்டுமே பயிரிடப்படும் ஒரே தானியம்
* தமக்கென்று தனியே ஒரு குடுவை வைத்துக்கொண்டு அதிலே தண்ணீரை சேமித்து வைத்து பருகுகின்றனர்.
அதை உதடு படாமல் பருகுகின்றனர்.
* வெற்றிலை, சுண்ணாம்பு, வாசனை திரவியங்களுடன் தாம்பூலம் போட்டு கண்ட இடங்களில் துப்புகின்றனர்.
* அவமானப்படுத்த காறித் துப்பும் வழக்கம் உள்ளது.
இதனால் சண்டைகள் வருகின்றன
* ஆருடம் பார்ப்பது, குறிகேட்பது, சகுனம் பார்ப்பது ஆகியனவற்றில் உலகிலேயே அதிக கவனம் செலுத்துவோர் தமிழர்களே.
* முத்துக்குளிக்க செல்பவர்களை சுறாமீன் தாக்காமல் இருக்க பார்ப்பனர்கள் கரையில் மந்திரம் ஓதுகின்றனர்.
20 முத்துக்கு ஒரு முத்து சம்பளமாகப் பெறுகின்றனர்.
* தமிழர்கள் போரிட ஈட்டியும் நீண்ட கேடயமும் பயன்படுத்துகின்றனர்.
பெரிய பலசாலிகள் என்று கூறமுடியாது.
* பசுக்களை தெய்வமாக வணங்குகின்றனர். மாட்டிறைச்சி தின்பதில்லை
* கடல் தாண்டி பயணிப்பது வறுமையின் அடையாளமாக எண்ணுகிறார்கள்.
* உடலுறவின்போது எந்த விதமாக உறவு கொண்டாலும் தவறாக பார்க்கப்படுவதில்லை
(அந்த காலத்து ஐரோப்பா கிறித்துவ மதவெறி ஓங்கி எப்படி உடலுறவு கொள்ளவேண்டும் என்றெல்லாம் சட்டம் போட்டிருந்த காலம்)
* மாதம் ஒருமுறை கன்னிப் பெண்கள் கூடி தெய்வங்களுக்கு உணவும் மாமிசமும் படைத்து ஆடி பாடி வழிபடுகிறார்கள்.
இது தெய்வக்குற்றம் ஆகாமல் இருக்க செய்யப்படுகிறது.
அடுத்தநாள் பூசாரி தெய்வங்கள் இறங்கி வந்து படையலை ஏற்றுக்கொண்டு அருள்பாலித்ததாக கூறுகிறார்.
(மார்க்கோபோலோ தீவிர கிறித்தவர் அதனால் பிற மதங்களையும் சடங்குகளையும் அவர் சிறிது மதிப்பு குறைவாகவே குறித்துள்ளார்)
* கருப்பு நிறமாக இருப்பது அதிகம் மதிக்கப்படுகிறது.
குழந்தை பிறந்தவுடன் வாரத்திற்கு ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுகின்றனர்.
இதனால் குழந்தை அதிக கறுப்பு நிறத்துடன் வளருமாம்.
கடவுள்களை கறுப்பு நிறமாகவும் சாத்தான்களை பனி போல வெண்மையான நிறமாகவும் உருவகப்படுத்துகின்றனர்.
* துறவிகள் பரவலாக காணப்படுகின்றனர்.
காய்ந்த இலைகளில் குறைந்த அளவு உணவு உண்டு 200 ஆண்டுகள் வரை கூட வாழ்கின்றனர்.
நிர்வாண யோகிகள் உண்டு.
ஆணுறுப்பை பாவத்திற்கு பயன்படுத்தாத்தால் அதை மறைப்பதில்லை என்று கூறுகின்றனர்.
எல்லா உயிர்களையும் ஆன்மா இருப்பதால் உயர்வாக மதிக்கின்றனர்
* அரசர்களுக்கு 500 மனைவிகள் வரை உண்டு.
பெண்களின் பொருட்டு இரண்டு சகோதரர்களுக்கு இடையே சண்டை வந்தால் அவர்களது தாய் தலையிட்டு சண்டையை நிறுத்தாவிட்டால் பாலூட்டிய மார்பகங்களை அறுத்தெறிவதாகக் கூறி சமாதானத்திற்கு தள்ளுகிறாள்
* தமிழகத்தில் குதிரைகள் இனப்பெருக்கம் செய்வதில்லை.
ஏடன் நாட்டிலிருந்து ஆண்டுக்கு சுமார் 2000 குதிரைகள் வந்திறங்குகின்றன.
சரியான பராமரிப்பு இன்றி அவற்றில் 100 குதிரைகள் மட்டுமே ஓராண்டுக்கு மேல் உயிருடன் இருக்கின்றன.
குதிரை வணிகர்கள் வேண்டுமென்றே குதிரை மருத்துவர்களை இங்கே அனுப்புவதில்லை.
இதனால் குதிரை விரைவிலேயே இறக்கும், அவர்களுக்கு வணிகம் பெருகும்.
ஒரு குதிரை 200 தினார் வரை விற்கப்படுகிறது.
* நான் பார்த்ததிலேயே காயல் (இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பழைய காயல்)
துறைமுகமே மிகப்பெரியது.
உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இங்கே கப்பல்கள் வருகின்றன.
* அரசர் தமிழகத்திற்கு வரும் வணிகர்களையும் மற்றவர்களையும் வெகுமதிகள் வழங்கி கவனிப்பதால் வெளிநாட்டவர் தமிழகம் வர ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
* அரசர் மாறவர்மன் குலசேகர பாண்டியன் திறமையாகவும் பாரபட்சம் காட்டாமலும் ஆட்சி செய்கிறார்.
அவரது ஸ்திரமான ஆட்சியால் கருவூலம் நிரம்பி வருகிறது.
இவ்வாறு தமிழகத்தின் நிலையை குறித்துள்ளார் மார்க்கோபோலோ.
அதாவது 725 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தில் ஓரளவு மூட நம்பிக்கைகளும் பெண்ணடித்தனமும் நிலவியுள்ளது.
ஆனாலும் செல்வ செழிப்பும் ஒழுக்கமும் சமத்துவமும் நிலவியதாகத் தெரிகிறது.
Monday, 10 July 2017
சடையவர்மன் சுந்தர பாண்டியன்
சடையவர்மன் சுந்தர பாண்டியன்
முதலில் வடுகர் படைத்தலைவனை அனுப்பி போர்தொடுத்த சேரமன்னனை அவனது நான்கு மடங்கு பெரிய படையோடு மோதி முறியடிக்கிறான்.
அதன்பிறகு அரை வடுகர்களாகிவிட்ட (சாளுக்கிய) சோழர்கள் மீது போர்தொடுத்து அவர்களை அடக்கிவிட்டு
அப்படியே வடமேற்கில் ஒய்சளர்களை ஓட ஓட விரட்டிவிட்டு
வட கிழக்கில் பல்லவ வம்சாவழி காடவர்களை வென்று அடக்குகிறான்.
தெற்கே ஈழத்தில் நுழைந்து பாதி தீவை பிடிக்கிறான்.
இறுதியாக வடமேற்கில் தெலுங்கு சோழர்களை முற்றாக அழிக்கிறான்.
நெல்லூரில் வீராபிசேகம் செய்துகொள்கிறான்.
இராசராசன் இராசேந்திரன் ஆகியோரை விட அதிக சாதனைகள் புரிந்தவன் இவனே!
அன்றைய தமிழ்தேசியத்தின் வடிவம்!
(எப்படி மண உறவு மூலம் சோழர்களை கலப்பாக்கி வீழ்த்தினார்களோ!
அதேபோல பாண்டிய வாரிசுகளைத் தூண்டிவிட்டு அவர்களுக்குள்ளே மோதவிட்டு வீழ்த்தினார்கள்)
Sunday, 9 July 2017
கோவிலுக்கு நிலமும் தானமும் வழங்கிய பறையர்
கோவிலுக்கு நிலமும் தானமும் வழங்கிய பறையர்
இந்துத்துவ சார்புடைய ஒரு கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்ட பகுதி
----------------------
அம்பாசமுத்திரம் பூவன் பறையன் கல்வெட்டு கூறும் செய்தி
June 27, 2017
- ஆர். கோபிநாத்
மூன்றாம் ராஜசிம்ம பாண்டியன் முதலாம் பராந்தகன் என்னும் சோழ மன்னன் காலத்தவன்.
இவன் காலம் பொ.பி. 10 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதி பொ.பி.920 வரை ஆண்டதாக சொல்கிறார்கள்.
இவன் கல்வெட்டுகள் தான் சடைய மாறன் என்னும் பெயரில் வெளியிடப்பட்டது.
இன்றைக்கிருந்து 1100 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் திருமூலநாதர் கோயிலில் ஒரு கல்வெட்டு இருக்கிறது.
(ஊர்மக்கள் சின்னக்கோவில் என்று அழைப்பர்)
அந்த கல்வெட்டு படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
படம் தெளிவாக இல்லாததால் அதை நானே இங்கு தருகிறேன்.
முள்ளிநாட்டு இளங்கோய்க்குடிக்கு மேற்கே புற்றும் தெற்றுமாக இருந்த ஒரு பாழ் நிலத்தை ஊர் சபையாரிடம் இருந்து வாங்கி, அந்த பாழ் நிலத்தைத் திருத்தி ஒரு குளமும் உருவாக்கி, அந்தக் குளத்து தண்ணீரால் விவசாயம் செய்து, அதிலிருந்து தூணி நெல்லும் குளத்திலிருந்து நீர் இறைக்க ஒரு ஆளும் கொடுப்பதாகவும், இந்த நிலத்திற்கு பறையன் வசக்கல் என்று பெயரிடுவதாகவும், கோயில் விளக்கேற்ற நெய்க்கு ஒரு பசுவும் கன்றும் தானமளிப்பதாகவும், சந்திராதித்தவர் உள்ளவரை இந்த தானம் தொடரும் என்று அரையன் அணுக்கரில் பூவன் பறையன் என்பவன் தானமளித்து, தானே இந்த கல்வெட்டை வெட்டியும் இருக்கிறான்.
பூவன் பறையனேன் என்று கல்வெட்டில் பெயரும் உள்ளது.
அரையன் அணுக்கர் என்பவர் அரசனின் மெய்க்காவல் படை வீரர்கள் அதாவது அந்தரங்க காவலர்கள்.
அரசனோடு அரண்மனை உட்பட அவன் போகும் இடம் அனைத்திலும் இருந்து அவனை காக்கும் பொறுப்பை ஏற்றவர்கள்.
இத்தகைய உயர்ந்த இடத்தில் இருப்பவன் இந்த பூவன் பறையன்.
இவன் தன் பெயரில் ஒரு நிலத்தை வாங்கி, அதை தானமாக கோயிலுக்கு அளித்து, அதை கல்லில் வெட்டிக்கொள்ளும் உரிமையும் பெற்றுள்ளான்.
ஆக பறையர் சாதியினர் குறைந்தது 10 ஆம் நூற்றாண்டு வரை சமூகத்தில் நல்ல நிலையில் தான் இருந்துள்ளனர்..
தென் தமிழகத்தில் 17ஆம் நூற்றாண்டு வரை பறையர்கள் நல்ல நிலையில் தான் இருந்திருக்கிறார்கள்.
வெள்ளைக் குதிரை ஏறவும், பதினாறு கால் பந்தல் போடவும், 18 வகை இசை கருவிகளை வாசித்துக்கொள்ளவும் உரிமை பெற்றவர்களாய் இருந்தனர்.
இப்படி இருந்தவர்கள் தான் ஏதோ ஒரு கால மாற்றத்தில் சமூகத்தில் தாழ்வு நிலையை சந்தித்துள்ளனர். தமிழகத்தின் மற்றொரு முக்கிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினராக பள்ளர்களைக் குறித்தும் இதே போன்ற வரலாற்றுச் சான்றுகளைக் காண்பிக்க முடியும்.
-------------------
'தமிழ் ஹிந்து' இணையத்தில் உள்ள இக்கட்டுரை மேற்கொண்டு இசுலாமிய ஆட்சியையும் பிரிட்டிஷ் ஆட்சியையும் குற்றம் சாட்டுகிறது.
எனவே பறையர் தொடர்பாக நமக்குத் தேவையான பகுதியை மட்டும் இங்கே தந்துள்ளேன்.
கட்டுரையில் 'ஏதோ ஒரு கால மாற்றத்தில்' என்று மழுப்புவது தெலுங்கர் ஆட்சி காலத்தில் நடந்த மாற்றத்தைத்தான் (அவர்கள் ஹிந்து என்பதால்!)
// பறையர் சாதியினர் குறைந்தது 10 ஆம் நூற்றாண்டு வரை சமூகத்தில் நல்ல நிலையில் தான் இருந்துள்ளனர்//
அதாவது கி.பி.1000 வரை நல்லநிலையில் பறையர்கள் இருந்தனர்.
கிபி.1070 ல் இராசேந்திர சோழனின் மகள்வழிப் பேரனான சாளுக்கிய இளவரசன் சோழர் அரியணையைக் கைப்பற்றினான்.
அதாவது பாதி கன்னடன்.
அநாபய சாளுக்கியன் என்ற பெயரை குலோத்துங்க சோழன் என்று மாற்றிக்கொண்டு ஆட்சி செய்தான்.
இதன்பிறகு தமிழகத்தின் வீழ்ச்சி தொடங்கியது.
பாண்டியரும், சேரரும், பல சிற்றரசர்களும் கலகம் செய்யத் தொடங்கினர்.
கன்னட தெலுங்கு அரசர்களும் தமிழகத்தில் நுழைந்தனர்.
இருநூறு ஆண்டுகள் அதாவது கி.பி 1280 வரை இந்த குழப்பநிலை நீடித்தது.
அதன்பிறகு பாண்டியர் பேரரசு அத்தனை வேற்றினத்தவரையும் அகற்றிவிட்டு தமிழகம் மற்றும் ஈழம் வரை பரவினாலும் அது 100 ஆண்டுகள் கூட நிலைக்கவில்லை.
பாண்டிய வாரிசுரிமைப் போர்களால் அது வலுவிழந்தது.
இந்த நேரத்தில் கி.பி.1330 ல் மங்கோலிய- துருக்கிய வம்சாவழி டெல்லி சுல்தான்களால் வட தமிழகம் கைப்பற்றப்பட்டது.
அதன்பிறகு தெலுங்கு அரசர்கள் நுழைந்தனர்.
வடதமிழகம் வேற்றின ஆட்சியிலே இருந்து பிறகு மீளவேயில்லை.
// தென் தமிழகத்தில் 17ஆம் நூற்றாண்டு வரை பறையர்கள் நல்ல நிலையில் தான் இருந்திருக்கிறார்கள்//
கிபி 1350 பிறகு தென் தமிழகத்தில் பரவியது விஜயநகர பேரரசு.
தெற்கே பாண்டியர்கள் தெலுங்கருக்கு அடங்கிய சிற்றரசுகளாக இருந்ததால் ஓரளவு தமிழர்கள் நிலை இருந்தது.
பாண்டியர் புகழ் மங்கி நலிவடைந்து கிபி 1600களில் பாண்டியர் அரசு மறைந்தது.
அதனால் 17ம் நூற்றாண்டில் தெற்கேயும் பறையர்கள் தெற்கேயும் வீழ்ந்தனர்.
சங்ககாலத்திலும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருந்தன.
ஆனால் மிக மோசமான அளவில் இருந்ததில்லை.
தமிழர் ஆட்சியில் சாதிய ஒடுக்குமுறைகள் இருந்ததேயில்லை.
தமிழகத்தில் வேற்றின அரசுகளே சாதிய ஏற்றத்தாழ்வுக்கு அடித்தளமிட்டன.
முதலில் விஜயநகரப் பேரரசு அதன் பிறகு ஆங்கிலேயர் என நிலவுடைமைச் சமூகம் உருவாக்கப்பட்டு உழைக்கும் மக்கள் ஒடுக்கப்பட்டு உற்பத்தி முழுக்க சுரண்டப்பட்டு சமூகத்தில் தாழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அதன்பிறகு ஆங்கிலேயரும் நிலவுடைமை சமூகத்தை மேலும் வளர்த்துவிட்டு மக்களை ஒடுக்கி சுரண்டலை இன்னும் தீவிரமாக செய்தனர்.
தற்போது ஹிந்திய அரசு இன்னும் கொடூரமாக தனது அரசாங்க கட்டமைப்பின் மூலம் விவசாயத்தை இல்லாதொழித்து மண்ணுக்கு அடியிலுள்ள வளங்களையும் சுரண்டி விற்கத் தொடங்கிவிட்டது.
Friday, 12 May 2017
பழங்காலத் தமிழகம் நாடுகள் மற்றும் சிற்றரசுகள் -2
பழங்காலத் தமிழகம்
நாடுகள் மற்றும் சிற்றரசுகள் -2
(எளிமையான வரைபடம்)
இடமிருந்து வலமாக வரிவரியாகப் படிப்பது போல
கொங்காண நாடு
பாழி (மல்லி நாடு)
கடம்ப நாடு
இருங்கோ நாடு (அருவா நாடு)
வெளிமா நாடு
வொளிமா நாடு
இடைச்சுரம்
பாயல நாடு
நல்லமலை
வெள்ளிமலை
கனிமலை
வேளாவி நாடு (வேங்கி)
பாயல் (சேர பாயல் மலை)
மேகுட்டுவம் (குட்டுவ நாடு)
குடநாடு
எருமையூர்
விச்சிகோ நாடு
குதிரைமலை
புங்கிநாடு
வேங்கட நாடு
புல்லி நாடு
சேரர்
தோட்டிமலை
தகடூர் (அதிகன் நாடு)
வாணர் நாடு
ஒய்மான் நாடு
ஆமூர் (முக்காவல் நாடு)
முழம்புல நாடு
பறம்புமலை
ஆழுந்தூர்
மிலாடு (முள்ளூர் நாடு)
கொல்லிமலை நாடு
பழுவூர்
தோன்றிமலை
புண்நாடு
தொண்டை நாடு
முதியமலை
நடுநாடு
கண்கெழு நாடு
கரூவூர் நாடு
பாண்டிய நாடு
காணப்பேரெழில்
(எவ்வியின்) நீடூர் மிழலை
யாழ் நாடு
மணிபல்லவம்
நாகர்நாடு
மலை நாடு
கோடைமலை
பொதிகை (ஆய் நாடு)
கறநாடு
காந்தள்
நாஞ்சில் நாடு
இயக்கர்கண்
ஈழம்
வேட்டரைய நாடு
சிங்க ஈழம்
கோனார்மலை நாடு
(ஆங்கிலத்தில் இருந்து எடுத்ததாலும் தெளிவின்மையாலும் சில தவறுகள் இருக்கலாம்)
நன்றி: Senthil Kumaras