Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Saturday, 20 July 2024

தொண்டனின் மனநிலை

தொண்டனின் மனநிலை 

 இல்ல புரியல!
 காளி அக்கா எந்த வகையில் அண்ணனுக்கு இடைஞ்சல்?!
 ஒன்னு அவர் கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி மாதிரி அண்ணனுக்கு அடுத்த நிலைக்கு உயர்ந்து இருக்கணும்!
 அல்லது அண்ணனோடும் முரண்பட்டு கட்சி கொள்கைகளை அல்லது அண்ணனை விமர்சித்து இருக்கணும்!
 அப்படி எதுவுமே நடக்கலையே!?
 எந்த வகையிலுமே லாஜிக் செட் ஆகலையே?!
 ஆடியோ உருவாக்கியவன் சாட்டை அல்லது இடும்பன் பேர சொல்லி இருக்கலாம்.
நத்தம் சிவசங்கரன் கூட கட்சி தொண்டர்களுக்கு சரியான மரியாதை இல்லை என்று விமர்சித்தவர்தான்!
 அது உண்மையும் கூட!
ஏறெடுத்துப் பார்க்காத பொதுமக்களையும் விசத்தைக் கக்கும் எதிர்க் கட்சியினரையும் மரியாதையாக பேசும் நா.த.க உயர்மட்டம் தொண்டர்களை ஏதோ அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தவன் போலத்தான் நடத்துகிறது!
 இருந்தா இரு இல்லனா போ! நீ அவசியமே இல்ல!
 அண்ணனில் இந்த வார்த்தை அப்படியே ஒரு நகர கிளையில் கூட தொண்டனின் காதில் விழுகிறது!
 அன்று அடிவாங்கி செத்த அல்லது இந்த வாரத்தில் வெட்டுபட்டு செத்த தொண்டர்களுக்கு கூட உரிய மரியாதை தரப்படவில்லை என்பதில் இருந்து இதை உணரலாம்!
 பிற கட்சிகள் தவறு செய்தவன் தன் கட்சிக்காரன் என்று தெரிந்தாலும் ஆதரவாக நிற்கும்.
நா.த.க அப்படி இல்லை!
 அதற்காக இனத்தின் கடைசி வாய்ப்பைத் தவறவிட நாதக தம்பிகள் அத்தனை அரசியல் முட்டாள்கள் இல்லை! 
 சிலுவைகளைச் சுமந்தபடி சாட்டையடி வாங்கிக்கொண்டு கழுமர மேடையை நோக்கி அவர்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றனர்.
 நாலு வார்த்தை ஆடியோ இதை குலைத்துவிடாது!
இனத்தில் புகுந்துள்ள வடுக கேன்சர் செல்கள் அடுத்தமுறை நம்பும் வகையில் தயாரிக்கவும்!
பி.டி.ஆர் ஆடியோ நம்பப்பட்டது என்றால் அதில் பி.டி.ஆர் மட்டுமே தெரிவிக்க முடிந்த புள்ளிவிபரம் இருந்தது!
 இருக்கும் கொஞ்சம் மூளையையும் நன்கு கசக்கி அடுத்த முறை நல்ல ஆடியோ உருவாக்கவும்!

Thursday, 29 February 2024

திராவிட மாடல் ஆட்சியின் அதிர்ச்சிகள்

திராவிட மாடல் ஆட்சி 
அதிர்ச்சிகளும் ஆறுதல்களும்

நாள்: 29.02.2024

  முரசொலி மூலப் பத்திரம் சர்ச்சையில் 'அரசியலில் இருந்தே விலகுவேன' என்று வாய்ச் சவால் விட்டதில் இருந்து ஸ்டாலின் தீவிரமாக அரசியல் களத்திற்கு வருகிறார்.
  தேர்தல் பிரச்சாரத்தின் போது குனியமுத்தூர் பிரச்சாரத்தில் கேள்விகேட்ட பெண்ணை வேலுமணி ஆள் என்று கூறி வெளியேற்றிய அன்றிலிருந்து மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி ஏற்படுத்துவது தொடங்கிவிட்டது.

 இந்த 3 ஆண்டுகால ஆட்சியில் நடந்த அதிர்ச்சிகள்...
* 380 கோடி கொடுத்து பிரசாந்த் கிஷோர் வரவழைப்பு
* நால்வர் விடுதலை ஆனதும் சிறப்பு முகாமில் அடைப்பு
* விவசாயிகள் மீது குண்டாஸ்
* nlc க்காக விளைந்து நின்ற நிலம் அழிப்பு
* இசுலாமியர் விடுதலைக்கு எதிராக அறிக்கை 
* வேங்கைவயல் குடிநீரில் மலம்
* தூத்துக்குடி காதல் திருமணம் ஆணவக்கொலை
* சேகர்பாபு மகள் காதல் திருமணம் செய்து கதறல்
* நெல் கொள்முதல் நிலைய கொட்டகைக்கு நிதி ஒதுக்காமை
* மேயர் பிரியா ரங்கநாத நாயுடுவால் பொதுவெளியில் பாலியல்  சீண்டல்
* பேனா சிலை
* பாடபுத்தகத்தில் திராவிட புரட்டு
* நீட் கையெழுத்து நாடகம் 
* உச்ச நிலையில் கனிமவள கொள்ளை
* கர்நாடக சென்று காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் 
* ஆனாலும் காவிரி நீர் மறுப்பு காய்ந்து போன அணை
* மின்கட்டண உயர்வு
* பால் விலையேற்றம் மில்லி குறைப்பு
* தாலி தங்கம், லேப்டாப் , ஸ்கூட்டி போன்ற அதிமுக மகளிர் திட்டங்கள் நிறுத்தம்
* டாஸ்மாக் 10ரூ அதிகம் வாங்கிய செந்தில் பாலாஜி 
* வேலைவாங்கித் தருவதாக பணம் வாங்கிய செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைது
* திமுக வாக்களித்த நிலம் கிடைக்காத அஸ்வினி எனும் நரிக்காரர் பேட்டி அளித்த பிறகு அடிதடி வழக்கில் கைது
* சாலிகிராமம் கூட்டத்தில் பெண் போலீஸ் மீது திமுக தொண்டர்கள் பாலியல் அத்துமீறல்
* ஈரோடு இடைத்தேர்தல் காளியம்மாள் மீது பீர் பாட்டில் வீச்சு
* ஈரோடு இடைத் தேர்தல் மக்களை அடைத்துவைத்து  விருந்து மற்றும் இன்ப சுற்றுலா 
* மாலைத்தீவு ராணுவம் தமிழக மீனவர் கைது
* ரயில் வடவர் பெண்ணிடம் அத்துமீறல் 
கஞ்சா 
* குட்கா தடை நீக்கம்
* கள்ளசாராய மரணம் அதற்கு 10 லட்சம் நிவாரணம்
* குடிகாரர் திருந்தினால் அரசுவேலை
* சென்னை ஆர்.ஏ.புரம் 40 ஆண்டுகால குடியிருப்பு இடிப்பு பா.ம.க தொண்டர் தீக்குளிப்பு
* உதயநிதி சினிமாவை அரசு ஊழியர் பார்க்க கட்டாயப்படுத்தல்
* அனைத்து திரைப்பட வியாபார உரிமையையும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பிடுங்குதல்
* கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மர்ம மரணம்
* நாங்குநேரி பள்ளி மாணவர் கஞ்சா போதையில் சக மாணவர் மாணவி மீது அரிவாள் வெட்டு 
* ரேசன் கடைகளில் செறிவூட்ட அரிசி 
* ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் மீது அருணா ஜெகதீசன் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை இல்லை
* ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஐ.ஜி யாதவ் பதவி உயர்வு 
* மொடக்குறிச்சி வடவர் போலீஸ் ரகுபதி மீது தாக்குதல்
* தவறான சிகிச்சையால் அரசு மருத்துவமனையில் கை அழுகி குழந்தை இறப்பு
* குழந்தை தொழிலாளர் அதிகரிப்பு அமைச்சர் மனோ தங்கராஜ் குழந்தை தொழிலாளர் பற்றிய news 24x7 புகாரை ஏற்க மறுப்பு 
* அரசு அலுவலகம் புகுந்து மணல் மாபியா வி.ஏ.ஓ வெட்டிக் கொலை
* துடியலூர் அரசுப் பள்ளியில் இசுலாமிய மாணவியை செருப்பை சுத்தம் செய்யவைத்த ஆசிரியர்கள்
* விமான நிலையம் அமைக்க பரந்தூர் விளைநிலஙகள் பிடுங்குதல் அதனால் பெரிய போராட்டம் அதற்கு வேலி போட்டு போலீஸ் அடக்குமுறை
* அம்பாசமுத்திரம் பலர் பல் பிடுங்கிய போலீஸ் பல்வீர் சிங் அவரது இடைநீக்கம் ரத்து
* தொடர்ந்து 9 லாக்கப் மரணங்கள்
* நெல்லை ஆற்றில் கஞ்சா போதையில் பட்டியல் சிறுவர் மீது சிறுநீர் கழித்த ஆதிக்க சமூகத்தினர்
* உதயநிதி சினிமாவில் பிசி அதனால் 2023 தேசிய விளையாட்டுக்கு 503 தமிழக மாணவர் அனுப்பப் படவில்லலை
* குறவர் பெண் ஆந்திரா போலீசால் வன்புணர்வு பிறப்புறுப்பில் மிளகாய்ப்பொடி தூவி சித்திரவதை 
* பள்ளி மாணவருக்கு அழுகிய முட்டை அதற்கு ஓடு மீதுள்ள கறுப்பு அச்சு உள்ளே சென்றுவிட்டதாக மழுப்பல்
* காஞ்சிபுரம் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் அது காக்கா முட்டை என்று மழுப்பல்
* மதுரை பெருங்குடி 6 வயது சிறுவன் உட்பட 5பேர் ஆதிக்க சாதிவெறியரால் வெட்டிக் கொலை
* சென்னை வெள்ளம் வரலாறு காணாத பாதிப்பு மிக அசட்டையாக நடந்துகொண்ட அரசு
* வெள்ள நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர்
* உதயநிதி திரைப்படம் நடிப்பு
* தென்காசிக்கு சலூன் கோச் சொகுசு பெட்டியில் ஸ்டாலின் பயணம்
* ஜெயலலிதா மரணம் குறித்த குழப்பமான அறிக்கை 
* குறவருக்கு சாதிச் சான்றிதல் கிடைப்பதில்லை என குற்றம்சாட்டி மகனுக்கு வேலை கிடைக்காமல் தந்தை தற்கொலை
* இதனால் குறவர் உரிமைக்காக 6 நாள் உண்ணாவிரதம் இருந்த இரணியன் மற்றும் தென்காசி எம்.பி தனுஷ் குமார் KKSSRR வீட்டில் நிற்கவைத்து சாதிய ரீதியில் அவமரியாதை
* பத்திர பதிவு கட்டண உயர்வு
* ஓட்டல் தமிழ்நாடு எமரால்டு என பெயர்மாற்றம்
* செய்யாறு சிப்காட் ஆதரவுப் போராட்டம் பணம் கொடுத்து வெளியூர் நபர்களை விவசாயிகள் போல நடிக்க வைத்தது
* சத்துணவு தனியார் மயமாக்க முயற்சி
* வேலை நேரம் 12 மணிநேரமாக்க முயற்சி
* மவுன்ட் ரோடில் பொதுமக்களுக்கு இடையூறாக தெலுங்கு நடிகர் அல்லி அர்ஜூன் கார் ரேஸ் நடத்த மைதானம் அமைத்தல்
* செஸ் போட்டி பிரக்யானந்தா புறக்கணிப்பு
* இசுலாமிய அமைச்சர் 3 ல் 2 பதவி பறிப்பு 
* பி.டி.ஆர் விரட்டி அடிப்பு உதயநிதிக்கு பதவி
* விளையாட்டு மைதானஙகளில் மது அனுமதி 
* அரசு பஸ் மீது திமுக குடும்பம் நடத்தும் பீர் விளம்பரம்
* நகரங்களில் நோய்தாக்கிய தெருநாய் கடிகள்
* முதலீடு ஈர்ப்பு என்கிற பெயரில் அரபுநாடு, ஸ்பெயின், சிங்கபூர் என மக்கள் வரிப்பணத்தில் ஸ்டாலின் குடும்ப சுற்றுலா
* அதானி உடன் ஒப்பந்தம் சென்னை துறைமுகம் தாரைவார்ப்பு
* மீண்டும் எட்டுவழி சாலை திட்டம் நடைமுறையில்
* திருப்பதி டோல் மாணவர் தாக்குதல் 
* திருமாவளவன் பிளாஸ்டிக் சேரில் அமர வைப்பு
* அரசு நீண்டநேர பஸ் விலையேற்றம்
* ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு வீச்சு
* கடன்சுமை பல மடங்கு உநர்ந்து இந்தியாவில முதலிடம்
* மாற்றுத்திறனாளி உலக்கோப்பை வாங்கியதாக முதல்வரையே ஏமாற்றியது
* துர்கா ஸ்டாலின் மினரல் வாட்டர் ஆலை
* குவாரி டென்டர் கேட்ட பட்டியல் சாதி நபர் ஆடை அவிழ்ப்பு
* சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு 3 ஆண்டுகளாக செயல்படாமல் முடக்கம் _ பொன் மாணிக்கவேல் 
* கலாசேத்ரா பாலியல் புகார்
* CAA எதிர்ப்பு போராட்டம் ஆனால் வாக்கெடுப்பில் ஆதரவு கையெழுத்து 
* புளியந்தோப்பு இறந்த குழந்தை உடல் அட்டைபெட்டியில் 
* புழல் பெண் கைதி தப்பி ஓட்டம்
* கருணாநிதி சிலை வைக்க மாடர்ன் தியேட்டர் நிலம் பிடுங்கல்
* ஒரே நேரத்தில் 140 பள்ளிகளில் லேப்டாப் திருட்டு
* எண்ணூர் எண்ணெய் கழிவு கடலில் கலப்பு
* பாட்டாக்குறிச்சி மலை அழித்து மைதானம்
* நெல்லை, தூத்துக்குடி  வெள்ளம் மாரி செல்வராஜ் மீட்புப் பணி
* தூத்துக்குடி தத்தளித்த நேரம் டெல்லி சென்று கூட்டணி பேச்சுவார்த்தை
* பொன்முடி மனைவியுடன் கைது
* எண்ணூர் ஆலை அமோனியா கசிவு நள்ளிரவில் மக்கள் வெளியேற்றம்
* ஆதி திராவிடர் நலத்துறை நிதி பயன்படுத்தாமல் வைத்திருந்தது
* எம்பிளாய்மென்ட் இல் பதிந்து வேலை கிடைக்காத இளைஞர் உதவித்தொகை நிறுத்தம்
* நிறித்தப்பட்ட கெயில் குழாய் மீண்டும் மோடி அடிக்கல் நாட்டினார்
* அடிப்படை வசதிகள் இல்லாமல் கிளாம்பாக்கம் திறப்பு
* கிளாம்பாக்கம் ரயில்நிலையம் வெற்று அறிவிப்பு
* பள்ளிகளில் தமிழ்மன்றம் அமைத்து கருணாநிதி பெயர்
* கவுன்சிலர் புருசன்கள் அடாவடி
* எதிர்கட்சியாக 5000 ரூ பொங்கல் தொகுப்பு கேட்டு தற்போது 1000 ரூ கூட தரமுடியாமல் திணறல்
* கேலோஇந்தியா உதயநிதி டெல்லி சென்று மோடி அழைப்பு 
* முரசொலி மூலப் பத்திரம் வழக்கு ஆவணங்களைக் காட்டமுடியாமல் திணறல் 
* புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த ஈவேரா வீட்டுக்கு பட்டா வழங்கல் இளங்கோவனிடம் கையளிப்பு
* கிண்டி ரேஸ் கோர்ஸ் 700 கோடி வரி பாக்கி
* பல கோடி செலவில் கூட்டமே இல்லமால் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் இளைஞரணி மாநாடு 
* பழைய பென்சன் முறை நடைமுறைக்கு கொண்டுவராமை 
* ஓட்டுநர் இல்லாமல் தினம் 6000 பஸ் நிற்கிறது
* ஓட்டுநர் காலி பணியிடம் 8 ஆண்டுகள் நிரப்பவில்லை என போக்குவரத்து ஊழியர் போராட்டம்
* முதியோர் பென்சன் நிறுத்தம்
* மோசமான நிலையில் இருந்த அரசு பஸ் RTo விடம்  ஒப்படைத்தவர் மீது நடவடிக்கை
* ஜல்லிக்கட்டு போராளிகள் மீதான வழக்கு ரத்து இல்லை 
* சல்லிக்கட்டு போராட்டத்தில் இறந்த மாணவருக்கு நிவாரணம் இல்லை
* ஆனால் ஜல்லிக்கட்டு மைதானம் கலைஞர் பெயர்
* பள்ளிகளுக்கு தனியார் நிதி வேண்டல்
* மார்வாடி தெலுங்கர் உடன் சமத்துவ பொங்கல் கூத்து
* பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி குடும்பம் பெண் மீது கொடுமை
* நாகர்கோவில் நாம் தமிழர் நிர்வாகி சேவியர் குமார் கொலை
* சென்னை ஆசிரியர் போராட்டம் இரவு தடியடி
* செவிலியர் போராட்டம் 
* திமுக பெண்களை இழிவு படுத்தி பலமுறை பேச்சு 
* 5 ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி நாடக பேட்டி அதை அண்ணாமலை அநாகரீக விமர்சனம்
* மும்பையில் நயன்தாரா வழக்கில் அரசு வக்கீல்
* சட்டசபை நேரலை ஒளிபரப்ப முடியாது என்று மறுப்பு
* வேடந்தாங்கல் அருகே தொழிற்சாலை 
* அதானி முதலீடு வரவேற்பு
* பல்லடம் செய்தியாளர் கூலிப்படை வெட்டு
* தமிழ் பேசிய மாணவன் காது கிழிப்பு 
* ஆசிரியர் பணி தேர்வில் மொழிப்பாடமாக 'தமிழ் அல்லது தென்னிந்திய மொழிகள்' என திருத்தம்
* தண்டாரம்பட்டு  ஆதிக்க சமூகம் தனி கோவில் 
* தொடரும் ரேசன் அரிசி பதுக்கல் 100 கிலோ வுக்கு மேல் ரேசன் அரிசி கடத்தல் 5 முறை பிடிபட்டது
* வள்ளலார் பக்தர்கள் எதிர்ப்பை மீறி வள்ளலார் பன்னாட்டு மையம் அமைத்தல்
* மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா அறிவிப்பு ஆழ்ந்த உறக்கத்தில் தமிழக முதல்வர்
*கன்னியாகுமரி கனிமவள லாரிகள் ஏற்படுத்தும்வதொடர் விபத்து,  ஒரே மாதத்தில் 4 வது விபத்து நடந்தது
* போதைப் பொருள் கடத்தல்
*யூட்யூப் விளம்பரம்
* பார்வையற்றோர் போராட்டம் தடியடி
* சட்டவிரோத முகாம் சாந்தன் இறப்பு


ஆறுதல்கள்....
* மகளிர்  பேருந்து இலவசம்
* மகளிர் உரிமைத் தொகை
* ரம்மி தடை
* கோகுல் ராஜ் சிறை
* கீழடி அருங்காட்சியம்
* காலை உணவு
* வெள்ள நிவாரண தொகை
* கூட்டுறவு நகைக்கடன் 3ல் 1 பங்கினர் ரத்து

_ Athimoolaperumal


Friday, 16 February 2024

திராவிட மாடல் ஆட்சி அதிர்ச்சிகளும் ஆறுதல்களும்

திராவிட மாடல் ஆட்சி 
அதிர்ச்சிகளும் ஆறுதல்களும்

  முரசொலி மூலப் பத்திரம் சர்ச்சையில் 'அரசியலில் இருந்தே விலகுவேன' என்று வாய்ச் சவால் விட்டதில் இருந்து ஸ்டாலின் தீவிரமாக அரசியல் களத்திற்கு வருகிறார்.
  தேர்தல் பிரச்சாரத்தின் போது குனியமுத்தூர் பிரச்சாரத்தில் கேள்விகேட்ட பெண்ணை வேலுமணி ஆள் என்று கூறி வெளியேற்றிய அன்றிலிருந்து மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி ஏற்படுத்துவது தொடங்கிவிட்டது.

 இந்த 3 ஆண்டுகால ஆட்சியில் நடந்த அதிர்ச்சிகள்...
* 380 கோடி கொடுத்து பிரசாந்த் கிஷோர் வரவழைப்பு
* நால்வர் விடுதலை ஆனதும் சிறப்பு முகாமில் அடைப்பு
* விவசாயிகள் மீது குண்டாஸ்
* nlc க்காக விளைந்து நின்ற நிலம் அழிப்பு
* இசுலாமியர் விடுதலைக்கு எதிராக அறிக்கை 
* வேங்கைவயல் குடிநீரில் மலம்
* தூத்துக்குடி காதல் திருமணம் ஆணவக்கொலை
* சேகர்பாபு மகள் காதல் திருமணம் செய்து கதறல்
* நெல் கொள்முதல் நிலைய கொட்டகைக்கு நிதி ஒதுக்காமை
* மேயர் பிரியா ரங்கநாத நாயுடுவால் பொதுவெளியில் பாலியல்  சீண்டல்
* பேனா சிலை
* பாடபுத்தகத்தில் திராவிட புரட்டு
* நீட் கையெழுத்து நாடகம் 
* உச்ச நிலையில் கனிமவள கொள்ளை
* கர்நாடக சென்று காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் 
* ஆனாலும் காவிரி நீர் மறுப்பு காய்ந்து போன அணை
* மின்கட்டண உயர்வு
* பால் விலையேற்றம் மில்லி குறைப்பு
* தாலி தங்கம், லேப்டாப் , ஸ்கூட்டி போன்ற அதிமுக மகளிர் திட்டங்கள் நிறுத்தம்
* டாஸ்மாக் 10ரூ அதிகம் வாங்கிய செந்தில் பாலாஜி 
* வேலைவாங்கித் தருவதாக பணம் வாங்கிய செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைது
* திமுக வாக்களித்த நிலம் கிடைக்காத அஸ்வினி எனும் நரிக்காரர் பேட்டி அளித்த பிறகு அடிதடி வழக்கில் கைது
* சாலிகிராமம் கூட்டத்தில் பெண் போலீஸ் மீது திமுக தொண்டர்கள் பாலியல் அத்துமீறல்
* ஈரோடு இடைத்தேர்தல் காளியம்மாள் மீது பீர் பாட்டில் வீச்சு
* ஈரோடு இடைத் தேர்தல் மக்களை அடைத்துவைத்து  விருந்து மற்றும் இன்ப சுற்றுலா 
* மாலைத்தீவு ராணுவம் தமிழக மீனவர் கைது
* ரயில் வடவர் பெண்ணிடம் அத்துமீறல் 
கஞ்சா 
* குட்கா தடை நீக்கம்
* கள்ளசாராய மரணம் அதற்கு 10 லட்சம் நிவாரணம்
* குடிகாரர் திருந்தினால் அரசுவேலை
* சென்னை ஆர்.ஏ.புரம் 40 ஆண்டுகால குடியிருப்பு இடிப்பு பா.ம.க தொண்டர் தீக்குளிப்பு
* உதயநிதி சினிமாவை அரசு ஊழியர் பார்க்க கட்டாயப்படுத்தல்
* அனைத்து திரைப்பட வியாபார உரிமையையும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பிடுங்குதல்
* கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மர்ம மரணம்
* நாங்குநேரி பள்ளி மாணவர் கஞ்சா போதையில் சக மாணவர் மாணவி மீது அரிவாள் வெட்டு 
* ரேசன் கடைகளில் செறிவூட்ட அரிசி 
* ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் மீது அருணா ஜெகதீசன் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை இல்லை
* ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஐ.ஜி யாதவ் பதவி உயர்வு 
* மொடக்குறிச்சி வடவர் போலீஸ் ரகுபதி மீது தாக்குதல்
* தவறான சிகிச்சையால் அரசு மருத்துவமனையில் கை அழுகி குழந்தை இறப்பு
* குழந்தை தொழிலாளர் அதிகரிப்பு அமைச்சர் மனோ தங்கராஜ் குழந்தை தொழிலாளர் பற்றிய news 24x7 புகாரை ஏற்க மறுப்பு 
* அரசு அலுவலகம் புகுந்து மணல் மாபியா வி.ஏ.ஓ வெட்டிக் கொலை
* துடியலூர் அரசுப் பள்ளியில் இசுலாமிய மாணவியை செருப்பை சுத்தம் செய்யவைத்த ஆசிரியர்கள்
* விமான நிலையம் அமைக்க பரந்தூர் விளைநிலஙகள் பிடுங்குதல் அதனால் பெரிய போராட்டம் அதற்கு வேலி போட்டு போலீஸ் அடக்குமுறை
* அம்பாசமுத்திரம் பலர் பல் பிடுங்கிய போலீஸ் பல்வீர் சிங் அவரது இடைநீக்கம் ரத்து
* தொடர்ந்து 9 லாக்கப் மரணங்கள்
* நெல்லை ஆற்றில் கஞ்சா போதையில் பட்டியல் சிறுவர் மீது சிறுநீர் கழித்த ஆதிக்க சமூகத்தினர்
* உதயநிதி சினிமாவில் பிசி அதனால் 2023 தேசிய விளையாட்டுக்கு 503 தமிழக மாணவர் அனுப்பப் படவில்லலை
* குறவர் பெண் ஆந்திரா போலீசால் வன்புணர்வு பிறப்புறுப்பில் மிளகாய்ப்பொடி தூவி சித்திரவதை 
* பள்ளி மாணவருக்கு அழுகிய முட்டை அதற்கு ஓடு மீதுள்ள கறுப்பு அச்சு உள்ளே சென்றுவிட்டதாக மழுப்பல்
* காஞ்சிபுரம் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் அது காக்கா முட்டை என்று மழுப்பல்
* மதுரை பெருங்குடி 6 வயது சிறுவன் உட்பட 5பேர் ஆதிக்க சாதிவெறியரால் வெட்டிக் கொலை
* சென்னை வெள்ளம் வரலாறு காணாத பாதிப்பு மிக அசட்டையாக நடந்துகொண்ட அரசு
* வெள்ள நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர்
* உதயநிதி திரைப்படம் நடிப்பு
* தென்காசிக்கு சலூன் கோச் சொகுசு பெட்டியில் ஸ்டாலின் பயணம்
* ஜெயலலிதா மரணம் குறித்த குழப்பமான அறிக்கை 
* குறவருக்கு சாதிச் சான்றிதல் கிடைப்பதில்லை என குற்றம்சாட்டி மகனுக்கு வேலை கிடைக்காமல் தந்தை தற்கொலை
* இதனால் குறவர் உரிமைக்காக 6 நாள் உண்ணாவிரதம் இருந்த இரணியன் மற்றும் தென்காசி எம்.பி தனுஷ் குமார் KKSSRR வீட்டில் நிற்கவைத்து சாதிய ரீதியில் அவமரியாதை
* பத்திர பதிவு கட்டண உயர்வு
* ஓட்டல் தமிழ்நாடு எமரால்டு என பெயர்மாற்றம்
* செய்யாறு சிப்காட் ஆதரவுப் போராட்டம் பணம் கொடுத்து வெளியூர் நபர்களை விவசாயிகள் போல நடிக்க வைத்தது
* சத்துணவு தனியார் மயமாக்க முயற்சி
* வேலை நேரம் 12 மணிநேரமாக்க முயற்சி
* மவுன்ட் ரோடில் பொதுமக்களுக்கு இடையூறாக தெலுங்கு நடிகர் அல்லி அர்ஜூன் கார் ரேஸ் நடத்த மைதானம் அமைத்தல்
* செஸ் போட்டி பிரக்யானந்தா புறக்கணிப்பு
* இசுலாமிய அமைச்சர் 3 ல் 2 பதவி பறிப்பு 
* பி.டி.ஆர் விரட்டி அடிப்பு உதயநிதிக்கு பதவி
* விளையாட்டு மைதானஙகளில் மது அனுமதி 
* அரசு பஸ் மீது திமுக குடும்பம் நடத்தும் பீர் விளம்பரம்
* நகரங்களில் நோய்தாக்கிய தெருநாய் கடிகள்
* முதலீடு ஈர்ப்பு என்கிற பெயரில் அரபுநாடு, ஸ்பெயின், சிங்கபூர் என மக்கள் வரிப்பணத்தில் ஸ்டாலின் குடும்ப சுற்றுலா
* அதானி உடன் ஒப்பந்தம் சென்னை துறைமுகம் தாரைவார்ப்பு
* மீண்டும் எட்டுவழி சாலை திட்டம் நடைமுறையில்
* திருப்பதி டோல் மாணவர் தாக்குதல் 
* திருமாவளவன் பிளாஸ்டிக் சேரில் அமர வைப்பு
* அரசு நீண்டநேர பஸ் விலையேற்றம்
* ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு வீச்சு
* கடன்சுமை பல மடங்கு உநர்ந்து இந்தியாவில முதலிடம்
* மாற்றுத்திறனாளி உலக்கோப்பை வாங்கியதாக முதல்வரையே ஏமாற்றியது
* துர்கா ஸ்டாலின் மினரல் வாட்டர் ஆலை
* குவாரி டென்டர் கேட்ட பட்டியல் சாதி நபர் ஆடை அவிழ்ப்பு
* சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு 3 ஆண்டுகளாக செயல்படாமல் முடக்கம் _ பொன் மாணிக்கவேல் 
* கலாசேத்ரா பாலியல் புகார்
* CAA எதிர்ப்பு போராட்டம் ஆனால் வாக்கெடுப்பில் ஆதரவு கையெழுத்து 
* புளியந்தோப்பு இறந்த குழந்தை உடல் அட்டைபெட்டியில் 
* புழல் பெண் கைதி தப்பி ஓட்டம்
* கருணாநிதி சிலை வைக்க மாடர்ன் தியேட்டர் நிலம் பிடுங்கல்
* ஒரே நேரத்தில் 140 பள்ளிகளில் லேப்டாப் திருட்டு
* எண்ணூர் எண்ணெய் கழிவு கடலில் கலப்பு
* பாட்டாக்குறிச்சி மலை அழித்து மைதானம்
* நெல்லை, தூத்துக்குடி  வெள்ளம் மாரி செல்வராஜ் மீட்புப் பணி
* தூத்துக்குடி தத்தளித்த நேரம் டெல்லி சென்று கூட்டணி பேச்சுவார்த்தை
* பொன்முடி மனைவியுடன் கைது
* எண்ணூர் ஆலை அமோனியா கசிவு நள்ளிரவில் மக்கள் வெளியேற்றம்
* ஆதி திராவிடர் நலத்துறை நிதி பயன்படுத்தாமல் வைத்திருந்தது
* எம்பிளாய்மென்ட் இல் பதிந்து வேலை கிடைக்காத இளைஞர் உதவித்தொகை நிறுத்தம்
* நிறித்தப்பட்ட கெயில் குழாய் மீண்டும் மோடி அடிக்கல் நாட்டினார்
* அடிப்படை வசதிகள் இல்லாமல் கிளாம்பாக்கம் திறப்பு
* கிளாம்பாக்கம் ரயில்நிலையம் வெற்று அறிவிப்பு
* பள்ளிகளில் தமிழ்மன்றம் அமைத்து கருணாநிதி பெயர்
* கவுன்சிலர் புருசன்கள் அடாவடி
* எதிர்கட்சியாக 5000 ரூ பொங்கல் தொகுப்பு கேட்டு தற்போது 1000 ரூ கூட தரமுடியாமல் திணறல்
* கேலோஇந்தியா உதயநிதி டெல்லி சென்று மோடி அழைப்பு 
* முரசொலி மூலப் பத்திரம் வழக்கு ஆவணங்களைக் காட்டமுடியாமல் திணறல் 
* புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த ஈவேரா வீட்டுக்கு பட்டா வழங்கல் இளங்கோவனிடம் கையளிப்பு
* கிண்டி ரேஸ் கோர்ஸ் 700 கோடி வரி பாக்கி
* பல கோடி செலவில் கூட்டமே இல்லமால் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் இளைஞரணி மாநாடு 
* பழைய பென்சன் முறை நடைமுறைக்கு கொண்டுவராமை 
* ஓட்டுநர் இல்லாமல் தினம் 6000 பஸ் நிற்கிறது
* ஓட்டுநர் காலி பணியிடம் 8 ஆண்டுகள் நிரப்பவில்லை என போக்குவரத்து ஊழியர் போராட்டம்
* முதியோர் பென்சன் நிறுத்தம்
* மோசமான நிலையில் இருந்த அரசு பஸ் RTo விடம்  ஒப்படைத்தவர் மீது நடவடிக்கை
* ஜல்லிக்கட்டு போராளிகள் மீதான வழக்கு ரத்து இல்லை 
* சல்லிக்கட்டு போராட்டத்தில் இறந்த மாணவருக்கு நிவாரணம் இல்லை
* ஆனால் ஜல்லிக்கட்டு மைதானம் கலைஞர் பெயர்
* பள்ளிகளுக்கு தனியார் நிதி வேண்டல்
* மார்வாடி தெலுங்கர் உடன் சமத்துவ பொங்கல் கூத்து
* பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி குடும்பம் பெண் மீது கொடுமை
* நாகர்கோவில் நாம் தமிழர் நிர்வாகி சேவியர் குமார் கொலை
* 5 ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி நாடக பேட்டி அதை அண்ணாமலை அநாகரீக விமர்சனம்
* மும்பையில் நயன்தாரா வழக்கில் அரசு வக்கீல்
* சட்டசபை நேரலை ஒளிபரப்ப முடியாது என்று மறுப்பு
* வேடந்தாங்கல் அருகே தொழிற்சாலை 
* அதானி முதலீடு வரவேற்பு
* பல்லடம் செய்தியாளர் கூலிப்படை வெட்டு
* தமிழ் பேசிய மாணவன் காது கிழிப்பு 
* ஆசிரியர் பணி தேர்வில் மொழிப்பாடமாக 'தமிழ் அல்லது தென்னிந்திய மொழிகள்' என திருத்தம்
* தண்டாரம்பட்டு  ஆதிக்க சமூகம் தனி கோவில் 
* தொடரும் ரேசன் அரிசி பதுக்கல் 100 கிலோ வுக்கு மேல் ரேசன் அரிசி கடத்தல் 5 முறை பிடிபட்டது
* வள்ளலார் பக்தர்கள் எதிர்ப்பை மீறி வள்ளலார் பன்னாட்டு மையம் அமைத்தல்
* மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா அறிவிப்பு ஆழ்ந்த உறக்கத்தில் தமிழக முதல்வர்

ஆறுதல்கள்....
* மகளிர்  பேருந்து இலவசம்
* மகளிர் உரிமைத் தொகை
* ரம்மி தடை
* கோகுல் ராஜ் சிறை
* கீழடி அருங்காட்சியம்
* காலை உணவு
* வெள்ள நிவாரண தொகை
* கூட்டுறவு நகைக்கடன் 3ல் 1 பங்கினர் ரத்து

Friday, 30 June 2023

மனநோயாளிகள் படைத்த மாமன்னன்

மனநோயாளிகள் படைத்த மாமன்னன் 

 தலித்திய புரட்சியாளர்கள் இந்திய அளவில் இழிவுகளை அள்ளி வந்து தமிழர்கள் தலையில் போடுவது வழக்கம்.
 மாமன்னன் படத்தில் உத்திரபிரதேசத்தில் 2 சிறுவர்களைக் கல்லால் அடித்து கொன்ற வன்கொடுமையை தமிழர்கள் மீதும் தமிழகம் மீதும் சுமத்திவிட்டார்.
 அதுவும் 2 ஐ 3 ஆக்கி அந்த மூன்று விடலைகளும் கல்லால் அடிபட்டு துடிதுடித்து சாவதை அணு அணுவாகக் காட்டுகிறார். அதாவது நாம் மனம் வருந்தி திருந்த வேண்டுமாம் ஆனால் மனநலம் பாதிக்கும் அளவுக்கு இதைக் காட்டவேண்டிய அவசியம் என்ன?!

 சரி இதற்கு தீர்வாக என்ன காட்டுகிறார் ஒரு அருந்ததியர் சபா நாயகர் ஆவதைக் காட்டுகிறார். அது தான் தமிழகத்தில் ஏற்கனவே நடந்து விட்டதே தனபால் சபாநாயகராக இருந்தாரே?! 
 எங்கேயோ ஒரு கஞ்சன் போட்ட கழிவை  அள்ளி வந்து ஒரு கொடைவள்ளல் சாப்பிடும் தட்டில் கொட்டி புரட்சி செய்கின்றனர் இந்த தலித்திய மன நோயாளிகள்.

 திமுக தலைமையை புனிதப் படுத்தவும் தவறவில்லை. திமுக கட்சிக்குள் அமைச்சர்கள் மத்தியிலே சாதிய பாகுபாடு உள்ளது படத்தில் வருகிறது. தென்காசி MP ஐ உட்கார சொல்லாமல் நிற்க வைத்து பேசியவர் KKSSRR, இதே போல திருமாவுக்கு ப்ளாஸ்டிக் சேர் போட்டது ராஜ கண்ணப்பன் இதை அப்படியே வில்லன் செய்வதாக காட்டிவிட்டு இது முதலமைச்சருக்கு தெரிந்து அவரை தண்டிப்பதாகக் காட்டி திமுக தலைமையை புனிதப் படுத்தி விட்டார். 

 திரைப்பட விமர்சகர் புளூசட்டை மாறனையும் மிரட்டி இருக்கிறார்கள். அவர் உதயநிதி நன்றாக நடித்துள்ளார் என்று தடுமாறியபடி கூறுகிறார். படத்தை முழுமையாகப் புகழ்ந்தால் சந்தேகம் வரும் என்று நல்லது கெட்டது என 50-50 ஆக சொல்கிறார். இறுதியில் சம்பந்தம் இல்லாமல் இந்துத்துவ எதிர்ப்பு  பேசி ஈவேரா வையும் குறிப்பிடுகிறார். காட்சிகளைக் குறிப்பிடும்போது கீழே spoiler alert என்றும் வருகிறது.

Wednesday, 26 April 2023

திசைதிருப்பும் யாத்திசை

திசைதிருப்பும் யாத்திசை 

யாத்திசை திரைப்படம் பற்றி பலரும் பேசுகின்றனர்.
படமாகப் பார்த்தால் நல்ல படம்தான்.
 தமிழ்தேசியப் பார்வையில் பார்த்தால் பல பெருந்தவறுகள் காணக் கிடைக்கின்றன.

* எயினர் கழுவேற்றப்பட்டது போல காட்டப்பட்டுள்ளது. இது உண்மையில்லை.
கழுவேற்றுவது போன்ற கொடிய தண்டனைகள் தமிழர்களிடம் இல்லை.

* கோச்சடையன் சோழர்களின் கொடிய எதிரியாக இல்லை. இவன் காலத்திற்கு சற்று  முன் சோழர்கள் நல்லநிலையில் இருந்தனர் (யுவான் சுவாங் குறிப்பு). கோச்சடையனின் தந்தை சோழர்களிடம் பெண் எடுக்கிறார். அதாவது கோச்சடையனின் தாய் ஒரு சோழர்.

 * கோச்சடையன் சோழ நாட்டை விழுங்கிவிட்டதாக படத்தில் வருகிறது. ஆனால் இவன் காலத்தில் சோழநாடு பல்லவரின் கீழ் இருந்தது (பல்லவர் உச்சத்தில் இருந்தனர்). இவனது பேரன் காலத்தில்தான் காவிரிக் கரை வரை பாண்டியர் பிடித்தனர்.
 இவன் சேரநாட்டையும் பிடிக்கவில்லை கொங்கு வரைதான் கைப்பற்றினான்.
 ஆனால் சேர, சோழரை தோற்கடித்து சேரனை அரேபியரிடம் கொடுத்து கொட்டடியில் போட்டு வளர்த்ததாகவும் சோழன் காடுகளில் தலைமறைவாக இருப்பதாகவும் வருகிறது.
 
* சோழர் படையில் மட்டுமல்ல பாண்டியர் படையிலும் எயினர் தளபதிகளாக இருந்தனர்.
ஆனால் சோழர்களுடன் சேர்ந்து போரில் தோற்ற எயினர் அனைவரும் காடுகளில் மறைந்து வாழ்வதாக வருகிறது.
 
* எயினர் பாண்டிய மன்னனைக் கொன்று அதற்கு பதிலாக சோழனிடம் தனியரசு கேட்பதாக வருகிறது.
ஆனால் எயினர் தனிநாடு வைத்திருந்ததாகவோ மூவேந்தருக்கு எதிராக புரட்சி செய்ததாக வரலாறு இல்லை. 

* எயினர் விவசாயம் செய்ய ஆசைப்படுவதாக வருகிறது. ஆனால் எயினர் அம்பு எய்யும் வேட்டைக் குடியினர். புலால் உணவே அவர்களது கலாச்சாரம் (படத்தில் போர் காட்சியில் கூட  அவர்கள் வில் வீரர்களாக காட்டப்படவில்லை).

* எதிர்தரப்பில் பாண்டியருக்கு ஆதரவாக பெரும்பள்ளி எனும் கற்பனையான குடி வருகிறது.
இவர்கள் பாண்டிய மன்னனுக்கு படையுதவி செய்து பதிலாக தமது பெண்ணை மணமுடிக்க ஒப்பந்தம் போடும்போது உங்களுக்கு பிறக்கும் குழந்தை அரியணை ஏறாது என்கிறான். அதாவது அரசன் சிறு குடிகளிடம் பெண்ணெடுத்தால் பெயருக்குதான் மனைவியாக வைத்துக்கொள்வானாம்.
 ஆனால் மூவேந்தர் வேளிர் குடிகளிடம் பெண்ணெடுத்து பட்டத்து அரசியாக்கி அவள் மூலம் பெறும் குழந்தைக்கு முடிசூடுவதும் நடந்தேயுள்ளது.

 பெரும்பள்ளி போல எயினருக்கு பதில் கற்பனையான குடி பெயர் போட்டிருக்கலாம். பாகுபலி போல கற்பனையான அரசுகள் என்று காட்டி மூவேந்தர் பெயர் வராமல் செய்திருக்கலாம்.
ஆனால் எயினர், மூவேந்தர் பெயர்கள் வந்தால் அந்த காலகட்டத்தை முடிந்த அளவு சரியாக காட்டுவது அவசியமாகிறது. 

* எயினர் பேசுவது (தமிழ்) வேறாகவும் பாண்டியர், சோழர் பேசுவது (தமிழ்) வேறாகவும் காட்டப்பட்டுள்ளது. அதாவது பூர்வ குடிகள் வேறு இனம் என்றும் நாகரிக குடிகள் வேறு இனம் என்பது போல காட்டுகின்றனர் (கோச்சடையன் என்ற இயற்பெயரை முற்றாக தவிர்த்து ரணதீரன் என்றே குறிப்பிடுகின்றனர்).
 
* படத்தில் வருவது போல பெண் குழந்தைகளை அதுவும் கேவலம் பணத்துக்காக கோவிலுக்கு நேர்ந்துவிடும் வழக்கம் தமிழர்களிடம் இல்லை.

* பிராமணர் அரசமைப்பைக் கட்டுப்படுத்துவதாகவும் தேவரடியார்களை தம் இச்சைக்கு பயன்படுத்தியதாகவும் நடனமாடுபவரை விலைக்கு வாங்குவதாகவும் காட்டப்பட்டுள்ளதும் தவறான கருத்து.

* சேர பிராமணர் பரசுராமர் வழிவந்தவர் என்று எயினர் தலைவர் கூறுவதாக வருகிறது. ஆனால் பரசுராமர் யாரென்று அக்காலகட்டத்தில் யாருக்கும் தெரியாது (மணிமேகலை 'மழுவாள் நெடியோன்' என்று சிறுகுறிப்பு வருகிறது. கோச்சடையன் காலத்திற்கு சற்று பிறகு ஆழ்வார் பாசுரங்களில் சிறுகுறிப்புகள் வருகிறது. ஆனால் பரசுராமர் என்ற பெயர் வரவில்லை. எனவே கோச்சடையன் காலத்தில் பரசுராமர் பற்றி யாருக்கும் தெரியாது. கோச்சடையனுக்கு 400 ஆண்டுகள் கழித்துதான் கம்பர் ராமாயணம் எழுதுகிறார்).

*  தன் தலையை தானே அறுத்து தமது விருப்பத்தின் பேரில் கொடுக்கும் (நவகண்டம் பலி) தற்கொலைப் பலி தமிழர் வழக்கம் (இதுவும் படத்தில் காட்டப்படுகிறது). ஆனால் எயினர் நரபலி கொடுக்கும் காட்சி வருகிறது. படத்தில் பூசாரி மனிதன் தலையை வெட்டுவது போல காட்டுகிறார்கள். நரபலி தமிழர் வழக்கம் இல்லை.
 
இது போக பல காட்சிகள் ஒப்புக்கு அப்பால் உள்ளன.
பாண்டியன் காட்டுவாசி போல இருப்பது.
அரசன் நடந்து கோவிலுக்கு செல்வது.
காலாட்படையிடம் கோட்டை வீழ்வது.
ஒரு கோட்டையை இழந்த மன்னன் தனது படைகளை அந்த கோட்டையை நோக்கி அழைக்காமல் காட்டுக்குள் போய் உதவி கேட்பது.
மன்னனும் அவனைப் பழிவாங்கப் பிறந்தவனும் ஒரே வயதாக இருப்பது. இப்படிப் பல...

 உச்சகட்டமாக பாண்டியன் போரில் தோற்றவனின் குடியை முழுக்க இனப்படுகொலை செய்யச் சொல்வதாக வருகிறது. இதுவும் தமிழர் முறைமை கிடையாது.

 தமிழர்கள் மீது இல்லாத வரலாற்றையும் பொல்லாத பழியையும் திணிப்பதுதான் யாத்திசை திரைப்படத்தின் நோக்கமா?! 

 

Saturday, 23 March 2019

நாம்தமிழர் தோற்கவேண்டிய தொகுதி

நாம்தமிழர் தோற்கவேண்டிய தொகுதி

  திருப்பெரும்புதூர் (ஸ்ரீபெரும்புதூர்) தொகுதியில் நாம்தமிழர் நிறுத்தும் வேட்பாளர் இரா.மகேந்திரன் எனும் மஹேந்தர் ஜெயின் ஒரு மார்வாடி.

இந்த உண்மையை நாம் தமிழர் கட்சியினர் மறைப்பதேன்?

வந்தேறிகளின் அடையாள மறைப்புக்கு உடைந்தையாக ஏன் இருக்கவேண்டும்?!

அந்த வேட்பாளர் அப்படி எதையாவது சாதித்தாரா என்றால் அதுவும் இல்லை.

பணக்காரன் என்பதற்காக இதைச் செய்கிறார்கள் என்றால் இது அப்பட்டபான (அரசியல்)விபச்சாரம்.

பிற மாநிலங்களில் உள்ள தமிழர் பகுதிகளில் கூட ஒரு கவுன்சிலர் பதவி நமக்கு கிடைப்பதில்லை.

ஆனால் இங்கே விரல்விட்டு எண்ணும் அளவுக்கு உள்ள ஒரு வந்தேறி மார்வாடிக்கு நேரடியாக அமைச்சர் நாற்காலி வரை சிவப்பு கம்பளம் விரிக்கப்படுகிறது.

தமிழர்களின் ஜனநாயக உரிமைகளைக் காக்க அமைச்சர் பதவி மிக முக்கியம்.

ஹிந்திய ஜனநாயகத்தில் நமக்கு கிடைத்துள்ள அதிகாரப் பகிர்வே குறைவு,
அதுவும் வந்தேறிகளின் கைகளில்.

இதற்கு மாற்றாக நாம்தமிழரை ஆதரித்தால் அதுவும் வந்தேறிகளை தலையில் தூக்கிக்கொண்டு வருகிறது.
நாம் எங்கேபோய் முட்டிக்கொள்ள?!

சீமானிடம் இத்தகைய சகிக்கவே முடியாத குறைகள் இருக்கின்றன.

எனவே பெரும்புதூரில் நாம்தமிழர் படு மோசமாகத் தோற்கவேண்டும்.

இதன்மூலம் சீமானுக்கு நல்லதொரு பாடம் கற்பிக்கவேண்டும்.

Tuesday, 24 April 2018

நொச்சின்

நொச்சின்

ஹிந்தியாவில் நடப்பது ஜனநாயகமே கிடையாது என்பதற்கு சான்று சச்சின் எம்.பி ஆனது.

தேர்தலிலேயே போட்டியிடாமல் அரசியலுக்கு எந்த தகுதியுமே இல்லாமல் மக்களைச் சந்திக்காமல் ஒரு வாக்கு கூட பெறாமல் ஒருவர் உயர் பதவிக்கு போகலாம்.
அந்த பதவியினுடைய பொறுப்புகளைக் கூட செய்யாமல் ஊர்சுற்றலாம் என்ற நிலைதான் இங்கே.

சச்சின் எம்.பி ஆன 2012 லிருந்து அவர் அவைக்கு போனது வெறும் 6 நாட்கள்.
ஒரு மாணவன் 70% வருகைப் பதிவு இல்லாவிட்டால் அவன் தேர்வு எழுதமுடியாது.
ஆனால் ஒரு நாட்டின் மக்களுடைய குரலாக ஒலிக்கவேண்டிய எம்.பி-ஆக சச்சினின் வருகைப் பதிவேடு 5.5% ஆகும். 

வந்த ஆறு நாட்களிலும் அவர் கேள்வி கேட்கவோ பதில் சொல்லவோ ஏன் கொட்டாவிவிடவோ கூட வாய்திறக்கவில்லை.

ஆனால் 40 லட்சம் வரை சம்பளம் மட்டும் வாங்கிக்கொண்டார்.

மக்களுக்காக பாடுபட்டவனெல்லாம் தெருவில் கிடக்க,
பந்தை மட்டையால் "லொட்" என்று தட்டியவர்களுக்கு மட்டும் கடவுளுக்கு சமமான இடமும் கொடுத்து,
கூடவே விருது, பரிசு, சன்மானம், பதவி, புகழ், பணம் எல்லாமும் கொடுக்கும் முட்டாள்கள் வாழும் நாடுதான் இது.

2003ல் பெராரி காருக்கு வரி கட்ட வலித்துப்போய் அரசிடம் அதை தள்ளுபடி செய்யக்கோரினார் சச்சின்.
அரசாங்கமும் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் விட்டுக்கொடுத்தது.

வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்துகொண்டு ஒரு கோடியை ஒரு 'நடிகனின்' காருக்கு தூக்கிக்கொடுக்கும் ஒரு இளிச்சவாய் அரசாங்கம் உலகில் உண்டா?!

நடிகன் என்று நான் தவறாகச் சொல்லவில்லை.

2011ல் வெறும் 2 கோடி ரூபாய் வருமானவரியை மிச்சப்படுத்த "நான் ஒரு நடிகன், அதன் மூலம் சம்பாதித்ததே எனது சொத்து. கிரிக்கெட் பொழுதுபோக்கு மட்டும்தான்" என்று கூறி வரிவிலக்கு வாங்கினார் சச்சின்.
(India Today 27.05.2011)

இந்த லட்சணத்தில் 2014 ல் மிக உச்ச விருதான பாரத ரத்னா வேறு.

அறிவாளிகள் வாழும் நாடாக இருந்திருந்தால் "சச்சினாவது நொச்சினாவது" என்று எப்போதோ தூக்கி எறிந்திருப்பார்கள்.


Thursday, 28 September 2017

அம்பேத்கர் ரசிகர்களுக்கு...

அம்பேத்கர் ரசிகர்களுக்கு...


 அம்பேத்கர் பற்றிய மூட நம்பிக்கைகள் மற்றும் அதன் உண்மைத்தன்மை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.


* அம்பேத்கர் இடவொதுக்கீடு பெற்றுத் தந்தார்


1882ல் அதாவது அம்பேத்கர் பிறக்கும் முன்பே பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடங்கிய கோல்ஹாப்பூர் அரசாட்சியில் பிராமணரல்லாத சாதிகளுக்கு முதன்முதலாக இடவொதுக்கீடு ஷாஹு எனும் அரசரால் வழங்கப்பட்டது.


 1893 ல் (அதாவது அம்பேத்கர் இரண்டு வயது குழந்தையாக இருந்தபோதே) அன்றைய தமிழர் பெரும்பான்மை மாநிலமான சென்னை மாகாணத்து தலைவர்கள் ஆங்கிலேயருக்கு கோரிக்கை வைத்து 49 சாதிகளைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலக் கல்வியில் இடவொதுக்கீடு வழங்கச் செய்தனர்.


 1927 லேயே இடவொதுக்கீடு அன்றைய தமிழர் பெரும்பான்மை மாநிலமான மெட்ராஸ் மாகாணத்தில் நடைமுறைக்கு வந்துவிட்டது.

 இதைப் பெற்றுத் தந்தது சுப்பராயக் கவுண்டர் மற்றும் முத்தையா முதலியார்.

 (அதாவது அம்பேத்கர் காந்தியுடன் பூனா ஒப்பந்தம் போட்டு தேர்தலில் 18% தனி தொகுதிகள் வாங்கித் தருவதற்கு 5ஆண்டுகள் முன்பே)


1935ல் எம்.சி.ராஜா அவர்கள் தெளிவாக வரையறுத்து அதை சட்டமாக்கினார்.

SC 14%, 

BC 14%, 

Non Brahmin 44%, 

Brahmin 14%,

Christian 7%,

Muslim 7% 

என்றவாறு 100% இடவொதுக்கீடு நடைமுறைக்கு வந்தது.

(அதாவது அம்பேத்கர் ஆங்கில அரசுடன் பேசி 8.33% இடவொதுக்கீடு கொண்டுவந்ததற்கு 7ஆண்டுகள் முன்பே)


 தற்போதும் இந்திய ஒன்றியம் முழுவதும்

SC=15%

ST=7.5%

OBC=27.5

என 50% இடவொதுக்கீடு உள்ள நிலையில்,


 தமிழகத்தில் மட்டும்தான்

BC=26.5%

BCM=3.5% (பிற். இசுலாமியர்)

MBC=20%

SC=15%

SCA=3% (அருந்ததியர்)

ST=1%

என 69% இடவொதுக்கீடு உள்ளது.

 (இதற்கு முக்கிய காரணம் பா.ம.க முன்னெடுத்த போராட்டம் ஆகும்)

------------------


* அம்பேத்கர் தலித் என்ற அடையாளத்தின் கீழ் மக்களை ஒன்று திரட்டினார்


 அம்பேத்கர் ஓரிரு முறை தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தாலும் அவர் 'தீண்டத்தகாதோர்' என்ற சொல்லாலேயே எப்பொதும் குறிப்பிடுவார்.

 ஆவணங்களில் 'சாதியற்ற இந்துக்கள்' என்று குறிப்பிட முன்மொழிந்தார்.

 தலித் என்ற வார்த்தை அவர் விரும்பாதது.


 (தமிழகத்தில் 'தலித்' என்ற வார்த்தையும் 'தாழ்த்தப்பட்ட' என்ற வார்த்தையும் 1981ல் இருந்து தடை செய்யப்பட்டுள்ளன)

----------------------


* அம்பேத்கர் சுதந்திரத்திற்காக போராடினார்


 அம்பேத்கர் இறுதிவரை ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்தவர்.

 காந்தியை எதிர்கொள்ள ஆங்கிலேயர் அவரை பயன்படுத்தினர்.

 ஆங்கிலேயர் வெளியேறியதும் அவர் இந்துத்துவத்திற்கு மாறினார்.

-----------

* அம்பேத்கர் இந்து மதத்தை அதன் சாதிய கட்டுமானத்தை எதிர்த்தார்


 தொடக்கத்தில் அவ்வாறு இருந்தாலும் பிறகு நிறம் மாறினார்.

 இசுலாமியரை நம்பமுடியாதவர்கள் என்றும் இந்துக்களின் எதிரி என்றும் கூறி பாகிஸ்தானை பிரிக்கவும் முழு ஆதரவளித்தார்(9).

ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி என்ற இந்துத்துவ - இந்திவெறி கொள்கையை முன்வைத்தார்(5)

 

 பௌத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதங்களை இந்துமதத்தின் பிரிவுகள் என்றாக்கி அவர்களை சட்டபடி இந்துக்களாக ஆக்கினார் (சட்டம்-25).


சமஸ்கிருதத்தை ஆட்சிமொழி ஆக்க முயற்சிகளை மேற்கொண்டார் (6,7,8).

---------------

 

* அம்பேத்கர் சாதி அடையாளத்தை உதறியவர்


 நிச்சயமாக இல்லை. 

தனது சாதி பட்டத்தை மறைத்து அம்பேத்கர் எனும் உயர்சாதி பட்டத்தைப் போட்டுக்கொண்டாலும்.

 இறுதிவரை தமது சாதியான மகர் சாதிக்கு முடிந்தவரை போராடினார்.

 அவருக்கு முதலில் கிடைத்த பெரிய பதவி 1941ல் 'பாதுகாப்பு ஆலோசனை வாரிய உறுப்பினர்' பதவியாகும்.

 அவர் செய்த முதல் வேலை ராணுவத்தில் மஹர் படையணி என்று ஒன்றை உருவாக்கியது ஆகும் (1941).

 அது இன்றும் உள்ளது.

------------------


* அம்பேத்கர் மொழி இன அடையாளங்களைக் கடந்தவர்


 இதை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும் முழுமையாக அப்படி கூறமுடியாது.

 பாம்பே (மும்பை) நகரம் குஜராத்தியர் கைக்கு போக இருந்தது.

 தன் இனத்தின் தலைநகரமான அதை தனது இனமான மராத்தியர்களுக்கே கிடைக்கச் செய்ததில் அம்பேத்கரின் பங்கு குறிப்பிடத்தக்கது.

 அப்போது அந்நகரம் குஜராத்திய பெரும்பான்மை மாநிலத்துடன் இணைந்திருந்தது.

 சொத்துகள் அனைத்தும் குஜராத்தியர் வசமிருந்தன.

 மராத்தியர் எண்ணிக்கை அந்நகரில் பாதி கூட இல்லை.

 அதற்கு முந்தைய மராத்திய பேரரசிலும் அந்நகர் இல்லை.

 மாநில எல்லைகள் புனரமைப்பின்போது மராத்திய மொழிவழி மாநிலம் அமைவது பற்றி அவர் சமர்ப்பித்த ஆவணம்(3) மராத்தியருக்கு மும்பையை பெற்றுத்தந்தது.

 அதன் வரலாற்றுப் பெயரான மகாராஷ்ட்ரா என்ற பெயரும் அவரால் பரிந்துரைக்கப்பட்டு சூட்டப்பெற்றது.

-----------


* அம்பேத்கர் தமிழ் மீதும் தமிழர் மீதும் அன்பு கொண்டிருந்தார்.


 இல்லை. தமிழ் மூத்தமொழி என்று கூறினார்தான்(4).

ஆனால் மூத்த குடி என நாகர் எனும் இல்லாத இனத்தைக் கூறினார்.

 தமிழகம் உட்பட மொழிவழி மாநிலம் அமையவிருந்தபோது எதிர்த்தார்.

 மொழிவழி மாநிலங்கள் இந்தியாவை துண்டுதுண்டாக உடைக்கும் என்று எச்சரித்தார்.

 மொழி உரிமைகளை அவர் வழங்கக்கூடாது என்று கூறினார்.

 காஷ்மீருக்கு தன்னாட்சி வழங்கும் சிறப்பு சட்டத்தை (பிரிவு- 370) நேரு சொல்லியும் எழுதித்தர அவர் மறுத்தார் (பிறகு கோபாலசாமி ஐயங்கார் எழுதினார்).

 தமிழ் ஆட்சிமொழி ஆக காயிதே மில்லத் அவர்கள் வாக்கெடுப்பு நடத்தி தமிழ் 72ம் இந்தி 73 வாக்குகளும் பெற்றதை அதிர்ச்சியுடன் குறிப்பிட்டு இந்தியை நாடு முழுவதும் திணிப்பதற்கு முழு ஆதரவு வழங்கினார்(2).

-----------


* அம்பேத்கர் இந்தியா முழுவதற்குமான தலைவர்


 அம்பேத்கர் அவரது வாழ்நாளில் மக்கள் செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்தது இல்லை.

 தேர்தலிலும் கூட தோற்றுதான் போனார்.

 அவர் தொடங்கிய இயக்கங்களும் பரவலான ஆதரவைப் பெறவில்லை.

 அவருக்கு கிடைத்த பதவிகள் ஆங்கிலேயரோ அல்லது காங்கிரசோ அளித்த வாய்ப்புதான்.

--------------


* அம்பேத்கர் ஒழுக்கமானவர்


 அம்பேத்கர் தமது 57 வயதில் தமக்கு மருத்துவம் பார்த்த தன்னை விட 19 வயது இளையவரான ஒரு பிராமணப் பெண்ணை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துகொண்டவர்.

 அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இறந்தும் போனார். 

------------


* அம்பேத்கர் சாதியொழிப்பில் முன்னோடி


 முதல் சாதி ஒழிப்பு மாநாடு தமிழகத்தில் 1891ல் அயோத்திதாசர் அவர்களால் நீலகிரியில் நடத்தப்பெற்றது.

 சாதி ஒழிப்பில் தமிழகமே முதலடி எடுத்துவைத்தது.


 எம்.சி.ராஜா 1927ல் எழுதிய 'ஒடுக்கப்பட்ட இந்துக்கள்' எனும் நூலை அப்படியே நகலெடுத்து 

'The Untouchables' எனும் நூலாக 1948ல் வெளியிட்டார் அம்பேத்கர்.


 இதேபோல 1907 ல் அயோத்திதாசப் பண்டிதர் எழுதிய 'புத்தரும் அவரது ஆதிவேதமும்' எனும் நூலை அப்படியே நகலெடுத்து 

'The Buddha and his dhamma' என்ற புத்தகமாக அம்பேத்கர் எழுதி (அவர் இறந்த பிறகு அது) 1957ல் வெளிவந்தது.


 நகலெடுத்து தமது பெயரில் போட்டுக்கொண்டது கூட பரவாயில்லை.

 அந்த சிந்தனை எங்கே கிடைத்தது என்று பின்னிணைப்பில் கூட அவர் மேற்கண்ட தமிழர்களை மேற்கோள் காட்டவில்லை.

------------


* அம்பேத்கர் தீண்டாமையை எதிர்த்ததில் முதல் ஆள்


 வடயிந்தியா அளவு தமிழகத்தில் தீண்டாமை இல்லை என்றாலும்

 1923 ல் சென்னை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ரெட்டமலை சீனிவாசன் பொது இடங்களில் பட்டியல் சாதியினர் நடமாட தடையில்லை என்று அரசாணை வெளியிட்டது தீண்டாமைக்கு எதிரான குறிப்பிடத் தகுந்த முதல் நடவடிக்கை ஆகும்.

-------------

 

* அம்பேத்கர் வந்தபிறகுதான் பறையர் முன்னேறினர்


 நிச்சயமாக இல்லை. 

அம்பேத்கர் அரசியலுக்கு வரும் முன்பே பறையர்கள் கல்வியிலும் அரசியலிலும் வேலைவாய்ப்பிலும் சிறந்து விளங்கினர்.

 சொல்லப்போனால் அம்பேத்கருக்கு முன் அவரது இடத்தில் இருந்தவர் எம்.சி.ராஜா எனும் பறையர்தான்.

--------------


* அம்பேத்கர் ஆரியர்களை எதிர்த்தார் 


 அம்பேத்கர் ஆரிய கட்டுக்கதையை நிராகரித்தவர்.

 பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து மனுஸ்மிருதி எரிப்பு போராட்டத்தை நடத்தியவர்.

 பிராமணர் ஆரியர் என்பதையோ வேற்றினம் என்பதையோ அவர் ஏற்றுக்கொள்ளவில்லை (4, தொகுதி 7, பக். 85)

--------------


* அம்பேத்கர் புத்தமதத்தை சாதியை ஒழிக்கும் தீர்வாக முன்வைத்தார்


 அம்பேத்கர் இயற்றிய சட்டப்படி புத்தமதம் இந்து மதத்தின் பிரிவே.

 ஒரு இந்து புத்தமதத்திற்கு மாறினாலும் சட்டப்படி அவரது சாதி மாறாது.

 ' உயர்சாதி இந்துக்களுடன் சண்டை போடுகிறேன் அதற்காக நான் இந்து இல்லை என்று ஆகாது.

 பாகிஸ்தான் முஸ்லீம்களால் ஆபத்து வந்தால் இந்தியாவிற்காக உயிரைக்கொடுத்து போராடுவேன்' என்றும் கூறியுள்ளார் (9).

 இறப்பதற்கு 50 நாட்கள் முன்பு அவர் லட்சக்கணக்கான மக்களோடு புத்த மதத்தைத் தழுவியபோது எடுத்த 22 உறுதிமொழிகளில் சாதி பற்றி எதுவுமே இல்லை. 

--------------------------


 அம்பேத்கருக்கு ஃபேர் அண்ட் லவ்லி போட்டு வெள்ளையாக்கி கோட்சூட்டுடன் வரைந்து,

 தம்மை உயர்த்திய தலைவர் அவரென்றும் தம்மை தலித் என்றும் கூறிக்கொண்டு,

வரலாறும் உண்மையும் தெரியாமல்,

 மற்ற எந்த சாதிவெறி கும்பலுக்கும் சளைக்காத அலப்பறை செய்யும் அம்பேத்கர் ரசிகர்களே !


இனியாவது திருத்துங்கள்!


இதிலுமா வடக்கத்திய மோகம்!

----------------


1. Dr. Babasaheb Ambedkar: writings and speeches, Vol, 2.

2. Thoghts on linguistic states 

3. Maharashtra as linguistic 

4. Who were the untouchables? 

5. Dr. Babasaheb Ambedkar: writings and speeches, Vol, 1. page: 213 & 214)

6. Statesmen, 11th September 1949

7. The National Herald (11.09.1949)

8. The Hindu (11.09.1949)

9. Dr. Babasaheb Ambedkar: writings and speeches, Vol, 15. page: 130 - 143))

Saturday, 19 July 2014

ஜெ. பாவாடைக்குள் மன்மோகன்

ஜெயலலிதா பாவாடைக்குள் எட்டிப்பார்க்கும் மன்மோகன்
'லக்பிம' சிங்கள பத்திரிக்கையில் வந்த படம்
(9செப்டம்பர்2012)
https://www.colombotelegraph.com/index.php/
lakbimanews-cartoon-controversy-why-i-stand-
by-our-cartoon/lakbima-cartoon/
இதுதான் 7கோடி தமிழர்களின்
முதல்வருக்கு கிடைக்கும் மரியாதை; எவனும்
தட்டிக்கேட்கவும் இல்லை, கண்டனமும் தெரிவிக்கவில்லை.
செல்வி.ஜெயலலிதா திருவாய் மலர்ந்தவை
“புலிகள் இயக்கத்தை ஓர் அரசியல் இயக்கமாக
நாங்கள் கருதவில்லை. அது ஒரு பயங்கரவாதக்
கும்பல். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின்
பெயர்கள் புலிகளின் கொலைப்பட்டியலில்
இடம்பெற்றுள்ளன. எனவே, அந்த அமைப்பைத்
தடை செய்ய வேண்டும்.
அதற்கு சரியான தருணம் இது"(ஜனவரி1992)
“போர்
என்றால் பொது மக்கள் சாவது இயற்கை தான்"(மே2009)
"இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக
இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம்
ஒப்படைப்பதற்கு மத்திய
அரசு உடனடி நடவடிக் கையை மேற்கொள்ள
வேண்டும் என்று இச்சட்டப்
பேரவை வற்புறுத்துகிறது"(14ஏப்ரல்2002)
வைகோ, நெடுமாறன், நக்கீரன் கோபால் உள்ளிட்ட
9பேரை புலிகள் பெயரைச் சொல்லி பொடா மூலம்
பழிவாங்கியது(2003)
http://www.koodal.com/news/tamilnadu.asp?id
=2043&title=tamilnadu-news-headlines-in-tamil
வரப்போகும் தேர்தலில்
காங்கிரசு செல்வாக்கை சரிக்கவும், தமிழ்மக்களின்
உணர்வுகளில் ஆதாயம் கறக்கவும், (நோயுற்ற
தந்தையைக்காண நளினிக்கு பரோல் கிடைக்கவிடாத
அம்மையார்) இப்போது அறிவித்த எழுவர்
விடுதலை 'தமிழன் காதில் சுற்றிய பூ'
http://www.vinavu.com/2014/03/03/rajiv-
assasination-case-jayalalitha-drama/
http://www.thinakkural.lk/article.php?article
%2Fgdgprwljzy4574ddac1f6f13
9414vzbhcbb372a177804adcd3b8a31e7djr
இவர்கள் விடுதலையானால் 2000ல் தர்மபுரியில்
3மாணவிகளை எரித்துக்கொன்ற அதிமுக
குற்றவாளிகளும் விடுதலை ஆக காய்நகர்த்த
வாய்ப்பு உண்டு.
http://m.oneindia.in/tamil/news/2007/12/06/tn-
dharmapuri-bus-burning-hc-confirms-death-pe
nalt.html
எவனுமே மதிக்காத 'இலங்கைக்கு பொருளாதாரத்
தடை கோரிய தமிழக சட்டமன்ற தீர்மானம்'
http://www.maalaimalar.com/2011/06/
08123813/tamilnadu-assembly-jayalalitha.html
(மதிக்கவில்லை http://www.vikatan.com/new/
article.php?page=2&module=news&
mid=9&sid&aid=3117&type=all )
மீனவர் பிரச்சனையில் முடிந்தது 'கடிதமும்
கண்டனமும்' மட்டுமே
http://www.cmr.fm/thamilfm/NewClients/
NewsDetail.aspx?ID=12310 http://
www.maalaimalar.com/2014/03/07024516/
Fishermen-about-prime-minister.html
2011 தேர்தல் நேரத்தில்
ஈழத்திற்கு இந்தியப்படை அனுப்புவேன் என்ற
வாய்ச்சவடால்
http://m.youtube.com/watch?v=LAVlrAF9mu0
(சேலம்)
http://m.youtube.com/watch?v=6d1ftpMR
c5w&rl=yes&guid&hl=en-GB&client=mv-
google&gl=IN (நாமக்கல்)
சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கு முன்
இடிந்தகரை போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக
அணுவுலைப் பணிகளை நிறுத்த அமைச்சரவைத் தீர்மானம்
http://www.dinamani.com/tamilnadu/
article710128.ece?service=print
இடைத்தேர்தல் முடிந்த பிறகு கூடங்குளம்
அணுவுலை திறக்க ஒப்புதல் தீர்மானமும்,
கேரளாவிலிருந்து மலையாள காவல்படை 37
வண்டிகளும்அருளிய அம்மையார் (மே 2012)
http://www.vikatan.com/new/article.php?modu
le=news&aid=7918
போராட்டக்காரர்கள் மீது தடியடி (செம்டம்பர்2012)
http://m.oneindia.in/tamil/news/2012/09/10/
tamilnadu-kudankulam-unrest-jaya-convenes-
higher-officials-meet-161205.html
அணுவுலை முற்றுகையைத் தடுக்க 5000காவலர்கள்
குவிப்பு (அக்டோபர் 2012)
http://www.dailythanthi.com/node/7945
போராட்டக்காரர்களை ஒடுக்க 2000 காவல்படையினர்
(மார்ச்2013)
http://www.cinema.dinakaran.com/
News_Detail.asp?Nid=45713
ஈழ ஏதிலிகளுக்கு மாத உதவித்தொகை அதிகரிப்பு
http://news.vikatan.com/article.php?modu
le=news&aid=2973
அகதிமுகாம்களின் உண்மை நிலை கொடுமையானது
http://www.vinavu.com/2013/05/16/eelam-
refugees-tn-prisons/
முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு
http://www.tamilwin.com/show-RUmrzBSXMZh
v4.html
இதே அம்மையாரிடம் பிரதமர் முன்னிலையில் கர்நாடக
முதல்வர் "ஒரு சொட்டுத் தண்ணீர் தரமுடியாது"
என்று சொல்லி வெளியேறியபோது
http://www.viduthalai.in/home/viduthalai/
rationalism/44761-cauvery-news-water-news-s
upreme-court-news.html
பரமகுடியில் காவல்துறை சுட்டுக்கொன்ற 7பேர்
http://www.vinavu.com/2011/09/12/dalits-
killed/
சமச்சீர்கல்விக்கு தடை
http://www.dinamalar.com/news_detail.asp?
id=247309&Print=1
தடையை நீக்கிய நீதிமன்றம்
http://www.thoothuonline.com/சமச்சீர்-கல்வி-த
ொடரவேண்ட/
குளறுபடிகளால் 4மாதம் படிப்பு பாழ்
http://www.dinamani.com/tamilnadu/
article688805.ece?service=print
அண்ணாநூலகத்தை மருத்துவமனையாக
http://m.oneindia.in/tamil/news/2011/11/03/
library-issue-govt-s-decision-is-insane-ramado
ss-aid0128.html
அண்ணாநூலகம் திருமண மண்டபமாக
http://www.dinakaran.com/News_Detail.asp?
Nid=17881
மக்கள் நலப்பணியாளர் 13000பேர் நீக்கம், நீதிமன்றம்
தடை
http://www.dailythanthi.com/2014-01-04-Gover
nment-to-the-High-Court-notices
மாற்றி மாற்றி மின்வெட்டு அறிக்கைகள்
------12அக்டோபர்2012-----------
அடுத்த ஆண்டு இறுதியில் மின்வெட்டு நீங்கும்
http://www.bbc.co.uk/tamil/india/2012/10/
121026_jayaonpowercut.shtml
------8பிப்ரவரி2013------
நடப்பாண்டின் இறுதியில் மின்வெட்டு முழுமையாக
நீங்கும்
http://m.oneindia.in/tamil/news/2013/02/08/
tamilnadu-jayalalithaa-promises-no-power-cut-f
rom-dec-169440.html
------2அக்டோபர்2011------
அடுத்தாண்டு ஆகஸ்டுக்குள்
மின்வெட்டு அறவே நீக்கப்படும்
http://tamil.webdunia.com/newsworld/news/
tnnews/1110/02/1111002010_1.htm
------25அக்டோபர்2013------
இந்த ஆண்டு இறுதியில் மின்மிகை மாநிலம் ஆகும்
http://tamil.thehindu.com/tamilnadu/தமிழகம்-
மிக-விரைவில்-மின்-மிகை-மாநிலமாகும்-ஜெய
லலிதா/article5271707.ece
------17டிசம்பர்2013------
ஆறுமாதத்தில் மின்வெட்டு நீங்கும்
http://www.dinamani.com/tamilnadu/
2013/12/17/ஆறு-மாதங்களில்-மின்வெட்டு-அ/
article1949361.ece
------3பிப்ரவரி2014------
விரைவில் மின்வெட்டு இருக்காது
http://www.dailythanthi.com/2014-02-03-Jayal
alithaa-Speak-on-Electricity-Production
நான்கு நாட்கள் உண்ணாமல் போராடிய
லயோலா மாணவர்களை நள்ளிரவில்
காவல்துறை விட்டு தூக்கியதால் ஒருகோடி மாணவர்
களமிறங்கிய போராட்டம் வெடிக்கக் காரணமான நிகழ்வு
http://www.dinamalar.com/news_detail.asp?
id=664634
முள்ளிவாய்க்கால் முற்றம் சுற்றுச்சுவரை அங்குலம்
தவறாது அளந்து இடித்தபோது,
பொது இடத்தை தாராளமாக
ஆக்கிரமித்தபடி ஜெயலலிதாவோடு குடும்பம் நடத்திய
தெலுங்கு கூத்தாடி நடிகன் 'சோபன் பாபு'
சிலை தமிழக தலைநகர் சென்னையில் பல
கோரிக்கைகளையும் மீறி சிரித்தபடி நிற்கிறது.
http://www.satrumun.net/2013/11/can-
government-remove-shoban-babu.html?m=1
(சோபன் பாபுவுடன் குமுதத்தில் பேட்டி
http://maatrangal.blogspot.in/2012/02/blog-
post_14.html?m=1 )
இனியும் கண்டவர்களை 'அம்மா' என்று சொல்லாதீர்கள்
https://m.facebook.com/photo.php?fbid=422858017817857&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

Friday, 18 July 2014

உதயகுமாரைக் காலில்விழுந்து விமர்சிக்கவேண்டிய அவசியம் இல்லை

உதயகுமாரை காலில்விழுந்து விமர்சிக்கவேண்டிய
அவசியம் இல்லை.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
என்னிடம் இரண்டகன்(துரோகி) என்று எவனாவது கேட்டால்
உதயகுமாரைத்தான் காட்டுவேன்;
அணுவுலையைக் கூட வலுவாக எதிர்க்காத, தமிழின
பிரச்சனைகளில் சிறு அக்கறைகூட இல்லாத,
டெல்லி மக்களால் பின்புறத்தில்
மிதித்து வெளியே தள்ளப்பட்டுவிட்ட ஒரு ஹிந்திய
கட்சிக்கு விலை போன இவர் எப்படி தலைவராக
ஆகமுடியும்;
தமிழகத்தின் 'தந்தை செல்வா' ஆக வேண்டியவர்,'விள
க்கமாற்றுக்கு பட்டுக்குஞ்சலம்' ஆகிப்போனார்.
தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் காணாமல்தான்
போவார்.
ஹிந்தியம் தோண்டி வைத்திருந்த கிணற்றில் முக்கால்
கிணறு தாண்டிய பின் உள்ளே விழுந்த தமிழின
இரண்டகன்(துரோகி).
என்றைக்கு முல்லைப்பெரியார் பிரச்சனை உச்சத்தில்
இருந்த 2011ன் கடைசி மாதங்களில் மலையாளிகள்
அணுவுலை போராட்டத்திற்கு
ஆதரவு என்று அறிவித்ததும் மலையாள அமைச்சர்
பி.ஜே.ஜோசப்புக்
கு தூது விட்டது தெரிந்ததோ அன்றே நீங்கள்
மாவீரர்நாள் கடைபிடிப்பதும், ஹிந்திய
விடுதலைநாளை கறுப்புநாளாக அறிவிப்பதும்,
ஹிந்தியாவை கொடும்பாவியாக பிணவூர்வலம் எடுத்துச்
சென்று எரித்ததும், தமிழ்நாட்டாண்மை(தமிழ்த்
தேசியம்) பேசுவதும் ஏமாற்றுவேலை என்று ஐயம்
ஏற்பட்டு உங்களைத் தூக்கிவைக்கும் பதிவுகளைக்
குறைத்து ஒரு கட்டத்தில் நிறுத்திக்கொண்ட
மைக்கு என்னை நானே பாராட்டிக்கொள்கிறேன்;
ஆனால், இவ்வளவு தரம்தாழ்ந்து போவீர்கள்
என்று நினைக்கவில்லை;
நல்லவேளை முளையிலேயே உருத்தெரிந்துவிட்டீர்கள்;
வடஹிந்தியனிடம் கூடயிருந்த பத்தாயிரம்
மக்களோடு காலில் விழுந்த
உங்களை இனத்திற்கே தலைமையாக்கியிருந்தால்
முள்ளிவாய்க்கால் என்ன முள்ளிக்கடலே ஓடியிருக்கும்;
உங்களுக்காக நான் பிறந்தமண்ணான
திருநெல்வேலி செல்லும்போதெல்லாம்
அணுவுலையை அப்பாவியாக ஆதரிக்கும் உடன்வரும்
பயணியிலிருந்து உறவினர் நண்பர் என எத்தனை பேரிடம்
மல்லுக்கு நின்றேன்; இனி அவர்கள் முகத்தில்
எப்படி விழிப்பேன்?!
பத்தில் ஒருவருக்கு புற்றுநோய் வந்துவிட்ட என்
குடும்பத்து சொந்தபந்தங்களை இனி யார்
காப்பார்?????????????????

3 ஏப்ரல் 2014
https://m.facebook.com/photo.php?fbid=431123676991291&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

Thursday, 10 July 2014

கர்த்தரின் மிரட்டல்



அவளை நிர்வாணமாக்கு:

இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, உன் வஸ்திரத்து (பாவாடை) ஓரங்களை உன் முகமட்டும் தூக்கியெடுத்து, ஜாதிகளுக்கு உன் நிர்வாணத்தையும் ராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் தெரியப்பண்ணி,

உன்மேல் தீட்டானவைகளை எறிந்து உன்னைக் கனவீனப்படுத்தி, உன்னை வேடிக்கையாக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
(நாகூம் 3, அதிகாரம் 5,6.)
( (Nahum 3:6, The New jerusalem Bible) .

இதோ, நான் உங்களுடைய பயிரைக் கெடுத்து, உங்கள் பண்டிகைகளின் சாணியையே (மலத்தையே) உங்கள் முகங்களில் இறைப்பேன்; அதனோடுகூட நீங்களும் தள்ளுபடியாவீர்கள்.
(மல்கியா 2 அதிகாரம் 3)
(Malachi 2:3).

பெண்ணடிமைக் கருத்துகளும் உண்டு,
மாதவிடாய் காலத்தில் பெண்களை ஒதுக்குதல்.

சூதகஸ்திரீ தன் ச்ரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

அவள் உட்கார்ந்த மணையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

அவள் படுக்கையின் மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின் மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டாயிருப்பானாக; அவன் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும்.
(லேவியராகமம்: 15 அதிகாரம், 19-30)
(Menstruation--Le 15:19-30