Thursday 2 June 2016

குஜராத்திகள்

குஜராத்திகள்.

2008 2009 ல் ஹிந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் வெள்ளை இன வெறியர்களால் வரிசையாகத் தாக்கப்பட்டபோது

இதே மோ(ச)டி தான் கூறினான்.

முறையான ஆவணங்கள் (பாஸ்போர், விசா, குடியுரிமை) எதுவுமில்லாவிட்டாலும் பரவாயில்லை குஜராத்திகள் எப்படியாவது குஜராத்துக்குள் வந்துவிடுங்கள்.
நான் உங்களைப் பார்த்துக்கொள்கிறேன் என்று அறிக்கைவிட்டான்..

என்றால் இந்திய இறையாண்மைக்கு என்ன மரியாதை? என்று எவனும் கேட்கவில்லை.

இன்று வெளிநாட்டுவாழ் இந்தியர்களில் (N.R.I)  முதலிடம் குஜராத்தியரே.
பிரிட்டிஷ் இளவரசி டயானாவே குஜராத்திய கலப்புடையவர் என்றெல்லாம் கண்டறிந்தார்கள்.

முகமது அலி ஜின்னா, மோகன்தாஸ் காந்தி, மொரார்ஜி தேசாய், சர்தார் வல்லபாய் படேல் போன்ற குஜராத்திகள் அன்று அரசியலில் முழுமையாகக் கைக்குள் வைத்திருந்தனர்.
நேரு மட்டும் ஆப்கானிய வம்சாவழி காஷ்மீரி பண்டித் ஒரு ஒப்புக்கு சப்பானியாக இருந்தார்.
அவரது மகளான இந்திரா நேருவை குஜராத்தியரான ஃபெரோஸ் மணமுடிக்க நேரு தடையாயிருந்தபோது அவரை தன் மகனாகத் தத்தெடுத்து ஃபெரோஸ் காந்தி ஆக்கினார்  மோகன்தாஸ்காந்தி.

இப்படித்தான் இந்திராநேரு இந்திராகாந்தி ஆனார்.

பார்சி(ஈரான்) வம்சாவழி (வந்தேறி)குஜராத்தியரான ஜாம்ஷெட்ஜி டாடா என்பவர் இன்று இந்தியாவின் தொழிற்சாலைத் தந்தை என்றழைக்கப்படுகிறார்.

இவர்தான் ஜார்கண்ட் மாநிலத்தில் ஜாம்ஷெட்பூர் இரும்பு உருக்காலையை நிறுவி பெரிதாக வளர்ந்த டாடா குழுமத்தை நிறுவியர்.
குஜராத்திய ஆதரவுடன் உலகப் பணக்காரர் பட்டியலில் இடம்பிடித்தனர் டாடா என்கிற வந்தேறி குஜராத்திகள்.
ஜார்கண்ட் மக்கள் வரைமுறையில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டு இன்று இந்தப் பணமுதலைகளுக்கு எதிராக மாவோயிஸ்ட் ஆக ஆயுதம் தூக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர்.
டாடா நானோ வங்காளிகளால் எதிர்க்கப்பட்டபோது ஓடோடி சென்று அதை குஜராத்திற்கே கொண்டு வந்தான் மோடி.
(டாடா வின் வலதுகரம் ஒரு தமிழர்தான்).

இன்று அசிம் ப்ரேம்ஜி , அம்பானி சகோதரர்கள், டாடா என உலகப்பணக்காரர்கள் குஜராத்திகளே.
இதற்குக் காரணம் குஜராத்தியரின் அரசியல் ஆளுமை.
தமிழரான காமராசர் மூலமே காங்கிரசை பிடித்து அதன்மூலம் ஹிந்தியாவையே கட்டுக்குள் கொண்டுவந்தனர் காந்தி குடும்பத்தாரும் அதன் பின் நின்ற குஜராத்தியரும்.
அதன்பிறகு கிங்மேக்கர் என்ற பட்டத்தை மட்டும் கொடுத்து காமராசரை சக்கையாகத் துப்பிவிட்டனர்.

டி.எம்.சௌந்தர் ராஜன் தமிழர் கிடையாது.
அவரது தாய்மோழி சௌராஷ்ட்ரா.
இந்த சௌராஷ்ட்ரா இன்று குஜராத்திகளால் விழுங்கப்பட்டுவிட்டது.

இப்போது யாராவது சௌராஷ்ட்ரா மக்களை பார்க்கவேண்டும் என்றால் தமிழகம்தான் வரவேண்டும்.
(தமிழனுக்கு இனவெறி கிடையாது அல்லவா?!)

மதம் என்ற அடையாளத்தைப் பயன்படுத்தி சிந்தி பேசும் மக்களையும் பாதி பாகிஸ்தானும் பாதி குஜராத்தும் விழுங்கிவிட்டன.

சிந்தி மற்றும் சௌராஷ்ட்ராப் பகுதியை நீக்கிவிட்டுப் பார்த்தால் இன்றைய குஜராத் மாநிலத்தில் 30%தான் அசல் குஜராத்தி மண்.

தமிழர்களுடனான ஹிந்தியாவின் போரில் குஜராத்தியர்களும் மறுக்கமுடியாத பங்களிப்பு செய்துள்ளனர்.

சிந்து சமவெளி நாகரீகத்தை உரிமை கோருவது,
குமரிக் கண்டத்திற்கு கிடைக்கவேண்டிய கடலாராய்ச்சி நிதியைத் தடுத்து பகவான் கிருஷ்ணனின் துவார்கா நகரத்தைத் தேடுகிறோம் என்று கேம்பே (gulf of khambat) கடற்பகுதியில் அந்த நிதியைக் கொட்டி வீணாக்கியது என்று குஜராத்தியர்கள் ஹிந்திய பேரினத்தின் பங்காளிகள் என்று நிறுவிவருகிறார்கள்.

பிழைப்பு தேடி பம்பாய் சென்ற தமிழர்கள் அங்கே நிறைந்த பிறகு குஜராத்திற்குள்ளும் நுழைந்தனர்.
சூரத், பரோடா, ஜாம் நகர், அகமதாபாத் போன்ற நகரங்களில் தமிழர்கள் கணிசமான அளவு வாழ்கிறார்கள்.

குஐராத்தியர்கள் தமது மாநிலத்திற்கு அடுத்தபடியாக வாழ்வது அண்டை மாநிலமான மகாராஷ்ட்ரா அதற்கடுத்தபடியாக வாழ்வது தமிழகம்.

ஆனால் தமிழன் அங்கே வாழ்வது தொழிலாளியாக.
குஜராத்தி இங்கே வாழ்வது முதலாளியாக.

குஜராத்திகள் தென்காசி அருகே மரம் அறுக்கும் சா-மில்கள் கூட சொந்தமாகக்கொண்ட முதலாளிகளாக உள்ளனர்.
தமிழன் எங்கும் தொழிலாளிதான்.

சௌகார்பேட்டையில் நவராத்ரி இரவுகளில் பாரம்பரிய உடையணிந்து தான்டியா கோலாட்டம் ஆடும் குஜராத்திகளை பார்த்தால் தெரியும்.

(சென்னையில் சௌகார்பேட்டையில் இந்தியில் பெயர்பலகை, தெருப்பெயர்கள் வைக்குமளவுக்கு குஜராத்திகளும் மார்வாடிகளும் முழுதாக ஆக்கிரமித்திருப்பது கண்கூடு)

அதைப் பார்த்துவிட்டு மும்பை  (சேரிப்பகுதியான) தாராவியைப் பார்த்தால் வயிறு எரிகிறது.

மோடி இலங்கைக்குப் போறானாம்
தமிழர்கள் அதைப்பற்றிப் பேசத் தேவை ஒன்றும் இல்லை.

( 16 மார்ச் 2015, 10:23 AM )

No comments:

Post a Comment