லார்ட் லபக் தாஸ் யார்?
உண்மையில் லார்ட் லபக் தாஸ் ஒரு ஆங்கிலேயர் கிடையாது.
இந்த சொல் 1900 களில் சென்னையில் பெரிய நிலம் வாங்கி வசதியாக வாழ்ந்த குஜராத்திகளைக் குறிக்கும்.
(அந்த நிலம் இன்றும் பார்டர் தோட்டம் என்று அழைக்கப்படுகிறது.
குஜராத்திகள் இப்போதும் இருக்கிறார்கள்)
அவர்கள் பெயர் லாட் என்று தொடங்கி தாஸ் என்று முடியும்.
இன்றும் L.G.N road, V.N.Doss road, Mohan doss road, Gopal doss road ஆகியன இவர்களின் பெயரிலேயே அமைந்துள்ளன.
நன்றி: The Hindu
Saturday, 10 June 2017
லார்ட் லபக் தாஸ் யார்?
Thursday, 2 June 2016
முன்னாள் இனவெறியன் மோடி
முன்னாள் இனவெறியன் மோடி
வங்கதேச வங்காள அகதிகளை விரட்ட முயன்ற மோடியை மேற்குவங்காள முதல்வர் மம்தா பேனர்ஜி எதிர்த்துபேசி அடக்கியதை பலரும் பகிர்கிறார்கள்.
இதே மோடி 2001,2002 களில் ஆஸ்திரேலியாவில் ஹிந்தியர்களான குஜராத்தியர்களை அந்நாட்டு இனவெறியர்கள் தாக்கியபோது பொங்கி எழுந்து,
"குஜராத்தியர்களிடம் இந்திய கடவுச்சீட்டோ (பாஸ்போட்) நுழைவு ஆவணமோ (விசா) இல்லையென்றாலும் பரவாயில்லை.
நேரடியாக குஜராத்திற்கு எப்படியாவது வந்துவிடுங்கள்.
குஜராத்தி பேசிக்காட்டினால் போதும்.
வேறு எந்த சான்று ஆவணங்களும்
தேவையில்லை.
மத்திய அரசை நான் பார்த்துக்கொள்கிறேன்"
என்று கூறிய ஆள்தான்.
நினைவிருக்கிறதா?
நளதமயந்தி (2003) படத்தில் கூட காட்டியிருப்பார்கள்.
மற்ற இனத்தவனெல்லாம் தன் இனத்தானை பிரதமராக்கி வைத்துள்ளான்.
குறைந்தது முதலமைச்சராவது ஆக்கிவைத்துள்ளான்.
அசல் குஜராத்திகள் 5 கோடி கூடத்தேறாத இனம் குஜராத்திய இனம்.
அதன் தலைவன் இன்று 110 கோடி பேரை ஆள்கிறான்.
சும்மாவா?
தன் இனமான மராத்தியர்களின் மீதான குஜராத்திகளின் ஆதிக்கத்தை அம்பேத்கரே மனம்நொந்து கட்டுரை எழுதியுள்ளார்.
நாம் 8 கோடி இருக்கிறோம்.
முதலமைச்சரென்ன?
தமிழன் என்று தன்னை அடையாளப்படுத்தும் ஒரு ச.ம.உ (எம்.எல்.ஏ) கூட இல்லை.
உலகத்திலேயே பந்தபாசமுள்ள சொந்த அண்ணன்-தம்பியை "பாசவெறியன்" என்று திட்டிவிட்டு சொந்தவீட்டை பக்கத்துவீட்டுக்காரனுக்கு கொடுக்கும் ஒரே ஆள் தமிழன் மட்டும்தான்.
சக தமிழனை இனவெறியன் என்று திட்டும் அல்லக்கை அரசியல்வாதிகளும்,
தமிழ் தலைவர்களிடம் இருக்கும் ஒன்றிரண்டு குறைகளை பெரிதாக்கி
குறைகளே உருவான வந்தேறிகளை ஆள வழிவகுக்கும்
மேதாவித் தமிழர்களும் இனியேனும் திருந்துங்கள்.
பின் குறிப்பு:
குஜராத்தியர்கள் அண்டை மாநிலமான மஹாராஷ்ட்ராவுக்கு அடுத்ததாக அதிகம் வசிக்கும் இரண்டாவது வெளிமாநிலம் தமிழகம் !!!!
கூடியவிரைவில் இங்கே குட்டி குஜராத்துகள் காணக்கிடைக்கும்.
படத்திற்கு நன்றி: கோட்டோவியர் பாலா
குஜராத்திகள்
குஜராத்திகள்.
2008 2009 ல் ஹிந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் வெள்ளை இன வெறியர்களால் வரிசையாகத் தாக்கப்பட்டபோது
இதே மோ(ச)டி தான் கூறினான்.
முறையான ஆவணங்கள் (பாஸ்போர், விசா, குடியுரிமை) எதுவுமில்லாவிட்டாலும் பரவாயில்லை குஜராத்திகள் எப்படியாவது குஜராத்துக்குள் வந்துவிடுங்கள்.
நான் உங்களைப் பார்த்துக்கொள்கிறேன் என்று அறிக்கைவிட்டான்..
என்றால் இந்திய இறையாண்மைக்கு என்ன மரியாதை? என்று எவனும் கேட்கவில்லை.
இன்று வெளிநாட்டுவாழ் இந்தியர்களில் (N.R.I) முதலிடம் குஜராத்தியரே.
பிரிட்டிஷ் இளவரசி டயானாவே குஜராத்திய கலப்புடையவர் என்றெல்லாம் கண்டறிந்தார்கள்.
முகமது அலி ஜின்னா, மோகன்தாஸ் காந்தி, மொரார்ஜி தேசாய், சர்தார் வல்லபாய் படேல் போன்ற குஜராத்திகள் அன்று அரசியலில் முழுமையாகக் கைக்குள் வைத்திருந்தனர்.
நேரு மட்டும் ஆப்கானிய வம்சாவழி காஷ்மீரி பண்டித் ஒரு ஒப்புக்கு சப்பானியாக இருந்தார்.
அவரது மகளான இந்திரா நேருவை குஜராத்தியரான ஃபெரோஸ் மணமுடிக்க நேரு தடையாயிருந்தபோது அவரை தன் மகனாகத் தத்தெடுத்து ஃபெரோஸ் காந்தி ஆக்கினார் மோகன்தாஸ்காந்தி.
இப்படித்தான் இந்திராநேரு இந்திராகாந்தி ஆனார்.
பார்சி(ஈரான்) வம்சாவழி (வந்தேறி)குஜராத்தியரான ஜாம்ஷெட்ஜி டாடா என்பவர் இன்று இந்தியாவின் தொழிற்சாலைத் தந்தை என்றழைக்கப்படுகிறார்.
இவர்தான் ஜார்கண்ட் மாநிலத்தில் ஜாம்ஷெட்பூர் இரும்பு உருக்காலையை நிறுவி பெரிதாக வளர்ந்த டாடா குழுமத்தை நிறுவியர்.
குஜராத்திய ஆதரவுடன் உலகப் பணக்காரர் பட்டியலில் இடம்பிடித்தனர் டாடா என்கிற வந்தேறி குஜராத்திகள்.
ஜார்கண்ட் மக்கள் வரைமுறையில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டு இன்று இந்தப் பணமுதலைகளுக்கு எதிராக மாவோயிஸ்ட் ஆக ஆயுதம் தூக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர்.
டாடா நானோ வங்காளிகளால் எதிர்க்கப்பட்டபோது ஓடோடி சென்று அதை குஜராத்திற்கே கொண்டு வந்தான் மோடி.
(டாடா வின் வலதுகரம் ஒரு தமிழர்தான்).
இன்று அசிம் ப்ரேம்ஜி , அம்பானி சகோதரர்கள், டாடா என உலகப்பணக்காரர்கள் குஜராத்திகளே.
இதற்குக் காரணம் குஜராத்தியரின் அரசியல் ஆளுமை.
தமிழரான காமராசர் மூலமே காங்கிரசை பிடித்து அதன்மூலம் ஹிந்தியாவையே கட்டுக்குள் கொண்டுவந்தனர் காந்தி குடும்பத்தாரும் அதன் பின் நின்ற குஜராத்தியரும்.
அதன்பிறகு கிங்மேக்கர் என்ற பட்டத்தை மட்டும் கொடுத்து காமராசரை சக்கையாகத் துப்பிவிட்டனர்.
டி.எம்.சௌந்தர் ராஜன் தமிழர் கிடையாது.
அவரது தாய்மோழி சௌராஷ்ட்ரா.
இந்த சௌராஷ்ட்ரா இன்று குஜராத்திகளால் விழுங்கப்பட்டுவிட்டது.
இப்போது யாராவது சௌராஷ்ட்ரா மக்களை பார்க்கவேண்டும் என்றால் தமிழகம்தான் வரவேண்டும்.
(தமிழனுக்கு இனவெறி கிடையாது அல்லவா?!)
மதம் என்ற அடையாளத்தைப் பயன்படுத்தி சிந்தி பேசும் மக்களையும் பாதி பாகிஸ்தானும் பாதி குஜராத்தும் விழுங்கிவிட்டன.
சிந்தி மற்றும் சௌராஷ்ட்ராப் பகுதியை நீக்கிவிட்டுப் பார்த்தால் இன்றைய குஜராத் மாநிலத்தில் 30%தான் அசல் குஜராத்தி மண்.
தமிழர்களுடனான ஹிந்தியாவின் போரில் குஜராத்தியர்களும் மறுக்கமுடியாத பங்களிப்பு செய்துள்ளனர்.
சிந்து சமவெளி நாகரீகத்தை உரிமை கோருவது,
குமரிக் கண்டத்திற்கு கிடைக்கவேண்டிய கடலாராய்ச்சி நிதியைத் தடுத்து பகவான் கிருஷ்ணனின் துவார்கா நகரத்தைத் தேடுகிறோம் என்று கேம்பே (gulf of khambat) கடற்பகுதியில் அந்த நிதியைக் கொட்டி வீணாக்கியது என்று குஜராத்தியர்கள் ஹிந்திய பேரினத்தின் பங்காளிகள் என்று நிறுவிவருகிறார்கள்.
பிழைப்பு தேடி பம்பாய் சென்ற தமிழர்கள் அங்கே நிறைந்த பிறகு குஜராத்திற்குள்ளும் நுழைந்தனர்.
சூரத், பரோடா, ஜாம் நகர், அகமதாபாத் போன்ற நகரங்களில் தமிழர்கள் கணிசமான அளவு வாழ்கிறார்கள்.
குஐராத்தியர்கள் தமது மாநிலத்திற்கு அடுத்தபடியாக வாழ்வது அண்டை மாநிலமான மகாராஷ்ட்ரா அதற்கடுத்தபடியாக வாழ்வது தமிழகம்.
ஆனால் தமிழன் அங்கே வாழ்வது தொழிலாளியாக.
குஜராத்தி இங்கே வாழ்வது முதலாளியாக.
குஜராத்திகள் தென்காசி அருகே மரம் அறுக்கும் சா-மில்கள் கூட சொந்தமாகக்கொண்ட முதலாளிகளாக உள்ளனர்.
தமிழன் எங்கும் தொழிலாளிதான்.
சௌகார்பேட்டையில் நவராத்ரி இரவுகளில் பாரம்பரிய உடையணிந்து தான்டியா கோலாட்டம் ஆடும் குஜராத்திகளை பார்த்தால் தெரியும்.
(சென்னையில் சௌகார்பேட்டையில் இந்தியில் பெயர்பலகை, தெருப்பெயர்கள் வைக்குமளவுக்கு குஜராத்திகளும் மார்வாடிகளும் முழுதாக ஆக்கிரமித்திருப்பது கண்கூடு)
அதைப் பார்த்துவிட்டு மும்பை (சேரிப்பகுதியான) தாராவியைப் பார்த்தால் வயிறு எரிகிறது.
மோடி இலங்கைக்குப் போறானாம்
தமிழர்கள் அதைப்பற்றிப் பேசத் தேவை ஒன்றும் இல்லை.
( 16 மார்ச் 2015, 10:23 AM )
Friday, 1 August 2014
குஜராத் கலவரம்
//பயங்கரமும் படுகொலையும் தாண்டவமாடிய
குஜராத்திலிருந்து வருகிறேன். வெறுப்பாலும்
அச்சத்தாலும் நான் மரத்துப் போய்விட்டேன்.
என் இதயம்
நோயுற்று ஆன்மா நைந்து விட்டது.
குற்றவுணர்வையும் அவமானத்தையும்
சுமக்கும் வலிமையின்றி என் தோள்கள்
வலிக்கின்றன.
அகமாதபாத் கலவரத்தில் தப்பிப் பிழைத்த
அகதிகள் சுமார் 53,000 பேர். சாக்குக்
கூரைகளின் கீழே ஒண்டிக்கொண்டிருக்கும்
ஆண்கள், பெண்கள், குழந்தைகள்….
அவர்களது முகத்தில் ததும்பும் துயரம்…
இப்படியொரு துக்கத்தை நான்
இதுவரை கண்டதில்லை.//
// பெண்களின் மீதான பாலியல்
வன்முறை வேறு எந்தக் கலவரத்தின் போதும்
இவ்வளவு கொடூரமாக நடந்ததில்லை.
குடும்ப உறுப்பினர்கள், சிறுவர் சிறுமிகளின்
கண் முன்னே பெண்களைக் கும்பல் கும்பலாகக்
கற்பழித்திருக்கிறார்கள்.
கற்பழிப்பு முடிந்தவுடன் அந்தப்
பெண்களை எரித்துக் கொன்றிருக்கிறார்கள்;
சுத்தியலால் மண்டையில்
அடித்தே கொன்றிருக்கிறார்கள்; ஒரு இடத்தில்
ஸ்குரூ டிரைவரால்
குத்தியே கொன்றிருக்கிறார்கள்.
அமன் சௌக் முகாமிலிருந்த பெண்கள்
கூறியவற்றைக்
கேட்கவே குலை நடுங்குகிறது. திடீரென
வீடு புகுந்த கும்பல், பெண்களின்
முன்னே தங்கள் ஆடைகளை ஒவ்வொன்றாய்க்
களைந்து விட்டு கையில் பயங்கரமான
ஆயுதங்களுடன் அம்மணமாக
நின்று பெண்களை நடுங்கச்
செய்து பணியவைத்திருக்கிறது.
அகமதாபாத்தில் நான் சந்தித்த
பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், உயிர்
பிழைத்த மக்கள் ஆகிய அனைவரும்
கூறுவது இதுதான். ”குஜராத்தில்
நடந்தது கலவரமல்ல; ஒரு பயங்கரவாதத்
தாக்குதல், திட்டமிட்ட இனப் படுகொலை”.
ஒரு இராணுவத் தாக்குதலைப் போல
எல்லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது//
// கைகளில் முசுலீம்
குடும்பங்களின் பெயர்கள், சொத்து விவரம்
அடங்கிய கம்ப்யூட்டர் காகிதங்களை அவர்கள்
வைத்திருந்தார்கள்… இந்து – முசுலீம்
கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் யார்,
அவர்களில் யாரைத் தாக்க வேண்டும்
என்பது வரை துல்லியமான விவரங்கள்
அவர்கள் கையில் இருந்தன//
நன்றி: http://www.vinavu.com/2013/03/14/
gujarat-genocide-harsh-mander/
( https://m.facebook.com/photo.php?fbid=416998918403767&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739 )