Saturday 25 June 2016

ஈ.வே.ரா மண்மீட்பில் உதவினாரா?

மாநில மண்மீட்பில் உதவினாரா ஈ.வே.ரா?

"மொழி வழி மாகாணங்கள் பிரிவதிலுள்ள கேட்டையும் விபரீதத்தையும் முன்னரே பல தடவை எடுத்துக் காட்டியுள்ளோம்.
மீண்டும் கூறுகிறோம்.
மொழி வாரி மாகாணக் கிளர்ச்சியில் தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டாம்."
(விடுதலை 21.1.47)
----------------
“தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்கவேண்டும் என்பதும்,
தமிழரசு, தமிழராட்சி, தமிழ்மாகாணம் என்று பேசப்படுவனவெல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும்,
குறைப்பதற்காகவும் செய்யப்படுகிற காரியங்கள் என்பதை நீங்கள் உணரவேண்டும்.” (ஈ.வெ.ரா.,
விடுதலை 11.01.1947)
-------------------
"சென்னை மாகாணத்தை நான்கு கூறுகளாக ஆக்க வேண்டுமென்பது
கண்டிப்பாக அரசியல் வாழ்வையே தங்கள் ஜீவனமாக, வியாபாரமாக, பதவி- பட்டம்- பணம் சேர்த்தல் முதலிய காரியங்களுக்கு வழியாக வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்தும் சிலர்
தங்கள் நலனுக்காக இதை- இந்தப் பிரிவினையை வேண்டுவார்களானால், வலியுறுத்துவார்களானால்
அதற்கு இடம் கொடுப்பது திராவிட கலாச்சாரத்துக்கும் திராவிட சமுதாயத்துக்கும், திராவிடத் தலை மொழியாகிய தமிழுக்கும் தேய்வு- அழிவு ஏற்பட்டுவிடுமென்று எச்சரிக்க விரும்புகிறேன்" (ஈ.வே.ரா, விடுதலை 01.08.1948)
------------------------

“ஆந்திரா-தமிழ்நாடு பிரிவினை என்பது 1921 இலேயே முடிந்து விட்டது.
அதனுடைய எல்லைகளும் அப்போதே தீர்ந்துபோய்விட்டன.
இன்றைக்கு 30வருடங்களாக அனுபோக பாத்தியதைகளும் ஏற்பட்டுவிட்டன.
இந்த 30 வருடங்களாக எல்லையிலேயே தமிழனோ தெலுங்கனோ காங்கிரசு அனுபோகத்தை எதிர்த்தவர்களும் இல்லை.
யாராவது எதிர்த்தார்கள் என்றால் காரியம் நடப்பதற்கு முட்டுக்கட்டை போடவேண்டும் எனபவர்கள் எதிர்த்தார்களே தவிர மாற்றவேண்டும் என்பவர்கள் எதிர்க்கவே இல்லை.
தமிழர்களில்தான் ஆகட்டும் இன்றைய தினம் தமிழ்நாடு எல்லைக்குப் போராடுகிறோம் என்று வருகிறார்களே, வீரர்கள், இவர்கள் இந்த 20,30 வருடங்களாக என்ன செய்தார்கள்?
இன்றைய தினம் சிலர் தங்கள் விளம்பரத்திற்காக-பிழைப்புக்காகத் தவிர,
“குமரி முதல் வேங்கடம் வரை” என்கிற அறிவு இன்றைக்கு வருவானேன்?”

(பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்,
தொகுதி-2, பக்கம் 723, 724)
--------------------------

தினத்தந்தி (11.10.55)
நிருபர்: தமிழ் தாலுகாக்கள் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, சித்தூர் ஆகிய தாலுகாக்கள் மலையாளத்துடன் சேர்ந்து விட்டதே!
இது பற்றி உங்கள் கருத்து என்ன?
ஈ.வெ.ரா. : இது பற்றி எனக்குக் கவலை இல்லை.
மலையாளத்துடன் அவைகளைச் சேர்க்க வேண்டியது தான்.
நிருபர்: கவலை இல்லை என்கிறீர்கள்.அவைகள் தமிழ் தாலுகாக்கள் தானே?
ஈ.வெ.ரா. : ஆமாம், சமீபத்தில் சென்னைக்கு வந்தார் பணிக்கர்.
(மொழிவாரி மாகாண அமைப்புக் கமிட்டி மெம்பர்) அவரை நான் சந்தித்துப் பேசினேன்.
தொழிலுக்காகத் தமிழர்கள் அங்கு வந்தார்களே தவிர, நிலம் மலையாளத்தைச் சேர்ந்தது என்று பணிக்கர் சொன்னார்.
நானும் சரி என்று ஏற்றுக் கொண்டேன்."

அதே பேட்டியில் வேறொரு இடத்தில்
நிருபர்: கொள்ளேகாலம் கன்னட ராஜ்ஜியத்துடன் சேர்ந்துவிடுமே..!
இது பற்றி உங்கள் கருத்து என்ன..?
ஈ.வே.ரா: கொள்ளேகாலம் பறிபோனது பற்றி எனக்கு கவலை இல்லை. அப்பகுதி நமக்கு சம்மந்தமில்லாதது. நம்மிடமுள்ள ஒரு பளு நீங்கியது என்று சொல்லலாம்.

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது அண்டைமாநிலங்கள் தமிழருக்கு சொந்தமான பல பகூதிகளை தங்கள் மாநிலத்துடன் சேர்த்துக்கொமொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது அண்டைமாநிலங்கள் தமிழருக்கு சொந்தமான பல பகூதிகளை தங்கள் மாநிலத்துடன் சேர்த்துக்கொண்டனர்.

அன்று தமிழர் மண்ணை மீட்க போராடியோர் ம.பொ.சி யும் மார்சல் நேசமணியும்தான்.

ம.பொ.சி சென்னையை ஆந்திரரிடமிருந்து காத்ததோடு நெல்லூர் வரை மீட்கப் போராடி திருத்தணி வரை மீட்டுத் தந்தார்.

மார்சல் நேசமணி திருவனந்தபுரம் வரை மீட்கப்போராடி கன்னியாகுமரியையாவது மீட்டுத் தந்தார்.

தற்போது திராவிடவாதிகள் இவ்விரு தலைவர்களையும் கிண்டல் செய்து பதிபோட்டுவிட்டு,
ஏதோ ஈ.வே.ரா மண்மீட்புக்காக குரல் கொடுத்ததாகவும்
தனி தமிழ்நாடு கேட்டதாகவும்
மலையாளிகளைக் கண்டித்ததாகவும்
ஆதரமில்லாத கருத்துகளைப் பரப்பிவருகின் ஆதரமில்லாத கருத்துகளைப் பரப்பிவருகின்றனர்.

ஆனால் ஈ.வே.ரா வோ அண்ணாதுரையோ வேறு எந்த திராவிட தலைவரோ மண்மீட்பின் போது ஒரு மண்ணும் செய்யவில்லை.

No comments:

Post a Comment