Showing posts with label அண்டை மாநிலங்கள். Show all posts
Showing posts with label அண்டை மாநிலங்கள். Show all posts

Tuesday, 19 June 2018

TNPSC தேர்வு எழுதிய வடமாநிலத்தாருக்கு சாதகமான வினாத்தாள் கிடைத்தது

TNPSC தேர்வு எழுதிய வமாநிலத்தாருக்கு சாதகமான வினாத்தாள் கிடைத்தது

TNPSC தேர்வு முடிவுகள் வரவுள்ள நிலையில் இது பற்றி அறிவோம்

குரூப் 4 தேர்வு எழுதிய வடமாநில இளைஞர்கள்!- வெடிக்கும் சர்ச்சை

தமிழகத்தில் நடந்த குரூப் 4 தேர்வில், மத்தியப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தை பூர்வீகமாகக்கொண்ட இளைஞர்கள் தேர்வு எழுதிய சம்பவம் சர்ச்சைக்குள்ளாகி யிருக்கிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் 4 பணிகளுக்கான தேர்வை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
சுமார் 10 ஆயிரம் பணியிடங்களுக்கு நடந்த இந்தத் தேர்வை எழுத, 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். 

இதில், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

வெளிமாநிலத்தவர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்க அனுமதித்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு வைகோ உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில், 157 தேர்வு மையங்களில் 39,906 பேர் குரூப் 4 தேர்வு எழுதினார்கள்.
இதில், ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்திலுள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் நடந்த குரூப் 4 தேர்வில், மத்தியப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களைச் சேர்ந்த 5 இளைஞர்கள் பங்கேற்றனர்.

இணையதளத்தின் வழியாக விண்ணப்பித்திருந்த, தமிழ்மொழி தெரியாத இவர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதியுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் படித்துவிட்டு வேலை கிடைக்காத நிலையில், பொறியியல் பட்டதாரிகள்கூட துப்புரவுப் பணிக்கு விண்ணப்பிக்கும் அவல நிலை உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அடிப்படை பணிகளுக்கான தேர்வுகளில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை அனுமதித்தது வேலையில்லா தமிழக இளைஞர்களையும், அவர்களது பெற்றோர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

16.02.2018
விகடன்
-------------

`யாருக்காக நடந்தது டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு?'
- தமிழக மாணவர்களைத் தவிக்க வைத்த வினாத்தாள்

தமிழக அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் வி.ஏ.ஓ பதவி உள்பட 9,351 பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது.

`வடமாநிலத்தவர்கள் மட்டுமே பயன் அடையும் வகையில் வினாத்தாள் அமைந்துவிட்டது.
மத்திய அரசின் திட்டங்கள்தான் இடம் பெற்றிருக்கிறதே தவிர, தமிழர் நாகரிகம், பண்பாடு குறித்தெல்லாம் எந்தக் கேள்வியும் இடம்பெறவில்லை' எனக் குமுறுகின்றனர் கல்வியாளர்கள்.

ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் அறிவிக்கப்படும்போது, லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பிப்பது வழக்கம்.
இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை வெளியானபோது, யாரும் எதிர்பாராத வகையில் 20,69,000 பேர் விண்ணப்பித்தனர்.
டி.என்.பி.எஸ்.சி வரலாற்றிலேயே இந்த அளவுக்கு விண்ணப்பங்கள் வந்து சேர்ந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு குவிந்தன.

நேற்று நடந்த இந்தத் தேர்வில் 17,52,000 பேர் எழுதினர்.
கடந்த ஆண்டுகளைப்போல் அல்லாமல் முற்றிலும் மாறுபட்ட தளத்தில் வினாத்தாள் அமைந்திருந்ததைத் தேர்வர்கள் எதிர்பார்க்கவில்லை.
குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில், 157 தேர்வு மையங்களில் 39,906 பேர் குரூப் 4 தேர்வை எழுதினார்கள்.

இதில், ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்திலுள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் நடந்த குரூப் 4 தேர்வில் மத்தியப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் பங்கேற்றனர்.
தமிழ் மொழி தெரியாத இவர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதியுள்ளனர்.

வடமாநிலத்தவர்கள் திரண்டு வந்து தேர்வு எழுதியதைத் தமிழ் ஆர்வலர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
"தமிழ்மொழியை அறியாத இவர்கள், வி.ஏ.ஓ உள்ளிட்ட தேர்வுகளில் வெற்றி பெற்றால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.
மாநிலத்தின் மொழிகளைப் பேசுபவர்களுக்கே அரசுப் பணிகளில் முக்கியத்துவம் தர வேண்டும்.
'டி.என்.பி.எஸ்.சி விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்' எனக் குரல் கொடுத்தும் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை.
தமிழர்களைப் புறக்கணிக்கும் ஒன்றாகவே இதைப் பார்க்க முடிகிறது" என்கின்றனர் வேதனையோடு.

"அரசுப் பணி கனவுடன் குரூப் 4 தேர்வுக்குத் தயாராகிவந்த லட்சக்கணக்கான கிராமத்து இளைஞர்களை வஞ்சித்திருக்கிறது தேர்வாணையம்.
தமிழக அரசுத் துறைகளில், தமிழ்நாட்டில் இருக்கும் பணிகளுக்கான போட்டித்தேர்வில், தமிழ்நாடு பற்றிய கேள்விகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
இந்திய சுதந்திரப் போராட்டம் (இந்திய விடுதலை இயக்கம்) தொடர்பாக ஒரு வினாகூட இல்லை.
அறிவுத் திறன் (aptitude test) பகுதியில், கணிதப் பாடத்துக்கு வெளியே கேள்விகளே இடம்பெறவில்லை.
இவற்றையெல்லாம்விடக் கொடுமை, தமிழக வரலாறு, தமிழர் நாகரிகம், தமிழர் கலைகள், பண்பாட்டு சின்னங்கள் பற்றி எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை.
தமிழக ஆறுகள், வளங்கள், தொழில்கள், தமிழ்நாட்டுப் பிரச்னைகள் பற்றிய எந்த வினாவும் இல்லை.
கிராம நிர்வாக அலுவலர் பணிக்கும் சேர்த்துதான் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.
ஆனால், கிராமப்புற நிர்வாகம் பற்றிய கேள்விகளும் கேட்கப்படவில்லை"
என வேதனையோடு பேசுகிறார் கல்வியாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

தொடர்ந்து நம்மிடம் விவரித்தார்.
"இந்தத் தேர்வில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்தாலும் அதிர்ச்சியே மிஞ்சுகிறது. 'இந்தியா - மாலத்தீவு இடையிலான ராணுவ ஒத்திகைக்கு என்ன பெயர்' ;
'இந்திய விமானப்படையிலிருந்து கழற்றிவிடப்பட்ட ஊர்தியின் பெயர் என்ன' ;
'2017 அக்டோபரில் டெல்லியில் தொடங்கப்பட்ட நிறுவனம் எது'
இத்துடன், பல்வேறு யோஜனாக்கள் அறிவிக்கப்பட்ட ஆண்டுகள் குறித்த கேள்விகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வினாத்தாளை அப்படியே அச்சுப் பிசகாமல் ஏதேனும் ஒரு வட இந்திய மாநிலத்தில், வினாத்தாளாக வைத்திருந்தால் மதிப்பெண்களை அள்ளியிருப்பார்கள்.
அரசு நிர்வாகத்துக்கு யார் வர வேண்டும் என்பதைவிடவும் யார் வரக் கூடாது என்பதை மனதில் வைத்தே வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளதாகத்தான் தெரிகின்றன.
அறிவியல், கணிதப் பகுதிகளில் நேரடியாகப் பள்ளிப் புத்தகங்களிலிருந்து வந்த வினாக்கள் மட்டும்தான் சற்று ஆறுதலை அளித்துள்ளன.
ஆனால், பொது அறிவுப் பகுதியைக் கிராமப்புற மாணவர்கள் எதிர்கொள்ள முடியாத அளவுக்குக் கேள்விகள் வந்துள்ளன.
குறிப்பாக, முதல் தலைமுறைப் பட்டதாரி இளைஞர்களை, அரசுப்பணிப் பக்கம் வரவிடாமல் விரட்டுகின்ற முயற்சியாகவே பார்க்க முடிகிறது.
மிக நன்றாகத் திட்டமிட்டுத் துல்லியமாகத் தேர்வு நடத்துவதில் அபாரமான நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தியுள்ள தேர்வாணையம், வினாத்தாள் அமைப்பதில் இந்த அளவுக்குச் சறுக்கியது ஏன்?
இப்படியொரு வினாத்தாளை வடிவமைத்தன் மூலம், தமிழக கிராமப்புற இளைஞர்களுக்கு மிகப் பெரிய அநீதி இழைத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
பொதுப் பாடப் பகுதியில் மட்டுமல்ல; மொழித் தாளிலும்கூட, ஒருவிதத் தவறான அணுகுமுறை தெரிகிறது.
விடையை நோக்கி இட்டுச் செல்வதாக வினா அமைய வேண்டும் என்பது பொது விதி.
ஆனால், சில வினாக்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம் (the structuring of the question) நகைப்புக்கு உரியதாக இருக்கிறது.
நடப்பு நிகழ்வுகள் பகுதியில், நாம் அதிகம் அறிந்திராத, தமிழ் நாளிதழ்களில் அதிகம் இடம் பெறாத செய்திகளைத் ‘தேடித் தேடி’ கேட்டிருக்கிறார்கள்.
ஏன் இந்த அநீதிப் போக்கு?  நகர்ப்புற இளைஞர்களில் யாருக்கெல்லாம் இணையம் வழியாகச் செய்திகளை வாசிக்கின்ற வழக்கம் இருக்கிறதோ அவர்களால் மட்டுமே சில வினாக்களுக்கு விடை அளிக்க முடியும்.
ஒவ்வொரு வினாவும் அது வடிவமைக்கப்பட்டுள்ள விதத்தையும் முழுமையாகப் பார்த்தால், கிராமத்து இளைஞர்கள் எந்த அளவுக்கு வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரியும்" என்றார் வேதனையோடு.

விகடன்
(12.02.2018)

Sunday, 23 April 2017

தேனி மாவட்டத்தைக் கைப்பற்றத்துடிக்கும் கேரள அரசு

தேனி மாவட்டத்தைக் கைப்பற்றத்துடிக்கும் கேரள அரசு!

தேனி மாவட்டம், கம்பமெட்டில் கடந்த சில மாதங்களாகவே கேரள அதிகாரிகள் தமிழக எல்லையோரத்தைச் சொந்தம் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த மாதம் தமிழக வனப்பகுதிக்குள் கேரளாவின் கலால் மற்றும் ஆயத்தீர்வு துறையினர் கம்பமெட்டு எல்லையைக் கடந்து அத்துமீறி நுழைந்து சோதனைச் சாவடி அமைத்தனர்.

அதைத் தடுக்க முயன்ற தமிழக சோதனைச் சாவடி பணியாளர்களை, கேரள போலீஸார் தள்ளிவிட்டுக் கண்டபடி தாக்கியுள்ளனர்.
இதனால் பிரச்னை ஏற்பட்டது.

மேலும், தமிழக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தைக்கு வராமல் கேரள அதிகாரிகள் இழுத்தடித்து வந்தனர்.

பின்னர், இருமாநில அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்குப்பின்னர், இரண்டு மாநிலத்தவர்களின் முன்னிலையில் சர்வே பணிகள் மும்மரமாக நடந்தன.

சோதனைச் சாவடி தமிழக எல்லைப் பகுதியில் இருப்பது இறுதியில் உறுதியானது.
இதனால், கேரள அதிகாரிகள் அமைதி காத்தனர்.
இதனால் கேரள சோதனைச் சாவடி தமிழக பகுதியிலேயே கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி இரவு, கேரள ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர், தமிழக எல்லைப்பகுதியில் கொடிக்கம்பம் நட்டு கட்சிக்கொடி ஏற்றினர்.
இதனையறிந்த வனத்துறை ஊழியர்கள் கொடிக்கம்பம் ஊன்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் கட்சிக்காரர்களுக்கும் வனத்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், இப்பிரச்னை குறித்து தமிழக வனத்துறை ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் நேற்று மாலை உத்தமபாளையம் டிஎஸ்பி அண்ணாமலை தலைமையில் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கம்பம் மெட்டு பகுதியில் தமிழக எல்லைப்பகுதியில் இருந்த கொடிக்கம்பத்தை அகற்றினர்.

இதனால் ஆளுங்கட்சியினர் சிலர் கோஷம் எழுப்பினர்.
மேலும் தமிழக காவல்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில், கேரள காவல்துறையினர் 100க்கும் மேற்பட்டோர் எல்லைப் பகுதியில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையறிந்த தமிழக செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அப்போது கேரள ஆளுங்கட்சியினர் மற்றும் கேரள காவல்துறையினர், தமிழக பத்திரிக்கையாளர்களை அவதூறாகப் பேசி தாக்க முயற்சிசெய்தனர்.
இதனால் தமிழக - கேரள எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.

நன்றி: மின்னம்பலம் இணையம்

Sunday, 5 February 2017

ஆந்திரா தமிழகத்தைத் தின்கிறது !

ஆந்திரா தமிழகத்தைத் தின்கிறது !

காட்பாடி அருகே உள்வாங்கிய எல்லை!

20 தமிழர்களைக் கொன்று, தமிழகக் கோவிலை ஆக்கிரமித்தது என ஆந்திராவின் அட்டூழியம் தற்போது காட்பாடி அருகே ஆந்திர எல்லை தமிழகத்திற்கு உள்ளே நீட்டிக்கும் வரை வந்துவிட்டது.

போன ஆண்டு தாளூர் எல்லையை கேரளா ஆக்கிரமித்தது.

தமிழர் எல்லையைக் காக்க ஒரு படை இல்லை.

தமிழ் மண் சுருங்கிக்கொண்டே வருகிறது.
--------------
  தகவலுக்கு நன்றி Arjun Vr

Wednesday, 14 September 2016

பெங்களூர் தமிழர்களே ! திருப்பி அடியுங்கள்!

பெங்களூர் தமிழர்களே !

திருப்பி அடியுங்கள்!

நீங்கள் அடக்கி வாசிக்கும்வரை தமிழகத் தமிழர்கள் களத்தில் இறங்கமாட்டார்கள்.

எதற்கு பயம்?
பெங்களூரில் 10ல் 6பேர் தமிழன்தான்.
பெங்களூர் நம் தாய்மண்.

சிறுபான்மைக் கன்னடனைக் கண்டு அஞ்சாதீர்கள்.

கூட்டமாக எங்கும் போங்கள்.
எந்த கன்னடப் பொறுக்கி வம்பிழுத்தாலும் செவுளில் அறைந்து விரட்டியடியுங்கள்.

2011 டிசம்பரில், போராட்டம் செய்து மலையாளிகளால் தாக்கப்பட்டு விரட்டப்பட்ட இடுக்கி தமிழர்களை (பெண்களை) தேவாரம் எனுமிடத்தில் முகாமமைத்துத் தங்கவைத்துவிட்டு ,
ஒன்றரை லட்சம் கம்பம் தமிழர்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு (பெரும்பாலும் பெண்கள்) எல்லைதாண்டிச் சென்று கடைசியில் கேரளாவைக் கெஞ்சவைத்தது தெரியுமா தெரியாதா?

Saturday, 2 July 2016

சென்னையை தமிழர் மீட்பதில் தடையாக இருந்த ஈ.வே.ரா

சென்னையை தமிழர் மீட்பதில் தடையாக இருந்த ஈ.வே.ரா

2.1.1953இல் மேயர் செங்கல்வராயன் வீட்டில் சென்னையை மீட்பதற்கான கூட்டம் நடைபெற்றபோது ஈ.வே.ரா அதில் தமிழரைக் குழப்பும் விதத்தில் பேசினார்.

இராயப் பேட்டை இலட்சுமிபுரத்தில் 5.1.1953இல் நடந்த கூட்டத்திலும் தமிழர்களைகக் குழப்பும் வகையில் பேசினார்.

"இரண்டு நாட்களுக்கு முன் மேயர் வீட்டில் நடந்த சர்வ கட்சிக் கூட்டம் என்பதிலும் நான் பேசிய போது இதையே சொல்லியிருக்கிறேன்.
அதாவது, இந்தப் பிரிவினையில் ஏற்படுகிற தொல்லைகள் எல்லாம் மத்திய அரசாங்கத்தாலும், மத்திய அரசாங்கத்தில் செல்வாக்கு உடையவர்களாலும் ஏற்படுகிற தொல்லைகளே தவிர,. வேறு ஆந்திர மக்கள் தொல்லை அல்ல"

"இன்று காலையிலுங் கூட டாக்டர் A.கிருஷ்ணசாமி அவர்களிடம் எனக்குச் சென்னை நகரம் முக்கியமல்ல,
அன்னியன் ஆதிக்கமற்ற, அன்னியன் சுரண்டலற்ற பூரண சுயேட்சையுள்ள பிரதேசம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதுதான் தேவை என்று சொன்னேன்."

"சென்னை நகரம் தமிழருக்கோ, தமிழ்நாட்டுக்கோ பெரிய தொண்டு செய்திருக்கிறது, செய்து வருகிறது, அல்லது செய்ய முன் வரும் என்பதற்காக அல்ல என்றும் சொன்னேன்"

"ஒரு சமயம் சென்னை போய்விடுமானாலும் நான் ஒன்றும் அதிகமாகக் கவலைப்பட மாட்டேன் என்றும்,
சென்னை ஒழிந்து போனால் பாக்கி உள்ள தமிழ்நாட்டை என் இஷ்டம் போல ஆக்கி நாளைக்கே பூரண விடுதலை பெற்ற பிரதேசமாக ஆக்க விளம்பரம் செய்து விட முடியும் என்று சொன்னேன்"

"இவை ஒருபக்கம் இருந்தாலும் நாம் பிரயத்தனப்படா விட்டால் சென்னை நகரம் ஆந்திரர்களுக்குப் போய் விடுமோ என்கிற கவலை சிறிதும் வேண்டியதில்லை.
ஏனெனில் அநேகமாகத் தமிழ்நாட்டு பிராமணர்கள் சென்னையில் வாழ்கிறார்கள்.
அவர்கள் ஒரு நாளும் சென்னை ஆந்திராவுடன் சேரவோ, தனி மாகாணமாக ஆக்கவோ சம்மதிக்கமாட்டார்கள்.
அவர்கள் இதில் வெற்றி பெற்றே தீருவார்கள்.
ஆதலால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று இன்று காலையில் சொன்னேன்"

விடுதலை 7.1.1953,
விடுதலை 8.1.1953.

நன்றி: Kathir Nilavan

Saturday, 25 June 2016

ஈ.வே.ரா மண்மீட்பில் உதவினாரா?

மாநில மண்மீட்பில் உதவினாரா ஈ.வே.ரா?

"மொழி வழி மாகாணங்கள் பிரிவதிலுள்ள கேட்டையும் விபரீதத்தையும் முன்னரே பல தடவை எடுத்துக் காட்டியுள்ளோம்.
மீண்டும் கூறுகிறோம்.
மொழி வாரி மாகாணக் கிளர்ச்சியில் தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டாம்."
(விடுதலை 21.1.47)
----------------
“தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்கவேண்டும் என்பதும்,
தமிழரசு, தமிழராட்சி, தமிழ்மாகாணம் என்று பேசப்படுவனவெல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும்,
குறைப்பதற்காகவும் செய்யப்படுகிற காரியங்கள் என்பதை நீங்கள் உணரவேண்டும்.” (ஈ.வெ.ரா.,
விடுதலை 11.01.1947)
-------------------
"சென்னை மாகாணத்தை நான்கு கூறுகளாக ஆக்க வேண்டுமென்பது
கண்டிப்பாக அரசியல் வாழ்வையே தங்கள் ஜீவனமாக, வியாபாரமாக, பதவி- பட்டம்- பணம் சேர்த்தல் முதலிய காரியங்களுக்கு வழியாக வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்தும் சிலர்
தங்கள் நலனுக்காக இதை- இந்தப் பிரிவினையை வேண்டுவார்களானால், வலியுறுத்துவார்களானால்
அதற்கு இடம் கொடுப்பது திராவிட கலாச்சாரத்துக்கும் திராவிட சமுதாயத்துக்கும், திராவிடத் தலை மொழியாகிய தமிழுக்கும் தேய்வு- அழிவு ஏற்பட்டுவிடுமென்று எச்சரிக்க விரும்புகிறேன்" (ஈ.வே.ரா, விடுதலை 01.08.1948)
------------------------

“ஆந்திரா-தமிழ்நாடு பிரிவினை என்பது 1921 இலேயே முடிந்து விட்டது.
அதனுடைய எல்லைகளும் அப்போதே தீர்ந்துபோய்விட்டன.
இன்றைக்கு 30வருடங்களாக அனுபோக பாத்தியதைகளும் ஏற்பட்டுவிட்டன.
இந்த 30 வருடங்களாக எல்லையிலேயே தமிழனோ தெலுங்கனோ காங்கிரசு அனுபோகத்தை எதிர்த்தவர்களும் இல்லை.
யாராவது எதிர்த்தார்கள் என்றால் காரியம் நடப்பதற்கு முட்டுக்கட்டை போடவேண்டும் எனபவர்கள் எதிர்த்தார்களே தவிர மாற்றவேண்டும் என்பவர்கள் எதிர்க்கவே இல்லை.
தமிழர்களில்தான் ஆகட்டும் இன்றைய தினம் தமிழ்நாடு எல்லைக்குப் போராடுகிறோம் என்று வருகிறார்களே, வீரர்கள், இவர்கள் இந்த 20,30 வருடங்களாக என்ன செய்தார்கள்?
இன்றைய தினம் சிலர் தங்கள் விளம்பரத்திற்காக-பிழைப்புக்காகத் தவிர,
“குமரி முதல் வேங்கடம் வரை” என்கிற அறிவு இன்றைக்கு வருவானேன்?”

(பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்,
தொகுதி-2, பக்கம் 723, 724)
--------------------------

தினத்தந்தி (11.10.55)
நிருபர்: தமிழ் தாலுகாக்கள் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, சித்தூர் ஆகிய தாலுகாக்கள் மலையாளத்துடன் சேர்ந்து விட்டதே!
இது பற்றி உங்கள் கருத்து என்ன?
ஈ.வெ.ரா. : இது பற்றி எனக்குக் கவலை இல்லை.
மலையாளத்துடன் அவைகளைச் சேர்க்க வேண்டியது தான்.
நிருபர்: கவலை இல்லை என்கிறீர்கள்.அவைகள் தமிழ் தாலுகாக்கள் தானே?
ஈ.வெ.ரா. : ஆமாம், சமீபத்தில் சென்னைக்கு வந்தார் பணிக்கர்.
(மொழிவாரி மாகாண அமைப்புக் கமிட்டி மெம்பர்) அவரை நான் சந்தித்துப் பேசினேன்.
தொழிலுக்காகத் தமிழர்கள் அங்கு வந்தார்களே தவிர, நிலம் மலையாளத்தைச் சேர்ந்தது என்று பணிக்கர் சொன்னார்.
நானும் சரி என்று ஏற்றுக் கொண்டேன்."

அதே பேட்டியில் வேறொரு இடத்தில்
நிருபர்: கொள்ளேகாலம் கன்னட ராஜ்ஜியத்துடன் சேர்ந்துவிடுமே..!
இது பற்றி உங்கள் கருத்து என்ன..?
ஈ.வே.ரா: கொள்ளேகாலம் பறிபோனது பற்றி எனக்கு கவலை இல்லை. அப்பகுதி நமக்கு சம்மந்தமில்லாதது. நம்மிடமுள்ள ஒரு பளு நீங்கியது என்று சொல்லலாம்.

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது அண்டைமாநிலங்கள் தமிழருக்கு சொந்தமான பல பகூதிகளை தங்கள் மாநிலத்துடன் சேர்த்துக்கொமொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது அண்டைமாநிலங்கள் தமிழருக்கு சொந்தமான பல பகூதிகளை தங்கள் மாநிலத்துடன் சேர்த்துக்கொண்டனர்.

அன்று தமிழர் மண்ணை மீட்க போராடியோர் ம.பொ.சி யும் மார்சல் நேசமணியும்தான்.

ம.பொ.சி சென்னையை ஆந்திரரிடமிருந்து காத்ததோடு நெல்லூர் வரை மீட்கப் போராடி திருத்தணி வரை மீட்டுத் தந்தார்.

மார்சல் நேசமணி திருவனந்தபுரம் வரை மீட்கப்போராடி கன்னியாகுமரியையாவது மீட்டுத் தந்தார்.

தற்போது திராவிடவாதிகள் இவ்விரு தலைவர்களையும் கிண்டல் செய்து பதிபோட்டுவிட்டு,
ஏதோ ஈ.வே.ரா மண்மீட்புக்காக குரல் கொடுத்ததாகவும்
தனி தமிழ்நாடு கேட்டதாகவும்
மலையாளிகளைக் கண்டித்ததாகவும்
ஆதரமில்லாத கருத்துகளைப் பரப்பிவருகின் ஆதரமில்லாத கருத்துகளைப் பரப்பிவருகின்றனர்.

ஆனால் ஈ.வே.ரா வோ அண்ணாதுரையோ வேறு எந்த திராவிட தலைவரோ மண்மீட்பின் போது ஒரு மண்ணும் செய்யவில்லை.

Sunday, 3 April 2016

தமிழர் புவிப் பரவல் (வரைபடம்)

தமிழர் புவிப் பரவல் (வரைபடம்)

புவியியல் ரீதியாக தமிழர் பரவல்
(geographical distribution of tamil people)
படத்துடன் தமிழக மாநிலத்தின் வரைபடத்தைப் பொருத்திப் பார்த்தபோது கிடைக்கும் விடை.

Thursday, 31 March 2016

பறிபோகும் நெய்வேலி மின்சாரம்

பறிபோகும் நெய்வேலி மின்சாரம்
.......................................................

நெய்வேலியை நடுவண் அரசுக்கு தாரைவார்த்து கொடுத்துட்டு அங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில்,
30% விழுக்காடே தமிழகம் பிச்சை வாங்குகிறது
அதுவும் யூனிட்டுக்கு 1.82 பைசா கொடுத்தே நடுவண் அரசிடமிருந்து வாங்குகிறது.

மீதி 70% விழுகாட்டை நடுவண் அரசு என்ன செய்கிறது???

பாலாற்றின் உரிமையை தடுக்கும் ஆந்திராவுக்கு 19% விழுக்காடும்,

காவிரியில் இருந்து இனி தண்ணீர் தரமாட்டோம் என்கும் கருநாடகத்திற்கு 14% விழுக்காடும்,

முல்லைப் பெரியாறு அணையில் மல்லுக்கட்டி கடப்பாறை கொண்டு அணையை உடைக்க வந்த கேரளாவுக்கு 10% விழுக்காடும்,

நடுவண் மின் தொகுப்பிற்கு 15%

புதுச்சேரிக்கு 5%,என்.எல்.சிக்கு 7%,

என பங்கீட்டுக் கொள்கிறது, தமிழர்களை சாதீய மோதல்,பார்ப்பனீய எதிர்ப்புனு அதள பாதாளத்தில் தள்ளிவிட்டுட்டு,
தமிழகத்தின் கனிம வளங்களை நடுவண் அரசு திருட தீராவிட அரசுகள் துணைப்போயின, போகின்றன.

நெய்வேலியிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை நேரடியாக தமிழகத்திற்கு கொடுக்காமல்,

நடுவண் மின் தொகுப்பிற்குச் சென்று அங்கிருந்து தென்னிந்தியப் பகுதிக்கான மின் தொகுப்பிற்கு வழங்கப்படுகிறது,
அதிலிருந்தே 30% விழுக்காட்டை தமிழகத்திற்கு வழங்குகிறது.
இது எப்படி இருக்குனா நம்ம வீட்டு சோத்தை எடுத்து, அதிலிருந்து நமக்கு ஒரு கவளையை உருட்டி தூக்கிப்போடுவது போல இருக்கு.

சரி வெட்டியெடுக்கும் நிலக்கரிக்கு காப்புரிமை என்ற பெயரில் டன்னுக்கு எவ்வளவு கொடுக்கிறது என்று பார்த்தால் வெறும் 45 ரூபாய் மட்டுமே,

ஒரு டன் நிலக்கரியில் ஒரு மெகாவாட்(1000 யூனிட்) உற்பத்தி செய்கிறது அப்படியானால் 1820 ரூபாய் லாபம் பார்க்கிறது நடுவண் அரசு (1.82×1000=1820).

4 டன் நிலக்கரியை எரிக்கும்போது ஒரு டன் சாம்பல் கிடைக்கிறது அதையும் விற்று காசு பார்க்கிறது என்.எல்.சி நிறுவனம்.

தமிழகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வங்கி கடனுதவியுடன் ஹாலோ பிரிக்ஸ் என்று அழைக்கப்படும் நிலக்கரி, சாம்பலாலான கற்களைச் செய்து பிழைத்து வந்தனர்.

ஆனால் அதிலும் மண்ணை அள்ளிப்போட்டு அந்த சாம்பலை சிமெண்ட் ஆலைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது.

செயல்படாத நிறுவனங்கள் கூட செயல்படுவதாக கூறி போலிச் சான்றிதழ் பெற்று சாம்பலை வாங்கி கூடுதல் லாபம் வைத்து, உள்ளீடற்ற நிலக்கரி சாம்பற் கல் (ஹாலோ பிரிக்ஸ்) நிறுவனத்திற்கு விற்பனை செய்கின்றனர்.

அடுப்புக்கரியை விட குறைவாக ஒரு டன் நிலக்கரிக்கு பணத்தை தமிழக அரசுக்கு கொடுத்துவிட்டு,
பல்லாயிரம் கோடிக்கு மின் உற்பத்தி செய்வதோடு மட்டுமல்லாமல் சாம்பலையும் பல நூறு கோடி ரூபாய்க்கு விற்று காசு பார்க்கிறது நடுவண் அரசு,
தானே புயல் காரணமாக ரூ 2000கோடி ரூபாய் தமிழக அரசு நடுவண் அரசிடம் கேட்டபோது வாயே திறக்கவில்லை,

ஆனா நம் கனிம வளத்தை கொள்ளையடித்து கொழுத்து திங்குது, தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை நடுவண் அரசிடம் கையேந்தி வாங்கி அதை தமிழகத்தில் கடைவிரித்துள்ள,
பன்னாட்டு வடநாட்டு தொழிற் நிறுவனங்களுக்கு மானீயத்துடன் தடையற்ற மின்சாரத்தை வழங்கிவிட்டு,
சிறு,குறு தொழில் செய்யும் நம் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட்டு சிம்னி விளக்கை கொளுத்த விட்டுள்ளனர் தீராவிட ஆட்சியாளர்கள்.

இது யோக்கியதைல பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பாம் தமிழக மின்வாரிய துறைக்கு.

இப்படி தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை கண்டவனுக்கும் தாரைவார்த்து கொடுத்துட்டு மின்பற்றாக்குறை மாநிலம்னு பட்டம் வேற.
இதுல கூடங்குளம் அணு உலையை எதிர்த்தால் மின்சார பற்றாக்குறையை எப்படி தீர்ப்பதுனு சப்பைக்கட்டு வேற.

மின்சார பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தை நடுவண் அரசிடமிருந்து விலைக்கொடுத்து வாங்கும்,
ஆந்திராவோ கர்நாடகவோ கேரளாவோ அங்கு அணு உலையை நிறுவ முட்டுக்கால் போட்டது ஏனோ???
தமிழகத்தின் மின்பற்றாகுறையை தீர்க்க கல்பாக்கம், கூடங்குளம், அதானி சோலார் ஒப்பந்தம், புதிதாக எந்த அணுமின் நிலையங்களும் வேண்டாம் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் போதுமே???

இதுபோக நெய்வேலி நடுவண் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் அங்கு அயலவர் ஆதிக்கத்திற்கு குறைவில்லை.

நெய்வேலியை தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தால் தண்ணீர் தரமாட்டேன் என்கும் ஆந்திர,கர்நாடக, கேரள அரசுகளின் கொட்டம் அடங்கும்.

இது நிறைவேற வேண்டுமெனில் இதுவரை தாங்கள் செய்த தில்லுமுல்லு தகிடுதத்தம் ஊழலிருந்து தப்பிக்க,
மாநில சுயாட்சி கொள்கையை நடுவண் அரசிடம் அடகு வைத்துள்ள தீராவிட அரசுகளை அகற்றியாலே சாத்தியம்.

தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரிந்தால் இந்தியாதான் பிச்சையெடுக்கும்

நன்றி: desiyamunnetrasangam007. blogspot. in/2015/10/ blog-post_74.html?m=1
நன்றி : Velmurugan Ramalingam