Showing posts with label வளம். Show all posts
Showing posts with label வளம். Show all posts

Saturday, 11 March 2017

மண்ணைக் காக்க ஜப்பானைப் பகைத்துக்கொண்ட புலிகள்

இயற்கை வளச் சுரண்டலுக்கு எதிராகப் புலிகள் உள்ளூர் வன்னி மரம் கடத்தல் பொருளாதார ரௌடிகளுக்கு மட்டுமன்றி பொருளாதார வல்லரசு என்றும் பார்க்காமல் ஜப்பானுக்கு சுளுக்கெடுத்த நிகழ்வும் உண்டு.

இது குறித்து புகழ்பெற்ற அரசியல் ஆய்வாளர் தராகி சிவராம் எழுதிய கட்டுரை,
6–12 ஜூன் 2003 ஈழநாடு பத்திரிக்கை.

ஜப்பானுக்கு ஏன் இந்த அக்கறை?

புலிகள் டோக்கியோ போவார்களா இல்லையா என்பதே இலங்கையின் அண்மைக்கால அரசியலின் முக்கிய கேள்வியாக இருந்தது.
‘அவர்கள் ஜப்பானின் தலைநகரத்திற்குச் செல்வதிலேயே தமிழரின் எதிர்காலம் தங்கியுள்ளது' என்ற வகையில் செய்திகளும் ஆய்வுகளும் வெளியாகிய வண்ணம் இருந்தன.
புலிகள் டோக்கியோவிற்கு எப்படியாவது போய்விட வேண்டுமென்று உள்ளார்ந்த எதிர்பார்ப்போடு பலர் ஆரூடம் கூறவும் தலைப்பட்டனர்.

டோக்கியோ.. ஜப்பானுக்கு எங்கள் சிக்கலைத் தீர்த்து வைப்பதில் ஏன் இவ்வளவு அக்கறை..?
1983 இல் இருந்து இலங்கையில் தமிழர் சிக்கல் ஒரு பெரும் போராக உருமாறி நடைபெற்று வருகின்றது.
இதிலோ 1990 இலும் 1995 இலும் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுகளிலோ எந்த ஒரு வெளிப்படையான ஈடுபாடுமின்றி வாழாவிருந்த ஜப்பான் இன்று எமது அரசியல் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் வலுவுள்ள ஒரு நாடாக கிளம்ப முனைவது ஏன்?

கொக்குத் தொடுவாய்க்கும் புல்மோட்டைக்கும் இடைப்பட்ட கடலோரப் பகுதியிலேயே உலகில் அதிகூடிய டைட்டேனியம் செறிவுள்ள தாதுப் பொருள்களான இல்மனைட், றூட்டைல் என்பன காணப்படுகின்றன.
இன்றைய உலகின் இயக்கத்துக்கு இன்றியமையாத ஒரு உலோகம் டைட்டேனியமாகும்.
உலகில் உற்பத்தியாக்கப்படும் அனைத்து வானூர்திகள், விண்வெளிக் கலங்கள் ,செயற்கை விண்கோள்கள் போன்றவற்றை டைட்டேனியம் உலோகமின்றி தயாரிக்க முடியாது.
இது உருக்கைவிட நான்கு மடங்கு உறுதியுள்ளதாகவும் ஆனால் உருக்கினுடைய நிறையைவிட மிகக் குறைந்த நிறையுள்ளதாகவும் காணப்படுகின்றது.
இதனாலேயே இது மேற்படி உற்பத்திகளுக்கும் அடிப்படையாக உள்ளது.
இதுமட்டுமின்றி டைட்டேனியம் ஈரொட்சைட் செயற்கை வண்ணங்களின் தயாரிப்புக்கு மிக இன்றியமையாத இரசாயன மூலமாக உள்ளது.
இதன் காரணமாகவே அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் டைட்டேனியம் தாதுக்களான இல்மனைட் மற்றும் றூட்டைல் ஆகியவற்றை கேந்திர மூலப் பொருட்களாக வகைப்படுத்துகின்றது.

இல்மனைட்,றூட்டைல் ஆகிய தாதுக்களில் இருந்து டைட்டேனியம் உலோகத்தையும் டைட்டேனியம் ஈரொட்சையும் உற்பத்தியாக்குகின்ற நவீன விஞ்ஞானமுறை அமெரிக்காவின் இரு நிறுவனங்களிடம் மட்டுமே தனியுரிமையாக உள்ளது.
இத்தனியுரிமை அமெரிக்காவுக்கு உலகப் பொருளாதாரத்தின் மீது ஒரு பிடியைக் கொடுக்கிறது.
இந்தத் தொழில் நுட்பத்தின் தனி உரிமையை ஜப்பானோடு அமெரிக்கா பகிர்ந்து கொள்கிறது.
இதன் காரணமாகவே ஜப்பான் உலகில் டைட்டேனியம் ஈரொட்சைட் உற்பத்தியில் முன்னிற்கின்றது.

புல்மோட்டையில் உற்பத்தியாகும் இல்மனைட் மற்றும் றூட்டைல் தாதுக்களை ஜப்பானே கொள்வனவு செய்து வருகின்றது.
இக்கொள்வனவுக்கு ஒரு தமிழ் வர்த்தக நிறுவனமே இடைத்தரகராகச் செயற்பட்டுவந்தது.
இந்நிறுவனம் நீண்டகாலமாக சர்வதேச கேள்வி நடைமுறைகள் இல்லாது டைட்டேனியம் தாதுக்களை ஐம்பது அமெரிக்க டொலர்களுக்கு வாங்கி குறைந்தபட்சம் ஆண்டொன்றுக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்களையாவது சம்பாதித்திருக்க வேண்டும்.

எம் மண் இவ்வாறு பகல் கொள்ளை அடிக்கப்பட்டதை தமிழ் அரசியலாளர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.
புல்மோட்டையில் நடைபெற்றுவந்த இம்மண் கொள்ளையை ஆராய்ந்தறிந்த விடுதலைப் புலிகளின் தலைவர் 1997 இல் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தார்.

ஜப்பானுக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு இல்மனைட் மண் ஏற்றப்பட்டிருந்த கப்பல் ஒன்று புல்மோட்டைக் கடலில் மூழ்கடிக்கப்பட்டது.
இதன் பின்னர் ஜப்பானுடைய கவனம் விடுதலைப் புலிகளை நோக்கியும் வடக்குக் கிழக்குப் போர் நிலமைகள் மீதும் குறிப்பாகத் திரும்பலாயிற்று.

நன்றி: நடேசபிள்ளை சிவேந்திரன்

ஏழைநாடுகளின் கார்ப்பரேட் பெருங்கனவு

ஏழைநாடுகளின் கார்ப்பரேட் பெருங்கனவு

சொல்லவிருக்கும் அதிர்ச்சியான உண்மையைக் கேட்டவுடன் கழிந்துவிடும் தொடைநடுங்கிகள் பாஸ்போர்ட் எடுக்க ஓடுங்கள்

தமிழகமே அழியப்போகிறது

இதற்கான மாஸ்டர் ப்ளான் நரசிம்மராவ் காலத்திலேயே போடப்பட்ட 'look east policy' எனும் திட்டம்.

அதாவது வங்காள விரிகுடா கடலைச் சுற்றி இருக்கும் நாடுகள் இணைந்து
அக்கடலின் கரையின் வழி சாலைபோட்டு
அதை ஒட்டி நிலத்தடியில் அமைந்துள்ள எரி வளங்களையும்
அதை ஓட்டிய கடலியல் வளங்களையும் எடுத்து விற்று ஆளும் வர்க்கம் பெரும் பணக்காரனாவது.

இதற்கு தடையாக இருக்கும் விவசாயிகளையும் மீனவர்களையும் தீவிரவாதிகளையும் அழிப்பது.

இதற்காகத்தான் புலிகளை ஒழித்தது
இதற்காகத்தான் மீத்தேன் திட்டம்
இதற்காகத்தான் மீனவன் கொலை
இதற்காகத்தான் கெயில் திட்டம்
இதற்காகத்தான் காவிரி நீர் தடுப்பு
இதற்காகத்தான் கடலில் எண்ணெய் கொட்டியது

இதற்காகத்தான் பூமிக்கடியில் வெடிவெடித்து விளையாடும் நியூட்ரினோ ஆய்வு

இதற்காகத்தான் வருங்காலத்தில் நடக்கவுள்ள அணுவுலை வெடிப்பு

இதற்காகத்தான் கிழக்கு கடற்கரை விரிவாக்கம் என்ற பெயரில் 10,000 கோடி செலவில் வரவுள்ள நான்குவழி தேசிய சாலை (பாரத் மாதா திட்டம்)

இதற்காகவே ஹிந்தியா செலவு செய்து ராமேஸ்வரம் வழியே இலங்கைக்கு பாலம் போடவுள்ளது
(இலங்கை ஒப்புதல் அளித்துவிட்டது)

இலங்கை முதல் வியட்நாம் வரை நிளவுள்ள இத்திட்டத்தில் மிக மோசமாக பாதிக்கப்படவுள்ளது தமிழகம்.
அதாவது முற்றிலும் அழியவுள்ளது.

ஏற்கனவே முக்கால்வாசி விவசாயிகள் தொழிலை விட்டு போய்விட்டனர் அல்லது தற்கொலை செய்துகொண்டு செத்துவிட்டனர்.

பாதி மீனவர்களும் தொழிலை விட்டு போய்விட்டார்கள் அல்லது சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர்.

இவ்வாறாக 20 ஆண்டுகளாக மிக மிக தந்திரமாக மக்கள் இவர்கள் வழியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

திட்டம் நன்றாக வேலைசெய்கிறதே என்று வங்காள விரிகுடாவுக்கு சம்பந்தமே இல்லாத நாடுகளும் இப்போது இணைந்துவிட்டன.
அதாவது இந்த திட்டத்தை வங்காள விரிகுடா கடற்கரை எந்த நாட்டு எல்லையிலெல்லாம் வருகிறதோ அந்த நாடுகளை சேர்த்தார்கள் (சிறிலங்கா, ஹிந்தியா, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து).
இதற்கு BIMSTEC என்று பெயர் வைத்துள்ளனர் (Bangladesh, India, Myanmar, Srilanka, Thailand economical colaberation).
பிறகு நேபாளம் மற்றும் பூடான் நாடுகளின் ஆளும் வர்க்கமும் இணைந்துகொண்டது.

இதிலே உலக பெருமுதலாளிகளுக்கும் பங்குண்டு.
திட்டத்தைப் போட்டுக்கொடுத்ததே அவர்கள்தானே.

பின்னே! ஏழைநாடான பிலிப்பைன்ஸ் நாட்டு வங்கி ADB இதற்கெல்லாம் 5பில்லியன் டாலர் ஹிந்தியாவுக்கு கடனாக நிதி தந்துள்ளதே?!

இதனால் மக்களுக்கென்ன லாபம்?

உண்டே கடுகளவு லாபம்.

விவசாயத்தை அழித்துவிட்டு 15 வருடம் மீத்தேன் எடுப்பான்.
அதில் எதாவது பீல்ட் இன்ஜினியர் டெக்னீசியன் வேலை கிடைக்கலாம்.

பிறகு 30-60 வருடங்கள் நிலக்கரியை எடுப்பான்.
அதற்கான தொழிற்சாலையில் கான்ட்ராக்டர், சிப்ட் லேபர் மற்றும் சூப்பர்வைசர் வேலை பார்க்கலாம்.

கடலையும் விற்றுவிடுவான், அங்கே பெரிய பெரிய விசைப்படகுகள் மூலம் டன் டனாக மீனை அள்ளி  பாக்கெட் போட்டு விற்பான் அதில் எடுபிடி வேலை எதாவது கிடைக்கலாம்.
கடலில் கிடைக்கும் பவளப்பாறைகள் டைட்டேனியம் ஹைட்ரேகார்பன் போன்றவற்றையும் எடுப்பார்கள்.
அதிலே இன்ஜியர், டெக்னீசியன் போன்ற கான்ட்ராக்ட் கிடைக்கலாம்.

அல்லது கிழக்கு கடற்கரையை ஒட்டி நிலங்களைக் கைப்பற்றி குடியிருப்புகளை அழித்து நால்வழிச்சாலை போடுவான்.
அதில் கூலிவேலை கிடைக்கலாம்

அல்லது இவ்வளங்களை பல நாடுகளுக்கும் விரைவாக விற்க தனியாக துறைமுகங்கள் கட்டுவார்கள் (sagar mala).
அதிலே சிவில் இன்ஜினியர், கொத்தனார், சித்தாள், லோட்மேன் வேலைகள் கிடைக்கலாம்.

  இது கற்பனை இல்லை நிஜம்.

இத்திட்டத்தில் மக்கள் ஆயுதம் தாங்கி போராடினால் அதை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பது வரை யோசித்து 'counter-terrorism' என்ற பிரிவையும் உண்டாக்கி வைத்துள்ளனர்.

தகவல்களுக்கு நன்றி: Tamil reswarch institute (TRI)

இதை எப்படி தடுத்து நிறுத்தலாம்.
வேறுவழியே இல்லை.
போராட்டம் நடத்திக்கொண்டே நல்ல அரசியல்வாதிகளுக்கு ஓட்டுபோட வேண்டும்.
அதோடு ஆயுதக்குழு ஒன்றை உருவாக்கவேண்டும்.
சிறுசிறு தாக்குதல்கள் நடத்தவேண்டும்.

என்றைக்கு அரசியல் போராட்டம் தோற்கிறதோ அப்போது ஆய்த வழியில் விடுதலைக்காகப் போராடவேண்டும்.

ஏனென்றால் இதற்காக இவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள்.

இல்லையென்றால் தமிழ்நாடு இன்னொரு சோமாலியா ஆகும்.
அவர்களைப்போல பசி பட்டினி வந்தபிறகு ஆயுதம் தூக்கி எந்த பலனும் இல்லை.

தமிழர்நாடு விடுதலையே ஒரே தீர்வு!

இராணுவம் இல்லாத இனம் அனாதை இனமே!

Wednesday, 1 March 2017

தமிழ்நாடு இன்னொரு சோமாலியா - மீண்டும் வருகிறது மீத்தேன் என்கிற ஹைட்ரோகார்பன் திட்டம்

தமிழ்நாடு இன்னொரு சோமாலியா

மீண்டும் வருகிறது மீத்தேன் என்கிற ஹைட்ரோகார்பன் திட்டம்

(புள்ளிவிபரங்களுடன் சுருக்கமான பதிவு)

* இந்த திட்டம் அமெரிக்கா ஆல்திரேலியா போன்ற பல வெளிநாடுகளில் தடைவிதிக்கப்பட்ட ஒன்று

* இதை எடுக்கப்போவது அரசாங்கம் இல்லை.
மத்திய அரசால் விடப்படும் டென்டர் எடுத்து வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் மீத்தேன் எடுத்து அவர்களே விலைவைத்து விற்றுக்கொள்வர்.
இதனால் 4000 கோடி வரை சம்பாதிப்பார்கள்.
மத்திய அரசுக்கு 1000 கோடி மட்டுமே கிடைக்கும்

* மீத்தேனை எரிபொருளாக பயன்படுத்தும் தொழில்நுட்பம் வளர்ந்த நாடுகளில் மட்டுமே உள்ளன.
ஆக இது வெளிநாட்டு எரிபொருள் கம்பெனிகள் அரசியல்வாதிகள் மூலம் இங்கே கொண்டுவந்த திட்டமே ஆகும்.

* ஒருமுறை மீத்தேன் (எ) ஹைட்ரோகார்பன் எடுத்த நிலத்தில் புல் பூண்டு கூட விளையாது.
குடிக்கத் தண்ணீர் கூட கிடைக்காது.

* ஆழ்துளை போட்டு நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டு ரசாயனங்களைப் பாய்ச்சுவார்கள்.
கீழே வேதிவினை நடந்து மீத்தேன் (எ) ஹைட்ரோகார்பன் வெளியே வரும்.
அதனுடன் பல விச வாயுக்களும் வெளிவரும்.
கீழே வெற்றிடம் ஏற்படும்.
கடலுக்கு அருகே இருந்தால் கடல் நீர் புகும்.
கடலிலிருந்து தொலைவாக இருந்தால் நிலம் அமிழ்ந்து நிலநடுக்கம் ஏற்படும்

* பல நாடுகளில் பூமிக்கடியில் இருந்து எரிவாயு எடுக்கும் திட்டங்கள் செயல்படுகின்றன.
ஆனால் அவை பாலைவனப் பகுதிகளில் அமைந்துள்ளன.
1960 களில் விவசாய நாடாக இருந்த சோமாலியா மக்கள் இத்தகைய விவசாயத்தை அழிக்கும் திட்டங்களை வேடிக்கை பார்த்ததால் இன்று பஞ்சத்தில் செத்துவருகின்றனர்.

* இங்கே விவசாயத்தை அழிப்பதும் மேலைநாடுகளுக்கே லாபம் தரும்.
உணவுக்கும் குடிநீருக்கும் அவர்களிடமே கையேந்தும் நிலை வரும்.
அவர்களின் மரபணு மாற்ற காய்கறிகளை இயற்கைக்கு புறம்பான உணவுப்பொருட்களை நாம் வாங்கவேண்டி இருக்கும்.
தற்போதே அழிந்துவரும் விவசாயத்தால் உக்ரைன் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய், ரஸ்ய கோதுமை, தைவான் அரிசி என்று இறக்குமதி செய்து வருகிறோம்.

* மீத்தேன் வாயு தமிழகத்தின் நிலக்கரி வளத்தைக் கொள்ளையடிக்க ஒரு தடையாக இருக்கிறது.
நிலக்கரி தோண்டும்போது மீத்தேன் வெளியேறி அதை சுவாசித்து இறந்தோர் பலர்.
மீத்தேன் எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் தன்மையுடையது.
அதனால் பல பயங்கர வெடி விபத்துகளும் நடந்துள்ளன.
எனவே 2016-2017 என ஒரு ஆண்டிற்குள் படிப்படியாக கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர் என 207 கிணறுகள் தோண்ட 'மத்திய சுற்றுச்சூழல் துறை' அவசர அவசரமாக அனுமதி வழங்கியுள்ளது.
மக்கள் கருத்தினைக் கேட்காமலேயே மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்திவிட்டதாக அத்துறையின் அமைச்சர் மாதவராவ் தெரிவித்துள்ளார்.

* தமிழகத்தில் புதுச்சேரிக்கு அருகே  முதல் பாகூர் முதல் திருவாரூர் அருகே ராஜமன்னார்குடி  வரை உள்ள நிலக்கரி வளத்தைத் தோண்டி எடுக்க வசதியாக,
மீத்தேனை வெளியேற்றுவது கொள்ளைக்கார மத்திய அரசுக்கு அவசியம் ஆகிறது.
மீத்தேன் எடுத்த பிறகு விவசாயம் அழிந்து மக்கள் வெளியேறிவிடுவார்கள்.
மக்களை வெளியேற்ற மெனக்கிடவேண்டாம்.
  எனவே இது தென்தமிழ்நாட்டின் பிரச்சனை மட்டுமல்ல.

* மீத்தேன் பெரும்பாலும் பாறைக்குக் கீழ்தான் இருக்கும்.
அந்த பாறையை உடைக்க 'நீரியல் விரிசல் முறை’ (Hydraulic fracturing) என்ற செயல்பாடு மூலம் ரசாயனங்களைச் செலுத்தி உயர் அழுத்தத்தை உருவாக்கி வெடிக்க வைப்பர்.
இது நிலநடுக்கத்தையோ எரிமலைக் குழம்பு வெளியேற்றத்திற்கோ வழிவகுக்க வாய்ப்புள்ளது.

* தமிழகத்தை கருவறுப்பதில் மத்திய அரசை விட மும்முரமாக இருக்கிறது கர்நாடகா.
ஏற்கனவே தமிழகத்திற்கு நியாயமாக தரவேண்டிய தண்ணீரைத் தராமல் வீணாக தேக்கிவைத்து நமது நெற்களஞ்சியத்தில் 40% விவசாயத்தை அழித்த கர்நாடகா. தற்போது விதிமுறைகளை மீறி காவிரியில் அணைகட்டுவதைத் துரிதப்படுத்தியுள்ளது.
மத்திய அரசும் தமிழகத்திற்கு தரவேண்டிய பஞ்ச நிவாரண நிதியை பஞ்சமே ஏற்படாத கர்நாடகாவுக்கு கொடுத்துவிட்டது.
தற்போது தமிழகத்தில் மீத்தேன் திட்டத்தை முன்னின்று செய்வது கர்நாடக அரசியல்வாதி ஜி.மல்லிகார்ஜுனப்பாவின் மகன்களான ஜி.எம்.சித்தேஸ்வரா மற்றும் ஜி.எம்.லிங்கராஜு ஆகியோர் நடத்தும் ஜெம் லாபரெட்டரீஸ் நிறுவனம்.
இவர்கள் இந்துத்துவ பின்னணி உடைய கன்னட இனவெறியர்கள்.

* மீத்தேன் திட்டத்திலும் சரி ஹைட்ரோகார்பன் திட்டத்திலும் சரி கையெழுத்திட்டு தமிழகத்தின் வாழ்வாதாரத்தைத் தாரைவார்த்தது தெலுங்கு வம்சாவழிகளான கருணாநிதி மற்றும் ஸ்டாலின்.

* இந்த அழிவில் கிடைக்கும் சொற்ப லாபத்தைக் கூட நமக்குத் தரமாட்டார்கள்.
தமிழகத்தின் நிலக்கரி வளத்தைச் சுரண்டி நெய்வேலியில் தயாரிக்கப்படும் மின்சாரம் 70% அண்டை மாநிலங்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது.
தமிழக அரசு தனியாரிடம் இருமடங்கு பணம்கொடுத்து மின்சாரம் வாங்குகிறது.
இதனால் தமிழகம் இரண்டு மடங்கு கடனாளி ஆகிவிட்டது.
ஒவ்வொரு தமிழன் தலையிலும் 14000 கடன் உள்ளது.
ஆக எந்த மத்திய அரசின் திட்டமும் நமக்கு அழிவையும் மற்ற மாநிலங்களுக்கு லாபமும் தருவதாகவே அமைகிறது.

* ஒருவேளை நிலநடுக்கமோ விசவாயு கசிவோ பஞ்சமோ ஏற்பட்டால் மத்திய அரசு கடுகளவும் உதவி செய்யாது என்பது வரலாற்றில் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, சென்னையில் வெள்ளம் வந்தபோது மத்திய அரசு எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழக அரசு 5,000 கோடி நிவாரணத்தொகை கேட்டது.
ஆனால் மத்திய அரசு போட்ட பிச்சை வெறும் 1,000 கோடி.
அந்த ஆண்டு தமிழக அரசு மத்திய அரசுக்கு கட்டியிருந்த வரி எவ்வளவு தெரியுமா?
85,000 கோடி.

* வளர்ச்சித் திட்டங்களில் புறக்கணிக்கப்படும் தமிழகம், வெடிவைத்து சுரங்கம் தோண்டப்படும் நியூட்ரினோ,
பல்லாயிரம் தலைமுறைகளைப் பாதிக்கும் அணுவுலைகள்,
மீத்தேன் போன்ற நிலத்தடி வளங்களை சுரண்டும் திட்டங்கள்,
சுற்றிவளைத்து விவசாய நிலங்கள் வழியே கொண்டுசெல்லப்படும் கெயில் குழாய்கள் திட்டம் என நாசகார பேரழிவு திட்டங்களின் சோதனைக்கூடமாகவும் ஹிந்தியாவின் குப்பைத்தொட்டியாகவும் ஆக்கப்பட்டுள்ளது.

* மீத்தேன் திட்டத்தை மக்கள் ஒன்றிரண்டு திரண்டு பட்டினி கிடந்து பிழைப்பை விட்டுவிட்டு போராடி தடுத்துநிறுத்தினர்.
  மீத்தேனை(CH4), ஹைட்ரோகார்பன் என்று பெயர் மாற்றியதன் மூலம் பட்டபாடையெல்லாம் வீணாக்கிவிட்டனர்.
இப்போது மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
உயிரைக் கொடுத்து போராடவேண்டும்.

* இறுதியாக ஒரு கேள்வி,

சிங்களவராவது இனவழிப்பு செய்கிறார்கள்.
அதாவது தமிழனத்தைக் கொன்றுவிட்டு அந்த நிலத்தை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள்.

ஆனால் ஹிந்தியாவோ மண்ணோடு சேர்த்து இனத்தை அழிக்க வெறிகொண்டு அலைகிறது.
இது மனிதநேயத்திற்கு மட்டுமன்றி இயற்கைக்கே எதிரானதாகும்.

வளர்ச்சியைத் தராவிட்டாலும் பரவாயில்லை.
பாதுகாப்பு தராவிட்டாலும் பரவாயில்லை.
கொள்ளையடித்தாலும் பரவாயில்லை.
ஆனால் கட்சிகள் பாகுபாடின்றி தமிழ் மக்களின் உணவையும் தண்ணீரையும் பிடுங்குவதில் குறியாக இருக்கும் ஹிந்திய, திராவிட ஆட்சிகளை இனியும் நம்பவேண்டுமா?
பணத்திற்காக ஒரு இனத்தையே பூமியின் ஒரு பகுதியையே காவு கேட்கும் இந்த நாசகார இந்தியநாடு நமக்குத் தேவையா?
நமக்கு சம்பந்தமே இல்லாத ஒருவன் ஆண்டால் நம்மேல் அக்கறை இல்லாத திட்டங்கள்தான் திணிக்கப்படும்.

தமிழரே சிந்திப்பீர்!

தமிழர்நாடு சுதந்திரத்திற்காப் போராடுவீர்!

நம் மண்ணில் பிறந்த ஒரு மண்ணின் மைந்தனே எவருக்கும் அடிபணியாத ஆட்சி நடத்தி நம்மை ஆண்டால் இது நடந்திருக்குமா?

Wednesday, 22 February 2017

ஜக்கி ஒழிக்க ஒரே வழி

இங்கே ஒரு ராபின் ஹுட் பிறக்கவேண்டும்...

மீண்டும் ஒரு வீரப்பனார்...

ஜக்கி வாசுதேவ் பிறர்மகளை மொட்டையடித்து போதை கொடுத்து அடிமையாக்கி

சீராட்டி பாராட்டி வளர்த்த அவனது நவநாகரீக மகளைக் கடத்தி

அவன் பணத்தையெல்லாம் பிடுங்கவேண்டும்

அந்த ஜக்கி வாசுதேவ் காடழித்து கட்டிய ஆசிரமத்தில் நுழைந்து

அவனை ஜட்டியோடு அடித்து
கர்நாடகாவிற்கே திருப்பி விரட்டவேண்டும்.

அவன் ஆசிரமத்தை குண்டு வைத்து தகர்த்து

அவன் தன் முகத்தையே நகலெடுத்து கட்டிய சிவன் சிலையை உடைத்து தூள்தூளாக்கி

அந்த வந்தேறிப்பயல் தனக்காக திருப்பிக்கொண்ட காட்டு ஓடையை பழைய பாதையில் மீண்டும் திருப்பவேண்டும்.

பரிசாக தீவிரவாதப் பட்டமும் தேசதுரோக வழக்கும் அதன் முடிவாக தூக்கோ துப்பாக்கித் தோட்டாவோ கிடைக்கலாம்

ஆனால் பழங்குடிகளும் மண்ணின் மைந்தர் குடும்பங்களும்  யானைகளும் அதன் குட்டிகளும் அவனை என்றும் வாழ்த்தும்

Thursday, 31 March 2016

பறிபோகும் நெய்வேலி மின்சாரம்

பறிபோகும் நெய்வேலி மின்சாரம்
.......................................................

நெய்வேலியை நடுவண் அரசுக்கு தாரைவார்த்து கொடுத்துட்டு அங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில்,
30% விழுக்காடே தமிழகம் பிச்சை வாங்குகிறது
அதுவும் யூனிட்டுக்கு 1.82 பைசா கொடுத்தே நடுவண் அரசிடமிருந்து வாங்குகிறது.

மீதி 70% விழுகாட்டை நடுவண் அரசு என்ன செய்கிறது???

பாலாற்றின் உரிமையை தடுக்கும் ஆந்திராவுக்கு 19% விழுக்காடும்,

காவிரியில் இருந்து இனி தண்ணீர் தரமாட்டோம் என்கும் கருநாடகத்திற்கு 14% விழுக்காடும்,

முல்லைப் பெரியாறு அணையில் மல்லுக்கட்டி கடப்பாறை கொண்டு அணையை உடைக்க வந்த கேரளாவுக்கு 10% விழுக்காடும்,

நடுவண் மின் தொகுப்பிற்கு 15%

புதுச்சேரிக்கு 5%,என்.எல்.சிக்கு 7%,

என பங்கீட்டுக் கொள்கிறது, தமிழர்களை சாதீய மோதல்,பார்ப்பனீய எதிர்ப்புனு அதள பாதாளத்தில் தள்ளிவிட்டுட்டு,
தமிழகத்தின் கனிம வளங்களை நடுவண் அரசு திருட தீராவிட அரசுகள் துணைப்போயின, போகின்றன.

நெய்வேலியிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை நேரடியாக தமிழகத்திற்கு கொடுக்காமல்,

நடுவண் மின் தொகுப்பிற்குச் சென்று அங்கிருந்து தென்னிந்தியப் பகுதிக்கான மின் தொகுப்பிற்கு வழங்கப்படுகிறது,
அதிலிருந்தே 30% விழுக்காட்டை தமிழகத்திற்கு வழங்குகிறது.
இது எப்படி இருக்குனா நம்ம வீட்டு சோத்தை எடுத்து, அதிலிருந்து நமக்கு ஒரு கவளையை உருட்டி தூக்கிப்போடுவது போல இருக்கு.

சரி வெட்டியெடுக்கும் நிலக்கரிக்கு காப்புரிமை என்ற பெயரில் டன்னுக்கு எவ்வளவு கொடுக்கிறது என்று பார்த்தால் வெறும் 45 ரூபாய் மட்டுமே,

ஒரு டன் நிலக்கரியில் ஒரு மெகாவாட்(1000 யூனிட்) உற்பத்தி செய்கிறது அப்படியானால் 1820 ரூபாய் லாபம் பார்க்கிறது நடுவண் அரசு (1.82×1000=1820).

4 டன் நிலக்கரியை எரிக்கும்போது ஒரு டன் சாம்பல் கிடைக்கிறது அதையும் விற்று காசு பார்க்கிறது என்.எல்.சி நிறுவனம்.

தமிழகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வங்கி கடனுதவியுடன் ஹாலோ பிரிக்ஸ் என்று அழைக்கப்படும் நிலக்கரி, சாம்பலாலான கற்களைச் செய்து பிழைத்து வந்தனர்.

ஆனால் அதிலும் மண்ணை அள்ளிப்போட்டு அந்த சாம்பலை சிமெண்ட் ஆலைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது.

செயல்படாத நிறுவனங்கள் கூட செயல்படுவதாக கூறி போலிச் சான்றிதழ் பெற்று சாம்பலை வாங்கி கூடுதல் லாபம் வைத்து, உள்ளீடற்ற நிலக்கரி சாம்பற் கல் (ஹாலோ பிரிக்ஸ்) நிறுவனத்திற்கு விற்பனை செய்கின்றனர்.

அடுப்புக்கரியை விட குறைவாக ஒரு டன் நிலக்கரிக்கு பணத்தை தமிழக அரசுக்கு கொடுத்துவிட்டு,
பல்லாயிரம் கோடிக்கு மின் உற்பத்தி செய்வதோடு மட்டுமல்லாமல் சாம்பலையும் பல நூறு கோடி ரூபாய்க்கு விற்று காசு பார்க்கிறது நடுவண் அரசு,
தானே புயல் காரணமாக ரூ 2000கோடி ரூபாய் தமிழக அரசு நடுவண் அரசிடம் கேட்டபோது வாயே திறக்கவில்லை,

ஆனா நம் கனிம வளத்தை கொள்ளையடித்து கொழுத்து திங்குது, தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை நடுவண் அரசிடம் கையேந்தி வாங்கி அதை தமிழகத்தில் கடைவிரித்துள்ள,
பன்னாட்டு வடநாட்டு தொழிற் நிறுவனங்களுக்கு மானீயத்துடன் தடையற்ற மின்சாரத்தை வழங்கிவிட்டு,
சிறு,குறு தொழில் செய்யும் நம் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட்டு சிம்னி விளக்கை கொளுத்த விட்டுள்ளனர் தீராவிட ஆட்சியாளர்கள்.

இது யோக்கியதைல பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பாம் தமிழக மின்வாரிய துறைக்கு.

இப்படி தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை கண்டவனுக்கும் தாரைவார்த்து கொடுத்துட்டு மின்பற்றாக்குறை மாநிலம்னு பட்டம் வேற.
இதுல கூடங்குளம் அணு உலையை எதிர்த்தால் மின்சார பற்றாக்குறையை எப்படி தீர்ப்பதுனு சப்பைக்கட்டு வேற.

மின்சார பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தை நடுவண் அரசிடமிருந்து விலைக்கொடுத்து வாங்கும்,
ஆந்திராவோ கர்நாடகவோ கேரளாவோ அங்கு அணு உலையை நிறுவ முட்டுக்கால் போட்டது ஏனோ???
தமிழகத்தின் மின்பற்றாகுறையை தீர்க்க கல்பாக்கம், கூடங்குளம், அதானி சோலார் ஒப்பந்தம், புதிதாக எந்த அணுமின் நிலையங்களும் வேண்டாம் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் போதுமே???

இதுபோக நெய்வேலி நடுவண் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் அங்கு அயலவர் ஆதிக்கத்திற்கு குறைவில்லை.

நெய்வேலியை தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தால் தண்ணீர் தரமாட்டேன் என்கும் ஆந்திர,கர்நாடக, கேரள அரசுகளின் கொட்டம் அடங்கும்.

இது நிறைவேற வேண்டுமெனில் இதுவரை தாங்கள் செய்த தில்லுமுல்லு தகிடுதத்தம் ஊழலிருந்து தப்பிக்க,
மாநில சுயாட்சி கொள்கையை நடுவண் அரசிடம் அடகு வைத்துள்ள தீராவிட அரசுகளை அகற்றியாலே சாத்தியம்.

தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரிந்தால் இந்தியாதான் பிச்சையெடுக்கும்

நன்றி: desiyamunnetrasangam007. blogspot. in/2015/10/ blog-post_74.html?m=1
நன்றி : Velmurugan Ramalingam