Showing posts with label அழிவு. Show all posts
Showing posts with label அழிவு. Show all posts

Monday, 10 February 2020

மைசூரில் அழிக்கப்படும் தமிழ் கல்வெட்டுகள் பற்றி தினமணி


மைசூரில் அழிக்கப்படும் தமிழ் கல்வெட்டுகள் பற்றி தினமணி
-------
ஏற்கனவே தமிழ்மொழி மீதுள்ள வெறுப்பினால் கன்னடர் மற்றும் ஹிந்தியர் மைசூர் தலைமை கல்வெட்டியல் அலுவலகத்தில் உள்ள 70,000 தமிழ் கல்வெட்டுகளை அழியவிடுவது பற்றி ஜூனியர் விகடன் (18.06.2006), விகடன் (02.05.2013), மற்றும் தினமலர் (04.02.2018) ஆகிய பத்திரிக்கைகள் கட்டுரைகள் வெளியிட்டுள்ளன.
இதேபோல தினமணி 27.08.2019 அன்று ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது.
இக்கட்டுரையில் முக்கியமானவை,

* மைசூரில் ஒரு லட்சம் கல்வெட்டு படிகள் உள்ளன; அவற்றில் 65 ஆயிரம் தமிழ்க் கல்வெட்டுகள்.
* 1908 க்குப் பிறகு படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் அச்சில் கூட வெளிவரவில்லை.
* 1920 க்குப் பிறகு கல்வெட்டுகள் அச்சில் வருவது ஏறத்தாழ நின்றுவிட்டது
* 1961 இல் தமிழக அரசு முயற்சி செய்தும் எதுவும் நடக்கவில்லை
*கல்வெட்டு எண்ணிக்கையில் தமிழே பெரும்பான்மை மற்றும் முதலிடம்.
* 1966 லேயே தமிழ்க் கல்வெட்டுகள் எண்ணிக்கை 20,000 ஐத் தாண்டிவிட்டது.
இரண்டாவது இடம் கன்னடம் என்றாலும் 1993 இல் தான் கன்னட கல்வெட்டுகள் 10,500  ஐத் தாண்டின.
* 1967 இல் சேகரிக்கப்பட்ட 70,000 படிகள் அழியும் தருவாயில் உள்ளன
* 1997 வரை கல்வெட்டுகள் பற்றி சிறு குறிப்புகளுடன் வெளிவந்த கல்வெட்டியல் துறை ஆண்டறிக்கை கூட நின்றுபோனது 
* 2010 இல் தஞ்சை பல்கலை கல்வெட்டுகளை டிஜிட்டல் ஆக்கும் பணிக்கு மத்திய அரசின் கீழ் இயங்கும் மைசூர் நிர்வாகம் ஒத்துழைக்கவில்லை.
எதையுமே செய்யாமல் கொடுக்கப்பட்ட 22 லட்சத்தில் 20 லட்சத்தை திருப்பித் தந்துள்ளனர்.
* தமிழகத்தில் இருந்து யார் சென்று எதைக் கேட்டாலும் இல்லை என்கின்றனர். அல்லது இழுத்தடிக்கின்றனர்.
*பாதுகாக்கப் பட்டிருந்த 50% தமிழ் கல்வெட்டுப் படிகள் அழிந்துவிட்டன.
  இன்னும் 20 ஆண்டுகளுக்குள் மொத்தமாக அழிந்துவிடும் நிலை.

--------
மைசூரில் அழிக்கப்படும் தமிழ் கல்வெட்டுகள்: உதயசந்திரன் நடவடிக்கை எடுப்பாரா?
நம்நாட்டின் தொன்மை வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் தொல்லியல் சான்றுகளில் ஒன்று கல்வெட்டுகள் ஆகும்.
கோவில் முதலிய பொதுக் கட்டடங்களின் சுவர்களிலும், பாறைகள் மீதும், கல்தூண்களிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதை காணலாம்.
இக்கல்வெட்டு எழுத்துக்களை அறிந்து அவற்றின் பொருளை விளக்கும் கலையே கல்வெட்டியல் எனப்படும்.
நம்நாட்டில் கல்வெட்டுகளைப் படித்தறிந்து, வரலாற்றுச் சான்றுகளாக அவற்றை உருவாக்கிய பெருமை மேலைநாட்டவரையே சாரும்.
அவர்களில் முக்கியமானவர்கள்.
ஜேம்ஸ் பிரின்செப் - 1837 இந்தியாவில் கல்வெட்டாய்வு ஆரம்பிக்கப்படுவதற்கு இவரே முக்கிய காரணம் ஆவார்.
அலெக்சாந்தர் கன்னிங்காம் 1871 முதல் 1885 வரை அசோகர் காலத்து கல்வெட்டுகள் என்ற தனித் தொகுப்பை வெளியிட்டார்.
டாக்டர் யூஜின் ஹால்ட்ஸ் (1857 - 1906) தென்னிந்திய கல்வெட்டுகளின் முதல் தொகுப்பினை 1903 ல் வெளியிட்டார்.
மேலும் ராபர்ட் சிவல் (1868 - 1894) டாக்டர் கில்ஹார்ன், டாக்டர் ஜார்ஜ் பூலர் (1837 - 1898), ஜான் பிளீட் (1874 - 1917), ஜேம்ஸ் பர்கஸ் ( 1822 - 1917), டாக்டர் ப்ர்னல், காலின் போன்றோர்களின் ஊக்கமும் உழைப்பும் ஆர்வமும் இல்லை எனில் நமது வரலாற்றினை அறிந்திருக்க வாய்ப்புகள் குறைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
இவர்கள் தவிர கோபிநாத்ராவ், வெங்கையா, சுப்ரமணிய ஐயர், கிருஸ்ணசாஸ்திரி இந்திய கல்வெட்டாய்வுக்கு பெரும் துணை புரிந்துள்ளனர்.
1861 முதல் இதுவரையில் சுமார் எழுபத்தைந்தாயிரம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு படித்து பதிவு செய்யப்பட்டுள்ளன.
இன்னும் பல ஆயிரம் கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்படாமல் உள்ளன.
படி எடுத்தல் (Estampage):-
நம் நாட்டை ஆண்ட மன்னர்கள் தம் கால நிகழ்வுகளை கல்லில் செதுக்கி வைப்பது வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
கோயில், குளக்கரை, மலைகள், குகைகள் போன்ற இடங்களில் எழுதப்பட்ட இந்த கல்வெட்டுகள், இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் (Archaeological Survey of India-ASI) மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு ‘படி எடுத்தல்‘ முறையில் காகிதத்தில் நகல் எடுக்கப்படுகிறது.
இதை ஆய்வுக்கு பயனுள்ள வகையில் அவ்வப்போது பதிப்பித்து தொகுதிகளாக வெளியிடுகிறது ASI.
இந்திய வரலாற்றுக்கு முக்கிய ஆதாரங்களாக விளங்கும் இந்த பழங்கால கல்வெட்டுகளை ஆய்வு செய்யவும், நம் நாடு முழுவதிலும் உள்ள வரலாற்று சின்னங்களை பாதுகாக்கவும், 1860 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் எனும் ஆங்கிலேயரால் ASI உருவாக்கப்பட்டது.
மைசூரு அலுவலக பின்னணி:-
இந்த கல்வெட்டுகள், இந்திய தொல்லியல் ஆய்வகம் சார்பில் காகித நகல்களாக 1889-ம் ஆண்டு முதல் படி எடுக்கப்படுகிறது.
இதை ஆய்வுக்கு பயனுள்ள வகையில் இந்திய தொல்லியல் ஆய்வகம் அவ்வப்போது பதிப்பித்து வெளியிடுகிறது.
இந்திய வரலாற்றுக்கு முக்கிய ஆதாரங்களாக விளங்கும் இந்த பழங்கால கல்வெட்டுகளை ஆய்வு செய்யவும், கண்டுபிடிக்கப்படும் கல்வெட்டுகளை படி எடுத்து பதிப்பிப்பதற்கும் தொல்லியல் ஆய்வகத்தின் மைசூரு அலுவலகத்தில் தனியாக கல்வெட்டு தலைமையகம் ஒன்று இயங்குகிறது.
ஆரம்பத்தில் சென்னையில் இருந்த அந்த அலுவலகம், தட்பவெட்பநிலை காரணமாக எடுத்தபடிகள் வீணாகப் போய் விடும் என ஊட்டிக்கு மாற்றப்பட்டது.
அதன் இயக்குநராக பொறுப்பேற்ற மைசூரை சேர்ந்த ஒரு அதிகாரி அதை தம் சொந்த ஊருக்கு மாற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஆங்கிலேயர் நமக்கு அளித்த பொக்கிஷம் இக்கல்வெட்டுகளின் படிகள் (copies).
தமிழ்நாட்டின் வரலாற்று நினைவுச் சின்னங்களையும் கல்வெட்டுகளையும் பராமரிக்கவும், கல்வெட்டுப் படிகளைப் பாதுகாக்கவும், படித்து புரிந்து கொள்ளவும், தற்காலத்துக்கு ஏற்றவாறு அந்தந்த இந்திய மொழிகளில் எழுதுவடிவமாக்கவும், பதிப்பிக்கவும் இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும் அரசு நிறுவனங்களாக ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இந்தப் பதிவு கடந்த 1890 ஆம் ஆண்டு முதல் அரும்பாடுபட்டு படியெடுத்து சேகரித்து, படித்து, தமிழ் எழுதுவடிவமாக்கி, ஆவணப்படுத்தப்பட்ட சுமார் 75,000 தமிழக் கல்வெட்டுகளின் நிலை பற்றியது.
இதற்கென பிரத்யேகமாக மைசூரில் செயல்படும் தொல்லியல் துறையின் கல்வெட்டியல் கிளை அலுவலகம் இந்த தரவுகளை முறையாகப் பராமரிக்கிறதா?
சுமார் 400 ஆண்டுகள் பழைமையான இத்தரவுகள் பயன்படுத்தும் நிலையில் உள்ளனவா?
1909 ஆம் ஆண்டு முதல் இவை ஏன் நூலாக பதிப்பிக்கப்படவில்லை?
1908 ஆம் ஆண்டுவரை பதிப்பிக்கப்பட்ட நூல்களும் பிற கல்வெட்டு படி பிரதிகளும் ஆய்வாளர்கள் பயன்படுத்தும் வகையில் மின்தரவாக (digital document) கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளதா?
இது போன்ற கேள்விகளுக்கு அறிஞர்கள் சொல்லும் தீர்வு என்ன?

இந்திய கல்வெட்டியல் பேரவையின் (Epigraphical Society of India-ESI) இந்திய தொல்லியல் துறை (Archaeological Survey of India), மத்திய பண்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு அதிகாரபூர்வமான தொல்லியல் ஆய்வு அமைப்பு.
இவ்வமைப்பு நிர்வாக வசதிக்காகவும் தொல்லியல் சின்னங்களையும் ஆவணங்களையும் பாதுகாப்பதற்காக இந்திய நாட்டை 24 வட்டங்களாக பிரித்துள்ளது.
தமிழ்நாடு சென்னை வட்டத்தின் (Chennai Circle) கீழ் வருகிறது.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்தின் பகுதிகளை உள்ளடக்கியது.
இந்தியாவில் 1887 முதல் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் கண்டறியப்பட்டு படியெடுக்கப்பட்டன.
இந்திய தொல்லியல் துறையின் (Archaeological Survey of India) கல்வெட்டியல் பிரிவு (Epigraphy Branch) கி.பி. 1886 ஆம் ஆண்டு பெங்களூரில் டாக்டர். ஹுல்ஷ் (Dr.E. Hultzsch) தலைமையில் துவங்கப்பட்டது.
இந்தியாவின் முதல் கல்வெட்டியலாளரும் (Epigraphist) இவரே.
இந்த அலுவலகம் இந்தியாவில் பல பாகங்களில் பரவிக்கிடந்த கல்வெட்டுகளை அளவீடு செய்தது.
தொடக்க காலத்தில் இக்கல்வெட்டுகளை ஆங்கிலேய அரசு மட்டுமல்லாது சிற்றரசுகளும் (சமஸ்தானங்கள் உதாரணம்: புதுக்கோட்டை, திருவிதாங்கூர், மைசூர் ஆகியன) தொகுக்கும் பணியில் ஈடுபட்டன.
இதனைத் தொடர்ந்து செந்தமிழ், தமிழ்ப்பொழில் முதலான இதழ்களிலும் கல்வெட்டுகளைப் பற்றிய குறிப்பும் நிழற்படமும் வெளிவரலாயின.
இந்திய தொல்லியல் அளவீட்டு துறை அலுவலர்கள் இக்கல்வெட்டுகளை பிரத்யேக காகிதத்தில் மையொற்றி படிகளாக மாற்றி ஆய்வுக்குப் பயனுள்ள வகையில் ஆவணப்படுத்தும் பணியில் 1890 ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு படி எடுக்கப்படும் பிரத்யேக காகிதங்கள் சுமார் 75 ஆண்டுகள் ஆயுள் கொண்டவை.

சேகரித்த கல்வெட்டுகளைப் படித்து புரிந்து கொள்ளவும், தற்காலத்துக்கு ஏற்றவாறு அந்தந்த இந்திய மொழிகளில் எழுத்துவடிவமாகவும், பதிப்பிக்கவும் வழிவகைகள் செய்யப்பட்டன.
பல நூல்கள் கல்வெட்டியல் துறை தொடர் வெளியீடுகளாகவே (Publication Series) பிரசுரிக்கப்பட்டன.
இந்திய கல்வெட்டியல் ஆண்டு அறிக்கை (Annual Report on Indian Epigraphy):-
1887 முதல் 1995-1996 ஆம் ஆண்டு வரையிலான கண்டறியப்பட்ட கல்வெட்டுகள் பற்றிய அறிக்கை.
மிகச் சுருக்கமான செய்திகள் ஆங்கிலத்தில் உள்ளது.
எபிகிராபியா இண்டிகா (Epigraphia Indica):-
1882 – 1977 ஆண்டுகளுக்கிடையே பதிப்பிக்கப்பட்ட ஆவணம்.
1892 முதல் 1920 வரை இது காலாண்டு இதழாக வெளி வந்தது.
எட்டு பாகங்கள் (parts) ஒரு தொகுதியாக்கபட்டன (volumes).
இதுவரை 42 தொகுதிகள் வெளிவந்துள்ளன.
கார்பஸ் இன்ஸ்கிருப்ஸ்னம் இண்டிகேரம் (Corpus Inscriptionum Indicarum):
பல வம்சங்களைப்பற்றிய கல்வெட்டுகள் இந்த பதிப்புத் தொடரில் வெளியிடப்பட்டன.
தென்னிந்திய கல்வெட்டுகள் (South Indian Inscriptions (S.I.I.):
தென்னிந்திய கல்வெட்டுகளின் ஆவணங்களுக்காக ஒரு தனி தொடர் பதிப்பு 1890 ஆம் ஆண்டு முதல் வெளிவந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை (Department of Archaeology Government of Tamil Nadu) :-
1961 இல் ஆரம்பிக்கப்பட்டது. கல்வெட்டுகளை நகலெடுத்தல், கல்வெட்டுகளில் உள்ளவற்றை அச்சிடுதல், மற்றும் புத்தக வடிவில் அவற்றை வெளியிடுதல் என்பது இந்நிறுவனத்தின் பணிகளுள் ஒன்று.
1966 ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் அளவீட்டு துறை மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி தமிழ் நாட்டின் கல்வெட்டுகள் முதலிடத்தைப் பிடித்துள்ளன.
கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் மொழிவாரியாகவும், அகரவரிசைப்படியும், எண்ணிக்கையின்படியும் வகைப்படுத்தியதில் தமிழ் நாடு இந்திய மாநிலங்களுள் முதலிடத்தில் உள்ளது.
இந்திய மாநிலங்களிலேயே தமிழ் நாட்டில்தான் அதிக அளவில் கல்வெட்டுகள் உள்ளன என்று இந்தக் கணக்கெடுப்பின் மூலம் நாம் எளிதாக புரிந்துகொள்ளலாம்.
1966 ஆம் ஆன்டிலேயே தமிழில் 20000 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
மற்ற மொழிக் கல்வெட்டுகள்:-
கன்னடம் 10,600;
சம்ஸ்கிருதம் 7,500;
தெலுங்கு 4500.
(ஆதாரம்: Journal of the Epigraphical Society of India Volume 19 : 1993).
இந்தியாவில் இதுவரை 90,000 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக டி.சி. சர்கார் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
1887 முதல், சுமார் நானூறு ஆண்டுகளாக, கண்டறியப்பட்ட ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட கல்வெட்டுக்களின் படிகள் இந்த இந்திய தொல்லியல் அளவீட்டு துறையின் மைசூர் அலுவலகத்தில் உள்ளன.
இங்கு உள்ள ஒரு லட்சம் கல்வெட்டில் 65 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழில் உள்ளன.
இக்கல்வெட்டுகள் இந்திய வரலாற்றை, குறிப்பாக தமிழகத்தின் தொன்மை வரலாற்றை எடுத்துரைக்கும் முதன்மை சான்றாகும்.
இவற்றுள் 1908ம் ஆண்டு வரை கண்டறியப்பட்ட படிகள் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
1909ம் ஆண்டுக்கு பின் கண்டறியப்பட்ட கல்வெட்டுப்படிகள் இன்னும் முழுமையாக பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்படவில்லை.
டாக்டர் எ. சுப்பராயலு அவர்கள் தம் ஆய்வில் தமிழ்க் கல்வெட்டுகளை காலநிரல்படி பகுப்பாய்வு செய்து ஒரு அட்டவணையினை வெளியிட்டுள்ளார்.
கி.மு. 300 – கி.பி. 500-க்கு இடைப்பட்டவை  = 400;
கி.பி. 501 – கி.பி. 850-க்கு இடைப்பட்டவை = 900;
கி.பி. 851 – கி.பி. 1300-க்கு இடைப்பட்டவை = 19,000;
கி.பி. 1300 – கி.பி. 1600-க்கு இடைப்பட்டவை = 6,000;
கி.பி. 1600 – கி.பி. 1900-க்கு இடைப்பட்டவை = 2,000;
வெளிநாட்டில் கிடைத்த கல்வெட்டுகள் = 300.
இவற்றை ஆய்வுக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மின்தரவாக்கம் (Digitize) செய்து கொள்வதற்கான முயற்சியை தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் மேற்கொண்டது.
2010 ஆம் ஆண்டு மைசூரில் உள்ள அனைத்து மொழிகளின் கல்வெட்டுகளையும் மின்தரவாக்கம் (டிஜிடைஸ்) செய்து ஆய்வுக்கு பயன்படுத்திக் கொள்ள இந்திய தொல்லியல் அளவீட்டு துறையுடன் (ஏ.எஸ்.ஐ.,) தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தஞ்சை தமிழ் பல்கலை துணை வேந்தர் ராசேந்திரன், மைசூர் கல்வெட்டுப் பிரிவின் இயக்குனர் (பொறுப்பு) ரவிசங்கர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
தமிழ் கல்வெட்டுக்கள் மட்டுமின்றி இந்நிறுவனத்தில் உள்ள அனைத்து மொழிக் கல்வெட்டுக்களையும் மின்தரவாக்கம் செய்யப்பட உள்ளன.
தமிழக அரசு இப்பணிக்காக தமிழ் பல்கலைக்கு 24 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தியாவில் மைசூரில் மட்டுமே உள்ள கல்வெட்டுப்படிகள் இனி தஞ்சை தமிழ் பல்கலையிலும் இடம் பெறவும், அவற்றை ஆய்வாளர் கணினி தொழில் நுட்ப வசதியுடன் பயன்படுத்திக் கொள்ளவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வசதி செய்யும்.
சமீபத்தில் மைசூர் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் 50 சதவீத கல்வெட்டுப் படிகள் பதிப்பிக்கப்படாமலேயே அழிந்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த 2008- மார்ச்சில் மைசூர் தொல்லியல் அலுவலகம் புதிய கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட போது, அங்கு படி எடுக்கப்பட்டு பாதுகாப்பாக பல நூறு தமிழ் கல்வெட்டுகள் வீணாகப் போய் விட்டன.
அவற்றை மீண்டும் படி எடுக்க வேண்டும் எனில் அதன் மூல ஆதாரங்கள் பதிக்கப்பட்ட கல்வெட்டுகளை கோயில், குளம் எனத் தேடித் திரட்ட வேண்டும்.
இது மிகச் சிரமமான ஒன்று.
கல்வெட்டுக்களில் படி எடுக்கப்பட்டு மைசூர் அலுவலகத்தில் சுருட்டி வைக்கப்பட்டுள்ள பலவும், நூறு வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட படிகள் ஆகும்.
படி எடுக்கப்படும் தாள்கள் சுமார் 75 ஆண்டுகள் ஆயுள் கொண்டவை.
இப்போது அவையும் வீணாகப் போகும் நிலை உருவாகி உள்ளது.
கல்வெட்டுகளைப் படிக்க முறையான கல்வெட்டியலாளர்களின் பற்றாக்குறை அதிகமாகி விட்டது.
இதை முன்கூட்டியே அறிந்தும் மைசூர் அலுவலகம் குறிப்பிட்ட காலத்தில் அந்த குறைகளை நிவர்த்தி செய்யத் தவறி விட்டது.
இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் பெரும் பாலானவை தமிழ் மொழியில் எழுதப்பட்டவை.
மற்றவை சமஸ்கிருதம், பாரசீகம், அரபி, உருது, தெலுங்கு, கன்னடம், வங்காளம் மற்றும் மலையாள மொழிகளில் எழுதப்பட்டவை.
இந்த மொழி கல்வெட்டுகள் பதிப்பிக்கும் கல்வெட்டாளர்கள் பதவிகள் நிரப்பப்படாமல் அதன் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதில், தமிழ் கல்வெட்டுகள் அதிகம் என்பதால் மற்ற மொழி கல்வெட்டுகளை விட, தமிழ் கல்வெட்டு படிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்றும் கூட தமிழகத்தில் கல்வெட்டுகள் அவ்வப்போது கிடைத்து வருவதால், தமிழ் கல்வெட்டுகளின் எண்ணிக்கை கூடி வருகிறது.
இதனால், தமிழக வரலாறு மைசூரிலேயே முடங்கும் சூழல் நிலவுகிறது.
மைசூர் கல்வெட்டு ஆவணங்கள் மைசூருவில் உள்ள, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டு ஆவணங்கள், கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுவதால், தமிழக வரலாற்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், மத்திய தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட கல்வெட்டு ஆய்வுகளில், இது வரை, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள், மைபடிகளாகவும், எழுத்துப்படிகளாகவும் எடுக்கப்பட்டுள்ளன.
அவை, கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள, தென்னிந்திய தொல்லியல் துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், அவற்றை பாதுகாக்கவோ, பராமரிக்கவோ, தமிழ் தெரிந்த தொல்லியல் அறிஞர்களை, மத்திய அரசும் நியமிக்கவில்லை.
அதனால், மிக முக்கிய ஆவணங்களான கல்வெட்டுப்படிகள், தமிழ் தெரியாத, தமிழ் கலாச்சாரத்தின் மீது வெறுப்பு உடைய அலுவலர்களால் அழிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
மத்திய தொல்லியல் துறை சார்பில், மஹாராஷ்டிரா முதல் கன்னியாகுமரி வரை, கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகள், நேரடியான எழுத்துப்படிகளாகவும், மை படிகளாகவும் சேகரிக்கப்பட்டன.
அவற்றை, ஜி.எஸ்.கை என்ற, தலைமை கல்வெட்டு ஆய்வாளர் 1967 இல், மைசூருவில் உள்ள, தென்னிந்திய தொல்லியல் துறை அலுவலகத்தின், கல்வெட்டு பிரிவுக்கு அனுப்பி வைத்தார்.
இவ்வாறு, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டு சார்ந்த ஆவணங்கள் அனுப்பப்பட்டன.
அப்போது, கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் பல, தற்போது இல்லை.
தமிழகம் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள், மைசூருவுக்கு சென்று, கல்வெட்டு படிகளை ஆய்வு செய்ய அனுமதி கேட்டால், அங்குள்ள வட இந்திய அலுவலர்கள், அனுமதி மறுக்கின்றனர்.
மேலும், எதைக்கேட்டாலும், அவை, ஏற்கெனவே காணாமல் போய்விட்டன என்கின்றனர்.
தொல்லியல் துறை படியெடுத்த கல்வெட்டு செய்திகளை, புத்தகமாக பதிப்பித்து, தொல்லியல் துறை நூலகத்தில் வைக்க வேண்டும்.
தமிழக ஆய்வாளர்கள் பார்க்க வசதியாக, சென்னையில் உள்ள, மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு பிரிவுக்கு, அந்த ஆவணங்களை அனுப்பி, பராமரிக்க வேண்டும்.
தமிழக அரசின் முயற்சிகள்:-
மைசூர் அலுவலகத்தில் ஏற்கெனவே படிகளாக எடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளை படித்து தொகுக்க உதவும்படி தமிழ்நாடு தொல்லியல் ஆய்வகத்திற்கு (Tamilnadu State Dept of Archaeology -TNSDA) உத்தரவிட்டு சில லட்சங்களை ஒதுக்கியது தமிழக அரசு.
அப்போது TNSDAயின் கமிஷனராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதரின் சொந்த முயற்சியினால் ஒரு வருடத்திற்கான கல்வெட்டுக்கள் தொகுத்து கொடுக்கப்பட்டது.
ஆனால், ஒரு வருடத்தில் தொகுக்கப்பட்டதை வெளியிட ASI, ஐந்து வருடம் எடுத்து கொண்டது.
இதுவும் முடியாமல் அடுத்த கட்டமாக, ஏற்கனவே படி எடுக்கப்பட்ட சுமார் 50,000 தமிழ் கல்வெட்டுகளை டிஜிட்டல் (Digitalistion) ஒளிப்பதிவு செய்து பாதுகாக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு வேறு வழியின்றி மைசூர் அலுவலகம் சம்மதித்தது.
இதற்காக தஞ்சை தமிழ் பல்கலைகழகத்துடன் மைசூர் கல்வெட்டியல் தலைமையகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது.
இதற்காக ஒதுக்கப்பட்ட ஒருவருட காலத்தில், கிழிந்து போன படிகளை ஒட்டுவதிலேயே எட்டு மாதமானது.
இதனால், தமிழக அரசு ஒதுக்கிய 25 லட்சத்தில் ரூபாய் 22 லட்சங்களை தமிழ் பல்கலைகழகம் திருப்பி அளிக்க வேண்டியதாயிற்று.
தொல்லியல் துறையின் இயக்குநர் உதயசந்திரன்:-
உதயசந்திரன் பள்ளிக்கல்வித் துறைக்கு மாற்றப்பட்ட பிறகு, அந்தத் துறையில் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தினார்.
கவனிப்பாரற்று கிடந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு உயிர் கொடுத்தார், தேர்வு முடிவுகளில் முதல் இடங்களை அறிவிக்கும் முறையை மாற்றினார்.
புதிய பாடத்திட்டம் உருவாக்குவதில் பல புதுமைகளை நிகழ்த்தினார்.
பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான குழுக்களை அமைத்தது உள்ளிட்ட உதயசந்திரனின் சிறப்பான பணிகளை மக்கள் அறிவார்கள்.
அறிஞர் ஐராவதம் மகாதேவன் இல்லாவிட்டாலும், பூங்குன்றன், பேராசிரியர் வை.சுப்பறாயலு, பேராசிரியர் இராஜவேலு மற்றும் கலாநிதி இரகுபதி , பத்மாவதி, புலவர் ராசு என பல அறிஞர் பெருமக்கள் தமிழகத்தில் உள்ளனர்.
தொல்லியல் துறையின் இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கிற அவர் மைசூர் கல்வெட்டு ஆவண அழிப்பை, தடுத்து நிறுத்தி, தமிழகம் மீட்டு, பிரசுரம் செய்ய, தமிழக அரசின் அனுமதியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



Friday, 9 February 2018

கல்வெட்டுகளை அழிப்பதில் கன்னட, வடயிந்திய கூட்டு

ஆயிரக்கணக்கான தமிழ்க் கல்வெட்டுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

-------------------

மைசூரில் அழிக்கப்படும் தமிழ் கல்வெட்டுகள்
வரலாற்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி

பதிவு செய்த நாள்: பிப் 04,2018 01:08

சென்னை: மைசூரில் உள்ள, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டு ஆவணங்கள், கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுவதால், தமிழக வரலாற்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில், மத்திய தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட கல்வெட்டு ஆய்வுகளில், இதுவரை, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள், மை படிகளாகவும், எழுத்துப்படிகளாகவும் எடுக்கப்பட்டுள்ளன.

அவை, கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள, தென்னிந்திய தொல்லியல் துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், அவற்றை பாதுகாக்கவோ, பராமரிக்கவோ, தமிழ் தெரிந்த தொல்லியல் அறிஞர்களை, மத்திய அரசு நியமிக்கவில்லை.

அதனால், மிக முக்கிய ஆவணங்களான கல்வெட்டுப் படிகள், தமிழ் தெரியாத, தமிழ் கலாசாரத்தின் மீது வெறுப்பு உடைய அலுவலர்களால் அழிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.

இது குறித்து, வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது:
மத்திய தொல்லியல் துறை சார்பில், மஹாராஷ்டிரா முதல் கன்னியாகுமரி வரை, கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகள், நேரடியான எழுத்துப்படிகளாகவும், மை படிகளாகவும் சேகரிக்கப்பட்டன.
அவற்றை, ஜி.எஸ்.கை என்ற, தலைமை கல்வெட்டு ஆய்வாளர், 1967ல், மைசூரில் உள்ள, தென்னிந்திய தொல்லியல் துறை அலுவலகத்தின், கல்வெட்டு பிரிவுக்கு அனுப்பி வைத்தார்.
இவ்வாறு, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டு சார்ந்த ஆவணங்கள் அனுப்பப்பட்டன.

அப்போது, கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் பல, தற்போது இல்லை.
எங்களைப் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள், மைசூருக்கு சென்று, கல்வெட்டு படிகளை ஆய்வு செய்ய அனுமதி கேட்டால், அங்குள்ள வட இந்திய அலுவலர்கள், அனுமதி மறுக்கின்றனர்.

மேலும், எதைக்கேட்டாலும், அவை, ஏற்கனவே காணாமல் போய்விட்டன என்கின்றனர்.

தொல்லியல் துறை படியெடுத்த கல்வெட்டு செய்திகளை, புத்தகமாக பதிப்பித்து, தொல்லியல் துறை நுாலகத்தில் வைக்க வேண்டும்.
தமிழக ஆய்வாளர்கள் பார்க்க வசதியாக, சென்னையில் உள்ள, மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு பிரிவுக்கு, அந்த ஆவணங்களை அனுப்பி, பராமரிக்க வேண்டும்.

ஏற்கனவே, தமிழகத்தில், மத்திய தொல்லியல் துறை சார்பில் நடந்த அகழாய்வு அறிக்கைகள் வெளிவராத நிலையில், இது போன்ற ஆவண அழிப்பில், துறை சார்ந்தோரே ஈடுபடுவதை தடுத்து நிறுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி: தினமலர்

மேலும் அறிய,
search கர்நாடகா நாசமாக்கும் தமிழ் கல்வெட்டுகள் வேட்டொலி

Wednesday, 1 March 2017

தமிழ்நாடு இன்னொரு சோமாலியா - மீண்டும் வருகிறது மீத்தேன் என்கிற ஹைட்ரோகார்பன் திட்டம்

தமிழ்நாடு இன்னொரு சோமாலியா

மீண்டும் வருகிறது மீத்தேன் என்கிற ஹைட்ரோகார்பன் திட்டம்

(புள்ளிவிபரங்களுடன் சுருக்கமான பதிவு)

* இந்த திட்டம் அமெரிக்கா ஆல்திரேலியா போன்ற பல வெளிநாடுகளில் தடைவிதிக்கப்பட்ட ஒன்று

* இதை எடுக்கப்போவது அரசாங்கம் இல்லை.
மத்திய அரசால் விடப்படும் டென்டர் எடுத்து வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் மீத்தேன் எடுத்து அவர்களே விலைவைத்து விற்றுக்கொள்வர்.
இதனால் 4000 கோடி வரை சம்பாதிப்பார்கள்.
மத்திய அரசுக்கு 1000 கோடி மட்டுமே கிடைக்கும்

* மீத்தேனை எரிபொருளாக பயன்படுத்தும் தொழில்நுட்பம் வளர்ந்த நாடுகளில் மட்டுமே உள்ளன.
ஆக இது வெளிநாட்டு எரிபொருள் கம்பெனிகள் அரசியல்வாதிகள் மூலம் இங்கே கொண்டுவந்த திட்டமே ஆகும்.

* ஒருமுறை மீத்தேன் (எ) ஹைட்ரோகார்பன் எடுத்த நிலத்தில் புல் பூண்டு கூட விளையாது.
குடிக்கத் தண்ணீர் கூட கிடைக்காது.

* ஆழ்துளை போட்டு நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டு ரசாயனங்களைப் பாய்ச்சுவார்கள்.
கீழே வேதிவினை நடந்து மீத்தேன் (எ) ஹைட்ரோகார்பன் வெளியே வரும்.
அதனுடன் பல விச வாயுக்களும் வெளிவரும்.
கீழே வெற்றிடம் ஏற்படும்.
கடலுக்கு அருகே இருந்தால் கடல் நீர் புகும்.
கடலிலிருந்து தொலைவாக இருந்தால் நிலம் அமிழ்ந்து நிலநடுக்கம் ஏற்படும்

* பல நாடுகளில் பூமிக்கடியில் இருந்து எரிவாயு எடுக்கும் திட்டங்கள் செயல்படுகின்றன.
ஆனால் அவை பாலைவனப் பகுதிகளில் அமைந்துள்ளன.
1960 களில் விவசாய நாடாக இருந்த சோமாலியா மக்கள் இத்தகைய விவசாயத்தை அழிக்கும் திட்டங்களை வேடிக்கை பார்த்ததால் இன்று பஞ்சத்தில் செத்துவருகின்றனர்.

* இங்கே விவசாயத்தை அழிப்பதும் மேலைநாடுகளுக்கே லாபம் தரும்.
உணவுக்கும் குடிநீருக்கும் அவர்களிடமே கையேந்தும் நிலை வரும்.
அவர்களின் மரபணு மாற்ற காய்கறிகளை இயற்கைக்கு புறம்பான உணவுப்பொருட்களை நாம் வாங்கவேண்டி இருக்கும்.
தற்போதே அழிந்துவரும் விவசாயத்தால் உக்ரைன் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய், ரஸ்ய கோதுமை, தைவான் அரிசி என்று இறக்குமதி செய்து வருகிறோம்.

* மீத்தேன் வாயு தமிழகத்தின் நிலக்கரி வளத்தைக் கொள்ளையடிக்க ஒரு தடையாக இருக்கிறது.
நிலக்கரி தோண்டும்போது மீத்தேன் வெளியேறி அதை சுவாசித்து இறந்தோர் பலர்.
மீத்தேன் எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் தன்மையுடையது.
அதனால் பல பயங்கர வெடி விபத்துகளும் நடந்துள்ளன.
எனவே 2016-2017 என ஒரு ஆண்டிற்குள் படிப்படியாக கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர் என 207 கிணறுகள் தோண்ட 'மத்திய சுற்றுச்சூழல் துறை' அவசர அவசரமாக அனுமதி வழங்கியுள்ளது.
மக்கள் கருத்தினைக் கேட்காமலேயே மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்திவிட்டதாக அத்துறையின் அமைச்சர் மாதவராவ் தெரிவித்துள்ளார்.

* தமிழகத்தில் புதுச்சேரிக்கு அருகே  முதல் பாகூர் முதல் திருவாரூர் அருகே ராஜமன்னார்குடி  வரை உள்ள நிலக்கரி வளத்தைத் தோண்டி எடுக்க வசதியாக,
மீத்தேனை வெளியேற்றுவது கொள்ளைக்கார மத்திய அரசுக்கு அவசியம் ஆகிறது.
மீத்தேன் எடுத்த பிறகு விவசாயம் அழிந்து மக்கள் வெளியேறிவிடுவார்கள்.
மக்களை வெளியேற்ற மெனக்கிடவேண்டாம்.
  எனவே இது தென்தமிழ்நாட்டின் பிரச்சனை மட்டுமல்ல.

* மீத்தேன் பெரும்பாலும் பாறைக்குக் கீழ்தான் இருக்கும்.
அந்த பாறையை உடைக்க 'நீரியல் விரிசல் முறை’ (Hydraulic fracturing) என்ற செயல்பாடு மூலம் ரசாயனங்களைச் செலுத்தி உயர் அழுத்தத்தை உருவாக்கி வெடிக்க வைப்பர்.
இது நிலநடுக்கத்தையோ எரிமலைக் குழம்பு வெளியேற்றத்திற்கோ வழிவகுக்க வாய்ப்புள்ளது.

* தமிழகத்தை கருவறுப்பதில் மத்திய அரசை விட மும்முரமாக இருக்கிறது கர்நாடகா.
ஏற்கனவே தமிழகத்திற்கு நியாயமாக தரவேண்டிய தண்ணீரைத் தராமல் வீணாக தேக்கிவைத்து நமது நெற்களஞ்சியத்தில் 40% விவசாயத்தை அழித்த கர்நாடகா. தற்போது விதிமுறைகளை மீறி காவிரியில் அணைகட்டுவதைத் துரிதப்படுத்தியுள்ளது.
மத்திய அரசும் தமிழகத்திற்கு தரவேண்டிய பஞ்ச நிவாரண நிதியை பஞ்சமே ஏற்படாத கர்நாடகாவுக்கு கொடுத்துவிட்டது.
தற்போது தமிழகத்தில் மீத்தேன் திட்டத்தை முன்னின்று செய்வது கர்நாடக அரசியல்வாதி ஜி.மல்லிகார்ஜுனப்பாவின் மகன்களான ஜி.எம்.சித்தேஸ்வரா மற்றும் ஜி.எம்.லிங்கராஜு ஆகியோர் நடத்தும் ஜெம் லாபரெட்டரீஸ் நிறுவனம்.
இவர்கள் இந்துத்துவ பின்னணி உடைய கன்னட இனவெறியர்கள்.

* மீத்தேன் திட்டத்திலும் சரி ஹைட்ரோகார்பன் திட்டத்திலும் சரி கையெழுத்திட்டு தமிழகத்தின் வாழ்வாதாரத்தைத் தாரைவார்த்தது தெலுங்கு வம்சாவழிகளான கருணாநிதி மற்றும் ஸ்டாலின்.

* இந்த அழிவில் கிடைக்கும் சொற்ப லாபத்தைக் கூட நமக்குத் தரமாட்டார்கள்.
தமிழகத்தின் நிலக்கரி வளத்தைச் சுரண்டி நெய்வேலியில் தயாரிக்கப்படும் மின்சாரம் 70% அண்டை மாநிலங்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது.
தமிழக அரசு தனியாரிடம் இருமடங்கு பணம்கொடுத்து மின்சாரம் வாங்குகிறது.
இதனால் தமிழகம் இரண்டு மடங்கு கடனாளி ஆகிவிட்டது.
ஒவ்வொரு தமிழன் தலையிலும் 14000 கடன் உள்ளது.
ஆக எந்த மத்திய அரசின் திட்டமும் நமக்கு அழிவையும் மற்ற மாநிலங்களுக்கு லாபமும் தருவதாகவே அமைகிறது.

* ஒருவேளை நிலநடுக்கமோ விசவாயு கசிவோ பஞ்சமோ ஏற்பட்டால் மத்திய அரசு கடுகளவும் உதவி செய்யாது என்பது வரலாற்றில் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, சென்னையில் வெள்ளம் வந்தபோது மத்திய அரசு எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழக அரசு 5,000 கோடி நிவாரணத்தொகை கேட்டது.
ஆனால் மத்திய அரசு போட்ட பிச்சை வெறும் 1,000 கோடி.
அந்த ஆண்டு தமிழக அரசு மத்திய அரசுக்கு கட்டியிருந்த வரி எவ்வளவு தெரியுமா?
85,000 கோடி.

* வளர்ச்சித் திட்டங்களில் புறக்கணிக்கப்படும் தமிழகம், வெடிவைத்து சுரங்கம் தோண்டப்படும் நியூட்ரினோ,
பல்லாயிரம் தலைமுறைகளைப் பாதிக்கும் அணுவுலைகள்,
மீத்தேன் போன்ற நிலத்தடி வளங்களை சுரண்டும் திட்டங்கள்,
சுற்றிவளைத்து விவசாய நிலங்கள் வழியே கொண்டுசெல்லப்படும் கெயில் குழாய்கள் திட்டம் என நாசகார பேரழிவு திட்டங்களின் சோதனைக்கூடமாகவும் ஹிந்தியாவின் குப்பைத்தொட்டியாகவும் ஆக்கப்பட்டுள்ளது.

* மீத்தேன் திட்டத்தை மக்கள் ஒன்றிரண்டு திரண்டு பட்டினி கிடந்து பிழைப்பை விட்டுவிட்டு போராடி தடுத்துநிறுத்தினர்.
  மீத்தேனை(CH4), ஹைட்ரோகார்பன் என்று பெயர் மாற்றியதன் மூலம் பட்டபாடையெல்லாம் வீணாக்கிவிட்டனர்.
இப்போது மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
உயிரைக் கொடுத்து போராடவேண்டும்.

* இறுதியாக ஒரு கேள்வி,

சிங்களவராவது இனவழிப்பு செய்கிறார்கள்.
அதாவது தமிழனத்தைக் கொன்றுவிட்டு அந்த நிலத்தை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள்.

ஆனால் ஹிந்தியாவோ மண்ணோடு சேர்த்து இனத்தை அழிக்க வெறிகொண்டு அலைகிறது.
இது மனிதநேயத்திற்கு மட்டுமன்றி இயற்கைக்கே எதிரானதாகும்.

வளர்ச்சியைத் தராவிட்டாலும் பரவாயில்லை.
பாதுகாப்பு தராவிட்டாலும் பரவாயில்லை.
கொள்ளையடித்தாலும் பரவாயில்லை.
ஆனால் கட்சிகள் பாகுபாடின்றி தமிழ் மக்களின் உணவையும் தண்ணீரையும் பிடுங்குவதில் குறியாக இருக்கும் ஹிந்திய, திராவிட ஆட்சிகளை இனியும் நம்பவேண்டுமா?
பணத்திற்காக ஒரு இனத்தையே பூமியின் ஒரு பகுதியையே காவு கேட்கும் இந்த நாசகார இந்தியநாடு நமக்குத் தேவையா?
நமக்கு சம்பந்தமே இல்லாத ஒருவன் ஆண்டால் நம்மேல் அக்கறை இல்லாத திட்டங்கள்தான் திணிக்கப்படும்.

தமிழரே சிந்திப்பீர்!

தமிழர்நாடு சுதந்திரத்திற்காப் போராடுவீர்!

நம் மண்ணில் பிறந்த ஒரு மண்ணின் மைந்தனே எவருக்கும் அடிபணியாத ஆட்சி நடத்தி நம்மை ஆண்டால் இது நடந்திருக்குமா?

Saturday, 25 February 2017

ஈஷா மையம் எடுத்த உயிர்கள்

ஈஷா மையம் எடுத்த உயிர்கள்

ஜக்கி வாசுதேவின் ஈஷா மையம் நடத்திவரும் காடு அழிப்பால் 2006 முதல் 2011 வரையிலான காலத்தில் மட்டும் 50 யானைகள் இறந்திருக்கின்றன.
(யானைகளின் மொத்த எண்ணிக்கை தோராயமாக 350)

2006 முதல் 2012 வரையிலான காலத்தில் யானைகள் வெறிவந்து மிதித்துக் கொன்ற மனிதர்களின் எண்ணிக்கை மட்டும் 57.

இவர்கள் அனைவரும் பழங்குடிகள் மற்றும்  அப்பாவி பொதுமக்கள்.

ஏனென்றால் ஈஷா மையம் மிக பத்திரமாக மின்சார வேலிக்குள் ஏ.சி, டி.வி, சோபா, மது, மாது என அனைத்து வசதிகளுடன் பாதுகாப்பாக இருக்கிறது.

(தகவல்: சவுக்கு)

Wednesday, 22 February 2017

ஜக்கி ஒழிக்க ஒரே வழி

இங்கே ஒரு ராபின் ஹுட் பிறக்கவேண்டும்...

மீண்டும் ஒரு வீரப்பனார்...

ஜக்கி வாசுதேவ் பிறர்மகளை மொட்டையடித்து போதை கொடுத்து அடிமையாக்கி

சீராட்டி பாராட்டி வளர்த்த அவனது நவநாகரீக மகளைக் கடத்தி

அவன் பணத்தையெல்லாம் பிடுங்கவேண்டும்

அந்த ஜக்கி வாசுதேவ் காடழித்து கட்டிய ஆசிரமத்தில் நுழைந்து

அவனை ஜட்டியோடு அடித்து
கர்நாடகாவிற்கே திருப்பி விரட்டவேண்டும்.

அவன் ஆசிரமத்தை குண்டு வைத்து தகர்த்து

அவன் தன் முகத்தையே நகலெடுத்து கட்டிய சிவன் சிலையை உடைத்து தூள்தூளாக்கி

அந்த வந்தேறிப்பயல் தனக்காக திருப்பிக்கொண்ட காட்டு ஓடையை பழைய பாதையில் மீண்டும் திருப்பவேண்டும்.

பரிசாக தீவிரவாதப் பட்டமும் தேசதுரோக வழக்கும் அதன் முடிவாக தூக்கோ துப்பாக்கித் தோட்டாவோ கிடைக்கலாம்

ஆனால் பழங்குடிகளும் மண்ணின் மைந்தர் குடும்பங்களும்  யானைகளும் அதன் குட்டிகளும் அவனை என்றும் வாழ்த்தும்

Friday, 17 February 2017

நெடுவாசல் மண்ணுக்கு வந்த ஹைட்ரஜன் ஆபத்து

Gem Laboratory Pvt.Ltd., -

இது தான் விவசாய பூமியான நெடுவாசல் கிராமத்தில் மண்ணை அழித்து மலடாக்கி ஹைட்ரஜன் எரிவாயு எடுக்க,
கேடுகெட்ட இந்திய பாசிச அரசால் அனுமதி பெற்றிருக்கும் கன்னட நிறுவனம்!

இது மல்லிகார்ஜூனப்பா சித்தேஸ்வரா எனும் கர்நாடகாவை சேர்ந்த ஓர் பாஜக காரரின் நிறுவனம்!

அவர் 2004 & 2009 ல் MP யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்!

நமக்கு தண்ணீர் கொடுக்காத ஓர் மாநிலத்தை சேர்ந்த நிறுவனத்துக்கு நமக்கு சம்பந்தமே இல்லாத இந்திய அரசு எவனை கேட்டு நம் விவசாய நிலத்தில் துளை போட அனுமதி கொடுக்கிறது???

Govindaraj Kumar அவர்களின் பதிவிலிருந்து

Thursday, 31 July 2014

தமிழ் வளரத் தமிழரல்லா

தமிழ் வளர தமிழரல்லாத அறிஞர்களின் கருத்து

மமமமமமமமமமமமமமமம

உல்ரிச் நிக்கோலஸ் (ஜெர்மனி) :-

“நிலாச்சோறு ஊட்டுகையில் குழந்தைகளுக்குக் கதை சொல்லுங்கள்.
அம்புலிமாமாவில் ஆரம்பித்து ஆனை, சிங்கம், என்று ஆயிரம் கதைகள் அழகுத் தமிழில் உண்டு. பிள்ளைப் பிராயத்தில் இருந்தே தமிழோடு இணைந்து குழந்தைகள் நடந்தால் அவர்களும் வளர்வார்கள்,
தமிழும் தானாக வளரும். ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டாரும், ரெயின் ரெயின் கோ அவே-வும் இத்தனை ஆண்டுகளாக
நமக்கு எதைச் சாதித்துத் தந்துவிட்டன?
தமிழை அழித்தததைத் தவிர!”

சைமன் (நெதர்லாந்து):-

ஒரு மொழியின் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்கு முக்கியமானது. தமிழர்களைச் சென்றடைய வேண்டிய செய்திகளைச் செந்தமிழில் இல்லாவிட்டாலும் நடைமுறைத் தமிழிலாவது தர வேண்டும். இங்கு ஆங்கில ஆதிக்கம் நிரம்பி வழிகிறது. எனவே,
இனி வரும் காலங்களில் இனிய தமிழோடு மக்களைச் சந்திக்கலாமே!”

டிமிடா (ஜெர்மனி):-

தமிழகப் பள்ளிகளில் கட்டாயத் தமிழ்க்
கல்வி வந்துள்ளதாக அறிகிறேன்.
தமிழ்நாட்டிலேயே தமிழில் படிப்பதைக் கட்டாயமாக்க வேண்டிய நிலை வந்தது வெட்கக்கேடு. இருந்தாலும்
பரவாயில்லை. இன்று ஆரம்பித்திருக்கும் கல்விப் பயணம் எந்த ஒரு அரசியல்
மாற்றத்தினாலும் மாறக் கூடாது. சில நேரங்களில் உணவைக் குழந்தைகளுக்குத்
திணித்து ஊட்டுகிறோமே. அது போலத்தான் இதுவும். நாள்பட நாள்பட இந்த உணவு பிடித்துப் போகும்.

தாம்ஸ் லேமன் (ஜெர்மனி):-

ஆங்கிலத்தில் பேசினால்தான் கவுரவம் என்ற இழிநிலை இன்றைய இளவட்டங்களின் மனத்தில்
புதைந்து இருக்கிறது. மிகமோசமான கிருமி இது. வணக்கம், மிக்க நன்றி என்கிற வார்த்தைகளில் இல்லாத மரியாதையும்
உவகையுமா ஆங்கில மொழியில் இருக்கிறது.
உன் தாயோடும் தந்தையோடும் கதைக்கையில்
ஆங்கிலம் எதற்கு என்பதுதான் எனது கேள்வி.
நடைமுறை வாழ்க்கையில் பெரும்பான்மையான விஷயங்களைத் தமிழ்ப்படுத்துங்கள்.
அதாவது தமிழிலேயே கதையுங்கள்.
ஒவ்வொரு நாளும் தமிழோடு வாழ்வோம். தமிழனாய் வாழ்வோம்.

கலையரசி (சீனா):-

இதுபோன்ற ஒரு மாநாட்டு வேளையில் தமிழை ஞாபகம் கொள்கிறீர்கள்.
பிறகு மறந்து போவீர்கள்தானே?
இங்கேயே பார்த்துவிட்டேன்.
என்னோடு தெளிவான தமிழில் பேசுகையில் பல
பெண்களுக்குச் சிரிப்பும் வெட்கமும் வருகிறது. ஏன் இந்தத் தயக்கம்?
நியாயப்படி எனக்குத்தான் சிரிப்பு வர வேண்டும்.
தமிழகத்திலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் பெண்களும் ஆண்களும் நித்தம் நித்தம் தமிழ்க் கொலை புரிதலைச் சகிக்க
முடியவில்லை. அந்த நிகழ்ச்சியைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கும் அந்த சிதைக்கப்பட்ட தமிழ்தானே மனிதில்
பதியும்? ஆகவே ஆரோக்கியமான தமிழ் வாழும் இடமாக உங்கள்
சுற்றுப்புறத்தை மாற்றுங்கள். நான் சீன இனத்தைச் சேர்ந்தவள். தமிழ் மீது கொண்ட
காதலால்தான் என் பெயரைக் கலையரசி என்று மாற்றியுள்ளேன்.
எவ்வளவு இனிமையான பெயர்!

பிருந்தா பெர் (கனடா):-

சமுதாயத்துக்கு எந்த ஓர் உணர்வையும் அழுந்த ஊட்டுவதில் ஈடு இணையில்லாத வலிமை,
கலை மற்றும் இலக்கியத்தின் வசம்தான் இருக்கிறது. பட்டிதொட்டியில் ஆரம்பித்து நவநாகரிக நகரம் வரை தமிழ்மொழியின் நங்கூரத்தை அழுத்திப் பாய்ச்ச நல்ல தமிழில் நயமான இலக்கியங்கள் தேவை.
காலத்துக்கு ஏற்றபடி புதுவித இலக்கிய
வடிவங்கள் உடனடியாகத் தமிழில் வேண்டும்.
அது சுவையுடன் இருத்தல் அவசியம்.

அஸ்கோ பர்போலா (பின்லாந்து):-

பல மொழிகள் இன்று அழிவின் விளிம்பில் நிற்பதற்கு 'உலகமயமாக்கல்’ என்ற
கருத்துரு ஒரு காரணமாகப் பேசப்படுகிறது.
இதற்குத் தமிழும் தப்பவில்லை.
உலகமயமாக்கலுக்கு இயைந்து நடந்தால்தான்
நாமும் வளர முடியும், வல்லரசாக முடியும்
என்றொரு மாயையைப் பரப்பி வருகிறார்கள்.
நாட்டின் வளர்ச்சிக்காக நம் மொழியைக் காவு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
‘உலகமயமாக்கல்
போக்கினாலேயே ஆங்கிலத்தின் பின்
நடக்கிறேன். அப்போதுதான் இந்த உலகில் நானும் பிழைக்க முடியும்’
என்பது வெற்று உளறல்.
தாய்மொழியிலேயே கற்று இன்று எல்லா நிலைகளிலும் தலைநிமிர்ந்து நிற்கும்
நாடுகளாக ஜப்பானும் சீனாவும் இல்லையா?
எனவே எந்தச் சூழலுக்காகவும் மொழியைப் பலியிடாதீர்கள். அது நம் சந்ததியை நரபலி இடுவதற்குச் சமம்.

அலெக்சாண்டர் துபியான்ஸ்கி (ரஷ்யா):-

உங்கள் மொழியைப் படிக்க ரஷ்ய நாட்டில் எத்தனையோ பேர் ஆர்வமாக வருகிறார்கள்.
தமிழ் படித்தால் வேலை கிடைக்கும்… பணம் கிடைக்கும் என்று அவர்கள் வரவில்லை.
தமிழ் மொழியைப் படித்தால் சுவையாக இருக்கிறது. அதன் அனைத்துப் பாடல்களும் மனிதாபிமானம் பேசுகின்றன, மனிதத் தன்மையை உணர்த்துகின்றன என்பதால்தான் அதைப் படிக்கிறார்கள். இப்படிப்பட்ட
ஆர்வத்துடன் தமிழ் கற்க வந்த மாணவர் ஆனவுடன்தான் நான் இந்த
மாநாட்டுக்கு வந்துள்ளேன். ஆளுக்கு ஓர் இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்துப் படித்துப் பாருங்கள். அதன்பிறகு உங்களால் தமிழில் இருந்து மீள முடியாது. வேலைக்காக, பணத்துக்காக
இல்லாமல் இலக்கியம் படியுங்கள்.

கிரிகோரி ஜேம்ஸ் (பிரிட்டன்):-
இது போன்ற மாநாடுகளை 10ஆண்டுகளுக்கு ஒரு முறையோ 15ஆண்டுகளுக்கு ஒரு முறையோ நடத்தினால் மட்டும் போதாது. தமிழ் ஆய்வு மாநாடுகளைத்
தொடர்ந்து நடத்துவதன் மூலமாக மட்டுமே மக்களிடம் மொழி சார்ந்த
ஒரு விழிப்புணர்பை ஏற்படுத்த முடியும்.
இவையே மொழிக்கு உந்து சக்தியாக அமையும்.
இது போன்ற நிகழ்வுகள் வெறும் விளம்பரங்களாக இல்லாமல் ஆக்கபூர்வமான ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும்!”

ஜார்ஜ் ஹார்ட் (அமெரிக்கா):-

நான் முதலில் வடமொழியைக் கற்றவன். அதன்பிறகுதான் தமிழைப் படித்தவன்.
உங்களது மொழியில் அனைத்துத் தன்மைகளுமே இருக்கின்றன. இப்படி ஒரு வளம் வேறு எந்த மொழிக்கும் இல்லை. இந்திய அரசு எழுதிக் கேட்டபோது தமிழிச்
செம்மொழியாக ஏன் ஆக்க வேண்டும் என்பதைப்
பல்வேறு ஆதாரங்களுடன் எழுதி அனுப்பியவன் நான். இது போன்ற வரலாற்றையும் மொழி வளத்தின் தன்மையையும் மற்ற நாடுகளில் இருக்கும் மொழியியல் அறிஞர்கள் அனைவருக்கும் கொண்டு போய்ச்சேர்க்க வேண்டிய கடமை இருக்கிறது.
எப்படிப்பட்ட வரலாற்றுக்கு வளத்துக்குச் சொந்தக்காரர்கள் நாங்கள் என்று நீங்கள் மட்டுமே சொல்லிக்கொண்டு இருந்தால் போதாது. அதை உலகமும் ஒப்புக்கொள்ளும்
வகையில் கொண்டு சேர்க்க வேண்டும். அதைச்
செய்தால் தமிழகத்துக்கு வெளியில் இருந்து எங்களைப் போன்ற ஆர்வலர்கள் தமிழ்த் தொண்டு ஆற்றக் கிளம்பி வருவார்கள்!”
நன்றி:-
விடுதலைமலேசியாஇன்று
( http://thirutamil.blogspot.com/2010/07/blog-post_21.html?m=1 )

//செவுளில் அறைந்தது போல் இருக்கிறதா?
இவ்வறிஞர்களுக்கு தாம் வந்திருக்கும் இச்செம்மொழி மாநாட்டை நடத்துபவனே தமிழன் இல்லை என்பதோ தமிழினம் அழிவைச் சந்திக்கும்போதெல்லாம் தமிழ் மொழிக்கு சில எலும்புத்துண்டுகளை வீசியெறியும் அரசியல்தான் இங்கே நடக்கிறது என்றோ தெரியுமா???