Friday 17 June 2016

இலங்கை - இந்தியா விளையாடும்போது மைதானத்தில் புலிக்கொடியுடன் நுழைந்த தமிழ் இளைஞர்கள்

லண்டன் மைதானத்தில் புலிக் கொடியுடன் இளைஞர்கள்!
கிரிக்கெட் வீரர்கள் தினறல்

இலங்கையை புறக்கணிப்போம், இலங்கை கிரிக்கெட்டை புறக்கணிப்போம் என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட போராட்டத்தை பிரிட்டனில் இயங்கும் சில புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தன.

இதற்கிடையே ஆட்டம் நடந்த மைதானத்திலும் இரு இளைஞர்கள் புலிக்கொடியை ஏந்தியவாறு கோசங்களை இட்டுக்கொண்டு மைதானத்துக்குள் ஓடினார்கள்.
அவர்களில் ஒருவர் விக்கெட்டுக்களுக்கு அருகே வரை ஓடிவிட்டார்.
இலங்கை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபோது இது நடந்தது.

அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து, அங்கிருந்து அகற்றினார்கள்.

இதேவேளை, இந்திய அணி துடுப்பெடுத்து ஆடிக்கொண்டிருந்த வேளையிலும் புலிக்கொடியுடன் ஒருவர் மைதானத்திற்குள் ஓடிவிட்டார்.
அவரையும் பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து அங்கிருந்து அகற்றினர்.

நன்றி BBC

படங்கள் www.jvpnews.com/srilanka/33581.html

21 ஜூன் 2013

No comments:

Post a Comment